Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மாற்றத்துக்கான தேர்தல்: நேர்நிலையும் எதிர்நிலையும் November 4, 2024 — கருணாகரன் — ஜனநாயக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, தங்களுடைய ஆட்சிப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதை மக்கள் எப்போதும் சரியாகத்தான் செய்கிறார்களா? பல சந்தர்ப்பங்களிலும் இல்லை. அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும். சரியான முறையில் (பொருத்தமான) நற்கொள்கை, சிறந்த செயலாற்றல், நற்பண்பு, பொறுப்புக்கூறும் கடப்பாடு போன்றவற்றைக் கொண்ட தரப்பைத் தெரிவு செய்திருந்தால் – தவறான தரப்பை நிராகரித்திருந்தால் நாடும் சமூகமும் (மக்களும்) பல முன்னேற்றங்களை எட்டியிருக்கும். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றில் சிக…

  2. மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் என்ன நடக்கிறது? நிலாந்தன். மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியவை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குத் தூலமான ஓர் உதாரணம் தையிட்டி விகாரை. உலகம் முழுவதையும் பெருந் தொற்று நோய் கவ்விப் பிடித்த ஒரு காலகட்டத்தில் தையிட்டி விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதாவது கொரோனா வைரஸ் மனிதர்களைத் தாக்கிய அந்தக் காலத்திலும் இலங்கைத் தீவின் இனவாத வைரஸ் உயிர்ப்புடன் பரவியது என்று பொருள். அப்பொழுது நடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அப்பொழுது இருந்த பிரதேச சபையின் நிர்வாகம் - அதாவது கூட்டமைப்பின் அதிகாரத்துக்குள் இருந்த பிரதேச சபை நிர்வாகம்-சிங்கள பௌத்த மயமாக்கலுக்குத் துணை போனது. விளைவாக இ…

  3. "விகாரை அமைப்பு முதல், சட்டத்தை மீறிய தகனம் வரையில் ஒரு நேரடி சாட்சியத்தின் பகிர்வு": செம்மலையில் அரங்கேறிய அத்துமீறல்கள் தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை சட்டத்தை மீறி தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விடயம் நிச்சயமாக தீண்டும். முல்லை மண்ணில் அரங்­கேற்­றப்­பட்ட மனி­தப்­பே­ர­வ­லங்­க­ளுக்­கான நீதிக்­கோ­ரிக்கை போராட்டம் தொடர்ந்து கொண்­டி­ருக்­கையில் அதே மண்ணில் வர­லாற்­றுப்­ப­ழைமை வாய்ந்த செம்­மலை நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் ஆல­யத்தில் இரா­ணு­வத்­தி­னரின் பங்­கேற்­புடன் உரு­வான பௌத்த விகாரை இன முறு­கல்­க­ளுக்கு வித்­திட்­டது. தற்­போது அந்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியின் மர­ணத்தின் பி…

  4. வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? February 26, 2025 — கருணாகரன் — யுத்தத்தினால் அழிந்து சிதிலமடைந்திருக்கின்ற வடக்குப் பிரதேசங்களை அபிவிருத்தியினால் மேம்படுத்துவதும் அங்குள்ள மக்களை உளரீதியில் புதுநிலைப்படுத்துவதும் ஒன்றாக நடக்க வேண்டும். யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் இவை சரியாக நடக்கவேயில்லை. 2013 – 2018 வரை ஐந்து ஆண்டுகள் வடக்கு மாகாணசபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் இருந்தது. அப்போதும் வடக்கின் அபிவிருத்தியைப் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் நிலையைப் பற்றியும் பொறுப்பானவர்கள், பொறுப்பாகச் சிந்திக்கவில்லை. இதனால்தான் இன்னும் இங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள். புதிய (NPP) அரசாங்கம் எல்லாவற்றிலும் மாற்றங்களையும் புதுமைகளையும்…

  5. தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு யாராலோ இயக்கப்படுகிறது என்று ஒரு சந்தேகத்தை சில கட்சிகளும் சில ஊடகங்களும் பெரிதாக்கி வருகின்றன.மேற்படி சிவில் சமூகங்களின் கூட்டிணைவு வவுனியாவில் கூடிய பொழுது அந்தக் கூட்டத்துக்கு யாரோ நிதி உதவி வழங்கியிருப்பதாகக் கூறப்படுவது சரியா ? சிவில் சமூகங்களின் கூட்டிணைவைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களின்படி வவுனியா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் அங்கே ஓர் உண்டியல் வைக்கப்பட்டிருக்கிறது.அந்த உண்டியலில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைவரையும் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்யும…

  6. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கைது செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது கட்டுரை தகவல் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 24 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இதுவரை காலம் பிரிந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த எதிர்கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்த எதிர்கட்சியாக உருவாகி வருவதை காணக் கூடிய…

  7. Published By: RAJEEBAN 28 APR, 2025 | 04:40 PM https://www.aljazeera.com/ கனடாவின் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க பிராச்சார மாற்றமொன்றின் மத்தியில் இன்று அந்த நாட்டு மக்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். ஜனவரி மாதத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியிருந்தன. எனினும் அதன் பின்னர் லிபரல் கட்சியினர் நிலைமையை தலைகீழாக மாற்றியுள்ளனர். கடந்த சில வாரங்களில் வெளியான கருத்துக்கணிப்புகள் இரண்டு கட்சியினருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளன. லிபரல் கட்சியினர் வெற்றி பெறப்போகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது என கனேடிய கருத்துக்கணிப்பு நிறுவனமான எகோஸ் ஆராய்ச்சியின் தலைவரும் நிறுவனர…

  8. இளையதம்பி தம்பையா முன்னாள் பாலஸ்தீன இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தின் இறப்பு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவரது மனைவி உட்பட, அவருக்கு நெருக்கமானவர்கள் எழுப்பி இருந்தபோதும் இன்னும் தீர்வு காணப்படாத புதிராக இருக்கிறது. யசீர் அரபாத் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்துவிட்டதாகவும், அவர் பாலஸ்தீன மக்களின் விடுதலை பற்றி அக்கறை கொண்டவரல்லர் என்றும் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டு ஹமாஸ் என்ற மத அடிப்படை வாதத்தை கொண்ட பாலஸ்தீன இயக்கம், மட்டுமன்றி, பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி என்ற இடதுசாரியத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கமும் அவரை ஏகாதிபத்திய கைக்கூலி என்று கூறத்தவறவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டை இலங்கையில் சில அமைப்புகள் மட்டுமன்றி இந்தியாவின் சில அமைப்புக…

  9. சரிவடைந்து செல்லும் தீர்வுக்கான சாத்தியம் இவையெல்லாவற்றையும் உற்று நோக்குகின்ற போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் அரசியல் சாசனம் கொண்டுவரப்படுமா? அவ்வாறு இல்லையாயின் தமிழ் மக்களின் எதிர்கால நிலைமைகளும் நகர்வுகளும் எவ்வாறு இருக்கப் போகின்றன? யுத்­த­கா­லத்தில் இலங்கை அர­சாங்­கத்­துக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் போது, இல்­லாத எதிர்ப்பும் கண்­ட­னங்­களும் புதிய அர­சியல் சாசனம் உரு­வாகும் இவ்­வே­ளையில் காணப்­ப­டு­வதும் காட்­டப்­ப­டு­வதும் இலங்கை அர­சி­யலின் நெருக்­கடிப் போக்­கு­களை தெளி­வா­கவே விளக்­கு­கி­றது. புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் இன்னும் தெளி­வான முடி­…

  10. தென்னிலங்கை அரசியலை உலுக்கிய சுனாமி ரொபட் அன்­டனி கடந்த இரு வாரங்­க­ளாக நாட்டில் தேசிய மட்­டத்தில் அடித்­துக்­கொண்­டி­ருந்த அர­சியல் சுனாமி தற்­போது ஓர­ளவு ஓய்ந்­துள்­ளது . எனினும் அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதே இன்னும் பேசப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம் என்­பது பொது­வாக அனை­வரும் கூறும் விட­ய­மாகும். ஆனால் அதுவே சில சம­யங்­களில் பொது­மக்­க­ளுக்கு விசித்­தி­ர­மா­ன­தாக அமைந்­து­வி­டு­வ­துண்டு. நடந்­து­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­யீட்­டி­ய­தை­ தொடர்ந்து தென்­னி­லங்­கையில் அர­சியல் சுனா­மியே ஏற்­பட்­டது. தெ…

  11. சர்வகட்சி மாநாடும் ஜனாதிபதி - கூட்டமைப்பு சந்திப்பும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், சர்வகட்சி மாநாடு நடந்தேறியுள்ளது. இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சிக்கல் நிலையை எதிர்கொள்ளவதற்கான சர்வகட்சிகளின் ஆலோசனைக் களமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு, அதன் நோக்கத்தை அடைந்ததோ இல்லையோ, அது அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அது கனத்த பிரபல்யத்தைத் தேடித்தந்திருக்கிறது. ரணில் அங்கு பேசிய விதம், பேசிய விடயம், கப்ராலின் அரசியல் பேச்சைக்…

    • 0 replies
    • 230 views
  12. ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன் “சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம் நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பாகும். ஈழப் போராட்டத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பே ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பாகும். கடந்த 13ஆம் திகதி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதி கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது. “இந்த தீர்மானம் முந்தைய தீர்மானங்களில…

  13. இலங்கை குறித்த இந்தியாவின் வெளிவிவகார கொள்கை மாறாது; உட்கட்டமைப்பு திட்டங்கள் ஏனைய கொள்கைகள் தொடர்பில் கடும் அழுத்தங்களை கொடுப்பதை இந்தியா குறைத்துக்கொள்ளும் - இராஜதந்திர ஆய்வாளர்கள் கருத்து Published By: RAJEEBAN 08 JUN, 2024 | 11:50 AM ECONOMYNEXT SHIHAR ANEEZ இந்தியாவின் பிரதமராக இரண்டு தடவை பதவிவகித்துள்ள நரேந்திரமோடி இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறை எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் தேர்தல்முடிவுகள் இலங்கை தொடர்பான அவரது கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையுடனான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆக்ரோசமான உந்துதல் குறையலாம்…

  14. ஜெனீவா தீர்மானங்கள் சார்ந்து இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும் (பகுதி I) Photo, Japantimes “இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் ஜெனீவாவுக்கு வர வேண்டும்?” – காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட 2022 செப்டெம்பர் 16ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) தீர்மானம் குறித்த முறைசாரா கலந்துரையாடலில் பேசும்போது இவ்வாறு வினவினார். ஜெனீவாவில் உள்ள பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) தீர்மானத்துக்கு அமைய 2006 இல் அமைக்கப்பட்டது. இது இலங்கை உட்பட 193 ஐ.நா. உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது. இ…

  15. அரசியல் களம்_ இரா. துரைரட்ணம்_முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்..

  16. (புருஜோத்தமன் தங்கமயில்) இளையோருக்கும் பெண்களுக்குமான அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற குரல்கள் தேர்தல் காலங்களில் அதிகமாக கேட்பதுண்டு. இம்முறையும் வேட்புமனுத் தாக்கல் முடியும் நாள் வரையில், அந்தக் குரல்கள் பலமாகவே கேட்டன. அதிலும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இளையோருக்கும் பெண்களுக்குமான இடத்தை பிடித்து வைத்துக் கொண்டு, பெருந்தடையாக இருக்கும் மூத்த அரசியல்வாதிகளும்கூட அந்தக் குரல்களை எழுப்பினர்கள் என்பதுதான் வேடிக்கையானது. வழக்கமாக மூத்த – பழுத்த அரசியல்வாதிகளினால் நிறையும் இலங்கையின் தேர்தல் களம், ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியோடு இளையோர், புதியவர்களுக்கான களமாக இம்முறை மாறியிருக்கின்றது. அதன் பிரதிப…

  17. அரிசியின் அரசியல் எம்.எஸ்.எம்.ஐயூப் தற்போது நாட்டில் நிலவும் அரிசி பிரச்சனை தமது காலத்தில் உருவானது அல்ல, அது நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுவது உண்மை ஆயினும் அதை தீர்ப்பது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை எவராலும் மறுக்க முடியாது. கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சாதாரணமாக எந்த ரகத்திலாயினும் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 200 ரூபாவுக்கு குறைவாகவே இருந்தது. ஆனால் அத் தேர்தலுக்குப் பின்னர் சில சந்தர்ப்பங்களில் அவ்விலை 300 ரூபாவுக்கு மேலாகவும் அதிகரித்தது. சந்தையில் அரிசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடே இதற்குக் காரணமாகும். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிப…

  18. 11 FEB, 2024 | 07:22 PM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி ஐக்கிய நூற்றாண்டு முன்னணி அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் போட்டியிடும். நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம். எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே நாங்கள் வேட்புமனு கொடுப்போம் என்று ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசான் டி விஸ்ஸர் தெரிவித்தார். பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை பலப்படுத்த வேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை. அதுபோன்ற மத்திய மாக…

  19. வருகிறது தேர்தல் நஜீப் பின் கபூர் ——————————- எரிபொருட்களுக்கும் சமையல் எரிவாயுக்காகவும் ஏன் அன்றாட உணவுக்குக்கூட மக்கள் இரவு பகலாக வீதியில் நிற்கின்றார்கள்.விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு பசளையின்றி நாசம் போன தங்கள் விளை நிலங்களைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தாய்மார் தமது குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு போடுவது எப்படி என்று தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். வருமானத்துக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு வருவதால் என்ன பண்ணலாம், ஏது பார்க்கலாம் என்று ஓடித்திரியும பெற்றோர். பள்ளிப் படிப்பை தொடர வழி இன்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள்.…

    • 0 replies
    • 229 views
  20. சமர் அல்லாச் சமர்களாக ஒருங்கிய சமர் முறைகளும் (Hybrid Warfare) ஒருங்கிய அச்சுறுத்தல்களும் (Hybrid Threats) நவீன உலக ஒழுங்கில் சத்தமில்லா யுத்தமாக இராணுவ அணிகலன் அற்ற சமர் அணுகுமுறைகள் செயற்படுகின்றன. இவை இரண்டு வகைகளில் நிகழ்கின்றது. முதலாவது ஒருங்கிய சமர் முறைகள் (Hybrid Warfare). இரண்டாவது ஒருங்கிய அச்சுறுத்தல்கள் ( Hybrid Threats). இராணுவ ஆயுதங்களுக்கு அப்பால் ஏனைய வழிமுறைகள் பிரயோகிக்கப்பட்டு ஒரு நாட்டினை அல்லது ஒரு பிரதேசத்தினை கட்டுப்படுத்தலில் ஒருங்கிய சமர் முறைகளும் ஒருங்கிய அச்சுறுத்தல்களும் கையாளப்படுகின்றன. இதனால் உலகின் ஆயுத மோதல்கள் சிக்கல்கள் நிறைந்ததாகவும், சவால்கள் மிகுந்ததாகவும் பரிணமித்துள்ளன.…

  21. தெற்காசியாவின் லெபனானாக இலங்கை மாறுவதை மேற்குலகம் தடுக்க வேண்டும் மட் கொட்வின், இலங்கைக்கு தேவைப்படுவது பொறுப்புமிக்க அரசாங்கமும் நிலையான சர்வதேச முதலீடுமாகும். ஒரு காலத்தில் இலங்கையின் மிக முக்கியமான இருதரப்பு பங்காளியாக இருந்த பிரிட்டன் , அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய “குவாட் நாடுகளுடன்” இணைந்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும், சீனாவின் மீதான முதலீட்டு சார்புக்கு ஒரு ஒத்திசைவான போட்டியான மாற்று வழியை வழங்குவதற்கும் அவசர இடையீட்டு நிதியை வழங்க வேண்டும். 00000000000000 இலங்கையில் உணவு, எரிபொருள் விலைகள் வானுயர அதிகரித்துச் செல்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியிலி…

    • 0 replies
    • 228 views
  22. முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்தான் என்று உயர்நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதன்படி, 2020 ஜனவரி 8ஆம் திகதியுடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. 1978ஆம் ஆண்டு அரசமைப்புக்கு இணங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், தனது பதவிக்காலம் எதுவரை என்று உயர்நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். 19ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அமைய, 2020 வரை மாத்திரமா அல்லது, 2021 வரை பதவியில் இருக்க முடியுமா என்பதே ஜனா…

  23. ஈழத்தமிழர் அரசியலானது தனிநபர்களின் சுயநலன்களுக்காகவும் ஏனையவர்களின் நலன்களுக்காகவும் களவாடப்படுகின்ற புதிய அரசியற்பரப்பிற்குள் நகர்த்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று தாயகம் எங்கும் எதிர்வரும் பொதுத்தேர்தல் பற்றியும் அதற்கான தயார்படுத்தல்கள் எனவும் பச்சோந்திகளின் அரசியல் படமெடுத்தாடுகின்றது. இந்தவேளையில்தான் முன்னைநாள் ஊடகவிற்பன்னர் என தனக்கு தானே மணிமகுடம் சூட்டிக்கொண்ட வித்தியாதரனின் அடுத்த காய்நகர்த்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. முன்னைநாள் போராளிகளை ஒருங்கிணைத்து அதன் ஒருங்கிணைப்பாளராக தானே நின்று புதிய அரசியல்பாதையை உருவாக்கப்போவதாக பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த திலீபனின் தியாகப்பயணம் மேற்கொண்ட வீதியில் தியானம் செய்து சபதம் …

    • 0 replies
    • 227 views
  24. தேசிய நிதி கட்டமைப்பின் 13 விடயங்களை இலக்கு வைக்கும் சர்வதேச நாணய நிதியம் By NANTHINI 12 NOV, 2022 | 12:25 PM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் அரசாங்கம், மறுபுறம் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி வருகின்றது. அந்த வகையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கவும், தேவையான ஒத்துழைப்புகளை வழங்கவும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் கொழும்பில் அரச தரப்புடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் இலங்கையின் நிதி கட்டம…

  25. 14 FEB, 2024 | 05:30 PM கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் இவ்வருடம் நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிக்காட்டிவருகிறார். கடந்தவாரம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த வேளையிலும் அதை அவர் வெளிக்காட்டியதாக செய்திகள் கூறின. மக்களின் ஆணையுடன் அரசாங்கம் ஒன்று பதவிக்கு வருவதை உறுதிசெய்யக்கூடிய தேர்தல்களுக்காக காத்திருப்பவர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்களை நேர்மறையாக நோக்குவார்கள். ஜனாதிபதி பதவி நாட்டின் மிகவும் பலம்பொருந்திய பதவி. சர்வதேச வங்குரோத்து நிலைக்குள் நாடு மூழ்கிக்கிடக்கும் மிகவும் தீர்க்கமான இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி நாட்டுக்கு தலைமைதாங்குகின்ற போதிலும், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.