Everything posted by நன்னிச் சோழன்
-
'தமிழன் கனவு' என்ற ஈழத் தமிழரின் எதிர்காலத்தை அன்றே எதிர்வுகூறிய புத்தகம்
//தேனைமறந்து கள்ளுண்டு கிடந்தவர் திருந்தி எழுந்தாரங்கே பூனை நாயெனத்தமிழன் இழிவுற்ற புன்மையினி இல்லையென்று வானை இடித்ததோர் சங்கம் ஒருவன் வல்லவனங்கே உரைசெய்வான்.// பாருங்கோ, நாம் குடி போதைக்கு அடிமையாவோம் என்றும் அதிலிருந்து மீளுவோம் என்று எதிர்வுகூறப்பட்டிருக்கிறது. மட்டுமின்றி, ஒரு சங்கம் தோன்றி அதன் (தலைவனாக்கும்) எமக்கு வழிசொல்வானென்றும் இருக்கிறது. மேற்கண்ட கட்டுரையினை எழுதியதே புலிகள் தான்!!!!!!!
-
'தமிழன் கனவு' என்ற ஈழத் தமிழரின் எதிர்காலத்தை அன்றே எதிர்வுகூறிய புத்தகம்
ஒரு கவிஞனின் தீர்க்கதரிசனம் - கவிதை இலக்கியத்தின் இனியதோர் ஊடகம். கவிஞன் - காலத்தின் குரலாய் நின்று பேசுபவன். கடந்த காலத்தைப்பற்றிய தேடலும், நிகழ்காலத்தின் மீதான தெளிவுப்பார்வையும், எதிர்காலத்தைக்குறித்த தீர்க்கதரிசனமும் ஒரு சுவிஞனுக்கு இருக்கவேண்டியது அவசியமாகிறது. இம்மூன்றும் இணைந்திருந்தமையால்தான் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சுவிஞனாக பாரதி போற் றப் படுகிறான். இனிவரும் நூற்றாண்டுகளிலும் சுளி தைகளுடாக பாரதி வாழ்ந்து கொண்டுதானிருப்பான் தமிழர்களாகிய எமது போராட்ட வரலாற்றின் இலக் கியப்பதிவுகளில் கவிஞர் காசிஆனந்தன் அவர்களுடைய கவிதைகள் முக்கியமானதோர் இடத்தினைப் பெற் றுள்ளது எனலாம். அறுபதுகளில் தமிழர் போராட்ட எழுச்சியைத் தூண் டும் விதமாக இவர் எழுதிய கவிதைகளில் எதிர்காலத் தைப் பற்றிய நோக்கு காணப்படுவதை எவரும் மறுக்க முடியாது. அந்தக்காலந்தொட்டே தமிழ்மக்கள் மீதான சிங்கள அர சின் ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் முடுக்கி விடப்பட்டு வந்தபோதிலும், அந்தக்காலத்திலிருந் தமிழ் அரசியல் அமைப்புக்களோ சாதாரண பொது மக்களோ ஆயுதப் போராட்டம்தான் இதற்கொரு வழியென்று சிந்தித்துப் பார்க்கவில்லை. தமிழன் சுயகெளரவத்துடன் வாழ்வதற்கு தனிநாடு ஒன்றுதான் முடிவு என்பதனையும் அதனை அடைவ தற்கு ஆயுதப்போராட்டமே வழி என்பதனையும், அறுபதுகளில் எழுதப்பட்ட காசியின் கவிதைகள் கூர் மையுடன் கூறுகின்றன. தமிழருக்கென்று தனிப்படை யொன்று உருவாக வேண்டுமென்ற கவிஞரின் கனவுகள் அப்போதே கவிதைகளாகி விட்டன. அத்துடன்- அந்தப்படை எவ்வாறான வீரத்தையும், உறுதியினையும் கொண்டதாகவிருக்கும் என்ற அந்தக்கனவுகள் இன்று சுண்முன்னே நிதர்சனமாகி வருகின்றன. 1968 ம் ஆண்டு நூலுருவான 'தமிழன்கனவு' கவிதை களை இன்று படித்துப்பார்க்கும்போது வியப்பாக இருக் கின்றது. அந்தக்கவிதைகள் சிலவற்றினை இன்று மீட்டுப் பார்ப்பது சுகமான சுவையானதோர் அனுபவமாகவிருக்கும். தமிழனின் அவல நிலைகண்டு அவருக்குள் எழுந்த போர்க்குணத்தினை இவ்வரிகள் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. காலமுனிவனின் கூற்றாக சுவிஞர் சொல்லும் இன் னொரு பாடலில் திடமானதொரு நம்பிக்கை இதழ் விரிக்கிறது. போராட்டப்பாதையில் தமிழ்ப்படை இடையிடையே எதிர்கொள்ளும் இடையூறுகளையும் கற்பனை செய்து அப்போதே கவிஞர் வேதனைப்பட்டிருக்கிறார். பிரிவினைவாதங்களால் ஏற்படும் குழப்பங்களை எண்ணி கவிஞர் ஆதங்கப்படுகிறார். முரண்பாடுகள் தீர்கிறது. படைமீண்டும் ஒன்றுசேர் கிறது. கவிஞர் மகிழ்ச்சிக்கடலில் குளிக்கிறார். சொந்த இனத்தவனாலேயே காட்டிக் கொடுக்கப்படும் சம்பவங்களையும், எதிரியின் தாள்பிடித்து அடிமைச் சுகங்களில் மூழ்கிக்கிடக்கும் தன்மைகளையும் கவிஞர் சாடுகிறார். . காட்டிக்கொடுக்கும் கயவர்கள் மீது கடுமையான கோபக்கனலை எறிகிறார் கவிஞர். தமிழருக்கென தனியானதோர் படை உருவாகி அது எதிரிகளுக்கெதிராக உக்கிரமான போரை நடாத்தும் என சராசரி மனிதர்கள் எவரும் அறுபதுகளில் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். வானிலிருந்து மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதல்களை தமிழ் மக்கள் சந்திக்க வேண்டிவருமென்பதை அப்போது எவரும் எண்ணிப் பார்த்திருக்க முடியுமா? ஆயுதப் போராட்டம் தோன்றி எண்பத்து நான்காம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே விமானத் தாக்குதல் ஒன்றைக் கண்டோம். இப்போது விமானத் தாக்குதலே எதிரியின் பிரதானத் தாக்குதலாக அமைந்துவிட்டது. அட! கவிஞர் அதனை அறுபதுகளிலேயே கற்பனை செய்து விட்டார் தெரியுமா! அது மட்டுமல்ல, தாக்கும் விமானத்தைத் திருப்பித் தாக்கும் வலிமையினை தமிழ்படைபெறும் என்பதனையும் அவர் அப்போதே பாடிவைத்துவிட்டார். எவ்வளவு நிதர்சனமாகிவிட்ட கற்பனை...! காசி அவர்கள் வித்தியாசமானதோர் சுவிஞன். தமிழைப்பற்றியும், தமிழரின் தன்மானப் போராட்டம் பற்றியுமே அவர் பாடியிருக்கிறார். கனவு விமானம் செய்து, காதற்பெண்களுடன் காற்றிலே பவனிவரும் கவிதை வரிகளை மட்டும் அதிகமாக வரையும் கவிஞர்களிடமிருந்து இவர் வேறு படுகிறார். இவரின்காதல் தமிழ்க்கன்னியைச் சுற்றியே படர்ந்து வந்துள்ளது. தமிழ்ப்படையின் அமைப்பையும் அழகையும் ஆனந்தமாக கற்பனை செய்து கவிஞர் மகிழ்ந்திருக்கிறார். தமிழ்மறப்படையின் மூலமாக இறுதியில் தனிநாடு உருவாகும். அந்நாடு எல்லா விதங்களிலும் சுதந்திரம் பெற்றதாகவே அமையும் என்பதையும் கவிஞர் சொல்ல மறக்கவில்லை. அறுபதுகளில் கவிஞர் கண்ட கனவுகளின் பல கட்டங்கள் இன்று நிதர்சனமாகி வருகின்றன. அவரின் கனவின் இறுதிக் கட்டமும் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதனையும் அவர் கண்கூடாக கண்டு மகிழ வேண்டுமென. மாமனிதர் விருது பெற் றிருக்கும் அவரை வாழ்த்துவோம். இன்னொரு நிலவில் சந்திப்போம். சாளரம் | ஆகஸ்ட் 1991 | பக்கம் 14- 16
-
வேவுப்புலிகள் இன் படிமங்கள் | Recon Tigers' Images
- Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(5).png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(4).png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(3).png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(2).png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(1).png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் ஐயனே, களத்தை நவீனமாக்கிய போது, முகப்பிலும் ஏதேனும் தகுந்த மாற்றம் செய்வீர்கள் என்றெண்ணினேன், வேறொன்றுமில்லை! Views... தெரியப்படுத்தியமைக்கு நன்றி.- cwrdhokili.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Mercs Uhana.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நிர்வாகத்தினரே முகப்பு இன்னும் மாறவில்லை, அப்படியே உள்ளது. Mobile Version இல் "views" தெரியவில்லை.- குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் 4 நாட்கள் குடாரப்புத் தரையிறக்கம்: மூன்றாம் நாள் எழுதியது கிடைக்கப்பெறவில்லை!- 34 replies
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
- ஓயாத அலைகள் - 3
- வித்துடல்
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள்- 22 களமுனைகளிலும் அரசியலை விதைத்த மேயர் மிகுதன் ! உத்தம குறிக்கோளாம் தமிழீழ விடிவுக்காக சொல்ல முடியாத துயரங்களை தம் தோழ்களில் சுமந்து நெருப்பாற்றை நீந்திக் கடந்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சிந்திய குருதி இன்றும் பல ஆயிரம் நினைவுகளை எமக்குள்ளே விதைத்துச் சென்றதை மறுக்க முடியாது. அவ்வாறுதான் மாறன்-8 அடிப்படைப் பயிற்சி முகாமில் ஒரு புலி தயாராகிக் கொண்டிருந்தான். தேசக் கனவை தன் உள்ளத்தில் சுமந்தவனாக, நேரிய சிந்தனைகளும், தேசியத் தலைமை மீதான அடங்காத நேசமும், விடுதலைப் போராட்டத்தின் மீதான அடங்காத பற்றும் கொண்ட வேங்கையாக உருவெடுத்தான் மிகுதன். எதையும் செய்து முடிக்கு அசாத்திய துணிச்சல் கொண்டவன், எந்த விடயத்துக்காகவும் யாரிடமும் கறைபடியாத அளவுக்கு தன் சிந்தனைகளில் மட்டுமல்லாது செயற்பாடுகளிலும் நேரிய போக்குக் கொண்டவன். அச்சம் என்பதன் அர்த்தம் தெரியாதவன். களமுனைகளை மட்டுமல்ல மக்கள் பணிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த பெரும் வேங்கை. அடிப்படைப் பயிற்சி முடிவடைந்த பின் அரசியல்துறை கல்விப்பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டு பணியாற்றத் தொடங்கினான். மிகுதன் கல்விப்பிரிவுப் போராளியாக இருந்த போது முதல் சண்டைக் களமுனை நோக்கி நகர்த்தப்படுகிறான். பூநகரி நோக்கிய சிங்களத்தின் படையெடுப்பான “சுழல்காற்று “ நடவடிக்கைக்கு எதிராக தடுப்புக் காவல் வேலியாக சண்டைக் களம் புகுந்தான். அன்றில் இருந்து இறுதி வரை அவன் சண்டைக் களங்களை பிரிந்திருந்தது குறைவு. அரசியல் பணிகளில் இருந்தாலும் சண்டைக் களங்களை நோக்கிய வீரானாகவே வாழ்ந்தான். பள்ளிக்கல்வியை க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவான நிலையிலும் அதைத் துறந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்த மிகுதன் எதையும் இலகுவில் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவன். அடிப்படையிலே ஆங்கில மொழியறிவைக் கொண்டிருந்தாலும் சிறப்பு ஆங்கிலப் பயிற்சிகள் மூலமாக இயக்கத்துக்குள்ளே தன்னை வளர்த்துக்கொண்டான். அதனாலோ என்னவோ சர்வதேச அரசியலையும், அரசியல் பொருளாதாரத்தையும் அல்லது உலக நாடுகளின் ஒழுங்குகளையும் அவர்கள் எதிர்காலத்தில் எம்மீது எவ்வாறான நிகழ்ச்சி நிரல்களில் நகர்வுகளை மேற்கொள்வார்கள் என்ற பலமுனை எதிர்வுகூறல்களைக் கூறக்கூடியவனாக நன்கு கற்றுத் தேர்ந்தான். அரசியல்துறையின் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரம் அடையும் போது சிறப்பு நடவடிக்கைகளுக்காக கல்விப்பிரிவுப் போராளிகளும் விசேடமாக களமிறக்கப்படுவர். அப்போது அக் காலத்தில் பாடசாலைகளில் அல்லது கல்வியாளர்களின் சந்திப்புகள் நடந்த போதெல்லாம், எதிர்வரும் கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கூறுவதனூடாக அல்லது தெளிவான விளங்கங்களை வழங்குவதனூடாக இயக்கத்தின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு பெரிதும் வழி வகுத்தவன். சில போராளிகளுக்கு பேச்சாற்றல் இருப்பதில்லை. ஆனால் அறிவுசார்ந்த கருத்துக்களால் சபையினை தம் கட்டுக்குள் கொண்டு வரும் அதி திறன் அவர்களிடம் இருக்கும். அவ்வாறான ஒரு திறனுடன் தான் விசேட பரப்புரைகள் நடக்கும் போதெல்லாம் ஒரு தூணாக மிகுதன் பயணித்தான். போராளிகளுக்கான அரசியல் தெளிவூட்டல்கள், வகுப்புக்கள் என பெரும் பணியை தனதாக்கிக் கொண்டான். ஒவ்வொரு களமுனையாக செல்வதும் அங்கே காவல் வேலிகளாக இருக்கும் போராளிகளுடன் தனித்தனியாகவும், இருவர் அல்லது மூவர் கொண்ட அணிகளாகவும், அல்லது 30 பேர்கொண்ட ஒரு அணியாகவும் தேசியத்தலைவரின் சிந்தனைகள், எதிர்பார்ப்புக்கள், உலக நிகழ்ச்சி நிரல்கள் , சமகால அரசியல் நகர்வுகள் , மக்களின் எதிர்பார்ப்புக்கள் என அறிவார்ந்த தெளிவூட்டல்களைச் செய்வான். அதற்காக அவன் நடக்காத காடுகள் இல்லை. அவனின் பாதம் பதியாத காவலரண்கள் இல்லை. சுற்றிச் சுற்றி தமிழீழ எல்லைக் காவலரண் போராளிகள் அனைவருடனும் நெருங்கி இருந்தான். அவர்களின் தேவைகளை, பிரச்சனைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை உரியவர்களூடாக பெற்றுக் கொடுத்தான் பள்ளிக்கல்விக் காலம் தொட்டு கலை இலக்கியப் பணிகளில் முன்நிற்கும் மிகுதன் மற்றவர்களைக் கவரும் கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் வலம் வந்ததும் அவனின் பலங்களில் ஒன்று. அடிப்படைப் பயிற்சி முகாமில் நடக்கும் வாராந்த கலைநிகழ்வுகளை எடுத்துப் பார்த்தால் கலை இலக்கியப் பணியில் முதன்நிலையாக இருப்பது மிகுதன் என்றால் அது மிகையாகாது. தனது எண்ணங்களை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் பட்டிமன்றங்கள் மற்றும் நாடகங்களாகவும் வெளிக்கொண்டு வந்து தமிழீழ இலக்கியப் பரப்புக்குள் அவனும் நிமிர்ந்து நின்றான். இவ்வாறான காலத்தில் தமிழீழ அரசின் உத்தியோகபூர்வ நாளிதழான ஈழநாதம் நாளிதழின் பணிக்காக பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களால் அனுப்பப்பட்ட போது எவ் விதமான அடிப்படைக் கணினி அறிவும் அற்ற நிலையில் உள்ளே செல்கிறான். அங்கே பக்கவடிவமைப்புப் பிரிவுக்குள் தன்னை ஈடுபடுத்துகிறான். எதையும் ஆய்ந்து அறியும் ஆற்றல் கொண்ட மிகுந்தனால் அங்கே இருந்த கணனிகளை கையாள்வது என்பது குறுகிய காலத்தில் இலகுவான காரியமாகியது. நெஞ்சிலே விடுதலை வேட்கையும் எதையும் உடனடியாக கற்றுக்கொள்ளும் திறனும் ஒருங்கே கொண்ட மிகுதன் தன் விடா முயற்சியினால் அங்கிருந்த வடிவமைப்பாளர்கள் மற்றும் கணினித் தொழில்நுட்பவியலாளர்களின் உதவி கொண்டு சிறுக சிறுக கணினியில் தன் கரங்களைப் பதித்தான். வடிவமைப்பின் (Graphics Design) பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு மத்தியில் ஈழநாதம் நாளிதழ் பணியகத்தையும் தாண்டி அவனது வடிவமைப்பு பேசப்படுமளவுக்கு தன்னை மேம்படுத்திக் கொண்டான் மிகுதன். ஒரு கட்டத்தில் இங்கிருந்தவர்களுக்கு புது ஆலோசனைகளை வழங்குவது தொடக்கம் கற்றுத் தந்தவர்களைக்கே புதியவற்றைக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு தன்னைப் புடம் போட்டான். “ ஈழநாதம் “ நாளிதழ், “வெள்ளிநாதம்” வார சிறப்பிதழ் மட்டுமல்லாது, விடுதலைப்புலிகள் மாதவிதழ், நாவல்கள் என மிகுந்தனின் வடிவமைப்புப் பணி அனைவரையும் வியக்கும் வண்ணம் மேம்பட்டிருந்தது. இவ்வாறான பணிகளினூடாக தன் அரசியல் பயணத்தை தொடர்ந்த மிகுதனை கல்விப்பிரிவால் வெளியிடப்பட்ட மாதவிதழின் வடிவமைப்புத் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கத் தவறவில்லை. இதன் அடுத்த நிலையில் அவனை சமாதானச் செயலகம் உள்வாங்கிக் கொள்கிறது. சர்வதேச நாடுகளின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில் உருவான ரணில் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த சமாதான உடன்படிக்கைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பிரிவான சமாதானச் செயலகத்தில் தன் பணியை விரிவுபடுத்தி புலம்பெயர் நாடுகளுக்கும் அரசியல் பணிகளுக்காக சென்று வந்தான். இந்த நிலையில் எம் தாயகத்தை இயற்கையின் சீற்றமான சுனாமி பேரலை தாக்கி பெரும் இன்னல்களைத் தந்து சென்ற போது அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான வடமராட்சிக்கிழக்குப் பகுதியில் பணியாற்ற அனுப்பப்பட்ட போது அவர்களுக்கான மீள் வாழ்வாதார கட்டுமானங்களை மட்டுமல்லாது அவர்களின் உளவியல் சார்ந்த தேவைகளையும் நிறைவேற்றுவதில் வெற்றி கண்டு பாராட்டுதல்களைப் பெற்றிருந்தான். இது நடந்து கொண்டிருந்த நேரம் திட்டமிட்டு எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சமாதான உடன்படிக்கை முறிந்து சண்டை தொடங்கிய காலத்தில் சமாதானச் செயலகத்தில் இருந்து பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களால் அவரது பிரத்தியேகப் பணிகளுக்காக அழைக்கப்படுகிறான். அவரது பிரத்தியேக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அதே வேளையிலும் சண்டைக் களங்களுக்குச் சென்று வந்தான் மிகுதன். போராளிகளோடு அரசியல் விழிப்பு செயற்பாடுகளை கதைத்தான். அவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நாளில் தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து இலங்கை வான்படையின் வான்கலங்கள் கிளிநொச்சி நகரில் இருந்த அவரது முகாமைத் தாக்குகின்றன. தமிழீழ விடியலை தன் நெஞ்சிலே சுமந்து தமிழீழக் களங்கள் எல்லாம் அரசியல்பணிக்காக நடந்து திரிந்த பெரு வேங்கையான மிகுதன் தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த தன் பொறுப்பாளரை காத்துவிடும் துடிப்போடு முயன்றாலும் அவருடனும் தன் தோழர்களுடனும் வான்படையின் தாக்குதலில் விழி மூடி விதையாகிப் போனான். இ.இ.கவிமகன் 02.11.2018- வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்!
தனக்கென முயலா நோன்றாள் பிறர்கென முயலுநர் உண்மை யானே ….. தமிழீழ விடுதலைப்போராட்டம் சந்தித்த மிக இறுக்கமான நேரங்களில் எல்லாம் ஒரு மைல் கல்லாக, திருப்புமுனையாக போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் பெரும் பலம் பொருந்திய ஆயுதமாக “கரும்புலிகள்” என்ற உயிராயுதங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கினார். 1987 ஆம் ஆண்டு யூலை 5, “ஒபரேசன் லிபரேசன்” என்ற பெயரில் வடமராட்சி மண்ணை சிறிலங்காப் படைகள் வல்வளைப்புச் செய்த போது ,கொத்துக் கொத்தாய் எம் உறவுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துகள் அழிக்கப்பட்டன. சொந்த மண்ணிலே வாழ முடியாது மக்கள் ஏதிலிகளாய் பெரும் அவலங்களை சந்தித்தனர். இந்த நேரத்திலே, வடமராட்சி மண்ணின் சில பகுதிகள் அரச படைகளால் கைப்பற்றபட்டதோடு, வெற்றி மமதையில் இருந்து கொண்டு மீண்டும் ஒரு பட நடவடிக்கைக்கு தம்மை தயாராக்கினர் சிறிலங்கா படைகள். இந்த நிலையிலே,அரச படைகளின் கொட்டத்தை அடக்கி மீண்டும் எமது மண்ணை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் விடுதலைப்புலிகளிடம் இருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் சிறிலங்காப் படைகளால் நிரம்பி வழிந்தது. எந்த நேரத்திலும் இன அழிப்புக்கான அடுத்த கட்ட படை நடவடிக்கை ஆரம்பமாகி விடும். இப்படியான ஒரு சூழலில் தான் ஒரு மனிதனால் தன்னுடைய நாட்டுக்காகத் தன்னுடைய மக்களுக்காகச் செய்யக்கூடிய அதி உயர் ஈகமாக கொடையாக தன்னுடைய உயிரை ஆயுதமாக்கி மெய்சிலிர்க்க வைக்கும் ஈக வரலாற்றின் முதல் அத்தியாயத்தை தொடக்கி வைத்தான் கரும்புலி கப்டன் மில்லர். அன்று தொடங்கிய ஈக வரலாறு பின்னாளில் விடுதலைப்போராட்டம் சந்தித்த பெரு வெற்றிகளுக்கெல்லாம் திறவுகோலாய் அமைந்தது. எமது போராட்டம் சந்தித்த பெரும் நெருக்கடிகளில் இருந்து எமது மண்ணையும் மக்களையும் காப்பதற்காக தேசத்தின் புயல்களாய் வீசிகடல்தனில் காவியமாகி ,காற்றிலே ஏறி விண்ணையும் சாடி, ஊர் பேர் தெரியாத நிழல் கரும்புலிகளாய் மாறி உயிர் கொடைகளை அள்ளித் தந்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து நெஞ்சிருத்திக் கொள்ளும் திருநாள் இன்று. உண்மையிலே பார்ப்பவர்களுக்கு நெருப்பு மனிதராய் தெரியும். இந்தக் கறுப்பு மனிதருக்குள் இருக்கும் மென்மையும் ,ஈரமும் வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லி விட முடியாதவை. “வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்” யாரிவர்கள்…………விண்ணில் இருந்து குதித்து வந்த விசித்திர மனிதரல்ல…..எம்மைப் போலவே இரத்தமும் சதையுமாய் ஈழத் தாய்குலத்தின் மடியில் பிறந்து வளர்ந்த சரித்திரங்கள். அவர்களுக்கும் அம்மா,அப்பா ,உடன் பிறந்தோர், சொந்தம், சுற்றம் என பந்தங்கள் பல இருந்தன. துன்பங்கள் தெரியாத சுகமான வாழ்வு இருந்தது. பள்ளிப் படிப்பும், நண்பர் கூட்டமும் இருந்தன. இளமைக்கால வண்ணக் கனவுகள் இருந்தன. ஏன் ஒரு சிலருக்குள் அழகான காதல் கூட இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்த மக்களையும் ,தேசத்தலைவனையும் அவர்கள் நேசித்தார்கள். தமிழீழ மண்ணின் விடுதலையைத் தம் இலட்சியமாக கொண்டார்கள். அதனால் தான் கரும்புலிகள் என்ற உயரிய ,உன்னதமான இலட்சியக் கனவை அவர்களால் நிறைவேற்ற முடிந்தது. இந்த இலட்சியக்கனவை நிறைவேற்றுவதற்காக எத்தனை நாள் காத்திருப்பு ……வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கடின பயிற்சிகள்….ஓய்வு உறக்கமின்றிப் போன எத்தனையோ இரவுகள் ….பசிகூட மறந்து போன பொழுதுகள்,தம் இலக்கை நோக்கிச் செல்வதற்குள் எத்தனையோ தடைகள் ,அத்தனையும் ,கடந்து பகை அழித்து வென்றவர்கள் இவர்கள். இந்த இடத்தில ஒரு சிறிய சம்பவம் ஒன்றைப் பதிவாக்க நினைக்கிறேன் . இன்று தன்னுடைய ஆளுமையாலும், போரியல் நுட்பத்தாலும், மனித நேயத்தாலும்,சுய ஒழுக்கத்தாலும் உலகமே வியந்து பார்க்கும் எம் தலைவர் அவர்கள்,தாக்குதலுக்காகப் புறப்படும் கரும்புலிகளிடம் ஒரேயொரு விடயத்தை மட்டும் மிகவும் வலியுறுத்தி சொல்லுவார் . “ நீங்கள் தேடிச் செல்லும் இலக்கு எதிரிகள் மட்டும் தான். எதிரி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த மக்களும் எங்களுடைய நேசிப்புக்கு உரியவர்கள். அவர்களுக்கு எந்தவொரு சிறு தீங்கோ இழப்போ ஏற்படக் கூடாது. இந்த விடயத்தில் அனைவருமே மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.” எங்கள் தேசத்தலைவனின் அந்த வாக்கு இலக்கைத் தேடிச் செல்லும் ஒவ்வொரு கரும்புலிக்குள்ளும் இருந்தது. அப்படித்தான் அவனுக்கான இலக்கு பகை வாழும் இடத்தில இருந்தது. எத்தனையோ நாள் காத்திருப்பு. எத்தனையோ பல முயற்சியின் பின் அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பம். எதிரியை மிக நெருங்கி விட்டான். அந்த நேரம் சிறுவர்கள் விளையாடுவதற்காக அந்த இடத்துக்குள் வந்துவிட்டார்கள். அவன் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடும். ஒரு நொடி அவனது மனதில் தலைவரின் அறிவுறுத்தல் நினைவுக்கு வருகின்றது. அந்த கணமே அவன் பின் வாங்குகிறான். ஆனால் எதிரிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவன் சுற்றி வளைக்கப்படப் போகின்றான். எதிரியிடம் பிடிபடக் கூடாது. அதே நேரம் பொதுமக்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது. உடனே மக்கள் நட மாட்டம் இல்லாத பகுதியை நோக்கி அவன் ஓடுகின்றான். மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு தன் உடலில் கட்டிய வெடிமருந்தை வெடிக்க வைத்து சாவை அணைத்துக் கொள்கின்றான். உண்மையிலே அவனது சாவு என்பது ஒரு சம்பவமாகி விடவில்லை . அவன் தன் உயிரை விட எதிரி இனத்தைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் அவர்களையும் எவ்வளவு நேசித்தான் என்பதன் அடையாளம் தான் அவனுடைய சாவு. இது முகம் மறைந்த கரும்புலி வீரன் ஒருவனின் வரலாறு. இது ஒரு சம்பவம் ஆனால் இப்படி எத்தனையோ வெற்றிச் சரித்திரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எதிரியின் குகைக்குள்ளே இருந்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ,பகையோடு உறவாடி, சாதுரியமாய் தமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி, வெளியே தன் முகம் மறைத்து ,உள்ளே தன் இலக்கழித்து வெற்றிகளைத் தந்து விட்டு நினைவுகள் கல் கூட இன்றி, ஏன்ஆணா, பெண்ணா என்று கூட தெரியாது வீரச் சாவுகளின் பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிழல் கருவேங்கைகளின் ஈகத்தை எப்படி எழுத வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும். அழகான காதல் அவனுக்குள் அழகான காதல் இருந்தது. தன் காதலை எப்படியாவது அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று பல தடவை அவன் முயற்சி எடுத்தான்.அது வாழ்வதற்கான காதல் அல்ல .இலட்சியத்தால் ஒன்று பட்டு வரலாறுகளைப் பதிவதற்கான இலட்சியக் காதல். அவன் யார் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவன் தன்னை விரும்புகிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். ஆனால் ஒரு போதும் அவனது காதலை அவள் ஏற்க வில்லை. அவனுக்கான இலக்கு கிடைத்து விட்டது் அவன் புறப் படப் போகின்றான். இறுதி விடை பெறுவதற்காக அவளிடம் வருகின்றான். அப்போதும் அவனைச் சந்திக்க அவள் மறுத்து விடுகின்றாள் . அவன் வழமையான தன் புன்னகையோடே புறப்பட்டு விட்டான். அன்று இரவே சிறிலங்கா கடற்படையின் கப்பல் தகர்த்து கடலிலே காவியம் படைக்கின்றான். அவனும் கூடவே 3 தோழ தோழியருமாக தொலைத்தொடர்பு சாதனம் காற்றலையில் அவனது வீரச்சாவு செய்தியை தாங்கி வருகின்றது. அவள் விழிகளில் நீர் கோர்த்தது. தோழிகள் அவளிடம் கேட்கின்றனர் . “ அவன் உன்னிடம் பேச நினைத்த போதெல்லாம் நீ பேச வில்லை, இப்போது எதற்காகக் கவலைப்படுகின்றாய்” என அதற்கு அவள் சொல்கிறாள் “ நான் காதலிக்கிறேன் என்ற அந்த ஒற்றைச் சொல் ,அவரது இலக்கு நோக்கிய பயணத்தில் ஒரு சிறிய தடுமாற்றத்தைக் கூட ஏற்படுத்தி விடக் கூடாது. சில வேளை இலக்குச் சரியாக அமையாமல் அவர் திரும்பி வந்தால் கூட என்ர மனது குற்ற உணர்வில் துடித்துப் போய்விடும். எப்போதும் அவர் தன்னுடைய இலட்சியத்தில் வெற்றி அடையவேண்டும் இது தான் என்னுடைய ஆசை. உண்மையிலே நானும் அவரை மனதார நேசிக்கின்றேன்.அவரை மட்டுமல்ல ,அவரது இலட்சியங்களையும் சேர்த்து வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல செயலிலும் அவள் நிரூபித்துக் காட்டினாள். விளையாட்டுப் பிள்ளை அவன் ஒரு குழப்படிக்காரன் . ஒரு இடத்தில இரு என்றால் அது அவனால் முடியாத காரியம். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்ததனாலோ என்னவோ அவனுக்கு அளவுக்கு அதிகமான செல்லம். அம்மாவுடன் சேர்ந்து குடும்பச்சுமையை மூத்தவர்கள் சுமக்க வீட்டில் நிற்கும் இவனோ ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பிரச்சனைகளை அம்மாவின் தலையில் ஏற்றி வைப்பான். அந்தளவுக்கு குறும்புக்காரன் . வேலை முடித்து களைத்து வரும் அம்மா ஏக்கத்தோடே வீட்டுக்கு வருவார். இன்றைக்கு என்ன செய்து வைத்திருக்கின்றானோ என்ற பதபதப்பு அம்மாவுக்குள் எப்போதும் இருக்கும். ஒரு நாளைக்கு விழுந்து கைய முறிச்சிருப்பான் இல்ல காலில் அடிபட்டிருப்பான் ,இல்ல எதோ வெட்ட எடுத்த கத்தி கைய பதம் பார்த்திருக்கும். அதுகும் இல்லை என்றால் அயல் வீட்டுச் சிறுவர்களோடு அடிபட்டு பிரச்சனையை இழுத்து வைத்திருப்பான் . அப்படியொரு விளையாட்டுப் பிள்ளை அவன். ஆனால் இப்போது அவன் ஒரு கரும்புலி வீரன் , அதுகும் நீரடி நீச்சல் கரும்புலி. மூன்றாம் கட்ட ஈழப் போரின் திறவுகோல்களில் ஒருவனாக அவன். சாவுக்கு நாள் குறித்த அவர்கள் பயணம் தொடங்குகின்றது. இடியும் மின்னலுமாய் மழை கொட்டிக் கொண்டிருக்க, நீரின் அடியால் வெடிமருந்துகளைச் சுமந்த படி அவர்கள் …….. திருமலைத் துறை முகம் பலத்த பாதுகாப்பு நிறைந்த கோட்டையாக இறுமாப்புடன் இருந்தது. அந்தக் கோட்டைக்குள் அலையோடு அலையாக எதிரி விழிப்படையா வண்ணம் மெல்ல மெல்ல நகர்ந்து , எதிரியின் பாதுகாப்பு வேலிகளைக் கடந்து உள்நுழைந்து ,தமக்கான இலக்கைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார்கள். இன்னும் 30 நிமிடங்கள் மிக நிதானமாக கப்பலில் குண்டினைப் பொருத்தி எதிரி விழிப்படையா வண்ணம் மிக அமைதியாகத் தம் கைகளால் அதைத் தாங்கியபடி அவர்கள் நேரங்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன. தம் சாவுக்கான ஒவ்வொரு மணித்துளிகளையும் எண்ணிய படி தேசத்தலைவனும், தாம் நேசித்த மக்களும் , மலரப் போகும் தமிழீழத் தேசமும் மனக் கண்ணில் நிலைத்து நிற்க ,ஆடாமல் ,அசையாமல் ,விலகாமல் குண்டை அணைத்த படி அவன்.அந்தக் கடைசி மணித்துளி ……..” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” திருமலைத்துறைமுகம் அதிர்கின்றது. கப்பல் தகர்கிறது. ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருக்கத் தெரியாத அந்தத் தீராத விளையாட்டுப்பிள்ளை நம் தேச விடுதலைக்காக போரியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி மூன்றாம் கட்ட ஈழப் போரின் திறவுகோலாக வரலாற்றைப் படைத்தான் கடற்கரும்புலி மேஜர் கதிரவன். அக்கினிக் குஞ்சுகள் அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு ஆண், பெண் கரும்புலிகள் தயாராகின்றனர். இலக்கை அழிப்பதற்கான ஓயாத பயிற்சிகள் எல்லாம் நிறைவடைந்து விட்டன. தேசத்தின் புயல்கள் புறப்படுவதற்கான பொழுது நெருங்கி விட்டது. தாய்க் குருவியோடு சேய்க்குருவிகள் மகிழ்ந்திருக்கும் அந்த அழகான தருணத்துக்கான காத்திருப்பு கறுப்புவரிச் சீருடைக்குள் புன்னகை வீசிய படி குதூகலத்துடன் அந்த உயிராயுதங்கள் அணிவகுத்து நின்றார்கள் . எங்கும் அமைதி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றது. தலைவர் அவர்கள் உள்ளே நுழைகின்றார். “ அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு……” என்ற பாரதியாரின் கவிதை வரிகளைச் சொல்லிக் கொள்கிறார். “உண்மையிலே எங்கட விடுதலைப் போராட்டத்தில் நீங்களும் அப்படித்தான் . கரும்புலி என்கின்ற பொறி ,இன்று எங்கட மண்ணிலும் , புலம்பெயர் தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்கள் மக்களுடைய மனங்களில் பெரும் விடுதலை தீயை மூட்டியிருக்கின்றது. உலகம் எங்கும் எமது விடுதலைப் போராட்டத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது” என்ற தலைவர் அவர்களின் எண்ணத்தை தாங்கியவர்களாய், இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் , எமக்காக வாழ்ந்து தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த இந்தக் கரும்புலிகள் நினைவு சுமந்த நாளில் , அவர்களின் கனவாகிய தாயகக் கனவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்கின்ற தார்மீகப் பொறுப்புணர்ந்து அனைவரும் ஒன்றுபட்டு பயணிப்போமாக. அ.அபிராமி – https://eelamaravar.wordpress.com/2019/07/04/black-tigers-17/- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -21 வன்னியில் விழிப்புலனற்றவர்களுக்கும் கணனிக் கல்வி வழங்கிய அறிவியற்கழகம். அப்போதெல்லாம் அடிக்கடி “இளையோர் அறிவியற் கழகம் “ என்ற பெயர்பலகை நிமிர்ந்து நின்ற இடத்தை கடக்க வேண்டிய தேவை எனக்கு இருந்தது. அதைக் காணும் போதெல்லாம் எமது தேசியத் தலைவரின் எண்ணங்களைச் சுமந்து உருவாக்கப்பட்ட அத்தனை கட்டமைப்புக்களும், அதை எல்லாம் நிர்வகித்து வந்த தமிழீழ அரசும் தான் நினைவில் வந்து செல்லும். உண்மையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத வழிப் போராட்டமாகவோ அல்லது அகிம்சை வழிப் போராட்டமாகவோ மட்டும் நடக்கவில்லை. தாயகம் தழுவிய பிரதேசங்கள் எங்கும் நிழல் அரசை எமது விடுதலை அமைப்பு உருவாக்கி சமூக விடியலுக்கான போராட்டமாகவே நடத்தி வந்ததை அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாறான தமிழீழ அரசின் ஒரு செயற்பாடாகவே கல்வி மேம்பாடும் இருந்தது. அதற்காக பல செயற்றிட்டங்களை தமிழீழ அரசு நிறுவி இருந்தது. அவற்றை முழுமையாக இப் பகிரப்படாத பக்கத்துக்குள் கொண்டு வர முடியாது என்றாலும் அதன் ஒரு அங்கமான “இளையோர் அறிவியற் கழகம்”. என்ற கல்விச்சாலை பற்றி ஒரு பக்கத்தை பதிவிடுகிறது பகிரப்படாத பக்கங்கள். வசதிவாய்ப்பற்ற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவென்று உருவாக்கப்பட்ட இந்த அறிவியற்கழகம் விசுவமடு பிரதேசத்தை சார்ந்த பல ஆயிரம் மாணவர்களின் ஆதாரமாக இயங்கி வந்தது. சர்வதேச தரத்துடன் ஒப்பிடும் போது வசதிகள் குறைவாக இருந்தாலும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது அந்தக் கல்லூரி. கணனிகள் யாவும் உள்ளக வலையமைப்பில் இணைக்கப்பட்டிருந்தன. உயர் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கான அத்தனை வசதிகளையும் கொண்டிருந்தது அறிவியற்கழகம். அறிவியல் தொழில்நுட்ப உச்ச வளர்ச்சியில் உள்வாங்கலுக்குள் எமது இனமும் அடங்கியுள்ளது. அந்தவகையில் நாங்கள் இன்றொரு தேசத்தை நிர்மாணிப்பதற்காகவும் தேசத்தை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருந்தாலும் எங்களுடைய தேசம் நாளைக்கு விடுதலை அடையும் பொழுது உலகத்தின் ஒட்டத்தோடும், அதி உச்ச வளர்ச்சியோடும் நாங்களும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் உலகப்பந்திலே எங்களுடைய தேசமும் நிலைக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். அந்தவகையில் எங்களுடைய தலைவர் எவ்வளவு தூரத்தில் எதிரியை விரட்டி எங்களுடைய தமிழீழ தேசத்தை மீட்க அவருடைய கவனத்தையும் அக்கறையையும் அவருடைய ஈடுபாட்டையும் செலுத்துகின்றாரோ அதேபோன்று இளைய தலைமுறையையும் புதிய உலக மாற்றத்தோடும் உலகத்தின் வளர்ச்சிப் போக்கோடும் இணைத்து கொண்டு போகின்ற ஒரு போராட்டத்தையும் சம காலத்தில் அவர் கையிலேடுத்து செயற்படுத்தி வருகின்றார். அதனுடைய ஒரு செயற்பாடாகத்தான் இந்த அறிவியற்கழகத்தின் தோற்றம் இங்கே கருக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் காலையில் இலத்திரணியல், அடிப்படை கணனிப் பயிற்சி , மின்சாரவியல் போன்ற அடிப்படை தொழில்சார் கல்விகளையும் அதாவது பணியுடனான கற்றல் செயற்பாடுகளையும் (பணிக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது ), மாலை நேரத்தில் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளுடனான ( அரச பாடசாலைக் கல்வித்திட்ட பாடங்கள்) கணனிக் கல்விகளையும், ICT, GIT என்று இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்த முறையே சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நுட்பப் பாடங்களையும் மாணவர்களுக்காக கற்பித்து வந்தது. அத்தோடு அங்கு பாடசாலை மாணவர்களின் அறிவு மற்றும் கலை கலாச்சார வளர்ச்சிகளுக்கான செயற்றிட்டங்களையும் செயற்படுத்தினர். இவற்றை விட நேரடியாக மக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புனர்வு செயற்பாடுகளையும், கல்விக்கான அவசியத்தை உணர்த்தும் கருத்தரங்குகளையும் நடத்தி வந்தது. இதை விட மிக முக்கியமான ஒரு செயற்பாட்டை அறிவியற்கழகம் ஆற்றி வந்ததை நான் முன்பே அறிந்துள்ள ஒரு விடயம். அதாவது வள்ளிபுனம் பகுதியில் இயங்கி வந்த விழிப்பலனற்ற இளையவர்களுக்கான இல்லமான இனியவாழ்வு இல்லத்தில் இருந்த மாணவர்களுக்கு கணனிக் கற்கைநெறி ஒன்றை செய்து வந்தது. அதற்காக அவர்கள் “Jaws “ என்ற மென்பொருளை கணனியில் நிறுவி அதன் மூலமாக எழும் ஒலி வடிவக் கட்டளைகளை கிரகித்து அதற்கு ஒலிவடிவக் கட்டளைகளை வழங்கி விழிப்புலனற்ற மாணவர்களும் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை கொடுத்தார்கள். உள்ளக பயிற்சி வகுப்புக்களில் கண்பார்வையற்ற பல போராளிகள் இக்கற்கையை பெற்றிருந்தாலும், ( நவம் அறிவுக்கூட போராளிகள்) மக்களுக்கான பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் இத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுகொடுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது அறிவியல் கழகம் என்றால் அதில் பொய்மை இல்லை. இதற்காக புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த இளையோர் அமைப்பை சார்ந்த துறைசார் பயிற்சி பெற்ற இளையவர்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து அறிவியற்கழகத்திற்கு வந்திருந்தார்கள். அதில் முக்கியமான ஒரு இளையவளை நான் அறிந்திருந்தேன். அந்த இளையவள் இப்போது எங்கே எப்படி இருக்கிறாள் என்பது தெரியாததால் அதைப் பற்றித் தொட்டுச் செல்வது நல்லதல்ல என்று கருதுகிறேன். ஆனாலும் அந்த இளையவளின் முயற்சியானது பல விழிப்புலனற்ற மாணவர்களுக்கு பெரிதும் பேறாக அமைந்தது என்பதை நான் குறிப்பிட முடியும். இச் செயற்பாடானது, பயங்கரவாதிகள் என்று தமிழீழ விடுதலைப்புலிகளை கூறி வரும் சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் நிட்சயமாக ஒரு செய்தியை சொல்லி செல்லும். தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களுக்காக போராடினார்கள். அவர்களின் நலன்களுக்காக போராடினார்கள். அவர்களுடைய சுதந்திரமான சுவாசக்காற்றுக்காக தம்மை அர்ப்ணித்தார்கள். அதனால் தான் ஒவ்வொரு தமிழனும் பாகுபாடின்றி பயன்பெறும் வகையில் தமது நிர்வாக ஆட்சியை நிலைப்படுத்தினார்கள். விழிப்புலன்றறவர்களை தூக்கி எறிந்து அவர்களை கைவிடவில்லை. அவர்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுக்க என்று பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களுடனான இல்லம் ஒன்றை நிறுவி, அதை “இனியவாழ்வு இல்லம்” என்ற பெயருடன் நிர்வகித்த அதே நேரம் அவர்களும் மற்றப் பிள்ளைகளைப் போல தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதிலும் அக்கறையாக செயற்பட்டார்கள். அதனால் தான் பலவகையான இல்லங்கள் வன்னியெங்கும் இயக்கப்பட்டன. அந்தவகையில் அறிவியற்கழகம் விடுதலைப்புலிகளின் கணனிப் பிரிவினால் இயக்கப்பட்டு வந்தாலும், இதனை நிர்வகித்து வந்தது அனைத்துலக தொடர்பகம் என்ற பிரிவு. தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணத்தில் எழுந்த இந்த செயற்றிட்டத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்கியது அனைத்துலகத் தொடர்பகத்தினூடாக “சர்வதேச இளையோர் அமைப்பு.” “சர்வதேச இளையோர் அமைப்பின் “ செயற்றிட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இக் கழகம் தனது பணியை சிறப்பாக செய்து கொண்டே வந்தது. இந்த நிலையில் சிங்கள அரசு ஒரு முறை இளையோர் அறிவியல் கழகத்தை இலக்கு வைத்து கிபிர் விமானத்தால் தாக்குதல் செய்த போதும் இங்கே யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாத வாறு அக் குண்டுகள் நிலத்துள் புதைந்து போயின. கிட்டத்தட்ட 4 குண்டுகளுக்கு மேல் வீசப்பட்டிருந்தாலும் ஒரு குண்டு மாத்திரமே வளாகத்திற்கு அருகில் விழுந்திருந்தது. அதுவும் வெடிக்காமல் புதைந்திருந்தது. மற்றைய குண்டுகள் தூரமாக வீழ்ந்து வெடித்தன. கல்வி கற்பிக்கும் பள்ளிகளையே இலக்கு வைக்கும் சிங்கள அரசு அறிவியற் கழகத்தை விட்டு வைக்கவா போகிறது? சர்வதேச இளையோர் அமைப்பின் பெரும் கனவான இவ் விளையோர் அறிவியற் கழகம் இன்று எந்த நிலையில் உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், வன்னியின் மக்கள் செறிந்து வாழ்ந்த விசுவமடுப் பிரதேசத்தில் பெரும் பேறாக இருந்த இக் கழகத்தை இன்று அழித்தொழித்திருக்கும் என்றே நம்புகிறேன். சர்வதேச மக்களைப் போல் எம் மக்களும் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணக்கருவோடு விழிப்புலன்றறவர்களுக்கும் தொழில்நுட்ப அறிவை வழங்கிய இளையோர் அறிவியற் கழகம் மீண்டும் செயற்கரு கொண்டு எழ வேண்டும் என்பதே தனது ஏக்கமாக பகிரப்படாத பக்கம் தன் மீது பதிவாக்கிக் கொள்கிறது. இ.இ.கவிமகன் 13.10.2018- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -20 மேஜர் அல்லியும் மயக்க மருந்தும்… கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து வந்து வள்ளிபுனத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு அரச மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை தமிழீழ மருத்துவப்பிரிவுக்கு இருந்ததால் பல மருத்துவப் போராளிகள் மக்களுக்கான மருத்துவப் பணியில் இருக்கிறார்கள். அதில் அல்லி என்று அன்பாக அழைக்கப்படும் பெண் போராளியும் இருந்தாள். உடலமைப்பிலும் மற்ற மருத்துவர்களின் வயதோடு ஒப்பீட்டளவில் சிறியவளாக இருந்தாலும் மருத்துவ அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்திருந்தாள். தமிழீழ தாதியர் கற்கைகள் கல்லூரியில் தனது மருத்துவ கல்வியை முடித்த அல்லி மயக்க மருந்து ( General Anesthesia /அனஸ்தீசியா) வழங்கும் மருத்துவராக சிறப்பு பயிற்சி பெற்றாள். இதற்கான பயிற்சிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிறப்பு மருத்துவர்களிடம் இருந்து பெற்றிருந்தார். அதனால் அவளது மருத்துவப் பணியின் பெரும் பங்கு சத்திரசிகிச்சை அறைகளிலையே அமைந்திருந்தது. சத்திரசிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு நம்பிக்கையும் விருப்பமுமான போராளியாக அல்லி இருந்தாள். மருத்துவத் துறையில், அதுவும் சத்திரசிகிச்சைப் பிரிவில் அதி முக்கியம் வாய்ந்த பணி என்றால் மயக்க மருந்து கொடுப்பது. அது அனைவரும் அறிந்த ஒன்று. கொடுக்கப்படும் அளவில் சிறு தவறு நடந்தாலும் அல்லது நேர விகிதங்களில் தவறு ஏற்பட்டாலும் உயிர் பிரியும் அபாயத்தைத் தர வல்லது General Anesthesia /அனஸ்தீசியா என்ற மருந்து. தற்காலிகமாக உடலியக்கத்தை நிறுத்தி வைக்கும் இம் மருந்து சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானது. தவறின் உயிர் காப்பது கடினமாகும். இதற்காக அரச மருத்துவமனைகளிலும் சரி வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் சரி சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களே பயன்படுத்தப்படுவார்கள். அதுவும் சத்திரசிகிச்சை முடிவடையும் வரை ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாசாரத்தில் பணியாற்றுவர். சில வேளைகளில் சத்திரசிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ஆளணி எண்ணிக்கை மாறுபடும். ஆனால் எமது தமிழீழ தாதிய பயிற்சிக் கல்லூரி ஒன்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற அல்லி அவர்கள் அனைவரையும் தாண்டி மருத்துவப் பணியாற்றியிருந்தாள். ஒரு சத்திரசிகிச்சை அறையில் சம நேரத்தில் நடந்த இரண்டுக்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு தனி ஒரு மயக்க மருந்து சிறப்பு மருத்துவராக ( General Anesthesia Specialist ) தனது உதவியாளர்களை ஒவ்வொரு நோயாளர்களுக்கும் தனி ஒருவர் விகிதம் நேரடியாக மயக்கமருத்து உதவியாளராகப் பயன்படுத்தி பணியாற்றி இருந்தாள். ஒரு வினாடி அளவில் கூட ஏற்படும் தவறு குறித்த நோயாளிகளை சாவடைய வைக்கும் வல்லமை பொருந்தியது. ஆனாலும் அந்த வல்லமையை உடைத்தெறிந்து தமிழீழ மருத்துவத் துறையில் தன் உதவியாளர்களினூடாக புதிய ஒரு தடத்தை பதித்திருந்தாள் அல்லி. உண்மையில் அனைவரையும் வியக்க வைக்கும் இந்த பணியானது அல்லி என்ற பெண் போராளியால் செய்ய முடிந்தது என்பது தமிழீழ வரலாற்றில் பகிரப்படாத ஒற்றைப் பக்கம். பரதநாட்டியத்தில் அதீத ஈடுபாடும் கல்வியில் அக்கறையும் கொண்ட அல்லி க.பொ.த உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது தன்னை விடுதலைப் போராளியாக மாற்றிக் கொண்டார். இருப்பினும் விடுதலைப்புலிகள் அமைப்பு அல்லி உட்பட்ட சில போராளிகளை பள்ளிக்கல்வி கற்பதற்காக அனுமதித்திருந்தது. அதனால் அவர்கள் போராளிகளாக இருந்து கொண்டு பள்ளிக் கல்வியை தொடர்ந்தார்கள் உயர்தர பரீட்சையில் நல்ல பெறுபேற்றினை பெற்றிருந்தாலும் அரச பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர கூடிய பெறுபேறு கிடைக்கவில்லை அதனால் அல்லி விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டு மருத்துவக் கற்கையை கற்பதற்காக பணிக்கப்படுகிறார். அதன் பின்பான காலங்கள் பெரும்பாலும் மருத்துவமும் மருந்துகளுமே அவரது வாழ்க்கையாகிப் போனது. கள மருத்துவத்துக்காக முன்னணி மருத்துவ நிலைகளிலும் களமுனைகளிலும் பயணித்துக் கொண்டிருந்த அல்லி மயக்க மருந்து தொடர்பான சிறப்புப்பயிற்சி பெற்றதன் பின் பெரும்பாலான நாட்களை சத்திரசிகிச்சை அறைகளிலையே கடக்க வேண்டி இருந்தது. அதுவும் மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையின் சத்திரசிகிச்சை அறைகளில் தான் அதிகமாக கடமை செய்தார். அவரது நீண்ட நாள் அனுபவம் சத்திரசிகிச்சை அறைகளில் சக மருத்துவர்களின் பணியை இலகு படுத்துவது வழமை. 25.01.2009 அன்று அல்லி மூத்த மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுடன் வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரச மருத்துவமனையில் பணியில் இருந்தாள். அப்போது சிங்கள அரச பயங்கரவாதம் மக்களுக்கான மருத்துவமனை என்பதை அறிந்தும் கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுக்கிறது. ஆட்லறி எறிகணைகள் மருத்துவமனை வளாகத்தில் வீழ்ந்து வெடிக்கின்றன. இலகுவில் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனை கூரையில் சிவப்பு நிறத்திலான சக (+) அடையாளம் மருத்துவமனைக் குறியீடாக வரையப்பட்டிருந்தும் சிங்கள இனவழிப்பு வெறியர் மருத்துவமனை மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். இங்கே மிக முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய ஒரு விடயம் ஒன்றுள்ளது. இந்த மருத்துவமனையின் ஆள்கூறு மற்றும் மருத்துவமனை பற்றிய விபரங்கள் அனைத்தும் சர்வதேச உதவி நிறுவனமான செஞ்சிலுவைச் சங்கத்திடம் மருத்துவமனை பொறுப்பதிகாரியால் வழங்கப்பட்டிருந்தது. அந்த விபரங்கள் மருத்துவமனை பாதுகாப்பு வலய ஏற்பாடுகள் தொடர்பாக சிங்கள அரசிற்கு செஞ்சிலுவை சங்கம் வழங்கி இருந்தது. இவ்வாறு மருத்துவமனை பற்றிய விபரங்களை அவர்களிடம் இருந்து பெற்ற பின்பே சிங்களம் திட்டமிட்டு தாக்குதலை நடாத்தி இருந்தது. இது முதல் தடவை நடந்ததல்ல இதற்கு முன்பும் அதன் பின்பும் பல இடங்களில் நடந்திருந்தன. அத்தாக்குதலில் அவசர சத்திரசிகிச்சை ஒன்றை செய்து கொண்டிருந்த மருத்துவர் அல்லி படுகாயம் அடைகின்றார். சிகிச்சை பெற வந்திருந்த நோயாளரின் நிலையோ மேலும் மோசமாகியது. சத்திரசிகிச்சை அறை சிதைந்து போய் இருந்தது. அதனால் அங்கே வைத்து சிகிச்சையை தொடர முடியாத நிலையில் உடனடியாக காயப்பட்டிருந்தவர்கள் உடையார்கட்டுப் பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். ஆனால் அங்கும் உடனடியாக சிகிச்சை வழங்க முடியவில்லை அங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு நிறைந்து கிடக்கிறது. ஏனெனில் அது ஒரு இராணுவ மருத்துவமனையாக இருந்தாலும் போராளிகளுக்கான மருத்துவம் மட்டுமன்றி மக்களுக்கான மருத்துவத்தையும் போராளி மருத்துவர்களே செய்ய வேண்டி இருந்தது. ஏனெனில் அங்கே அரச மருத்துவ வளம் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்தளவிலே இருந்தது. அதனால் தமிழீழ மருத்துவப்பிரிவு மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் இணைந்தே பணியாற்ற வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதனால் அங்கு இருந்த சத்திரசிகிச்சைப் பிரிவிலும் அதிகளவான காயப்பட்டவர்களுக்கான சகிச்சை வழங்க வேண்டிய நிலை இருந்தது. இது ஒரு புறம் இருக்க பாதுகாப்ப வலயம் என்ற பெயரில் சிங்களத்தால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருந்த கொலை வலயத்தில் குவிந்து கொண்டிருந்த மக்கள் தொகையை மறுபுறம் கட்டுப்படுத்த முடியாது இருந்தது. அதை விட முதலாவது பாதுகாப்பு வலயத்தில் கொலை வெறித் தாண்டவமாடி தலை உயர்த்த முடியாத அளவுக்கு தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது சிங்களப் பேரினவாதம். பனங்குற்றிகளால் சுற்றி பாதுகாக்கப்பட்டிருந்த சில அறைகளை சத்திரசிகிச்சை அறைகளாக மாற்றி இருந்த மருத்துவர்கள். காயப்பட்ட மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருப்பதால் பாதுகாப்புக்கள் எதுவுமற்று சத்திரசிகிச்சைகளை செய்ய முயன்றார்கள். ஒவ்வொரு தாக்குதல்கள் நடக்கும் போதும் நிலத்தில் குந்தி இருப்பதும் மீண்டும் எழுந்து நோயாளிக்கான சிகிச்சையைத் தொடர்வதுமாக அவர்கள் சாவோடு போராடும் காயப்பட்டவர்களை காக்க வேண்டும் என்ற துடிப்போடு போராடினார்கள். அவ்வாறான நிலையில் தான் அல்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார். சத்திரசிகிச்சை பிரிவில் காயப்பட்ட மக்கள் அதிகமாக காணப்பட்டதாலும் அல்லியின் காயம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்ற எண்ணமும் அவரை சிகிச்சைக்காக உள் எடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது. அதனால் உடனடியாக மருத்துவ உதவியாளர்களால் முதலுதவி சிகிச்சையை மட்டும் வழங்கப்படுகிறது. அல்லி காயப்பட்டதை அறிந்த அல்லியின் எதிர்கால வாழ்க்கைத் துணைவனாக வர இருந்த போராளியும் அங்கு வருகிறார். ( அல்லிக்கும் அந்தப் போராளிக்கும் திருமணம் செய்வதற்கான ஒழுங்குகளை திருமண ஏற்பாட்டுக் குழு செய்திருந்தது ஆனால் சூழல் அவர்களை திருமணப்பந்தத்தில் இணைய விடவில்லை) தன் கண்முன்னே தனது வருங்கால துணைவி காயப்பட்டிருந்த நிலையை பார்க்க முடியாது நின்றார் அந்தப் போராளி. அல்லியின் உயிர் அந்த போராளியின் கண்முன்னாலே கொஞ்சம் கொஞ்சமாக பிரியத் தொடங்கி இருந்ததை அவரும் அறியவில்லை. ஒருபுறம் சிங்களத்தின் தாக்குதல்கள் மறுபுறம் காயமடைந்து வந்த மக்கள் என தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் விரைவில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தும் மக்களின் உயிர் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்த மருத்துவர்கள் தமது சக மருத்துவரை தாமதமாகவே சத்திரசிகிச்சை அறைக்கு உள்ளே எடுத்தார்கள். ஆனால் ஏற்கனவே முழங்காலின் பின் பகுதிக்குள்ளால் உள் நுழைந்திருந்த எறிகணைத் துண்டு தொடை வழியாகப் பயணித்து வயிற்றுக்குள் சென்ற நிலையில் வயிற்றுப் பகுதியில் உள்ளக குருதிப்பெருக்கத்தை (Internal Bleeding ) ஏற்படுத்தி இருந்தது. (Septicemia) அதைக் கண்டு பிடித்து அதற்கான சிகிச்சையை ஆரம்பித்த மருத்துவர்கள் உண்மையில் தோற்றுப் போனார்கள். காயப்பட்ட உடனே அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அல்லி உயிர் தப்பி இருப்பாளோ என்ற எண்ணம் அவர்களிடையே எழுந்தது. ஆனால் மருத்துவமனையில் நிறைந்திருந்த காயப்பட்ட மக்களும் சிங்களத்தின் தொடர் தாக்குதல்களும் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை தர மறுத்திருந்தது. சத்திரசிகிச்சை அறைக்கு எடுக்கப்பட்டு அல்லிக்கு தீவிர சிகிச்சையை மேற் கொள்கின்றனர் மருத்துவர்கள் ஆனால் சிகிச்சை பலனற்றுப் போகிறது. அல்லி யாருக்காக வாழ்ந்தாளோ அந்த மக்களுக்காக இறுதி வரை வாழ்ந்தாள். ஒரே நேரத்தில் தனது உதவியாளர்களினூடாக இரண்டுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கான மயக்க மருந்தை கொடுத்து அவர்களின் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் துணையாக நின்ற மருத்துவ வேங்கை தனது வருங்கால துணைவனாக தான் ஏற்க இருந்த போராளிக்கு முன்னால் மண்ணுக்குள் மேஜர் அல்லியாக உறங்குகிறாள். இ.இ. கவிமகன் 10.10.2018 மரணம் என்பது மரணிக்கும் வரை இம் மறவர்களது வீரம் பார் முழுக்க ஓங்கி ஒலிக்கும்.- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 18 கண்முன்னே பிள்ளை சாக… செய்வதறியாது விழி கரைந்த தந்தை “தம்பி இந்தியா என்ட பிள்ளையை காப்பாத்துமா?அல்லது என் கண்ணுக்கு முன்னாலையே பிள்ளையை சாகடிக்குமா தம்பி…? நல்லூரான் முன்றலில் அடிக்கடி புரட்சிக் கவிஞர் காசியானந்தனையும் அங்கே இருந்த தேவர், வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறி போன்ற போராளிகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் தியாகதீபம் திலீபனின் அன்புத் தந்தையான இராசையா ஆசிரியர். அவர் கண் முன்னே அவர் பெற்ற பிள்ளை பசிப் போர் புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக சாவடைந்து கொண்டிருந்த கொடூரத்தை எமது தேச வரலாறு பதிவு செய்து கொண்டது எவ்வளவு கொடியது. உண்மையில் ஒரு நேர உணவை தனது பிள்ளை உண்ண வில்லை என்றால் கூட நெஞ்சில் நெருப்பேந்தி நிற்கும் தந்தைகளுக்கு மத்தியில் பசிப் போரால் இந்திய வல்லாதிக்க சக்திகளை எதிர்த்து நின்ற தியாகதீபம் திலீபனின் தந்தை எவ்வளவு மனவுறுதி இருந்திருந்தால், தன் பிள்ளை சாவதற்காக காத்திருந்த ஒவ்வொரு நொடியும் அந்த மேடைக்கு அருகில் இருந்தருப்பார்? பிள்ளை செத்துக் கொண்டிருந்ததை விழி கரைய பார்த்துக் கொண்டிருப்பார்? பூமி உயிருடன் இருக்கும் வரை எந்த தந்தையாலும் செய்ய முடியாத தியாகம் இது. மாவீரர்கள் மட்டும் அல்ல அவர்களைப் பெற்றவர்களும் தியாக வேள்வியில் தம்மை ஆகுதி ஆக்கியவர்கள் என்பதற்கு திரு இராசையா ஆசிரியர் ஒரு சாட்சியம். ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் அந்த தந்தையின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? தன் மகன் செத்து விடுவானோ என்ற ஏக்கம் ஒருபுறம் கனன்று கொண்டிருக்கும். மறுபுறம் இந்திய அரசு எப்பிடியாவது பிள்ளையை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கும். நல்லூர் கந்தன் கைவிட மாட்டான் என்று நம்பிக்கை இருந்திருக்கும். அடிக்கடி முருகனை கையெடுத்து வணங்கி இருப்பார். தாய் இல்லாத நிலையிலும் தனி ஒருவனாக வளர்த்து மருத்துவபீட மாணவனாக உயர்நிலையை பெற வைத்த அந்த தந்தை இந்த தருணத்தை எவ்வாறு அனுபவத்திருப்பார்? இருந்தாலும் அவர் தன் கண்முன்னே பிள்ளை செத்துக்கொண்டிருந்ததை தாங்கிக் கொண்டிருந்தார். இந்து சமயப் பற்றும் தமிழ் மீதான பற்றுதலும் பண்ணிசைகளும், விபூதி சந்தனம் என்று சிறுவயதில் அமைதியாக வளர்ந்த பிள்ளை தீ ஏந்தி பெரும் போர் வீரனாக மாறியது யாரால்? இன்று தன் வயிற்றில் பசித் தீயை மூட்டிவிட்டு சாவுக்கே வீரம் உரைத்து படுத்திருந்தது யாரால்? என்பவை எல்லாம் எம் மீது வல்லாதிக்கங்களை கட்டவிழுத்து விட்டிருந்த எதிரிகளுக்கு புரிந்திருக்கும். அதனால் தான் அமைதியாக பெரு வீரனை சாகடித்தது இந்திய தேசம். நெஞ்சை உருக்கும் அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கிய இந்திய தேசத்தை நாம் என்னவென்று கூற? தமிழீழ விடியலுக்காக களம் கண்ட தமிழீழ விடுதலைப்புலிகளை முடக்கி விட வேண்டும் என்ற அப்போதைய சிங்களத்தின் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை இடையே யூலை 29, 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் என்று கூறப்பட்ட “இலங்கை இந்திய” ஒப்பந்தத்தை வைத்து இந்திய வல்லாதிக்கப்படை இலங்கைக்குள் அமைதிப்படை என்ற பெயரில் கால் வைத்தது. இந்திய வல்லாதிக்கத்தின் கபடத்தை புரிந்து கொண்டார்கள் விடுதலைப்புலிகள். அதனால் தான் ஆயுதவழிப்போர் முறையில் யாரிடம் இருந்து தம்மை மேம்படுத்தினார்களோ அவர்களுக்கு எதிராகவே அவ்வாயுதத்தை திருப்பி அவர்களுடன் சண்டையிட முடிவெடுத்திருந்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் தலமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. இக் காலகட்டத்தில் தான் பயங்கரவாதிகள், ஆயுதவிரும்பிகள் என விடுதலைப்புலிகளை குறிவைத்து சர்வதேசப் பரப்புரை ஒன்றை முன்னெடுக்கத் தொடங்கிய சிங்களத்துக்கு நாம் ஆயுதவிரும்பிகள் இல்லை என்பதை காட்ட வேண்டிய தேவை எழுந்தது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தந்தை செல்வாவினால் மேற்கொள்ளப்பட்ட அறவழிப்போராட்டம் தோற்ற நிலையில் ஆயுதவழிப் போராட்டத்தை எம் மீது திணித்த சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் அறவழியில் இருந்து நாம் இன்னும் வெளியில் போகவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையும் எழுந்த போது திலீபன் என்ற புனிதன் அதற்கு தயாராகினார். அந்த தருணத்தில் தான் புரட்சிக் கவிஞர் காசியானந்தன் தேசியத் தலைவரை சந்திக்க யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போது, “அண்ண இது தான் திலீபன். “ என அறிமுகப்படுத்தி அன்புக் கட்டளை ஒன்றையும் வழங்குகிறார். திலீபனோடு இணைந்து பணியாற்றுமாறு கட்டளையிட்ட தலைவர் தன் பணியில் மூழ்கி விடுகிறார். தியாக தீபம் திலீபனுடனான குறுகிய நாள் பயணத்தில் ஆற்றல்மிக்க ஒரு இளைஞனை தான் கண்டு கொண்டதாக குறிப்பிடுகிறார் கவிஞர் காசியானந்தன். இந்நிலையில், வவுனியாப் பகுதியில் நடந்த சண்டை ஒன்றில் வீரச்சாவடைந்த இரு போராளிகளின் வித்துடல்களை மக்களின் வணக்கத்துக்காக தாயக பிரதேசம் எங்கும் கொண்டு செல்லுமாறு திலீபன் பணிக்கிறார். அப்பணியை ஏற்றுக்கொண்டு தாயகம் எங்கும் பயணித்து மீண்ட காசியானந்தனுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அந்த தருணத்தில் தான் உண்ணாநிலைப் போராட்டத்துக்கான முடிவெடுக்கப்பட்டிருந்தது. எங்கட விடுதலைப்போராட்டத்தின் அடுத்த நகர்வு ஒன்றாக இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் தார்ப்பரியங்கள் விளக்கப்பட்டு திலீபனின் உண்ணாவிரத்ததை ஆரம்பித்து வைக்க தலைவரால் பணிக்கப்படுகிறார் கவிஞர் காசியானந்தன். அப்போது கூட இது நடந்தால் திலீபனை இழந்து விடுவோம் என்று உள்மனம் கூறினாலும் இலட்சியப் பற்றில் விடாத கொள்கை கொண்ட திலீபனின் முடிவை மாற்ற யாராலும் முடியவில்லை. உண்ணா நிலைப் போராட்டத்துக்கான ஏற்பாடுகள் நிறைவு கண்டன. 15 ஆம் நாள் புரட்டாதி 1987 ஆம் ஆண்டும் பிறந்தது. பிறந்திருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடிய கொடிய நாள் பிறந்தது. உண்ணாநிலைப் போருக்கு தயாராகி மேடையில் ஏற வந்தவரை இடை மறித்த தாய் ஒருத்தி வீரத்திலகமிட்டு அனுப்புகிறாள். இது திலீபனின் மனதில் இன்னும் அதிகமான பற்றுதலை ஏற்படுத்தியது. ஒருவேளை பெற்ற தாய் இருந்தருந்தால் கூட இவ்வாறு தான் திலகமிட்டு அனுப்பி இருப்பார். தந்தையைப் போலவே மேடையை சுற்றி சுற்றி வந்து தன் பிள்ளையை இந்தியா காப்பாற்றுமா என வேண்டியிருப்பார். ஆனாலும் திலீபனின் முடிவினை எதிர்க்கவோ தடுக்கவோ முயன்றிருக்க மாட்டார். ஏனெனில் அந்த வீரத்தாயின் வயிற்றில் பிறந்தவனே இவ்வாறான தியாகத்தின் உச்சமாக இருக்கும் போது எவ்வாறு தாய் மட்டும் கோழையாக இருக்க முடியும்? திலீபன் தன் தாயை நினைத்தாரோ என்னவோ புன்னகை புரிந்த படி திலகமிட்ட தாயையும் தன் மக்களையும் பார்க்கிறார். இந்தியாவுக்கு எதிராக 5 வகை கோரிக்கையை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்ட நீர்கூட அருந்தாத உண்ணாநிலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை அருகில் அமைக்கப்பட்ட மேடையில் வைத்து சர்வதேசத்துக்கு தெளிவு படுத்துகிறார்கள் பிரசாத் தலமையிலான போராளிகள். மக்களும் போராளிகளும் சுதந்திரப்பறவை பெண்களும் என மாறி மாறி மேடைகளில் கவிதைகளாகவும் பேச்சுக்களாகவும் தியாக தீபத்துக்கு இன்னும் உரமேற்றியும், வேண்டாம் அண்ணா இதை கைவிட்டு எம்மோடு உயிரோடு இரு அண்ணா என்றும், இந்தியத்தை கெஞ்சி மன்றாடியும், நல்லூரான் கந்தனை மன்றாடியும் என நிகழ்வுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன. எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இராசையா ஆசிரியரோ விழிகளில் இருந்து ஓடும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் மேடைக்கு அருகிலும், பின்னாலும் முன்னாலும் என்று அலைந்து கொண்டே இருக்கிறார். வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி போராளிகள் கொடுக்கும் உணவில் எப்போதாவது ஒரு தடவை கொஞ்சமாக உண்டார். தூக்கமில்லை. துவண்டு கொண்டருக்கும் தன் பிள்ளையை நினைத்து நினைத்து செய்வதறியாது இருந்தார். இந்திய அரசோ அல்லது படைகளோ தியாக தீபத்தை காப்பாற்றும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய் இனி எதுவுமே நடக்கப்போவது இல்லை என்ற நிலைப்பாடு புரிந்த போது மெழுகுவர்த்தியாக உருகிக் கொண்டிருந்த அந்த உத்தமன் தனது உயிரை பசிப் போரில் ஆகுதியாக்கி விட்டிருந்தான். அப்போது மருத்துவர் பரிசோதித்துவிட்டு திலீபனின் பாதங்களை தொட்டு வணங்கிய போது தன் கண்முன்னே தான் பெற்றவன் வீரச்சாவடைந்ததை கண்ட அதி உச்ச வலியோடு பார்த்தீபனின் ( திலீபன்) தந்தை மேடைக்கு ஓடி வருகிறார். தன் மகன் கிடந்த கோலத்தை ஒவ்வொரு வினாடியாக பார்த்துக் கொண்டிருந்த தந்தையால் அந்தக் காட்சியை காண முடியவில்லை. இறுதிவரை மகனை இந்திய அரசு காப்பாற்றுவார்கள் என்று நம்பி இருந்த அவரின் நம்பிக்கையை உடைத்தெறிந்து துரோகம் இழைத்தது இந்திய வல்லாதிக்க அரசு. இந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது பாதுகாப்பு போராளிகள் மற்றும் புரட்சிக் கவிஞர் காசியானந்தன் ஆகியோருடன் முகாம் ஒன்றில் இருந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். திலீபன் வீரச்சாவடைந்துவிட்டதாக தலைவருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. உண்ணா நிலைப் போராட்டத்தின் முடிவெடுக்கப்பட்ட நாளில் இருந்தே தியாக தீபம் திலீபனை நினைத்து வாடிக் கொண்டிருந்த தேசியத் தலைவரின் விழிகள் கண்ணீரை சொரிகிறது. எதற்கும் அஞ்சாத பெரு வீரனின் விழிகள் அன்று திலீபன் என்ற ஒற்றை புனிதத்துக்காக கலங்கி நின்றது. மகனின் வித்துடல் தாங்கிய ஊர்தியோடு இறுதிவரை பயணித்த தந்தை தாங்க முடியாத வேதனைகளை மனதுக்குள் புதைத்து விட்டு வீரப் புதல்வனுக்காக வணக்கம் செலுத்துகிறார். இன்றும் எங்கள் மனங்களில் தியாக தீபம் திலீபனைப் போலவே அவரின் தந்தையும் நிலைத்து விட்டார். அவர் மட்டுமல்ல இந்திய தேசமும் தான். அவர் மட்டுமல்ல இந்திய தேசமும் தான். நன்றி புரட்சிக் கவிஞர் காசியானந்தன். இ.இ.கவிமகன் 19.09.201 https://eelamaravar.wordpress.com/2019/06/27/thileepan-8/- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -17 லெப்டினன் கேணல் சிவம். பகிரப்படாத பக்கம் -17 பல வருடங்கள் கழித்து கொடுத்த மகிழ்வை பறித்து சென்ற தமிழீழ காவலன். லெப்டினன் கேணல் சிவம். தென்னை வளத்தால் மேன்மை கொண்டிருக்கும் தென்மராட்சியின் ஒரு கிராமம் அது. 2000 ஆம் ஆண்டின் பங்குனி மாதத்தின் 26 ஆம் நாள் குடாரப்புப் பிரதேசத்தில் நடந்த மாபெரும் தரையிறக்கத்தின் தொடர் வெற்றிகளால் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பின் மீண்டும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது அந்த கிராமம். அக் கிராமத்தில் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்ட மக்களின் ஒரு தொகுதியினர் வன்னிக்கு நகர்த்தப்படாமல் இருந்தார்கள். அவ்வாறான நிலையில் பூநகரி ஊடாக நகர்ந்து வந்த போராளி ஒருவரால் வீட்டுக் கதவு ஒன்று தட்டப் படுகிறது. திடீர் என்று தட்டப்பட்ட ஒரு வீட்டின் கதவினைத் திறந்த இளம் பெண் ஒருத்தி தனது கண் முன்னே நின்ற போராளியைக் கண்டு எதையும் பேச முடியாதவளாக வாய் மூடி நின்றாள். அவள் உடல், உயிர், ஆவி அனைத்தும் ஒடுங்கிப் போகும் அளவுக்கு மகிழ்ச்சி பொங்கி பிரவாகித்தது. எதிர்பார்த்து நீண்ட காலமாக காத்திருந்த அவளது உயிர் எதிர்பார்க்காத நேரத்தில் கண்முன்னே வந்தி நின்றதை அவளால் நம்ப முடியவில்லை. கிட்டத் தட்ட 10 வருடங்களுக்கு மேலான காத்திருப்பு. கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கம். அனைத்தையும் தாண்டி இன்று கண் முன்னே கிடைக்கும் என்று பதிலளித்தபடி நிற்கிறது அவளின் உயிர். அவரும் அப்படித் தான் கிட்டத்தட்ட 1990 ( சரியாக ஆண்டு நினைவில்லை) ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் வடமராட்சிப் பகுதியில் இந்தியத்துக்கு எதிராக போராடிய குறிப்பிட்ட சில போராளிகளுள் அவரும் ஒருவர். இந்திய இராணுவத்தின் தாக்குதல் ஒன்றில் கால் தொடையில் காயப்பட்டு படகு மூலமாக இந்தியாவுக்கு சிசிக்கைக்காக செல்கிறார். அங்கே உடைந்து கிடந்த தொடை எலும்புக்கான சிகிச்சையை தமிழகத்தின் ஈழ உணர்வாளர்கள் செய்கிறார்கள். கடுமையான முயற்சியின் பின் அவரின் கால் துண்டாக்கப்படாமல், எலும்பு சீரமைக்கப்படுகிறது. உண்மையில் அக்காலம் இந்தியாவில் பல சிரமங்களுடன் தான் இச்சிகிச்சைகளை தமிழின உணர்வாளர்கள் செய்தார்கள். ஏனெனில் யார் இடத்தில் பயிற்சிகளைப் பெற்று எம்மை மெருகேற்றினமோ? அவர்களுக்கெதிரான சண்டையில் காயப்பட்ட போராளியை அவர்களின் இடத்தில் வைத்து காப்பாற்றுவது என்பது எவ்வளவு கடுமையான சிக்கல்களை உருவாக்கும் என்பது வெளிப்படையானது. இவ்வாறான நிலையில் சிகிச்சை முடிந்து கொஞ்சம் உடல்நிலை தேறி இருந்தவரை தமிழக காவல்துறை கைது செய்யது வேலூர் வேறு சில போராளிகளுடன் சேர்த்து அடைத்தது. போராளிகளால் சிவம் அண்ணை என்று அன்பாக அழைக்கப்படும் அப்போராளியின் சண்டை முறைகள் சொற்களில் சொல்ல முடியாத வீரம் செறிந்தவை. அதனால் சிறைக்குள் இருந்த போதிலும் கட்டுக்கடங்காத இனவுணர்வை தன் மனதுக்குள் வளர்த்து தன்னைப் புடம் போட்டுக் கொண்டவர். பல ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியாவின் வேலூர் சிறையில் இருந்து சிறையுடைத்துத் தப்பித்து தாயகம் வந்து சேர்ந்தார். அப்போது உண்மையில் எமது விடுதலை இயக்கம் பல பரினாம வளர்ச்சிகளை தன்னகத்தே கொண்டு வானம் தொட்டு நின்றது. இனம் மானம் குன்றாமலும், விடுதலை பெற வேண்டும் என்ற வீச்சு குறையாமலும் சிறையில் இருந்து மீண்டு வந்த சிவம் அவர்களை விடுதலைப்புலிகளின் சண்டைக்கான வாகனப்பகுதி தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கிறது. நெடுங்கேணி பிரதேச வாகனப்பகுதிப் பொறுப்பாளராக இயங்கத் தொடங்கிய அந்த மூத்த போராளி தன்னுடைய பணியில் கொஞ்சமும் தளர்ந்ததில்லை. சண்டை அணிகளுக்கு மிக முக்கியமான பணியாக இருந்தவை காயப்படும் போராளிகளை பின்நகர்த்துவது அல்லது வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை பின்நகர்த்துவது. அதற்காக நிதிப்பிரிவின் கீழ் இயங்கி வந்த வாகனப்பகுதியே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. அதை விட FDL என்று சொல்லப்படுகின்ற எல்லை வேலியில் காவல் காக்கும் போராளிகளுக்கான உணவு வழங்கலையும் அவர்களே செய்து வந்தார்கள். அதில் இவ்வாறான இரு பெரும் பணிகளை தமிழீழத்தின் எல்லை வேலிகள் அனைத்திலும் வாகனப்பகுதிப் போராளிகள் செய்து வந்தார்கள். அவர்களில் ஒரு பகுதிப் பொறுப்பாளராகவே சிவம் அவர்களும் இயங்கினார். இந்த நெடுங்கேணிப் பிரதேச எல்லை வேலியில், சோதியா படையணியின் ஒரு தொகுதிப் போராளிகள், தளபதி லோரன்ஸ் தலமையில் சிறுத்தை படையணியின் ஆண் பெண் அணிகள், தளபதி லெப் கேணல் ஸ்ரான்லி தலமையில் ஜெயந்தன் படையணியின் ஒரு தொகுதி அணி ஆகியன தரித்து நின்றன. இவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் பால்ராஜ் இருந்தார். இக் களமுனை எல்லையை மிகவும் இறுக்கமாக வைத்திருக்க வேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் அப்போது இருந்த எல்லை வேலியை இராணுவம் உடைத்து முன்னேறுமாக இருந்தால் முள்ளியவளை, முல்லைத்தீவு என்பவற்றை இலகுவாக கைப்பற்றி விடுவான் எதிரி. அதனால் பல வியூகங்களைக் கொண்டு நிமிர்ந்து நின்றது அக் களமுனை. அப்போது இத்திமடு பகுதியில் பிரதான மருத்துவநிலையை போராளி மருத்துவர்கள் அமைத்திருந்தார்கள். அதில் மருத்துவர் தணிகை, மருத்துவர் பௌலின், மருத்துவப் போராளி மாறன், உதவி மருத்துவர் தில்லை, இம்ரான் பாண்டியன் படையணியின் மருத்துவப் போராளிகள் இருவர், மருத்துவப் போராளி தேவிகா ஆகியோர் பணியில் இருக்கின்றனர். அம் மருத்துவ நிலை ( இம் மருத்துவ நிலை மட்டுமல்ல பெரும்பாலும் எல்லா இடமும் இதே நிலை தான்) 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும் இடர் ஒன்றை சந்தித்தது. அக்காலப்பகுதியில் வன்னியில் பெரும் தொற்று நோய்களாக விளங்கிய மலேரியா (Malaria) , வட்டக்கடி (Ringworm) , நெருப்புக்காச்சல் (Typhoid ), செங்கண்மாரி (Jaundice ), சொறி சிரங்கு( Scabies ) போன்ற தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதனால் மக்கள் மட்டுமல்ல பல நூறு போராளிகளும் அடிக்கடி பாதிக்கப் பட்டார்கள். இதில் குறிப்பிட்ட அனைத்தும் தொற்று நோய்களாலும் பல இடர்களை சந்தித்தார்கள் போராளிகள். இதில் வட்டக்கடி என்று சொல்லப்படுவது ஒரு தோல் வருத்தம். அவ்வருத்தம் உடனடியாக பரவும் அபாயம் நிறைந்தது. அதுவும் களமுனை எல்லைகளில் நிற்கும் போராளிகளுக்கு பரவும் வேகம் அதிகரித்திருந்தது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மிக முக்கிய காரணமாக எல்லை வேலிகளில் தூய்மையை பேணுவதில் எழும் சிக்கல்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். குளிப்பதற்கோ அல்லது உடை மாற்றுவதற்கோ ஒழுங்கான நேர அட்டவனை கிடைப்பதில்லை. உறக்கமோ உணவோ சரியாக கிடைப்பதில்லை. அவ்வாறு இருக்கும் எல்லை வேலிகளில் வாரத்துக்கு ஓர் இரு முறைகள் தான் குளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இவ்வாறு இருக்கும் நிலையில், வட்டக்கடி பரவுதலை தடுக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு எழுந்தது. ஆண் போராளிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவது பெண் போராளிகளே. ஏனெனில் அவர்களின் களமுனை வாழ்க்கை என்பது வார்த்தைகளால் கூற முடியாதது. வளங்கல் பிரிவால் கொடுக்கப்பட்ட மாற்றுடையை சண்டைகளினால் இழந்து ஒற்றை உடையோடு காவல் இருக்கும் அவர்களுக்கு மாற்றுடை வரும் வரை உடை மாற்றுவது என்பது வினாக்குறியே. இவ்வாறு களமுனைகளில் இருந்தவர்களுக்கு தொற்று நோயின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்து பார்க்க முடியுமா? ஆனாலும் லெப் கேணல் சிவம் போன்ற போராளிகளால் அவர்கள் நலமடைந்து வாழ்ந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது. பெரும்பாலான போராளிகள் இந்த தோல் நோய் தொற்று ஏற்பட்டவர்களை தனித்துவமாக சிகிச்சை வழங்க வேண்டிய நிலைக்கு வந்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்துப்படும் மாத்திரையான GRISOVIN பயங்கர வலுவான காரணத்தால் பசுப்பாலுடன் சேர்த்தே அம் மருந்தை உட்கொள்ள வேண்டி இருந்தது. அதைப் போலவே மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்ட போராளிகளையும் தனிமைப்படுத்த வேண்டி வந்தது. அவர்களுக்கு சத்துணவுகளை கொடுக்க வேண்டி நிலை வந்தது. ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மாத்திரைகளான Chloroquine, Primaquine என்பனவும் வலுவானவையாக இருந்தன. அதனால் அவ் வலுவான மாத்திரைகளை தாங்கும் சக்தியை அவர்களின் உடல் கொண்டிருக்க வேண்டி இருந்தது. இவ்வாறான நிலையில், அக்காலத்தில் உணவு வழங்கலை செய்வதே பிரச்சனையாக இருந்தது. ஒரு நெகிழ்வுப் பையில் ( Shopping Bag) மூன்று பேருக்கான சோறும் கத்தரிக்காய் கறியும் தான் பெரும்பாலும் கிடைக்கும். அதுவும் சில வேளைகளில் சாப்பிட முடியாத நிலையில் களமுனை அதிர்ந்து கொண்டிருக்கும். இப்படியான நேரத்திலும் இராணுவ மருத்துவமனைகளில் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு பால் முட்டை மற்றும் இறைச்சி போன்ற சத்துணவுகள் வழங்கப்பட்டு வந்தாலும், முன்னணி நிலைக்கு வழங்குவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. அதனால் மருத்துவர்களுக்கு அம் மருந்தைக் கொடுப்பதில் சிக்கல்கள் நிறைந்திருந்தது. அந்த நேரத்தில் திடீர் என்று பெரிய பரல்களில். பசுப்பாலை கொண்டு வந்து காச்சி அவற்றை மருத்துவ நிலைகளுக்கு வழங்குவார். கிரிசோவின் குடிக்கிறதென்றா பால் வேணுமல்ல இத பெடியளுக்கு குடுங்கோ என்பார். அல்லது திடீர் என்று காட்டு மிருகங்களை வேட்டையாடி அவற்றை உணவாக்கி அப் போராளிகளுக்கு வழங்குவார். அப்போது, “அண்ண எப்பிடியண்ண தெரியும் இந்த மாத்திரைக்கு பால் கட்டாயம் தேவை என்று? “ போராளி மருத்துவர் வினவுகிறார். டொக்டர் இப்பத் தான் மருத்துவப்பிரிவு, உணவுப்பிரிவு, வாகனப்பிரிவு, அரசியல்துறை, நிதி, நிர்வாகம் எல்லாம் தனித்தனி அலகுகளாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் இயங்குகிறது. எங்கட காலத்தில நாங்கள் தான் டொக்டர், நாங்கள் தான் இராணுவம், நாங்கள் தான் அரசியல். ஆக மொத்தத்தில் எல்லாமே செய்ய வேண்டியவர்களாக இருந்தோம். அதனால் தான் இவ்வாறான செயற்பாடுகளை பட்டறிவால் அறிந்து கொண்டோம். என்கிறார் உண்மையில் எமது போராளிகளை தேசியத்தலைவர் அவ்வாறு தான் வளர்த்தார். அனைத்தையும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரது எண்ணம். சில போராளிகள் துறை சார்ந்த சிறப்பு வல்லுனர்களாக வளர்க்கப்பட்டாலும் அத்துறை சாராதவர்களுக்கும் அது பற்றிய பட்டறிவு நிட்சயமாக கொடுக்கப்பட்டிருக்கும். இது நியமானதே. இது இவ்வாறு இருக்க உணவில் இப்போதெல்லாம் அடிக்கடி காட்டு விலங்குகளின் இறைச்சி அதிகமாக சேர்க்கப்பட்டதன் காரணத்தையும் வினவுகிறார் மருத்துவர். அப்போது புத்தம் புதிய இரட்டை குழல் சொட்கன் (Double Barrel Shotgun) என்ற வகை ஆயுதத்தை எடுத்துக் காட்டி லீமா தந்தவர். அவருக்கு அண்ணை பிரத்தியேகமாக கொடுத்தவராம் அதை எனக்கு தந்தவர். இது தான் வேட்டைக்கு உதவுது. அவர் என்னை மதிப்பளிக்கத் தந்த இந்த ரைபிள் பெடியளுக்கு சாப்பாட்டுக்கு உதவுது என்ற படி புன்னகைக்கிறார் மூத்த போராளி சிவம். நகைச்சுவை உணர்வு மிக்க அவர் போராளிகளையும் மக்களையும் எப்பவும் சிரிக்க வைத்து மகிழ்வதைப் போல அவர்கள் தேவையை அறிந்து அதை நிவர்த்தி செய்தும் மகிழ்விப்பார். இவ்வாறாக வாகனப்பகுதி பொறுப்புநிலைப் போராளியாக வாழ்ந்த மூத்த போராளி சிவம் அவர்களின் நெஞ்சத்துள் குடி கொண்டிருந்த சண்டை ஆர்வம் தனது பொறுப்பாளரிடம் சண்டைக்கு செல்வதற்கான அனுமதிக்கு அடம்பிடிக்க வைக்கிறது. அனுமதி கிடைத்து சண்டையணிக்கு செல்கிறார். பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் தலமையிலான சண்டையணி ஒன்றின் பகுதித் தளபதியாக வட போர்முனையை நோக்கி செல்கிறார். தனது நுன்னறிவுப் பார்வையால் சண்டைக் களங்களை அளவிடத் தொடங்கினார். அவரது சண்டையணி சிறப்பாக செயற்படத் தொடங்கிய காலப்பகுதியில், குடாரப்பு தரையிறக்கம், அனையிறவு படைமுகாம் மீதான முற்றுகை மற்றும் யாழ்ப்பாணத்தில் செறிந்திருந்த சிங்களப்படைகளை முற்றுகையிட்டு முடக்குவது போன்ற பெரும் இலக்குகளுடன் பல பகுதிகளூடாக பல படையணிகள் களம் இறங்கின. இந்த சந்தர்ப்பத்தில், பூநகரி ஊடாக தனங்கிளப்பு சென்று அதனூடாக மிருசுவில், கைதடி என நகர்ந்து யாழ்ப்பாண நகரை சென்றடையும் இலக்கோடு ஒரு அணி நகர்ந்தது. அதில் பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் கட்டளையின் கீழ் அவரது அணியும் இருந்தது. அவர்கள் இலக்கை வெற்றியடைந்து கொண்டு யாழ்ப்பாணத்தை நோக்கி செல்கிறார்கள். அவ்வாறான வெற்றிச் சமர் ஒன்றை செய்து தென்மராட்சிப் பகுதிக்குள் உள் நுழைந்திருந்த மூத்த போராளி சிவம் தலமையிலான அணி தமது முன்னிலை வேலியை இறுக்கமாக போட்டிருந்தது. இந்த நிலையில் தான் தென்மராட்சியில் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த அப் பிரதேசத்தில் அமைந்திருந்த 10 வருடத்துக்கு மேலாக நேசித்த அவ்வுறவின் நினைவு மேலெழுந்து அவ்வீட்டுக் கதவை தட்டி இருந்தார் சிவம். அவர் நினைத்து வந்தது. தான் காதலித்த தன் உயிரானவள் இன்னும் ஒரு ஆடவனை திருமணம் செய்து இரண்டு மூன்று குழந்தைகளின் தாயாகி இருப்பாள் என்றே. ஆனால் தான் காதலித்தவனுக்காக 10 வருடங்களுக்கு மேல் வருவான் வருவான் என காத்திருந்த அப் பெண்ணைக் கண்டதும் கட்டித் தழுவி முத்தமிட வேண்டும் போல் தோன்றியது அவருக்கு. ஆனாலும் அவர் முதுநிலை போராளி. விடுதலைப்புலிகளின் இயக்க விதிகளை மீற அவரால் முடியாது. எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு விட்டு தனது காதலியிடம் நலமா என வினவுகிறார். அவளால் எதையும் பேச முடியவில்லை. விழிகள் கலங்கி அருவியாய் கண்ணீர் ஓடத் தொடங்கியது. அழாதையுங்க இது என்ன சின்னப் பிள்ளை போல அழுது கொண்டு…? அவர் அவளை ஆற்றுப் படுத்துகிறார். ஆனால் அவளால் பேச முடியவில்லை. தான் நேசித்தவன் இருக்கிறானா இல்லையா என்ற எந்த தொடர்புகளுமற்று வாழ்ந்து வந்த காலம் அத்தனைக்கும் இன்று தன் முன்னே பெரும் மகிழ்வாக வந்து அவனே நிற்பதை அவளால் உணர முடியவில்லை. அவள் பேச்சற்று இருந்த போது அவளை உடனடியாக வன்னிக்கு செல்லுமாறும் அங்கே தான் வந்து சந்திப்பதாகவும் விபரங்கள் கூறி வழியனுப்புகிறார். அதன் பின் தன் கடமைக்காக களத்துக்கு சென்று விடுகிறார். குறித்த சில காலங்களில் அவருக்கும் அவளுக்கும் இடையிலான மகிழ்வான தருணங்களை அமைப்பின் திருமண ஏற்பாட்டுக் குழு செய்யத் தயாராக இருக்கும். அதற்கான அனுமதியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்குள் எழுந்தது. ஆனால் அனுமதி கிடைத்தாலும் அம் மகிழ்வான தருணங்களை அவர் அடைய முடியாத நிலையில் தமிழீழ விடியலுக்காக பல கனவுகளைச் சுமந்து வாழ்ந்த அப் போராளி வித்துடலாக தென்மராட்சி மண்ணின் கைதடி பாலம் தாண்டிய பகுதியில் ( சரியான இடம் தெரியவில்லை) விதையாக வீழ்ந்திருந்தார். சிவமண்ண என்று அன்பாக அழைக்கும் போராளிகளை லெப்டினன் கேணல் சிவம் என்ற மாவீரன் என்று அழைக்க வைத்துவிட்டு அவர் நிம்மதியாக உறங்குகிறார். தமிழ்லீடர் மருத்துவர் தணிகையுடன் இ.இ. கவிமகன் 29.08.2018- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -16 சாவடைந்தும் சாகாத வீரம் கேணல் ராயூ. பகிரப்படாத பக்கம் -16 சாவடைந்தும் சாகாத வீரம் கேணல் ராயூ. “அப்பா போட்டு வாறம் …” இந்த வார்த்தைகளை சிறுத்தைப் படையணிப் போராளிகள் சண்டைக்குச் செல்லும் போது தமது தளபதியான கேணல் ராயூவுக்கு சொல்லி செல்லும் வார்த்தைகள் இவை. உண்மையில் ஒரு மகளிர் சிறப்புப் படையணியை உருவாக்குதல் என்ற திடமான முடிவை தேசியத்தலைவர் எடுத்த போது அதற்கான பொறுப்பை முதலில் எடுக்க மறுத்த கேணல் ராயூ பின் நாட்களில் அப்படையணியின் அப்பாவாக அம்மாவாக அண்ணனாக என அனைத்துமாக மாறி இருந்த நிலையை எம் வரலாறு பதிவாக்கத் தவறவில்லை. சிறுத்தைப் படையணியின் மகளிர் பிரிவின் போராளிகள் கேணல் ராயூ அவர்களினால் புடம்போடப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். சின்னச் சின்ன விடயங்களை கூட மிகவும் கருத்தில் எடுத்து கவனிக்கும் கேணல் ராயூவின் எண்ணமெல்லாம் மகளிர் சிறுத்தைப் படையணியை பெரும் வரலாறுகள் படைக்கும் அணியாக வளர்க்க வேண்டும் என்பதே. அவ்வாறான பயிற்சிகளே அவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இராணுவப் பயிற்சியிலும் இது சிறப்பு பயிற்சி. சிறப்பு அணிகளின் அதி உயர் தாக்குதல் பயிற்சி. அதனால் இறுக்கமான கட்டுப்பாடுகளும், அதி திறன்வாய்ந்த பயிற்சிகளும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அப்படியான பயிற்சியின் ஒரு நிலையில் கப்பியில் கடக்கும் பயிற்சிக்காக போராளிகள் கூடி நிற்கிறார்கள். அதில் ஒரு போராளி கடந்து கொண்டிருந்த போது கப்பி அறுந்து விடுகிறது. எல்லோரும் கீழே விழுந்து கொண்டிருக்கும் போராளி இறந்து விடுவாள் என்று நினைத்து சத்தமாக குழறுகிறார்கள். ஆனால் நிதானம் கொண்ட கேணல் ராயூ அவளை பக்கவாட்டாக விழு என்று கத்துகிறார். முன்பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ விழுந்தால் விழுகின்ற வேகத்தில் உடலுறுப்புக்கள் பாதிப்படையும் வாய்ப்புக்கள் அதிகம். அதனால் சாவடைய வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது. ஆனால் பக்கவாட்டாக விழுவதனூடாக சாவைத் தவிர்க்கலாம் என்று அவர் கருதினார். அதனால் அவளை உடனடியாக அதை செய்யுமாறு பணிக்கிறார். அது அதிஸ்டவசமோ அல்லது அவளின் முயற்சியோ தெரியாது அவள் விழுந்தது பக்கவாட்டாகவே அதனால் அவளின் இதயமோ நுரையீரலோ அல்லது உடலின் உள்ளுறுப்புக்களென எதுவுமோ பெரிதளவில் பாதிப்படையவில்லை. எலும்பு முறிவுகள் தான் ஏற்பட்டிருந்தது. அவள் உயிர் தப்பி இருந்தாள். இங்கு அந்தப் போராளி உயிர் தப்பியது ஒரு புறமிருக்க அந்த நேரத்தில் உடனடியாக அவரின் வாய் ஐயோ என்று கத்தவில்லை அவளை காப்பாற்றக் கூடிய வகையைத் தான் மொழிகிறது. அவர்களை தன் பிள்ளைகளைப் போல பார்த்து வந்த கேணல் ராயூ கடுமையும் கண்டிப்பும் நிறைந்த தளபதி. சின்னச்சின்ன விடயங்களில் அதி கவனமாக போராளிகளை வளர்த்தார் அவர். சிறுத்தைப் படையணியைப் பொறுத்தவரை அனைத்து வகைகளிலும் மேன்மை மிக்கவர்களாக சிறப்பணியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் திடமாக இருந்தார். அதனால் பயிற்சி, பயிற்சி, பயிற்சி இதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு இருந்தது குறைவு. இன்னொரு நாள் காட்டுப் பயிற்சியை எடுத்துக் கொண்டருந்த ஒரு போராளி காட்டுக்குள் இருந்த பழமான “ பேக்குமட்டி “ என்ற பழத்தை உண்டு விடுகிறாள். அப் பழம் நச்சுத் தன்மை நிறைந்தது. அதனால் அந்தப் போராளி சாவடைந்து விடுகிறாள். இந்த சாவு கேணல் ராயூவையும் அவர் சார்ந்தவர்களையும் பல முடிவுகளை எடுக்கத் தூண்டியிருந்தது. காட்டு மரங்கள் பற்றிய பயிற்சிகளோ அறிவோ அப்போது அவர்களிடத்தில் இருக்கவில்லை. அதனால் உடனடியாக அந்த காடு முழுவதும் அலைந்து திரிந்து பலவகையான பழங்களை சேகரித்து அதன் தன்மைகளை ஆராய்கிறார் கேணல் ராயூ. அவரின் ஆய்வுத்திறன் தன்மையாலும் மருத்துவப் போராளிகளின் உதவிகளோடும் காட்டில் உள்ள மரங்கள், பழங்கள், இலைகுழைகள் என அனைத்தும் எவை உணவுக்கேற்றவை, எவை நஞ்சுத்தன்மை பொருந்தியவை என்று இனங்காணப்படுகிறது. அதன் பின்நாட்களில் போராளிகளுக்கு அவை தொடர்பாக கற்பிக்கப்படுகிறது. எவை உண்பதற்கு உகந்தது என்றும் எவை உணவுக்கு ஏற்பற்றவை என்றும் பயிற்சியளிக்கப்படுகிறது. இதன் பின்னர் பழங்களை உண்டு சாவடைந்ததான வரலாறு தமிழீழத்தில் இருக்கவில்லை. இவ்வாறு ஒன்றை ஆய்தலும் அவற்றை கற்றுக்கொள்ளுதலும் முக்கியம் என்பதை உணர்ந்த அவர், தான் மட்டுமல்ல தன் போராளிகளும் அவ்வாறே வளர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். போராளிகளிடையே வாசிப்புத் திறனை ஊக்கிவிப்பதும். புதிய விடயங்களை கற்றுக் கொள்வதும் அவரால் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இரவு பகல் என்று ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அந்த போராளியின் கண்கள் ஓய்வைக் கண்டது மிகக் குறைவு. எப்போதும் கற்றலும் தேடலுமாகவே அவர் இருப்பார். ஒரு விடயத்தை அறிந்து கொள்வதற்காக தேடல்களில் ஈடுபட்டால் அவருக்குத் தூக்கம் என்பது வராது. Nes Coffee என்று சொல்லப்படும் கோப்பியை அடிக்கடி குடிக்கும் கேணல் ராயூ அவர்கள் உணவைப் பற்றியும் அதிகம் கவனமெடுப்பதில்லை. இவ்வாறான ஒரு பயிற்சியில் ஒரு குளத்தினூடாக நகர வேண்டிய அணி அக்குளத்தில் முதளை இருப்பதாக அறிந்து தயங்கி நின்றது. எப்போதும் போலவே அப் போராளிகளுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடும் கேணல் ராயூ முதளைகள் இருக்கும் அக் குளத்தை கடப்பது எவ்வாறு என்பதை முதலாவது போராளியாக கடந்து காட்டி கற்பித்தார். அதன் பின் அப் போராளிகளுக்கு முதளை மீதிருந்த பயம் விலகி இருந்தது. அவ்வாறு தான் காட்டுப் பயிற்சியில் யானையை கண்டு தயங்கியவர்களை யானைகள் நடமாடும் பகுதிக்குள்ளையே தங்கி இருந்து பயிற்சியை மேற்கொள்ள வைத்து அதன் மீதிருந்த பயத்தையும் அவர் போக்கி இருந்தார். இவ்வாறாக ஒவ்வொரு விடயங்களிலும் கவனம் எடுத்து செயற்படும் கேணல் ராயூ அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வரும் எந்த வகை ஆயுதங்களாக இருந்தாலும் சரி அதன் பொறிமுறைகளை, செயற்பாடுகளை கண்டறிந்து அவற்றை செயற்படுத்துபவராக இருப்பார். அது சாதாரண தர கைத்துப்பாக்கி என்றாலும் சரி ஆட்லரி எறிகணை செலுத்தியாக இருந்தாலும் சரி அவரது கை பட்ட பின்பே முதல் குண்டை செலுத்தும். அவ்வாறான அறிவாற்றலும் ஆய்வுத் தன்மையும் நிறைந்த கேணல் ராயூவால் வளர்க்கப்பட்ட போராளிகளும் பெரும் சாதனைகளை நிலைநாட்டியவர்கள் என்றால் அது மிகையில்லை. இவ்வாறான தளபதியின் இன்னொரு முகத்தையும் இங்கே பதிவிட வேண்டியது அவசியமாகிறது. சிறுத்தைப்படையணி ஒரு சிறப்பணியாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் வெளித் தொடர்புகள் அற்றவர்களாகவே வளர்க்கப்பட்டிருந்தார்கள். அதனால் குறித்த பயிற்சிக் காலம் நிறைவு பெறும் வரையில் பெற்றவர்களையோ உறவுகளையோ சந்திக்க அனுமதி இருந்ததில்லை. அதே போல கடிதப் பரிமாற்றங்களும் மறுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் கேணல் ராயூ அவர்களின் தங்கையும் போராளியுமான கோமதி இவருக்கு அவசர மடல் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் அம்மடல் உடைக்கப்படவும் இல்லை வாசிக்கப் படவும் இல்லை. அம்மடல் மேசையின் ஒரு இழுவைப் பெட்டியில் ( லாட்சி) அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அவரின் பொறுப்பில் இருந்த போராளிகள் எந்த வெளித்தொடர்புகளும் இல்லாது இருக்கும் போது தான் மட்டும் எவ்வாறு தங்கையின் கடிதத்தை வாசிப்பது என்ற சிந்தனை அவரை கட்டுப்படுத்தி இருந்தது. அச்சிந்தனை ஒன்றே அவரது தந்தையை உயிருடன் பார்ப்பதற்கு வழிதராமல் போனது. ஏனெனில் அக்கடிதத்தில் தங்கை அவர்களது தந்தை அவசர சிகிச்சை பெற்று வருவதைப் பற்றியே அவசர மடல் அனுப்பி இருந்தார். அக்கடிதத்தை பார்த்திருந்தால் கூட தந்தையை போய் பார்த்திருப்பாரா என்பது வினாக்குறியே ஆனாலும் தந்தை பற்றிய செய்தியையாவது அறிந்திருப்பார். ஆனால் அவர் அப் போராளிகளுடன் அவர்களைப்போலவே வாழவேண்டும் என்ற சிந்தனையில் இருந்ததால் அக்கடிதத்தை கண்டுகொள்ளவே இல்லை. சிறுத்தைப் படையணி பெரும் சாதனைகளின் ஆரம்பப் புள்ளியாக வளர்க்கப்பட்டது. தொட்டுணர முடியாத வீரத்தின் உச்சத்தை அப்போராளிகள் கொண்டிருந்தார்கள். அவ்வாறான சிறுத்தைப் படையணிப் போராளிகளுக்கு அப்பாவாக, அண்ணாவாக, அம்மாவாக என பல வடிவங்களில் ஒன்றிப் போயிருந்த கேணல் ராயூவை தமிழீழ தேசத்தை சிங்களப் படைகள் ஆக்கிரமித்ததைப் போல கொஞ்சம் கொஞ்சமாக புற்றுநோய் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சாதாரண வயிற்றுவலி என்று அதற்கு சாதாரண வலிநிவாரணிகளை சாப்பிட்ட படி பணி தொடர்ந்தார் கேணல் ராயூ. ஆனால் புற்றுநோய் உச்சம் தொட்டுவிட்டது. பல சிகிச்சைகளை எம் விடுதலை அமைப்பு செய்திருந்தது. ஆனால் ஆரம்பகட்டத்தை தாண்டி விட்டிருந்த புற்றுநோய்த் தாக்கம் அவருக்கு உச்ச நிலையைத் தொட்டிருந்தது. அப்போது கூட தான் வளர்த்த போராளிகளுக்கு தமிழீழத்தை வெல்லுவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். முழுவதும் இயலாத நிலையிலும் முழுமையான மருத்துவக்கண்காணிப்பில் இருந்த நிலையிலும் கேணல் ராயூ தனது படைய அறிவியலை போராளிகளுக்கு வழங்க தயங்கவில்லை. கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்கான வெடிபொருள் தொகுதியைப் பற்றிய தொழில்நுட்பத்தை கடற்புலி அணிக்கு தெளிவாக சொல்லிக் கொடுக்கிறார். அவ்வாறாக வாழ்ந்த கேணல் ராயூ சிகிச்சை பலனின்றி தன் இறுதி மூச்சை இந்த தேசத்துக்காக விட்டார். கேணல் ராயூ/ குயிலன் என அழைக்கப்படும் எமது விருட்சம் ஏழாலையில் திருதிருமதி அம்பலவாணன் தம்பதியின் மகனாக பிறந்து தனது சகோதரிகளுடனும் துணைவியுடனும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இறுதிவரை உழைத்தவர். 25.08.2002 ஆம் ஆண்டு உறுதியன் உறைவிடமாக மண்ணுக்குள் விதையாகிவிட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பின் பீரங்கிப் படையிணி, வெடிபொருள் உருவாக்கப்பிரிவு, தொலைத்தொடர்பு புரிவு, என பல பிரிவுகளின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த கேணல் ராயூ, வெடிபொருள் அறிஞனாக, தொலைத்தொடர்பு தொழில்நுட்பவியலாளனாக, இலத்திரணியல் துறை வேங்கையாக என வாழ்ந்தார். இறுதிவரை தனது பணியை அவர் நிறுத்தவே இல்லை. அதனால் தான் ஒரு சந்திப்பில் வைத்து தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர்களிடம் “ நீங்கள் எல்லாரும் சேர்ந்தாவது கேணல் ராயூவின் வெற்றிடத்தை நிரப்புங்கள் “ தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கோரிக்கை வைத்தார். இவ்வாறாக வாழ்ந்த பெரு விருட்சம் சாவடைந்த பின்னும் போராளிகளுக்கு அறிவியலை ஊட்டிக் கொண்டிருந்தது. அவர் தனது பங்கினை அறிவிலாளர்களாக போராளிகள் ஆவதற்கு பணி செய்தார். பல ஆயிரம் தொழில் நுட்பப் பொறிமுறைகளாக கேணல் ராயூ நிமிர்ந்து நின்றார். இன்றும் நிமிர்ந்து நிற்கிறார். இ.இ.கவிமகன். 26.08.2018 ( இப்பதிவு எழுதப்பட்டிருந்தாலும் சில இடர்கள் தாண்டி வெளியில் பதிவிட முடியவில்லை. ஆனாலும் பகிரப்படாதபக்கங்கள் இடர்கள் தாண்டியும் தொடரும்…) https://eelamaravar.wordpress.com/2019/06/26/col-raju-2/- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள் -15 படைய ஆசான் கேணல் வசந்த் நினைவுகளோடு… சுனாமி வீட்டுத்திட்டத்தடியில் இருந்து உண்டியல் சந்திக்கு…வசந்த் மாஸ்டரோட நாங்கள் நந்திக்களி என்ற இடத்துக்கு 2009 ஆண்டின் நேற்றைய நாள் இரவு நகர்ந்திருந்தோம். எல்லாப் பக்கமும் இராணுவம் சூழ்ந்து கொண்டு எமது இறுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் வந்து கொண்டிருந்தது. இறுதியாக இருந்த முள்ளிவாய்க்கால் மாவீரர் நினைவு மண்டபம் மற்றும் மாஞ்சோலை மருத்துவமனை எல்லாம் சிங்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. நாங்கள் சுனாமி வீட்டுத் திட்டம் இருந்த இடத்தில் நந்திக்கடல் பக்கமாக முள்ளிவாய்க்கால் இரணைப்பாலை வீதியில் இருந்தோம். எமக்கு அருகில் வசந்த் மாஸ்டரோட படையப் பொருள் களஞ்சியம் இருந்தது. அது வெளியில் தெரியாதவாறு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தாலும் துரோகிகளால் சூழ்ந்திருந்த தமிழீழ மண்ணில் அதை அவர்களால் இனங்காணுவது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. அதனால் அந்தப் பகுதி பெரும் அவலத்தை அன்றும் சந்தித்ததை மறுக்க முடியாது. அப்போது சாப்பாடு என்பது பூச்சிய நிலை. நாம் சாப்பிட்டு இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தன. ஆனாலும் அந்த படையக் களஞ்சியத்துக்குள் குறிப்பிட்ட சில போராளிகள் படைய பொருட்களை சீர்ப்படுத்துவதிலும் அவற்றை துப்பரவாக்குவதிலும் மும்முரமாக இருக்கின்றனர். அதனால் பசியைப் பற்றியெல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை பசி தாகம் எல்லாமே அவர்களுக்கு ஒன்றாகவே இருந்தது. எப்படியாவது இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாம் வெளியில் வந்து சிங்களத்தை வெல்ல வேணும். எம் மண்ணை மீட்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இந்த நிலையில் நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்கு சற்றுத் தள்ளி நிறுத்தி வைக்கப் பட்டிருந்த எனது உந்துருளி முதல் நாள் காணாமல் போயிருந்தது. நான் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. நடந்து திரியவே முடியாத இடத்தில் எமக்கு எதற்கு உந்துருளி என்ற நிலை அதனால் எதற்கு அந்த நினைப்பு? என்ற கேள்வி எழுந்ததால் உந்துருளியைப் பற்றி சிந்திக்காமல் என் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்தநாள் எனது நண்பன் ஒருவனை சந்தித்த போது அவன் அதைப்பற்றி என்னோடு பேசினான். “மச்சான் உன்னோட வண்டி நேற்று வெடிச்சிருக்கும் என்று நினைக்கிறன்டா. “ என்றான். நான் புரியாமல் என்னடா என்று வினவினேன். அப்போது தான் எனக்கு தெளிவாக கூறுகிறான். “இல்ல மச்சான் …….. அண்ணையாக்கள் உன்னோட வண்டில சக்கை ஏற்றினவங்கள். நான் கண்டனான். உன்னோட வண்டி தானடா “ என்றான்.( குறிப்பிட்ட போராளியின் இருப்பு என்ன நிலை என்பது தெரியவில்லை அதனால் அவரின் பெயரைத் தவிர்க்கிறேன்.) எனக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லாமே முடிந்து விட்டது என்று எங்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இனி என்ன செய்தும் எம்மால் மீள முடியாது என்றே நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது? இறுதி நேரத்தில் கூட தமிழீழத்தை நேசிக்க அந்த மனிதர்களால் மட்டும் எப்படி முடிந்தது? நான் சிந்தித்துக் கொண்டிருக்க நண்பன் என் எண்ணத்தைத் திசை திருப்புகிறான். “பசிக்குது அண்ண எதாவது சாப்பிட கிடைக்குமா என்று பார்ப்பம் வா. “ சாப்பிட எதுவுமே இல்லை என்று தெரியும் ஆனாலும் தேடிப் பார்த்துவிட்டு தோற்றுப் போன நிலையில் வீதியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். மாலை 6 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். ( சரியான நேரம் நினைவில் இல்லை) முல்லைத்தீவு பரந்தன் வீதியில் இருந்து திடீர் என்று ஒரு தானியங்கி டொங்கான் தாக்குதலை சிங்கள இராணுவம் செய்தது. திட்டமிட்டு வசந்த் மாஸ்டருடைய படையக்கல களஞ்சியம் மீது அத்தாக்குதல் செய்யப்பட்டிருந்தது. அதுவும் காட்டிக் கொடுப்பாளர்களால் இனங்காணப்பட்டிருந்த அம் முகாம் மீது சிங்களப் படையின் தாக்குதலாளன் தாக்கியிருந்தான். பகைவன் அடித்த தானியங்கி 40 mm எறிகணை ஒன்று (Auto dongan ) அவரது களஞ்சிய எரிபொருள் கலன் மீது விழுகிறது. எரிபொருள் கலன் சிதறி தீ அனைத்து இடங்களிலும் பரவுகிறது. அந்த தீயை அணைக்க முடியாத நிலை.. போராளிகளும் வசந்த் மாஸ்டரும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். தீ பரவி களஞ்சிய முழுவதுக்கும் பரவுகிறது. கரும்புகை மூட்டம் வானைத்தொடுகிறது. கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வெடிபொருள் களஞ்சியத்தின் ஏனைய பகுதிகளும் தீயால் சூழ்கிறது. கட்டுக்கடங்காமல் சூழல் இவர்களுக்கு பாதகமாகி கொண்டு போன நிலையில் ஆயுதம் துடைக்கும் துணி (சிந்தி) மீது தீ மூள்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலை அடுத்தது வெடிபொருள்கள் மீது பரவப் போகிறது நடப்பை புரிந்த வசந்த் கட்டளை இடுகிறார். “ஓடு, ஓடுங்கோடா எல்லாரும் வெளீல ஓடுங்கோடா…. டேய் எல்லாரும் ஓடுங்கடா “ அனைவரும் வெளியேறி விடுகின்றனர். அருகிருந்த மக்கள், காயப்பட்ட போராளிகள் என அனைவரும் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் வசந்த் தனது பொறுப்பில் இருந்த அந்த வெடிமருந்து களஞ்சியம் தன் முன்னே எரிந்து கொண்டிருப்பதை கூட மறந்து மீண்டும் உள் நோக்கி ஓடுகிறார். “மாஸ்டர் வேண்டாம்… நெருப்பு எல்லா இடமும் பரவீட்டுது இனி ஆபத்து போகவேண்டாம் “ போராளிகள் மறித்தார்கள், கெஞ்சினார்கள் ஆனால் வசந்த் மாஸ்டர் கேட்கவே இல்ல. தடுத்தவர்களுக்கு தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்குகிறார். ” தமிழீழ படைக்கல பொறுப்பாளர் நெருப்புக்கு பயந்து தனது உயிரை காத்து கொள்ள தன்னுடைய கைத்துப்பாக்கியை விட்டிட்டு ஓடிட்டாராம்” என்று என் எதிர்காலம் பேசக்கூடாது. இந்த இழி சொல் எனக்கு வேண்டாம். அதை விட இத்தனை காலமாக நான் பயிற்சி குடுத்த போராளிகளுக்கு நான் எதை கண்டிப்பாக போதித்தனோ அதை இனிவரும் காலங்களில் புதிய போராளிகளுக்கு எப்படி போதிப்பேன்…? படைகல பாதுகாப்பு பற்றிய கட்டுக்கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்வி கேட்க மாட்டார்களா? “நெருப்புக்கு பயந்து தானே அன்று நீ உன்னோட பிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்க மாட்டாங்களா? இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதை விட்டிட்டு அவரிடம் எப்படி போவது…? அவரிடம் எந்த முகத்தை வைத்து பிஸ்டல நெருப்புக்க விட்டிட்டு வந்திட்டன் என்று சொல்வது. என் உயிரிலும் மேலான எனது ஆசிரியத்துவத்தையும் எனது படைக்கல பாதுகாப்பையும் நானே பாதுகாக்க வேண்டும். நில்லுங்கடா நான் எடுத்து கொண்டு ஓடி வாறன். போனவர் திரும்பி வரவே இல்லை. படைக்கலக் களஞ்சியத்துக்குள் இருந்த லோ வகை ஆயுதங்கள் தொடக்கம் உள்ளே இருப்பில் இருந்த அத்தனை ஆயுத தளவாடங்களும் வெடித்து எரிந்தன. மக்கள் தொடக்கம் போராளிகள் அனைவரும் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்டிருந்தார்கள். அல்லது வெளியேறி இருந்தார்கள். எமக்கும் வசந்த் மாஸ்டருக்கு என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கவில்லை நாமும் அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தோம். அப்போது தான் இறுதியாக எமக்காக வீழ்ந்த மாவீரர்களை விதைத்த துயிலுமில்லத்தடியில் கணினிப் பிரிவை சேர்ந்த வில்லவன் என்ற போராளியை சந்தித்தோம். அவருக்கும் பின் நாட்களில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த இராணுவ மிடுக்குள்ள அவரை இறுதியாகக் கண்ட போது மீண்டும் சந்திக்க மாட்டோம் என நாம் நினைக்கவில்லை. அவருடன் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிய நாம் உண்டியல் சந்தியை வந்தடைந்திருந்தோம். அம்மா அப்பா என என் உறவுகள் அனைவரையும் அங்கே ஓரிடத்தில் அமர வைத்து விட்டு நானும் என் நண்பனும் மைத்துனனுமாக மீண்டும் நாம் இருந்த இடத்துக்குச் சென்ற போதே வசந்த் மாஸ்டருடைய படையக்கல களஞ்சியம் முற்று முழுதாக எரிந்து முடிந்திருந்ததும் இடுப்புக்கு கீழ் முழுவதுமாக அவர் எரிந்த நிலையில் தனது கைத்துப்பாக்கியை இறுகப்பற்றிய படி வீரச்சாவடைந்திருந்ததையும் அங்கே நின்றவர்கள் கூற நாம் அறிந்தோம். அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து விட்டு வெளியில் வரும்போது எதிரி தொடர்ந்து களஞ்சியம் மீது ஏவிய எறிகணைகளின் துண்டுகள் அவரை வீழ்த்தியிருக்கிறது. அவரால் காயத்துடன் வெளியேற முடியவில்லை அவர் முயன்று கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் அவரது உடலத்தை துளைத்து வெளியேறிய இரும்புத் துண்டுகள் அவரை நிலத்தில் சாய்த்து விட்டது. எறிகணை குண்டுகளால் வீரச்சாவடைந்த பின் தான் தீயின் நாக்குகள் அவரை தீண்ட முடிந்தது… அதுவும் அவரை முழுமையாக அல்ல குறையாகவே தீண்டி சென்றிருந்தது நெருப்பு. மனம் வெறுத்தது. எம் மூத்த தளபதிகள் ஒவ்வொருவரையும் இழந்து நாம் ஒன்றுமே இல்லாதவர்களாக போகப்போகிறோம் என்பது புரிந்து போனது. அங்கே எதுவும் இல்லை. தாக்குதல் பலமாக நடந்து கொண்டிருந்ததால் அங்கே நிற்பது உயிராபத்தைத் தரும் என்று அஞ்சினோம். நாம் நேசித்தவர்கள் தம்மை வெடியாக்கி காற்றோடு கலந்து போக, எதிரியை அழித்து மண்ணில் வீழ்ந்து போக நாங்கள் உயிருக்குப் பயந்து மீண்டும் உண்டியல் சந்திக்கு வந்து சேர்ந்தோம் … கவிமகன்.இ 10.05.2018- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் 14 -தமிழீழ மருத்துவரின் கதை. மருத்துவம் என்றாலே ஒரு புனிதமான பணி அதிலும் கள மருத்துவம் என்பது போர் காலங்களில் போரணியை காக்கும் மிக முக்கிய பணி. சர்வதேச நாடுகளின் இராணுவங்களில் மருத்துவ அணி தனித்தனியாக செயற்பட்டு வரும் களமுனை மருந்துவர்கள் போரணியை மட்டும் காக்கும் பணியையும் மக்கள் பணியில் இருக்கும் அணியினர் மக்களை பாதுகாக்கும் பணியிலும் செயற்படுவர் ஆனால் எங்கள் மண்ணில் அவ்வாறல்ல. சண்டையணிகளையும், போராளிகளையும், மக்களையும் குறித்த சில அரச மருத்துவர்களுடன் இணைந்து சில நூறு மருத்துவப்பிரிவுப் போராளிகளே பாதுகாத்தார்கள். சண்டைக் களங்களில் மருத்துவ உபகரணங்களை மட்டும் கொண்டு செல்லப் பணிக்கப்பட்டாலும் அடம்பிடித்து துப்பாக்கிகளையும் கொண்டு செல்லும் மருத்துவப் போராளிகளையே தமிழீழம் தன்னகத்தே சுமந்து நின்றது. இந்நிலையில் மற்ற நாட்டு இராணுவங்களைப் போல உணவு, உடை, உறையுள் என்ற மனித வாழ்வின் அடிப்படைகளைக் கூட அவர்கள் முக்கியத்துவப் படுத்தியதில்லை. கிடைப்பதை உண்டு கிடைப்பதை உடுத்து கிடைக்கும் நேரத்தில் கிடைக்கும் இடத்தில் உறங்கி வாழ்ந்தார்கள். அவர்களின் இலக்கு மிக நீண்டது. உயிர்காப்பு நடவடிக்கைகளுக்காக அதில் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். 2009 சண்டை இறுதி நிலைக்கு வந்திருந்த தருணங்களில் எங்கள் மருத்துவ அணி வளங்கள் எதுவும் அற்ற நிலையில் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தது. மக்கள், போராளிகள் என்ற பாகுபாடின்றி போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களில் ஒரு சிலரும் உயிர் காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியான ஒரு இரவில் தான் அந்த மருத்துவனும் முழித்திருந்தான். அப்போதெல்லாம் அவர்களுக்குத் தூக்கம் கிடையாது. ஒழுங்காக உணவு கிடைக்காது. “உயிர் காத்தல் “ ஒன்று மட்டுமே அவர்களின் எண்ணங்களில் நிறைந்து கிடந்தது. இரவு முழுவதும் பயங்கர எறிகணைத் தாக்குதல். முன்னணி அரண்கள் வீட்டு முற்றத்துக்கு வந்து போராளிகளும் இராணுவமும் கைகலப்பு செய்ய கூடிய தூரத்தில் மோதிக்கொண்டிருந்த பொழுதுகள். விடுதலைப்புலிகளின் மருத்துவ போராளிகளும் தூக்கமின்றி, உணவின்றி தங்களால் ஒரு உயிரை காக்க முடியுமா? என்ற ஏக்கத்தோடு பனைக்குற்றிகளின் அடுக்குகளுக்கிடையில் பணி செய்து கொண்டிருந்த கடுமையான நினைவுகள். அவர் ஒரு மூத்த போராளி மருத்துவர், நல்ல எழுத்தாளரும் கூட. முக்கியமான மருத்துவப் பிரிவு தொடர்பான நாவல்களை உருவாக்கிய போராளி. தமிழீழ மருத்துவத் துறைக்கு என்றும் தேவையான போராளி. அன்று நீண்ட நாட்கள் தூக்கமின்மை, தொடர் சத்திர சிகிச்சைகள் என அவர் ஓயாது ஓடிக்கொண்டுருந்தார். எதிரித் தாக்குதலில் காயப்பட்ட ஒரு சிறுவனுக்கு சத்திர சிகிச்சை அழித்த பின் சிறு ஓய்வு கிடைக்குமா? அவர் எதிர்பார்ப்போடு அந்த பனைக்குற்றிகளை விட்டு வெளியில் வருகிறார். “டொக்டர் கொஞ்சம் தூங்குங்கோவன்… காயங்கள் தொடர்ந்து வருகுது ஓய்வு எடுத்தால் தான் நல்லது…” ஊடகப் பிரிவைச் சேர்ந்த நண்பன் ஒருவன் அவரை வற்புறுத்துகிறான். ” ம்ம்… சாப்பாடு எதாவது இருக்காடா…? தெரியல்ல டொக்டர். உணவு வைப்பதற்காக இருந்த தறப்பாள் கொட்டிலுக்குள் போன மருத்துவர், அங்கே எதுவும் இல்லாதது கண்டு பசியுடன் திரும்புகிறார். அப்போதெல்லாம் பசி என்பதற்காக பணியில் இருந்து விலக முடியாத சூழல். அதனால் பசியைப் பொருட்படுத்தாது சிறிய ஓய்வுக்காக தனது கொட்டிலுக்கு போகிறார். அவரது விழிகளுக்கு குப்பைத் வாளியில் ஒரு பொதி தெரிகிறது. யார் என்று தெரியவில்லை எப்போது உண்டார்கள் என்று கூடத் தெரியாது. ஆனால் பழுதடையாத நிலையில் கசக்கி வீசப்பட்ட ஒரு பொலித்தீன் (shoping bag) பை கண்ணில் தெரிகிறது. அதைப் பார்த்து அந்த உணவை வீணாக்கியவர் மீது கோவம் வருகிறது. ஆனாலும் யாரிடம் நொந்து கொள்ள? அந்த பையை விரித்துப் பார்க்கிறார். அதற்குள் ஒரு திரளை சோறும் பருப்பு கறியையும் குழைக்கப்பட்டிருந்தது. அதை சுவைத்து உண்கிறார். உண்டு விட்டு வாளியில் இருந்த தண்ணீரில் கையை அலம்பிக் கொண்டு வெளியில் வருகிறார். புலம்பெயர் தேசங்களில் சரி தாயகத்தில் சரி பெற்ற பிள்ளைகள் உண்ட உணவைக் கூட தாம் உண்ணக் கூடாது என்பதற்காக குப்பையில் வீசும் பல பெற்றவர்கள் வாழ்வது கண்ணூடு. அவ்வாறான உறவுகளுக்குள் இவ்வாறான மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது மனதை நெருடுகிறது. இவர் மட்டுமல்ல இவ்வாறு பல ஆயிரம் போராளிகள் வாழ்ந்தார்கள். குப்பையில் இருந்தவற்றை கூட உணவாக்கினார்கள். காட்டுக்குள் இருந்த பன்னை இலைகளை அவித்து உண்டார்கள். இலக்குகளை அடைய வேண்டும் என்பதற்காக கிடைத்தவற்றை பச்சையாகவே உண்டார்கள் . தமது சிறுநீரைக் கூட குடித்து உயிர் வாழ்ந்தார்கள். அவ்வாறு வாழ்ந்த பல ஆயிரம் போராளிகள் இன்று நடைப்பிணங்களாக வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு சுட்டியாகவே இந்தக் கதையில் இவர் கோடிட்டு நிற்கிறார். வீழ்ந்தவர்கள் கூட நிம்மதி இன்றியே விதை குழிகளுக்குள் வாழ்கிறார்கள். தங்கள் உயிர்களை தாய் மண்ணுக்காக குடுத்து சென்ற வீரத்தையும் உணர்வுகளையும் நாமும் எமது இளையவர்களும் மறந்திட முடியுமா? ஆண்டுகள் பல களமுனைகளை வாழ்வாக்கி வாழ்ந்தவர்களை நினைக்காமல் இருக்க முடியுமா? தன்னிலை மறந்து மக்களின் வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்த மறவர் தியாகங்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் எருவாகிட விடலாமா…? கவிமகன்.இ 13.07.2018- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 13 போராளி மருத்துவர் லெப் கேணல் இசைவாணன் ! யாருக்கும் தொந்தரவு தரமாட்டன் – போராளி மருத்துவர் லெப் கேணல் இசைவாணன் தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் சுரேன் என்றும் இசைவாணன் என்றும் அழைக்கப்படும் போராளியும் ஒருவராகிறார். தமிழீழ விடுதலைக்காக ஒரு காலை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றீடாக ஒற்றைச் செயற்கை காலோடு தன் வாழ்க்கையை தமிழீழ விடுதலைக்காக கொடுத்த உன்னதமான வேங்கை இசைவாணன். இன்று நாம் இழந்து விட்டோம் என்ற உண்மை ஏற்க முடியாது தொண்டைக்குள் சிக்குண்டு கிடக்கிறோம். ஒற்றைக்கால் என்பது சில வேளைகளில் அவர் நடக்கும் போது புலனாகினும் அவரின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அதை வெளிக்காட்டியதே இல்லை. இதை உணர்த்தக் கூடிய ஒரு நிகழ்வாக கீழ் வருவதை குறிப்பிடலாம். 1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குறிபார்த்து சுடுதல் (Sniper) பயிற்சிக்காக ஒரு அணி தயாராகிய போது தன்னை அதில் இணைக்கும் படி பல முறை தலமையை நச்சரித்து கொண்டிருந்தார். ஆனால் அந்த பயிற்சி கடினமானதாக இருக்கும் என்ற நிலையில் அவரின் ஒற்றைக்கால் பெரும் குறையாக பார்க்கப்பட்டு உள்வாங்கப்படாது தவிர்க்கப்பட்டார். இதை அறிந்த இசைவாணன் தனது தளபதியோடு பலமுறை சண்டையிட்டு தலைவரிடமும் பலமுறை வேண்டுதல் செய்து அந்த அணிக்குள்ளே சென்றார். பல மாத பயிற்சிகள், மிகக் கடினமான பயிற்சிகள். ஆனாலும் அவை அத்தனையையும் பொடியாக்கி உடைத்தெறிந்து வெற்றி பெற்றார். இறுதி பயிற்சி நடந்து முடிந்து போட்டிகள் நடந்தன. அப்போது குறிபார்த்து சுடுதல் போட்டி நடந்த போது கொடுக்கப்பட்ட அனைத்து ரவைகளையும் இலக்கினில் சரியாக பொருத்தி அனைவரிலும் சிறந்தவனாகவும் முதன்மையானவனாகவும் வந்த அந்த பொழுதுகளை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. அன்றில் இருந்து விடுதலைப்புலிகளின் பதுங்கிச்சுடும் அணிப் போராளியாக பயணித்தார். இந்தக் காலத்தில் தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவாகியது தமிழீழ மருத்துவக் கல்லூரி. 1982 நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தன் மடியினில் தலைவைத்து முதல் வித்தாக வீழ்ந்த சங்கரை போல இனி வரும் காலங்களில் எம் போராளிகள் சீரான மருத்துவக் காப்பு இல்லாமல் வீரச்சாவடையக் கூடாது என்ற தமிழீழ தேசிய தலைமையின் உன்னத நோக்கத்தின் பின்னால் உருவானதே ” தமிழீழ மருத்துவக்கல்லூரி”. இந்தக் கல்லூரி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் அழகையா துரைராஜா அவர்களின் வழிகாட்டலில் , தமிழீழ மருத்துவக்கல்லூரியின் பீடாதிபதி ஜெயகுலராஜா, பேராசிரியர் சிவபாலன், மற்றும் வேறு பல பேராசிரியர்களின் ( அவர்களின் பெயர்கள் இப்போது வெளியில் குறிப்பிட முடியவில்லை) முழுமையான ஆதரவோடு உருவாக்கம் பெறுகிறது. அப்போது பல பிரிவுகளில் இருந்து போராளிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அதில் ஒரு போராளி இசைவாணன். பதுங்கிச்சுடும் அணியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட இசைவாணன் ஒரு மருத்துவப் போராளியாக கல்லூரிக்கு அனுப்பப் படுகிறார். அவ்வாறு மருத்துவப் பிரிவில் வளர்த்தெடுக்கப்பட்ட பெரு வீரர்களில் ஒருவன். சண்டைக் களங்களை தம் ஆளுகைக்குள் வைத்திருக்கும் ஒவ்வொரு போராளிகளுக்கும் மட்டுமல்ல மருத்துவ தேவைகள் உணரப்பட்ட அத்தனை இடங்களிலும் மக்களின் சேவையாளனாக, தன்னை நிலை நிறுத்திய ஒரு இலட்சியவாதி. போராளி மருத்துவராக பயணிக்கத் தொடங்கி சில காலங்கள் கழிந்த நிலையில் 1993 பங்குனி மாதம் 23 நாள் அன்று தமிழீழ மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை தேசியத்தலைவர் கல்லூரியில் வைத்துச் சந்திக்கிறார். அங்கு பலர் இருந்தார்கள். ஆனாலும் எமது தேசத்தின் தலைமகன் “சுரேன் நீ இங்கயா இருக்கிறாய் …?’’ என பெயரைக் கூறி அழைத்து நலம் விசாரித்தது போராளி மருத்துவர் இசைவாணனைத்தான். (சுரேன் என்பது இசைவாணனின் முன்னாள் பெயர் ) அப்பிடி தலைவனின் நெஞ்சில் ஆழமாக பதிந்திருந்தவர், போராளி மருத்துவர் லெப். கேணல் இசைவாணன் தனக்கு ஒரு கால் இல்லை என்பதை உணர்ந்ததும் இல்லை, மற்றவர்களுக்கு அதை காட்டிக் கொண்டதும் இல்லை. எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவே இருந்தார். தமிழீழ மருத்துவக்கல்லூரி என்றும் இராணுவக் கட்டுப்பாடுகள் நிறைந்ததாகவே இருக்கும். அவர்கள் விடும் சிறு தவறுகளும் தண்டனையில் தான் முடியும். அவ்வாறான தண்டனை ஒன்றில் இசைவாணனின் உறுதியை அவருடன் கூடப் பயணித்த அனைத்துப் போராளிகளும் உணர்ந்து கொண்டார்கள். எந்த நிலையிலும் கால் இல்லை என்பதைக் காரணம் காட்டி இசைவாணன் வேலைகளிலிருந்தும், கற்றலிலிருந்தும் பின்தங்கியது இல்லை. என்றும் முன்னிலை மருத்துவ மாணவனாகவே விளங்கினார். ஒரு பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தினால் மட்டுமே போதுமானதாகும். எந்த விதமான ஆளணி மற்றும் உதவிகளின்றி, அந்த முக்கியம் வாய்ந்த பணியை முடித்து பொறுப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் பண்பு நிறைந்தவர். அதற்காக பல முனைகளில் பலருடன் விவாதங்கள் என்றும் சண்டைகள் என்றும் நிறைய பின்னடைவுகளைச் சந்திப்பார். ஆனாலும் சாதுரியமான பேச்சினால் அவர்கள் மனதை வென்று பணியை முடித்திருப்பார். அவ்வாறான பெரும் சாதுரியம் மிக்க போராளி மருத்துவர். யாழ்ப்பாண மாவட்டம் சிங்களத்தின் சந்திரிக்கா தலைமையிலான, அரச படைகளால் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட போது பெரிதும் நொந்து போனார். உரிமைகளை மீட்டெடுக்க போராளியாகியவர்கள் இவரும் இவரது தோழர்களும். ஆனால் தமது கண் முன்னே தமது தாயகம் எதிரியின் கைகளுக்குள் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாது விக்கித்து நின்றனர். ஆனால் தேசக் கடமை இவர்களை மருத்துவர்களாக மாற்றிய தேசியத் தலைவர் உரைத்த வார்த்தைகளை நினைத்தார்கள். “ஆயுதம் தூக்கி எதிரியின் உயிரை எடுக்க வந்த உங்களை நான் உயிர் காக்கும் பனி ஒன்றுக்காக தாயாராகுங்கள் என்று விட்டிருக்கிறேன். இது பலருக்கு ஏமாற்றத்தைத் தரலாம் ஏனெனில் போராளிகள் அனைவரும் எதிரியின் கொடூரங்களை எதிர்க்கவே புலியானவர்கள். ஆனாலும் இந்தப் பணியும் எம் அமைப்புக்கு மிக முக்கியமானது என்பதை நீங்கள் மருத்துவர்களாக கற்றுத் தேர்ந்ததும் புரிந்து கொள்வீர்கள். களமுனையில் ஒரு உயிரைஎதிரியைக் கொள்வதை விட அதே களமுனையில் எமது போராளி ஒருவனின் உயிரைக் காப்பாற்றும் போது இந்த பெறுபேற்றை அறிவீர்கள் ” என்ற கருத்துத் தாங்கிய செய்தி ஒன்றை அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதைப்போலவே இப்போது தலைமையின் கட்டளைக்கு ஏற்ப வன்னிக்கு இடம்பெயர்கிறார்கள். வன்னி மண்ணில் தொடர்ந்த அவர்களது மருத்துவக் கற்கை இசைவாணனையும் அவருடன் கூட இருந்த போராளி மருத்துவர்களையும் மருத்துவத்துறையில் புடம் போட்டது. மருத்துவப் போராளிகள் கற்கைகளை கற்கும் அதே நேரம் சண்டைகளிலும் பங்குபற்ற வேண்டியவர்களாக இருந்தார்கள். அதனால் முழுமையான போர் வீரர்களாகவும் மருத்துவர்களாகவும் வாழ்ந்தார்கள் அதில் இசைவாணனும் சிறப்பான இடத்தை வகிக்கிறார். எதற்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்ட இசைவாணன் முதன்முதலாக ஒரு விடயத்துக்காக அஞ்சத் தொடங்கினார். எந்த வேலைக்கும் யாரிடமும் உதவி கேட்காத இசைவாணன் முதல்தடவையாக தனது வாழ்க்கைத் துணைவிக்காக நண்பனிடம் உதவி கேட்கிறார்.களத்துக்கு அஞ்சாத மருத்துவர் இசைவாணன், காதலுக்காக அஞ்சியதை அவரது தோழர்கள் அன்று கண்டார்கள். “ரதி” மருத்துவர் இசைவாணனின் மனத்தைக் கவர்ந்த பெண் போராளி. மருத்துவப்பிரிவின் முதலாவது தாதியப் பிரிவில் பயின்று ஒட்டிசுட்டானில் அமைந்திருந்த “மேஜர் அபயன்” இராணுவ மருத்துவமனைக்கு பணிக்காக வந்திருந்த போதே முதலில் இசைவாணன் கண்டிருந்தார். ஏனோ ரதியை பிடித்திருந்தது. ஆனாலும் மனதில் பயமாக இருந்தது. அமைதி காத்தார். கிளிநொச்சி எதிரியிடம் “சத்ஜெய” நடவடிக்கை மூலம் வீழ்ந்த போது “மேஜர் அபயன் ஞாபகார்த்த ” இராணுவ மருத்துவமனை மருத்துவப்போராளி அருண் தலைமையில் தோற்றம்பெறுகின்றது. மாமனிதரான வைத்தியக் கலாநிதி கங்காதரன் அவர்களால் ஒரு வயிற்றறுவைச் சிகிச்சையுடன் ஆரம்பிக்கப்பட்ட “மேஜர் அபயன்” மருத்துவமனை போராளிகளுக்கும், மக்களுக்குமான மருத்துவப்பணியில் இயங்கியது. இந்த மருத்துவமனையே முல்லைத்தீவுச் சமர் ஜெயசிக்குறு சமர்களில் எல்லாம் முக்கிய இராணுவ மருத்துவ மனையாக இயங்குகின்றது. அமைப்பின் மூத்த மருத்துவர்களான மருத்துவ கலாநிதி பத்மலோஜினி கரிகாலன் (அன்ரி), மருத்துவ கலாநிதி சூரி, மருத்துவ கலாநிதி பாலன், மருத்துவ கலாநிதி சுஜந்தன், மருத்துவ கலாநிதி அஜந்தன் ஆகியோர் அடங்கிய அணி அங்கு கடமையில் இருக்கின்றது. இந்த அணியில் ஒருவராகவே இசைவாணன் பணியில் இருந்தார். அப்போது தான் ரதி மீதான அவரது காதல் மலர்ந்திருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக கூற மருத்துவர் இசைவாணனால் முடியவில்லை. ஏனெனில், தனது பொறுப்புக்கு கீழ் இருக்கும் “மேஜர் அபயன்” இராணுவ மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக் கூடத்தில் பணியில் இருக்கும் ஒரு பெண் போராளியை தான் விரும்புவதாக கூறும் போது அவள் மறுத்து விட்டால்…? அல்லது தனது பொறுப்பாளர் தன்னைக் காதலிப்பதாக கூறுகிறார் என்று வெளியில் சொல்லி விட்டால்? போராளிகள் மத்தியில் பேசு பொருளாகி விடக்கூடிய அபாயத்தை அவர் உணர்ந்திருந்தார். அதனால் நண்பனின் உதவியை நாடினார். நண்பனின் உதவியோடு அவரது காதல் திருமணத்தில் முடிந்தது. திருமண வாழ்வு எல்லையில்லா மகிழ்வை தந்தது அந்த சந்தோசத்தின் சிகரமாக அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். இவ்வாறான அவரது மகிழ்வான பக்கங்களை மேஜர் அபயன் மருத்துவமனை தாங்கி நின்றது. இந்த நேரத்தில் “ஜெயசிக்குறு” தொடர் நடவடிக்கை மூலம் எதிரி வன்னியை இருகூறாக்கக்க முனைகையில் வன்னிப்பெருநிலப்பரப்பு வன்னி மேற்கு, வன்னி கிழக்கு என இரண்டாக பிரிந்து போனது. மாங்குளத்துக்கும் கிளிநொச்சியின் இரணைமடுச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியே இரண்டு பிரதேசங்களையும் இணைக்கும் பகுதியாக இருந்தது. இதனால் இரண்டு பிரதேசங்களுக்குமான மருத்துவ அணியின் தேவை உணரப்பட்டு ஒரு மருத்துவ அணி வன்னி மேற்கிற்கு நகர்ந்தது. அந்த அணி வன்னேரிக்குளம் பகுதியில் தமது மருத்துவக் களத்தை விரிவாக்குகின்றது. அங்கே அபயன் மருத்துவமனையில் இருந்து பிரிக்கப்பட்ட போராளிகளின் அணி மருத்துவ கலாநிதி சுஜந்தன், மருத்துவ கலாநிதி அஜந்தன் உட்பட்ட மருத்துவ ஆளணியாகி விரைந்து இயங்குகின்றது. மாங்குளத்தில் அசைவற்று நின்ற அந்த “வெற்றிநிச்சயம் (ஜெயசிக்குறு )” நடவடிக்கையில் சிங்கள படைகள் பல முறை தோல்விக்குமேல் தோல்வியடைகிறன. இந்த சண்டைகளுக்கெல்லாம் பிரதான மருத்துவ அணியாக இவர்கள் இயங்கினார்கள். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் கிளிநொச்சியை மீட்கும் ஓயாதலைகள் -2 நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் செய்ப்பட்டு மருத்துவ அணிகள் தயாராகின்றன. மருத்துவ களநிலைகளில் போராளி மருத்துவர் லெப்.கேணல் காந்தனும், போராளி மருத்துவர் லெப். கேணல் இசைவாணனும் முறிகண்டிக்கு அண்மையில் உள்ள வசந்தநகர் கிராமத்தில் தமது மருத்துவ நிலையை அமைக்கின்றனர். போராளிமருத்துவர் தணிகை மற்றும் பெண் போராளி மருத்துவர் மீனலோஜினி ஆகியோர் ஜெயந்திநகர் பக்கமாகவும், போராளி மருத்துவர் மேஜர். சுசில் மற்றும், போராளி மருத்துவர் மேஜர் றோகிணி ஆகியோர் முரசுமோட்டைப் பகுதியிலும் மருத்துவ நிலைகளை அமைத்து நிற்கின்றனர். இந்த மருத்துவ நிலைகள் சாதாரணமான மருத்துவ நிலைகளாக இல்லாது பிரதான மருத்துவ நிலைகளாக உருவாக்கி இருந்தார்கள். உலக அரங்கிலையே முன் வைத்தியசாலை பராமரிப்பு நிலையங்களில் குருதி மீளேற்றம் அல்லது Intercostals Drainage Tube (ICD Tube), Traumatic Amputation, Blood Transfusion(some time auto transfusion), போன்ற சிறு சத்திரசிகிச்சைகள், Inserting Urinary Catheter for check the urine out put , Giving Tetanus toxoid , Proper Splinting for fractures போன்றவை செய்யப்படுவதில்லை. ஆனால் இங்கே அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் மருத்துவ நிலைகள் அனைத்திலும் இவை அனைத்தையும் செய்யக் கூடிய வகையிலையே அமைத்திருந்தார்கள். ஏனெனில் அப்போது பிரதான இராணுவ மருத்துவமனையாக ஒட்டிசுட்டான் பகுதியில் மேஜர் அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை அமைந்திருந்தது. அதனால் கிளிநொச்சியில் இருந்து அபயன் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு காயப்பட்டவர்களைக் கொண்டு செல்வதற்கு கிட்டத்தட்ட ஒன்று தொடக்கம் இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்படும். அதனால் அந்த தூர இடைவெளிக்குள் காயப்பட்ட போராளிகள் குருதி வெளியேற்றத்தால் வீரச்சாவு அடைவதை தடுக்கவும் காயங்கள் மேலும் பாதிப்படைவதைத் தடுக்கவும் இவ்வாறான முன் மருத்துவ பராமரிப்பு நிலையங்களிலையே அவற்றைச் செய்ய வேண்டி இருந்தது. அந்தச் சண்டையில் மேஜர் சுசில், மேஜர் றோகிணி மற்றும், களமருத்துவப் பொறுப்பாளர் மேஜர் திவாகர் பெண் மருத்துவ நிர்வாகப் போராளி மேஜர் எஸ்தர் மற்றும் மேஜர் கமல் மாஸ்டர் போன்றவர்கள் மருத்துவ நிலைகள் மீதான எதிரியின் தாக்குதல்களில் வீரச்சாவடைய காயப்பட்ட போராளிகள் இசைவாணனின் மருத்துவ நிலை மற்றும் தணிகையின் மருத்துவ நிலைகளில் குவிகின்றனர். அதனால் வேலைப்பளு அதிகமாகிறது. தொடர்ந்து நிற்க முடியாத சூழல். அவரது ஒற்றைக் கால் புண்ணாகுகிறது. தொடர்ந்தும் பொய்க்காலை போட்டிருந்ததால் அந்தக்கால் பயங்கர வேதனையைத் தருகிறது. ஆனாலும் சோர்வு அவரில் வரவில்லை பணிமுடித்து தளம் மீள்கிறார். இவ்வாறான உறுதிமிக்க போராளி மருத்துவர் போராளிகளின் மருத்துவத்தை மட்டுமல்லாது மக்களையும் தன் மருத்துவப் பணியால் அரவணைத்ததை வன்னியில் இருந்த அனைவரும் அறிந்திருப்பர். வன்னியில் இருந்த மருத்துவ ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமிழீழ மருத்துவப் பிரிவால் உருவாக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரிகளில் முதுநிலை விரிவுரையாளராக இருந்து மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதில் முன் நின்றார் இசைவாணன். அதை விட அரச மருத்துவர்கள், போராளி மருத்துவர்கள் என்ற இரு வேறு பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டிருந்த தமிழீழ மருத்துவ அணி உள்ளே ஓரணியாகவும் வெளியில் மட்டும் இரு அணியாகவும் பணியாற்றியது குறிப்பிட வேண்டிய ஒன்று. (எதிரிக்காக )அவசர கால சூழல்களைத் தவிர்ப்பதற்காக அனைவரும் அரச மருத்துவமனைகளிலோ அல்லது இராணுவ மருத்துவமனைகளிலோ ஒருங்கிணைந்து செயற்படுவர். அச்செயற்பாடுகளில் எல்லாம் இசைவாணனும் முன்நிலை வகிப்பது குறிக்கப்பட வேண்டியது. வன்னிப் பெருநிலம் எங்கும் மலேரியா ( Malaria) தலைவிரித்து ஆடிய 1996- 1998 காலப்பகுதியில் தமிழீழ சுகாதார சேவைகள் முற்றுமுழுதான வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்த வன்னிக்குள் கொடிய மலேரியா நோய்த் தாக்கத்தை இல்லாமல் செய்தார்கள் அந்த செயற்பாட்டின் முன் நிலை வகிப்பவர்களுள் இசைவாணனும் ஒருவர் என்றால் மிகையல்லை. அன்றைய நாட்களில் இலங்கை சுகாதாரத் திணைக்களத்தால் தடுக்க முடியாமல் திணறிய மலேரியா நோய்த் தாக்கத்தை வன்னிக்குள் முழுமையாக தடுத்தருந்தது தமிழீழ சுகாதார சேவைகள் திணைக்களம். இந்த செயற்பாடானது சர்வதேச சுகாதார வல்லுனர்களையே எம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் அது தவறில்லை. அதற்காக இசைவாணன் காத்திரமான பங்கை கொடுத்திருந்தார். 2006 ஆண்டின் நடுப்பகுதியில் வன்னி மண் இறுதிப்போருக்குத் தயாரானது போது. எதிரி ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தான். அதே நேரம் சர்வதேச அளவிலான பலத்தை வன்னிமீது திருப்பி எம்மை இல்லாது செய்வதற்கான திட்டமிடலில் எதிரி வெற்றியடைந்துவிட்டிருந்தான். ஆனாலும் எந்த நிலையையும் வெற்றியின் படிக்கற்களாக்கும் போராளிகள் தடுமாறவில்லை. இயக்கத்தின் வழிநடத்தலை முழுமையாக நடைமுறைப்படுத்தும் எந்த ஆபத்தான சூழலிலும் பணியாற்ற எமது போராளிகள் தயாராகவே இருந்தார்கள். வழமையில் இராணுவ மருத்துவ மனைகளில் தொங்கும் போரரங்கின் வரைபடங்கள் தினமும் விவாதத்துக்கும் அனுமானங்களுக்கும் களமமைக்கும். “எதிரி மக்களை இலக்கு வைப்பதன் மூலம் உளவுரன் ரீதியில் பலவீனப்படுத்த முனைவான். சிவில் நிர்வாகத்தை உடைத்துப் போரொன்றை எதிர்கொள்ளும் சக்தியை உடைக்கவும் மூல உபாயம் வகுத்துள்ளான் ” என்று இசைவாணன் வாதிடுவார். அவரின் கூற்றுப்படியே பல சம்பவங்கள் நடந்து முடிந்தன. அதன்படி தொண்டு நிறுவன வாகனங்கள், மருத்துவக் காவுவண்டிகள், சுகாதார சேவைகள், உணவு விநியோகம் போன்றவற்றைத் தான் முதலில் எதிரி இலக்குவைத்தான். சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னியில் இருந்து வெளியேற்றினான். இந்த நிலையில் முற்று முழுதாக எதிரியால் தடைசெய்யப்பட்ட அனைத்து வளங்களையும் எம் மக்களுக்காக நாமே ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை எழுந்திருந்தது. தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சியில் நாம் வளர வேண்டிய தேவையைத் தேசியத் தலைவர் போராளிகளுக்கு உணர்த்திய போது மக்களுக்கான போசாக்கு உணவுத் தயாரிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கினார் இசைவாணன். அதற்காக ஒரு தொழிற்சாலையையே இயக்கினார். இதனை வடிவமைக்கும் பொறுப்பை தமிழீழ சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி. சுஜந்தன் அவர்கள் இசைவாணனிடம் ஒப்படைத்த போது நிட்சயமாக அதன் பலன் பெரும் வெற்றியைத் தரும் என்றே நம்பினார். அதைப் போலவே கர்பிணித் தாய்மாருக்கும் குழந்தைகளுக்கும் பயன்படக்கூடியதான “போசாக்கு மாவை ” ( அரசாங்கத்தால் கொடுக்கப்படும் திரிபோசா மாவின் தரத்தோடு) உற்பத்தி செய்தார் இசைவாணன். இந்த உற்பத்தியானது இறுதிச்சண்டை வரை தொடர்ந்ததும். பட்டினியால் வாடிய மக்களின் பசி போக்குவதற்கு பெரிதும் உதவியதும் வரலாறு. இவ்வாறான போராளி மருத்துவர் இசைவாணன் மன்னார் மாவட்ட தமிழீழ சுகாதாரசேவைகள் பொறுப்பாளராக இருந்த போது மக்களுக்கான பணிகளை சரியாக செய்தார். களமுனை கொஞ்சம் கொஞ்சமாக எமது பிரதேசங்களுக்குள் நகர்ந்த போதெல்லாம் படையணிப் போராளிகளுக்கான மருத்துவம் மட்டுமல்லாது மக்களுக்கான பணிகளையும் செவ்வனவே செய்தார். அவ்வாறான ஒரு இக்கட்டான சூழலில் இராணுவம் எமது பிரதேசம் ஒன்றைக் கைப்பற்றிய போது இவரின் பொறுப்பில் இருந்த போசாக்குமாத் தொழிற்சாலை எமது படையணிகளின் எல்லை வேலிக்கும் எதிரிக்கும் இடையில் சிக்குண்டது. ஆனாலும் கட்டாயமாக அங்கிருக்கும் தானியங்கள், மற்றும் பாத்திரங்கள் இயந்திர உபகரணங்கள் கட்டாயமாக மீட்கப்பட வேண்டும். ஆனாலும் பாதுகாப்பு என்பது அறவே இல்லை. லெப்கேணல். இசைவாணனும் விடுதலைப்புலிகளின் முதன்மை இராணுவ மருத்துவர் வாமனும் அவற்றை மீட்டே ஆக வேண்டும் என்பதில் திடமாக இருந்தார்கள். இவர்களிடம் பிஸ்டலையும், கழுத்தில் இருந்த குப்பியையும் தவிர வேற எதுவும் இல்லை. அதைவிட அவர்களிடம் இருந்த வாகனமோ இயங்குநிலை தடைப்பட்டால் திரும்பத் தள்ளித் தான் இயக்க வேண்டும். இந்த நிலையில் எப்படி அவர்களால் அந்த போசாக்கு மா தொழிற்சாலையை மீட்க முடியும். ஆனால் இரு இராணுவ மருத்துவர்களும் தமது வாகனத்தோடு அந்த கொட்டகைக்கு சென்றார்கள். ஒற்றைக் கால் வலிக்க வலிக்க அத்தனை பொருட்களையும் வாகனத்தில் ஏற்றினார்கள். ஆனால் வாகனம் இயங்கவில்லை. இருவருமே திட்டமிட்டு வாகனத்தை விட்டிருந்த இடம் ஒரு ஏற்றமான பகுதி. வாகனத்தைத் தள்ளி இயங்க செய்வது இலகு என்பதால் அவர்கள் அவ்வாறு செய்திருந்தார்கள். இப்போது மருத்துவர் வாமன், மற்றும் இசைவாணன் ஆகியோர் தமது வாகனத்தை மெதுவாக தள்ளி இயங்கு நிலைக்கு கொண்டுவந்து அந்த சூனியப் பிரதேசத்தில் இருந்து தப்பி வருகிறனர். தருணம் தப்பினால் மரணம் என்ற நியத்தை சவாலாக ஏற்று மக்களுக்காக அந்த பொருட்களை மீட்டு வந்தார்கள் மருத்துவர்கள். இவ்வாறான போராளி மருத்துவர்கள் இறுதி வரை தளராது களமாடிய பெரும் வேங்கைகள். ஆனாலும் அவர்கள் ஒரு விடயத்தில் சில மாறுதலான முடிவுகளை எடுத்திருந்தார்கள். ஏனெனில், அப்போது இறுதிப் போர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கை சிங்கள அரசு திட்டமிட்டதைப் போலவே வன்னி மண்ணில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு துணை போன சர்வதேசம் போட்ட நிகழ்ச்சி நிரலில் வன்னியில் மக்கள் காப்பற்றப்படுகிறார்கள் என்று வெளிச்சமிட்டுக் கொண்டு இனப்படுகொலைகள் அரங்கேறின. அதனால் தமது வருங்காலக் சந்ததியினரான குழந்தைகளை காத்துவிடத் துடித்தார்கள் சில போராளிகள். ஆனாலும் தமது பிள்ளைகள் தம்முடனே இருக்கட்டும் என்ற முடிவில் இருந்து பல போராளிகள் மாறவில்லை. யாருக்காக இந்த போராட்டம் நடக்கிறதோ? எந்தச் சந்ததி வாழ வேண்டும் என்று அவர்கள் களத்தில் நிற்கிறார்களோ ? அந்த சந்ததி அழிந்து கொண்டிருப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. சிங்களத்தின் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் வலயங்களிலெல்லாம், பெரும் உயிர் சேதங்கள் வந்த போதெல்லாம் மருத்துவப்பிரிவின் போராளி மருத்துவர்கள் தமது உயிர் காக்கும் செயற்பாடுகளை இறுதிவரை செய்தார்கள். இவ்வாறான சூழல் ஒன்றில் தான், போராளி மருத்துவ அணியில் இருந்த பல மூத்த மருத்துவர்கள் சண்டைகளில் வீரச்சாவடைகிறார்கள். லெப்கேணல் வளர்பிறை, லெப்கேணல் கமலினி, லெப்கேணல் காந்தன், லெப்கேணல் சத்தியா, லெப்கேணல் தமிழ்நேசன் ஆகியோர் வீரச்சாவடைந்த நிலையில் இறையொளி, செவ்வானம் ஆகியோரும் இறுதி சண்டையில் நடந்த மருத்துவமனை மீதான தாக்குதலில் வீரச்சாவடைகின்றனர். இப்போது மிகுதியாக இருக்கும் மருத்துவ வளமோ மிக சிறியது. மூத்த மருத்துவர்கள் மிக குறுகியவர்களே பணியில் இருக்கிறார்கள், அரச மருத்துவர்களான மருத்துவக் கலாநிதி வரதராஜன், மற்றும் மருத்துவக் கலாநிதி சண்முகராஜா ஆகியோருடன் தமிழீழ மருத்துவர்கள் இடைவிடாத உயிர்காப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறார்கள். இந்த நிலையில் தான் சிறு ஓய்வுக்காக வீட்டுக்குச் சென்றிருந்த (வீடு என்பது தரப்பாளால் அமைக்கப்பட்டிருந்த சிறு கொட்டகை அதனோடு இணைந்த பதுங்ககழி ) இசைவாணன் 12.05.2009 அன்று அவரது குடும்பத்தோடு எறிகணை வீச்சுக்கு இலக்காகுகிறார். அந்த எறிகணை வீச்சில் பவிதா(8) றோகிதா(5) தமிழ்வேந்தன்(3) ஆகிய மருத்துவர் இசைவாணனின் மூன்று குழந்தைகளும் சாவடைகின்றனர். தமது கண்முன்னே தம் குழந்தைகள் துடித்துச் சாவதை இசைவாணனும் அவரது மனைவியும் மருத்துவப்பிரிவுப் போராளியுமான ரதியும் பார்க்கிறார்கள். ஆனால் எதையும் செய்ய முடியாத சூழல். மூன்று குழந்தைகளை கண்முன்னே பறி கொடுத்த தாய் தனது கணவனான இசைவாணன் முழுமையாக இருந்த கால்த் தொடையில் பெரியளவிலான முறிவுக் காயமடைந்ததையும் பார்க்கிறார். ஒரு பக்கம் மூன்று குழந்தைகளின் சாவு, மறுபக்கம் உயிருக்குப் போராடும் கணவன். என்ன செய்வது என்று அறியாத நிலையில் கத்திக் குழறும் பெண் மருத்துவப் போராளியை அருகில் இருந்தவர்களால் ஆற்றுகைப்படுத்த முடியவில்லை. அவரைத் தேற்ற வழியற்றுப் போனார்கள். எமது விடுதலை அமைப்பு சாவுகளைக் கண்டு அஞ்சியதில்லை. ஆனால் பெற்ற குழந்தைகள் மூவரும் ஒரே இடத்தில் சாவடைந்த கொடூரத்தை எந்த தாய் தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியும்? குருதி பெருக்கெடுத்து ஓட, இசைவாணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். மீள் உயிர்ப்பித்தல் சிகிச்சை தரப்பட்டு, இசைவாணன் காப்பாற்றப் படுகிறார். இந்த நிலையில் இறுதி வரை இயங்கி வந்த அலன் இராணுவ மருத்துவமனை சிங்களத்தால் முற்றுகையிடப்படும் நிலை வந்தது. அதனால் அங்கிருந்து இயலுமானவரை காயப்பட்ட போராளிகள் எமது கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி கொண்டு செல்லப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக இசைவாணனும் கொண்டு செல்லப்படுகிறார். துணைவி ரதியும் தமிழீழ சுகாதார பரிசோதகரும் போராளியுமான தீபனும் இசைவாணனுடன் நிற்கிறார்கள். அருகில் காயமடைந்திருந்த மூத்த போராளி மருத்துவர் வாமனும் இருக்கின்றார். இசைவாணன் காயமடைந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில் முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருந்த குறுகிய நிலப்பரப்பு சிங்களப் படைகளால் கண்மூடித் தனமாக தாக்கப் படுகிறது. இந்த நிலையில் அடிக்கப்பட்டுக் கொண்டிருந்த எறிகணைத் தாக்குதல்களில் இருந்து தனது பிள்ளைகளைக் காத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துவர் வாமன் இவர்களை விட்டு வெளியேற முனைந்தார். அப்போது “மச்சான் நிலைமை சிக்கலாகிவிட்டது. இனி என்னை இயக்கம் வைச்சு பராமரிக்கிறது என்பது பயங்கர சிக்கல் நிறைஞ்சது. ரதியும் பாவம் என்னை வைச்சு எப்பிடி பராமரிப்பா? அதை விட இப்படியே சிங்களவனிடம் சரணடையவும் என்னால் முடியாது. அவன் எங்களை நாயைச் சுடுவது போல சுட்டுத் தள்ளுவான். அப்பிடி அவனிடம் சாக நான் தயாராய் இல்ல… மச்சான் நான் குப்பி கடிக்கப்போறன்” என்கிறார் இசைவாணன். சிங்களப் படைகளை அவர் சரியாக புரிந்திருந்தார். தனக்கு நடக்கப்போகும் அவலச்சாவை அவர் விரும்பவில்லை. தீர்க்கதர்சனமாக முடிவை எடுத்தார். அதைக் கேட்டு உடனடியாக மறுக்கிறார் வாமன்… “இல்ல மச்சான் நான் சொல்லும் வரை அப்பிடி எதுவும் செய்யாத… நான் நிலைமையைப் பார்த்து சொல்லுறன். இப்ப எதுவும் முடிவெடுக்காத மச்சான்” இசைவாணனின் தலையை வருடியபடி ஒற்றைக்காலில் நின்றுகொண்டு மருத்துவர் வாமன் கூறிய போது இசைவாணன் அவரது கூற்றை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், மச்சான் நீ போய் பிள்ளைகள் எப்பிடி என்று பார்த்திட்டு வாடா … என வாமனை அனுப்புகிறார் இசைவாணன். மருத்துவர் வாமனும் தனது பிள்ளைகளை காத்திட வேண்டும் என்ற துடிப்போடு ஊன்றுகோலின் உதவியோடு வெளியேறி விட்டார். ரதி என்னோட பொய்க்கால ஒருக்கா எடுத்து வாறியா…” மனைவியிடம் வேண்டுகிறார் இசைவாணன். ரதி அவரது பொய்க்காலை எடுப்பதற்காக வெளியில் செல்கிறார். அப்போது இசைவாணனின் அருகில் நின்ற போராளி தீபனை அருகில் அழைத்து. “நான் குப்பி அடிக்கப்போறன் நான் சாகும் வரை ரதியை உள்ள விடாத…” அண்ண வேண்டாம் அண்ண… பிளீஸ் வேண்டாம் அண்ண அண்ணி தாங்க மாட்டா அண்ண ஏற்கனவே பிள்ளைகளை இழந்து தனிய நிக்கிறா நீங்களும் இல்லை என்றால் அவா தாங்க மாட்டா அண்ண… அவன் தடுக்கிறான் ஆனால் இசைவாணன் முடிவை மாற்றவில்லை. தீபன் இது என்னோட இறுதிக் கட்டளை… அண்ணியை உள்ள வர விடாத நான் செத்ததும் வரவிடு… தீபன் பார்த்துக் கொண்டிருக்க இசைவாணனின் துடிப்பு அடங்கிப் போகிறது. பல ஆயிரம் உயிர்களுக்கு மீள் உயிர்ப்பூட்டிய மருத்துவ வேங்கை தான் கட்டி இருந்த நஞ்சுக் குப்பிக்குள் தனது வாழ்வை அடைத்துச் சென்று விட்டார். இரண்டு கால்களும் செயலியக்கத்தை இழந்த நிலையில் தன்னால் இயக்கத்துக்கும் தனது துணைவிக்கும் சிரமம் இருக்கக் கூடாது என்ற நினைப்பு அவரை இந்த முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது. இறுதி முடிவை அவர் உணர்ந்திருந்தார் எதிரியிடம் பிடிபட்டு கேவலச்சாவு சாவதை விட வீரனாக சாக எண்ணினார். அதனால் அவர் சுமந்து திரிந்த குப்பி அவரை உண்டு தின்றது. இசைவாணன் என்ற பெரும் மருத்துவ மரம் சாய்ந்து எம் மண்ணுக்கு உரமாகி, விதையாகி என்றோ ஒருநாள் விடியப்போகும் சுதந்திர தமிழீழத்துக்காக காத்திருக்கிறது. “பகிரப்படாத பக்கங்கள் ” நூலாக்கம் நடந்து கொண்டிருப்பதால் நீண்ட நாட்களின் பின் மருத்துவப் போராளி இசைவாணன் அவர்களின் பக்கத்தோடு தமிழ்லீடருக்காக… கவிமகன். இ 04.04.2018 https://eelamaravar.wordpress.com/2019/06/25/ltte-history-lt-col-isaivanan-2/ - Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(5).png
Important Information
By using this site, you agree to our Terms of Use.