Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பொதுத்தேர்தலும் இனப்பிரச்சினையும் படம் | IBTIMES எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தல் இலங்கையில் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இடம்பெறுகின்ற இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கும் உருப்படியாக எந்தவொரு செயன்முறையையும் முன்னெடுக்காத தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இப்போது அந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசத் தலைப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜூலை 28ஆம் திகதி வெளியிட்ட அதன் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்புக்க…

  2. மென்வலு யுத்தம்! - பி.மாணிக்கவாசகம் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்து பத்து வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால் உண்­மையில் யுத்தம் முடி­வுக்கு வர­வில்லை. அது மறு­வ­டி­வத்தில் சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ்மக்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­டு­வ­தையே உணர முடி­கின்­றது. ஆனால், இது ஆயு­த­மேந்­திய யுத்­த­மல்ல. பதி­லாக மென்­வலு சார்ந்த யுத்தம். ரத்தம் சிந்­தா­தது. எனினும் மோச­மா­னது. இன அழிப்பை அப்­பட்­ட­மான நோக்­க­மாகக் கொண்­டது. அந்த வகையில் பௌத்த மதத்தைத் திணிக்­கவும், தமிழ்மக்­களின் தாயக மண்ணைக் கப­ளீ­கரம் செய்­வ­தற்­கா­கவும் இந்த மென்­வலு யுத்தம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. …

  3. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமும் ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகளும் - யதீந்திரா அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தை கோரியிருக்கின்றார். இது தொடர்பில் தமிழரசு கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளுபவருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உறுதியான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்னும் நம்பிக்கை கூட்டமைப்பின் தலைவர்களால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நம்பிக்கையூட்டப்பட்ட அளவிற்கு விடயங்கள் எதுவ…

  4. மட்டக்களப்பின் தேர்தல் முடிவுகளில் கற்றுக் கொண்ட பாடம் என்ன? November 20, 2024 — கலாநிதி சு.சிவரெத்தினம் — நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் என்பார்கள், பொருளாதார நெருக்கடியும், வரிசைக்(queue) காலமும் இடம்பெற்றதும் நன்மையாகத்தான் முடிந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பாரம்பரியமாக ஆட்சி செய்து வந்த உயர்வர்க்க ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்பட்டு சாதாரண உழைக்கும் வர்க்கத்திலிருந்து பல கஸ்ரங்களை அனுபவித்த ஒருவர் ஜனாதிபதியானதும். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுநிதியையும் அதிகாரத்தையும் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்கள் என்பதை புதிய ஜனாதிபதியும் அவருடைய அரசும் வெளிக்காட்டியதும் மக்களை முன்னைய ஆட்சியாளர்கள் மீது…

  5. ஜனாதிபதித் தேர்தல்; முத‌ற் கோணல் -இலட்சுமணன் நம்மவர்களின் புதிய புதிய நம்பிக்கைகள்தான், வரலாற்று முரண்நகைகளை உருவாக்கிவிடுகின்றன என்பது, காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. சிறுவன் சுர்ஜித், நம்போன்ற பெற்றோர்களின் கவனக்குறைவால் பலியாகி விட்டான். கவனக்குறைவுக்குப் பின்னரான செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளால், அவன் பலியானதாகப் பலர் குறைப்படுகிறார்கள். அதுவும் தவறுதான். இவ்வாறுதான், நம்மிடமே முதற் பிழையை, பிழைகளை வைத்துக் கொண்டு, அதை ஏற்றுக் கொள்ளாமலேயே நாம் எவ்வளவு தூரம்தான் பயணித்துவிட முடியும்; எதைத்தான் சாதித்துவிடமுடியும்; எதிர்த்தரப்பிடமிருந்து எவற்றை எதிர்பார்க்க முடியும்? இந்த வகையில், பெறுமதியான மிகப்பெரிய பிரச்…

  6. தமிழ்த் தலைவர்கள் சிந்திப்பார்களா? -இலட்சுமணன் கிழக்கின் அரசியல் நிலைவரங்களைப் புரிந்து கொண்டும் கிழக்குத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற கோஷங்களை முன்வைத்துக் கொண்டும், தமிழ் அரசியல் கட்சிகளும் மாற்றுக் கட்சிகளும், ஒன்றுபடாமல், பிரிந்து நின்று பல்வேறு பிரயத்தனங்களையும் தகிடுதத்தங்களையும் நீயா, நானா எனக் கங்கணம் கட்டிக் கொண்டு ஆடுகின்றன. தமிழர் அரசியல் வரலாற்றில், தேர்தல் காலங்களில் உரிமை, சலுகை பற்றி பேசிக் காலத்தைக் கடத்தியவர்கள் இன்று, அபிவிருத்தி பற்றியும் பேரம் பேசல்கள் பற்றியும் பிரதிநித்துவத்தைக் காப்பாற்றுவது பற்றியும் கருத்துகளை முன் வைக்கின்றார்கள். இருந்தபோதும், இங்கு எல்லோருமே, தமிழரின் ஒற்றுமை விடயத்தில், கீரியும் பாம்பும் போலவே உள்ளனர். …

  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? வாழ்வா …. சாவா…. “அரசாங்கத்துக்கு பல பிரச்சினைகள் உண்டு. தனியே தமிழ் மக்களின் பிரச்சினையை மட்டும் அது பார்க்கவில்லை. நாடு முழுவதிலுள்ள பல பிரச்சினைகளுக்கு அது முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆகவே அதற்குக் கால அவகாசம் கொடுக்க வேணும். நாங்கள் அதை அவசரப்படுத்த முடியாது. அவர்கள் நிச்சயமாக இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது. உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமையும் என நம்புகிறேன் “நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம்” என்றெல்லாம் அரசாங்கத்தின் மீதான தன்னுடைய அபரிதமான நம்பிக்கையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்…

  8. இலங்கை நடாளுமற்றத் தேர்தல் 2020 – தமிழர் எடுக்க வேண்டிய நிலை. Posted on August 3, 2020 by சகானா 18 0 காப்புச் விளங்கிய தமிழரது ஆயுதபலம் மௌனிக்கப்பட்டநிலையில் இன்று மிஞ்சியிருப்பதென்னவோ வாக்குச் சக்தி மட்டுமே. அப்படியென்றால் 30ஆண்டுகால ஆயுதப்போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் வாக்குச் சக்தியைப் பயன்படுத்தவில்லையா(?) என்ற வினா எழுவது தவிர்க்கமுடியாதது. அது யதார்த்தபூர்மானதும் கூட. வாக்குச் சக்தியூடாக தமிழர்தரப்பாக யார் நாடாளுமன்றம் சென்றாலும் தமிழர்கள் தொடர்பான செயல்நிலைக் கையாளுகைத் தரப்பாகவும், சிறீலங்கா அரசுக்கும் அனைத்துலக தரப்புக்கும் ஆணித்தரமாகத் தமிழர் நிலைப்பாட்டை உரைக்கும் தரப்பாகவும், 2009 முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிவரை தமிழீழ விட…

    • 0 replies
    • 657 views
  9. உண்மையின் தரிசனமாக இருக்கத்தக்க.. கருத்துக்களைச் சொல்லும் காணொளிகளை இங்கு இணைப்போம். அந்த வகையில்.. ஈழத்தமிழர்களை பலிகொடுத்த இந்தியா.. நாளை தமிழகத் தமிழர்களையும் பலிகொடுக்கும்..

  10. சிறிலங்கா பெளத்த பேரினவாதிகளின் தற்போதைய இலக்கு முஸ்லீம்கள் - பிறிதொரு இனப்போர் தோற்றம் பெறுமா? [ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 08:46 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்காளர்களால் பல்வேறு வடிவங்களில் எதிர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது தற்போது அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் கொழும்பிற்கு அருகில் உள்ள Fashion Bug மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை உள்ளுர் தொலைக்காட்சி நிலையம் ஒன்று ஒளிப்பதிவாக்கியுள்ளது. இதனை ஒளிப்பதிவாக்கிக் கொண்டிருந்த ஒளிப்படவியலாளர் மீது காடையர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். சிறிலங்கா வாழ் முஸ்லீம் மக்களுக்கு எதிராக பௌத்த தேசியவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட…

  11. பேசப்படும் எல்லாவித சமாதானங்களும் உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளாய் அல்லாமல் ஒடுக்குமுறைகளை நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளாய் உள்ளன. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச அரசியல் சக்கரத்தில் சூழலும் அலகுகளாகவே உள்ளன. இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கானது “நல்லிணக்கம்” என்ற ஓர் அழகிய, கவர்ச்சிகரமான, இனிமையான வார்த்தைக்கு ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கண்டத்திற்குக் கண்டம், பிராந்தியத்திற்குப் பிராந்தியம் சூழல் சார்ந்த நுணுக்கமான வேறுபாடான வார்த்தைகளால் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் மேற்படி “நல்லிணக்கம்” என்ற பொதுப் பொருளே அதிலுண்டு. இத்தகைய சர்வதேச அரசியல் கோட்பாட்டை அதற்குரிய பரிமாணத்தில் புரிந்து கொள்ளாமல் எந்தொரு நாடும் உள்நாட்டு ரீதியாகவோ அன்றி வெளிநாட்டு …

  12. “ஜெய்சங்கர் விஜயமும் இலங்கை - இந்திய நலன்களும்” - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை - இந்திய உறவின் பிரதான காலப் பகுதியாக 2021 அமையப் போகின்றது என்பதை கட்டியம் கூறுவதாக இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளது. கடந்த இரு நாட்களிலும் (06.07.2021) இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்புகளும் அது வெளிப்படுத்தியுள்ள செய்திகளையும் முதன்மைப்படுத்தி இக் கட்டுரை இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் முக்கியத்துவத்தைத் தேடுவதாக அமைய உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிற்பாடு Saga Doctrine என்றழைக்கப்படும் (Security and growthfor all in the region) பிரகடனத்தை பிராந்திய மட்டத்தில் முதன்மைப்படத்தி வருகின்றது. அ…

  13. புலம்பெயர் புதியதலைமுறையின் கவனத்திற்கு/For younger generation of Tamil Diaspora/Geneva/ICC/UNHRC

    • 0 replies
    • 720 views
  14. சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில் விடுதலைக்காகத் திரள்தல் -புருஜோத்தமன் தங்கமயில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முதல் ஒன்றிரண்டு சுதந்திர தினங்களுக்குப் பின்னரான அனைத்துச் சுதந்திர தினங்களும், அதுசார் நிகழ்ச்சிகளும் ‘ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசியம்’ என்கிற பௌத்த சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் போக்கிலேயே, முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. நாட்டிலுள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட இன, மத சிறுபான்மை சமூகங்கள், இலங்கையின் சுதந்திர தினங்களோடு தங்களைப் பொருத்திப் பார்ப்பதற்கான கட்டங்கள், நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. சுதந்திரம் என்கிற சொல்லின் அர்த்தமும் அதுசார் ஆ…

    • 0 replies
    • 681 views
  15. தாயகத்தில் டயஸ்பொறா முதலீடு: எந்த நோக்கு நிலையிலிருந்து? கடந்த மாதம் நடுப்பகுதியளவில் கொழும்பில் ஒரு சந்திப்பு நடந்தது. வறுமை ஆய்வுக்கான நிலையம் Centre for Poverty analysis (CEPA) என்ற ஒரு சிந்தனைக்குழாத்தினால்; இச்சந்திப்பு ஒழுங்குசெய்யப்பட்டது.நோர்வீஜிய அரசாங்கம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு என்பவற்றின் அனுசரணையுடனான இச்சந்திப்பில் டயஸ்பொறா தமிழர்கள் மத்தியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றியிருக்கிறார்கள். இவர்களுள் 2009 மே மாதத்திற்கு முன்பு தீவிரமாக அரசியலில் ஈடுபட்டவர்களும் உண்டு, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டிராத இரண்டாம் தலைமுறையினருமுண்டு. இவர்களுக்கான பயணச் செலவுகளை மேற்படி நிறுவனமே பொறுப்பேற்றது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் டயஸ்பொற…

    • 0 replies
    • 482 views
  16. அனர்த்த மீட்பு உதவியா? உபத்திரவமா? நவீன உலகின் பாது­காப்புத் திட்­டங் ­களில், அனர்த்த மீட்பும் ஒன்­றாக மாறி­யி­ருக்­கி­றது. 20ஆம் நூற்­றாண்டின் இறுதி வரையில் காணப்­பட்ட பாது­காப்பு ஒழுங்கு முறைகள் நேர­டி­யான போர்­க­ளையும் அதற்­கான பாது­காப்புத் திட்­டங்­க­ளையும் கொண்­டி­ருந்­தன. ஆனால் 21ஆம் நூற்­றாண்டின் பாது­காப்பு ஒழுங்­கு­முறை வேறு­பட்­டது. நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போர்­களும், உல­க­ளா­விய போர்­களும் மாத்­தி­ர­மன்றி உள்­நாட்டுப் போர்­களும் கூட இப்­போது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டன. குறிப்­பிட்ட சில நாடு­க­ளுக்­கி­டையில் ஆயுதப் போட்­டிகள் இருந்­தாலும், போர்­களை மையப்­ப­டுத்­திய பயிற்­சி­களும் ஒத்­தி­கை­களும் குறைந்­தி­ருக்­கி…

  17. இன்றைய நெருக்கடிகளுக்கு அரசாங்கம்தான் காரணமா? -லக்ஸ்மன் நாட்டில், ‘இன்று போல் நாளையில்லை’ என்பதால், நள்ளிரவில் எந்தப்பொருளுக்கு விலையேறும் என்று தெரிந்து கொள்வதிலேலேயே மக்கள் அக்கறை கொள்ளவேண்டிய நிலைமை உருவாகிவிட்டது. தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டால் எதற்கும் விலையை ஏற்றிவிடலாம் என்ற நிலை, கடந்த சில மாதங்கள் நிலவிய பால்மா தட்டுப்பாட்டினால் உருவானது. இது ஏனைய பொருள்களுக்கும் தொடர்கிறது. கறுப்புச் சந்தை நிலைமையிலேயே பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கேட்கின்ற பொருளுக்கு வியாபாரி தீர்மானிப்பதே விலையாக இருக்கிறது. அந்தவிலைக்குப் பொருளைப் பெற நாம் தயாரில்லையென்றால், பொருளில்லை. தட்டுப்பாடும் விலை அதிகரிப்புமே வாழ்வாதாரத்தின் நிரந்தரமாகிவிட்டன. அரசாங்கம்,…

  18. வட மாகாண சபை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டதா? வட மாகாண சபையின் ஆளும் கட்சியின், உட்கட்சிப் பூசல் ஓய்ந்தபாடில்லை. நீண்ட காலப் போரினால் அழிந்த வட பகுதியில், தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவற்றைத் தீர்க்கத் தமது போட்டியாளர்கள் எதையும் செய்யவில்லை என்றும் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் மாகாணத் தலைவர்களும் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இவ்வாறு நடந்து கொள்வது, அவர்களது நேர்மையைப் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கும் என்று அவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சண்டைத் தொடரின் புதிய கட்டமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சபை…

  19. ‘மாநில சுயாட்சி’ கொள்கையை நினைவுபடுத்திய ‘நீட்’ தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டமை, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள ப்ளஸ் டூ பரீட்சையில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்களைப் பெற்ற, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா, மத்திய அரசாங்கம் கொண்டு வந்த ‘நீட் பரீட்சையில்’ சித்தி பெற முடியவில்லை. குக்கிராமத்தில் பிறந்த அந்த மாணவிக்கு, அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் மருத்துவக் கனவு கலைந்த நிலையில், அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதன் விளைவாக இன்று ‘நீட்’ பரீட்சைக்கு எதிராக, தமிழகத்திலுள்ள மாணவர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

  20. பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும் – பி.மாணிக்கவாசகம் அனைத்துலக பெண்கள் தினம் இம்முறை இலங்கையில் முக்கியத்துவம் மிக்க ஒரு தினமாகக் கருதப்படுகின்றது. பெண்களுக்கு உள்ளுராட்சி அரசியலில் 25 வீத இட ஒதுக்கீடு வழங்கி அதன் அடிப்படையில் தேர்தலும் நடந்து முடிந்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. பொதுவாகவே பெண்கள் இரண்டாம் தரத்திலேயே வைத்து கணிக்கப்படுவதாகவும், பல்வேறு விடயங்களிலும் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், திறமைகளும், உரிமைகளும் உள்ள போதிலும், தொழில் தளங்களிலும், சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படுவதில்லை என்றும் பெண்ணிலைவாதிகள் கூறுகின்றார்கள். …

  21. முன்மொழியப்பட்டுள்ள ‘புனர்வாழ்வுப் பணிமனை’ சட்டமூலத்தின் ஆபத்து Ambika Satkunanathan on October 12, 2022 Photo, Selvaraja Rajasegar நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியினால் அவதியுறும் நிலையைக் கூட பொருட்படுத்தாமல் ஒடுக்கும் வகையில் அமைந்த மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் சட்டங்களை இயற்றும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது, புனர்வாழ்வுப் பணிமனைச் சட்டமூலம் இதற்கான மிகவும் அண்மைய உதாரமாக அமைகின்றது. சட்ட வரைவிலக்கணங்கள் அற்ற நிலை முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் பிரயோகம் மிக்க நபர்களில் முன்னாள் போராளிகள், அழிவை ஏற்படுத்தும் தீவிரமான நாச வேலைகளில் ஈடுபடும் …

  22. அரசியலில் சூழ்ச்சி? - யதீந்திரா ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக தமிழர்களை ஏமாற்றப் போகின்றார். ஜெனிவாவை கையாளும் ஒரு உக்தியாகவே ரணில் ஒரு புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். விடயம் தெரியாமல் தமிழ் தலைமைகள் கொழும்பின் பொறிக்குள் சிக்கப்போகின்றன. இதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் பலவீனமடையப் போகின்றது. இவ்வாறான கருத்துக்களை சிலர் முன்வைப்பதை காணமுடிகின்றது. அரசாங்கத்துடன் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்பங்களிலும் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவது சாதாரணமானது. ஒரு நம்பிக்கையற்ற சூழலில் இடம்பெறும் அனைத்துமே அவநம்பிக்கையினூடாகத்தான் நோக்கப்படும். அவ்வாறாயின் ரணில் சூழ்ச்சி செய்யமாட்டாரா? இப்படி எவரேனும் கேட்டால் – பதில் சுலபமானது. அவர…

  23. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்த்துவது என்ன? நான்­கா­வது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் உணர்வுபூர்­வ­மாக ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்றுகூடி அனுஷ்­டி­க்­கப்­பட்­டது. தமி­ழின வர­லாற்றில் ஒரு சோக கலிங்­கப்போர் நிகழ்­வாக எழு­தப்­பட்­டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நேற்­றைய தினம் வடகிழக்­கி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உற­வுகள் ஒன்றுகூடி நினைவு கூர்ந்­தார்கள். இந்த நிகழ்வில் இறு­தி­யுத்­தத்தில் மர­ணித்­த­வர்­களின் ஆயி­ரக்­க­ணக்­கான இரத்த உற­வுகள், அயல் உற­வுகள், அர­சியல்வாதிகள், பொதுஅமைப்­புக்கள் ,மாண­வர்கள், மதத்­த­லை­வர்கள் என ஏகப்­பட்­ட­வர்கள் மதம், இனம், பிர­தேசம் பாராது கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள். ஆயி­ரக்­க­ணக்­கா…

  24. தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா? JUL 10, 2018by புதினப்பணிமனைin கட்டுரைகள் அண்மைய காலங்களில் சர்வதேச அளவில் சனநாயகம் வீழ்ச்சி கண்டு வருவது குறித்து தாராள சனநாயக சித்தாந்த ஆதரவாளர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். அரசியல் சுதந்திரம், சனநாயகம், திறந்த சந்தை, திறந்த சமூக அமைப்பு என கவலையற்ற நிலையில் இனிமேல் மேலைத்தேய தாராள சனநாயகம் வாழ்ந்திருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. இந்த அம்மணமான உண்மையை மறுக்க முடியாதுள்ளது என்ற சர்வதேச சனநாயக நெறிமுறைகள் குறித்த கவலையை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த ஜூன் 22ஆம் திகதி டென்மார்க் தலைநகரான கொப்பனேகனிலே ஒரு ஆய்வு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு முன்னைய நா…

  25. விஜயகலாவின் கூற்றுக்கான -காரணத்தை அரசு -இனியாவது கண்டறியுமா? கடந்த காலங்­க­ளி­லும் விடு­த­லைப் புலி­களை மீண்­டும் கொண்டு வரு­வ­தற்­குப் பல அர­சி­யல்­வா­தி­கள் முயற்­சித்­த­னர். அவர்­கள் அனை­வ­ரும் தற்­போது ஆறு­அடி நிலத்­திற்­குள் முடங்­கிக் கிடக்­கின்­ற­னர். இதுவே விஜ­க­லா­வுக்­கும் நடக்­கு­மென முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும், தற்­போது அமைச்­சர் பொறுப்­பில் உள்­ள­வ­ரு­மான சரத் பொன்­சேகா கூறி­யுள்­ளதை சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது. இறு­திப்­போர் இடம்­பெற்­ற­போது இரா­ணு­வத் தள­ப­தி­யாக இருந்­த­வர் சரத்­பொன்­சேகா. அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.