Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nirmalan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை இந்த சங்கை எடுத்திருக்காது விட்டால் வேறொருவர் எடுத்து இருப்பார்கள். தவறானவர்களின் கைகளுக்கு செல்லாமல் எம்மவர்களே எடுத்தது என்று மகிழ்ச்சியடைய வேண்டும். சங்கினை திருடி விட்டார்கள் என்று கூக்குரலிடுபவர்கள் அதனை பதிவு செய்து இருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. பொதுக்கட்டமைப்பின் ஊடாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலையும் சங்கு சின்னத்தின் ஊடாக சந்திக்க வேண்டும் என்றுதான் அனைத்து தமிழர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இதனை நிலாந்தன், கே.ரி.கணேசலிங்கம், செல்வின் போன்றோர்தான் சிதறடித்தனர். சேகரிக்கப்பட்ட நிதிக்கும் கணக்கு - வழக்கு இல்லை. இன்று செல்வினுக்கு ஜே.வி.பி.யின் அரசங்கத்தால் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: ஈழநாடு நாளேடு) ஆக, சங்கினை திருடியவர்களோ எடுத்தவர்களோ அவர்களின் செய்கையினை நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில் இந்த சின்னம் முன்னர் கம்மன்பிலவினதோ அல்லது சம்பிக்கவினதோ (கட்சியோ, சுயேட்சையோ சரியாக தெரியாது.) கட்சிக்கு வழங்கப்பட்ட சின்னம். அப்படியெனில் பொதுக்கட்டமைப்பும் இன்னொரு சின்னத்தை திருடித்தான் பாவித்தது என்று கூறலாம் அல்லவா?
  2. தமிழரசுக் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது. இதனை முன்னின்று நடத்தியவர்கள் பெருந்தலைவரும் மறைந்த தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன். என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியை விட ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரவாயில்லை. சுமந்திரன் இருக்கும் வரை தமிழரசுக் கட்சி பலவீனமான கட்சியாகத்தான் இருக்கும். சிறீதரன் அனைவரையும் அனைத்து செல்ல விரும்புகின்றார். சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அதனை விரும்பவில்லை. தற்போதைய தலைவர் மாவை ஐந்து சதத்துக்கும் பிரயோசனமற்றவர். இந்தியா இணைந்து கேட்டு அதிகளவு ஆசனங்களை எடுங்கள். பேரம் பேசலுக்கு அதுதான் தேவை. அதனை விடுத்து இந்தியாவின் சொல்லைக் கேட்டு ஆடும் கட்சி எனில் அது தமிழரசுக் கட்சி. சஜித்தோடு இணைந்து கேட்குமாறு விடுத்த கோரிக்கையை சிரமேற் கொண்டு செய்தவர் சுமந்திரன். பொதுக்கட்டமைப்பை மிரட்டி பணிய வைத்து பொது வேட்பாளரை அகற்றுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையினை உறுதியாக நின்று எதிர்த்தவர்கள் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர்களே. இங்கே நான் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு செம்பு தூக்கவில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கேட்பது பலம். அதனை அனைத்து இயக்கங்களும் இணைந்து செய்கின்றன. இதனை பாராட்ட வேண்டும். போராளி இயக்கங்களின் கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டு இருக்கின்றனர். இது எமது இனத்தின் சாபக்கேடு. தற்போது அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதனை பொறுத்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டுமே தவிர, கடந்த காலங்களைப் பற்றியே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் அதே இடத்தில்தான் நிற்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.