அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
நன்றி தமிழ்நெட்.
-
- 0 replies
- 1.2k views
-
-
தேர்தல் மனோநிலை -க. அகரன் உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இலங்கையும் சிக்கித் தவித்திருந்தாலும், தற்போது தன்னைக் கம்பீரம் மிக்க நாடாகக் காட்டிக்கொள்ள எத்தனிப்பதாகத் தோன்றுகின்றது. அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள் மத்தியில், இலங்கை ஜனநாயகப் போராட்டத்துக்குள் செல்ல முயற்சிக்கின்ற நிலையில், எப்போது தேர்தல் என்ற கேள்வி, பலருக்கும் எழுந்துள்ளது. எனினும், இந்தத் தேர்தலை மக்கள் இயல்பான மனநிலையுடன் எதிர்கொள்வார்களா என்ற சந்தேகம் காணப்பட்டாலும் கூட, சுகாதார அமைச்சினது ஆலோசனையின் பிரகாரம், தேர்தல் ஆணையாளர் மிகவிரைவில் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதாகக் கூறியுள்ளார். இச்சூழலில், வேட்பாளர்களின் செயற்பாடுகளால், வாக்காளர்களின் மனோபா…
-
- 0 replies
- 476 views
-
-
பெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும் என்.கே. அஷோக்பரன் இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல்நிலை, அனைத்து மக்களையும் பதற்றம் அடையச் செய்துள்ளது. இந்தப் பெருந்தொற்றுப் பதற்றத்துக்கு, சமூக ஊடகங்கள் பரப்பும் போலிச் செய்திகள், ‘எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும்’ கைங்கரியத்தைச் செய்கின்றன. இத்தகைய போலிச்செய்திகளின் வலுவைத் தகர்க்கவும் பதற்ற சூழமைவில் இருந்து, மக்களை அமைதிகொள்ளச் செய்யவும், மக்களோடு நேரடியாகவும் வினைதிறனுடனும் அரசாங்கம், தொடர்பாடலை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமானது. இலங்கை அரசாங்கம், ‘இந்திய-இலங்கை’ ஒப்பந்தத்தில், ‘இலங்கையானது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலாயர்கள் உட்பட்டவர்களைக் கொண்ட பல்லின, பல மொழிகளைக் கொண்ட பன்…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 622 views
-
-
- -கே.சஞ்சயன் ஜெனிவாவில் மீண்டும் ஒருமுறை இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்தமுறை 40 நாடுகளின் இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தமுறை 41 நாடுகளின் இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்டது. அதுபோலவே, கடந்தமுறை 24 நாடுகள் ஆதரவு தெரிவித்த தீர்மானத்துக்கு இந்தமுறை 25 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இம்முறை தீர்மானத்துக்கு ஆதரவாக அதிகளவு நாடுகள் வாக்களிக்கும் என்று தகவல்கள் வெளியான போதிலும், கடந்த முறையைவிட ஒரு நாட்டின் வாக்குத் தான் அதிகரித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 25 நாடுகள் மட்டும் ஏற்றுக்கொண்ட இந்தத் தீர்மானத்துக்கு, அதிகளவு நாடுகளின் ஆதரவு கிட…
-
- 0 replies
- 873 views
-
-
மாவீரர் நாளும் பொது நினைவு நாளும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை பொதுவான நாளொன்றின் கீழ் நினைவுகூர வேண்டும் என்கிற கோரிக்கை இன்று எழுந்தது அல்ல. அது, 2000களின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டளவில் எழுப்பப்பட்டது. விவாதிக்கப…
-
- 0 replies
- 487 views
-
-
சிறுபான்மையினரை அடக்கியாளுதல் -என்.கே. அஷோக்பரன் ஆங்கிலத்தில் sadism என்ற சொல்லுண்டு. இந்த வார்த்தை sadisme என்ற பிரென்ஞ் சொல்லில் இருந்து வந்தது. Sadisme என்ற பிரென்ஞ் சொல்லானது, மாக்கி டு சாட் (Marquis de Sade) என்ற பிரென்ஞ் எழுத்தாளரின் பெயரிலிருந்து வந்தது. மாக்கி டு சாட்டின் சிற்றின்பக் கதைகள், வன்முறைக்கு பெயர்போனவை. மற்றவர்களைத் துன்புறுத்துவதன் ஊடாக, இன்பமடையும் தன்மைகள் அவற்றில் விஞ்சி நிற்கும். இதனால், பாலுறவில் மற்றவரைத் துன்பப்படுத்துவதன் ஊடாக, இன்பமடைவதற்கு sadism (சேடிஸம்) என்ற சொல் வழங்கலாயிற்று. காலப்போக்கில் இந்தச் சொல், பாலுறவு என்பதைக் கடந்து, மற்றவர்களைத் துன்பப்படுத்தி …
-
- 0 replies
- 415 views
-
-
நெருப்புடன் விளையாடுதல் பட மூலம், LAKRUWAN WANNIARACHCHI, AFP அவரது மகனின் உடலம் தகன அறையில் இடப்படுவதை பார்த்துக் கொண்டே, மொஹமட் பாஹிம் மயானத்திற்கு வெளியே நின்று, அழுது கொண்டிருந்தார். இறப்பின் பின்னர் ஜனாஸா எரிக்கப்படுதல் மற்றும் எந்தவித சிதைத்தல்களைத் தடைசெய்யும் நம்பிக்கை கொண்ட அந்த முஸ்லிம் மனிதர், “எனது குழந்தை தகனம் செய்யப்படுவதை எவ்வாறு நான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்” என வினவினார். பிறந்து சில நாட்களேயான அவர்களது மகன் மொஹமட் ஷயாக் லேடி றிஜ்வே வைத்தியசாலையில் அனுமதித்த பொழுது நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட பின் அவர்களது குடும்பம் அடி மேல் அடியைச் சந்தித்தது. பிறந்து 20 நாட்களேயான அப்பச்சிளம் சிசுவில் நடத்தப்பட்ட அன்டிஜென…
-
- 0 replies
- 663 views
-
-
எப்போதோ கிடைக்க வேண்டிய ஆறுதல் -மொஹமட் பாதுஷா கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நிலத்தில் அடக்கம் செய்யும் விடயத்தில், சுமூகமானதொரு தீர்வு எட்டப்பட்டுள்ளது. 11 மாதங்களாக இழுபறியாக இருந்த இவ்விவகாரத்தை, முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் தடங்கல் ஏற்பட்டாலும் கூட, பின்னர் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை, பெரும் ஆறுதலான விடயமாகவுள்ளது. கொவிட்-19 நோய் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்படுகின்ற உடல்களை, அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு, முஸ்லிம் சமூகம் கோரி வந்தது. உடல்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான, தமது மத நம்பிக்கைக்கு மதி…
-
- 0 replies
- 657 views
-
-
இந்தியா கையை விரித்தது ஏன்? இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்துடன் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமொன்றை, இந்தியா கடந்த வாரம் பகிரங்கமாகக் கைவிட்டது; அல்லது முன்னரே கைவிட்டுவிட்டு, கடந்த வாரம் முதன் முறையாக பகிரங்கமாக அதனை ஊரறியச் செய்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான விடயத்தையே இந்தியா கடந்த வாரம் அவ்வாறு பகிரங்கமாக கைகழுவி விட்டது. கடந்த 18 ஆம் திகதி மூன்று ந…
-
- 0 replies
- 557 views
-
-
மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது? நிலாந்தன்! April 17, 2021 மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான் பெறலாம் என்ற கணிப்பு பரவலாக உண்டு. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். தவிர பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும் வாக்குகளைப் பிரிப்பார்கள். இவ்வாறாக தமிழ்வாக்குகள் அங்கே ஆறுக்கும் மேற்பட்ட தரப்ப்புக்களால் பிரிக்கப்படும் ஆபத்து உண்டு. இது ஒரு பலமான பெரும்பான்மையை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தும். இதனால் முஸ்லிம்களோடு இணைந்துதான் ஆட்சியை நடத்த வேண்டி இருக்கும் என்ற கணிப்பு பலமாக உண்டு. தமிழ்த்தரப்போடு ஒப்ப…
-
- 0 replies
- 585 views
-
-
‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில் நடைபெற்றது. சுமார் எட்டு மணித்தியாலங்கள் நீண்ட இச்சந்திப்பின் இறுதியில் பொறுப்புக்கூறல், பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கைக்கு இன்னும் இரண்டு வருட ‘கால அவகாசம்’ வழங்குவது தொடர்பில் ஒரு வகையிலான இணக்கம் காணப்பட்டுள்ளது. ‘காலஅவகாசம்’ வழங்குவது தொடர்பிலான உரையாடல்களில் ஆரம்பம் முதலே ஈ.பி.ஆர்.எல்.எப் தன்னை இணைத்துக் கொண்டிருக்கவில்லை. வவுனியாச் சந்திப்பிலும் அந்தக் கட்ச…
-
- 0 replies
- 416 views
-
-
கொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள் -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தொற்றால் முழு உலகமும் ஓர் அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கொரோனா வைரஸ் தொற்றின் ‘மூன்றாவது அலை’ பரவல் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஒவ்வொரு கட்டமும் ஏற்கெனவே ஏற்படுத்திய பாதிப்புகளைவிட, இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் என்ற கிருமியால் உருவாக்கப்படும் ‘கொவிட்-19’ என்ற பெருந்தொற்றுநோய், ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுக்கின்றது; திரிபடைந்த வீரியமான கொரோனா வைரஸ்களாக மக்களுடன் கலக்கின்றது. இந்த அச்சுறுத்தல் கட்டத்தை எதிர்கொள்வதில், இலங்கை அரசாங்கம் பாரிய த…
-
- 0 replies
- 444 views
-
-
அதிகரிக்கும் நம்பிக்கையீனம் இலங்கை அரசின் மீது வாள்போல தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கி 2017 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட காலம் என்பது, அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் என்று குறிப்பிடுவது சரியான சொற்பிரயோகமல்ல என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாதமாகும். இலங்கைக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மனித உரிமைப் பேரவையின் …
-
- 0 replies
- 337 views
-
-
அரசியலில் பெண்கள்: நாம் எப்போது கரையேறுவோம்? சிறு வயதில், பொது அறிவு வினாக் கொத்துகளில், “உலகின் முதலாவது பெண் பிரதமர் யார்?” என்ற கேள்வி, அநேகமாக இடம்பெற்றிருக்கும். நாமும் பெருமையுடன், “இலங்கையின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க” என்று எழுதிவிட்டு, முழுமையான புள்ளிகளைப் பெறுவோம். அதேபோல், ஆசியாவிலேயே, பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கிய முதல் சில நாடுகளில், இலங்கையும் ஒன்று. அவ்வாறான முக்கியமான பெருமையைக் கொண்ட இலங்கையில், அதற்குப் பின்னர் போதியளவிலான முன்னேற்றங்கள், அரசியலில் பெண்கள் என்ற விடயத்தில் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஏனைய நாடுகள், சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. பாரதிராஜாவின் இயக்கத்தில் சத…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்களவர்களும் எற்றுக்கொள்ளாத தலைமை | ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பில் இராகுல தேரர் | Akalankam | IBC நன்றி - யூரூப்
-
- 0 replies
- 280 views
-
-
-
- 0 replies
- 493 views
-
-
ஓர் எறியில் இரு கனிகள்: தமிழ் பேசும் மக்களின் அரசியலில் சாத்தியமா? அரசமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிக்கின்றன. இது எதிர்பார்க்கப்பட்டதுதான். பொதுவாகவே, அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக, எப்போதும் இவ்வாறான விவாதங்களும் விமர்சனங்களும் உருவாகுவதுண்டு. அதிலும், இனமுரண்களும் இனப்பகையும் ஜனநாயகப் பற்றாக்குறையும் அதிகாரக் குவிப்பும் பாரபட்சங்களும் மலிந்திருக்கும் நாட்டின் அரசமைப்புத் திருத்தத்தில் விவாதங்கள் நடக்காமலிருக்க முடியுமா? ஆகவேதான், இந்த விவாதங்களும் விமர்சனங்களும் நடக்கின்றன. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கை முழுமையான…
-
- 0 replies
- 509 views
-
-
என்ன நடக்கப் போகின்றது ஜெனிவாவில்? முத்துக்குமார் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கிறார். அவர் கொழும்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துவிட்டே யாழ்ப்பாணம் வந்திருக்கிறார். அங்கு அவர் முக்கியமாக யாழ் ஆயர் இல்லம், உதயன் பத்திரிகை அலுவலகம் என்பவற்றிற்கு சென்றதுடன் தனியார் விடுதி ஒன்றில் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி எழிலனையும் சந்தித்திருக்கின்றார். சந்தித்தவர்கள் எல்லோரும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரனை வேண்டும் என்பதையே வலியுறுத்தியிருந்தனர். நிசா தேசாய் பிஸ்வாலின் நடவடிக்கைகளையும்…
-
- 0 replies
- 581 views
-
-
பதவிவிலகுகிறார் கோட்டா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய, எதிர்வரும் 13ம் திகதி, புதன் கிழமை, எசல பௌர்ணமி தினத்தன்று, விலகுவதாக சபாநாயகருக்கு தெரிவித்திருப்பதாக செய்தியறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2022 ஜூலை 9ம் திகதி நடந்த பெரும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஆகியவற்றினுள் நுழைந்து அவற்றைக் கைப்பற்றிய நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீவைத்து எரித்தழித்த பின்புலத்தில், இந்த அறிவிப்புச் செய்தி வந்திருக்கிறது. இப்படி ஒரு செய்தி வந்துவிட்ட பின்னர் “பதவிவிலகுறார் கோட்டா” என்பதற்கு பிறகு கேள்விக்குறிக்கான தேவை என்ன என்று கே…
-
- 0 replies
- 376 views
-
-
‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம் என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது. இந்தக் ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சிக்கு, ஆரம்பத்தில் இலங்கை எங்கும் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களே ஆரம்பப்புள்ளி. இவை கட்சி சார்ந்த அல்லது இடதுசாரி அமைப்புகள் சார்ந்த ஆர்ப்பாட்டங்கள் அல்ல! பொதுமக்கள், தாமாக வீதிக்கு இறங்கி, அமைதி வழியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள். இப்படி, பொதுமக்கள் கொழும்பில் ஒன்று திரண்ட இடங்களில், ஆர்ப்பாட்டங்களுக்கு எ…
-
- 0 replies
- 449 views
-
-
13ஆவது திருத்தத்தின் கடந்த காலமும் எதிர்காலமும் Veeragathy Thanabalasingham on October 25, 2022 Photo, AP Photo, Eranga Jayawardena திருத்தத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி புதிய உடன்படிக்கையொன்றை செய்யவேண்டும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்தவாரம் தெரிவித்த கருத்து குறித்து ஒரு பார்வை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட புதுடில்லியில் பதவியேற்பதற்கு கடந்த வருட பிற்பகுதியில் செல்வதற்கு சில மாதங்கள் முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதற்கான ஒரு ‘செயற்திட்ட நகர்வு வரைவு’ ஒன்றை அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளித்தார். இரு தரப்பு உறவுகளை ‘பர…
-
- 0 replies
- 326 views
-
-
கடந்த சில வருடங்களில், தமிழ் தேசிய உணர்வும், தமிழ் இன விடுதலைத் தாகமும் எவ்வளவு து}ரம் தமிழர்களிடம் வளர்ந்துள்ளதோ அதே அளவு வேகத்தில், அல்லது அதைவிட அதிகமாகவே, சிங்கள தேசிய உணர்வும் சிங்கள இனத்துவேச உணர்வும் சிங்கள மக்களிடையே பலமடங்கு வளர்ந்துள்ளது. இதை தமிழ் மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவதானிக்க மறந்து விடக்கூடாது. கடந்த சில ஆண்டுகளில் சிங்கள இனம், சிங்கள நாடு, சிங்கள மொழி, சிங்கள அதாவது பௌத்த மதம் போன்றவற்றிற்கு பேராபத்து வந்துள்ளதாக தொடர்ச்சியாக சிங்கள இனவாதிகள் எழுதியும் பேசியும் காட்டியும் திணித்தும் அழுத்தியும் வந்ததனால் மட்டுமல்ல, தமிழினத்தில் தானாக வளர்ந்து வந்துள்ள தமிழின விடுதலை வேகமும் அவர்களை எதிர்த்திசையில் செல்வதற்கும் சிந்திப்பதற்கும் வழியமைத்துக் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 699 views
-
-
வை எல் எஸ் ஹமீட் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அரசியலமைப்புச் சட்டப்படியே நியமிக்கப்படுகின்றார்கள். இங்கு இராஜாங்க அமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் ஒரு பிரதான வேறுபாடு இருக்கின்றது. அதாவது இராஜங்க அமைச்சருக்கு ஐனாதிபதி ஏதாவது விடயதானங்களை நேரடியாக வழங்கலாம். ஆனால் பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்கமுடியாது. இருவகை அமைச்சர்களுக்கும் கபினட் அமைச்சர் பொறுப்புக்களை வர்த்தமானி மூலம் வழங்கலாம…
-
- 0 replies
- 526 views
-