Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1.  'புலிக்கொடி'யை முன்னிறுத்திய சண்டைகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், 'புலிக்கொடி' ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் அந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளியும், பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்கிடையில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், சண்டை சச்சரவுக் காட்சிகளை அரங்கேற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் கூர்மையான ஆதாரமாகவும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைக் கோரும் ஓர்மத்தை ஒருங்கிணைப்பதற்கான புள்ளியாகவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் …

  2. குண்டு வைத்தாரா கோட்டா? புலிகளுக்கு எதிரான அரச படைகளின் போரில், அப்படைகள் வெற்றி பெறுவதில் முதன்மையானோர் இருவர் தான், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவும். அவர்களிடையே, போர்க் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகக் கீழ்த்தரமானதொரு சொற்போரொன்று, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்புக்குப் பதிலாக, பொலிஸ் அதிரடிப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக, மஹிந்தவின் ஆதரவாளர்கள், அண்மையில், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன…

  3. முஸ்லிம் கூட்டமைப்பு உருவானால் முஸ்லிம் கட்சிகள் அழிந்திடுமா? மொஹமட் பாதுஷா முஸ்லிம் கட்சிகளும் அம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்க வேண்டுமென்ற குரல்கள், தற்போது அழுத்தமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சமகாலத்தில், அவ்வாறானதோர் அமைப்பாக்கம் தேவையில்லை, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாகி விட்டால், முஸ்லிம்களின் தனித்துவக் கட்சி அடையாளங்கள் அப்படியே அழிவடைந்து, தூர்ந்து போய்விடும் என்று விதண்டாவாதமும் முன்வைக்கப்படுகின்றது. இலங்கையில், முஸ்லிம்களின் அரசியல், பல பரிணாமங்களைக் கடந்து வந்திருக்கின்றது. பெருந்தேசியக் கட்சிகளின் ஊடான அரசியல் …

  4. சங்கரி கூட்டிய புதிய கூட்டணி ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்கிற புதிய அரசியல் கூட்டணியொன்று, கடந்த வாரம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உதிரிகளின் கூட்டணி என்கிற எதிர்வினையை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டுள்ள இந்தப் புதிய கூட்டணி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றதா அல்லது மற்றொரு தேர்தல் கூட்டணியா, என்கிற விடயங்கள் பற்றியே இந்தப் பத்தி கவனம் செலுத்த விளைகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் நீண்டநாள் காத்திருப்பின் பின்னர், ஒருவாறு புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த காலங்களைத் தவிர, மற்றை…

  5.  தமிழகத் தேர்தலும் இலங்கை தமிழரும் கருணாகரன் 'தமிழ்நாட்டுத் தேர்தல் களம் எப்பிடியிருக்கு? யார் அங்கே ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள்? யாருக்குச் சான்ஸ் இருக்கு? எந்தத்தரப்பினர் அதிகாரத்துக்கு வந்தால் நல்லது? அதாவது யார் பதவிக்கு வந்தால் ஈழத்தமிழருக்கு வாய்ப்பாக இருக்கும்?....' என்ற விதமாக பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் ஏராளமாக எழுதப்படுகின்றன. தினமும் ஆய்வுகள் வேறு நடந்து கொண்டிருக்கின்றன. எந்தத் தரப்பு அதிகாரத்தைக் கைப்பற்றும் என்ற ஊகங்கள், கருத்துக் கணிப்புகள் கூட நடக்கின்றன. பலர் இதில் முழுநேரக் கவனத்தை வேறு கொண்டிருக்க…

  6. இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல: நிலாந்தன்:- 08 மே 2016 மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனுஷ;டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமையவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை காவல்துறை தடை செய்தது. அது பற்றி ஏனைய கட்சிகள் வாயைத் திறக்கவில்லை. இம்முறையும் அரசாங்கம் கடந்த ஆண்டைப் போலவே நிலைமைகளைக் கையாளும் என்று கருத இடமுண்டு. அண்மைக் காலங்களாக இடம்பெற்ற…

  7. ஊடகத் தணிக்கைக்கான முதற்படியா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலக ஊடக சுதந்திர தினம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, உலகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. உலகமெங்கும், ஊடகவியலுக்கான சுதந்திரம் பாதிப்படைந்துள்ள சூழ்நிலையில், இந்தத் தினம் அனுஷ்டிக்கப்பட்டமை முக்கியமானது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும், உலக பத்திரிகைச் சுதந்திரச் சுட்டியின் 2016ஆம் ஆண்டுக்கான வெளியீடு, அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதில், 2015ஆம் ஆண்டு வெளியான அறிக்கையுடன் ஒப்பிடும் போது, இம்முறை உலகில், செய்திகளுக்கான சுதந்திரம் மிகவும் குறைவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேபோல், ஊடகத் தொழிலுக்காகப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவிய…

  8. இவ்வாறான மே தினக் கூட்டங்கள் தேவை தானா? இம்முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி, மஹிந்த என்ற இரு குழுக்களின் மே தினத்துக்கான ஆர்வத்தைப் பார்த்தால், அது முதலாவது சோசலிச நாடான சோவியத் ஒன்றியத்தின் முதலாவது ஜனாதிபதியும் சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வி.ஐ.லெனினுக்கு, மே தினத்தைப் பற்றி இருந்த ஆர்வத்தை விடவும் அதிகமோ என்று எண்ணத் தோன்றியது. ஆனால், அவர்களது அந்த ஆர்வத்தின் நோக்கம், இலங்கையில் உழைக்கும் மக்களுக்காக உரிமைகளையும் சலுகைகளையும் வென்றெடுக்க வேண்டும் என்பதோ அல்லது அவற்றைப் பெற்றுக்கொடுக்கப் போராட வேண்டும் என்பதோ அல்ல. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, நாட்டில் பலமுறை ஆட்சிபீடம் ஏறிய கட்சியா…

  9. வட மாகாண சபையின் யோசனைகளும் எதிர்வினைகளும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில், வட மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனைகளுக்கு எதிராக பல்வேறு தரப்புக்களும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழ் மாநிலமொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் அந்த மாநிலத்தினை முன்னிறுத்தி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களுமே எதிர்வினைகளுக்குக் காரணமாகியிருக்கின்றன. அரசியல் அதிகாரத்தினை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்கள், ஒவ்வொரு கால கட்டத்திலும் தன்னுடைய பிரதான இலக்கு பற்றிய எண்ணப்பாடுகளில் சில மாறுதல்களை அல்லது விட்டுக் கொடுத்தல்களைச் செய்து வ…

  10. சுட்டெரிக்கும் வெயிலும் நம் உணவு தட்டும்! (சூழலியல் கேட்டையும், தனி மனித பொறுப்புணர்வையும் அலசும் மினி தொடரின் இரண்டாவது பகுதி இது) சுட்டெரிக்கும் வெயிலுக்கும், பெரும் மழைக்கும், நம் உணவு தட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா...? ஆம். மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அனைத்து சூழலியல் கேடுகளும் நம் உணவு தட்டிலிருந்தே துவங்கி விடுகிறது. ‘உணவெனப்படுவது நிலத்தோடு நீரே...’ என்கிறது சங்க இலக்கியம். ஆனால், நாம் ‘உணவெனப்படுவது நஞ்சும் அமிலமும்’ என வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உணவை தனி மனித விஷயம் என புறந்தள்ளி விட முடியாது. உணவுக்கும் சூழலியலுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. உணவு சிதைகிறது என்றால் சூழலியல் சிதைகிறது எ…

  11. புதிய வழியில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம் வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம், அரசியல் அரங்கில் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உருக்கினால் தயாரிக்கப்பட்ட இந்த வீடுகள், வடக்கிலுள்ள காலநிலைக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்றதல்ல என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபையின் வாதமாக இருக்கிறது. அதேவேளை, இந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றி முடிப்பது என்பதில், புனர்வாழ்வு, மீள்குயேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தீவிர ஆர்வத்தைக் காட்டி வருகிறார். இந்த விடயத்தில், இரண்டு தரப்புகளுக்கும் இடையே அறிக்கைப் போர்களும் கடிதப் போர்களும் நடக்கின்றன. ஊடகங்க…

  12. நகோனோ - கரபாக்: மௌனமாக ஒரு யுத்தம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலகின் பல மூலைகளிலும் நடப்பவை நம் காதுகளை எட்டுவதில்லை. எட்டுவனவும் முழுமையான செய்திகளல்ல. அவற்றிற் பாதி உண்மையுமல்ல. தெரிந்தே திரித்த செய்திகள் எங்களை அடைகின்றன. உலகின் செய்தி வழங்குனர்கள் தரும் செய்திகளை விடத் தராமல் விடும் செய்திகள் பல சமயங்களில் முக்கியமானவை. செய்திகளின் முக்கியம், அவை யாருக்கானவை என்ற அடிப்படையிலேயே முடிவாகின்றன.சில நாட்களுக்கு முன்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மூண்ட யுத்தம், நெடுங்காலமாகத் தொடரும் முரண்பாட்டைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. இரு நாடுகளும் போரிடுதற்குக் காரணமாக அமைந்தது, நகோனோ-கரபாக் என்ற நில…

  13. Started by Nathamuni,

    புறாக்களுக்கு உணவு கொடுக்காதீர்கள், மிருகங்களுக்கு உணவு அளிக்காதீர்கள் என்று பல இடங்களில் எழுதி இருப்பதைப் பார்ப்போம். குறிப்பாக மிருகக் காட்சி சாலைகள், வனவிலங்குகள் நிறைந்த இடங்களில். உணவு அளித்தால், மனிதர் அவ்விலங்குகளைப் பார்பதற்க்கு பதிலாக, அவ்விலங்குகள், பசிக்கும் போதெலாம், உணவு கிடைக்குமா என மனிதரை டிமான்ட் பண்ணும், அதனால் தொந்தரவு உண்டாகும் என்பதே அந்த எச்சரிக்கைக்கு காரணம் . இருந்தாலும் அங்கு, இங்கு பார்த்து விட்டு எதையாவது கொடுப்பது எமது வாடிக்கை. இலங்கை யால சரணாலயத்தில், இந்த அறிவிப்புகளை கண்டு கொள்ளாமல், உணவு கொடுத்துப் பழக்கி, பெரும் பசி கொண்ட யானை ஒன்று, உணவு கேட்கப் போய், ஒரு வாகனத்தில் இருந்த வெளி நாட்டு உல்லாசப் பயணிகளை கிலி கொண்டோட வைத்து வ…

    • 0 replies
    • 377 views
  14. சம்பந்தனின் அரசியலும் திமிரும் ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும் அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், வடக்கில் தொடர்ச்சியாக சில நாட்கள் தங்கியிருந்து மக்கள் சந்திப்புக்களையும் அரசியல் கலந்துரையாடல்களையும் கடந்த வாரமே அவர் நிகழ்த்தினார். இதன்போது, சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக, விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் இருவர், இரா.சம்பந்தனைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு 5 நிமிட…

  15. பிரிவு எதற்கு? அகிலன் கதிர்காமன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கிறார். சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஓர் எதிர்பார்ப்பிருந்தது. ஆனாலும் இப்போதுதான் தன்னுடைய விலகலை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார் சந்திரகுமார். ஆனால், சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, இதுவரையில் ஈ.பி.டி.பி வட்டாரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஈ.பி.டி.பியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் இதைப்பற்றிய செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை. ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சந்திரகுமாருக்குமிடையில் சில காலமாக…

  16. கூர்வாளின் நிழலில்-தமிழினியின் நூல் குறித்த சர்ச்சை.

  17. ‘வாழ்க்கையில் துயரங்களை மட்டுமே கடந்துவந்ததால, இந்த வெற்றியும் சந்தோஷமும் எனக்கு வரமா இருக்கு. கண்கள் மின்னுகின்றன பரிதாவுக்கு. விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம்பிடித்த வெற்றியாளர்! அப்பா, அம்மா எனக்கு வெச்ச பேர், பிரேமலதா. சிதம்பரத்துல மிடில் கிளாஸ் ஃபேமிலி. மியூசிக் கிளாஸ் எல்லாம் போனதில்லைன்னாலும், கேள்வி ஞானத்தால ஸ்கூல்ல படிக்கும்போதே நல்லா பாடுவேன். மியூசிக் தெரிஞ்ச என் கிளாஸ் டீச்சர் கொஞ்சம் இசை கத்துக்கொடுத்தாங்க. எங்கப்பா முயற்சியால சில கச்சேரிகளில் பாடும் வாய்ப்பும் கிடைச்சது. ப்ளஸ் டூ முடிச்சதும் அண்ணாமலை பல்கலைகழகத்துல அஞ்சு வருஷ டிப்ளோமா இன் மியூசிக் கோர்ஸில் சேர்ந்தேன். அங்க என்கூடப் படிச்ச முகமது இக்பாலும் நானும் காதலிச்…

  18. மீண்டுமொரு புலிப்பூச்சாண்டி ப.தெய்வீகன் இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள் மற்றும் ஊடகங்களுக்கு, யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி கடந்த வாரம் சரளமான செய்திக்களமாக மாறியிருக்கிறது. அங்கு படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது மீட்கப்பட்ட கிளைமோர் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பான செய்தி, அரசியல்வாதிகள்வரை பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தையும் செய்தியையும் ஒவ்வொரு தரப்பினரும் தமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொண்டாலும், உண்மை நிலைவரத்தை உரைகல்லாக வைத்து, இதன் பின்னணியை ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கம். போர் முடிந்து ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில், இலங்கைப் படையினர் நாடு…

  19. http://www.youtube.com/watch?v=B0M22bCu15A இந்த காணொளியை நீங்கள் ஏற்கனவே பார்திருப்பீர்கள். என்றாலும் இந்த கால மாற்றத்தின் பின்னர், இன்றும் கூட புலிகளின் மேல் வைக்கப்படும் சில குற்றச்சாட்டுக்கள், புத்தக வெளியீடுகளில் குறிப்பிடும் சில விடயங்கள் எந்த அளவுக்கு ஞாயமானது, உண்மையானது என்ற கேள்விக் குறிகளும் எனக்குள் எழுகின்றது. நல்லதோர் வீணை செய்தோம் ...அதை நலம் கெட புழுதியில் எறிந்துவிட்டோம்.. சொல்லடி சிவசக்தி! எங்கள் சுடர்மிகும் அறிவினை அழித்து விட்டாய்.

    • 0 replies
    • 611 views
  20. கடந்த மாதம், 29-ம் திகதி எகிப்து நாட்டை சேர்ந்த “எகிப்து ஏர்” என்ற பயணிகள் விமானம், அதே நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு, விமானக் குழுவினர் உள்பட ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களுடன் புறப்பட்டபோது மர்ம நபர் கடத்தியது நினைவிருக்கலாம். பிறகு சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டு பயணிகள் விடுவிக்கப்பட்டனர். விமானத்தைக் கடத்திய சயிஃப் அல்தின் முஸ்தஃபா, சைப்ரஸ் நாட்டில் தஞ்சமடைய கடத்தியதாகவும், சைப்ரஸில் உள்ள தன் முன்னாள் மனைவியைச் சந்திக்க வேண்டி கடத்தியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த அப்து அல்லாஹ் இ ஆஸ்மாவி என்ற 31 வயதுடைய அறுவை சிகிச்சை நிபுணர், அந்த விமானப் பயண அனுபவத்தை…

  21. ஒரு கூர்வாளின் நிழலில் தமிழினி முன்வைக்கும் அரசியலும் படிப்பினையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) எழுதிய 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்கிற நூல், தமிழ்த் தரப்பின் ஒரு சில பகுதியினர் மத்தியிலும் தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் சற்று கவனம் பெற்றிருக்கின்றது. மூன்று தசாப்த காலம் நீண்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களில், முதன்மைத் தரப்பாக கோலொச்சிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த தமிழினி, அந்தப் போராட்டத்தின் சில பக்கங்கள் தொடர்பில் தன்னுடைய எண்ணப்பாடுகளை எழுதும் போது கவனம் பெறுவது இயல்பானது. விடுதலைப் புலிகள் அமைப்பு, ஆயுத ரீ…

  22. அடுத்த மின் செயலிழப்புக்கு வழிகோலப்படுகிறதா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்த ஆண்டில் மாத்திரம், இரண்டு தடவைகள் மின் செயலிழப்பு ஏற்பட்டு, முழு நாடுமே இருளில் மூழ்கியிருந்தது. இந்த நிலைமையால், நாடு முழுவதுமே - குறிப்பாக கொழும்பு போன்ற நகரப்பகுதிகள் - ஸ்தம்பிக்குமளவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்த இரண்டு மின் செயலிழப்புகளுமே, அரசாங்கத்தினுடையதோ அல்லது மின்சார சபையினுடையதோ நேரடியான தவறின் காரணமாக ஏற்பட்டவையன்று. மாறாக, பல்வேறுபட்ட இணைந்த காரணிகள் காரணமாகவே ஏற்பட்டிருந்தன. இறுதியாக ஏற்பட்ட மின் செயலிழப்பு, பியகம உப மின்நிலையத்தில் ஏற்பட்ட உபகரணப் பழுது காரணமாகவே ஏற்பட்டிருந்தது. அந்த உப மின்நிலையத்தில் காணப்பட்ட மின்மாற்றி, சும…

  23. பிரசல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: விளைநிலத்தின் அறுவடை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பயங்கரவாதத்தைப் பயங்கரவாதத்தால் ஒழிக்க முடியாது. ஒரு பயங்கரவாதத்துக்கெதிரான இன்னொரு பயங்கரவாதம், இரு தரப்பிலும் அழிவுகளை மட்டுமே பரிசாகக் கொடுக்கிறது. ஆனாற் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் அதை உணர்வதில்லை. அதை என்றோ உணரும் போது காலங் கடந்துவிடுகிறது. உண்மையில் பயங்கரவாதத்துக்கெதிரான பயங்கரவாதம் மேலும் பயங்கரவாதங்கட்கு வித்திடுகிறது. கடந்த வாரம், பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பெல்ஜியத்தை உலகெங்கும் பரவும் பயங்கரவாதத்தின் இன்னொரு பலிபீடமாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தலைநகரும் நேட்டோவின் தலைமையலுவலகம் அமைந்த நகரும் எனுஞ் சிறப்பு அடையா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.