Jump to content

கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7896
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by கலைஞன்

  1. ZigZag ற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  2. யாழ் கள நம்பர் 1 க்கு வாழ்த்துக்கள்!

  3. மீசாலையானுக்கு இனிய 56 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  4. பலருக்கு ஆங்கிலோ தமிழில் இலகுவாக எழுதுவதற்கு யாழ் பக்கத்தின் அடிக்கு போய் செட்டிங்கை மாற்ற வேண்டும் என்று தெரியாது. எனவே ஐயா மோகன், நீங்கள் Default ல் ஆங்கிலோ தமிழில் எழுதும் வகையில் Settings போட்டால் இந்தப் பிரச்சனை புதியவர்களிற்கு வராது. நீங்கள் இங்கு கொடுத்துள்ள விளக்கம் தெளிவில்லாமல் இருக்கிறது. இதை இன்னும் தெளிவாக எழுதினால் நன்றாக இருக்கும். முக்கியமாக, யாழ் களத்திலேயே தமிழில் இலகுவாக எழுதுவதற்கு Settings ஐ பண்ணுவதற்கு யாழ் கள Web page இன் அடிப்பக்கத்திற்கு போகவேண்டும் என்பதை! எனக்கே, யாழ் களத்திலேயே தமிழில் இவ்வாறு எழுதும் விடயம் சில வாரங்களிற்கு முன் தான் தெரியும். நான் அதுவரை சுரதாவில் போய் எழுதி, பின் அதை கொப்பி, பேஸ்ட் செய்து வந்துள்ளேன். நன்றி!
  5. அருவியாரே பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  6. ஐயா நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! முன்னுக்கு வந்து வாழ்த்த முடியாததன் காரணம் நெடுக்கை நம்பமுடியவில்லை. இதனுள் ஏதாவது பொறி வெடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து அமைதியாகி விட்டேன். இப்போது இவ்வளவு பேர் வாழ்த்தியபின் பொறிவெடியின் பயம் போய்விட்டது. :P :P :P
  7. உது பொய்யான Date of Birth. நேற்று நான் நெடுக்கின் Profile ஐ Check பண்ணி பார்த்தபோது Date of Birth Unknown என்று இருந்தது. ஆள் சரியான வம்புப் பார்ட்டி. ஏதோ லொள்ளு பண்ணத்தான் இப்படி போட்டு இருக்கிறார். மூக்கி வந்து வாழ்த்து தெரிவிக்கிறாவா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
  8. 21 ஆவது வயது கொண்டாடும் 10 தலையை எல்லாரும் அண்ணாச்சி என்று கூப்பிடுகிறார்கள். அப்படியானால் யாழ் களத்திற்கு வருவதெல்லாம் பால்குடிகளா? யாழ் களத்தில் உறுப்பினராவதற்குறிய ஆகக்குறைந்த வயது எவ்வளவு? 13?
  9. பத்து தலையிற்கு இப்போதுதான் 21 வயதா? நம்ப முடியவில்லை! ஒரு தலையிற்கு 10 வயதுப்படி போட்டுப்பார்த்தால் கூட இப்போது 100 வயதாகி இருக்க வேண்டும்? பத்து தலை பத்துத்தலை வெட்டுள்ள(இராவணன் வெட்டு) திருகோணமலை கோணேஸ்வரப் பெருமானின் அருளுடன் நீண்டகாலம் சந்தோசமாக வாழ நானும் கீழேயுள்ள படத்திலுள்ள ஆதியும் சேர்ந்து வாழ்த்து தெரிவிக்கின்றோம்!
  10. இன்fஇராரெட் தொழில்நுட்பம்(Infrared Technology): இது நீங்கள் பாவிக்கும் டீவி ரிமோட் கொன்ரோலில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் சிக்னல் செல்லக்கூடிய தூரம் பொதுவாக 50 அடிகளிற்கு குறைவாகவே அமைகின்றது. ரிமோட்டிற்கு ரிமோட் இந்த சிக்னலின் வீச்சு வித்தியாசப்படும். இங்கு டீவி அல்லது ரேடியோ விற்கும் ரிமோட்டிற்கும் இடையில் நேர்கோட்டில் சிக்னல் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். இடையில் சுவர் போன்ற தடுப்புக்கள் இருக்கக்கூடாது. இல்லாவிடின் வேலை செய்யாது. புளூதூத் தொழில்நுட்பம்(BlueTooth Technology): இங்கு ரேடியோ சிக்னல் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இடையில் சுவர் தடுப்பு இருந்தால் கூட வேலை செய்யும். வழமையாக இதன் சிக்னல் வீச்சு எல்லை 30 அடிகளாகும். இதன் மூலம் நாம் பீ.டீ.ஏ(PDA - Personal Digital Assitant), மொபையில் போன், கம்பியூட்டர், வயரற்ற ஹெட்போன் போன்றவற்றுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும். இன்fஇராரெட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட ரிமோட்டை ஒரு குறிப்பிட்ட டீவி அல்லது ரேடியோவுக்குத்தான் பயன்படுத்தமுடியும். ஆனால் புளூதூத் தொழில்நுட்பம் உள்ள ஒரு டிவைசை(கருவி/உபகரணம்) புளூதூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பல்வேறு டிவைசுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பயன்படுத்த முடியும்!
  11. எங்க நம்மட கேள்விக்கு யாராவது சரியான பதிலை சொல்லுங்க பார்க்கலாம். Bluetoothற்கும் Infrared தொழில்நுட்பத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் எவை?
  12. தம்பி கரனின் சத்தத்தையே காணவில்லை. எல்லாம் வெறும் புருடா தானா? வருடத்தில் ஒருநாள் நீங்கள் எப்படியும் பிறந்த நாளைக் கொண்டாடுவீர்கள். அன்றைய நாளில் உங்களுக்கு கிடைத்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என இவற்றை வைத்துக் கொள்ளுங்கள்!
  13. தம்பி கரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  14. வினோ, சரியான விடை. வாழ்த்துக்கள்! இது பொதுஅறிவுச் சோதனைகளில் வழமையாகக் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளில் ஒன்று!
  15. கோர்டன் மூர்(Gordon Moore) என்பவர் கம்பியூட்டர் சிப்ஸ்(Computer Chips) செய்யும் உலகின் மிகப்பெரிய பிரபல இன்டெல்(Intel) நிறுவனத்தின் உருவாக்குனர்(Founder). இவர் 1965ம் ஆண்டு ஒரு கன அங்குலம் பரப்பளவு இன்டிகிறேட்டட் சேர்க்கிட்களில்(Integrated Circuits) உள்ள ட்ரான்ஸ்ஸிஸ்டர்களின்(Transistors) எண்ணிக்கை ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் இரண்டு மடங்காகின்றது என்ற தனது இந்த அவதானிப்பை வெளியிட்டார். (the number of transistors per square inch on integrated circuits had doubled every year since the integrated circuit was invented. Moore predicted that this trend would continue for the foreseeable future). இவரது இந்த அவதானிப்பு இன்றுவரை உண்மையாக இருக்கின்றது. இவ் அவதானிப்பே மூர்ஸ் விதியென உலகில் கம்பியூட்டர் விஞ்ஞானத்தில் பிரபலமாகப் பேசப்படுகின்றது. இதைப்பற்றி விளக்கமாக அறிவத்ற்கு இங்கே கிளிக்குங்கள் => மூர்ஸ் விதி எனது அடுத்த கேள்வி டிரான்ஸ்டிட்டெரை(Transistor) கண்டுபிடித்தது யார்? இவர்களிற்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது?
  16. குமாரசுவாமி அண்ணாவுக்கு பசுமதி அரிசியென்றால் ரொம்ப இஸ்டமோ? உங்கள் பிள்ளைக்குப் பசுமதியென்றோ பெயர் வைத்துள்ளீர்கள்? அல்லது பசுமதியென்பது உங்கள் பழைய காதலியின் பெயரோ? நீங்கள் நிறைய இடங்களில் பசுமதியைக் குறிப்பிட்டுள்ளீர்கள். களத்தில பெடியள் உங்களை இனி பசுமதி அண்ணை என்று கூப்பிடப்போறானுகள். கவனம்! உங்கட ஊரில பசுமதி அரிசி என்ன விலை போகிது? இஞ்ச நாங்கள் சீனாக்காரனின்ற வெள்ளை அரிசியச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறம். நீங்களென்னடான்டா ஊரில இருக்கிறமாதிரி உங்க லண்டனில வாழுறியள். கொடுத்து வச்சனீங்களப்பா! நானும் கலியாணங்கட்டி லண்டனுக்கில பாய்வமோவென்று பார்க்கிறன்! அதுசரி, இந்தப் பசுமதி அரிசியில பிறந்த நாளுக்கு கேக் அடிக்கலாமோ?
  17. 1. மூர்ஸ் (Moore's) விதி என்றால் என்ன? சரியான பதில் சொல்பவருக்கு ஒரு வைர நெக்லஸ் படம் பரிசாகத் தரப்படும். பலர் சரியான பதிலைச் சொன்னால் பரிசாக எதுவும் தரப்படமாட்டாது.
  18. 1) நாய் ஒன்றினை அனுப்பிய நாடு எது? ரஷ்யா 3) அனுப்பப்பட்ட நாயின் பெயர் என்ன? லைகா 4) விண்களம் பெயர் என்ன? ஸ்புட்னிக் 02
  19. சகானா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  20. நானும் கூகிலில் தேடிப்பார்த்து விட்டேன். சிக்கவில்லை. நீங்களே பதிலைச் சுட்டி விடுங்கள் சுட்டி!
  21. குமாரசாமி அண்ணா, உங்கள் வாழ்த்துக்களிற்கு மிகவும் நன்றி!
  22. அக்கா ப்ரியசகி, வாழ்த்துக்களிற்கு நன்றிகள் பல!
  23. ஈழப்பிரியன், வாழ்த்துக்களிற்கு மிகவும் நன்றி!
  24. கந்தப்பு ஐயா, சேகவனுக்கு மனமார்ந்த நன்றிகள்! பிறந்த நாளை வருடத்திற்கு ஒரு முறைதான் நாம் கொண்டாடினாலும், நான் கேள்வியுற்ற ஒரு சுவாமியாரின் கருத்துப்படி, ஒவ்வொரு தடவையும் நாம் மூச்சை உள்ளே எடுக்கும் போது நாம் ஒவ்வொரு தடவையாக புதிதாகப் பிறப்பதாக அவர் கூறுகின்றார். எமது மூச்சுத்தான் வாழ்க்கையெனக் கூறுகின்றார். மேலும், எங்கோ நான் வாசித்த தமிழ்ச்சித்தர்களின் நூலின்படி, நாம் இழுத்துவிடும் மூச்சின் கால அளவே எமது ஆயுளின் கால அளவை, அதாவது நாம் எவ்வளவு காலம் உயிர்வாழப் போகின்றோம் என்பதை தீர்மானிக்கின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே நாம் எல்லோரும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னுணர்வுடன் இருந்து எமது பிறப்புக்களை, எமது பிறந்த நாளை ஒவ்வொரு நொடிப்பொழுதும் கொண்டாடுவோமாக! (இந்தச் சித்தர்களின் நூலைப் பற்றி குமாரசாமி அண்ணாவிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். ஏனென்றால் எந்நேரமும் ஞானமுக்தி நிலையில் அவர் காண்ப்படுவதால் அவருக்குத்தான் இவற்றைபற்றி கூடுதலாகத் தெரிந்திருக்க வேண்டும். )
  25. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு! கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்! மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்! வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல! இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு! பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்! தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது! அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது! கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை! பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.