-
Posts
4514 -
Joined
-
Last visited
-
Days Won
10
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by narathar
-
https://telo.org/ta/தமிழ்-தேசிய-கூட்டமைப்பின/ தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலினுக்கு அனுப்பப்பட்ட கடிதம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கடிதமல்ல என்ற தகவல் தமிழக முதல்வரிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூட்டமைப்பின் தனித்தனிக்குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, கூட்டமைப்பின் ஏனைய தரப்புக்களுடன் தேவையற்ற முரண்பாட்டை வளர்க்க வேண்டாமென தமிழக முதல்வர், இலங்கை விவகாரங்களை கையாளும் பிரமுகர்களிற்கு தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசியகூட்டமைப்பு என குறிப்பிட்டும், ஐரோப்பாவில் இயங்கும் காகிதத்தலைப்பு அமைப்பான உலகத்தமிழர் பேரவையின் பெயர் குறிப்பிட்டும், கடந்த 18ம் திகதியிட்ட கடிதம் தமிழக முதல்வரிற்கு அனுப்பப்பட்டது. அது, வெறும் நன்றியறிதல் கடிதமாக தென்பட்டாலும், கூட்டமைப்பிற்குள் தனி அணியாக செயற்படும் உலகத்தமிழர் பேரவை, கனடிய தமிழ் காங்கிரஸ், எம்.ஏ.சுமந்திரன் அணியின் மற்றொரு நகர்வாக கருதப்படுகிறது. தி.மு.க அமைச்சர் ஒருவர் ஊடாகவே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. தி.மு.கவின் முக்கிய பிரமுகர்கள் பலர் தமிழீழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புக்களுடன் நீண்ட தொடர்பை கொண்டிருந்தவர்கள். வடக்கு கிழக்கிலுள்ள மிதவாத கட்சிகளை விட, போராளி அமைப்புக்களுடனேயே நீண்ட தொடர்பை வைத்திருந்தவர்கள். கடித விவகாரம் தமிழக முதல்வரின் ஆலோசகர் வட்டத்திற்கு சென்றதும், அந்த விவகாரத்தை பற்றி பேச, கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியொன்றின் தலைவரை, தமிழக முதல்வரின் ஆலோசகர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தமிழக முதல்வரின் ஆலோசகர் குறிப்பிடும் வரை, இந்த கடித விவகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி அறிந்திருக்கவில்லை. நேற்று மாலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, அந்த கடிதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கடிதமல்ல என்பது, தமிழக முதல்வரின் பிரதிநிதிகளிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளினால் தனித்தனியாக தெளிவுபடுத்தப்பட்டதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. இதையடுத்தே, கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளில் சிக்க வேண்டாமென தனது கட்சி பிரமுகர்கள், ஆலோசகர்களிற்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் தி.மு.க தரப்பிலிருந்து நேற்று தமிழ் கட்சிகளிற்கு தெரிவித்த தகவலில், ‘தமிழீழ போராளி அமைப்புக்களின் காலங்களில் ஒவ்வொரு தரப்புடனும் தொடர்பு வைத்து, மறு தரப்பை தள்ளிப்போக வைத்த கடந்த கால வரலாற்றின் அடிப்படையில், தமிழக முதல்வர் இப்பொழுது ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து தரப்பினரையும் தமிழக முதல்வர் விரைவில் சந்திக்கும் வாய்ப்புள்ளது’ என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
-
நான் எங்கே ஆட்சி மாற்றத் திட்டம் என்று எழுதினேன்? இங்கே தமிழர் மீதான மனித உரிமை விடயத்தையே அமெரிக்கா பயன் படுத்துகிறது. அதனால் தமிழர் தரப்பை பயன் படுத்துகிறது. நாம் இவ்வாறான தருணங்களையே எமது தேவைகளுக்கு பயன் படுத்த வேண்டும். அமெரிக்கா விடம் எமது அரசியல் கோரிக்கை களை முன் வைக்க வேண்டும். இதில் இவர்கள் மறைக்க என்ன இருக்கிறது? பொருளாதாரத்தில் நிலை குலைந்துள்ள சிறிலங்கா தனது ஏற்றுமதிச் சந்தைகளை இழக்காது. சுமந்திரன் எதைக் கேட்டார் என்று எவருக்காவது தெரியுமாயுமா? ஏன் பத்திரிகையாளரைச் சந்திப்பதை தவிர்க்கிறார்?
-
நீங்கள் சொல்லனலுங்கள் இவர்களைக் கூப்பிட்டு கதைக்க அமெரிக்கா வுக்கு என்ன அவசியம் இருக்கிறது? எதை இவர்கள் கொடுக்கிறார்கள்? எதை அதற்குப் பதிலாக வாங்குகிறார்கள்?
-
நீங்கள் யாருடனும் வேலை செய்யுங்கள் ஆனால் தமிழ் மக்களின் நலன்களை விற்று அவர்களுக்கு வேலை செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். அமைப்பில் இருப்போரை ஏமாற்றாதீர். மேற்குலகம் தமது தலங்களையும் இந்திய தலங்களையும் மட்டுமே கவனத்தில் கொள்ள இவர்கள் கருவிகளாகப் பயன் படுகிறார்கள். இங்கே பேசப்படுவது தனி நபர் களின் பிரச்சனை அல்ல தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு.
-
கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை
narathar replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இது ஒரு நாடகம். உண்மை வெளிவந்து இவர்கள் அம்பலப்படுவது விரைவில் வரும். நாமல் போட்ட டீவீட் கொழும்பு பத்திரிகைச் செய்திகள் எல்லாவற்றையும் கூட்டினால் இவர்கள் யாருக்கு வேலை செய்கிறார்கள் என்பது தெரியும். -
உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் புலம் பெயர் அரசியற் செயற்பாட்டாளர்கள் எல்லொருக்கும் தெரியும். இது ஒரு நாடகம். உண்மைகள் வெளிவரும்.
-
இது அப்பாவித்தனமான எண்ணம் தான். மேற்குலகின் ஆட்சி மாற்ற திட்டத்தில் பங்கு கொள்கிறார் அமைப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு இது பற்றித் தெரியாது. பின்னர் சமந்திரனடன் வேறு ஒரு அமைப்பின் சார்பில் பஙீகு கொள்கிறார். இது உங்களுக்கு வித்தியாசமானதாகத் தெரியவில்லையா? வெறும் கருத்து வேறுபாடு அல்ல இது. மேலும் வேறு எந்த அமைப்பை யும் அழைக்காமல் எந்த மக்கள் செல்வாக்கும் அற்ற ஒரு அமைப்பு மட்டுமே அழைக்கப் பட்டிருப்பது உங்களுக்கு வித்தியாசமகத் தெரியவில்லையா?
-
அதில் அவர் கூறிய விடயம் உங்களுக்கு விளங்கவில்லை. தீடிரென கோத்தவுடன் பேசுவோம் என்று அறிக்கை விட்டதன் பின்னணீ அவர்கள் யாரோ ஒருவரின் அல்லது ஒரு சக்தியின்நூண்டுதலின் பேரிலேயே அதனை விட்டனர் என்னும் பொருளில் எழுதப்படுள்ளது. இது எவ்வாறுநடந்தது என்பது ஓரளவு எனக்குத் தெரியும். அந்த அ றிக்கை USTAG இல் இருந்து தீடிரென இராஜினமாச் செய்து GTF இன் பிரதினிதியாக பேட்டி க்டுக்கும் எலயசு ஜெராஜ்ஜினாலும் அவர்து மூன்று சகபாடிகளாலும் எழுதப்பட்டது. ரணில் தலமையினாலநல்லட்ச்சி அரசி அமைப்பிதிலும் சுமந்திரன் சுரேன் உடன் இவர்நெருங்கிச் செயற்பட்டவர். இவர் மேற்குலக உளவு அமைப்புக்களுடன் மிகநெருக்கமானவ்ர் என்பதே எனது அபிப்பிராயம். இவர் இருக்கும் அமெஇப்பிலேயெ ப்லருடன் முரண்பட்டும் இவர் தொடர்ந்து இருக்கிறார். GTF இல் இருந்து தாம் விலகுவதாக 2015 ஆம் ஆண்டே USTAG அறிவுத்து இருந்தது அதன் பின்னரும் GTF இல் இவெர் பணிப்பளாரக இரகசியமாகச் செயற்பட்டார். GTF மேற்குலக உளவு அமைபுக்களால் கட்டப்பட்ட ஒரு அமைப்பு என்பதெ எனது கணிப்பு. இதில் இருப்பவர்கள் மர்மமான செயற்பாடுகளைக் கொண்டவர்கள் எந்த வெளிப்படை தனமியும் இவர்களிடம் கிடையாது. இவர்கள் எந்த மக்கள் சந்திப்பகளையோ கூட்டங்களஒயோநடாதுவதில்லை. இவர்களின் பின்னால் செல்லும் மற்ற எட்டு மைப்புகளின்நிலை பரிதாபமானது.இதில் தலையில் உள்ளவர்களுக்கு இந்த புரட்டுக்கள் தெரியும்.ஆனால் கீழ் இருக்கும் சாதரண தொண்டர்களை இவர்கள் வெகு காலமாக ஏமாற்றி வருகிறார்கள். கேள்வி கெட்பவர்கள் மேல் தனிநபர் தாக்குதல் செய்வது அதன் மூலம் அவர்களை அமைப்பில் இருந்து ஓரங்கட்டுவது, இது தான் இவர்கள் காலம் காலமாச் செய்து தம் கதிரைகளில் தொடர்ந்தும் இருகிறார்கள்.இதை விட்டால் இவர்களுக்கு வேறு எந்த அடையாளமும் இல்லை. இதில் ஏமாற்றப்படுவது சாதாரணத் தொண்டர்களே. சிறுது காலம் வேலை செய்வார்கள்.ஓரளவு விளங்கிய பின் விட்டுச் சென்விறுடுவார்கள். இவர்கள் வேறு புது இளயோரைத் தேடிப் பிடித்து வேலை வாங்குவார்கள். யாரவது தலமை நோக்கிச் சென்றால் அவர்களையும் வெளியேறச் செய் து விடுவார்கள். அமைப்பை மிகவும் பலவீனமாக்கியவர்கள் எந்தப் பொறுப்புயும் எடுக்காது தொடர்ந்து தமது கதிரையைப் பாதுக்காப்பதிலே குறியாக இருப்பது வெட்கப் படவேண்டிய விடயம்.
-
https://vettivel.medium.com/tamil-diaspora-representation-303feb9dd664 பன்னிரண்டு வருடத்தின் பின் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் நிலையும் தமிழரின் பிரதிநிதிகள் யார் எனும் கேள்விக்கு விடை காண்பதுவும் இந்த கட்டுரையின் நோக்கம். கட்டுரையில் வெளி தரவுகளை அறிய கட்டுரையில் உள்ள இணைப்புகளை அழுத்தவும். புலம் பெயர் தமிழ் அமைப்புகளில் எவை பிரதிநிதிகள் தகுதி இழந்தவை என்பதையும் எப்படியான பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் தேவையானது என்பதையும் இக்கட்டுரை ஆராய்கிறது. September 22, 2021 அன்று ஐநாவில் 76ம் அமர்வில் சிறிலங்கா தாம் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை மறுப்பதாக அறிவித்திருந்தது. இது வரை பல ஆயிரம் சாட்சியங்கள் இருந்தும் ஒரு சிறிலங்கா இராணுவம் கூட தண்டிக்கப்படாத போது, சிறிலங்கா இன அழிப்பு அரசே தமது கங்காரு நீதிமன்றில் விசாரிப்பதாக ஐநாவில் கூறியது 2015 ஆம் ஆண்டு தீர்மானித்த நீதிக்கான ஐநாவின் கலப்பு நீதிமன்றம் மற்றும் ஏனைய பொறிமுறைகளை பகிரங்கமாக மறுத்தது பற்றி இது வரை தாம் தமிழரின் நீதிக்காக செயல்படுகிறோம் என்று கூறிய சில புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்து கண்டிக்க தவறியுள்ளது. கடந்த January 15, 2021 அன்று மூன்று தமிழ் கட்சிகளும் ஈழத்திலிருந்து ஐநாவுக்கு தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதிமன்று வேண்டும் என தெளிவாக கூறியும் இருந்தது. ஐநா மற்றும் அமெரிக்கா பிரித்தானியா கனடா போன்ற நாடுகளுக்கு ஐநாவில் தீர்மானித்த படி சர்வதேச நீதிமன்ற போர்க்குற்ற விசாரணைகளை சிறிலங்காவுக்கு எதிராக உடனே ஆரம்பித்து சிறிலங்காவின் மறுப்பை பகிரங்கமாக நிராகரியுங்கள் என்று கேட்க வேண்டிய தமிழ் அமைப்புகள் சில சிறிலங்காவுடன் தாம் பேச தயார் என்று அறிக்கைகளில் ஈடுபட்டது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இழிவு செய்வதாக உள்ளது. இத்தகைய தெரிந்தே ஏமாற்றும் செயல்பாடுகளையும் அதை செய்யும் அமைப்புகளை நேரடியாக கண்டிப்பது அவசியம். புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்று காட்டுவது மட்டும் தான் இந்த அறிக்கைகளின் ஒரே நோக்கமாகவும் தேவையாகவும் உள்ளது. புலம் பெயர் தமிழர்களை தவறாக 2015 இல் பிரதிநிதி படுத்திய அமைப்புகளையும் அவர்களின் பொய் தோற்றத்தையும் இனம் காண்பது மிக அவசியமாகிறது. கடந்த 12 வருடத்தில் புலம் பெயர் தமிழரின் பிரதிநிதிகள் யார் என்பதையிட்டு சில தரவுகளை பகிர்வதே இந்த கட்டுரையின் நோக்கம். Tamils gathered large numbers in front of UK parliament in 2009 for ceacefire and justice 2009 இற்று முன்னர் தமிழீழம் என்று ஒரு நாட்டில் புலிகளும் மக்களும் தியாகங்களின் ஊடாக நிலை பெற்றிருந்த போது, புலம் பெயர் தமிழ் பிரதிநிதிகள் என்று ஒன்று வேண்டியதாக இருக்கவில்லை. புலிகளுக்கான தமிழர்களின் ஆதரவு அவர்களின் ஓர்மம், அறம், தியாகம், வீரம், தமிழீழ நாட்டை உலகில் உன்னத மாண்புகளுடன் அமைத்தது, அதிலும் அதிக நேர்மையான தலைமை என பல விடயங்கள் மூலம் தான் பெருகியது. புலிகளுக்கான தமிழர்களின் ஆதரவு அவர்களின் உறுதி மற்றும் வெளிப்படை தன்மையாலும் தான் பெருகி இருந்தது. பேச்சுவார்த்தைகளில் ஒவ்வொரு நிலையிலும் மக்களுக்கு பொறுப்பு கூறுவதை அவர்கள் முதன்மையாக கொண்டிருந்தனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் சரி இடைக்கால தீர்வாக ISGA போன்ற விடயங்கள் மற்றும் சர்வதேச பேச்சு வார்த்தைகளில் மக்களுக்கு தெளிவூட்டுவதில் மிக கவனமாகவும் இருந்தனர். இதனால் தான் மக்களும் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து புலம் பெயர் தேசங்களிலும் அவர்களின் பிரதிநிதித்துவத்த்தை உறுதிப்படுத்தினர். தமிழீழ அரசின் தூதர்களாகவே அன்றைய புலம் பெயர் தமிழ் அமைப்புகள் இயங்கின. 2009 இற்று பின்னர் தமிழீழ அரசும் புலிகளும் மறைந்த பின்னர் புலம் பெயர் தமிழருக்கு தலைமை எதுவும் இருக்கவில்லை. புலிகளின் கடைசி சர்வதேச தலைவர் KP பத்மநாதன் ஆகவே இருந்தார். நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE) புலிகளின் ஒரு தொடர்ச்சியாக இருந்தது. ஆனால் புலிகளுக்கு கிடைத்த ஆதரவு TGTE இற்கு கிடைத்திருக்கவில்லை. அதே கால பகுதியில் உலக தமிழர் பேரவை (GTF) பல நாடுகளில் இருந்து தமிழ் அமைப்புகளால் உருவாக்க பட்டிருந்தது. இதே கால பகுதியில் TGTE இற்கு மாற்றாக மக்களவை (ICET) என்று ஒன்றும் உருவாகி இருந்தது. இதில் இன்று வரை குறைபாடுகள் மற்றும் செயல்பாடு போதாமல் இருந்தாலும் அன்று தொடங்கிய கொள்கையில் நிலைத்து இருப்பது TGTE மட்டுமே. GTF அமைப்பு இரு வருடம் இயங்கிய பின்னர் பேச்சாளர் சுரேந்திரன் ஈழத்தில் தமிழரசு கட்சி (TNA) சுமந்திரன் பிரிவுடன் இணைந்து சிறிலங்காவின் UNP கட்சியின் ஒரு பிரிவாக 2015 இல் இயங்க தொடங்கியது. ICET செயல்பாடுகள் இன்றி அறிக்கைகளுடன் முடங்கியது. மொத்தத்தில் புலிகள் இல்லாத தமிழினம் ஈழத்தில் நிலமும் இருப்பும் இழந்து போக புலத்திலும் தமிழ் அமைப்புகள் விலை போயும் உணர்விழந்தும் போயின. புலத்தில் தமிழ் அமைப்புகள் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருந்தும் அறிக்கைகளிலும் மூடிய அறைக்குள் பேச்சிலும் தாமும் மயங்கி மக்களையும் மயக்க முயன்றதே இவர்களின் தவறாகும். கடந்த பன்னிரண்டு வருடங்களில் முதல் நான்கு வருடங்கள் தான் நீதிக்கான முழு முயட்சிகளை புலம் பெயர் சமூகம் எடுத்திருந்தது. இதன் போது தமிழரசு கட்சி (TNA) இந்தியா புலிகளின் பின் தீர்வு தருவதாக நம்பியிருந்தது. அதனால் புலிகளால் ஆரம்பிக்க பட்டிருந்தாலும் அவர்களின் தலைமை புலிகளின் வரலாற்றை குறைசொல்வதிலேயே காலம் கடத்தியது. 2009 இலிருந்து 2014 வரை, புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பல நாடுகளில் சிறு குழுக்களாக நீதிக்காக குரலெழுப்பினர். ஆனால் இந்த நீதிக்கான குரல்களை இலங்கையில் தமக்கு சார்பான ஒரு ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்க இந்தியா போன்ற நாடுகள் பாவித்தன. GTF (Global Tamil Forum), கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC), USTAG, ATC என்பன 2015 இலிருந்து இந்த ஆட்சி மாற்றத்தில் வந்த சிறிலங்காவின் UNP கட்சியுடன் இணைந்து ஒரு தீர்வுக்கு உழைப்பதாக கூறி நீதிக்கான குரல்களை குறைத்தன. பின்னர் GTF/TNA/CTC முழுமையாக சிறிலங்காவின் UNP என வலம் வர, ராஜபக்சே ஆட்சி சீனாவுடன் மீண்டும் 2019 இல் வர, 2020 இல் USTAG/ATC விலகிக்கொண்டன. முடிவில் 2020 இல் GTF முழுமையாக அழிந்தது. இதில் GTF/CTC/USTAG என்பன சிறிலங்கா அரசுடன் மறைமுக பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தன ஆனால் இவற்றை புலம் பெயர் தமிழர்களுக்கு தெரிவிக்காமல் மறுத்திருந்தார். மொத்தத்தில் புலம் பெயர் தமிழரின் பலத்தை தவறாக பயன்படுத்தி அதை இழக்க செய்ததும் இந்த CTC/GTF/USTAG மூன்று அமைப்புகளும் தான். இதற்கான விளக்கத்தை இவர்கள் இதுவரை வழங்கவில்லை. இவர்கள் எதிர்காலத்தில் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்தும் தகுதியை முழுமையாக இழக்கிறார்கள். GTF அமைப்பு புலம் பெயர் தமிழர்களை இனி பிரதிநிதிப்படுத்த முடியாது என விளக்கமாக பல முறை அறிக்கைகள் கூறியிருந்தன. கனடிய தமிழர் பேரவை தவிர எஞ்சிய எல்லா அமைப்பும் இந்த கூட்டிலிருந்து விலகின. அண்மையில் அதன் பேச்சாளர் சுரேன் தம்முடன் கனடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் ஏற்கனவே மூடப்பட்டிருந்த UK Tamil Congress போன்ற அமைப்புகள் மூன்றின் பெயர்களை கூறியிருந்தார். பின்கதவு பேச்சுக்களில் 2015 இல் இருந்து ஈடுபடுவதால் யாருமே இவர்களுடன் இல்லை. இல்லாத GTF அமைப்பை இருப்பதாக காட்டும் முயட்சியில் ஈடுபடுவது இந்தியா சிறிலங்கா நாடுகளுக்கு தமது முகவராக புலம் பெயர் தமிழர்களில் ஒரு அமைப்பு தேவை என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது. CTC அமைப்பு புலிகள் காலத்தில் இருந்தபோதிலும் 2009 இற்று பின்னர் அது TNA போல புலிகளின் வரலாற்றை மறுத்து அவர்கள் மேல் பழியை போட்டு சிறிலங்கா UNP கட்சியின் வெளிநாட்டு கிளை போல இயங்குவதால். இந்த அமைப்புக்கும் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவு இல்லை. மாறாக அது இன்று தெரு விழா மற்றும் பொது விழாக்கள் மட்டுமே இயக்கம் ஒன்றாக மாறியுள்ளது. இதே கால பகுதியில் BTF, NCCT என்பன தமிழின அழிப்பு என்பதை கூறுவதில் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனாலும் இவர்களால் USTAG/ATC/CTC போன்றவற்றை தவிர்த்து செயல்பட முடியவில்லை. பொதுவாக புலம் பெயர் தமிழ் அமைப்புகள் ஐநாவில் பல வேலைகளை செய்ததாக கூறியிருந்தாலும் கடந்த 12 ஆண்டுகளில் UN ECOSOC அமைப்புகள் மூலம் சமர்ப்பித்த கிட்டத்தட்ட 300 ஈழம் சார்ந்த அறிக்கைகளை பார்க்கும் போது அதில் இந்த அமைப்புகளின் அறிக்கைகளை காண முடியாது. 2015 இற்று பின்னர் புலம் பெயர் அமைப்புகளின் பணி எப்படியானது என அறிவதோ அல்லது அது பற்றிய செயல் நிதி அறிக்கைகளோ மிக அரிது. இந்த நிலையில் கடந்த வருடம் ஐநாவின் தீர்மானத்தில் இருந்து விலகுவதாக சிறிலங்கா அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்பதை சொல்லும் போட்டி இப்போது எழுகிறது. அதுவும் சிறிலங்காவுடன் பேசப்போவதில் தான் இந்த போட்டி எழுவது பெரும் வியப்பு. 2021 August மாதத்தில், பின்வரும் 8 புலம் பெயர் அமைப்புகளும் தாம் சர்வதேச மத்தியஸ்தத்துடன் சிறிலங்காவுடன் பேச தயார் என அறிக்கை விட்டனர். “Australian Tamil Congress (ATC), British Tamils Forum (BTF), Maison du Tamil Eelam (France), Irish Tamils Forum (ITF), National Council of Canadian Tamils (NCCT), Norwegian Council of Eelam Tamils (NCET), Solidarity Group for Peace and Justice (SGPJ — South Africa), United States Tamil Action Group (USTAG)”. ஏன் இந்த அவசர தேவை எழுந்தது என்று பதில் காண்பது கடினம். இதனை தொடர்ந்து தனிநபராக GTF சுரேன் தமது பங்குக்கு தானே பிரதிநிதி என அறிவித்தார். இதில் தம்முடன் இருக்கும் “UK Tamil Congress” 2020 இல் கலைக்க பட்டதை கூட தெரியாமல் கணக்கு காட்டி இருந்தார். இதை தொடர்ந்து BTF அமைப்பின் பிரமுகர் கூறினார் என IBC எட்டு தமிழ் அமைப்புகள் பேச தயார் என கூறி இருந்தது. பின்னர் NCET தமக்கும் இந்த கூட்டுக்கும் சம்பந்தம் இல்லை என கூறிஇருந்தது. USTAG இன் இஸ்தாபகர் ஒருவரும் இந்த அறிக்கை USTAG இன் சம்மதம் பெறாமல் வெளிவந்தது என கூறியிருந்தார். செய்தியில் NCCT நீக்கபட்டு CTC இன் பெயர் போடப்பட்டிருந்தது. முழுமையாக குழம்பி உள்ள இந்த எட்டு தமிழ் அமைப்புகளை யார் வழிநடுத்துகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது. கடந்த பன்னிரண்டு வருடத்தில் சிறிலங்காவின் ஆட்சிமாற்ற நாடகம் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் வலிமையை பாரிய அளவில் பாதித்துள்ளது. இப்போது இதன் இரண்டாம் பாகம் இப்போது ஆரம்பமாகிறது. GTF/CTC போன்றவை 2015 இல் தமிழின அழிப்பு என்பதை வடக்கு மாகாண சபையே தெளிவாக தீர்மானமாக கூறிய பின்னரும், சிறிலங்காவின் கூட்டு முகவர்களாக சிறிலங்காவை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க செயல்பட்டது என்று அறியப்படுவதினால், இவர்கள் மிக தெளிவாக புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முடியாது என்பது தெளிவானது. புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதி யார் எனும் போட்டியில் ஒதுங்கி இருந்து நீதிக்கான பணி செய்யும் தமிழ் அமைப்புகள் நூற்று கணக்கில் உலகெங்கும் இப்போது உள்ளது. தமிழின அழிப்பை ஆவணப்படுத்தல், ICC இற்கு நீதிக்காக நேரடியாக செல்லல், UNHRC இற்று நேரடியாக நிலைமைகளை கொண்டு செல்லல். புலம் பெயர் தேசங்களில் தமிழ் இன அழிப்பு நினைவகங்கள் அமைத்தல், புலிகள் மீதான தடை நீக்கி தமிழீழ வரலாற்றின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்தல், அந்த அந்த நாட்டு அரசுகளை சிறிலங்காவின் தமிழின அழிப்பை அங்கீகரிக்க கோருதல் சட்ட ரீதியான கேள்வி எழுப்பல் என பல செயல்பாடுகளை புதிய பல அமைப்புகள் முன்னெடுக்கின்றன. இவர்கள் தம்மை புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இன்னமும் காட்டிட விரும்பவில்லை. செயல்பாடுகளிலேயே கவனமாய் உள்ளனர். ஆனால் இந்த அமைப்புகள் இனி வரும் காலங்களில் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பின்னரும், சிறிலங்காவின் கூட்டு முகவர்களாக சிறிலங்காவை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க செயல்பட்டது என்று அறியப்படுவதினால், இவர்கள் மிக தெளிவாக புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முடியாது என்பது தெளிவானது. புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதி யார் எனும் போட்டியில் ஒதுங்கி இருந்து நீதிக்கான பணி செய்யும் தமிழ் அமைப்புகள் நூற்று கணக்கில் உலகெங்கும் இப்போது உள்ளது. தமிழின அழிப்பை ஆவணப்படுத்தல், ICC இற்கு நீதிக்காக நேரடியாக செல்லல், UNHRC இற்று நேரடியாக நிலைமைகளை கொண்டு செல்லல். புலம் பெயர் தேசங்களில் தமிழ் இன அழிப்பு நினைவகங்கள் அமைத்தல், புலிகள் மீதான தடை நீக்கி தமிழீழ வரலாற்றின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்தல், அந்த அந்த நாட்டு அரசுகளை சிறிலங்காவின் தமிழின அழிப்பை அங்கீகரிக்க கோருதல் சட்ட ரீதியான கேள்வி எழுப்பல் என பல செயல்பாடுகளை புதிய பல அமைப்புகள் முன்னெடுக்கின்றன. இவர்கள் தம்மை புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இன்னமும் காட்டிட விரும்பவில்லை. செயல்பாடுகளிலேயே கவனமாய் உள்ளனர். ஆனால் இந்த அமைப்புகள் இனி வரும் காலங்களில் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. இனி புலம் பெயர் தமிழர்கள் ஒரு கொள்கை கூட்டில் இணைவார்களே அன்றி இந்தியாவையே அமெரிக்காவையே பேச்சளவில் நம்பி ஏமாற தயாராக இல்லை. இதை நேரடியாக சொல்வதற்கும் தயங்கவும் போவதில்லை. நீதிக்கான முயட்சிகள் தொடரத்தான் போகின்றன. இன்னும் பல வருடங்களுக்கு புலம் பெயர் தமிழருக்கு பிரதிநிதி என்று ஒரு கூட்டு வர வாய்ப்பு கொள்கை அடிப்படையில் தான் இருக்கும். அதனால் தமிழ் அமைப்புகள் தாம் தான் பிரதிநிதி என்று பேச்சுக்கு செல்ல எத்தனிக்காமல் சிறு நீதிக்கான விடயங்களை செய்ய எத்தனிக்க வேண்டும். இல்லையேல் இந்த BTF/USTAG/ATC போன்ற அமைப்புகள் மேலும் அந்நியபட வேண்டி இருக்கும். இதில் USTAG அமைப்பை GTF/CTC ஐ தவிர்த்தது போல முழுமையாக எதிர்காலத்தில் தவிர்ப்பது தான் ஒரே வழி. இல்லையேல் அவர்களை கூட்டு சேர்க்கும் கூட்டுகள் அவர்களின் 2015 செயல்பாடுகளுக்கு பதில் சொல்லவேண்டி இருக்கும். உலகில் பரந்து இருக்கும் நீதிக்கான முயற்சிகளில் செயலாற்றி வரும் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் தமக்கான ஒரு கொள்கை சார் கூட்டை இப்போது ஆரம்பித்தால் இனிவரும் வருடங்களில் ஒரு நேர்மையான பொறுப்பான வெளிப்படையான புலம் பெயர் தமிழருக்கான பிரதிநிதிகளை உருவாக்கும் வாய்ப்பு உண்டு. ஒரு உறுதியான புலம் பெயர் தமிழ் அமைப்பை தமது தேவைக்கு பயன்படுத்த முடியாது என்பதால் அதை அமெரிக்காவோ இந்தியாவோ விரும்பாது. ஆனால் நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகள் கொள்கையளவில் ஒருங்கிணைந்து தமது நேரடி வாக்குகளால் இந்த பிரதிநிதித்துவத்தை அமைத்தால் இந்தியாவோ அமெரிக்காவோ சீனாவோ எதிர்க்க முடியாது Get the Medium app To Medium work, we log user data. By using Medium, you agree to ourPrivacy Policy, including cookie policy
-
கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை
narathar replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
https://youtu.be/WQZmZfLpye8 -
கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை
narathar replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
சதிகாரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் வல்லமை தமிழ் மக்களிடம் உண்டு. -
கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை
narathar replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
https://fb.watch/9px9iuyRrP/ https://fb.watch/9px9iuyRrP/ தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை தேசிய இன விடுதலை. இதை சிறுபான்மை யின் தனிமனித உரிமை யாக்கி சிங்கள பெருந் தேசிய வாத்திடம் விற்கும் எந்தச் செயற்பாடும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படும். உளவு அமைப்புக்களோடு வேலை செய்வோர் மக்கள் முன் அம்பலப்படுவர். -
கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை
narathar replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
தமிழ் மக்களை பிரித்து சிலரை வாங்கி போலி அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்களை பகடைக்காயீகளாக உளவு அமைப்புக்கள் பயன் படுத்துகின்றன. இதன் மையப் புள்ளியாக சுமந்திரன் இருக்கிறார். கனடாவில் நடந்தவை அமெரிக்கா வில் நடப்பவை இனி நடப்பவை எல்லாம் சதியை தமிழர்களிடம் இனம் காட்டும். சதிகாரர்கள் அம்பலப்படுத்துகிறறார்கள். -
கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை
narathar replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
Ustpac , தாம் gtf இன் Sri Lanka அரசுடனான தொடர்புகளால் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்கள். இப்போது எலயாசும் சீடர்களும் gtf என்று சொல்லி சமந்திரனோடு நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைப்பது பசில். பொறுத்திருங்கள் எவ்வாறு ரணில் இவர்களை இயக்கினாரோ அவ்வாறே இதுவும் முடியும். எலயஸ் சுமந்திரன் கூட்டணி அம்பலப் படுவது நடக்கும். -
சுமந்திரன் குழு அமெரிக்க விஜயம் பற்றிய பிந்திய தவல்கள் மீண்டும் சுமந்திரன் குழுவின் பயணம் அமெரிக்க அதிகாரிகளால் அழைக்கப்பட்டதில்லலை என்றும் அது அவர்களின் சொந்தப் பயணம்-அழையா விருந்தாளி பயணம் 1. இலங்கைக்கு பொறுப்பான அதிகாரி தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவை சந்திக்கவில்லை. 2. அமெரிக்க வெளியுறவுத்துறையில் குறைந்த அளவிலான உத்தியோகஸ்தர்களை மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்தனர். 3. ஒரு காங்கிரஸ் உறுப்பினருடன் அலுவலகத்திற்கு வெளியே புகைப்படம் எடுத்தார்கள். சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. 4. சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறை அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் பேராசிரியர் வான் ஷாக்கைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அவரால் அவவை சந்திக்க முடியவில்லை மற்றும் அவரது அலுவலகம் கோரிக்கையை நிராகரித்தது. சுமந்திரன் தன்னை அரசியல் ரீதியாக பலப்படுத்த ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடியும். அவர் அண்மையில் நிகழ்த்திய போராட்ட போட்டோ சூட் களின் தொடர்ச்சியே இது.
-
கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை
narathar replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
சுமந்திரன் குழு அமெரிக்க விஜயம் பற்றிய பிந்திய தவல்கள் மீண்டும் சுமந்திரன் குழுவின் பயணம் அமெரிக்க அதிகாரிகளால் அழைக்கப்பட்டதில்லலை என்றும் அது அவர்களின் சொந்தப் பயணம்-அழையா விருந்தாளி பயணம் 1. இலங்கைக்கு பொறுப்பான அதிகாரி தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவை சந்திக்கவில்லை. 2. அமெரிக்க வெளியுறவுத்துறையில் குறைந்த அளவிலான உத்தியோகஸ்தர்களை மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்தனர். 3. ஒரு காங்கிரஸ் உறுப்பினருடன் அலுவலகத்திற்கு வெளியே புகைப்படம் எடுத்தார்கள். சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. 4. சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறை அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் பேராசிரியர் வான் ஷாக்கைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அவரால் அவவை சந்திக்க முடியவில்லை மற்றும் அவரது அலுவலகம் கோரிக்கையை நிராகரித்தது. சுமந்திரன் தன்னை அரசியல் ரீதியாக பலப்படுத்த ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடியும். அவர் அண்மையில் நிகழ்த்திய போராட்ட போட்டோ சூட் களின் தொடர்ச்சியே இது. -
ஈழத்தில் தமிழர் ஒரு தேசிய இனம். இன்ச் சிறுபான்மை அல்ல. தமிழருக்கு இழைக்கப்பட்ட து இனப்படுகொலை. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் அல்ல. இவை மிக முக்கியமான வித்தியாசங்கள் இவைற்றத் தெரிந்தே இவர் கூறுகிறார். ஏனெனில் அது தான் அமெரிக்கா அரசின் நோர்விஜிய அரசுகளின் நிலைப்பாடு. இவற்றை தமிழருக்கு விற்று பிழைப்பு நாடாத்துவதை விட்டு இவர் இருக்க வேண்டும். தமிழர்கள் அரசியல் ஏமாளிகள் அல்ல.
-
இவர் தன்னை முழுவதுமாக தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு, தான் தமிழர் வாக்குகள் இன்றியே இனி வெற்றி பெறுவேன் என்று கூறிவிட்டார். இவரைநோக்கிநோர்வாத் தமிழர்கள் இனிப் போராட்டங்களை நடாத்த வேண்டும். இவர் முற்று முழுதாகவேநோர்வே அரசின் முகவராகத் தொழிற்படத் தொடங்கி விட்டர். இவரின் இப் பேட்டியை கொழும்புநோர்வேத் தூதரகமே ஒழுஙகமைதுள்ளது. இதைநோர்வாத் தமிழர்கள் இவரின் குடும்ப உறவுகள் மூலமாவது சொல்லி அவர் போகும் பாதை தவறானது என்று சொல்லி வழி காட்ட வேண்டும். இவர் தமிழ் இளைய்யொர் அமைப்பின் செயற்பாட்டளாராக இருந்து அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர். இப்பொது ஏறி வந்த ஏணியய்த் தூக்கி எறிந்து விட்டடார்.
-
ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!
narathar replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
தற்போது இருக்கும் அமைப்புக்களில் ஒன்றிணைந்த அமெரிக்கா செயற்பாட்டுக் குழு சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. அதன் தலைமை ஈழத்தில் இருக்கும் கட்சிகளை ஒன்றிணைப்பதிலும் ஈடுபட்டு வருகின்றது. -
ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!
narathar replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
பலர் அக்கறை அற்று இருப்பது உண்மை தான். ஏனெனில் இதனால் பலருக்கு பலன் எதுவும் இல்லை. அதையே சுரேன் போன்றவர்கள் பயன் படுத்திக் கொள்கின்றனர். பல அமைப்புகள் செய்யப்பட்டாலும் ஒரு சில அமைப்புக்களே சனனாயகத்துடன் வெளிப்பாட்டுத் தன்மையுடன் இயங்குகின்றன. இவையே நிலைத்து நிற்கும். சிறந்த தலைமை உருவாகும் வரை எந்த இடத்திலும் தலைமைத்துவப் போட்டி இருக்கும். ஈற்றில் சிறந்த தலைமை/ அமைப்பு வெற்றி பெறும். சுரேன் போன்றவர்கள் ஒரங்கட்டப் படுவார்கள்.