அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
இந்த தலைப்பில் ஒரு வரலாற்றை எழுதத்தொடங்கினேன் . . . . முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினிய…
-
- 2 replies
- 820 views
-
-
வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் - முகம்மது தம்பி மரைக்கார் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே, பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றது. முப்படையினர் ஊடாகவும் பொதுமக்களின் காணிகளை அரசு அபகரித்துக் கொள்கிறது. அண்மையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்தானை எனும் இடத்தில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் விவசாயக் காணிகளை, தொல்பொருளியல் திணைக்களம் வளைத்துப் போட்டது. இந்த நிலையில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எடுத்துக் கொண…
-
- 0 replies
- 415 views
-
-
வேலைகோரிப் போராடும் பட்டதாரிகளின் கலைந்த கனவுகள் தொலைத்ததை மீட்குமா அரசாங்கம்? - கருணாகரன் இந்திரகுமாருக்கு வயது 28. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார். குடும்பத்தில் அவர்தான் முதலாவது பட்டதாரி. அவர், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியபோது, குடும்பமே மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது. இருக்காதா பின்னே, குடும்பத்தில் முதலாவது ஆளாகப் பட்டதாரியாகப் போகிறார், படித்துத் தொழில் செய்யப்போகிறார் என்றால், எவ்வளவு பெரிய மகிழ்ச்சியும் ஆறுதலும் ஏற்படும் அந்தக் குடும்பத்துக்கு!. இந்திரகுமாரை நினைத்து, மிகப் பெரிய மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டது. சந்தோஷத்த…
-
- 0 replies
- 329 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-02#page-11
-
- 1 reply
- 355 views
-
-
சுயநல அரசியலால் சீரழியும் முஸ்லிம்கள் முஸ்லிம் சமூகத்தில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. எந்தவொரு முஸ்லிம் கட்சியும் சமூகத்தின் விடிவுக்காய் சிந்திப்பதில்லை. முஸ்லிம் சமூகத்தின் சீரழிவிலும் ஆதாயம் தேடிக் கொள்ள விளைகின்றவர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இன்றைய அரசாங்கத்திலும் மஹிந்தராஜபக் ஷவின் அரசாங்கத்திலும் முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்றனர், இருந்தனர் ஆனாலும் போதிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை. அரசாங்கத்தில் பங்காளிகளாக இணைந்து கொண்டவர்கள் அமைச்சர் பத…
-
- 0 replies
- 463 views
-
-
தமிழகத் தலைமைகளின் அத்துமீறல் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு எப்போதும் துணை நின்று வந்தது தமிழ்நாடு. நெருக்கடியான காலகட்டங்களில் கூட, தமக்கான தனிப்பட்ட பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், தமிழக மக்களும், பல அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தனர், உதவிகளைச் செய்தனர், போராட்டங்களை நடத்தினர். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்- அவர்களைக் காப்பாற்றக் கோரி, சர்வதேசத்தையும், இந்திய மத்திய அரசையும் தலையிட்டு, போரை நிறுத்தக் கோரி தமிழகத்தில் உள்ள பல உறவுகள் உயிரைக் கூடக் கொடுத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு ஈழத் தமிழர்களுக்கும்,…
-
- 0 replies
- 539 views
-
-
யாழ் நகர மண்டபத்தை மீளக்கட்டியெழுப்புதல்… சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன? – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன் பெப்ரவரி 12ஆந் திகதி யாழ் தினக்குரலில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அது பொதுமக்களுக்கான ஒர் அறிவித்தல். அது பின்வருமாறு தொடங்குகிறது. ‘மக்களால் மக்களை ஆட்சி செய்யும் மக்களின் யாழ்ப்பாண மாநகர சபையின் அழிந்த நகர மண்டபத்தை அதன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிரூட்டி எழுப்பி தொலைந்த அந்தக் கோவிலை டாக்டர் சுப்ரமணியம் சிறுவர் பூங்காவின் தோற்றமுள்ள அதே திடலில் இருந்து நிறுவி, யாழ்ப்பாண நகரின் கம்பீரத்தை மீளக்கொண்டுவரும் பல்வேறு கடந்தகால எத்தனங்களின் தொடராக வந்துள்ள பிந்தியதை பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள மாநகரசபையினர் நாம் விர…
-
- 2 replies
- 1.3k views
-
-
கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் இருப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலன்களையும் தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் பெரும் இழுபறிகளுக்கும் மத்தியில் அண்மையில் கைச்சாத்திடப்பட்டமை தெரிந்த விடயமாகும். எனினும் இக்கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துகள் சிலவற்றை கம்பனியினரும் தோட்ட நிர்வாகமும் மீறி செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அதிருப்தி நிலைக்கு மத்தியில் தற்போது சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இவ்அதிகரிப்பின் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நிலுவைப் பணத்தினை வழங்க வேண்டும் என்று இப்போ…
-
- 0 replies
- 531 views
-
-
-
எர்டோகானின் எழுச்சி ஒரு சுல்தானின் உருவாக்கம் முற்று முழுதான அதிகாரத்தைக் கொண்ட ஆட்சியாளராக துருக்கியில் எர்டோகானின் எழுச்சி ஜனநாயக நாடுகள் இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிக்கு செம்மையான ஒரு உதாரணம் துருக்கியில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பில் தனது அரசியலமைப்புத் திருத்த திட்டங்களுக்கு வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஜனாதிபதி றிசேப் தஜீப் எர்டோனால் இயலுமாக இருந்ததால் நாட்டின் அரசியல் ஒழுங்கு முறை கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகும். எர்டோகானின் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் …
-
- 0 replies
- 500 views
-
-
ஜெனீவாவில் மூளை சலவை செய்யப்பட்ட சர்வதேச சமூகம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை பற்றிய முடிவுகள், கால அவகாசம், சர்வதேச விசாரணை என்ற விவகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய நெருக்கடிகளையும் விரிசல்களையும் முரண்பட்ட போக்குகளையும் உருவாக்கும் நிலையொன்று உருவாகியிருப்பதைக் காணமுடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது போருக்கு பின்னுள்ள நிலைமைகளில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுக்காணப்பட்டு வருகிறது என்பதை நிகழ்காலப் போக்குகளிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக சர்வதேச நாடுகள், சர்வதேச சமூகம் மற்றும் …
-
- 0 replies
- 551 views
-
-
போராடும் மக்களுக்கு விடிவு கிடைக்காதா ? ரொபட் அன்டனி தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரி வருகின்ற நிலையில் அதற்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்காவிடினும் அல்லது மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் செவிமடுக்காவிடினும் மக்கள் விரக்தி அடைந்துவிடுவதுடன் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு முன்வந்துவிடுவார்கள். காரணம் கோரிக்கைகளின் மூலம் அல்லது வேண்டுகோள்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியாத தமது தேவைகளை மக்கள் போராட்டங்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்கு முயற்சிப்பதை தவிர்க்க முடியாது. அந்தவகையில் வடக்கு, கிழக்க…
-
- 0 replies
- 249 views
-
-
இனப்படுகொலையை வீரமாக சித்திரிப்பவர்களால் நீதியை நிலைநாட்ட இயலாது! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் உலகில் அன்னையர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஒரு முக்கியமான இடமும் வரலாறும் உண்டு. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். தாய்மை என்பது மனிதர்களுக்கு மாத்திரம் உரிய விடயமில்லை. விலங்குகளிடமும் பறவைகளிலும் தாய்மையின் உன்னததத்தைப் பார்க்கிறோம். அன்னையர்கள் தவித்தால் அந்த தேசம் அநீதியில் மாண்டிருக்கிறது என்றே அர்த்தம். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று. ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலு…
-
- 0 replies
- 251 views
-
-
மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை கோட்பாட்டிலும் நடைமுறையிலும் ஜனநாயகம்-மக்கள்; இறைமை-நாடாளுமன்றம் - 2 - சட்டத்தரணி எஸ்.மோகனராஜன் இன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம் தோன்றியுள்ள கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இலங்கை கடந்த காலங்களிலும் தற்போதும் ஜனநாயகத்துக்கும் மக்கள் இறைமைக்கும் மதிப்பளித்துள்ளதா? மதிப்பளிக்கின்றதா? என்ற மிகப்பெரிய சந்தேகத்துக்கு விடைதேடும் முகமாக நாடாளுமன்றம் நீதியியல் ரீதியாக எவ்வாறான கடப்பாட்டைச் செலு…
-
- 0 replies
- 429 views
-
-
ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள் தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. ‘ஈழத்துக் கலைஞர்கள்’ என்கிற பெயரினால் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளவும், அதனைச் சூழவுள்ள பகுதியும் நூற்றுக்கணக்கான போராட்டங்களைக் கண்டவை. ஆலய வளவுக்குள் போராட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்று ஆலய நிர்வாகம் அறிவித்த பின்னரும், ஒரு சில போராட்டங்கள் அங…
-
- 2 replies
- 900 views
-
-
கோட்டாவும் பொன்சேகாவும் கொலைக் குழுக்களும் ஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4 போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கையில் அரச படைகளாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமை மீறப்பட்டமையை எடுத்துக் காட்டும் வகையில் பல நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். இம்முறையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் ஜெனீவாவுக்குச் சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இலங்கையில் அரச படைகளினால் அபகரிக்கப்பட்ட தமது காணிகளைக் கேட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத்…
-
- 0 replies
- 348 views
-
-
விசேட தேவையுடையோரின் பிரச்சினைகள்: சர்வரோக நிவாரணியா அரசியல் தீர்வு? - கருணாகரன் நோர்வேயிலிருந்து சஞ்சயன் செல்வமாணிக்கம் என்பவர் தொடர்புகொண்டு, “வன்னியில் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட கொஞ்சப்பேருக்கு உதவிகளைச் செய்யச் சிலர் விரும்புகிறார்கள். உடல் பாதிப்புக்குள்ளான சிறார்களைப் பராமரிக்கும் அமைப்பு அல்லது, கூடுதலான பாதிப்பைச் சந்தித்துள்ள சிலரைத் தெரிவு செய்து தரமுடியுமா?” எனக் கேட்டார். ஏற்கெனவே, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலிருக்கும் முன்னாள் போராளிகள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு நண்பர்களுடன் இணைந்து, சஞ்சயன், உதவிகளைச் செய்திருக்கிறார். அந்தப் பணிகளின்போது, படு…
-
- 0 replies
- 561 views
-
-
கும்புறுமூலை விவகாரம்: குடியை கெடுக்குமா நல்லாட்சி - முகம்மது தம்பி மரைக்கார் முரண்நகை’ என்று தமிழில் ஒரு சொல் உள்ளது. முரண்பாண்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை என்பது இதன் அர்த்தமாகும். ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது சிவன் கோயில்’ என்பதில் முரண்நகை உள்ளது. அரசியலில் முரண்நகைக்கு பஞ்சமேயில்லை. போதையற்ற நாட்டினை உருவாக்குவது, தனது இலட்சியங்களில் ஒன்றெனக் கூறும் நல்லாட்சி அரசாங்கம், மட்டக்களப்பு, கும்புறுமூலை பகுதியில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் மதுபான உற்பத்திசாலையொன்றினை அமைப்பதற்கு வரிச் சலுகையுடன் அனுமதியளித்துள்ளமையானது, சமகால அரசியல் முரண்நகையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் உள்ளது…
-
- 0 replies
- 457 views
-
-
காலஅவகாசத்தைக் கடந்துசெல்வது எப்படி? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக மீண்டும் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நாடுகள், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை முன்வைத்த தீர்மானங்களின் நீட்சியாக- 2015ஆம் ஆண்டு இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாகவே இப்போதைய தீர்மானம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியே இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்…
-
- 1 reply
- 325 views
-
-
கரையேற முடியாத துறைமுகம் - முகம்மது தம்பி மரைக்கார் பொறுமையிழக்கும் நிலையில்தான் போராட்டங்கள் நிகழ்கின்றன. மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபோது, பொறுப்புத்தாரிகளுக்கு எதிராக அவர்கள் வெகுண்டெழுகின்றனர். அநேகமான போராட்டங்கள், நம்பிக்கையிழப்பின் கடைசிப் புள்ளியில்தான் தொடங்குகின்றன. அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, கடந்த 14ஆம் திகதியன்று வீதி மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். தங்கள் தொழில் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தடையினை நீக்கித் தருமாறு, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை காது கொடுத்து யாரும் கேட்கவில்லை என்கிற கோபமும் ஏமாற்றமும் அவர்களை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளின…
-
- 0 replies
- 476 views
-
-
நெதர்லாந்து தேர்தலும் தேசியவாதத்தின் தாக்கமும்
-
- 0 replies
- 353 views
-
-
பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள் - கே.சஞ்சயன் ஆலயத்தில் பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் ஆட்டின் தலையில் பூசாரி மஞ்சள் தண்ணீரைத் தெளிப்பார். தண்ணீர் பட்ட சிலிர்ப்பில் ஆடு தலையை ஒருமுறை ஆட்டி அதனை உதற முனையும். அதுதான் ஆடு செய்யும் தவறு. தன்னைப் பலிகொடுப்பதற்கு ஆடு விடை கொடுத்து விட்டதாக யாரோ ஒருவர் கூறுவார். அவ்வளவு தான், அத்தோடு முடிந்தது ஆட்டின் கதை. பலிகொடுப்பதற்குத் தன்னிடம் அனுமதி கேட்பதற்காகத் தான், தன் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று ஆட்டுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் ஆடு அதற்கு ஒருபோதும் தலையாட்டியிருக்காது. ஆட்டிடம் கேட்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெற்றது போலத்தான் இப்போது போர…
-
- 0 replies
- 447 views
-
-
கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசத்தைப்பெற்ற அரசாங்கம் ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன் கடந்த ஒரு மாதகாலமாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையானது உலகநாடுகளின் மனித உரிமை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை குறித்தும் பரபரப்பான விவாதங்கள் இடம்பெற்றன.இலங்கை தொடர்பாக இம்முறை கூட்டத் தொடரில் மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒரு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கை தொடர்பாக விவாதம் ஒன்றும் நடைபெற்றது. இவ்வாறு கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் முழுவதும் இலங்கை தொடர்பான விடயங்கள் பரபரப்பாக ஆராயப்பட்டு வந்த நிலையில் மிக அதிகளவான உப குழுக்கூட்டங்களும் நடைபெற்றன. அந்தவகையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் புலம்பெயர் அம…
-
- 0 replies
- 687 views
-
-
இழுத்தடிப்பு ஜெனிவாவில் 34ஆவது கூட்டத் தொடர் பற்றிய நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், அதிருப்திகள் கடந்த ஜனவரி மாதம் முதலே ஏற்படத் தொடங்கிய நிலையில் இலங்கை பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்கு முடிவு காணும் நாளாக கடந்த 23 ஆம் திகதி மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை சர்வ உலகமும் அறிந்த ஒரு செய்தியாகும். 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு பிரித்தானியாவின் துணைநிலையுடன் இலங்கைக்கெதிரான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையும் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தில் குறித்துக்காட்டப்பட்ட 30/01, தீர்மானங்கள் முழுவதையும் நிறைவேற்றி வைப்போமென இலங்கை, இணை அனுச…
-
- 0 replies
- 511 views
-
-
சர்வதேச கண்துடைப்பு செல்வரட்னம் சிறிதரன் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டிருந்த ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் இலங்கை தொடர்பான கூட்டத்தில் அரசுக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தத் தீர்மானத்தை ஏனைய சில நாடுகளுடன் முன்னின்று சமர்ப்பித்த அமெரிக்காவும், பிரிட்டனும் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அதற்குரிய சந்தர்ப்பமாகவே 2019 ஆம் ஆண்டு வரையிலான கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றன. இந்தத் தீர்மானத்திற்கு ஐ.நா. மனித உரிமை…
-
- 0 replies
- 397 views
-