Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. தன்னை விட அதிகம் கற்றுவிட்டார், உழைக்கின்றார் என புருசுவுக்கு தன் பொண்டாட்டி மீது பொறாமை, மற்றும் தாழ்வு மனப்பான்மை பிரச்சனையோ?
  2. இப்போது எமது காலத்தைய அரைச்சுவர் வகுப்பறைகள் கட்டப்படுவது இல்லை போல. அரை சுவர் என்றாலும் இரும்பு நெட் எல்லாம் அடித்து சிறை போல் உள்ளது. ஒரு விதத்தில் பாதுகாப்பு என பார்த்தாலும் இன்னோர் விதத்தில் அவசரம் ஆபத்திற்கு வெளியேற முடியாது.
  3. இலங்கையை பொறுத்தமட்டில் பொதுவாக பாடசாலை கட்டடங்களில் அவசரகால வெளியேற்ற பாதை இல்லை. இது அடிப்படையில் கட்டட வடிவமைப்பு, திட்டமிடல் குறைபாடு. பெரிய சிறிய பாடசாலை என வேறுபாடின்றி அனைத்து பாடசாலைகளிலும் இந்த குறைபாடு காணப்படக்கூடும். யாழ் இந்து கல்லூரி போன்ற பிரபல தேசிய பாடசாலைகளில் அண்மைக்காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் இதற்கு விதி விலக்காக அமையக்கூடும். ஆனாலும், இவற்றிலும் இந்த குறைபாடு காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவசர கால வெளியேற்ற பாதை பாடசாலைகளில் உள்ளது அல்லது இல்லாதது பற்றிய விழிப்புணர்வு அவசியமானதும், தேவையானதும் ஆகும். நாங்கள் படிக்கும் காலத்தில் தேவை ஏற்பட்டால் சுவர், மதில் ஏறி பாய்வோம்.
  4. அவுஸ் வெளியேற என்ன காரணம்? ஐ பில் எல் செய்த சூனியமோ?
  5. சுவாரசியமான போட்டியை ஒருங்கிணைத்து நடாத்துவதற்கு உங்கள் நேரத்திற்கும், சக்திக்கும் நன்றி ஜி. நான் ஆரம்பத்தில் எனது நிலையை மேலே ஆரம்பித்து கீழே தேடினேன். இப்போது கீழே தொடங்கி மேலே பார்க்க ஆரம்பித்துள்ளேன். அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் தர வரிசையில் மேல்நிலை அணிகளை கீழ்நிலை அணிகள் வெற்றியடைவது நல்லதொரு விடயம்.
  6. கிந்தி கற்பவர்களுக்கு பின்னர் றோவில் வேலையும் எடுத்து கொடுப்பார்களோ?
  7. முதலாம் லெப்ரினண்ட் தரம் புலிகள் அமைப்பு வழங்கியதாக நினைவு இல்லை. வீரவேங்கை, 2ம் லெப்ரினண்ட், லெப்ரினண்ட், கப்டன், மேஜர், லெப் கேணல் இவைதான் பொதுவானவை. கிட்டு அவர்கள் மாவீரரானபோது முதன் முதலாக கேணல் தரம் அறிவிக்கப்பட்டது. தமிழ்செல்வன் அவர்கள் மாவீரரான போது முதலால பிரிகேடியர் தரம் அறிவிக்கப்பட்டது என நினைக்கின்றேன். தரம் வழங்குவதில் பிரதேசவாரியாக வேறுபாடு காட்டப்பட்டது என மக்களிடையே அதிருப்தி காணப்பட்டது. இவ்வாறே தண்டனை பெற்ற போராளிகள் மாவீரர் ஆனபோது தரம் குறைத்து அறிவிக்கப்பட்டார்கள். ஊரில் வாழ்ந்த எமக்கு எமது நண்பர்கள், ஊரவர்கள், உறவினர், அயலவர், ஒன்றாக கற்றோர் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றியபோது அவர்கள் பங்குபற்றிய தாக்குதல்கள் பல மற்றும் அவர்களது பங்களிப்பு பற்றி அதிகம் தெரிய வாய்ப்பு கிடைத்தது. இறுதியில் மாவீரர் ஆகும்போது தரநிலைகளும் அறிவிக்கப்படும்போது அது எமக்குள் பல உரையாடல்களை நிகழ்த்தியது. விடுதலை புலிகள் அமைப்பே அழிந்துவிட்ட நிலையில் தமது இனத்திற்காக இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களை தர நிலைகள் மூலம் வேறுபடுத்த தேவையில்லையோ என நினைக்கின்றேன்.
  8. போட்டிகள் முடிஞ்சு எவ்வளவு நேரம் ஆயிற்று. கிருபன் ஐயா கொஞ்சம் ஒருக்கால் வந்து இன்றைக்கு கதிரையில் குந்துவது யார் சுத்த வர நின்று கதிரையை பிடித்து ஆட்டுவது யார் யார் என்ற ஒழுங்கை சட்டு புட்டு என்று அறிவிச்சுவிட்டு போனால் நாங்கள் எங்கள் வேலைகளை பார்க்க போயிடலாம்.
  9. யாழ்ப்பாணத்தில் 17 வயது பையனை போலிசார் ஆணவத்துடன் சுட்டு கொலை செய்த சம்பவத்தில் சிறீ லங்கா போலிசாருக்கு முண்டு கொடுத்து குத்தி முறிஞ்ச ஆட்கள் இந்த செய்திக்கும் போலிசாருக்காக கொஞ்சம் முக்கலாமே.
  10. போட்டியில் குறைவான ஓட்ட எண்ணிக்கை எடுக்கும் அணி என்பதற்கு இத்தாலியை தெரிவு செய்தேன். இத்தாலி நல்லாய் விளையாடும் போல் உள்ளதே.
  11. வீரப்பனுக்கு வாழ்த்துக்கள், பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இந்த தடவை சிறியர், குமாரசாமியரை போட்டியில் காணவில்லை. பழைய போட்டிகளில் நொந்து போனார்களோ. எனது தெரிவுகள் எல்லாம் தர நிலைகளை அடிப்படையாக கொண்டவை. ஆனால், நான் விரும்புவது எல்லாம் ஒவ்வொரு தடவையும் தர நிலையில் குறைவான அணி தர நிலையில் உயர்வான அணியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். விளையாட்டை பார்ப்பது எல்லாம் இல்லை. அவ்வப்போது ஓட்டவிபரத்தை பார்ப்பது மட்டும்தான். விளையாடும் பெரும்பாலான வீரர்களின் முகமே எப்படி என தெரியாது.
  12. போர் நிறைவடைந்த பின் நான் பல தடவைகள் இலங்கை சென்று வந்துள்ளேன். பல தடவைகள் வாகனம் வாடகைக்கு எடுத்து ஓடியுள்ளேன். நான் வாகனம் ஓடியபோது போலிசார் என்னை மறித்த தருணங்களில் பல தடவைகள் தமக்கு காசு உதவி செய்யுமாறு/காசு தருமாறு நேரடியாகவோ/மறைமுகமாகவோ கேட்டார்கள். அனைத்து தருணங்களிலும் என்னிடம் தேவையான ஆவணங்கள் காணப்பட்டன. நான் வீதி நடைமுறைகளை அனுசரித்து வாகனம் ஓட்டினேன். வாகனத்தை மறிக்கும் போது காசு கேட்கிறார்களேயென நான் இவர்களின் ரோதனை தாங்க முடியாமல் மறிக்கும்போது நான் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டினால் என்னை போலிசார் தலையில் சுட்டு கொலை செய்ய வேண்டுமா? வாகனத்தை மறிக்கும்போது நிறுத்தாவிட்டால் மறித்தது ஒரு தடவையாகட்டும், அல்லது பத்து தடவைகள் ஆகட்டும் வாகனம் ஓடுபவரை சுட்டு கொலை செய்யவேண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமா? சிறுவனை சுட்டு கொலை செய்த சம்பவம் போலிசாரின் ஆணவ கொலை என்பது தவிர வேறு ஏதாக அமையமுடியும்? யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டாட்டத்துடன் கொண்டாட்டமாய் ஒரு கிழமையில் போலிசார் சிறுவனை சுட்டு கொலை செய்து சிறுவனுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டார்கள்.
  13. இலங்கை படைகள் தொழிலுக்கு சென்ற சாதாரண தமிழ் பொதுமக்களை சுட்டுக்கொன்றுவிட்டு அவர்களுக்கு இராணுவ உடை அணிவித்து விடுதலை புலிகள் உறுப்பினர்கள் என ரூபவாஹினியில் காட்டி பெருமை கொண்டாடிய காலம் முன்பு காணப்பட்டது. இதே படைகளுக்கு சாதாரண பொதுமக்களை சுட்டுக்கொன்றுவிட்டு வாள்வெட்டு கோஷ்டி அல்லது மாட்டுக்கள்ளர் என நிறுவுவது எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடிய வித்தைகள். சிறீ லங்கா போலீசை கண்டிக்காமல் கொல்லப்பட்ட சிறுவன் மீதும், அவன் சார்ந்தோர் மீதும் சேற்றை வாரி இறைக்கின்றார்கள் பாருங்கள் சிலர். இவர்கள்தான் உண்மை தமிழர்கள்!
  14. குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இல்லை. ஆனால், போலிசார் நடுத்தெருவில் சிறுவனுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள். போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டால் திருப்பி சுடுவதை நியாயப்படுத்தலாம். இலங்கையில் தமிழ் பகுதியில் நிராயுதபாணி மீது துப்பாக்கி சூடு செய்யும் அதிகாரம் எதை குறிக்கின்றது? போலிசார் மறிக்கும்போது வாகனத்தை நிறுத்தாவிட்டால் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என இலங்கை சட்டம் கூறுகின்றதா?
  15. ஆசிரியர் ஆசிரியர் என்று எழுதி உள்ளார்கள். மாணவியை தாக்கிய அந்த ஆசிரியர் ஆணா அல்லது பெண்ணா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.