கந்தப்பு ஐயா, சேகவனுக்கு மனமார்ந்த நன்றிகள்!
பிறந்த நாளை வருடத்திற்கு ஒரு முறைதான் நாம் கொண்டாடினாலும், நான் கேள்வியுற்ற ஒரு சுவாமியாரின் கருத்துப்படி, ஒவ்வொரு தடவையும் நாம் மூச்சை உள்ளே எடுக்கும் போது நாம் ஒவ்வொரு தடவையாக புதிதாகப் பிறப்பதாக அவர் கூறுகின்றார். எமது மூச்சுத்தான் வாழ்க்கையெனக் கூறுகின்றார். மேலும், எங்கோ நான் வாசித்த தமிழ்ச்சித்தர்களின் நூலின்படி, நாம் இழுத்துவிடும் மூச்சின் கால அளவே எமது ஆயுளின் கால அளவை, அதாவது நாம் எவ்வளவு காலம் உயிர்வாழப் போகின்றோம் என்பதை தீர்மானிக்கின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே நாம் எல்லோரும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னுணர்வுடன் இருந்து எமது பிறப்புக்களை, எமது பிறந்த நாளை ஒவ்வொரு நொடிப்பொழுதும் கொண்டாடுவோமாக!
(இந்தச் சித்தர்களின் நூலைப் பற்றி குமாரசாமி அண்ணாவிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். ஏனென்றால் எந்நேரமும் ஞானமுக்தி நிலையில் அவர் காண்ப்படுவதால் அவருக்குத்தான் இவற்றைபற்றி கூடுதலாகத் தெரிந்திருக்க வேண்டும். )