-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி. பாரைக் கருவாடுதான் வாங்கவே இல்லை. நீங்கள் வேறை.😃
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்DPD பார்சல் சேவிஸ் தான் எமக்குப் பார்சல்களைக் கொண்டுவந்து தந்தது. அதனால் பயமில்லை அண்ணா. ஏன் கருவாட்டுடன் தான் பார்ட்டி வைக்கலாமா ??? ஆனாலும் திரியாய்ப் பாரைக் கருவாட்டை முதல் வாரம் போய்ப் பார்த்துவிட்டு வந்தும் இன்னும் இரண்டு வாரம் இருக்குத்தானே என்று எண்ணி வாங்காமல் விட்டிட்டனே என்ற கவலை இருக்குத்தான்.
-
யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
நீங்களும் அதிகநாட்கள் யாழுக்கு வரவில்லையோ அண்ணா? ஔவையின் இந்தப் 60 ம் அவரின் என்ன பெயருள்ள நூலில் இருக்கிறது. நான் இதுவரை அறியவில்லை.
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்பொருட்கள் எதுவும் தொலையவில்லை. திடுதிப்பெனக் கிளம்பியதில் கருவாடு, கறிவேப்பிலை மற்றும் சில வேண்டவேண்டும் என எண்ணிய பொருட்கள் வாங்கவில்லை. சரி அடுத்ததடவை வாங்குவோம் என மனதைத் தேற்றியாச்சு. 😃
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்உங்களைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அண்ணா.
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்எனக்கு மட்டும் என்ன? அங்கு என் அலுவலை மட்டும் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருந்தன். வந்த உடனை உண் கையால் பால்தேனீர் குடித்து எத்தனை நாளாச்சு. சோறுகறி வடிவாச் சாப்பிட்டு எத்தனை நாள் என்று சொல்லியே என்னைக் கொண்டு மனிசனும் மகளும் வேலை வாங்குகின்றனர். 😂 தொடர்ந்தும் எனக்கு எழுதி ஊக்கம் தருவதற்கும் படங்களுக்கும் மிக்க நன்றி அண்ணா. சாப்பாடுதானே முக்கியம் 😃
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்வருகைக்கு நன்றி வசீ
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாயினி. சாதாரணமாக வரிசையில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை. பொதி இன்று வந்து சேர்ந்துவிட்டாதண்ணா. ஆனால் ஒரு பொதி பழுதடைந்துவிட்டது. மற்றப்படி அதில் இருந்த பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தன.
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்சவுதியின் ரியாத் ஏயாப்போட்டில் ஏழு மணிநேரம் எப்படியோ போய்விட்டது இன்னும் ஒரு மணிநேரத்தில் விமானத்தில் இருப்போம். எட்டு மணித்தியாலத்தில் லண்டனில் நிற்பம் என்று எண்ண ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. விமானம் புறப்படும் நேரத்துக்கு இன்னும் 20 நிமிடங்கள்தான் இருக்கு. ஆனாலும் எம்மை இன்னும் விமானத்தில் ஏற்றவில்லை. பணிப்பெண்களோ விமான ஓட்டியையோ கூடக் காணவில்லை. என்ன இது மீண்டும் பிந்தபோகிறதோ என்று சினத்துடன் வேறு வழியற்றுக் காத்திருக்க, கவுண்டர் திறக்கப்பட்டு ஆடிப்பாடி இருவர் வருகின்றனர். இப்பதான் எமது விமானம் “Saudia” வந்து சேர்ந்திருக்குப் போல என எண்ணியபடி எழுகிறேன். அதன்பின் 15 நிமிடம் கழித்தே எல்லோரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கின்றனர். காலை 6.30 மணிக்கு வெளிக்கிட்டிருக்கவேண்டிய விமானம் ஒன்பது மணிக்குத்தான் வெளிக்கிட ஆயத்தமாகுது. ஒரு வரிசையில் மூன்று மூன்றாக ஒன்பது இருக்கைகளே. ஒவ்வொரு மூன்று இருக்கையிலும் ஒவ்வொருவரே இருக்கின்றனர். அது ஒருவகையில் மகிழ்வாக இருந்தாலும் ஏன் இந்த விமானத்தில் சனமே இல்லை என்ர பயமும் வர வெளியே பிராக்குப் பார்க்க, வேறொரு விமானத்தைத் தவிர ஏதுவுமே தெரியவில்லை. எல்லோரும் எறிமுடிந்தும் நேரம் பத்து நிமிடம் போனபின்னர்தான் விமானம் ஸ்டார்ட் ஆகி அப்படியே நிற்கிறதே தவிர 20 நிமிடமாக நகரவே இல்லை. என்னடா இது சோதனை. பக்கத்திலும் யாரும் இல்லை. பணிப்பெண்களையும் காணவில்லை. எட்டிப் பார்க்க அவர்களும் இருக்கைகளில் இருப்பது தெரிய வேறு வழியின்றி பேசாமல் இருக்கிறேன். ஸ்கிரீனில் ஏதும் பார்க்கலாம் என்றால் அதை மாற்றவே முடியவில்லை. அதுபோக எனது கெட்போன் அதில் எனது கெட்போனை கொழுவமுடியாமல் இருக்கு. விமானம் வெளிக்கிட்ட பின்தான் திறந்துவிடுவார்கள் போல என எண்ணியபடி கண்ணை மூடிக் கிடக்கிறேன். மீண்டும் ஒரு பத்து நிமிடங்கள் செல்ல விமானம் மெல்ல நகர கண்ணைத் திறந்து பார்க்கிறேன். விமானம் மிக மிக மெதுவாகவே ஊருகிறது. என்ன பிரச்சனை இவங்களுக்கு. விமானம் ஊர்வதால் அவர்களை அழைக்கவோ எதுவும் கேட்கவும் முடியாது. என்னவோ பிரச்சனை என்று மட்டும் புரிகிறது. மீண்டும் சிறிது நகர்ந்து நிற்கிறது. சரியாகப் பத்துமணி ஆகும்போது தூரத்தில் நெருப்பு எரிவதுபோல் இரு இடங்களில் தெரிகிறது. அது உண்மையில் நெருப்புத்தானா அல்லது என் நினைப்பா என்று தீர்மானிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் பரவலாக புகைபோல் தெரிய அது நெருப்பினால் வந்த புகையா அல்லது புகார் எதுமா என்று எண்ணியபடி எட்டி எட்டிப் பார்க்க எதுவும் தெரியவில்லை. விமானத்துள் எந்தச் சத்தமும் இன்றி அமைதியாக எல்லோரும் இருக்கின்றனர். பத்து நிமிடங்களின் பின்னர் மிக மெதுவாக ஊரத் தொடங்கிய விமானம் மெதுவாக நகர்ந்து ஓரிடத்தில் திரும்பிச் சென்று ஐந்து நிமிடங்களின் பின் இன்னொரு இடத்தில் திரும்புகிறது. நேரம் பிந்தியதில்த்தான் எமது விமானத்தை இன்னும் ஏறவிடலில்லை என்று நான் எண்ணியதைப் பொய்யாக்கியபடி எமது விமானத்துக்குப் பின்னே ஒரு பத்து விமானங்கள் வரிசையில் நிற்கின்றன. அப்போதுதான் எந்த ஒரு விமானமும் இதுவரை இறங்கவில்லை என்பது தெரிகிறது. ஏனோ தெரியவில்லை எனக்கு பதட்டமோ பயமோ ஏற்படவில்லை. ஏதோ நடப்பது நடக்கடும். சனீஸ்வரரே என் கணவர் பிள்ளைகளிடம் என்னைச் சேர்த்துவிடுங்கள் என்று மனதுள் எண்ணியபடி வெளியே பார்க்கிறேன். அதன் பின் எந்தப் புகையோ நெருப்போ கண்ணில் படவில்லை. எமக்கு முன் உள்ள ஓடுபாதையில் வேறுபக்கம் இருந்து ஒரு விமானம் வந்து மேலெழும்ப சிறிது நேரத்தில் எமது விமானமும் மெதுவாக மேலெழ அப்பாடா என்று நிம்மதி ஏற்பட்டாலும் ஏன் இப்படி மிக மெதுவாக மேலெழுகிறது? முன்னர் பயணித்த எந்த விமானமும் மேலெழும்போது இத்தனை மெதுவாக ஏறியதில்லையே. முன்னர் ஒரு தடவை ஜெர்மனியில் இப்பிடித்தான் இரண்டு மணிநேரம் பிந்திய easyjet விமானம் அரைமணிநேரம் மேலே வட்டமிட்டுவிட்டு மீண்டும் கீழே வந்து எம்மை இறக்கியது நினைவில் வர, இவர்களும் அப்பிடித்தான் செய்யப்போகிறார்களோ என்று சலிப்பும் வர ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்தின் பின்னரே மேகக் கூட்டங்களிநூடு மேலெழுந்து சென்றபின்னர்தான் நிம்மதியானது. பாதுகாப்புப் பட்டியின் படம் மறைந்த பின், படம் பார்ப்போம் என்று பார்த்தால் கெட்போன் இன்னும் தரவில்லை. அவர்கள் தரும்வரை பொறுமையுடன் இருந்து வாங்கிக் கொழுவினால் எனக்கு முன்னால் உள்ள ஸ்கிரீனில் படம் விக்கிவிக்கி அப்பப்ப நின்று வர, பக்கத்து இடத்துக்கு மாறினால் அங்கும் அதே பிரச்சனை. சிறிது நேரத்தில் தமது விமானத்தில் இன்ரநெற் சரியாக வேலைசெய்யாமைக்கு வருந்துகிறோம் என்கின்றனர். சீற் தான் தாராளமாக இருக்கே என்று எண்ணியபடி மற்றய இரண்டு இருக்கைகளிலும் இருந்த சிறிய தலையணைகள் விரிப்புகள் எல்லாம் எடுத்து தலைக்கு வைத்தபடி படுக்க நல்ல தூக்கம் வருகிறது. உணவின் வாசனை என்னை எழுப்ப எழுந்து அமர்கிறேன். இரண்டுமணிநேரம்தான் போயிருக்கு. மரக்கறியா சிக்கிணா என்று விமானப் பணிப்பெண் கேட்க சிக்கிண் என்கிறேன். இலங்கையில் நின்றபோது ஐந்து மாதங்களில் மூன்றோ நான்கோ நாட்கள்தான் கோழிக்கறி உண்டாதனால் அவர்கள் தந்த உணவு நன்றாக இருப்பதுபோல் இருக்கிறது. மோகன்லாலின் படம் ஒன்றைப் பார்க்கப் போட்டால் இரண்டரை மணிநேரப்படம் நின்றுநின்று மூன்று மணித்தியாலங்கள் சென்று முடிய மீண்டும் கண்ணை மூடி இருந்தபடியே தூங்குகிறன். கீத்துறோ விமான நிலையத்தை இன்னும் ஒரு மணிநேரத்தில் அடைந்துவிடுவோம். என்ற அறிவிப்பு வர மகிழ்ச்சி ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் மீண்டும் சிறிய உணவு ஒன்று தருகிறார்கள். திறந்து பார்த்தால் சலாமி, காளான் எல்லாம் போட்ட பீட்ஸா. சாப்பிட்டபின் மனதும் வயிறும் நிறைந்துபோயிருக்க ஸ்கிரீனில் விமானம் செல்வதைப் பார்க்க இன்னும் முப்பத்தைந்து நிமிடங்களில் இறங்குமிடம் என்று காட்டுகிறது. திடீரென எல்லோரையும் பாதுகாப்புப் பட்டி அணியும்படி அறிவிப்பு வருகிறது. விமானம் மூன்று நான்கு தடவை குலுங்கிவிட்டுச் சரியாகிறது. நேரம் 9.45 இன்னும் பதினைந்து நிமிடத்தில் தரையிறங்க வேண்டும் ஆனால் சரியாக இருபத்தைந்து நிமிடங்கள் மேலேயே வட்டமிட்டுவிட்டு சரியாக 10 மணிக்கு இறங்கவேண்டிய விமானம் 10.30 மணிக்குத் தரையைத் தொட்டபின் தான் மனம் ஒரு நிலையாகிறது. கீழே இறங்கி பொதிகளை எடுப்போம் என்று சென்றால் பொதிகள் முதலே வந்துவிடும் என்று இலங்கையில் சொன்ன நினைவு வர பொ திகளுக்குப் பொறுப்பான கவுண்டருக்குச் சென்று எமது பொதிகள் இந்த விமானத்தில் வரவில்லை. நேரே இலங்கையில் இருந்து இங்கே அனுப்புகிறேன் என்று கூறினார்கள். நான் ரியாத்தில் இருந்து வருகிறேன் என்றபடி எனது போடிங்பாசில் ஒட்டியிருந்த அட்டைகளை எடுத்துக் கொடுக்கிறேன். இது ரியாத்தில் தந்த போடிங்பாஸ் தானே என்றுகேட்க ஓம் என்கிறேன். நீங்கள் தமிழா என்று கேட்க ஓம் என்கிறேன். அவர் தமிழில் இன்று வந்த போடிங் பாசில் ஒட்டியுள்ளபடியால் இன்றுதான் நீங்கள் வந்த விமானதில்த்தான் உங்கள் பொதியும் வந்திருக்கும். ஏழாம் இலக்கத்துக்குப் போங்கள் என்று கூற நான் எதுவும் பேசாமல் ஒரு தள்ளுவண்டியை எடுத்து அதில் எனது சிறிய பொதி, கைப்பை எல்லாவற்றையும் வைத்துத் தள்ளிக்கொண்டு ஏழாம் இழக்கத்துக்குப் போனால் அங்கு இன்னும் பொதிகள் வர ஆரம்பிக்கவில்லை. முன்னர் ரியாத் எயாப்போட்டில் என்னுடன் வந்து கதைத்த இருவரும் இன்னும் இருவரும் என்னருகில் வந்து நிற்க, எனது பொதி முன்னரே இங்கு வந்துவிடும் என்று இலங்கையில் கூறினார்கள் என்கிறேன். அப்பிடி வராது எம்மோடுதானே எமது பொதிகள் வரும் என்கிறார் ஒருவர். மற்றவர்களும் அதை ஆமோதிக்கின்றனர். அவள் வடிவாகக் கூறினாளே. இவர்கள் இப்படிச் சொல்கின்றனர். சிலவேளை ரியாத்தில் நாம் பொதிகளைத் தேடலாம் என்று அவள் சொல்லியிருப்பாளா என்ற எண்ணமும் ஓட எதுவும் பேசாமல் பாத்துக்கொண்டு நிற்கிறேன். பொதிகள் வரத்தொடங்கவும் எல்லோரும் அவரவர் பொதிகளை எடுத்துக்கொண்டு போக வந்து இறங்கியாச்சா என்று கணவர் போன் செய்கிறார். வந்தாச்சு. இன்னும் பொதிகள்தான் வரவில்லை எடுத்துக்கொண்டு வாறன் என்றுவிட்டு போனை வைக்கிறேன். எல்லாரும் அவரவர் பொதிகளை எடுத்துக்கொண்டு போக ஒரு பன்னிரண்டு பேர் மட்டும் நிற்க எமது பொதிகள் மட்டும் வரவேயில்லை. அதில் எல்லாப் பொதிகளும் வந்துவிட்டதாகப் போட நான் வண்டிலைத் தள்ளிக்கொண்டு முன்னர் போன இடத்துக்குப் போகிறேன். அவரிடம் எனது பொதிகள் இரண்டும் வரவில்லை. முன்னரே சொன்னேன் தானே என்கிறேன். அப்படியா என்றுவிட்டு ஒரு படிவத்தை எடுத்து நிரப்பும்படி தருகிறார். நல்ல ஏச்சுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் வேறு வழியில்லாமல் படிவத்தை வாங்கி பக்கத்தில் உள்ள மேசையில் வைத்து என் விபரங்களை எழுதிவிட்டு நிமிர, நான் நின்ற இடத்தில் வேறு இருவர் வந்து நிற்க நான் மற்றக் கவுண்டருக்குச் சென்று படிவத்தைக் கொடுக்க, அவர் சிஸ்டத்தில் பதிந்துவிட்டு நாளை DPD உங்கள் பொதியை வீட்டுக்கே கொண்டுவந்து தருவார்கள் என்றபடி ரிசீற்றைத் தர வாங்கிக்கொண்டு வெளியே வர குளிர் காற்று முகத்தில் அடிக்கிறது. நான் வெளியே வந்து காரில் ஏறி மகளுக்குப் போன் செய்து நான் வந்து சேர்ந்திடடன் என்று கூற, ரியாத் ஏயாப்போட்டுக்கு கொஞ்சம் தூரத்தில் அமெரிக்கத் தளத்தின் மீது தாக்குதல் நடந்தது. அவர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தியதாக இருக்கு. நீங்கள் பயந்துவிடுவீர்கள் என்று நான் சொல்லவில்லை என்கிறாள். அதனால்த்தான் விமானங்கள் பறக்காமல் இருந்திருக்கு. உங்கள் விமான நிலையத்துக்கு அண்மையில் இருந்துதான் எதிர்த் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர் என்று இன்னொரு நண்பரும் கூறினார். கடவுள்தான் எம்மைக் காப்பாற்றியிருக்கிறார். முடிந்தது
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்உண்மைதான் அண்ணா. என் கணவர் அடிக்கடி சொல்வார் "உன்னைக் கூட்டிக்கொண்டு போற நேரம் சின்னப் பிள்ளை ஒன்றைக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று 😃ஆனால் இலங்கையில் நின்றபோது பெரும்பாலான நாட்கள் மதியம் சாப்பிட்டதுடன் இரவு உணவு உண்ணாமல் காலை எட்டு மணிக்குத் தான் உண்டிருக்கிறேன். அதனால் நிறையும் குறைந்தது.
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்காட் முடிந்தால் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னேயே புதியதாய் அனுப்பிவிடுவார்கள். என பெயரில் வரும் எல்லாக் கடிதத்தையும் எனக்குப் படம்எடுத்து வற்சப்புக்குப் போட்டவருக்கு இது மறந்துபோச்சு. தெரிந்திருந்தால் நானே காட்டைக் குடுத்திருக்கமாட்டேனே. 😂
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்அதுக்குக் காரணம் இருக்கு அண்ணா. நான் சொல்லி அவர்கள் வேறு ஆளைத் தம்முடன் சேர்த்துக்கொண்டால் அதுகும் இல்லை இதுகும் இல்லை என்றாகிவிடும். அத்தோடு அவர் சிங்களவர். முன்னபின்ன தெரியாது. அவர் என்னைக் கூட்டிக்கொண்டு போகும் வரையிலும் நான் உள்ளே போவேனோ மாட்டேனோ என்ற சந்தேகமும் இருந்துகொண்டிருந்தது. சிலவேளைகளில் உப்பிடி இருந்தால்த்தான் பிழைக்கமுடியும். ஆனாலும் அந்தப் பெண்கள் பக்கமே திரும்பாமல் ஓடி வராமல் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத்தான் வந்தேன். அத்தோடு அன்றுதான் சிங்களவர்கள் மேல் இருந்த ஏதோவொன்று இல்லாமற்போனது. அவர்களுக்குக் கொடுக்காமல் எப்படி?? இம்முறை சிறிய பல விடையங்களைப் பஞ்சியில் எழுதாமல் கடந்திருக்கிறேன் அண்ணருக்கு என்னே ஒரு அன்பு 😂😂
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்வருகைக்கு நன்றி அக்கா நெடுங்காலமா ................. கடந்த ஆண்டும் வந்திருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை.😂
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்பயணம் போகும் நாளன்று காலையில் எழுந்து தோய்ந்துவிட்டு எட்டு மணிக்குப் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வந்து அறையுள் அடைகிறேன். சாதாரணமாக வெளியில் சென்று பார்ப்போமா என்று எண்ணிவிட்டு, பிறகும் வேண்டாம் என முடிவெடுக்கிறேன். ஏனெனில் பயணப் பொதிகளுள் இடம்தான் இல்லையே. வீணாக பணம் கொடுத்து வாங்கி கடந்த ஆண்டுபோல் எதற்காக விமான நிலையத்தில் விட்டுவிட்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொள்ள போன் ஒன்று வருகிறது. புதிய இலக்கமாக இருக்க யார் என்கிறேன். “மடம் நான் வரவேற்பில் இருந்து பேசுகிறேன், இன்னும் எத்தனைநாள் நிற்கப் போகிறீர்கள்” “நேற்றே இன்று ஒருமணிக்குப் போகவேண்டும் என்று சொன்னேனே” “உங்களுக்கு விமானநிலையம் போக வாகனம் வேண்டுமா” “எவ்வளவு எடுக்கிறீர்கள்” “12000 ரூபாய்கள்” “வேண்டாம். நானே ஒழுங்குசெய்துகொள்கிறேன். நன்றி” என்றுவிட்டு பிக்மீயில் பெரிய கார் போட 4500 ரூபாய்கள் என்று வருது. பக்கத்துக் கடையில் ஏதும் உணவு வாங்கிக்கொண்டு போவோமா என எண்ணிவிட்டு, வேண்டாம் விமான நிலையத்திலேயே வாங்கிக்கொள்வோம் என எண்ணி எதையும் வாங்கவில்லை. 12.45 இற்கு நான் கிளம்பவேண்டும். எனது பொதிகளைத் தூக்கிவர யாரையாவது அனுப்புகிறீர்களா என்றுவிட்டு சிறிய பொதியைத் தூக்கிக்கொண்டு வெளியே வர, இருவர் வாசலில் வந்து நிற்கின்றனர். கீழே சென்று திறப்பைக் கொடுத்தபின் பிக்மீக்குப் பதிய ஏழு நிமிடங்களின் பின் அந்தக் கார் வர, பொதிகள் மூன்றையும் ஏற்றிவிட்டபின் நானும் ஏறி அமர்கிறேன். விமான நிலையத்தில் பெரிதாகச் சனங்கள் இருக்கமாட்டார்கள் என்று எண்ணியிருக்க உள்ளே செல்லும் வாசலில் ஒரே சனம். பொதிகளைக் கொண்டு உள்ளே சென்று ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பகுதியில் இரு பெரிய பொதிகளையும் ஒப்படைத்து போடிங்பாஸ் வாங்கியபின் “உங்கள் பொதிகள் ரியாத்துக்கு வராது. நேரடியாக யூகே சென்றுவிடும். நீங்கள் அங்கு சென்றபின் உங்கள் பொதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றவுடன் நானும் சரி என்றுவிட்டு டியூட்டிஃப்ரீ யில் ஏதாவது வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் சரியான விலை. ஒரு உலர் தேயிலைப் பக்கற் மட்டும் வாங்கிக்கொண்டு போய் ஒரு இருக்கையில் அமர்கிறேன். விமான வாயிலுக்குச் செல்ல நேரம் இன்னும் நிறைய இருக்க, ஏதாவது உண்ணலாம் என்னும் எண்ணம் எழுகிறது. இரண்டு மூன்று கடைகளைப் பார்த்தால் எதுவும் பிடிக்கவில்லை. நான்காவது கடையில் ஓர் சிக்கன் சலாட் மற்றும் ஒரு கோப்பியும் ஓடர் செய்ய, 11 டாலர் வர BOC வங்கி அட்டை மூலம் பணம் செலுத்திவிட்டு வருகிறேன். விமானம் புறப்பட இன்னும் இரண்டரை மணிநேரம் இருக்க மெதுவாக சூட்கேசை இழுத்தபடி இலக்கம் 8 ஐத் தேடியபடி சென்றால் பெரிதாக யாரையும் காணவில்லை. போனை சார்ஜ் செய்ய வசதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து போனைப் பார்க்க நேரம் போனதே தெரியவில்லை. சாதாரணமாக ஒரு முக்கால் மணிநேரம் இருக்கும்போதுதான் அதற்குரிய மண்டபத்தைத் திறப்பார்கள். அன்று ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னரே திறந்துவிட நானும் இன்னும் சிலரும் மட்டும் உள்ளே சென்று அமர்கிறோம். போரின் பயத்தில் ஆட்கள் போகவில்லையோ என்று எண்ணியபடி போனில் மூழ்கியிருக்க, என் இருக்கைக்குப் பக்கத்தில் ஒருவர் வந்து அமர்வது தெரிகிறது. திரும்பிப் பார்க்க, ஒரு பெண் என்னைப் பார்த்து சிரித்தபடி இதில் அமரலாம்தானே என்கிறார். நான் தாராளமாக என்று கூறிச் சிரித்தபடி எந்த நாட்டுக்குச் செல்கிறாய் என்கிறேன். “நான் ரியாத்தில் வேலைக்காகச் செல்கிறேன்” “ஓ நீண்ட நாட்களாக அங்கு வேலை பார்க்கிறாயா? “14 ஆண்டுகளாகச் செய்கிறேன். ஆனால் இது புதிய வேலை” “பழைய வேலை என்னவாயிற்று” “இம்முறை நான் ஆறு மாதங்கள் நாட்டில் நின்றுவிட்டேன். தொடர்ந்து வேலை செய்வதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நாட்டுக்கு வந்து போகும்போது பழைய வேலை இல்லாமற் போய்விடும்” “உனக்கு எத்தனை குழந்தைகள்? “எனக்குக் குழந்தைகள் இல்லை. 53 வயதாகிறது” “உன் கணவர் வேலை செய்வதில்லையா? “அவர் செய்யும் வேலையில் நிறையப் பணம் வராது” “குழந்தைகள் இல்லாதபடியால் உனக்கு பெரிதாகச் செலவு இருக்காதுதானே. ஏன் உள் நாட்டிலேயே ஒரு வேலை தேடிக்கொள்ள முடியாதா? “எனக்கு சின்னதா ஒரு வீடு காட்டவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. முன்னர் பத்து இலட்சங்கள் சேர்த்து வைத்து ஒரு முகவர் நியூசீலாந்தில் வீடுகள் மலிவு, அங்கு நீ ஒரு வீடு வாங்கினால் அங்கு போவதற்கு விசாவும் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார். இப்ப திரும்பவும் இலங்கையில் வீடுகட்டப் பணம் சேர்க்கிறேன்” “பணத்தை நீயே வைத்திருப்பாயா அல்லது...... “ “ என் கணவரின் வங்கி இலக்கத்துக்கு மாதாமாதம் அனுப்பிவிடுவேன்” “ கணவர் செலவழிக்காமல் பத்திரமாக வைத்திருப்பாரா” அதெலாம் வைத்திருப்பார். நான் அனுப்பும் பணத்தில் எதையும் வீணாக்குவதில்லை. ஆனால் உறவினர்கள் அயலவர்கள் எப்போதும் கடன் கேட்டபடிதான் இருப்பார்கள். இல்லை என்று சொன்னால் கதைக்கவும் மாட்டார்கள்” தமிழர்கள் என்றால் என்ன சிங்களவர் என்றால் என்ன. பண விடயத்தில் எல்லோரும் ஒரேமாதிரித்தான் போல. பாவம் இந்தப் பெண் என எண்ணியபடி கதைப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அரைவாசி இடங்கள் நிறைந்துவிட்டன. இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. நான் கணவருக்கும் ஊரில் இருப்பவர்களுக்கும் போன் செய்து இன்னும் அரை மணித்தியாலத்தில் கிளம்பிவிடுவேன் என்றதும் ரியாத் போய்ச் சேர்ந்த பிறகு போன் செய் என்றபடி முடிக்க, நான் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தால் அவர் இன்னொருவருடன் கதைப்பது தெரிய சுற்றுமுற்றும் பார்க்க இரண்டுநாட்களின் முன் கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்தின் முன்னால் கண்ட பல முகங்கள் தெரிகின்றன. விமானத்தில் ஏறி அமர்ந்தால் யன்னல் ஓரத்தில் ஒருவரும் மற்றப் பக்கம் நானும் நடுவில் ஒரு இருக்கை வெறுமையாகவும் இருக்க, கடவுளே ஒருவரும் எனக்குப் பக்கத்தில் வரக்கூடாது என்ற என் நேர்த்தியை சனீஸ்வரர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் விமானம் முழுவதும் ஆட்களால் நிறைந்துவிட்டது. ஐந்தரை மணித்தியாலத்தின் பின் விமானம் தரையிறங்க விமான நிலையம் கண்ணில் படவில்லை. நாம் இறங்கியவுடன் பஸ்சில் ஏற்றிக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்ரர் தொலைவில் உள்ள விமான நிலையத்தில் கொண்டுபோய் விட வேறு விமானங்களுக்கு மாறுபவர்களின் வரிசை சிறிதாகவும் அந்த நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள் நீண்ட வரிசையிலும் காத்திருக்கிறார்கள். எமக்கு புதிய போடிங் பாஸ் அங்குதான் தரப்படுகிறது. எமக்கு இன்னும் ஆறு மணிநேரம் இருக்கிறது. ஏற்கனவே இரவானதால் குளிர். அதைவிட எல்லா இடத்திலும் ஏசி போட்டு நடுக்கம் வராத குறை. கணவர் பிள்ளைகளுக்கு இங்கு வந்து சேர்ந்ததைச் சொல்வோம் என்றால் நெட்வேர்க் வேலைசெய்யவில்லை. அவர்களின் Wi-Fi கூட சரியாக வேலை செய்யவில்லை. பலதடவை போன் செய்தும் நான் கதைப்பது கணவருக்குக் கேட்கவில்லை. அவர் கூறுவதும் எனக்குக் கேட்கவில்லை. சரி மெசேஜ் போட்டுவிடுவோம் போனால் போகட்டும் என எண்ணியபடி Wi-Fi ஐ நிறுத்திவிட்டு மெசேஜ் போட்டால் அது போய்விட்டது. போனை மூடி வைத்துவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பசியெடுக்க ஆரம்பிக்கிறது. விசர் வேலை பார்த்தது. உண்பதற்கு ஏதும் வாங்கி வந்திருக்கலாம். விமானத்தில் முன்னர்போல் திருப்தியாக உண்பதற்கு உணவு தருவதில்லை. இன்னும் நான்கு மணிநேரம் பசியோடு இருக்க முடியாது என எண்ணிக்கொள்கிறேன். நான் இருந்த இருக்கையின் பக்கத்தில் ஒரு வயதான கணவன் மனைவி அமர்ந்திருக்க நீங்கள் எங்கு செல்கிறீர்கள் எனப் பேச்சுக்கொடுக்க தாமும் UK செல்வதாகக் கூறிவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கின்றனர். என் இடத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் உணவு வாங்கிக்கொண்டு வருகிறேன் என்றபடி கழுத்துக்கு வைக்கும் தலையணையை நான் இருந்த இடத்தில் வைத்துவிட்டு எனது சூட்கேசைத் தள்ளியபடி ஒரு சிறிய உணவகத்துக்குச் செல்கிறேன். சாண்ட்விச், சலாட் மற்றும் ஹாட் சொக்ளற் என்று கூற 17 dollars என்கின்றார் அந்தப் பெண். நான் என் பாங்க் காட்டைக் கொடுக்க அந்தப் பெண் காட் ரீடரில் போட்டால் டிக்கிளைண்ட் என்று வருகிறது. அதில் போதிய பணம் இருக்கிறது மீண்டும் போடுங்கள் என்கிறேன். மீண்டும் போட அப்படியே வர அந்தப் பெண் பக்கத்தில் நின்ற ஒருவருடன் ஏதோ குசுகுசுக்க அவர் காட்டை வாங்கிப் பார்த்துவிட்டு உங்கள் காட் ஒரு மாதத்தின் முன்னரே முடிந்துவிட்டது என்றபடி காட்டை எனக்குத் தர, நான் நம்பாமல் வாங்கிப் பார்க்கிறேன். அவனமானம் ஒருபுறம் இந்த எளிய மனிசன் புதிய காட் வந்ததை எனக்குச் சொல்லவில்லை என்று மனிசன்மேல் கோபமும் வர, மன்னியுங்கள் நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். பவுண்ட்ஸ் எடுப்பீர்கள் தானே என்கிறேன். அந்தப் பெண் நோ என்கிரா. எனக்கு சரியான பசி. மற்றைய நாடுகளில் UK பவுண்டஸ் எடுப்பார்கள். நீ ஏன் மாட்டேன் என்கிறாய் என்று கேட்க பக்கத்தில் நின்றவர் சரி எடுக்கிறேன். ஆனால் மிகுதி தரமாட்டோம் என்கிறார். நீ மிகுதி தரவேண்டாம். எனக்கு உணவைக் குடு என்கிறேன். இவ்வளவு உணவும் எத்தனை பவுண்ட்ஸ் வருகிறது என்று போனில் பார்த்தால் 12.70 பவுண்டஸ் என்று காட்ட, அட மிகுதி ஏழு பவுண்டஸ் வீணாகப் போகிறதே என எண்ணியபடி ஒரு கேக் மற்றும் யூஸ் எடுத்துவிட்டு 20 பவுண்ஸ் கொடுத்து உணவுகளை வாங்கிக்கொண்டு வர அந்தக் கணவனும் மனைவியும் பிஸ்கற் உண்டு கொண்டு இருக்கின்றனர். நான் என் உணவுகளை உண்டுவிட்டு கோப்பியைக் குடித்தபின் கேக்கையும் யூசையும் சூட்கேசுள் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுமுற்றும் பார்க்க அங்கு பல இருக்கைகள் காலியாக இருக்கின்றன. சதுரமாக பெஞ்சுகளும் சிறிது தூரத்தில் போடப்பட்டிருக்க இரு பெண்கள் போர்வையால் போர்த்துக்கொண்டு படுத்திருக்க, எதுக்கும் நானும் படுப்போம் என எண்ணியபடி பக்கத்து முதியவர்களுக்கு நான் அந்த பெஞ்சில் போய் இருக்கப்போகிறேன். நீங்களும் வாருங்கள். இந்தக் கதிரையிலும் அது வசதியாக இருக்கும் என்று கூற அவர்களும் எழுந்து வருகின்றனர். அந்த முதியவர் போனைப் பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெண் அவரின் தோளில் சாய்ந்து தூங்க, நான் காலை மடக்கியபடி என் கைப்பையை தலைமாட்டில் வைத்து அதன் மேல் தலை வைத்தபடி சூட்கேசை ஒருகையால் பிடித்தபடி கோழித்தூக்கம் போடுகிறேன். ஆனாலும் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன் போல. என்னை யாரோ தட்ட திடுக்கிட்டு விழித்தால் அந்தப் பெண்மணி. எமது விமானம் வேறு இடத்தில் என்று அறிவித்தார்கள். அதுதான் எழுப்பினேன் என்று அவர் கூற நான் எழுந்து என் பொதியையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு நேர அட்டவணை இருக்கும் இடத்திற்குச் சென்று பார்க்கிறேன். வேறு பலரும் எமக்கு அருகே வந்து நின்று பார்க்கின்றனர். எமது விமானம் இரண்டுமணி நேரம் இன்னும் பிந்தும் என்று போட்டுள்ளார்களே அன்றி வேறு எந்த விபரமும் இல்லை. இன்னும் மூன்று மணி நேரம் இருக்கே. பிறகுதான் போடுவார்கள். சும்மா இதில நின்று எந்தப் பிரயோசனமும் இல்லை. வாங்கோ போய் இருப்பம் என்றபடி நாம் இருந்த இடத்துக்குப் போக, இரு ஆண்கள் அங்கு நீட்டி நிமிர்ந்து படுத்திருக்க வேறு பக்கமாகச் சென்று அமர்கிறோம். விமானநிலையம் பெரும்பாலும் வெறிச்சோடிப்போய் இருக்கு. இன்னும் இரண்டு வயதானவர்களும் எம்மோடு வந்து அமர்கின்றனர். அவர்களும் UK தான் போகிறோம் என்கின்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க நேரம் போவது தெரியவில்லை. அடிக்கடி எழுந்து சென்று நேர அட்டவணையில் ஏதும் போடுகிறார்களா என்று பார்த்தால் இரண்டு மணி நேரத்தின் பின்னரே நாம் நான்காம் இலக்க மண்டபத்துக்குப் போக வேண்டும் என்று எல்லோரும் விரைந்து அங்கே செல்கிறோம்.
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்புரியவில்லையே அண்ணா