அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
இனி ஏது பிரிவென்று இரவு இன்று விடிய இசையோடு மொழி சேர்ந்து இனி காதல் கொள்க அழகான கனவொன்று நியமாகுமா அன்பென்ற மொழி ஒன்று இனி வாழுமா. இயற்கை அழிவுகளினாலும்,பெரும் தொற்று நோய்களினால், யுத்த அழிவுகளினாலும், போரும் மனித அவலங்களும் மரணங்களுமாக உலகம் இன்று அமைதி இழந்து ஒரு இருள் சூள்தபடி சுழல்கிறது. ஆக்கிரமிப்பும், அதிகாரமும், சுயநலன்களும் நாடுகளுடன் நாடுகளும் மனிதனுக்கு மனிதன் எதிரியாகவும் இருக்கிறான். மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை நாடுகள் அடிமைப் படுத்தி சுய நலன் கருதி சுரண்டாமல் மனிதன் வாழ கற்றுக் கொள்வானா. ஆதிகாலத்தில் மனிதனுக்கு மனிதன் சண்டை போட்டது போல் இன்று நாடுகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அன்பு, அறம், கருணை, சமாதானம், மனிதம் எல்லா…
-
- 0 replies
- 222 views
-
-
புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள் - நிலாந்தன் இன்று கட்டுரையை ஒரு கதையில் இருந்து தொடங்கலாம். புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணிக்குள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. போர்க்காலத்தில் மல்லாவியில் நடந்த கதை இது. மல்லாவிச் சந்தையில் கனெக்ஸ் என்று அழைக்கப்படும் கனகரட்ணம் மீன் வாங்க வந்திருந்தார். அவர் அப்பொழுது வெற்றிலை சப்பிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வாய்க்குள் இருந்த வெற்றிலை எச்சிலை அப்படியே நிலத்தில் துப்பினார். அதை அங்கே இருந்த அன்பு மாஸ்டர் கண்டுவிட்டார். அவர் கனெக்ஸை நோக்கிப் பாய்ந்தார். “ஒரு பொது இடத்தில் அதுவும் சாப்பாட்டுப் பொருட்கள் விற்குமிடத்தில் எப்படி சுகாதாரக் கேடான விதத்தில் வெற்றிலையைத் துப்புவாய்” என்று அவர் …
-
- 1 reply
- 222 views
-
-
ஆபத்தில், இந்திய.. தென் பிராந்தியம்? இந்தியாவின் தென்பிராந்தியம் அடுத்துவரும் நாட்களில் ஆபத்தில் சிக்கப்போகும் சூழல்கள் அதிகரித்துள்ளன என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தியத் தென்பிராந்தியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியமும், அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளின் சுதந்திரமான இந்துசமுத்திரத்தின் ஊடான கடற்பிராந்தியமும் தான் நெருக்கடிகளை எதிர்கொள்ளப்போகின்றது. ஆம், சீனாவின் யுவான் வாங் – 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நங்கூரமிடப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ‘சீனக் கப்பலுக்கு அ…
-
- 0 replies
- 221 views
-
-
பூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் அரசியல் நிர்மானுசன் பாலசுந்தரம் படம் | THE NEW YORKER எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்குலகுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்ந்த முரண்பட்ட நிலை, மேற்குலக நலனை இலங்கைத் தீவிலும் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் நிலைநிறுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ பொருத்தமானவராக இல்லை என்ற மேற்குலகின் முடிவுக்கு வித்திட்டது. அதேவேளை, மஹிந்தவின் வெளியுறவுக்…
-
- 0 replies
- 221 views
-
-
மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்… இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை மின்சார சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒன்றிணைந்து தயாரித்துள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தினால் மன்னார் தீவின் மக்களும் அதன் உயிரியல் சமூகமும் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அனைத்து காற்றாலை திட்டங்களும் மின்வலு உற்பத்தியை இலக்காகக் கொண்ட ஆய்வுகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன. மன்னார் தீவில் வாழும் மக்களின் எதிர்கால இருப்பு அல்லது உயிரியல் சமூகத்தின் இருப்பு, போன்று மன்னார் தீவிலுள்ள நிலப்பரப்பின் இயற்கையான தன்மை அல்லது அதன் தற்போதைய தேசிய திட்டங்களின் தன்மை குறித்து எந…
-
-
- 1 reply
- 221 views
-
-
உயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன் 135 Views முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 11 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழினம் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளுவதாக இல்லை. விடுதலையின் வாசலில் வந்து நிற்பதாக நம்பிய எங்களது மக்களுக்கு 2009இல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்தேறிய சம்பவங்கள் மனங்களை விட்டு அகலாத ரணங்களாக இன்னமும் இருந்து கொண்டே இருக்கின்றது. அடுத்த ஆண்டிற்கான ஒரு வருடப் பயண வழிகாட்டலை, நெறிப்படுத்தலை ஒவ்வொரு ஆண்டு மாவீரர்நாளின் போதும் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்று வந்த எங்களது மக்கள் இன்னமும் சரியான தலைமைத்துவ வழிகாட்டலுக்காக காத்திருக்கின்றார்கள். இந்தக் காத்திருப்பு நியாயமா…
-
- 0 replies
- 221 views
-
-
ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? Photo, SUNDAY TIMES இலங்கையில் பிரதிநிதித்துவ (நாடாளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் சிறுபான்மை அரசியல் தலைலைமைகள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தை வலியுறுத்தி தனித்துவமாக செயற்பட ஆரம்பித்தன. தமக்கென தனித்துவமான கட்சிகளை உருவாக்கிக் கொண்டன. எனினும், கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள் அவ்வாறல்லாது சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கும் சம முக்க…
-
- 0 replies
- 220 views
-
-
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் 76 வருட ஆட்சியின் "அபிவிருத்தி" என்ற பழைய அணுகுமுறை மீணடும் சாத்தியக்கூற்று - சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி பதிப்பு: 2025 செப். 13 19:14 யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் …
-
- 0 replies
- 220 views
-
-
01 APR, 2025 | 01:07 PM துரைநாயகம் சஞ்சீவன் திரியாய் கிராமமானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இங்கு தமிழர்கள் 531 பேர், சிங்களவர்கள் 274 பேர், முஸ்லிம் ஒருவர் என 806 பேர் வசித்து வருகின்றார்கள். வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் திரியாய் வட்டாரத்தில் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் 1987 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பின்வரும் கிராம சேவகர் பிரிவுகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள, மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த 2712 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. செந்தூர் கிராம ச…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
கூட்டமைப்பிலிருந்து வெளியில் வர என்ன காரணம்? -சிவசக்திஆனந்தன்|
-
- 0 replies
- 220 views
-
-
வெற்றி பெற்ற இரண்டு போராட்டங்களும் எதிர்க்கட்சிகளும் தமிழர்களும் – அரசியல் ஆய்வாளர் நிலாந்தன். கடந்த இரு வாரங்களில் இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாக போராடி வந்த இரண்டு தரப்புகள் குறிப்பிட்டு செல்லக்கூடிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. முதலாவது இலங்கைத்தீவில் சம்பள உயர்வு கேட்டு ஆசிரியர்களும் அதிபர்களும் முன்னெடுத்த ஒரு போராட்டம்.இப்போராட்டம் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஒரு குழுவின் சமரச முயற்சிகளால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அடுத்தது இந்தியாவில் புதுடில்லியில் மோடி அரசாங்கத்தின் 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பல மாதங்களாகப் போராடி வந்த விவசாயிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அரசாங்கம் மேற்படி மூன்று மசோதாக்களை பின்னெடுத்திருக்கிறது. ஒரு பெரும் தொற்றுநோய…
-
- 0 replies
- 220 views
-
-
12 APR, 2025 | 12:23 PM - ஆர்.ராம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு சம்பந்தமாகவோ ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவோ உத்தியோக பூர்வமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நிலைமையானது வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தமிழ்த் தலைவர்கள் பல தருணங்களில் இந்தியாவின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றாது பல்வேறு சந்தர்ப்பங்களை கைவிட்டு வரலாற்றுத் தவறிழைத்ததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற…
-
- 1 reply
- 219 views
- 1 follower
-
-
தேசிய (இனப்) பிரச்சினை: தமிழ்த் தேசிய அரசியற் தீர்வுகளைக் கேள்விக்குட்படுத்தல் படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரினதும் தேர்தல் பிரசாரங்கள் இலங்கைத் தீவில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த உரையாடல்கள் மீது தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன. தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் பிரதானமான அரசியற் கட்சிகள் யாவும் சமஷ்டியினையும், சுயநிர்ணய உரிமையினையும் நிராகரித்துள்ள அதேவேளை இந்த இரண்டு தமிழ்த் தரப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகள் திம்புக் கோட்பாட்டினை மையமாகக் கொண்டவையாக இருக்கின்றன. தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தமிழர்களை சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான ஒரு தேசமாக அல்லது மக்கள் கூட…
-
- 0 replies
- 219 views
-
-
நெருக்கடியின் சுமையைத் தணித்தல் விக்டர் ஐவன் *********** புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புடைய பல அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களை அவர்களின் ஆதரவுடன் அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். இது நாட்டிற்கு அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமாக மாறும். அதேவேளை, வடக்கு, கிழக்கு மக்களிடம் இருந்து பாதுகாப்புப் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே, அந்தப் பிரதேசங்களில் சிறப்பான அபிவிருத்தி ஏற்படுமாயின் அது வடக்கு, கிழக்கில் வாழும் மக்க…
-
- 0 replies
- 219 views
-
-
B639/15 எனும் மிக்-27 விசாரணைகள் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலப்பகுதியில், அந்த தேர்தல்கள் விடயங்களுக்கு சமாந்தரமாக பேசப்பட்ட ஒரு விடயமே, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க டுபாயில் கைது செய்யப்பட்ட விவகாரம். எனினும் அந்த விடயம் ஒரு வாரத்துக்குள்ளேயே புஷ்வாணமாகிப் போனது. காரணம் கைதான அவரை ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் விடுதலை செய்தமையும், அவரை இலங்கைக்கு அழைத்துவர எம் நாட்டு அதிகாரிகளால் முடியாமல் போனமையுமாகும். இந்த இயலாமை இலங்கையைப் பொறுத்தவரை மிகப் பெரிய பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், அந்த பின்னடைவினை மிகப் பலமாக எதிர்கொண்டு இலங்கையின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் அத…
-
- 0 replies
- 219 views
-
-
கருத்திலும் களத்திலும் விரிவடைய வேண்டிய போராட்டம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடும் போராட்டக்காரர்களும் அவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கிவருவோரும் மெச்சத்தக்கவர்கள். அரசாங்கமும் இன்னும் சிலரும் எதிர்பார்த்தது போல, போராட்டம் நீர்த்துப் போய்விடவில்லை. அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி ஒருபுறமும் தொடர்ச்சியாகப் போராடும் போராட்டக்காரர்களுக்கான மானசீகமான மக்கள் ஆதரவும், போராட்டங்களை மெதுமெதுவாகக் கிராமங்களை நோக்கி நகர்த்தியுள்ளன. கொழும்பில் நடக்கும் போராட்டங்களுக்கு அஞ்சாத அரசாங்கம், இப்போராட்டங்கள் கிராமங்களுக்கு விரிவடைவது குறித்து அஞ்சுகிறது. கடந்தவார நடத்தை, அதை உறுதி செய்கிறது. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக…
-
- 0 replies
- 217 views
-
-
நிறைவேற்று அதிகாரமுடைய இரும்பு மனிதர்களைத் தமிழ் மக்கள் தெரிவு செய்யப் போகிறார்களா? - நிலாந்தன். - நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருப்பதுண்டு. நாட்டில் உள்ள லிபரல்கள், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோரின் கோரிக்கைகளும் அவ்வாறு இருப்பதுண்டு.தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், தமிழ் மக்கள் அதிகம் கொன்றொழிக்கப்பட்ட காலம், துன்பப்பட்ட காலம், இன அழிப்புக்கு உள்ளாகிய காலம், ஜனாதிபதி முறைமையின் கீழான காலம்தான் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை எனப்படுவது இரும்பு மனிதர்களைத்தான…
-
- 0 replies
- 217 views
-
-
எதிர்பார்ப்புக்களின் தோல்வி மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இலக்குடனும் அந்த இலக்கை அடைந்து கொள்ளும் எதிர்பார்ப்புடனுமே காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு சமூக வாழ்வோடு இணைந்த ஒவ்வொரு விடயத்திலும் ஓர் இலக்கும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் சமூகங்களின் மத்தியில் இருப்பது இன்றியமையாதது. அத்தகைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நாட்டை ஆளும் அரசாங்கத்திலும் ஒவ்வொரு சமூகம் சார்ந்த அரசியல் தலைமைகளிலும் மக்கள் பிரதிநிதிகளிலும் அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளிலும் காணப்படுகின்றன. சமூகக் கட்டமைப்பின் விருத்தியில் அரசியல் அதிகாரம் முக்கியமானது. ஒரு சமூகத்தின் அடிப்படைத் தேவைகள் நிறை…
-
- 0 replies
- 217 views
-
-
மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன் டித்வா புயலால் தமிழ்த் தரப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையகத் தமிழர்கள்தான். மலையகத்தில் வெள்ளம்,புயல்,மண்சரிவு ஏற்படும்போது அங்கே உறக்கத்திலேயே மண்மூடி இறந்தவர்கள் அதிகமாக ஏழைகள்தான். மேல் நடுத்தர வர்க்கம் அவ்வாறு இறப்பது குறைவு. மலையகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகள்,தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்றன இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் செல்வந்தர்கள் தங்கள் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டுகிறார்கள். ஆனால் ஏழைகள் மலை விளிம்புகளில்,மண் சரியக்கூடிய இடங்களில் வீடுகளைக் கட்டுவதனால் இயற்கை அனர்த்தங்களின் போது முதற் பலியாகிறார்கள். காலாகாலமாக இயற்கை அனர்த்தங்களின…
-
- 0 replies
- 217 views
-
-
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் 28.5.2025 அன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மன்னார் வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் விரைவான நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி. பங்குபற்றுபவர்கள் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் உயர் அதிகாரிகள். இவை தவிர முக்கிய சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள்; அனைத்துக்கும் மேலாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசியல் யாப்பு விதிகளை மீ…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SRI LANKA NAVY படக்குறிப்பு, ஐஎன்எஸ் மும்பை கப்பல் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 31 ஆகஸ்ட் 2024, 13:00 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீன போர் கப்பல்களும், இந்திய போர் கப்பலொன்றும் ஒரே நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்து, மீண்டும் தத்தமது நாடுகளை நோக்கி பயணித்துள்ளன. இந்த இரண்டு நாட்டு கப்பல்களும் கடந்த 26ஆம் தேதி இலங்கை சென்றன. கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) இலங்கையை விட்டு புறப்பட்டுச் சென்றன. இலங்கையில் இந்திய, சீன போர்க் கப்பல்கள் என்ன செய்தன? சீன போர்க் கப்பல்கள் இலங்கை வருகை சீனாவிற்கு சொந்…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
மீண்டுமொரு சதி, குழி பறிப்பு முருகானந்தம் தவம் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து அதன் முக்கியஸ்தரும் தமிழ் தேசியப்பற்றாளருமான சிவஞானம் சிறீதரனை வெளியேற்றி விட வேண்டும் என பல்வேறு சதி நடவடிக்கைகளில் இறங்கிய தமிழரசுக்கட்சியின் முக்கிய சில கறுப்பு ஆடுகள் அதில் தோல்வி கண்ட நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விடக்கூடாதென மீண்டும் குழிபறிப்புக்களில் இறங்கி அதிலும் தோல்வி கண்டும் அடங்காது தற்போது அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள சிறீதரனை அதிலிருந்தாவது அகற்றி ஆறுதல் வெற்றியையாவது பெற்று விட வேண்டுமென நினைத்து மீண்டுமொரு சதி, குழி பறிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த தமிழரசுக் கட்சியின் சில முக்கிய கறுப்பு ஆடுகளின் சதியின் …
-
- 1 reply
- 215 views
- 1 follower
-
-
மைத்திரிக்கு ஸ்ரீ ல.சு.கட்சியை வெற்றி பெறச்செய்ய முடியுமா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை காட்சிப் பொருளாகப் பாவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (பொதுசன முன்னணி) என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்ததை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் அதற்காக இரண்டு கட்சி அபிவிருத்திக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இரண்டும் கட்சிக்கு மேலும் அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்வதை நோக்கமாகவே நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலையில் அவர் காலியில் நடைபெற்ற கட்ச…
-
- 0 replies
- 215 views
-
-
செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன். அழகிய இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தின் முத்து மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடய ஒரு தீவுந்தான்.இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் பெருமைக்குரிய சேமிப்பிடம் மட்டுமல்ல, உலகில் மனிதப் புதைகுழிகள் அதிகமுடைய ஒரு தீவுந்தான். சிங்கள மத்தியில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கலாநிதி ஜயலத் மற்றும் சுனிலா அபய சேகர போன்றவர்களின் வார்த்தைகளில் சொன்னால் அழகிய இலங்கைத் தீவு காணாமல் போனவர்களை மறக்க முற்படும் ஒரு தீவுந்தான். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தில் இருந்து தொடங்கி கடந்த 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லிம்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கொன்று புதைக்கப்பட்ட ஒரு தீவு.யாருக்குமே சரி…
-
- 1 reply
- 215 views
-
-
தேர்தல் வாக்குறுதிகளைப் பார்க்கிலும் வரலாறே முக்கியம் எம்.எஸ்.எம்.ஐயூப் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் (கடந்த 22 ஆம் திகதி காலஞ்சென்ற டொக்டர் ஐ.எம். இல்யாசைத் தவிர) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களில் பெரும்பாலானோர் இது வரை ஒரு பிரசார கூட்டமேனும் நடத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது. தெற்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சர்வஜன கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர ஆகியோரும் வடக்கில் தமிழ் பொது வேட்பாளர் பி.அரியநேத்…
-
- 0 replies
- 215 views
-