நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4200 topics in this forum
-
கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து சிங்களப் பேரினவாத சக்திகளுடன் இணைந்து தமிழ் இனத்தைப் படுகொலை செய்யும் ஒட்டுக்குழுவினர் போர் முடிவடைந்த பின்னரும் அவர்களின் காட்டிக்கொடுப்புக்களும், அடாவடித்தனங்களும் துரோகத்தனங்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இப்பகுதியில் இயங்கிய ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வலுக்கட்டாயமாக கடத்தி ஆயுதப் பயிற்சி வழங்கிய சிறார்களையும் உறவினர்களிடம் ஒப்படைத்தல், அக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களையும் விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு சிறீலங்கா அரசு உறுதியளித்திருந்தது. எழுத்துவடிவில் வழங்கப்பட்ட உறுதி இன்று வரையில் நிற…
-
- 0 replies
- 441 views
-
-
ராஜீவ் காந்தியின் ‘ஆவியை’ அடிக்கடி தட்டியெழுப்பி, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இடைவிடாது ஊறு விளைவித்து வரும் டில்லி அதிகார வர்க்கம் தனது அடுத்த இலக்காக ‘ஈழம்’ என்ற சொற்பதம் தமிழகத்தில் கையாளப்படுவதை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ‘தமிழீழம் எனது நிறைவேறாத கனவு... அது நாளை நிறைவேறாது போனாலும் நாளை மறுதினமாவது நிறைவேறும்’ என்று கூறி இருபத்தாறு ஆண்டுகளாக புதைகுழியில் செத்துக்கிடந்த டெசோ அமைப்பைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிர்த்தெழ வைத்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அதே வேகத்தில் ‘அந்தர்’ பல்டி அடித்து ‘தமிழீழத்தை நிறுவுவது டெசோ அமைப்பின் நோக்கம் அல்ல’ என்று அறிவித்து ஒரு சில நாட்கள் கடப்பதற்குள் ‘ஈழம்’ என்ற சொற்பதத்திற்கு சாவுமணியடிக்கும் முயற்சியில்…
-
- 0 replies
- 621 views
-
-
பிரித்தானியாவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த நிலையில், பல்லின மக்களும் ஆர்வமாகக் கலந்து கொண்ட நிலையில் சிங்களத்தின் தமிழர்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து மனித நேயன் சிவந்தன் தனது உணவு மறுப்புப் போராட்டத்தை 22 நாட்களாக தொடர்ந்து முடித்துள்ளார். இப்போராட்டம் இன்று சர்வதேச மக்களை ஈர்த்துள்ளது. அவர்கள் இப்போராட்டத்தின் நோக்கம் பற்றியும் சிங்களத்தினால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் சிவந்தனின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அழித்திருந்தன. இந்தநிலையிலும் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு ஓய்ந்தபாடில்லை. ஐக்கிய நாடுகள் சபையினால் சிறீலங்க…
-
- 0 replies
- 444 views
-
-
டெசோ (TESO) மாநாடு இசோ (ESO) மாநாடாக மாறிவிட்டது. பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்கும் ‘தமிழ்’ அகற்றப்பட்டு இந்திய அரசின் அச்சுறுத்தலின் மத்தியிலும் ‘ஈழம்’ என்கிற சொல் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது. ‘ஈழம்’ என்பது இலங்கையைக் குறிக்கும் வார்த்தையென, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் புகழ், கனிமொழி விளக்கமளிக்கிறார். ‘டெசோ’ வில் இருக்கும் ‘தமிழீழம்’ என்பது எதனைக் குறிக்குமென்பதை, ஊடகவியலாளர்களும் கேட்கவில்லை, அவரும் விளக்கவில்லை. மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டாளிகளை சினங்கொள்ள வைக்கக் கூடாதென்பதில் கருணாநிதி குடும்பம் கவனமாகத்தான் இருந்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்தை இணைத்துக் கொள்ள வேண்டுமென, அதில் கலந்து கொண்ட…
-
- 0 replies
- 423 views
-
-
[size=3][/size] [size=3]நீங்கள் ஒரு வீட்டில் குடியிருக்கிறீர்கள். உங்களுக்கு வலதுபுறத்தில் ஒரு குடும்பம் குடியிருக்கிறது. இடதுபுறத்தில் ஒருவர் குடியிருக்கிறார்.[/size] [size=3]உங்கள் வலதுபுறத்தில் இருக்கும் குடும்பத்திற்கு நீண்ட நாட்களாக ரவுடிகளிடமிருந்து ஆபத்து உண்டு. திடீரென்று ஒரு நாள் ரவுடிகள் கையில் பயங்கர ஆயுதங்களோடு வந்து தாக்குகிறார்கள். அந்தக் குடும்பத்தில் உள்ள தாயை வண்புணர்ச்சிக்கு ஆளாக்குகிறார்கள். மகளையும் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவ்வீட்டின் இரு மகன்களில் ஒருவனின் கண்களை நோண்டிக் கொல்கிறார்கள். மற்றொரு மகனின் காலை வெட்டுகிறார்கள். இவை அனைத்தும் உங்கள் கண்முன்னே நடக்கிறது.[/size] [size=3]அப்போது உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. நீங்கள் நினை…
-
- 0 replies
- 964 views
-
-
ராஜபக்ஷே தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார்! டெசோவுக்கு வந்த சிங்களர் பேட்டி விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களராக இருந்தும், 'சிங்களர்கள் வந்தேறிகள்தான்... தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள்’ என்ற கருத்தை முன்வைப்பவர். சிங்கள இனவெறியாளர்கள், புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்தபோது 'பிரபாகரன் ஒரு மாவீரன்’ என்றவர். 2006 இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் சார்பாக ராஜபக்ஷேவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். இலங்கை நவ சமா சமாஜ் கட்சியின் தலைவர். இந்த அடையாளங்களை எல்லாம் மீறி இவருக்கு இப்போது புதிய அடையாளம், 'இலங்கை அரசின் மிரட்டலுக்கு அடிபணியாத ஒற்றை மனிதனாக, டெசோ மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்தவர்’…
-
- 0 replies
- 574 views
-
-
[size=4]இஸ்லாத்தை எப்போதும் தீவிரவாத சமயமொன்றாகக் காண்பிக்கும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல், இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்தான், அண்மையில் பெண்டகனின் வகுப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. இஸ்லாத்தை உலகிலிருந்து முற்றாக ஒழித்து, முஸ்லிம்களின் அடையாளச் சின்னங்களான புனித மக்கா, மதீனா பிரதேசங்களை அணுகுண்டு போட்டேனும் தகர்க்க வேண்டுமென அதன் அதிகாரிகள் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பாடமெடுத்துள்ளனர்.[/size] [size=4]இருந்தாலும், அமெரிக்காவின் மிஞ்சும் கழிவுப் பொருட்களில் சுகபோகம் அனுபவித்து வரும் அரபுலகமும் அரபு ஷேக்குகளும் அமெரிக்கா தொடர்பான தமது நிலைப்பாட்டையும் கருத்தையும் இதன் பிறகேனும் மாற்றிக் கொள்வார்கள் என ஒரு போதும் நாம் எண்ணி விட முடியாது.[/size] [size=…
-
- 1 reply
- 752 views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிட்டு சிறுவர் பூங்காவினை அழித்து நல்லூரில் தென்னிந்தியப் பாடகர் உன்னிக் கிருஸ்ணனின் இசைக் கச்சேரி இடம்பெறுவதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.[/size][/size] [size=3][size=4]இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மீறப்பட்ட மனித உரிமைகள் பற்றி தென்னிந்தியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் இடம்பெற்று இவ் வேளையில், ஈழத்தமிழர்களின் மனதை கலங்கப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு இடம்பெறுகின்றதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.[/size] [size=4]நல்லூர் மாநகர சபைக்கு உட்பட்ட கிட்டு சிறுவர் பூங்கவின் சிறுவர்களுக்குரிய விளையாட்டு உபகரணங்கள் அழிக்கப்பட்டு, இவருக்குரிய மேடை அம…
-
- 0 replies
- 680 views
-
-
[size=3][size=4][/size] [size=4]“உயிர்கள் மிக உன்னதமானது ஆனால் தமிழர்களின் உயிர்களுக்கு அல்ல”..என்ற கோட்பாட்டை ஐ.நாவும், இந்தியாவும் அமைதியாகவும், வெளிப்படையாகவும் எப்போதோ சொல்லியாச்சு![/size] [size=4]தமிழனாக பிறந்ததே தப்பா என்று இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே கேட்டுக்கொள்ளும் கட்டங்கள் தாண்டி இன்று மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.[/size] [size=4]என் சகோதரன் இறப்பு கண்டு இன்னுமொரு சகோதரன் குரல் கொடுப்பதும், ரௌத்திரம் கொள்வதும்கூட சிலருக்கு இங்கே கேலியாகவும், விளையாட்டாகவும் தெரிகின்றது. என்ன! பேயனுக்கு பெயர்தான் தமிழன் என்று நண்பன் சமுத்திரன் அடிக்கடி எழுதிக்கொள்ளும் வசனங்கள்தான் சாட்டையாக இப்போது எங்களை அடிக்கின்றது.[/size] [size=4]என் சகோதரன் குருதியில…
-
- 0 replies
- 985 views
-
-
“சுவர்களும் அதற்கு கதவுகளும் கொண்ட எனது வீட்டிற்கு நான் செல்ல வேண்டும், எனக்கான குடியிருப்பு என்று உலகின் எந்த ஒரு மூலையில் கிடைத்தாலும் அதைப் பற்றிய கவலை எனக்கில்லை, அது அட்லாண்டிக் கடலின் மீது இருந்தாலும் சரியே… நான் எனது வீட்டிற்குத் திரும்ப வேண்டும்…" --- சோவியத் குடியரசு உக்ரேனில் இருந்து விரட்டப்பட்ட பெண் அகதி ஒருவரின் வேண்டுதல் இதுதான். இயற்கை தன் மீது வரைந்து கொள்ள விரும்பாத, மனிதன் ஏற்படுத்திய வடுக்கள் எல்லைகள். மனிதனால் ஒரு பறவையைப் போல சுதந்திரமாக எல்லைகளைத் தாண்டி பறக்கமுடிவது இல்லை. எல்லைகள் தாண்டும் மனிதர்களை மனித நேயத்தோடு பார்ப்பதற்கு எந்த நாடும் தயாராக இல்லை. எல்லைகள் தாண்டினால் அது தீவிரவாதமாக மட்டும் தான் பார்க்கப்படுகிறது. பொற்கால ஆட்சி நடக்க…
-
- 0 replies
- 340 views
-
-
01. ஜெயலலிதா, உங்களை வீரப்பன் விவகாரத்தில் சம்மந்தப்படுத்தி தூக்கி ஜெயிலில் போட்டதாலும், உங்கள் மீதும் உங்கள் பத்திரிகை ஊழியர்கள் மீதும் பல பொய் வழக்குகளை போட்டதாலும் அன்றில் இருந்து இன்று வரை ஜெயலலிதா கெட்டது நல்லது எது செய்தாலும் அவரை எதிர்கிறீர்களே, பத்திரிகை தர்மத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சமே பகைமை பாராட்டாததுதான் என்பது பத்திரிகை உலகின் புலனாய்வு புலி என பாராட்டுப்பெற்ற உங்களுக்கு தெரியாதா..? அல்லது தெரிந்தும் உங்கள் சுய கோவத்துக்கு அடிமைப்பட்டு இருக்குறிர்களா..? 02. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சரமாரியாக உங்கள் மேல் வழக்குகள் பாய்ந்த போது, அப்போது எதிரிகட்சியாக இருந்த கருணாநிதி உங்களை அரவணைத்து காப்பாற்றினார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வர…
-
- 0 replies
- 952 views
-
-
[size=1][/size] [size=1][size=4]ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி விடுதலை….![/size][size=4]ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா நிரபராதி! அழகிரி மக்களவையில் ஆங்கிலத்தில் பேசி கைத்தட்டல் வாங்கினார்…! கட்சித்தலைவர் பதவியை என்றுமே விரும்பமாட்டேன் என்று ஸ்டாலின் அறிவிப்பு! கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கொடுத்தது காசிமேடு தி.மு.க. கிளைக்கழகம் என்று சி.பி.ஐ. கண்டுபிடிப்பு..! எழுந்து நடக்க ஆரம்பவித்துவிட்டதால்.. வீல் சேர் இனி கருணாநிதிக்கு தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவிப்பு! -இப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டிருக்கும் தி.மு.க. தலைவ[/size]ர் [size=4]கருணாநிதி நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். ’டெசோ’ மாநாடு வெற்றி! -இப்படி அறிக்கை விடுவதற்…
-
- 0 replies
- 705 views
-
-
உலகை ஆக்கிரமிக்கும் பல்தேசிய நிறுவனங்களின் கண்களை உறுத்தும் இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகளில் நேபாளம் கோடிட்டுக்காட்டத்தக்கது. இந்தியாவின் கொல்லைப்புறத்தில் அதன் அடிமை நாடாக நடத்தப்பட்ட நேபாளத்தில் கிராமப்புற வறிய கூலி விவசாயிகள் இந்த நூற்றாண்டின் நவீன அடிமைகளுக்கு உதாரணம். பல கிராமங்களில் அரச நிர்வாகம் இருந்ததில்லை. மருத்துவ வசதிகளை அந்த மக்கள் கண்டறிந்திருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தின் கடந்த நுற்றாண்டின் கோரம் எந்த மாற்றங்களும் இன்றி காணப்பட்டது. இந்தியவின் காலனி நாடு போன்றே மிக நீண்டகாலமாக அடிமைத்தனதுள் மூழ்கியிருந்தது நேபாளம். இந்தியா ஆக்கிரமிப்பிற்கு எதிரான அரசியல் மாவோயிஸ்டுக்களுக்கு முன்னதாக யாரும் முன்வைத்ததில்லை. இந்த நிலையில் மாவோயிசக் கட்சி…
-
- 0 replies
- 378 views
-
-
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை நடத்தப்பட வேண்டிய தேர்தலை அவசரத்துடன் கலைத்துவிட்டு நடத்த வேண்டிய கட்டாயத்துக்குள் இருக்கிறார் மகிந்தா. தனது சுய அரசியல் வேலைத்திட்டங்களுக்காக ஜனநாயக விழுமியங்களையும், மக்களின் விருப்புக்களையும் அசட்டை செய்துவிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி மாகாண சபைத் தேர்தலை நடத்துகிறது மகிந்தாவின் அரசு. தனது பீதியை அகற்ற நடத்தப்படவிருக்கும் இத்தேர்தலை எப்படியாவது வெற்றிகொள்ள வேண்டுமென்கிற முனைப்பில் கவனமாக இருக்கிறார் மகிந்தா. அம்பாறை (14), மட்டக்களப்பு (11), திருகோணமலை (10) ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதே கிழக்கு மாகாண சபையாகும். மொத்தம் 35 உறுப்பினர்கள் விழுக்காடு அடிப்படையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர். ஆகக் கூடுதலான வாக்குகளைப் …
-
- 1 reply
- 539 views
-
-
—————————————– சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு சுட்டெரிக்கும் மதியப் பொழுதில் சென்னையின் பிரதான மருத்துவமனையின் நெரிசலான வளாகத்தில் அற்புதம் அம்மாளைச் சந்திக்க நேர்ந்தது. மருத்துவமனையில் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான முகங்களில் எந்த விசேஷ கவனமும் கோரக்கூடிய முகம் அல்ல அற்புதம் அம்மாளுடையது. முதுமையும் துயரமும் அவரது தோலில் சமமாக வரிகளை நெய்திருந்தன. யாரிடமாவது துயரத்தை இறக்கிவைக்க முடியாதா என்கிற கவலை அவரிடம் எப்போதும் இருக்கும் போல. இறக்கிவைக்க இறக்கிவைக்க, சுமை குறைவது போலவும் தெரியவில்லை. அற்புதம் அம்மாளின் துயரத்துக்கு வயது 20. 1991இல் அது போல ஒரு ஜூன் மாத மதிய பொழுதில் தான் சும்மா விசாரணைக்கு என்று அவர் மகன் பேரறிவாளனை அழைத்துச் சென்றது காவல் துறை. விசார…
-
- 1 reply
- 471 views
-
-
-
- 4 replies
- 679 views
-
-
அண்மைக் காலங்களிற் தமிழில் எழுதும் சிலபத்தியாளர்களின் பத்திகளை வாசிக்கும் போது அவர்கள் எவ்வளவு கவனமாகவும் நுட்பபமாகவும் தொழிற்படுகிறார்கள் என்பது தெரியவருகிறது. இவர்கள் எதில்கவனமாக இருக்கிறார்கள் என்பதனையும் எதனை நுட்பமாக வாசிப்பவர்களின் மனதில் பதியவைக்க விரும்புகிறார்கள் என்பதையும் நாங்கள் கவனிக்கவேண்டும் இந்தப்பத்தியாளர்கள் இரு வகையானவர்கள் ஒரு வகையினர் விடுதலைப் புலிகளை நிரந்தரமாகவே கடுமையாக எதிர்த்து இலங்கை அரசுடன் இணைந்திருந்தவர்கள். மற்றவகையினர் விடுதலைப் புலிகளின் அழிவுடன் தீடீர் என ஒடுக்குமுறை அரசின் பக்கம் சாய்ந்து விட்டவர்கள். விடுதலைப் புலிகளை மிக வீராவேசமாக ஆதரித்த பலர் இன்றைக்குள்ள சிங்களப் பேரினவாத அரசின் ஆதரவாளர்களாக மாறியுள்ளமை பலருக்கு ஆச்சரியமாக இர…
-
- 0 replies
- 438 views
-
-
[size=3][/size] [size=3][size=5]அய்ய.. இதுக்குத்தான் டெசோ மாநாடா... சுத்த வேஸ்ட்.... இவ்ளோ கேவலமான தீர்மானத்த எங்க மிஸ் கூட போடமாட்டாங்க[/size][/size] [size=3][size=4]http://www.savukku.n...2-18-29-58.html[/size][/size]
-
- 1 reply
- 651 views
-
-
அம்பாறை வீரமுனை சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் வைத்து நடத்தப்பட்ட தமிழின படுகொலையின் 22ஆவது நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்பட்டது. சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட ஆத்மசாந்தி பூசை நடத்தப்பட்டதுடன் வீரமுனை சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றது. வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் அகதிகளாக இந்த ஆலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த போது சம்மாந்துறை பள்ளிவாசலில் யும்மா தொழுகையை நடத்திய முஸ்லீம்கள் அங்கிருந்து இந்த ஆலயத்திற்கு வந்து 55பொதுமக்களை வெட்டிப்படுகொலை செய்தனர். இவர்களுக்கு சிறிலங்கா படையினரும் துணையாக இருந்…
-
- 7 replies
- 719 views
-
-
“எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.” என தமிழீழத் தேசியத் தலைவர் மிகவும் உறுதியாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தளவிற்கு மக்களின் அர்ப்பணிப்புக்களையும், போராட்டங்களையும் தலைவர் மிகவும் உயர்வாக கருதியிருந்தார். அத்தகைய போராட்டங்களை அவர் கௌரவப்படுத்தியும் இருந்தார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் ஒரு வருடம் கடந்தோடியதன் பின்னரும் இனப்படுகொலையில் இருந்து உயிர் தப…
-
- 0 replies
- 592 views
-
-
[size=3][/size] [size=3][size=4]என் வாழ்வில் என்னை விட்டு விலகாத இரண்டு நினைவுகளில், இந்த வரிகளும் ஒன்று..[/size][/size] [size=3][size=4]ஏன் எதற்கென்று ஞாபகமில்லை. ஒருபொழுது, கருணாநிதி என்ற சுயநலவாதி ஏகாந்தம் கலைத்து மனக்குரங்கு கிளர்நது ஊர்வலம் போக புறப்பட்டோது, வஞ்சகம் கொப்பளிக்க கக்கிய கயமையான கவிதையின் ஒருவரி. இன்று கருணாநிதி என்ற கருங்கல், தன்னிச்சையாக, எனது வாழ்வையும் எனது மண்ணையும் மானத்தையும் விற்பனை பொருளாக்கி, கடை விரித்து தினம் ஒரு விளம்பரத்துடன் "டெசோ" என்று ஏலம் கூறி கூவி விற்கும்போது, அந்த கயமையான கவிதையின் வரிதான் என் ஞாபகத்திற்கு வந்துபோகிறது. உள்ளூர பெருத்த கயமை குடியிருக்க, மேல் பூச்சுடன் நல்…
-
- 0 replies
- 589 views
-
-
கிழக்கு மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியிடவுள்ள கட்சிகள் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அனைத்துக் கட்சிகளும் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன. ஆனால் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில் மகிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் மிகவும் முனைப்புக் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய பாத்திரத்தை வகிக்கப்போகின்றது என்பது தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை கிழக்குத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நீண்ட காலமாக ஆயுத ரீதியான போர…
-
- 0 replies
- 444 views
-
-
சவுக்கு விருது [size=3]சவுக்கில் யாருக்கும் விருது கொடுக்கும் வழக்கம் இருந்தது இல்லை. திடீரென்று விருது வழங்க வேண்டும் என்று முடிவெடுத்ததற்கு வலுவான காரணம் உண்டு. ஒரு இனத்தின் மேன்மையை உயர்த்துகிறார் ஒருவர். ஒரு இனத்துக்காக வாழ்வையே அர்ப்பணிக்கிறார் ஒருவர். தன் உயிர், மூச்சு, ஆவி, அந்த ஆவியில் வெந்த இட்லி ஆகிய அனைத்தையும் தன் இனத்துக்காகவே தியாகம் செய்கிறார் ஒருவர். தனது இனம் அழியும்போது, அந்த இனத்தைக் காப்பதற்காக பணம், பதவி, தன் குடும்பம், சொத்து, தன் செல்வாக்கு அத்தனையையும் தியாகம் செய்கிறார் என்றால் அவருக்கு விருது வழங்காமல் இருந்தால், தமிழ் கூறும் நல்லுலகம் நம்மைப…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4][/size] [size=4]இலங்கை ஒரு போர்க்குற்ற நாடு, மகிந்த ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளி என டெசோ மாநாடு சொல்லுமா என சீமான் கேட்டுள்ளார். நாம் தமிழர் இயக்க தலைவர் செந்தமிழ் செல்வன் சீமான் அவர்கள் NDTV Hindu தொலைக்காட்சி நடாத்தும் ''கேள்விக்கு என்ன பதில்'' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.[/size] [size=4]இது மட்டுமனறி இன்னும் பல கருத்துக்களோடு கேள்விகளையும் கேட்டுள்ளார்.[/size] http://youtu.be/S-6GLyvfDM8 [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 600 views
-
-
அண்மைக்காலமாக எமது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களையடுத்து ,இக்குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் இம்முறை மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த மனித உரிமை அமைப்போ அல்லது மனித உரிமை ஆர்வலர்களோ கருத்து கூற முன் வரவில்லை இதற்குக்காரணம் அதிகரித்துச்செல்லும் துஷ்பிரயோகங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளவர்களில் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், மதகுருமார்கள் ,பிரபல வர்த்தகர்கள் என்போர் அடங்குகின்றனர். அதிகாரத்தையும் பணத்தையும் கையில் வைத்திருப்போர் தமக்கு இஷ்டப்படி எந்த சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடலாம் என…
-
- 0 replies
- 993 views
-