Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தமிழர் புனர்வாழ்வுக் கழக திருமலை பணிமனை திறப்பு விழாவின் போது எண் 32, விடியாலயம் வீதி, திருமலை 11/05/2002 டாக்டர். ஜீனிட்ஸ் திருமலை மாவட்ட அரசியல் ஆளுவக செயலாளர் அமரர் ஐங்கரன் மற்றும் திருமலை மகளிர் பிரிவு பொறுப்பாளர் கிருஷ்ணா ஆகியோருடன் காணப்படுகிறார்.
  2. https://www.tamilnet.com/art.html?catid=25&artid=39987 விராஜ் மெண்டிஸ் விட்டுச் செல்லும் நிரப்பவியலா இடைவெளி [TamilNet, Saturday, 17 August 2024, 12:15 GMT] ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உற்ற நண்பனாக மிக நீண்டகாலமாக, தனது சாவுப்படுக்கை வரையும், ஜேர்மனி நாட்டின் பிரேமன் நகரிலிருந்து தொடர்ச்சியாக இயங்கிவந்த விராஜ் மெண்டிஸ் ஈழத்தமிழர்களிடமிருந்து வெள்ளிக்கிழமை மாலை தனது 68 ஆவது வயதில் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். அவரது வலிய நெஞ்சுரத்தோடு இளகிய குழந்தை மனது எப்போதும் போட்டியிட்டுக்கொண்டிருக்கும். அதனாலோ என்னவோ மாரடைப்போடும் சாவோடும் பலமுறை போராடியவாறு தனது செயற்பாட்டை முன்னெடுத்துக்கொண்டிருந்தார் அவர். அவரின் இடையறா முயற்சியால் மக்கள் தீர்ப்பாயத்தின் மூன்று அமர்வுகள் உலகத் தளத்தில் நடந்துள்ளன. அவற்றில் இன அழிப்புக் குறித்த மிகத் தெளிவான தீர்ப்பு வெளியானதோடு, அமெரிக்க-பிரித்தானிய மேலாதிக்கம் எவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்குக் காரணமானது என்பதைத் துணிகரமாக வெளிக்கொணரும் தீர்ப்பும் வெளியாகியது. அவரது அடுத்த கட்ட இலக்கு அர்த்தமுள்ள எதிர்ப்பியக்கத்தைக் கட்டுவதில் குறியாக இருந்தது. Viraj Mendis (01 April 1956 - 16 August 2024) ஆண் பெண் சமத்துவத்தில் அருஞ்சாதனைகளைப் படைத்த தமிழீழ விடுதலைப் போராட்ட மரபில் வந்து எஞ்சியிருக்கும் முன்னாட் பெண்போராளிகளிடமும் பெண்தலைமைத்துவத்திடமும் இருந்து அர்த்தமுள்ளதாக ஈழத்தமிழர் போராட்டத்தின் அடுத்தகட்ட எதிர்ப்பாற்றல் (Resistance) எழவேண்டும் என்று சிந்தித்து அதற்கான செயற்பாடுகளைக் கட்டுவதில் அவர் கவனஞ் செலுத்திக்கொண்டிருந்த வேளையில் அவரது மரணம் சம்பவித்துள்ளது. “உண்மையான விடுதலையை நேசித்தவர்கள் எல்லோரும் தமது உயிரைக் கொடுத்துவிட்டனர் அவர்களுக்காகவே நான் செயற்படுகிறேன்,” என்று எமக்கு அடிக்கடி நினைவுபடுத்திய அவர் இப்போதிருக்கும் நிலைகெட்ட புலம்பெயர்ச் செயற்பாட்டுத் தளத்துக்கு அப்பால் ஈழத்தமிழர் விடுதலை அரசியலை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் நகர்த்துவதில் மிகுந்த முயற்சியெடுத்துச் செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களிற் பலருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி இருக்கும் அறிவையும் துடிப்பையும் விஞ்சியதாக சிங்களவரான அவருக்கு நேசிப்பும் ஈடுபாடும் அறிவும் துடிப்பும் இருந்தன. ஈழத் தமிழர் மீதான சிங்களப் பேரினவாத அரசின் பௌதிக இன அழிப்பு ஆரம்பிக்கப்பட்ட 1956 ஆண்டில் இருந்தான 68 ஆண்டு வரலாற்றுக்காலம் அவரது வயது. அந்த இன அழிப்பைத் தனது வாழ்நாளில் மாற்றுலகத் தளத்தில் அவர் நிறுவிச் செனறுள்ளார். எந்த இக்கட்டான நெருக்கடியிலும் சுயாதீனமாக இயங்கும் வல்லமைக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. மாமனிதர் சிவராமின் நெருங்கிய நண்பரான விராஜ் தமிழ்நெற்றின் நண்பரானார். அவ்வாறான எமது நண்பர் விராஜுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது தீக்குளிப்பதற்கு ஒப்பானது; நெஞ்சை உருக்குவது; சிவராமை நாம் இழந்தபோது ஏற்பட்ட வலிக்கு ஒப்பான வலியைத் தருவது. முள்ளிவாய்க்காலைத் தரிசித்த ஆழமான வலி அதை எதிர்கொள்ளும் மன வலுவை எமக்குள் விட்டுச்சென்றுள்ளதா என்பதற்கு இது ஒரு சோதனையாகிறது. பிரித்தானியாவில் இருந்து ஒரு காலத்தில் அவர் விரட்டப்பட்டதன் பின்னரும், அவரது பிரித்தானியத் துணைவியாரான காரன் அம்மையார், தனது நாட்டைத் துறந்து அவரோடு ஜேர்மனியில் தானும் சேர்ந்து வாழ்ந்து, தோழர் விராஜின் செயற்பாட்டை ஈழத்தமிழர் விடுதலைக்காகத் தொடர்ந்தும் குவியப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தமை நெஞ்சை நெகிழவைப்பது. விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாயிருப்பினும் மலைநிகர்த்த செயலாற்றலோடு அவரோடு நெருக்கமான நண்பர்களாகச் செயற்படும் புலம்பெயர் சிங்கள நண்பர்கள் அவரின் பிரிவால் ஆழ்ந்த துயருக்குள்ளாகியுள்ளனர். கோட்பாட்டு ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் ஈழத்தமிழர் தேசக்கட்டலையும் விடுதலை அரசியலையும் அசைக்கவியலாது தாங்கியிருந்த தூண்களில் ஒன்று விராஜ். விராஜ் மரணிக்கலாம், அவர் நாட்டிய அந்தத் தூண் ஒருபோதும் சரியாது. விராஜ் விட்டுச் சென்றிருக்கும் நிரப்பவியலா இடைவெளியை ஈடுசெய்வது அவரது வாழ்வுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமான ஈழத்தமிழர் விடுதலைக்கும் அர்த்தம் தருவதாகும். அவரது நேர்காணற் பதிவுகளும் மக்கள் தீர்ப்பாயம் பற்றிய செய்திகளும் அனைவரின் பார்வைக்காகவும் கீழே இணைக்கப்படுகின்றன.
  3. இவ்வரலாற்றில் ஒரு சிறு தவறு உள்ளது; நெல்லியடியில் கப்டன் மில்லர் வெடிப்பதற்கு முன்னரே புலிகள் ஒரு சக்கைலொறித் தாக்குதல் ஒன்றை யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்த அஞ்சலகம் ஒன்றின் மேல் நடத்தியிருந்தனர். அதனை "திலீப்" என்ற பெயருடைய புலிவீரன் மேற்கொண்டிருந்தார்.
  4. அன்னை பூபதி மணிமண்டபம் திறப்பின் போது நாவலடி, மட்டு 19/04/2002 குருநாகல் மகா கல்கடவெல புண்ணியசார தேரரே இதனை திறந்து வைத்தார்
  5. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 25/06/1955ம் திகதி புங்குடுதீவில் பிறந்தார் தனது .யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் அந்த பாடசாலையின் கால்பந்தாட்ட அணியில் விளையாடியவர். பின்னர் இரசாயனவியல் துறையில் university of London ல் பட்டம் பெற்றார். ஈழ போரட்டத்தில் தோன்றிய இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தை தோற்றிவித்தவர். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் பனாங்கொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது அங்கிருந்து தப்பியோடினர் இதனால் இவரை பனாங்கொட மகேஸ்வரன் என்றும் அழைத்தனர். இன்னொரு சந்தர்ப்பத்தில் பனாங்கொட மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு வெலிக்கட சிறையில் இருந்த பொழுது ஜூலை கலவரம் இடம்பெற்றது இக்கலவரத்தில் குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் உட்பட பல போராளிகள் கொல்லப்பட்டனர். அச்சம்வத்தின் பின்னர் டக்ளஸ் தேவனாந்தா, பரந்தன் ராஜன், பனாங்கொட மகேஸ்வரன் போன்ற போரளிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர் . பின்னாளில் மட்டக்களப்பு சிறையுடைப்பின் பொழுது வாவி வழியாக ஒரு படகில் காளி சுப்பிரமணியம் ஆகிய தமிழீழ இராணுவ போராளிகளுடன் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை வாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர். ஈழ விடுதலை இயக்கங்கள் இயக்க செயற்பாட்டுக்காக நிதியை பெற்றுக்கொள்வதற்காக வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வேளை தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் 1984இல் மட்டக்களப்பில் காத்தான்குடி மக்கள் வங்கியை கொள்ளை இட்டார். கொள்ளைபோன நகைகளும், பணமும் மூன்று கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற மிகப் பாரிய வங்கிக்கொள்ளை என்ற பெயரையும் அந்த நடவடிக்கை சம்பாதித்துக் கொண்டார் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள். இதே வேளை தமிழ் நாட்டில் இருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு பயங்கரமான திட்டம் ஒன்று மூளையில் உதித்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரும் “ஏர் லங்கா”விமானத்தில் ஒரு குண்டை வைத்துவிடவேண்டும. குறித் நேரத்தில் வெடிக்கும் அந்தக் குண்டு, விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கி, பயணிகள் வெளியேறிய பின்னர் வெடிக்கும். திட்டத்தை நிறைவேற்ற மீனம்பாக்கம் விமானநிலையத்தில் பணிபுரிந்த சிலரது உதவியும் பெறப்பட்டது. ஏர் லங்காவில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த இருவரை கைக்குள் போட்டுக்கொண்டார்கள. பயணிகளின் பொதிகளோடு குண்டு வைக்கப்பட்ட சூட்கேசையும் சேர்த்துவிடவேண்டும். பொதுகளோடு பொதியாக அது விமானத்தில் கொழும்பு போய்ச சேர்ந்துவிடும். திட்டமிட்டபடி 1984 ஆகஸ்ட் இரண்டாம் திகதி சென்னை விமான நிலையத்திற்கு சூட்கேசில் குண்டு சென்றது. பொதிகளோடு பொதியாக சூட்கேஸ் வைக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்படத் தயாரானது. சுங்க அதிகாரிகளில் ஒருவருக்கு அந்த சூட்கேசில் சந்தேகம் வந்துவிட்டது. சூட்கேசை எடுத்து, அது யாருடையது என்று பயணிகளிடம் விசாரித்தார். வந்தது ஆசை, அந்த சுங்க அதிகாரி சூட்கேசை தூக்கிக்கொண்டு தனது அறைக்குச் சென்றார். அவர் நினைத்திருந்தால் உடனடியாகவே சூட்கேசை திறந்து பரிசோதித்திருக்கலாம். செய்யவில்லை. அதற்கு காரணம் இருந்தது. “சூட்கேசுக்குள் கடத்தல் தங்கம்தான் இருக்க வேண்டும். பாரமாக வேறு இருக்கிறது. மெல்ல அமுக்கிக் கொண்டால் என்ன?" என்று அந்த அதிகாரிக்கு ஆசை வந்துவிட்டது. தனது காலடியில் மேசைக்கு கீழே சூட்கேசை பத்திரமாக வைத்துக்கொண்டார். சூட்கேஸ் கைமாறிவிட்டது. விமானத்தில் ஏற்றப்படவில்லை. சென்னை விமான நிலையத்துக்குள் வெடித்துவிடப்போகிறது என்று தமிழ் ஈழ இராணுவ உறுப்பினர்களுக்கு விளங்கிவிட்டது. பயணிகள் அனுப்ப வந்த பார்வையாளர்கள் போல் நின்று அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள். விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடி, பொதுத் தொலைபேசி ஒன்றில் இருந்து விமான நிலையத்தோடு தொடர்பு கொண்டனர். “விமான நிலையத்தில் ஒரு சூட்கேசுக்குள் குண்டு இருக்கிறது. உடனே அப்புறப்படுத்துங்கள்” என்று தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். “ தங்கத்தை கடத்த முற்பட்டவாகள் தான் கயிறு விடுகிறார்கள்” என்று நினைத்து சுங்க அதிகாரி அலச்சியமாக இருந்துவிட்டார். மறுபடியும் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். “அனாமதேய மிரட்டல், வழக்கமான ஏமாற்று” என்று நினைத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தம்பாட்டில் இருந்துவிட்டனர். மூன்றாவது தடவை சூட்கேசின் நிறத்தையும் கூறி தகவல் சொல்லப்பட்டது. சந்தேகம். தகவல் அறிந்த சுங்க அதிகாரிக்கும்“உண்மையாக இருக்குமோ? என்று சந்தேகம் வந்துவிட்டது. ஊழியர் ஒருவரை அழைத்து சூட்கேசை வெளியே கொண்டு செல்லுமாறு பணித்தார். சூட்கேசோடு ஊழியர் செல்ல, சுங்க அதிகாரியும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கூடவே சென்றனர். விமான நிலைய கட்டிடத்தைவிட்டு அவாகள் வெளியேற முன்னர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து விட்டது. இலங்கையர் உட்பட முப்பதுக்கு மேட்பட்டோர் பலியானார்கள். நூறுபேர்வரை காயமடைந்தனர். இந்த தாக்குதல் எதிர்பார்த்தது போல் வெற்றி பெற்றிருந்தால் அன்று பனாங்கொட மகேஸ்வரன் விடுதலை இயக்கங்களின் மத்தியில் ஹீரோவாக பார்க்க பட்டிருப்பார். இங்கு ஏற்பட்ட இழுபறி தமிழீழ இராணுவம் என்ற இயக்கத்தை கொள்கை அற்ற இயக்கம் என்ற விமர்சனங்களை பெற வழிவகுத்தது. இதே வேளை தமது இயக்கத்திற்கு ஏற்பட்ட பழியை துடைக்க திட்டம் ஒன்றை தீட்டினார் மகேஸ்வரன். செப்படம்பர் மாதம் 23 ஆம் திகதி 1985 நல்லிரவு 12மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்- இராணுவ கூட்டு முகாம் முன்பாக ஒரு லொறி வந்து நின்றது. லெறியைச் செலுத்தியவர் இறங்கி ஓடிவிட்டார். லெறியில் வெடி மருந்து நிரப்பப்பட்டிருந்த்து. சாரதி இறங்கிச் சென்றதும் லொறி வெடிக்க வைக்கப்பட்டது.பாரிய சத்தத்தோடு லொறி வெடித்தபோது பொலிஸ் நிலைய கட்டிடங்கள் சேதமாகின. பொலிஸ் நிலையத்திலும், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் தீப்பிடித்துக்கொண்டது. லொறியில் பெற்றோல், டீசல் நிரப்பிய பீப்பாய்களும் வைக்கப்பட்டிருந்தமையால் குண்டு வெடிப்போடு அவையும் பற்றியெரியத் தொடங்கின. அதே வேளையில் பொலிஸ் நிலையம் மீது குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது. தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெற்றோல் நிரப்பப்பட்ட பவுசர் ஒன்று வந்து பொலிஸ் நிலையம் முன்பாக நின்றது. அதிலிருந்தும் சாரதி இறங்கி ஓடிவிட்டார். பவுசரை வெடிக்க வைக்க முயன்றார்கள். பவுசர் வெடிக்கவில்லை. பொலிஸ்- இராணுவ கூட்டுப்படை நிலையத்துக்கு அருகேதான் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் குதம் இருந்தது. பவுச்சர் வெடித்திருந்தால் அந்தப் பெற்றோல் குதமும் பற்றியெரிந்திருக்கும். நகரெங்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். பவுசரை வெடிக்க வைத்து பெற்றோல் குதத்தையும் நாசம் செய்வதே தாக்குதல் நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்த்து. ஆனால் பவுசர் வெடிக்கவில்லை. அதனையடுத்து மீண்டும் மோட்டார் ஷெல் தாக்குதல் தொடர்ந்தது. பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிசார் தப்பிச் சென்றதால் பலத்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. தாக்குதல் நடைபெற்றபோது கிளிநொச்சி பொலிஸ், இராணு கூட்டு முகாமில் 57 இராணுவ வீர்ர்களும், 39 பொலிசாரும் ஒரு உயரதிகாரியும் இருந்தனர். தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் இராணுவ வீர்ர்கள். நான்கு பேர் பொலிஸ்கார்ர்கள். ஒருவர் அதிகாரி. தாக்குதல் நடவடிக்கைக்கு தமிழீழ இராணுவம் (TEA)உரிமை கோரியது. தம்பாபிள்ளை மகேஸ்வரன்தான் லொறியில் வெடி மருந்து நிரப்பியும், எரி பொருள்களை வைத்தும் வெடிக்கவைக்கும் தெழில்நுட்ப நேரடியாக்க் கவனித்தார். இலண்டனில் கற்றுகொண்ட தெழில் நுட்ப அறிவை பயன்படுத்தி பார்த்தார், தம்பாபிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன்) முதன்முதலில் வெடிமருந்து நிரப்பிய லொறியை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலும் அதுதான். இந்த தாக்குதல் உத்தியை பின்னர் புலிகள் கரும்புலி தாக்குதலாக வடிவமைத்து நெல்லியடியில் முதன் முதலில் பயன்படுத்தினர். இதே போல் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் மாலை தீவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி பின்தளமாக பயன்படுத்த முடிவு செய்தார். அந்த நேரம் plote மாலை தீவை கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த திட்டம் வைவிடப்பட்டது. இதைவேளை ஆபிரிக்கா நாடு ஒன்றின் பின் தளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது அந்த முயற்சி பயனளிக்கவில்லை. 1986 ம் ஆண்டு நவம்பர் காலப்பகுதியில் விடுதலைபுலிகள் Eprlf அமைப்பை தடை செய்த பின்னர் தமிழீழ இராணுவமும் தடை செய்யப்பட்டது. இப்பொழுது சில உறுப்பினகள் விடுதலை புலிகளோடு இணைந்து கொள்கின்றனர். எனையோர் இயக்கத்தை விட்டு வெளியேறினர். சண்முகலிங்கம் செந்தூரன்
  6. 'சம தரப்பு அங்கீகாரத்துடன் பேச்சு மேசைக்கு வந்த தவிபு கள் மீது மேற்குலகம் விதித்த தடைதான் தமிழின அழிப்புக்கு வழி கோலியது. எனவே முதல் குற்றவாளிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் தான்' என்பதைத் தொடர்ந்து பதிவு செய்தவர் விராஜ் மென்டிஸ். அத்தோடு நிற்காமல் அதை ஒரு வழக்காகப் பதிவு செய்து தவிபு கள் மீதான தடையை நீக்குவதுதான் தமிழின அழிப்புக்கான நீதியின் முதற்படி என்பதில் எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடியவர் விராஜ். 2009 இற்குப் பிறகு எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பு லி நீக்க அரசியல் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட பு லி களை ஆதரித்தவர்கள் கூட தோல்வி உளவியலின் பிரகாரம் பு லி க ள் இனி ஒரு முதன்மைச் சக்தி இல்லை என்ற நிலைப்பாட்டுடன் வேறு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க அதை மறுதலித்து என்றுமே தமிழீழ விடுதலையின் மைய அச்சு பு லி கள் தான் - குறிப்பாக தலைவர் தான் என்பதில் தெளிவாக இருந்தவர் விராஜ். நந்திக்கடல் கோட்பாடுகளை நாம் உருவாக்கும் போது விராஜ் எமது வட்டத்திற்குள் இருக்கவில்லை. ஆனால் பின் நாட்களில் அவரது பார்வையும், கருத்துக்களும் எமது தத்துவத்துடன் வந்து ஒரு புள்ளியில் சந்தித்தது. ஒரு கட்டத்தில் எமது கோட்பாடுகளை சரி செய்யவும், விரிவாக்கவும் செய்யவும், அதை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லவும் எமக்கு ஒரு ஆசானாகவும் - பாலமாகவும் இருந்தார் விராஜ். தலைவர் பிரபாகரன் இறுதிவரை சரணைடையாது, மண்டியிடாது நின்று போரிட்ட நந்திக்கடலும் அது சொல்லிய அந்தச் செய்தியும்தான் தமிழர்களின் ஒட்டுமொத்த இறையாண்மையின் அடையாளமென்ற நந்திக்கடல் கோட்பாடுகளின் மையச் சரடை அவர் வாய்ப்புக் கிடைக்கும் இடமெங்கும் ஓயாது பதிவு செய்தார் . அவர் குறித்துப் பேச எழுத நிறையவே உள்ளது. நிச்சயம் பேச வேண்டும் - எழுத வேண்டும். 2009 இற்குப் பிறகு தடம் புரண்டு போன தமிழர்கள் பலர் வெட்கித் தலை குனியும் வரலாறு அது. ஆனால் அவரது இழப்பிலிருந்து மீள முடியாதுள்ள எம்மால் தொடர்ந்து எழுதமுடியவில்லை. வரும் காலத்தில் அதை முழுமையாகப் பதிவு செய்து வரலாற்றில் ஆவணப்படுத்துவோம். புகழ் வணக்கம் ஆசான். 🙏 ❤️ நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கச் சிந்தனைப் பள்ளி. ❤️ பிரபாகரன் சிந்தனைப்பள்ளி. -பரணி கிருஷ்ண ரஜனி
  7. கரும்புலி அணிகள் பயிற்சியில் ஈடுபடுகிறது 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | இடதுபக்கத்தில் நடந்து வருபவர்கள்: முன்னிருந்து முதலாவது கப்டன் சந்திரபாபு, இரண்டாவது மேஜர் செழியன், மூன்றாவது மேஜர் ஆதித்தன் ஆவர்; வலது பக்கத்தில் நடந்து வருபவர்கள்: முன்னிருந்து முதலாவது மேஜர் றீகஜீவன், இரண்டாவது மேஜர் சுதாஜினி, மூன்றாவது மேஜர் மீனா ஆவர்' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'நடுவில் வருபவர்களில் கையில் பீகே ஏந்தியபடி தாக்குதல் கஞ்சுகத்தை (Assualt vest) சரி செய்பவர் மேஜர் ஆதித்தன் ஆவார்' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது. இடமிருந்து முதலாவது தரைக்கரும்புலி மேஜர் ஆதித்தன் ' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது'
  8. கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது கட்டையாக இருப்பவர்கள்: தரைக்கரும்புலிகளான ஆந்திரா, சத்தியா, மலர்விழி 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | முன்னுக்கு வருபவர் மேஜர் றீகஜீவன் ஆவார்'
  9. குறிசாடுநர் (Marksman) பயிற்சியில் ஈடுபட்டுள்ள தரைக்கரும்புலிகள் முன்னால் நிற்பவர் மேஜர் அருளன் ஆவார்
  10. பயிற்சியில் ஈடுபட்டுள்ள கரும்புலிகள் 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | ஈற்றில் வருபவர் மேஜர் ஆதித்தன், அவர் முன்னால் வருபவர் மேஜர் மலர்விழி ஆவார்.' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | முதலாமவர் மேஜர் ஆதித்தன், இரண்டாமவர் மேஜர் மலர்விழி, மூன்றாமவர் மேஜர் செங்கதிர்வாணன், மேற்கொண்டு வருவோர் பெயர் அறியில்லை'' 'பயிற்சியில் ஈடுபட்டுள்ள கரும்புலிகள்'
  11. நெருப்பெழுந்து புகை சூழ எரியும் ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் சேணேவித் தளத்தினுள் நின்று சிரிக்கும் பெண் கரும்புலி
  12. தரைக்கரும்புலி மேஜர் அருளன் பயிற்சியாசிரியராகி தரைக்கரும்புலி மேஜர் மலர்விழிக்கு பிகே பயிற்சி அளிக்கிறார்
  13. தரைக்கரும்புலி மேஜர் நித்தி எ சோழவேங்கை இவர் பின்னாளில் வன்வளைக்கப்பட்ட தலைநகர் திருமலையிலிருந்த சிங்களத் துறைமுகம் மீதில் கடற்கரும்புலியாய் பாய்ந்தார். 'பி.கே எல்.எம்.ஜி - ஓடு மேஜர் நித்தி நடந்து வருகிறார்' 'இலகு தகரி எதிர்ப்பு ஆய்தமான "லோ" வை முதுகில் சுமந்தபடி வகை-56 - 2 துமுக்கியை கையில் ஏந்தியபடி அன்னார்' 'அன்னார் துமுக்கியால் குறிவைப்பது போன்று பொதிக்கிறார்(posing)'
  14. புலிகளின் அரசியல் குழு திருமலையை வந்தடைந்தது 09/04/2002 தமிழீழ விடுதலைப் புலிகளின் நான்கு உறுப்பினர்கள் மூதூரில் இருந்து கடல் வழியாக செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் திருகோணமலையை வந்தடைந்தனர். இ-வ: தூயவன், லெப். கேணல் தரமுடைய அமரர் ஐங்கரன், கலைச்செல்வன் மற்றும் லெப். கேணல் தரமுடைய திருமதி காருண்யா. வரவேற்பு "அரசியல்துறை பணிமனை ..... ...... கங்காணிப்புக் குழுவின் திருகோணமலைப் பொறுப்பாளர் திருமதி விக்டோரியா லுண்ட் அவர்கள் விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல் பணிமனையை நாடா வெட்டி திறந்து வைத்தார்."
  15. தரைகளான மேஜர் றீகஜீவன் மற்றும் மேஜர் செழியன் 'ஏ.கே எல்.எம்.ஜி - ஓடு மேஜர் றீகஜீவன். பின்னால் நின்று பார்ப்பவர் மேஜர் செழியன் ஆவார்' 'இ: மேஜர் றீகஜீவன், வ: மேஜர் செழியன் '
  16. தரைக்கரும்புலி மேஜர் றீகஜீவன் ' 'ஏ.கே எல்.எம்.ஜி - ஓடு மேஜர் றீகஜீவன் நடந்து வருகிறார்'
  17. ஏ9 வீதி (யாழ் சாலை) மீண்டும் திறக்கப்பட்ட போது 08/04/2002 படைவலுச் சமநிலை எட்டி யாழிற்கான பாதையைத் திறந்த போது யாழிற்குள் செல்லத் தயாராக நிற்கும் அரசியல்துறையினர் வரும் தம் மீட்பர்களைக் காண முண்டியடிக்கும் தமிழ் குலம் | கட்டுப்படுத்தத் திணரும் சிங்களப் படையினர. இதில் குறிப்பிடத் தக்க விடையம் என்னவென்றால், இவர்கள், சிங்களவரே, கூறினர், பெருமளவான மக்கள் அன்று புலிகளைக் காண வந்திருந்தார்கள் என்றும் தம்மால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றும். விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்துறையின் பொறுப்பாளர் இளம்பருத்தி எ ஆஞ்சநேயர் அவர்களை (மாவீரர்) மக்கள் கூட்டத்தினரால் தூக்கிச் செல்லப்பட்டார். முகமாலை சோதனைச் சாவடி நுழைவுவாயில்
  18. தரைக்கரும்புலி மேஜர் மறைச்செல்வன் 'அன்னார் 85 மிமீ சுடுகலன் (தகரி எதிர்ப்பு) பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்' 'அன்னார் குறிசாடுநர் பயிற்சியில் ஈடுபடுகிறார்'
  19. பெயர் அறியில்லா கரும்புலியின் வரைகவியை (beret) சரி செய்கிறார் மேஜர் ஆந்திரா. அங்கால் நின்று சிரிப்பவர் மேஜர் நித்தி ஆவார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.