Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்: பழிவாங்கப்படும் ஆபிரிக்கா தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எந்த அமைப்பும் அதன் பணியால் மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. அதன் உருவாக்கம் ஏன்? எப்போது நிகழ்ந்தது? என்பதும் அதை மதிப்பிடுவதில் முக்கியமானது. குறிப்பாகச் சர்வதேச அமைப்புகளை, அவை உருவாகுவதற்கு அடிப்படையான அரசியல் காரணிகளின் அடிப்படையிலேயே மதிப்பிடலாம். எந்த அமைப்பையும் அந்தக் கண்ணோட்டத்துடன் நோக்குவது தகும். ஓர் அமைப்பு செய்வது என்ன? செய்யாமல் விடுவது என்ன? என்பதை அவ்வமைப்பின் ஆணை தீர்மானிப்பது குறைவு. மாறாக அவ்வமைப்பை நடாத்துகின்ற அரசியலும் அவ்வரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்டமைப்புகளும் அது சார் சூழலுமே தீர்மானிக்கின்றன. இதற்கு எந்த அமை…

  2. கவனமாக அணுகப்பட வேண்டிய மாணவர்களின் மரண விவகாரம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டதைப் போன்ற - அல்லது அதைவிட அதிகமான - எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி, வடக்கில் ஏற்பட்டுள்ளது. படையினர் அல்லது பொலிஸார் சார்ந்த குற்றங்கள் அல்லது சம்பவங்களின் போது, வடக்கில் எழுச்சிகள் ஏற்படுவதொன்றும் புதிதன்று. 2005ஆம் ஆண்டில், படையினரின் வாகனங்களில் பொதுமக்கள் சிக்கும் போதும் காயப்படும் போதும், படையினருக்கெதிரான எழுச்சி ஏற்படுவதும் ஹர்த்தால் நடத்தப்படுவதும…

  3. கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும் 10/24/2016 இனியொரு... யாழ்ப்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்கும் இரண்டு மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான அதிர்வலைகள் மக்கள் மத்தியிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அதன் எதிர்த் தரப்பிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கைப் பொலிஸ் படை இரண்டு மாணவர்களை அதிகாலை வேளையில் கொன்று போட்டுவிட்டு அதற்கான தடயங்களை அழித்துவிட்ட சம்பவம் ஒரு வகையான அச்ச உணர்வைச் சமூக மட்டத்தில் தோற்றுவித்துள்ளது. இரண்டு கொலைகளின் பின்புலத்திலுள்ள அரசியல் காரணங்கள் எதுவாயினும், அவற்றை முன்வைத்து நடத்தப்படும் பிழைப்புவாத…

  4. திட்­ட­மிட்ட செயற்­பா­டு­களை நிறுத்தி மாணவர் கொலைக்கு நீதி வழங்­க­வேண்டும் யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் இரு­வரின் படு­கொ­லை­யினை கண்­டித்து வடக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட வடக்கு உட்­பட நாடு முழு­வ­திலும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தமது நண்­பர்­களின் படு­கொ­லைக்கு நீதி வழங்­கக்­கோரி பெரும் போராட்­டங்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் படு­கொ­லையை கண்­டித்தும் பக்­கச்­சார்­பற்ற விசா­ரணையை நடத்தி நீதி வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தியும் யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் சமூகம் நேற்று முன்­தினம் யாழ்ப்­பாண செய­ல­கத்தை முடக்கி பெரும் போராட்­டத்தை நடத்­தி­யி­ருக்­கின்­றது. கொட்டும் மழைக்கு மத்­தியில…

  5. மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற ரீதியில், ஒவ்வொரு உயிரையும் தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில்தான், பொலிஸாரின் அதிகார அத்துமீறலின் நிமித்தம் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உணர்ச்சிகரமான நாட்கள் இவை! மிக உச்சமானதும் உன்னதமானதும் சந்தர்ப்பங்களில்கூட, எந்தவொரு காரணத்துக்காகவும் எதிர்க…

  6. சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன? அருணன் நிமலேந்திரா – அம்ரித் பெர்னான்டோ:- சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன? அருணன் நிமலேந்திரா அம்ரித் பெர்னான்டோ இரண்டு இலட்சம் மக்களின் வாழ்வை அபாயத்துக்குள்ளாக்கும் அறிஞர்களின் அறிக்கை? இலங்கையில் தமிழர்களின் கடைசி அடையாளமாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் தனது கல்வியை, ஒழுக்க விழுமியத்தை, தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறதா? தண்ணீர் மக்களது அடிப்படையான உரிமை Water is the basic human rights இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நீண்ட யுத்தம் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிவுக்கு வந்தாலும் இன்றுவரை தமிழ் மக்கள் பல்வேறு…

  7. வழிய வழிய வாக்குறுதிகள் முகம்மது தம்பி மரைக்கார் ‘கீரைக் கடை’களுக்கு எதிர்க் ‘கடை’கள் உருவாகுவது, அரசியல் அரங்கில் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லது. எதிர்க்கடைகள் அதிகரிக்க அதிகரிக்க தனிக்காட்டு இராசாக்கள் மதிப்பிழந்து போவார்கள்; ஏகபோக வியாபாரம் அங்கு இல்லாமல் போய்விடும். நல்ல கடையில் வர்த்தகம் ஜோராக நடைபெறும். நல்ல கீரைகளை மக்கள் தேடித் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். தரமற்ற கீரைகளை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி வியாபாரம் நடத்த முடியாது போய்விடும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், கடந்த ஒரு வருட காலமாக, அரசியல் கட்சிகளின் ‘எதிர்க்கடை வியாபாரம்’ சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னர் முஸ்லிம் காங்கிரஸும், …

  8.  சாவினை அடுத்த சாணக்கியம் என்ன? ப.தெய்வீகன் அந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையும் ஓர் இனத்தின் மீதான பேரதிர்வாக மீண்டுமொரு தடவை தமிழ்நிலத்தில் பதிவாகியிருக்கிறது. தங்களின் உதிரத்தில் ஓடுகின்ற வக்கிரத்தினை மறைத்துக்கொள்ள முடியாமல்போன, இன்னொரு உக்கிர தருணமாகிப்போன அந்த மரணங்கள் தமிழர் பிரதேசங்களில் துண்டுப்பிரசுரங்களாக மாத்திரம் பறந்து கொண்டிருக்கின்றன. போருக்குப் பின்னர் தவணை முறையில் இடம்பெற்று வருகின்ற எத்தனையோ மரணங்களில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது. இந்தச் சாக்குரலின் சத்தங்களுக்கும் நீதியை நோக்கிய கேவல்களுக்கும் என்ன நடந்துவிடப்போகிறது என்று பார்த்தால், புங்குடுதீவுச் சம்பவமாகவும் வவுனிய…

  9. கொழும்பு அர­சி­யலின் சல­ச­லப்பும் யாழ். இளைஞர்­களின் மர­ணமும் - ஜீவா சதா­சி­வ­ம் “முன்னாள் ஜனா­தி­பதி சந்­திரி­காவுக்­கும் இந்நாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் தமி­ழ் ­மக்­களை பாது­காக்க வேண்­டிய தலை­யாய பொறுப்பு இருக்­கின்­றது'' என்று தனது உள­மார்ந்த கருத்தை நேர்­காணல் ஒன்றில் கூறி­யுள்ளார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ரா­ஜ­­பக் ஷ ஆட்­சியில் ஒரு 'இரா­ஜா­வாக' இருந்த பஷில் ரா­ஜபக் ஷ. இதற்கான கார­ணத்­தையும் அவர் இவ்­வாறு கூறியி­ருக்­கின்றார். ''மேற்­படி ஜனா­தி­ப­தி­க­ளுக்கு மாத்­திரம் தான் சிறு­பான்­மை­யினர் குறிப்­பாக வடக்கு, கிழக்கு மக்கள் நம்­பிக்­கையின் அடிப்­படையில் வாக்­கு­களை வழங்­கி அவர்­களை ஆட்­சிக்…

  10. ருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) - ஒரு பார்வை ஒரு சின்னக் கதை. இரண்டு குழுக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வந்தன. ஆரம்பத்திலிருந்தே இரு குழுக்களுக்கும் ஒத்துப் போனதில்லை. ஒரு குழு, 'நாங்களே இந்த மண்ணின் மாந்தர்கள். அவனுங்க வந்தேறிகள். இந்த மண்ணின்மீது உரிமை இல்லாதவங்க' என்று மார் தட்டிக் கொள்ளும். இன்னொரு குழுவோ, 'அவனுங்க சுத்த சோம்பேறிங்க. ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதவனுங்க. இந்த நாட்டை வளப்படுத்துன நாங்கதான் இந்த மண்ணுக்கு உண்மையான வாரிசு' என்று உரிமை கொண்டாடும். இரு தரப்பிலும் இனக்கலப்பு இருக்கக் கூடாது, தங்கள் இளைஞர்கள் அடுத்த இனத்தில் போய் கல்யாணம் செய்துவிடக் கூடாது என்று ரொம்…

    • 0 replies
    • 1.5k views
  11. திட்டமிடப்பட்ட இனப்படுகொலை இன்னும் தொடர்கிறதா?

  12. ஐ.நா மெய்யாகவே மனித குலத்தை பாதுகாக்கும் அமைப்பா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஒக்டோபர் 24. இன்று ஐ.நா தினமாகும். 1945 ஒக்டோபர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டது. உலகில் உள்ள நாடுகளின் அமைதி, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு அமைப்பாக தேசங்களை ஒன்றிணைக்கும் ஒரு உலக அரசாக ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. இதன்படி ஐ.நாவில் 193 நாடுகள் தற்போது அங்கம் வகிக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இன்னுமொரு உலகப் போர் நடைபெறாத வகையில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டோல் ஐக்கிய நாடுகள் சபையை தோற்றுவித்தார். வ…

  13. மஸ்ஜித் அல் அக்ஸா மீதான இஸ் ரேல் அட்­டூ­ழி­யங்கள் யுனெஸ்கோ வாக்­கெ­டுப்பின் போது இலங்கை மாயம் ஒரு காலத்தில் அடக்கி ஒடுக்­கப்­பட்ட பலஸ்­தீன மக்­களின் உரி­மைக்­காக சர்­வ­தேச அரங்­கு­களில் ஓங்கி ஒலித்த குரல் இலங்­கையின் குரல். ஆனால், இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பின் கீழ் உள்ள ஜெரூ­ஸலம் நகரில் அல் குத்ஸ் வளா­கத்­துக்குள் உள்ள மஸ்­ஜிதுல் அக்­ஸாவின் ஹரம் அல் ஷரப் பகு­தியில் இஸ்ரேல் இழைத்து வரும் கொடு­மை­களைக் கண்­டிக்கும் வகையில் 2016 அக்­டோபர் 13இல் யுனெஸ்கோ அமர்வில் ஒரு தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்­ட ­போது இலங்­கையின் குரல் மௌனித்துப் போய்­விட்­டது. மிகவும் கௌர­வ­மான முறையில் நடு­நி­லை­யான வெளி­நாட்டுக் கொள்­கையைக் கடைப்­பி­டித்து வந்த இலங்­கைய…

  14. வடக்கை ஆக்கிரமித்துள்ள படையினர் வடக்கில் பெரும் எண்­ணிக்­கை­யான இரா­ணு­வத்­தினர், யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­னரும் நிலை­கொண்­டி­ருப்­பது மீண்டும் சர்ச்­சைக்­கு­ரிய விட­ய­மாக மாறி­யுள்­ளது. இதனால் வட­ப­குதி மக்கள் தங்கள் அன்­றாட கட­மை­களை செவ்­வனே மேற்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவும் சுதந்­தி­ர­மாக செயல்பட முடி­யா­த­வர்­க­ளா­கவும் இருப்­ப­தாகத் தொடர்ந்து குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றனர். வடக்கில் நிலை கொண்­டுள்ள படை­யினர் தொடர்ந்தும் தமிழ் மக்­களை சந்­தேகக்கண் கொண்டு பார்ப்­பதும், அநா­வ­சி­ய­மான புல­னாய்வு வேலை­களில் ஈடு­பட்டு வரு­வதும் பொது­வி­ட­யங்­களில் கூட தங்கள் தலை­யீ­டு­களை மேற்­கொள்­வதும் வழமையான ஒன்றாகவுள்ளது. இவை அனைத்­துக்கும்…

  15. அர­சியல் தீர்வு விட­யத்தில் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு என்ன? முஸ்­லிம்­களின் எதிர்­காலம் குறித்­து­ மு­தலில் அச்­ச­மூ­கத்தில் உள்ள சிவில் அமைப்­புக்கள், அர­சியல் கட்­சிகள், புத்­தி­ஜீ­விகள் சிந்­திக்க வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தைப் பற்றி சிந்­திக்­காது அமைப்பு, கட்சி, தொழில் உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்குள் தமது நட­வ­டிக்­கை­களை சுருக்கிக் கொண்டு செயற்­ப­டு­வது முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்தை சூனி­ய­மாக்கி விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்­டி­யுள்­ளது. தற்­போது முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்கு தம்மால் முடிந்த காரி­யத்தை செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், அர­சியல் கட்­சி­க…

  16. சிவசேனா எதனைச் சாதிக்கப் போகிறது? அண்­மையில் வவு­னி­யாவில் சிவ­சேனா என்ற அமைப்பு தொடங்­கப்­பட்ட விவ­காரம், தமிழ் அர­சியல் அரங்கில் பெரும் விவாதப் பொரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. எழுக தமி­ழுக்குப் பின்னர் தமிழர் அர­சியல் அரங்கில் சிவ­சேனா தான் கூடுதல் பர­ப­ரப்பைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை. நீண்­ட­கால தமிழ்த் தேசிய செயற்­பாட்­டா­ளர்­களில் ஒரு­வரும், தமிழ்ப்­பற்­றா­ளரும், தமி­ழ­றி­ஞ­ரு­மான மற­வன்­பு­லவு சச்­சி­தா­னந்தம் இதன் அமைப்­பா­ள­ராக இருக்­கிறார். அவ­ரது ஏற்­பாட்டில் வவு­னி­யாவில் நடந்த சிவ­சேனா ஆரம்ப நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் யோகேஸ்­வ­ரனும் பங்­கேற்­ற…

  17. மீண்டும் எழுந்துள்ள படைக்குறைப்பு கோரிக்கை இலங்­கையில் மேற்­கொண்ட பத்து நாட்கள் பய­ணத்தின் முடிவில் கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், வடக்கில் படைக்­கு­றைப்பு செய்­யப்­பட வேண்டும் என்ற கருத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார் சிறு­பான்­மை­யினர் விவ­கா­ரங்­க­ளுக்­கான ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசக் நாடியா. போர் முடிந்து ஏழு ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரும், வடக்கில் அதி­க­ளவு படை­யினர் நிலை கொண்­டி­ருப்­ப­தையும், அதனால் தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளையும் அவர் தனது பய­ணத்தின் போது நேர­டி­யாக கண்­டி­ருக்­கிறார். பல்­வேறு சந்­திப்­பு­களின் மூலம் கேட்­ட­றிந்து கொண்­டி­ருக்­கிறார். இத…

  18. முஸ்லிம்கள் குறித்த ரீட்டாவின் கரிசனையை அரசாங்கம் செவிமெடுக்குமா? அண்மைக் காலமாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரமுகர்கள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்வது வழக்கமாகிவிட்டது. 2015 ஆட்சி மாற்றத்திற்குப் பிற்பாடு தேசிய அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகளுடன் கடைப்பிடிக்கும் நெகிழ்வுத் தன்மையான போக்கே இதற்குக் காரணமாகும். இதன் தொடரில் தான் சிறு­பான்மை விவகாரங்கள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த 10 நாட்­க­ளாக இலங்கையில் தங்கியிருந்த அவர் பல்வேறு சிறுபான்மை தரப்புகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் நேற்று முன்தினம் க…

  19. காணாமல் போனோர் விடயத்தில் ஐ. நா. கூறுவது என்ன? இலங்­கைத்­தீவில் அர­சியல் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் காணாமல் போவோர் என்­பது இன்று நேற்று அல்ல குறைந்­தது, கடந்த 45 வரு­டங்­க­ளாக, அதா­வது தெற்கில் சேகு­வ­ரா க்கள் என அன்று கூறப்­பட்ட ஜே.வி.பி.யினரின் 1971 ஆவது கிளர்ச்சியில் இருந்து தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது. அன்று தெற்கின் சிங்­கள இளைஞர், யுவ­தி­க­ளுடன் ஆரம்­ப­மா­கிய காணாமல் போகும் விடயம், 1972 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் வடக்கு, கிழக்கில் தமிழ் இளை­ஞர்கள் காணாமல் போவது ஆரம்­ப­மா­கி­யது. அன்று வடக்கு– கிழக்கில் காணாமல் போனோ­ர் அர­ச­ப­டை­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்டு, அவர்களது உடல்கள் தமி­ழர்­க­ளது தாயக பூமியின் நாலா­பக்­கமும் …

  20. தடம்மாறுகின்றதா நல்லாட்சி அரசாங்கம்? செல்­வ­ரட்னம் சிறி­தரன் இலங்­கையில் சிறு­பான்மை இன மக்கள் கிள்­ளுக்­கீ­ரை­யா­கவே கரு­தப்­ப­டு­கின்­றார்கள். அது மட்­டு­மல்ல. அவர்கள் பெரும்­பான்மை இன மக்­களின் தயவில் வாழ வேண்­டிய நிலையில், இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். அந்­நி­ய­ரா­கிய ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து நாடு சுதந்­திரம் பெற்ற நாள் முத­லாக, படிப்­ப­டி­யாக, இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அந்தச் செயற்­பாடு தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தையே இப்­போதும் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. பல இனங்­களைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்­கின்­றார்கள். பல மதங்­களை அவர் கள் பின்­பற்றி வரு­கின்­றார்கள். இந்த நாட்…

  21. வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? 'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியிருந்தார். இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னமும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல்க் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை இரா.சம்பந்தன், பின்னரும் அவ்வப்போது நினைவுபடுத்தியிருந்தார். அந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியாது என்பது முன்னரே ஊகிக்கக்கூடிய விடயம்தான். ஏனென்றால், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் ஒரு பிரச்சி…

  22. அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தலை­வர்­களின் இன்­றைய நிலைப்­பாடு என்ன? எந்­த­வொரு தேசியப் பிரச்­சினை தொடர்­பிலும் நிலைப்­பா­டொன்றை எடுப்­ப­தற்­கான சகல உரி­மை­களும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்­துக்கு இருக்­கி­றது. தமிழ் மக்கள் சம்­பந்­தப்­பட்ட எந்­த­வொரு விவ­கா­ரத்­திலும் தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்­கான விசேட பொறுப்­பையும் உரி­மை­யையும் கூட அவர்கள் கொண்­டி­ருக்­கி­றார்கள். மாறு­கின்ற நிலை­வ­ரங்­க­ளுக்கும் பின்­பு­லங்­க­ளுக்கும் ஏற்­ற மு­றையில் தங்­க­ளது நிலைப்­பாட்டை மாற்­று­வ­தற்கு அல்­லது திருத்தம் செய்­வ­தற்கும் அவர்­க­ளுக்கு உரிமை இருக்­கி­றது. ஆனால், எந்­த­வொரு பிரச்­சி­னை­யிலும் தங்­க­ளது புத…

  23. தாய்லாந்து: முடியாட்சிகளின் எதிர்காலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ முடியாட்சிகள் என்றென்றைக்கும் உரியனவல்ல; அவை காலம்கடந்து நிலைப்பதில்லை. அவற்றின் பெறுமதி அப்பதவிகளின் அலங்கார நோக்கத்துக்காகவன்றி அதிகாரத்தின் பாற்பட்டதன்று. காலம் அதன் போக்கில் எழுதிச் செல்லும் கதையில் இறந்த காலத்துக்குரியதாய் முடியாட்சிகளை மெதுமெதுவாய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. உலகின் மிக நீண்டகாலம் ஆட்சி செய்த அரசர் என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபோல் அடுல்யடேஜ் கடந்தவாரம் மரணமடைந்தார். 70 ஆண்டுகளாகத் தாய்லாந்தின் மன்னராக இருந்த இவரின் ஆட்சிக்காலத்தில் அந்நாடு பாரிய மாற்றங்களைக் கண்டது. அம்மாற்றங்களின் விளைவால் தாய்லாந்து மக்களின் …

  24. நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா? மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, ஒன்றரை ஆண்டுகளில் அரசியல்த் தூய்மைக்கும் ஊழலுக்கும் எதிராகத் தமக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டிருந்தார் என்றால் ஒரே ஒரு உரையின் மூலம் அவரே, அந்த பெயரில் 90 சத வீதத்தைக் களங்கப்படுத்திக் கொண்டார் போல்தான் தெரிகிறது. ஊழலை ஒழித்து, ஊழலற்ற ஜனநாயக நாடொன்றை உருவாக்குவதாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பெரும் கோஷத்தை எழுப்பினர்; நல்லாட்சியே அவர்களது பிரதான கோஷமாக இருந்தது. எனவேதான், தற்போதைய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என அழைக்கப்பட்…

  25.  தமிழருக்கு சிவசேனை பெரும் சோதனையா? ப.தெய்வீகன் ஈழத்தமிழர் தாயகத்தில், இந்தியாவின் அதிதீவிர வலதுசாரிக் கட்சியும் மதவாத அமைப்புமான ‘சிவசேனா’ கால் பதித்திருப்பது தொடர்பான அகோரமான எதிர்ப்புக்கள் அனைத்துத் தரப்பிலும் முன்வைக்கப்பட்டாயிற்று. இந்த அமைப்பின் வருகையின் பின்னணி என்ன? அமைப்பை ஆரம்பித்திருப்பவர் யார்? இதனால் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்ன? போன்ற ‘மயிர் பிளக்கும்’ வாதங்கள் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் திட்டமிட்ட காலக்கணிப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை ஈழத்தமிழர்கள் எதிர்க்க வேண்டும்; எதிர்த்துக் களமாட வேண்டும் என்று ஆளுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.