Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எப்படி மாறியிருந்ததோ, இப்போதும் அதுபோன்றதொரு நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது. இப்போதைய அரசாங்கத்தை ஆட்டம் காண வைப்பதற்கான ஒரு கருவியாக ஹம்பாந்தோட்டையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது கூட்டு எதிரணி. ஹம்பாந்தோட்டை விவகாரம்தான் எதிர்கால அரசியலில் கொதிக்கும் விவகாரமாக மாற்றப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. தமது பூர்வீக இடமான ஹம்பாந்தோட்டையைப் பொருளாதார, அரசியல் கேந்திரம்மிக்க இடமாக மாற்றியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். ஏற்கெனவே, ஜனாதிப…

  2. சிதறடிக்கப்படும் தமிழ் கவனக் குவிப்பு – நிலாந்தன். August 20, 2023 குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, பறளாய் முருகன் கோயில், தையிட்டி, திருகோணமலை, பெரியகுளம் உச்சிப்பிள்ளையார் மலை மாதவனை மயிலைத்த மடு மேய்ச்சல் தரை ராவணன் தமிழனா இல்லையா? மேர்வின் டி சில்வா தமிழர்களின் தலைகளைக் கொய்வாரா. என்றிவ்வாறாக அண்மை காலங்களில் தமிழ்க்கட்சிகள் செயற்பாட்டாளர்கள் ஊடகங்களின் கவனம் வெவ்வேறு திசைகளில் ஈர்க்கப்படுகின்றது .கிழமைக்கு ஒன்று அல்லது நாளுக்கு ஒன்று என்று ஏதோ ஒரு விவகாரம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. எங்காவது ஒரு புதிய விகாரை கட்டப்படுகிறது, அல்லது எங்காவது ஒரு தொல்லியல் சின்னம் அபகரிக்கப்படுகிறது, எங்காவது ஒரு நிலத்துண்டு அளவீடு செய்யப்படுகிறது அல்லது அல்ல…

  3. அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது By DIGITAL DESK 5 27 SEP, 2022 | 11:20 AM கலாநிதி ஜெகான் பெரேரா உயர்ந்த விலைகளில் பொருட்களை வாங்கக்கூடியவர்கள் பெருமளவுக்கு அவதானிக்காவிட்டாலும், இலங்கையின் பொருளாதார நிலைவரம் பல முனைகளிலும் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களாக பெற்றோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் நிலையாக இடம்பெற்றுவருகிறது.நீண்ட வரிசைகளை இப்போது காணவில்லை.ஆட்டோ டீசலுக்கான பங்கீட்டு முறை அதற்கான கிராக்கியை பயனுடைய விதத்தில் கட்டுப்படுத்தி டொலர்களை சேமிக்க உதவுகிறது.சமையல் எரிவாயு தாராளமாக கிடைக்கிறது.இந்த அத்தியாவசிய பொருட்…

    • 0 replies
    • 237 views
  4. அரசியல் கட்சிகளின் புதிய இலக்கணம் சல்லிக்கட்டுக்காக நடைபெற்ற ‘மெரினா’ போராட்டத்துக்குப் பிறகு, தமிழ்நாடு அரசியல் களம், போராட்டக் களமாக மாறிக் கொண்டிருக்கிறது. மாணவர்களும் மக்களும், தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் ‘சல்லிக்கட்டு’ என்றால், அதன் பிறகு, மக்களும் அரசியல் கட்சிகளுமாக நடத்தும் போராட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றன. அந்த வரிசையில், முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில், எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் பணியை எதிர்த்து, அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட விவசாயிகளும் போராடி வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவட்ட ரீதியிலான போராட்டங்கள் என்றால், பாட்டாளி…

  5. தேர்தலில் தாக்கத்தை செலுத்துமா முதலமைச்சரின் லண்டன் உரை? நிர்மானுசன் பாலசுந்தரம் படம் | TAMIL DIPLOMAT திம்புக் கோட்பாடு வெளிவந்து கடந்த ஜூலை 13ஆம் திகதியோடு முப்பது வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி, தமிழின அழிப்பின் ஒரு முக்கிய அங்கமான கறுப்பு யூலையின் முப்பத்தியிரண்டாவது ஆண்டு நினைவு. ஜூலை 29ஆம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருபத்தெட்டு வருடங்கள் நிறைவடைகிறது. இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் தமிழர் தேசத்துக்கும் தென்னிலங்கைக்கும் முக்கியமான ஒரு தேர்தலாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரியணையேறுவாரா? இலங்கை சுதந்திரக் கட்சி பலவீனமடையுமா? …

  6. விருந்தகங்களில் வேட்பாளர்கள் தேங்காய் கியூவில் வாக்காளர்கள்? – நிலாந்தன். மருத்துவர் அர்ஜுனா மான் கட்சியின் பெண் வேட்பாளரோடு நாகரீகமின்றி நடந்து கொண்டது ஒரு விருந்தகத்தில் ஆகும். அது தொடர்பாக ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட பெண் வேட்பாளராகிய மிதிலைச்செல்வி அந்த விருந்தகத்துக்கு தானும் உணவருந்தச் செல்வதுண்டு என்று கூறுகிறார். தனக்குத் தெரிந்தவர்களையும் அங்கு விருந்துண்ண அழைத்துச் செல்வதுண்டு என்றும் கூறுகிறார். சம்பவம் நடந்த போது அந்த விருந்தகத்தில் நிறையப் பேர் தெரிந்த ஆட்கள் இருந்ததாகவும், அவர்களில் அனேகர் ஏதாவது ஒரு கட்சியோடு தொடர்புடைய ஆட்கள்தான் என்றும் கூறுகிறார். அதாவது அவர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்த தகவல்களின்படி அர்ச்சுனாவும் உட…

  7. இனவாத நிகழ்ச்சி நிரலுக்குள் இனப்பிரச்சினை விவகாரம் by A.Nixon - on July 9, 2015 படம் | Buddhika Weerasinghe/ Getty Images, THE HUFFINGTON POST இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செயற்படுகின்றன. இந்த இரண்டு பிரதான கட்சிகள்தான் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி புரிந்தும் வருகின்றன. மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற கருத்து இந்த இரு கட்சிகளிடமும் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்களின் 60 ஆண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை குறைப்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் சார்ந்து சர்வதேச ரீதியாக வரக்கூடிய அழுத்தங்கள், யோசனைகளை தவிர்ப்பது. பிரதான நோக்கம்…

  8. "உறவை மறவாதே" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] "உறவை மறவாதே நட்பைக் குலைக்காதே உலகம் உனதாகும் கைகள் இணைந்தாலே! உயிரும் உடலுமாக ஒன்றி வாழ்ந்தாலே உயர்ச்சி பெறுவாய் மனிதம் காப்பாற்றுவாய்!" "தேர்தல் வருகுது மனத்தைக் குழப்பாதே தேசம் ஒன்று உனக்கு உண்டே! தேய்வு அற்ற உறவைச் சேர்த்து தேசியம் காக்க ஒன்றாய் இணை!" "ஆதி மொழி பேசும் மனிதா ஆசை துறந்து அர்ப்பணிப்பு செய்யாயோ? ஆவதும் உன்னாலே அழிவதும் உன்னாலே ஆறஅமர்ந்து ஒன்றாய் நின்றால் என்ன?" "உறவை மறவாதே உண்மையைத் துறக்காதே உலகம் உனதாகும் உள்ளம…

  9. தமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும் – நிலாந்தன்… சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன. இது இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் உரிய பூமி என்றும் இவ்விரு மதப்பண்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற தொனிப்படவும் அவர் உரையாற்றியிருக்கிறார். சட்ட விரோதமாக மாடுகளைப் பிடிப்பது, கொல்வது என்பது ஒரு பிரச்சினைதான். அது ஒரு சட்டப்பிரச்சினை. ஆனால் அதை மத நோக்கு நிலையிலிருந்து வியாக்கியானம் செய்வதையும், அது தொடர்பில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவிப்பதை…

  10. நிலைமாற்று நீதிக்கான ஐ.நா. நிபுணரின் அறிக்கையும் தமிழரின் நீதிப் பயணமும் நிறான் அங்கிற்றல் படம் | INFOLIBRE மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார். இலங்கையிலே இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களையிட்ட நீதி மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் அந்த அவதானிப்புக்களை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். பப்லோ டீ கிறீப் என்பவர் நிலைமாற்றுக்காலநீதியிலே பிரசித்திபெற்ற நிபுணர் என்பதால் மாத்திரமன்றி இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கண்காணிக்கவும், வேண்டப்படும்போது அரசுக்கும் சிவில் சமூகத்துக்…

  11. இலங்கை தொடர்பான ஐநா மீளாய்வு அறிக்கையும், பொறுப்புக்கூறலுக்கான சாத்தியப்பாடுகளும்..!!!

    • 0 replies
    • 234 views
  12. நாடு திரும்பும் கோட்டாவின் அடுத்த நிகழ்ச்சி நிரல்கள் என்ன – உபுல் ஜோசப் பெர்னாண்டோவின் அரசியல் அலசல் கோட்டா மீண்டும் இலங்கைக்கு வருவார் என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், மூத்த அரசியல் ஆய்வாளர் உபுல் ஜோசப் பெர்னாண்டோ சிங்கள இதழுக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழாக்கம் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக பதவி நீக்கப் பிரேரணை முன்மொழியப்பட்டபோது, அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய பிக்கு ஒருவர் ஆலோசனை வழங்கினார். பிரேமதாசவின் ஜாதகத்தை கவனமாகப் படித்த பிறகு, பிக்கு அவருக்கு ஆலோசனை வழங்கினார். நீங்கள் இப்போது ஒரு பயங்கரமான சாபத்தை அனுபவித்து வருகிறீர்கள். அரசனின் தீய காலம் வந்தபோது, அவன் தீமையிலிருந்து தப்பிக்க …

  13. -நஜீப் பின் கபூர்- ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது அதன் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டமும், இல்லை போட்டியில் நமது தரப்புக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று கடைசி நிமிடம் வரை நம்பிக் கொண்டும் இருந்த மற்றுமொரு பெரும் கூட்டமும் நாட்டில் இருந்தது. அந்தத் தேர்தல் பற்றி இப்போது நாம் பேச வரவில்லை. ஆனால் வருகின்ற பொதுத் தேர்தலில் முடிவுகள் என்ன என்பதனை முன்கூட்டி தெரிந்து கொண்டுதான் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தலில் இறங்கி இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், இன்று ஜனாதிபதித் தேர்தலில் பின்னடைந்த அணிகளில் இருந்து போட்டியிடுகின்ற கட்சிகள் – கூட்டணிகளின் வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தமது …

  14. வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீன…

  15. ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகள் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு பரிந்துரைப்பதற்கான நேரமிது – புலம்பெயர் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர் மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகள் போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப பரிந்துரைப்பதற்கான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதற்கான நேரமிது என புலம்பெயர் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பாற்றர்சன் தெரிவித்துள்ளார். மனித உரிமை அமைப்புகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான பொதுவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது; இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகர் அறிக்கை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ…

    • 0 replies
    • 234 views
  16. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன். எதிர்பாக்கப்பட்டதைப் போலவே உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே இணங்கிச் செயற்படத் தயாராக இருந்தால் சபைகளை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும். எனவே தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் கட்சிகள் பின்வரும் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுவது போல, உள்ளூராட்சி சபைகள் உள்ளூர் நிலைமைகளுக்கானவை என்ற போதிலும் அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் வழியில் அடிப்படையானவை. கீழிருந்து மேல் நோக்கித்தான் தேசத்தைக் கட்டியெழுப்பலாம். அந்த அ…

  17. காணி நிலம் வேண்டும்! நிலாந்தன். காணி நிலம் வேண்டும்! நிலாந்தன். காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் நாலாம் பிரிவின் கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது இலங்கைத் தீவின் இன முரண்பாடுகள் தொடர்பில் ஆகப் பிந்திய தலைப்புச் செய்தியாக மாறியிருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5.940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத் துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத் தப்படும் என மேற்படி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கிழக்கு வரையிலுமான நீண்ட பிரதேசத்துக்குள் காணப்படும் காணிகளைக் குறித்த மேற்படி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகளில் கிட்டத்தட்ட அரைவ…

  18. பெயருக்கு சமஷ்டிமுறையையும் செயலில் ஒற்றையாட்சி முறையையும் கொண்ட ஆஸ்திரிய அரசியல் அமைப்பு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாகுமா? – தத்தர் இனப்பகைமை அற்ற ஆஸ்திரியாவில் உருவான அதிகாரமற்ற சமஷ்டி முறையை… இனப்பகைமை கொண்ட இலங்கையின் அரசியலுக்கு தீர்வாக்க முடியாது. ஆஸ்திரியாவில் காணப்படும் சமஷ்டிமுறை ஆட்சித் தீர்வை இலங்கையின் இனப்பிரச்சனைகக்கு தீர்வாக பரிசீலிக்கலாம் என்று தமிழ்த் தரப்பில் உள்ள சில அரசியல்வாதிகளால் பேசப்படுகிறது. இத்தகைய ஆஸ்திரிய சமஷ்டிமுறையின் மீது தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவ்வாறான ஒரு தீர்வைக்காண அது தமிழ்த் தலைவர்களுடன் உள்ளுர உரையாடி வருவதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரிய அரசியல யாப்பைப்…

    • 0 replies
    • 233 views
  19. ராஜபக்‌ஷர்களின் ஆதரவுத்தளமும் அரசியல் எதிர்காலமும் என். கே அஷோக்பரன் twitter: @nkashokbharan கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகலோடு, ராஜபக்‌ஷர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று எவரேனும் எண்ணினால், அது தவறு. ராஜபக்‌ஷர்கள் என்போர், அடுத்த ‘பண்டாரநாயக்காக்கள்’. அவர்களை, குடும்ப அரசியல் என்ற அடையாளத்துக்குள் சுருங்கிப்பார்ப்பது தவறாகும். ராஜபக்‌ஷர்கள் முன்னிறுத்தும் அரசியலுக்கான ஆதரவுதான், ராஜபக்‌ஷர்களுக்கான ஆதரவு என்பதைப் புரிந்துகொள்ளுதல் இங்கு அவசியம். இலங்கை அரசியல் இன்றும் இனத்தேசிய அடிப்படைகளில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. பெருந்தேசியவாதத்தின் சமகால முகம் ராஜபக்‌ஷர்களே! அந்த …

  20. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்; ஆட்சி மாற்றத்தை கேள்விக்குள்ளாக்குமா? யதீந்திரா படம் | COLOMBOTELEGRAPH மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடப்போகிறார் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் இறுதியில் போட்டியிலிருந்து விலகுவாரானால், அதில் ஏதோவொரு பலம்பொருந்திய சக்தியின் திருவிளையாடல் ஒழிந்திருக்கிறது என்றே நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தவிர அவர் போட்டியிடுவார் என்பது உறுதியாகிவிட்ட ஒன்றுதான். நான் மஹிந்தவின் மீள்வருகை தொடர்பில் எழுதிய முன்னைய பத்தியில் குறிப்பிட்டவாறு மஹிந்த தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான், அவர் மீண்டும் தன்னால் அரசியலில் நிமிர்ந்தெழ முடியுமென்று நம்புகிறார். அவரது நம்பிக்கை சரியென்று கூறுவதற்கும் அதனை பலப்ப…

  21. மாகாணசபைத் தேர்தல் சட்டமும் முஸ்லிம் அரசியல் எதிர்காலமும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-5

  22. உயர்நீதிமன்றின் கையில் மைத்திரியின் வாள் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் போலவே, தமது பதவிக்காலம் குறித்த சட்டவிளக்கத்தை உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தமது பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறதா அல்லது 2021 வரை, இந்தப் பதவியில் நீடிக்க முடியுமா என்பதற்கு, 14ஆம் திகதிக்குள் வியாக்கியானம் அளிக்குமாறு, அவர் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்புக்கு எழுத்துமூலமான ஒரு கோரிக்கையை விடுத்திருக்கிறார். சந்திரிகா குமாரதுங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள். ஆனால், அவர்கள் அப்போதிருந்த அரசமைப்பு நடைமுறைக்கு அமைய, 12 ஆண்டுகள் பதவியில் இர…

  23. புதுக்குடியிருப்புக் கூட்டம் யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது? நிலாந்தன் புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு வண்டில் சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்குழுவானது கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிரணியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாலாங்கட்ட ஈழப் போர்க் காலத்தில் போர்ச் சூழலுக்குள் வளர்ந்த இளவயதினரே இதில் அதிகமாக உண்டு. அதே சமயம் ஊர்ப் பெரியார்களுமுண்டு. ஒவ்வொரு வட்டாரத்திலும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதனை அப…

  24. இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும் புதுவருடத்தில் எவ்வாறு இருக்கும்? January 5, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2024 ஆண்டுக்கு நாம் பிரியாவிடை கொடுத்தபோது ஜனாதிபதி பதவியில் அநுரா குமார திசாநாயக்க நூறு நாட்களை நிறைவு செய்தார். புதிய பாராளுமன்றம் கூடிய பிறகு நாற்பது நாட்கள் கடந்திருந்தன. கடந்த வருடத்தில் இலங்கை அதன் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பு முனைகளைக் கண்டது. தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய அரசியல் இயக்கம் ஒன்று ஜனநாயக தேர்தல்கள் மூலமாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாக இலங்கை விளங்குகிறது. இதுகாலவரை இலங்கையை ஆட்சி செய்த பாரம்பரியமான அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள மிகவும் எளிமையான குடும்பப…

  25. வீழும் விழுமியங்கள்: இஸ்ரேலைக் கண்டிக்க இந்தியா தயங்குவது ஏன்? 16 Jun 2025, 9:33 AM ராஜன் குறை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் உலகப் போர் மூளக்கூடிய சூழல் உருவாகி வருவதைச் சுட்டிக் காட்டியதுடன், இஸ்ரேல் நாட்டின் மனிதாபிமானமற்ற போக்கையும், அத்துமீறும் ராணுவ தாக்குதல்களையும் கண்டித்துள்ளார். எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் தலைவராக அவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானது, வரவேற்கத்தக்கது. காரணம், ஈரான் நாட்டின் அணு ஆற்றல் உற்பத்தி கேந்திரங்களின் மீது இஸ்ரேல் இரு தின ங்களுக்கு முன்பு தாக்குதல் நட த்தியுள்ளது. தொடர்ந்து அவற்றை முற்றிலும் தாக்கி அழிக்கும் திட்டமும் வைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு பதிலடியாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.