Everything posted by கறுப்பி
-
லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நாள்
வீர மறவர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..
-
மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...
மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி... [Monday, 2013-02-11 21:54:06] எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம். நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள 'youtube downloder' அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம். ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி 'youtube' வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம். step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய வேண்டும். (வீடியோவின் URL ஐ Adress Bar இல் காணலாம்). அதாவது Adress Bar இல் உள்ள URL லில் உள்ள www. என்பதை மட்டும் அழித்துவிட்டு, அதற்கு பதிலாக ss என type செய்த பின் ENTER ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் இப்போது உங்கள் பக்கம் http://en.savefrom.net/ என்ற தளத்திற்கு தானாகவே திருப்பப்படும். step 2. அங்கு, எந்த 'format' இல் [eg.g. 3GP, MP4, FLV etc] வீடியோவை தரவிறக்க வேண்டுமென்பதை தெரிவு செய்துவிட்டு Download இனை 'CLICK' செய்தால் போதுமானது. இப்போது வீடியோ தரவிறக்கமாகத் தொடங்கியிருக்கும். http://seithy.com/br...&language=tamil
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கணினி வன்றட்டினை பாதுகாப்பது எப்படி?
கணினி வன்றட்டினை பாதுகாப்பது எப்படி? [Monday, 2013-02-04 15:58:28] கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும். அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள். Check Disk செய்யும் முறை: 1. My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும். 2. அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab-ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் 'Check Now' என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும். 3. இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம். 4. இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும். உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது. எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும். 5. இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது. எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள். மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப்படும். 6. மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ்) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது. Hard Disk-ஐ பரமரிப்பது முக்கியமான கடமை. எனவே முதலில் chkdsk (Check Disk)செய்து Hard Disk-ஐ காப்பாற்றுங்கள். http://seithy.com/br...&language=tamil
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோபா, easyjobs இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் கௌசல்யன் ,மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் 07-02-2013
வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.
nice
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எரிமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்.
-
வீரவேங்கை - சிவராமலிங்கம் ராஜ்மோகன்
வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காவாலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சொப்னாவுக்கும் நெல்லையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கேணல் கிட்டு: அழகான ஆளுமை – ச.ச.முத்து
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
106 மேலதிக வாக்குகளினால் குற்றப்பிரேரணை நிறைவேற்றம்
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் குற்றப் பிரேரணை சபையில் வெற்றி; நாடாளுமன்றில் நேற்று கடும் வாதப்பிரதிவாதங்கள் இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் முதல் பெண் பிரதம நீதியரசரான கலா நிதி ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்யும் குற்றவியல் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 20 பேர் சபைக்கு சமுகமளிக்க வில்லை. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அதே வேளை, ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. இதையடுத்து இந் தத் தீர்மானம் ஜனாதி பதிக்கு அனுப்பிவைக் கப்படும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்தார். நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமை யில் சபை கூடியது. அதன்போது நேற்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பிரதம நீதி யரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விவாதத்துக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது. ஆளும் மற்றும் எதிர்த் தரப்பினருக்கிடையே காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவந்த நிலையில், இரவு 7.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பிரதம நீதியரசரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் பிரேரணை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அனுப்பிவைக்கப்படவுள்ளது என சபாநாயகர் அறிவித்தார். சுயாதீனக் குழு ஆராயும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரேரணையை, நால்வர் அடங்கிய சுயாதீனக் குழுவொன்றினூடாக ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி இறுதி தீர்மானத்தை மேற்கொள்வார். ஆளுந்தரப்பின் 116 எம்.பிக்கள் கையொப்பமிட்ட, 14 குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்டது. இந்தக் குற்றவியல் பிரேரணையை விசாரிப்பதற்காக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் 11பேர் அடங்கிய விசேட தெரிவுக்குழு கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில், ஆளுந்தப்பின் சார்பில் 7 பேரும், எதிர்க்கட்சிகள் சார்பில் ஐ.தே.கவில் இவரும், ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தலா ஒவ்வொரு பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர். அத்துடன், தெரிவுக்குழு நியமிக்கப்பட்ட நாள்முதல் ஒருமாத காலத்துக்குள் இந்தத் தெரிவுக்குழு தமது விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் சபாநாயகரால் பணிக்கப்பட்டிருந்தது. இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த தெரிவுக்குழு முன்னிலையில் பிரதம நீதியரசர், நவம்பர் மாதம் 23ஆம் திகதி முதல்முதல் ஆஜரானார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை நிரூபிப்பதற்காக தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூற அவர் கால அவகாசம் கோரினார். அதையடுத்து தெரிவுக்குழுவால் அவருக்கு இருவாரகால அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் நான்காம் திகதி இரண்டாவது தடவையாக தெரிவுக்குழு முன்னிலையில் சமுகமளித்த பிரதம நீதியரசர், தெரிவுக்குழு விசாரணைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறவில்லை என்றும், தெரிவுக்குழுவின் ஆளுந்தரப்புப் பிரதிநிதிகளில் இருவர் தன்னை தகாத வார்த்தைகளால் நிந்தித்தனர் என்றும் தெரிவித்து தெரிவுக்குழு விசாரணைகளிலிருந்து அதிரடியாக வெளிநடப்புச் செய்தார். டிசெம்பர் 7ஆம் திகதி இடம்பெற்ற தெரிவுக்குழு விசாணையில், பிரதம நீதியரசர் கலந்துகொள்ளவில்லை. அதனையடுத்து, குற்றவியல் பிரேரணையை தெரிவுக்குழு விசாரித்து வந்தபோது, ஆளுந்தரப்பினரால் விசாரணைகள் பக்கச்சார்பாக நடத்தப்படுகின்றன என்று தெரிவுக்குழுவின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நால்வரும் விசாரணை நடவடிக்கைகளிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். தன்னிச்சையான அறிக்கை அதன்பின்னர், ஆளுந்தரப்பின் 7 தெரிவுக்குழுப் பிரதிநிதிகளும் குற்றவியல் பிரேரணை தொடர்பில் தன்னிச்சையாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கைத் தயாரித்து, பிரதம நீதியரசர் குற்றவாளி என்று டிசம்பர் 8ஆம் திகதி அறிவித்தது. பிரதம நீதியரசருக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்களுள் 5 ஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஆளுந்தரப்பின் தெரிவுக்குழு பிரதிநிதிகள், அவற்றுள் 1, 3, 5 ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன என்றும் 2,5 ஆகியன நிராகரிக்கப்பட்டன என்றும் தெரிவித்தனர். இந்தத் தெரிவுக்குழு விசாரணை நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறுகோரி 7 ரிட் மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமனறில் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன், தெரிவுக்குழு அறிக்கையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறுகோரி, டிசம்பர் 19ஆம் திகதி பிரதம நீதியரசர் தரப்பால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, 21ஆம் திகதி விசாரணைகளுக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியதுடன், சபாநாயகர் உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்களை கடந்த 3ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு விடுத்தது. கடந்த 3ஆம் திகதி தமிழ்க் கூட்டமைப்பு, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மட்டும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகினர். நிலையியல் கட்டளைகள், சட்டங்கள் அல்ல என்றும், தெரிவுக்குழுவும் அதன் அறிக்கையும் சட்ட வலுவற்றது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தெரிவுக்குழு அறிக்கையை இரத்துச் செய்யத் தீர்ப்பு இதேவேளை, பிரதம நீதியரசரின் ரிட் மனு மீதான விசாரணையை 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. இதன்படி குறித்த மனுவை 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், தெரிவுகுழு அறிக்கையை இரத்து செய்யுமாறு தீர்ப்பளித்தது. இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பினையும், சட்டத்தரணிகள், எதிர்க்கட்சியினர், சர்வதேச அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் கருத்திற்கொள்ளாது நேற்றுமுன்தினமும், நேற்றும் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு விட்டு பிரேரணையை நிறைவேற்றப்பட்டுள்ளது. 12 ஜனவரி 2013, சனி 8:30 மு.ப http://www.onlineuthayan.com/News_More.php?id=218271759612182579