அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இலங்கை எப்போதும் இந்தியாவிற்கு நட்பு நாடாக இருந்தது இல்லை!. - " தமிழீழ ஆய்வறிஞர் " பேராசிரியர் திருநாவுக்கரசு
-
- 1 reply
- 276 views
-
-
பரராசா முதல் ஹேமச்சந்திர வரை – அருணன்:- Demonstrative performance of professional shooters outside Kyiv. நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நீதிபதியை இலக்குவைத்து நடத்தப்படவில்லை என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். ‘நிச்சயமாக இது சந்தர்ப்ப சூழ்நிலையில் நடந்த விடயமே. நீதிபதிக்கு எந்தவித மரண அச்சுறுத்தலும் இல்லை என்பதை விசாரணைகளின்போது அறிந்து கொண்டுள்ளேன்’ என்றும் அவர் கூறியிருந்தார். வடக்கு முதல்வர் விடயத்தில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு ஒன்றும் புரியாது என்று நினைத்துச் செயற்பட்ட மாதிரித்தான் இக்கூற்றும் உள்ளது. குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காகச் செய்யப்பட்ட தா…
-
- 0 replies
- 338 views
-
-
பெண்கள் மீது குடும்பச் சுமையை சுமத்திய போர் எனும் பேயாட்டம் இலங்கைத் தீவில் நடை பெற்ற ஆயுதப் போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தாலும், அது நாட்டுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வைத்துள்ள ஆழமான வடுக்கள் என்றும் மறையாதவை. பொருளாதார, உளவியல் மற்றும் சமூக ரீதியாக என்று பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் விதவைகளாக்கப்பட்டவர்கள் இன்று வாழ்கின்றனர். போர், வன்முறை, அசாதாரண காரணங்கள், இயற்கை இடர்கள் என்பவற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் கணவன்மாரை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ளனர். இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல! குறித்த பி…
-
- 0 replies
- 590 views
-
-
மாகாண அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வியூகங்கள் அதிகாரத்துக்கான போட்டி என்பது மிகவும் முக்கியமானது. அதிலும், அரசியல் அதிகாரம் மற்றும் அதன் வழிவந்த பதவிகள் மீதான வேட்கை, பல சூட்சுமங்களைக் கொண்டது. ஏனெனில், ஆட்சியதிகாரமும் பதவியும் ஒருவிதமான போதை. ‘அது’ இல்லாமல் பயணித்தால், சம்பந்தப்பட்டோருக்கு தள்ளாடுவது போலிருக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசமைப்பில் 18ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்ததும், உரிய காலத்துக்கு முன்னர், தேர்தலை நடத்தியதும், இப்போது நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு பின்னிற்பதும், ஏன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “படைக்குத் திருநங்கைகளையும் ஆட்சேர்ப்பு செய்யத் தடை” போன்ற அரசியல் சார்பற்ற விடயங்களைக் கூற…
-
- 0 replies
- 502 views
-
-
இராணுவத்தின் களமிறக்கம்; பொறுப்பற்ற தமிழ்த்தலைமை இரண்டு பொலிஸார் மீது, கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு நடத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, “நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தேவைப்பட்டால் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினரின் உதவியையும் பெறுவேன்” என்று கூறியிருந்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுமார் ஆயிரம் பேரைக் கொண்ட விசேட அதிரடிப்படையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொலிஸ்மா அதிபர், அவர்களின் மூலம், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், முப்படைகளையும் களமிறக்குவேன் என்று எச்சரித்தமை, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய…
-
- 0 replies
- 356 views
-
-
ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? நிலாந்தன்:- கடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய சொற் பிரயோகங்களோடு அமைந்திருக்கின்றது. ஒரு மாற்று அணிக்கு தான் இப்போதைக்கு தலைமை தாங்கப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்த பின் நடந்த பேரவைச் சந்திப்பு அது. எனவே விக்னேஸ்வரனின் உரையில் ஏதும் தளம்பல்கள் அல்லது சமாளிப்புக்கள் அல்லது பின்வாங்கல்கள் இருக்கக்கூடுமா? என்று ஒரு பகுதியினர் நுணுக்கமாகத் தேடினார்கள். ஆனால் பலரும் உற்றுக் கவனிக்கத் தவறியது லக்ஸ்மனின் உரையாகும். மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் …
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரே கட்சியாவது சாத்தியமா? துரைசாமி நடராஜா மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்பில் நீண்டகாலமாகவே விமர்சனங் கள் இருந்து வருகின்றமை தெரிந்த விடயமாகும். மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளுக்கு இடையிலான முரண்பாட்டுத் தன்மையானது மக்களின் உரிமைகள் பறிபோவதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளதாகவும் விசனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கியத்தின் அவசியமும் உணர்த்தப்பட்டிருக்கின்றது. இதனிடையே தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும், அமைச்சருமான பி.திகாம்பரம் கூட்டணி ஒரே கட்சியாகவும், தொழிற்சங்கங்கள் ஒரே சங்கமாகவும் செயற்பட வேண்டிய அடுத்தக…
-
- 0 replies
- 470 views
-
-
மறுக்கப்படும் நீதி மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கி வந்த அக் ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த மேற்படி 17 பணியாளர்களையும் ஆயுதம் தரித்த சீருடைக்காரர்கள் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து நிலத்தில் குப்புறப்படுக்கப் பண்ணி பின்பக்கமாக தலையில் சுட்டு படுகொலைப்படுத்தியதாக அன்றைய செய்திகள் தெரிவித்தன. மூதூரில் படுகொலை செய்யப்பட்ட எங்கள் பிள்ளைகளின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் யார்? இதன் பின்னணியென்ன? இன்னும் ஏன் குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லையென்ற தமது கவலையையும் ஆதங்கத்தையும் தெரிவித்தார்கள் படுகொலை ச…
-
- 0 replies
- 854 views
-
-
புதிய அரசியல் அமைப்பும் மக்கள் ஆணையும் நிறைவேற்று அதிகாரம் என்ற கருத்து எழ ஆரம்பித்த காலத்தில் இருந்தே முரண்பாடுகளும் எழ ஆரம்பித்தன. இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பிலிருந்து கிடைத்த மிக முக்கியமான ஒரு படிப்பினை என்னவெனில் நாட்டின் மக்களினால் தெரிவு செய்யப்படும் ஒரு நபர் தனது சொந்த முக்கியத்துவம், சட்டபூர்வத் தன்மை மற்றும் அதிகாரம் என்பன தொடர்பான மிகை அளவிலான ஓர் எண்ணத்தை கொண்டிருக்க முடியும் என்பதாகும். 1970களின் தொடக்கத்தின் போதே ஜனாதிபதி ஆட்சி முறை குறித்து கலந்துரையாடப்பட்டது. அதேபோல் நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை தொடர்பிலும் ஆரம்பம் முதற்கொண்டு குழப்பகரமான நிலைமை நிலவி வருகின்…
-
- 0 replies
- 388 views
-
-
ஆட்டம் காணும் தேசிய அரசாங்கம் மக்களின் பல்வேறு வகையான அர்ப்பணிப்புக்கள், தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய நல்லாட்சி அரசாங்கமானது இன்று பல்வேறு சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும், சிக்கல்களுக்கும் முகம் கொடுத்துள்ளது. அதாவது எந்த நேரத்தில் நல்லாட்சி அரசாங்கம் உடையும் அல்லது எந்த நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லும் என்ற கேள்விகள் தொடர்ச்சியாக அனைவர் மத்தியிலும் எழுந்துகொண்டிருக்கின்றன. அந்தளவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய தேசியக்க…
-
- 0 replies
- 478 views
-
-
எது பயங்கரவாதம்? – செல்வரட்னம் சிறிதரன் யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிசாருடன் முப்படைகளையும் பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றது. இதனால், யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் முடிந்துள்ள நிலையில், யுத்த காலத்தைப் போன்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் இராணுவ பாதுகாப்பு நிலைமை உருவாகுவதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றதோ என்று பலதரப்புக்களிலும் இருந்து அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆனால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைக்கும், அங்கு குற்றச்செயல்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்…
-
- 0 replies
- 409 views
-
-
பூட்டான்: வளர்ச்சியா, மகிழ்ச்சியா? மகிழ்ச்சியின் அளவுகோல் எது என்ற கேள்விக்கான விடை மிகவும் சிக்கலானது. மகிழ்ச்சி என்பது பண்பறி ரீதியானது. அதை அளவுகோல்களின் அடிப்படையில் அளவிடவியலாது. பண்பறி ரீதியானவை அகவயமானவை. அவை ஆளாளுக்கு வேறுபடுபவை. இவ்வளவு சிக்கல்களைக் கொண்டுள்ளமையால், மகிழ்ச்சியை அளவிடவியலாது. வளர்ச்சியை அளவிடலாமா என்ற கேள்விக்கு பொருளியல் நிபுணர்கள் “ஆம்” என்று பதிலளிக்கின்ற போது, எது வளர்ச்சி என்பதற்குப் பொதுவான, ஒருமித்த வரைவிலக்கணம் இன்னமும் இல்லை. பொதுவில், பொருளாதார வளர்ச்சியே வளர்ச்சி என அறியப்படுகிறது. அவ்வகையில் வளர்ச்சி, மகிழ்ச்சியைத் தருமா என்பது இவ்…
-
- 0 replies
- 623 views
-
-
கொண்டாடப்பட வேண்டியதா ஷரீபின் வீழ்ச்சி? சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இரசிப்பவர்களுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது, அலாதியான ஒரு விருப்பம் அல்லது கவனம் காணப்படும். மிகவும் குழப்பமான அணியாகத் தென்பட்டாலும் கூட, அவ்வப்போது தனது உச்சக்கட்டப் பலத்தை வெளிப்படுத்தி, மிகப்பெரிய அணிகளைக் கூட வீழ்த்திவிடும் இயல்பு, அவ்வணிக்கு உள்ளது. அண்மையில் கூட, ‘சம்பியன்ஸ்’ கிண்ணத் தொடரை, யாரும் எதிர்பாராத வண்ணம் கைப்பற்றியிருந்தது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்த இயல்பு, அந்நாட்டுக் கிரிக்கெட் அணிக்கு மாத்திரம் உரித்தான இயல்பு என யாராவது எண்ணினால், அது தவறாகும். அது, பாகிஸ்தான் என்ற நாட்டுக்குச் சொந்தமான இயல்பு. …
-
- 0 replies
- 470 views
-
-
பெரிய பிரச்சினையாக இன்னமும் உள்ள மாணவர் இடைவிலகல் பெருந்தோட்டப் பகுதிகளில், பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்களின் தொகை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது, கல்வியின் முக்கியத்துவத்தை உணராத ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு என்றும் கூறலாம். நான்கு புறங்களும் தேயிலை மலைகளால் சூழப்பட்ட பச்சையத்துக்குள், 50 சதவீதம் கற்றுத்தேர்ந்த சமூகம் இருப்பதைப் போன்றே, முழுமையான கல்வி அறிவைப் பெறாத சமூகமும் உள்ளது. கல்வி வளர்ச்சியில் மத்திய மாகாணம் பின்தங்கியுள்ளதாக, கல்வி அமைச்சு அடிக்கடி கூறிவருகின்றது. இதனால், மலையகத்தில் கல்வித்துறையை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. …
-
- 0 replies
- 362 views
-
-
எதைச் சாதிப்பார் ராம் நாத் கோவிந்த்? இந்திய குடியரசுத் தலைவராக, ராம் நாத் கோவிந்த், நேற்று முன்தினம் பதவியேற்றிருக்கிறார். அவரது இந்தப் பதவியேற்பு, பல்வேறு விதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. பதவியேற்பின் போது உரையாற்றிய அவர், முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம், இராதாகிருஷ்ணன் போன்றோரின் பாதையிலேயே செல்லவுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவரது தனிப்பட்ட திறமைகளையும் அனுபவங்களையும் வைத்துப் பார்க்கும் போது, இப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் தான் என்பது, தெளிவாகத் தெரிகிறது. 1994ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை, மேலவையின் உறுப்பினராக அவர் பதவி வகித்தார். பின்னர், பீஹார் மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தார். அ…
-
- 0 replies
- 607 views
-
-
அரசியல் சித்தாந்தங்களை முறியடித்த மனிதம் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவத்தைச் சரியாகப் புரிந்து கொள்வது இன்னமும் கடினமாக இருக்கிறது. பொலிஸார் கூறுவதுதான் உண்மையா, அல்லது தமிழ் ஊடகங்கள் கூற விரும்புவதுதான் உண்மையா? அல்லது சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேக நபர் கூறுவது தான் உண்மையா என்பது நாளடைவில்தான் தெரிய வரும். உண்மை எதுவாக இருப்பினும் அதையும் அரசியலாக்கி, ஆதாயம் பெற, வடக்கிலும் தெற்கிலும் அரசியல்வாதிகள் முயற்சிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. எனவே, அரசியல்வாதிகள் சம்பவத்தைத் தத்த…
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் கிழக்கு மாகாணம் சற்று வித்தியாசமானது. இங்கு மூவின மக்களும் கிட்டத்தட்ட சம அளவில் வாழ்கின்றனர்.(சிங்களவர்கள் சற்று குறைவு) 2012 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்பிரகாரம் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும் அடுத்த குடிசன மதிப்பீட்டின்போது அந்த நிலை நிச்சயமாக மாற்றமடையும். 2012 ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழர்கள் 39.29% ஆகவும்,முஸ்லிம்கள் 37.69% ஆகவும்,சிங்களவர்கள் 23.15% ஆகவும் உள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஒரு இனத்தால் அல்லது ஒரு கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பது வெளிப்படையானது. கடந்த கால ஆட்சியமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள்,துரோகங்கள்,விட்டுக்கொடுப்புக்கள் என்று தொடர்ந்து, தற்பொழுது ஏ…
-
- 11 replies
- 1.2k views
-
-
அல்கைதா அல்ஜிஹாத் என்ற நூலின் பிரதானமான கருத்துக்கள் வருமாறு; சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதம் உலகில் பல பௌத்த நாடுகளின் வரலாறு அழிந்து போனதற்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்பு தான் காரணமாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வரையிலும் இதுதான் பகிரங்க உண்மையாகும். இப்போதுள்ள ஈரான், ஈராக்,மக்கா மற்றும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஒரு காலத்தில் பௌத்த வழிபாடுகள் நடந்துள்ளன. (முகவுரையில்) தற்போது முழு உலகத்திலும் இஸ்லாத்தின் பரவலுக்கும் அடிப்படைவாதத்துக்கும் பணம் கொடுக்கும் நாடாக சவூதி அரேபியா மாறியிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் உலகம் பூராவும் பரவுவதற்கும், ஷரீஆ சட்டத்தை பரப்புவதற்கும் ஈரானும் அடிப்படையாக அமைந்திருக்கிறது. இலங்கையின் அட…
-
- 0 replies
- 932 views
-
-
பொறுக்கிகளுக்கு போராளிகளின் சாயம் பூசப்படுகிறது: வாள்வெட்டு குண்டர் குழுக்களும் கதாநாயக பிம்பமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர் குழுவொன்று, இரு பொலிஸாரை வாள்களினால் வெட்டியிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தாக்குதல்தாரிகளைக் கைது செய்வதற்காக, இராணுவம் உள்ளிட்ட முப்படையின் ஒத்துழைப்போடு, தேடுதல் வேட்டை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார். கடந்த சில வ…
-
- 3 replies
- 571 views
-
-
நிலைக்குமா ஆட்சி..? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-02#page-22
-
- 0 replies
- 384 views
-
-
அச்சம் அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்தாமல், நாட்களைக் கடத்தி வருகின்றனர். கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலங்கள், ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடைகின்றன. இரண்டாம் திகதி, தேர்தல் குறித்து அறிவிப்புச் செய்வதற்…
-
- 0 replies
- 322 views
-
-
புலிகளுக்குச் சோதனைமேல் சோதனைதான் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரைச் சுட்ட குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொல்வதற்காக முயன்றவர்கள் என்ற குற்றச்சாட்டில், வேறு சில விடுதலைப்புலி இயக்க முன்னாள் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதாகிச் சிறையிலிருக்கின்றனர். அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, தனங்கிளப்புப் பகுதியில், வெடிப்பொருட்கள் மற்றும் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னணியில் சம்மந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கைத…
-
- 0 replies
- 464 views
-
-
‘மிக்காரும் இல்லை; தக்காரும் இல்லை’: பிரதமர் மோடியின் காய்நகர்த்தல்கள் இந்திய பிரதமரின் 2019 நிகழ்ச்சித்திட்டம், ஏறக்குறைய இலக்கை எட்டி விட்டது. காங்கிரஸ் முன்னின்று உருவாக்கிய, கூட்டணியை பீஹாரில் உடைத்துச் சிதறடித்த நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சியோ, எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளரோ இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கூட்டணியில் இருந்து விலகி, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஓரிரவுக்குள், மீண்டும் முதலமைச்சர் ஆகியிருப்பது பீஹாரில் நடக்கும் புதிய ‘மாஜாஜாலம்’ அல்ல! என்றால…
-
- 0 replies
- 481 views
-
-
கொக்கெய்ன் மயக்கங்கள் கொழும்பு புறநகர் பகுதியில், பெருமளவிலான கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டமை, கடந்த சில நாட்களாக நாட்டின் அரசியல், சமூக அரங்கில் பேசுபொருளாகி இருக்கின்றது. ‘போதையற்ற இலங்கை’யை உருவாக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில், நாடு பயணித்துக் கொண்டிருக்கும் போது, 218 கிலோகிராம் கொக்கெய்ன், அரச நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை, கணக்கெடுக்காமல் விடக் கூடிய ஒரு விடயமல்ல. இது தொடர்பாக விசாரித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை. ஆனாலும், கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அத…
-
- 1 reply
- 574 views
-
-
நல்லூர் துப்பாக்கிச் சூடு; எது உண்மை? நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தென்மேற்கு மூலையில், கடந்த சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கைத் தமிழர்கள் வாழுகின்ற பல்வேறு நாடுகளிலும் கூட, இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் முன்பாக இந்தச் சம்பவம் நடந்தமை; அவரது மெய்க்காவலர்களில் ஒருவர் சூடுபட்டு இறந்தமை, மற்றொருவர் காயமடைந்தமை; இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் பின்னணி; இதுபோன்ற பல்வேறு காரணங்களால், இந்தச் சம்பவம், மக்…
-
- 1 reply
- 719 views
-