நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
இன்று இரவு 20 . 55 க்கு பிரெஞ்சு தொலைக்காட்சியில் (Canal +) தீபன் (Dheepan) காண்பிக்கப்பட இருக்கிறது.இங்கே பார்த்தால் புரியும். Soldat Tamoul (தமிழ் இராணுவம் என்று தான் புலிகளை அறிமுகம் செய்கிறார்கள். நமக்குத்தான்.......????
-
- 0 replies
- 200 views
-
-
பொறுப்பை உணர்ந்து செயற்படுங்கள் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய நல்லாட்சி அரசாங்கத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ளதாக வெளிக்காட்டப்படும் நெருக்கடி நிலைமை காரணமாக நீதி வழங்கும் பொறுப்புக் கூறும் விசாரணைப் பொறிமுறையில் தாமதங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. குறிப்பாக யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும…
-
- 0 replies
- 267 views
-
-
அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளியிட்ட புத்தகத்தில் விடையின்றி தொடரும் பல வினாக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு விடைதான் என்ன? அவர் கூறியிருப்பது சரியா? போன்ற வினாக்களுக்கு இந்த வாரம் லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா விளக்கியுள்ளார். மேலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு மாற்றம் பெறும்? கமால் குணரட்னத்தின் புத்தகத்தில் பிரபாகரன் மற்றும் பாலச்சந்திரன் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றியும் கே.வி.தவராசா தெளிவுபடுத்தியுள்ளார். http://www.tamilwin.com/interviews/01/121310?ref=home
-
- 1 reply
- 326 views
-
-
விழித்தெழும் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் போன்றவைகளில் கவனம் செலுத்தப்படுகின்றன. இவ்விடயங்கள் குறித்து நேர் மற்றும் எதிர்மறைக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆயினும், முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறை, முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து போதிய கரிசனை காட்டாதிருக்கின்றார்கள். அரசாங்கம் முஸ்லிம்களுக்குரிய அரசியல் தீர்வினையும், பாராளுமன்ற உறுப்பினர் தொகையை பாதுகாப்பதற்கும் , …
-
- 0 replies
- 371 views
-
-
இந்துப் பயங்கரவாத அமைப்பான சிவசேனாவின் கிளைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும்! 10/15/2016 இனியொரு... ஈழத் தமிழர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகம் பிற்போக்குச் சிந்தனை கொண்ட பின் தங்கிய சமூகமாகவே தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி வந்துள்ளது. பொதுவாக உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் போராடும் சக்திகள் மத்தியிலும் நம்பிக்கைக்குரிய சமூகமாக 70 களின் முன்னர் அறியப்பட்டிருந்த யாழ்ப்பாண சமூகத்தின் தேசியப் பிரச்சனையைப் தமிழரசுக் கட்சி போன்ற பின் தங்கிய சிந்தனை கொண்ட தலைமைகள் கையாள ஆரம்பித்த நாளிலிருந்து அது பின்னடைவையே சந்தித்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது உலகின் மிக முக்கிய அவலமாகக் கருதப்பட்டது. அவ்வேளையில் கூட சர்வதேச ஜனநாயக முற…
-
- 2 replies
- 312 views
-
-
செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி. அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக் கேள்வி பதில் அளிக்கவேண்டிய கேள்வி. எங்கள் தீவின் தசாப்தகால வன்முறைகளின் போது விடுதலைப்புலிகள், அரசாங்கம், ஆயுதகுழுக்கள் உட்பட மோதலில் ஈடுபட்ட பல தரப்புகள் அட்டுழியங்களில் ஈடுபட்டுள்ளன. இந்த அட்டுழியங்களில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினரின் பரிமாணங்கள் குறித்து மதிப்பிடுவதற்கு நான் முயலமாட்டேன். அவைகள் ஒவ்வொரு கொடுமையிலிருந்து மற்றைய கொடுமைக்கு இடையில் வேறுபட்டவையாக காணப்படுகின்றன. எனினும், 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதன்மை கு…
-
- 0 replies
- 269 views
-
-
நமது மொழியுரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் நாட்டிலே நடைமுறைப்படுத்துவதற்காகக் காலத்திற்கு காலம் பல சட்டங்கள் ஆக்கப்படுகின்றன. அவற்றில் நடைமுறைப்படுத்தப்படுபவை சிலவாகவுள்ள நிலையில் கணிசமானவை கண்டுகொள்ளப்படாதவையாக கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று அண்மையில ஜனாதிபதி கவலை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. சட்டங்கள் ஆக்கப்படுவது நாட்டின் நலன்கருதி நாட்டு மக்களின் தேவைக்காக என்பது புரிந்து கொள்ளாமையினாலேயே இந்நிலையேற்பட்டுள்ளது. இவற்றில் மிக முக்கிய ஒன்றாக இருப்பது மொழி தொடர்பான சட்டங்களாகும். நமது நாட்டின் தேசிய பிரச்சினை. அதாவது இனப்பிரச்சினைக்கு அடிகோலி…
-
- 0 replies
- 691 views
-
-
சமகால அரசியலில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமளவுக்கு இன்று அவரின் அரசியல் பயணம் சென்றுகொண்டிருக்கின்றது.தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரே அண்மையில் தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே. இன்று அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிக்கு பின்னர் அதிகளவு பேசப்படும் ஒருவராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகின்றார். எழுக தமிழ் பேரணியின் போது அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரை ஒரு இனவாதியாக பலரும் விமர்சித்திருந்தனர். …
-
- 0 replies
- 251 views
-
-
அழைப்பிதழ் Next Productions நிறுவனத்தின் அறிமுக விழாவிற்கும், இந்த நிறுவனத்தின் இரண்டு புதிய திரைப்படங்களான ‘Broken Dreams’ மற்றும் ‘Kandam’ ஆகியவற்றின் Trailer வெளியீட்டு விழாவிற்கும் உங்களை அன்புடன் அழைக்கின்றோம். Date: Friday, October 14, 2016 ... Time: 5.00 p.m. Venue: York Cinemas, 115 York Blvd, Richmond Hill, ON, L4B 3B4 Broken Dreams திரைப்படம், மனித மனோநிலையின் ஆழமான பிளவுகள் தொடர்பாக ஆராயும் இந்தத் திரைப்படம், கதாநாயகனின் ஆழ்மனதில் பொதிந்துள்ள இருண்ட பக்கங்களை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஜேர்மன் - ஆங்கில மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள சர்வதேச திரைப்படமான Broken Dreams, ஜேர்மனியின் பேர்ளின் நகரில் படமாக்கப்பட்டதுடன், …
-
- 0 replies
- 389 views
-
-
மரபுசார் நிலைக்குத் திரும்பும் இலங்கை கடற்படை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக் கடற்படை தன்னை உருமாற்றம் செய்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது. கடற்புலிகளின் படகுகளைச் சமாளிப்பதற்காக அதிவேகத் தாக்குதல் படகுகளையும், சிறிய சண்டைப் படகுகளையுமே பிரதான பலமாகக் கொண்டிருந்த இலங்கைக் கடற்படை, இப்போது பாரிய கப்பல்களைக் கொண்ட கடற்படையாக மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் அமெரிக்காவில் நடந்த கடற்படை கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர குணவர்தன, அமெரிக்க கடற்படை அதிகாரிகள், ப…
-
- 1 reply
- 309 views
-
-
இலங்கைக்கு கால் கட்டு இந்தியாவின் புது முயற்சி இலங்கை மீதான கவனத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் போது, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது இந்தியா. இதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, புதுடில்லியில் அது பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் அந்தளவுக்கு பரபரப்பு மிக்க ஒன்றாக எதிர்பார்க்கப்படவில்லை. ஒருவேளை, இந்தியாவுடன் இணைந்து சார்க் மாநாட்டை இப்போ…
-
- 0 replies
- 503 views
-
-
சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பரிசுகள் தருகிற சுவையை விட அது யாருக்குக் கிடைக்கும் என எதிர்வு கூர்வதில் சுவை அதிகம். பரிசுகள் ஏன் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி ஒருபுறம் பதில்களைத் தேடியபடி இருக்கையில், மறுபுறம் அது யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதைத் பொறுத்து பரிசின் நோக்கமும் போக்கும் விளங்கப்படுகின்றன; அங்கீகாரத்துக்கான ஆவல் பரிசுகளின் பெறுமதியை உயர்த்துகின்றன. இது உள்ளுரில் வழங்கப்படும் பரிசுகள் தொட்டு உலகளாவிய பரிசுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். இதனாலேயே பரிசுகள் யாருக்குக் கிடைத்தன என்பதை விட யாருக்குக் கிடைக்கும் என்பதை அறியும் ஆவல் மிகுகிறது. நாளை 2016 ஆம் ஆண்டின் சமாதான நொபெல் பரிசு அற…
-
- 2 replies
- 492 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் மீது சிங்கள பேரினவாதம் கடும் விசனத்தில் இருக்கிறது. இன்னொரு புறத்தில் தமிழ் விட்டுக் கொடுப்பு அரசியல் தலைமை கொதிப்பில் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் கொழும்பில் இருந்து வரும் பொழுது இருந்த விக்னேஸ்வரன் இப்பொழுது இல்லை என்பது தான் கசப்பான உண்மை. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்றது சர்வதேசம், நடத்தினால் தோற்பேன் என்பது மகிந்தவிற்கு தெரிந்த விடயம். வடக்கிற்கு யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பது கூட்டமைப்பிற்கான சிக்கல். இந்த நிலையில் தான் பலராலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இப்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தனின் தெரிவாக இருந்தது முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தான். …
-
- 0 replies
- 233 views
-
-
சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்! கம்பவாரிதி தனது வலைத்தளத்தில் எழுதிப் பிரசுரித்த கட்டுரை. எமது தளத்தில் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. உயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின், தாங்கு தூண்கள் ஒவ்வொன்றாய் அசைந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர், கூட்டமைப்பின் எதிர்ப்பை அலட்சியம் செய்து நடக்கத்தொடங்கியிருக்கின்றனர். அதுபற்றி எந்தக் கவலையுமில்லாமல், எவர் எப்படிப் போனால் எனக்கெ…
-
- 0 replies
- 640 views
-
-
மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டொனமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரை என்ற நூல் பற்றிய ஆய்வரங்கம் கடந்த 01.10.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் நிகழ்த்திய ஆய்வுரை பின்வருமாறு, இலங்கையில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் குறித்தும் இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வு காணப்படும் என்ற முழக்கங்கள் இலங்கை அரசியலில் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வேளையில் இலங்கையில் புதிய அரசியல் யாப்புக் குறித்து குறிப்பாக, மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய நூல் குறித்த ஆய்வரங்கில் ஒன்றுகூடியுள்ளோம். நண்பர் மு. திருந…
-
- 0 replies
- 212 views
-
-
எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பான தெற்கின் அதிருப்தி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியானது தென்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எழுக தமிழ் தொடர்பான தமது எச்சரிக்கைகளையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுக தமிழ் பேரணியானது தென்பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது. எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து கருத்து தெரிவித்…
-
- 0 replies
- 401 views
-
-
தமிழீழம் இது வெறும் வார்த்தையல்ல. தமிழீழம் என்பது ஒரு இனத்தின் வரலாறு, ஒரு மொழியின் வரலாறு, தமிழ் இன கலாச்சாரத்தின் மொத்த உருவம், வீரத்தின் அடையாளம், வெற்றியின் குறியீடு என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஏனெனில் மேற்கூறிய அனைத்துக்குமான ஒரு உருவமாக தமிழீழம் காணப்பட்டது. நீண்டகால வரலாற்றை கொண்ட தமிழீழத்தில் இனவிடுதலையை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக ஆயுத போராட்டம் இடம்பெற்றது. அது வெறும் ஆயுதப் போராட்டமல்ல. புதையுண்டு போன தமிழினத்தின் வாழ்க்கையை, நிலத்தை, உரிமையை, மீட்பதற்கான போராட்டம். இந்த கொடிய ஆயுத போராட்டத்தில் ஏற்பட்ட அத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழர்கள் சிறந்த ஒரு வாழ்க்கை கட்டமைப்புடனேயே வாழ்ந்தார்கள். 2009ஆம் ஆண்டு இட…
-
- 0 replies
- 300 views
-
-
அரசியல் களம் தொடர்ந்து சூடிபிடித்த வண்ணமே காணப்படுகின்றது. அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை எதிர்வுகூறுவது கடினமானதாகவே காணப்படுகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்தே நாட்டின் அரசியல் களமானது பரபரப்பாகவே காணப்படுகின்றது. அதாவது அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு, வட மத்திய சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய வளர்ச்சி மற்றும் மஹிந்த அணியினரின் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடவடிக்கைக…
-
- 0 replies
- 472 views
-
-
சமஷ்டி தீர்வுத் திட்டமும் இனவாதிகளின் கூச்சலும் புதிய அரசியலமைப்பில் சமஷ்டித் தீர்வு உள்ளடக்கப்பட்டுவிட்டது என்ற புதிய கண்டுபிடிப்பை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எடுத்துக்கூறியிருக்கின்றார். கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தின் மூலம் பெறப்பட முடியாத சமஷ்டியை தற்போது புதிய அரசியலமைப்பினூடாக பெற முயற்சிக்கின்றார்கள். தமிழர்களுக்கான பிராந்திய சமஷ்டி ஆட்சியை விரும்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் இணைந்து புதிய…
-
- 0 replies
- 354 views
-
-
மக்கள் தேடிவிடுவர் முஹம்மது தம்பி மரைக்கார் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இப்போதிருக்கும் ஜனரஞ்சகத் தன்மையுடன் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருக்கவில்லை. சிங்களப் பெருந்தேசிய அரசியல் கட்சிகளுக்கு சேவகம் செய்கின்ற ஒரு சமூகமாகவே முப்பது வருடங்களுக்கு முன்னர்வரை, முஸ்லிம்கள் இருந்தனர். தமிழர் சமூகம் அரசியல் விழிப்புணர்வு பெற்று, நெடுங்காலத்தின் பின்னர்தான் - முஸ்லிம்கள் தமக்கென்று ஒரு தனியான அரசியல் கட்சி பற்றி யோசிக்கலாயினர். அப்படியொரு யோசனையின் பலனாகத்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற ஜனரஞ்சக அரசியல் கட்சி முஸ்லிம்களுக்குக் கிடைத்தது. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காகவும், அவர்களின் சமூகப்…
-
- 0 replies
- 369 views
-
-
அரசாங்கத்திற்கும்-இராணுவத்திற்குமிடையே பிளவை ஏற்படுத்தும் கோத்தாவின் திட்டம் புஷ்வாணம் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு தற்போதைய அதிபரோ அல்லது பிரதமரோ அல்லது இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அமைச்சர்களோ எவரும் அழைக்கப்படவில்லை. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் மட்டுமே புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழைப் பெற்றிருந்தனர். மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தான் எழுதிய நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலை முதன்முதலில்…
-
- 0 replies
- 254 views
-
-
ஜனாதிபதி வேட்பாளராக வெளியேறியபோது என்னிடம் 1 ரூபா காசு கூட இருக்கவில்லை பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க எழுதிய "நான் கண்ட ஜனவரி 08" நூல் வெளியீட்டு விழாவில் உங்களுடன் இணைந்துகொள்ளக் கிடைத்தமைபற்றி மகிழ்ச்சியடைகிறேன். ஜனவரி 08ஆம் திகதியை அவர் பார்த்த விதத்தினை மலித் எழுதியுள்ளார். இங்குள்ள நீங்கள் ஜனவரி 08ஆம் திகதியை ஒவ்வொரு கோணத்தில் பார்த்திருப்பீர்கள். சில தினங்களுக்கு முன்னர் இந்த நூல் எனக்கு கிடைக்கப்பெற்றது. பின்னர் நான் அடிக்கடி நூலின் உள்ளடக்கத்தை வாசித்தேன். எமது நாட்டில் அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் உள்ளனர். அவர்களுள் ஜனவரி 08ஆம் த…
-
- 0 replies
- 443 views
-
-
கோட்பாட்டு ரீதியில் முரண்படும் தளபதிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் உருவாக்கம் அல்லது வடக்கில் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கான சாத்தியம் தொடர்பாக, இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இரண்டு மூத்த அதிகாரிகளின் கருத்துக்கள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன. ஒருவர், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன; இலங்கை இராணுவத்தின் அதிசிறப்பு படைப்பிரிவு எனக் கருதப்படும், 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். இறுதிக்கட்டப் போரில் அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி, இராணுவத்தின் பல்வேறு பதவிகளை வகித்து, கடந்த செப்டெம்பர் ஐந்தாம் திகதி தான் ஓய்வு பெற்றார். “நந்திக்கடலுக்கான பாதை” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் 780 பக்…
-
- 0 replies
- 322 views
-
-
செப்டெம்பர் 16 -மொஹமட பாதுஷா இலங்கை முஸ்லிம் சமூகம், 16 வருடங்களுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில் தமது கனவை இழந்துபோனது. தென்கிழக்கே ஒரு கிராமத்தில் உதித்த, ஆயிரம் விளக்குகளை விட பிரகாசமான ஓர் ஆதவன், மத்திய மலைநாட்டின் ஊரகந்த மலைத்தொடரில் அஸ்தமனமாகிப் போனது. அமெரிக்காவில் செப்டெம்பர் 11 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் இரட்டைக் கோபுரங்கள் நொருங்கி விழுந்ததைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணச் செய்தி கேட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நொருங்கிச் சுக்குநூறாகிப் போயினர். அன்று நொருங்கி விழுந்த சமூகம்தான் இன்று வரை சரியாக எழுந்திருக்கவேயில்லை. 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம்…
-
- 1 reply
- 957 views
-
-
அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்? தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசு யாருக்கானது என்ற வினா இடையிடையே எழும். காலங்காலமாக அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்ந்து மாறிவந்துள்ளது. அரசின் பிரதான வகிபாகம், இருந்துவரும் சமூக அமைப்பைப் பாதுகாப்பதும் சமூக உறுதியை நிச்சயப்படுத்துவதுமாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கம் வெளிப்படையாகவே மக்கள் விரோதமான, சமூக நலன்களை இல்லாதொழித்துப் பல்தேசியக் கம்பெனிகளுக்குச் சேவகம் புரிவதாக வளர்ந்துள்ளது. இம் மாற்றம் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உலக அலுவல்களைத் தீர்மானிப்பதன் விளைவாக உருவானதாகும். கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையகம், உலகின் மிகப்பெரிய பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றான அப்பிள் நிறுவனம் அயர்லாந்து அ…
-
- 0 replies
- 301 views
-