Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  1. அண்ணா, பிரதேசவாதமும், பிரதேச மேட்டிமைவாதமும் வேறுபட்டவை. உலகெங்கும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கென்ற சில அடையாளங்களுடனேயே வாழ்கின்றார்கள். அது இனம், மொழி,மதம், பிரதேசம் என்று பல வகைகளில் இருக்கலாம். குலம், கோத்திரம் என்று கூட இந்த அடையாளங்கள் இருப்பதுண்டு. தங்களின் அடையாளங்களுக்கு விசுவாசமாகவும், தங்களின் அடையாளங்களை முன்னிறுத்தியும் மனிதர்கள் வாழத் தலைப்படுகின்றார்கள். ஆனால் தங்களை நிகர்த்த அடையாளங்கள் இல்லாதவர்கள் கீழானவர்கள், இழிவானவர்கள், திறமையற்றவர்கள், வீரம் அற்றவர்கள் என்பது போன்ற ஒப்பீடுகளும், கணிப்புகளும் மேட்டிமைவாதம் என்னும் வகையிலேயே வருகின்றது. பிறப்பினாலேயே தங்களை மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், அப்படியே நடந்து கொள்வதும் மேட்டுமைவாதமே. இந்த பிரதேச மேட்டுமைவாதமே இலங்கையில் சில பிரதேச மக்களிடம் இருக்கின்றன என்று தான் நான் சொல்ல முயன்றிருந்தேன். உதாரணம்: யாழ்ப்பாண தமிழ் மக்கள், கண்டி சிங்கள மக்கள். இவர்கள் இருவரும் இந்த விடயத்தில் வெளிப்படுத்தும் மேட்டுமைவாதத்தை இலங்கையில் வேறு எவரும் வெளிப்படுத்துவதில்லை என்பதே என் அனுபவம். பிறப்பினாலேயே ஒருவர் சிறந்தவர் ஆகி விடுகின்றார் என்றால், இங்கே எதற்குமே பொருள் இல்லை என்று ஆகிவிடுகின்றது அல்லவா.
  2. இது ஒரு நல்ல முயற்சி இல்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது. அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு வெறும் பேச்சாக இது இருக்கலாம், ஆனால் இது நடைமுறையில் மலையக தமிழ் மக்களை பல தசாப்தங்கள் பின்னுக்கு தள்ளி விடும் ஒரு நிகழ்வகாவே இருக்கும். 1970ம் மற்றும் 80 ஆண்டுகளில் என்னுடைய ஊரில் குடியேற்ற்றத் திட்டம் என்னும் ஒரு சிறிய இடம் இருந்தது. இது ஊரின் சுடலையின் முன்னே இருந்தது. பருத்தித்துறை - வல்வெட்டித்துறை வீதியின் ஒரு பக்கம் சுடலையும், மறுபக்கம் இந்த குடியேற்றத் திட்டமும் இருந்தன. அங்கு இந்த மலையக மக்களே குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் நகரசபையில் சுத்திகரிப்பு பணியாளர்களாக வேலை செய்தனர். வெறும் கைகளாலும், கைகளால் தள்ளும் வண்டில்களும் கொண்டு அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்தனர். மனிதக் கழிவுகளை கூட அவர்களே அள்ளினார்கள்...........😭😭. அவர்களை நான் வேறு எங்கும், எந்த நிகழ்வுகளிலும் கண்டது இல்லை. அவர்களின் பிள்ளைகள் எங்களுடன் பாடசாலையில் படித்தார்களா என்றும் எனக்கு தெரியவில்லை. கோவில்களுக்குள் நிச்சயம் விட்டிருக்கமாட்டார்கள். யாழ்ப்பாண மக்கள் வறட்டுத்தனமான கௌரவம் மிகவும் அதிகமாக உள்ள சமூகங்களில் ஒன்று. இதை நான் ஊரில் இருந்த நாட்களில் என் வீட்டிலேயே பார்த்திருக்கின்றேன். யாழ்ப்பாண மக்கள் வேறு எவரையும் ஏற்றுக் கொள்வதில்லை. இப்பொழுது நான் ஊருக்கு போகும் போதெல்லாம் அந்த குடியேற்ற திட்டம் இருந்த இடத்திற்கு ஒரு தடவையாவது போகின்றேன். அங்கு எவரும் இல்லை. பாழடைந்து போய்விட்டது. ஆனாலும் அங்கே யாரையோ தேடுகின்றேன். இலங்கையிலிருந்து சாஸ்திரி - பண்டா ஒப்பந்தத்தின் பின் தமிழ்நாட்டில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிலையும் தமிழ்நாட்டில் இதுவேதான். அங்கும் அவர்களை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. விளிம்பு நிலை மக்களாக, பட்டியலின மக்களாகவே அவர்கள் இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மலையகப் பூமியே மலையக தமிழ் மக்களுக்கு சுயமரியாதையையும், கௌரவத்தையும் கொடுக்கும். மலையகத்தை கட்டி எழுப்ப வேண்டியது அரசினது கடமையே. அதை இனியாயினும் செய்ய முன்வந்தார்கள் என்றால் அதுவே மலையக மக்களுக்கான சரியான ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இலங்கையின் வடக்கும், கிழக்கும் குடிசனப் பரம்பல் மிகக் குறைந்த இடங்களாக வந்துவிட்டன. வவுனியாவின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வரப் போகும் சிங்கள மக்களை எதுவும் தடுக்கப் போவதில்லை.
  3. நண்பன் இன்னும் நிறைய நாட்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தான் விரும்புகின்றேன், கவிஞரே. அது சாத்தியமும் கூட. ஏராளமானோர் இதே குறைபாட்டுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதை ஒரு நோய் என்று சொல்லாமல், குறைபாடு என்றே சொல்கின்றார்கள். அசட்டுத்தனமாக அவசரப்பட்டு கேட்கும், வாசிக்கும், பார்க்கும் எல்லாவற்றையும் அவன் அப்படியே நம்பி விடாமல் இருந்திருக்கலாம். 'உணவே மருந்து............' என்பது ஆரோக்கியமாக இருக்கும் நாட்களுக்கு பொருந்தும். நோயோ அல்லது குறைபாடு ஒன்றோ வந்துவிட்டால், சரியான சிகிச்சை மிக அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்..............🙏.
  4. இப்படியான விளக்கங்கள் தான் இணையத்தில் கிடைக்கின்றன: ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது. இதைப் போலவே, எருசலேமே, நீயும் உன்னை மாற்றி நன்மை செய்ய முடியாது. நீ எப்போதும் தீமையே செய்கிறாய். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 13:23
  5. 👍........... இந்தச் சிக்கல் உள்ளவர்கள் ஏராளமானவர்கள் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர் கவனத்துடன் நன்றாகவே நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், ஏராளன். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற அணுகுமுறை மருத்துவத்திற்கு பொருந்தாது...................
  6. அமர்த்தியா சென் அவர்களின் ஐந்து புத்தகங்களை வாசித்து விட்டு தான் கருத்து எழுதுவது என்று நான் நினைத்திருக்க, ஆறாவதாக விவிலியத்தையும் வாசி என்று சொல்லி விட்டீர்களே, வாலி...........................🤣.
  7. அதுவே கிருபன்................. முழுச் சமூகமுமே மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய விடயங்களில் மருத்துவம் முதன்மையான ஒன்று.
  8. அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தின் தென் பகுதிகளில் சில வாழைத் தோட்டங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன், அண்ணா. கலிஃபோர்னியாவின் தென் பகுதிகளிலும் வாழை நன்றாகவே வருகின்றது. என்னுடைய வீட்டில் வாழைகள் குட்டிகளும், குலைகளுமாக வருடம் முழுவதும் நிற்கின்றன. ஆனால் இங்கு கலிஃபோர்னியாவில் வாழைகளை தோட்டங்களாக நான் பார்த்ததில்லை. அமெரிக்காவின் வாழைத் தோட்டம் தான் தென் அமெரிக்கா. அமெரிக்க நிறுவனங்கள் தென் அமெரிக்க நாடுகளில் காடுகளை எரித்து வாழைத் தோட்டங்களை அமைத்து, அந்த நாடுகளைச் சூறையாடினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. உலகில் வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுபவர்கள் ஜேர்மனியர்களே என்றும் ஞாபகம். அமெரிக்க நிறுவனங்கள் தென் அமெரிக்காவை எரித்து எடுத்த வாழைப்பழங்களை ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்தார்கள்................... First banana, Second banana (முதல் போக வாழைப்பழம், இரண்டாம் போக வாழைப்பழம்) என்னும் குறியீடும், இவை ஒரு வகையான தர அளவீடுகள், இங்கிருந்தே வந்தன. காட்டை எரித்தவுடன் செய்யப்படும் முதல் போகத்தில் விளையும் வாழைப்பழங்கள் பெரிதாகவும், அடுத்த அடுத்த போகங்களில் சிறிதாகவும் ஆகும் என்று சொல்லப்படுகின்றது. இங்கு தொழில்முறை விளையாட்டு வீரர்களை இந்த குறியீட்டால் குறிப்பிடுவார்கள். மிகச் சிறந்த வீரர்கள் - First banana, அடுத்த நிலை வீரர்கள் - Second banana ,....................
  9. மிக்க நன்றி அல்வாயன். சில இன்றைய செய்திகள் அல்லது நிகழ்வுகள் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்துவிடுகின்றன, அல்வாயன். அப்படியே மனம் போன போக்கில் அலைந்து அலைந்து எழுதுகின்றேன் போல.................... அவனின் முடிவு பெரும் துயரமே..........
  10. அண்ணா, ஏறக்குறைய இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் அப்படியே நடந்தவை. அந்தக் கடைசி ஒரு வரி போலவே நண்பனின் வாழ்க்கை அவசரமாக, அநியாயமாக முடிந்தது. சொல்ல முடியாத சோகம் எந்த நாளில் நினைத்துப் பார்த்தாலும். நான் இதை கொஞ்சம் அழுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தே அப்படி ஒரு (கடைசி) வரியில் முடித்தேன். மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் கல்வித் தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து மட்டுமே பெறப்படவேண்டும் என்பதே இதன் சாரம், அண்ணா.
  11. வாழைப்பூ வடை -------------------------- வீட்டுக்கு வெளியே என்னை இருக்க வைத்திருப்பதற்கு அவன் ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டிருந்தான். வீட்டுச் சுற்றுமதிலுக்கும் வெளியே இரண்டு பிளாஸ்டிக் கதிரைகளையும், ஒரு சின்ன பிளாஸ்டிக் மேசையும் போட்டிருந்தான். எனக்கு துடக்கு என்று அவன் சொன்னான். இறந்தவர் எனக்கு ஆண் வழியில் உறவுமுறை என்பதால் இந்த துடக்கு 31 நாட்கள் வரை இருக்கும் என்றான். அவனின் வீட்டில் ஏதோ கோவில் விரதமோ அல்லது மாலை போட்டிருக்கின்றார்கள், அதனால் என்னை வீட்டின் உள்ளே விடவில்லை என்றும் சொன்னான். நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவதும் அரிது, அவற்றை துடக்கு கூட தொட முடியாது போல என்று நினைத்துக் கொண்டே கவனமாக கதிரையின் உள்ளே வசதியாக உட்கார முயன்று கொண்டிருந்தேன். நேற்று துக்க வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த ஒரு குடும்பத்தில் ஒரு மகன் மிகவும் செழிப்பாக இருந்தார். அவர் அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரைக்குள் மிகவும் சிரமப்பட்டே தன்னை திணித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு தடவை எட்டி எடுப்பதற்காக அசைந்த போது அந்தக் கதிரை ஒரு கணம் வளைந்து படீரென்று உடைந்து போனது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பதறிப் போனார்கள், அவர்களின் பிள்ளைக்கு ஏதேனும் அடிபட்டு விட்டதோ என்று. அவனை நான் கடைசியாகப் பார்த்து 35 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிறு வயதில் ஒரே வகுப்பில் படித்தோம். பாடசாலையிலிருந்து என்னுடைய வீட்டுக்கு வரும் வழியிலேயே அவனுடைய வீடு இருந்தது. அவனுடைய வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கின்றேன். அங்கே எல்லோருமே அழகாக இருந்தார்கள். பயில்வான்கள் போன்ற உடற்கட்டும் அவர்களுக்கு இருந்தது. படிப்பு தான் சுத்தமாக வரவில்லை. அவனோ அல்லது அவன் வீட்டிலோ அதையிட்டு எவரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. என் வீட்டிலும் அதே நிலைதான். பிள்ளைகள் காலை எழும்பி கண் காணாமல் எங்கேயாவது போனால் போதும் என்றே பல குடும்பங்கள் இருந்தன. தினமும் பாடசாலை முடிந்த பின்னும் நாங்கள் உடனேயே வீடு போய் சேர்ந்ததும் இல்லை. அங்கங்கே நின்று இருந்து என்று வீடு போக பொழுது செக்கல் ஆகிவிடும். எவரும் எவரையும் தேடவில்லை என்பது இப்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரு நாள் பாடசாலை முடிந்து கடலாலும், கரையாலும் நடந்து வந்து கொண்டிருந்த போது, இரண்டு ஆட்கள் அளவு இருக்கும் பெரிய சுறா மீன் ஒன்றை கடல் தண்ணீரில் வைத்து துண்டு துண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். நீலக் கடல் செக்கச் சிவந்து இருந்தது அப்போது. பின்னரும் அந்தக் கடல் பல சமயங்களில் சிவப்பாகியது. உலகில் கடல் போல வேறு எதுவும் தன்னைத் தானே உடனடியாக விரைவாகச் சுத்தம் செய்து கொள்வதில்லை. பயில்வான் போன்று இருந்தவன் இப்போது மிகவும் மெலிந்து இருந்தான், ஆனால் முகம் அதே அழகுடன் இருந்தது. அடுத்த கதிரையின் நுனியில் ஒரு எச்சரிக்கையுடன் இருந்து கொண்டே எப்படியடா இருக்கின்றாய் என்று ஆரம்பித்தான். அவன் வீட்டிலேயும் யாரோ ஒரு கதிரையை உடைத்து இருப்பார்கள் போல. நல்லா இருக்கின்றேனடா என்று சொல்ல வேண்டிய பதிலைச் சொன்னேன். மனைவியையும், மகளையும் கூப்பிட்டு அழைத்து என்னை அறிமுகப்படுத்தினான். நாங்கள் சிறு வயது நண்பர்கள் மட்டும் இல்லை, சொந்தக்காரர்கள் கூட என்று அவர்களுக்கு சொன்னான். அவர்கள் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். துக்கம் நடந்த வீட்டுக்கும் அவனுக்கும் போன வாரம் கூட பெரிய சண்டை நடந்து கொண்டிருந்ததாக எனக்கு முன்னரேயே சொல்லி இருந்தார்கள். அவன் வளர்க்கும் கோழிகளை அவர்களின் வீட்டு நாய்கள் கடித்துக் கொன்று விட்டன என்பதே கடைசி சண்டைக்கான காரணம். அவர்களோ தங்களிடம் நாய்களே இல்லை என்கின்றார்கள். ஆனால் தெருவில் போய் வரும் வாழும் எந்த நாய்க்கும், அதன் குட்டிகளுக்கும் அவர்கள் மிஞ்சுவதை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டின் முன்னால் எப்போதும் ஒரு நாலு ஐந்து படுத்தே இருந்தன. எல்லோருமே சொந்தமா என்பதே அவனுடைய மனைவியினதும், மகளினதும் ஆச்சரியமாக இருக்கவேண்டும். தலைமுறை தலைமுறையாக அங்கேயே பிறந்து, அங்கேயே திருமணமும் முடித்தால், அங்கே எல்லோரும் சொந்தமாகத்தானே இருக்கவேண்டும். பிராமண குடும்பங்களில் வழக்கத்தில் இருக்கும் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முறையை அந்த ஊரில் அறிமுகப்படுத்தினால், அந்த ஊரின் நிலை சிக்கலாகிவிடும். நீ எப்படியடா இருக்கின்றாய் என்று தான் நானும் ஆரம்பித்தேன். வசதிக்கு ஒரு குறைவும் இல்லை என்றே தெரிந்தது. அழகான பெரிய புது வீடு கட்டியிருந்தான். வீட்டின் வெளியே தெருவிலேயே இரண்டு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உள்ளூர் சுற்றுலாக்களையும், வாகனங்களையும், ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்கும் தொழிலில் இருந்தான். தொழிலும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது என்றே தெரிந்தது. நான் நினைத்தவற்றையே அவனும் சொன்னான். வாழைப்பூ வடை என்றபடியே அவனுடைய மகள் ஒரு தட்டு நிறைய வடைகளை கொண்டு வந்து பிளாஸ்டிக் மேசையில் வைத்தார். வாழைப்பூ வடை சாப்பிட்டு சில வருடங்கள் ஆகியிருந்தது. தமிழ்நாட்டு நண்பன் ஒருவன் ஒரு நாள் வேலையில் கொண்டு வந்திருந்தான். வீட்டில் செய்ததாக ஞாபகம் இல்லை. வாழைத் தண்டிலும் அவர்கள் கூட்டு அல்லது கறி என்று ஏதோ செய்வார்கள். பல மரக்கறிகளைப் போலவே அதுவும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் மிகவும் நல்லது, உடல்நலத்திற்கு உகந்தது என்றார்கள். உடல்நலத்திற்கு உகந்தவை எல்லாம் கொஞ்சம் முயற்சி செய்தே சாப்பிட வேண்டியவை போல, 'கொஞ்சம் சுகர்..........' என்று சொன்னான். அப்பொழுது தான் அவனை கவனமாக உற்றுப் பார்த்தேன். பயில்வான் போல இருந்தவன் மெலிந்து போயிருந்த காரணம் தெரிந்தது. கொஞ்சம் என்றில்லை, மிக நன்றாகவே நீரிழிவு அவனை தாக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மருந்து ஏதும் எடுக்கின்றாயா என்றேன். தான் முந்தி ஆங்கில மருந்துகள் எடுத்ததாகவும், ஆனால் இப்போது எடுக்கவில்லை என்றும் சொன்னான். ஆங்கில மருந்துகள் எதுவுமே வேலை செய்யவில்லை என்றான். நல்ல ஒரு நாட்டு வைத்தியர் அங்கே இருப்பதாகவும், அத்துடன் தான் சில பத்தியங்களை பின்பற்றுவதாகவும் சொன்னான். அதில் ஒன்று வாழைப்பூ வடை. உடம்புக்கும், இரத்தத்திற்கும் மிகவும் நல்லது என்றான். சுவையாகவும் இருந்தது. பழங்கள் சாப்பிடாமல்ல் காய்களைச் சாப்பிடுவதாகவும் சொன்னான். மாம்பழம் சாப்பிடாமல்ல் மாங்காய் சாப்பிடுவதாகச் சொன்னான். அதுவும் ஒரு மருந்து என்றான். இதை ஆபிரிக்காவில் ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து இருக்கின்றார்கள் என்றான். ஆபிரிக்காவில் மனிதர்கள் தோன்றினார்கள் என்ற தகவலை விட வேறு எந்த தகவலையும் நான் அதுவரை ஆபிரிக்காவுடன் இணைத்து வைத்திருக்கவில்லை. ஆபிரிக்க மாங்காய் புதிய தரவு ஒன்றாக தலைக்குள் போனது. ஒரு சிவராத்திரி பின் இரவில் ஒரு வீட்டு மாமரத்தில் ஏறி மாங்காய்கள் பிடுங்கிக் கொண்டிருந்தோம். நான் தான் மரத்தில் ஏறி இருந்தேன். உச்சியில் நின்று கொண்டிருந்தேன். சத்தம் கேட்டோ அல்லது இயற்கை உபாதை ஒன்றை கழிக்கவோ அந்த வீட்டுக்காரர் எழம்பி அவர்களின் பின் வளவு நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழே நின்றவர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். டேய்............டேய்.......... என்று சத்தம் போட்டுக் கொண்டே வீட்டுக்காரர் நடந்து வந்தார். அவருக்கு வயிறு முட்டியிருந்தது போல, அவர் ஓடி வரவில்லை. உச்சியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நான் இனிமேல் இறங்குவதற்கு நேரமில்லை என்று ஒரே குதியாகக் குதித்து விழுந்து ஓடினேன். கைகால்கள் எதுவும் உடையவில்லை. சில உடம்புகள் மிகப் பாவம் செய்தவை. அவை சில ஆன்மாக்களிடம் மாட்டுப்பட்டு எந்தக் கவனிப்பும் இல்லாத ஒரு சீரழிந்த வாழ்வை வாழ்கின்றன. அவன் தனக்கு இது எதுவுமே ஞாபகம் இல்லை என்றான். ஆனால் நாங்கள் அப்பவே மாங்காய்கள் நிறைய சாப்பிட்டது நல்ல ஞாபகம் என்றான். சில நாட்களின் பின், நான் திரும்பி வருவதற்கு விமான நிலையம் போவதற்கு அவனுடைய இரண்டு வாகனங்களையே எடுத்திருந்தோம். ஒன்றில் அவனும் வந்தான். அருகே இருந்தான். கோழிச் சண்டைக்காக அங்கே இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டான். வழியில் போக்குவரத்து மிகவும் நெரிசலாகி விமான நிலையம் வந்து சேர்வதற்கு மிகவும் தாமதமானது. யாரோ அமைச்சரோ அல்லது பிரபலமான ஒருவர் அந்த வழியால் போய்க் கொண்டிருந்தார் போல. அவசரமாக இறங்கி, இரண்டு வாகனங்களிலும் வந்த சொந்தபந்தங்களிடம் இருந்து விடைபெற்று, ஓடி ஓடி, விமானம் கிளம்பும் கதவடிக்கு வந்த பின் தான் அவனுக்கு நான் போய் விட்டு வருகின்றேன் என்று சொல்லவில்லை, அவனை நான் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது புரிந்தது. அவன் இறந்து விட்டான் என்ற செய்தி சில மாதங்களில் வந்தது.
  12. வணக்கம் லிங்கம். மிகப் பழைய ஒரு உறவு போல......................👍.
  13. மிக்க நன்றி வில்லவன். ஒரு 'காமடி டிராமா' எழுதித் தாருங்கோ என்று தான் இங்கு நான் இருக்கும் இடத்தில் என்னைக் கேட்பார்கள். இந்த நாடகத்தையும் அப்படித்தான் எழுதினேன். ஆனால் அப்பொழுது எழுதி முடித்த போது, பல வருடங்களின் முன், நான் சிரிக்கவில்லை, கண்களை துடைத்துக் கொண்டே இருந்தேன். பின்னர் இன்று இங்கு களத்தில் கடைசிக் காட்சியை மீண்டும் எழுதிய போதும், காலையிலேயே, கண்கள் கலங்கிக் கொண்டேயிருந்தன................ இனி எங்கு காண்பமோ................ மிக்க நன்றி கவிஞரே. பிறப்பெடுக்கும் எல்லா உயிர்களினதும் ஒரே நோக்கம் தங்கள் சந்ததியை உருவாக்குதலே என்று சொல்லப்படுகின்றது. மரம் செடி கொடிகள் கூட. 'உருண்டு........' என்று அதையே சுட்டியிருந்தேன். ஆணும், பெண்ணும் இணைவது என்பதன் ஒரு வடிவம்...................
  14. அமெரிக்காவின் சி - 130 சிறிய ஓடுபாதையிலேயே இறங்கி ஏறும் ஆற்றல் உள்ளது. அதனாலேயே அமெரிக்கா இந்த விமானத்தை பலாலி விமான நிலைய ஓடுபாதையில் இறக்கி ஏற்றக் கூடியதாக இருக்கின்றது. 2000 தொடக்கம் 3000 அடிகள் வரை நீளமான, ஒழுங்காக செப்பனிடப்படாத ஓடுபாதையிலேயே இந்த விமானம் இறங்கி ஏறும். பொதுவாக பெரிய பயணிகள் விமானம் ஏறி இறங்குவதற்கு 5000 அடிகள் அல்லது அதற்கு மேலான மிகச் சிறப்பான ஓடுபாதைகள் தேவையாக இருக்கின்றது. இந்தியா விமானப்படையிடம் சி - 130 இருக்கின்றது. ஆனாலும் அதை அவர்கள் இலங்கைக்கான மீட்பு நடவடிக்கைகளில் இன்னமும் உபயோகிக்கவில்லை என்று நினைக்கின்றேன். சி - 130 க்கு சமனான ரஷ்ய தயாரிப்பு விமானங்களும் உண்டு. அன்டனோவ் - 12. ஆனாலும் ரஷ்யா இலங்கைக்கு இன்னமும் எதையும் அனுப்பவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.