Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. வருகைக்கு நன்றி இணையவன். நீங்கள் இலங்கைக்குச் சென்று மாட்டுப்படவில்லை என்று நினைக்கிறேன். அங்குள்ளவர்களுக்கு எந்த உதவியுமே செய்யாதவர் நாட்டுக்குச் சென்றால் அங்குள்ளவர்களுக்கு கொடுப்பதை ஓரளவு நியாயம் என்று சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு ஆண்டுக்கணக்காக அப்பப்போ உதவியும் செய்துவிட்டு அங்கு செல்லும்போதும் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் என்றும் எதிர்பார்ப்பது தவறு. நாம் ஒருமுறை செய்தால் அவர்கள் எப்போதுமே எதிர்பார்ப்பார்கள் என்பது ஒன்று. அங்கு எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு வெளிநாட்டவர் பணத்தில் சொகுசாக இருப்பவர்கள் கூட பணம் அனுப்புபவர்கள் அங்கு செல்லும்போது இரண்டு நாட்கள் கூட தம் பணத்தில் சமைத்துப் போடாது செல்பவரிடமே பணம் பிடுங்க நினைப்பது என்ன நியாயம்?????
  2. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்துகொண்டு நாற்பது ஆண்டுகளாகக் குடும்பத்துக்கு உழைத்துக் களைத்து அங்கு போய் நிம்மதியாக இருப்போம் என்றால் எல்லாரும் என்னை புல் பிடுங்கச் சொல்கிறீர்கள், மண்வெட்டி பிடிக்கச் சொல்கிறீர்கள். என்ன நியாயம் இது 😃 இலங்கையில் இப்பொழுது இந்தியன் இயந்திரங்கள் இறக்குமதி செய்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். சைனாவின் பொருட்களும் இருக்கலாம். இம்முறை செல்லும்போது விசாரிக்கவேண்டும். இங்கிருந்து கொண்டுபோகநிறையச் செலவு. இந்தியாவிலும் நிறைய இலகுவான முறையில் இயங்கும் இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நாம் சென்று அல்லது ஓடர் செய்வது என்றால் அதிக வரி செலுத்தவேண்டி வரும் .
  3. கையில் புண்களினால் ஏற்பட்ட வடுக்கள் எனக்கு இரண்டு ஆண்டுகளாகியும் முற்றாகப் போகவில்லை. இலங்கையில் இருப்பவர்கள் சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம்.
  4. பிள்ளைகள் அதீத துணிவும் திறமையும் கொண்டவர்கள் என்றால் கூட அங்கு நாம் இல்லாதவரை காணியை அவர்கள் பெயருக்கு எழுதுவது நல்ல யோசனை இல்லை. அவர்கள் அங்கு சென்று இருக்கப்போவதில்லை. அவர்களை மற்றவர் ஏமாற்ற முயலலாம். நீங்கள் போய் இருப்பீர்கள் என்றால் உங்கள் பெயரில் எழுதுவது நல்லது. போவதில்லை என்று முடிவு எடுத்தால் விற்றுவிடுவதுதான் நல்லது. உங்கள் காணி வேறு யாரின் பெயரில் இருக்குமானால் உடனே உங்கள் பெயருக்கு மாற்றுவதுதான் நல்லது. உங்கள் உ றவினார் நல்லவர்கள் என்றாலும்கூட காலம் அவர்களை மாற்றலாம். முதல் தடவை நான் புற்கள் பிடுங்கினேன். ஒவ்வாமை ஏற்பட்டு கைகள் எல்லாம் கொப்புளங்கள் ஏற்பட்டபின் கை வைப்பதில்லை. கடந்த ஆண்டு இரு அறைகளுக்கு மார்பிள் போட வெளிக்கிட்டு நானே அவர்களைத் திருத்துமளவு வேயாய். கடைசியில் போட்டுமுடியும்வரை கணவர் கூடவே நின்றதானால் ஒழுங்காகப் போட்டார்கள்.
  5. எனக்கு மரம் வெட்ட பாத்திகள் கட்ட வந்தவர்கள் மூவர் நல்ல வேலைக்காரர்கள் தான். ஆனால் அவர்களும் நாம் பக்கத்தில் நின்று சொன்னால்த்தான் நன்றாகச் செய்கின்றனர். அந்தப்பக்கம் போனால் ஏனோதானோ என்றுதான். பொது அறிவைப் பயன்படுத்தி செய்யும் வேலைகளைக் கூடத் தவராகச் செய்தால் என்ன செய்வது. நாம் போய் இருந்தால் மட்டுமே சரியானவர்களைத் தெரிவுசெய்ய முடியும். எல்லோரும் தம் வேலைகளை எல்லா இடமும் தக்கவைத்துக்கொள்ள அங்கொருகால் இங்கொருகால் என மனச்சாட்சியின்றி ஒழுங்காக ஒரு வேலையை முடிக்காமல் அழைக்கழிக்கின்றனர்.
  6. உண்மைதான். எனக்கு அன்பாய் கதைச்சு அப்பு ராசா என்று நடித்து வேலை வாங்க எல்லாம் தெரியாது.
  7. உதிரி இன்னும் ஒன்று அல்ல நிறையவே இருக்குத்தான் அங்கு உள்ள நிலமைகள் சொல்ல. ஆனால்எனக்கு எழுதப்பஞ்சி வந்ததால் முழுதும் எழுதவில்லை. இன்னும் ஒன்றே ஒன்றை எழுதவேணும். முதல் எட்டுக் கமறா பூட்டிப்போட்டு வந்தனாங்கள். பிறகு உழண்டி எல்லாம் களவு போனபிறகு இன்னும் நான்கு பூட்டச்சொல்லி மனிசன் சொன்னவுடன கிரி என்ற பெடிதான் நல்ல பழக்கமான பெடி. அவருக்கு அடிச்சு விடயத்தைக் கூற அடுத்தநாளே வந்துவிட்டார். கொம்பனியின் பெயர் Telechoice Lanka LTD. அக்கா கொம்பனிக்குமொரு மெசேஜ் போடுங்கோ என்று சொல்ல வற்சப்பில் அதையும் நான் போட்டாச்சு. சாதாரணமா வயர்கள் , கமரா பூட்டுவது கிரிதான். மற்றவர் பெயர் சபேசன். கிரி கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுத்துவிட்டு போனிலதான் எந்நேரமும் நிற்பார். எல்லாம் முடிந்தபின் செக் பண்ணி பாக்ஸ் இல் எலாம் சரிபார்ப்பது மட்டும்தான் சபேசனின் வேலை. நான் நான்கு இடங்களைக் காட்டி இந்த இடங்களில் கமரா பூட்டுங்கோ என்று சொன்னால் அவர்கள் இரண்டு இடங்களில் நான் சொன்னது போல் பூட்டிவிட்டு இரண்டு இடங்கள் அக்கா நீங்கள் சொல்வதிலும் பார்க்க இப்பிடிப் பூட்டினாலத்தான் நன்றாக இருக்கும் என்று கூறி மிகுதி இரண்டையும் பூட்டிவிட்டுச் செல்ல அடுத்தநாள் பார்த்தால் அவர்கள் பூட்டிய இடம் சரியாக இல்லை. மீண்டும் கிரியை அழைத்து நீங்கள் பூட்டிய இரண்டும் சரியான இடம் அல்ல. திரும்பக் கழற்றி நான் சொன்ன இடத்தில் பூட்டவேண்டும் என்கிறேன். கிரி சரியக்கா உங்கள் விருப்பத்துக்கே பூட்டிவிடுறன் என்று கூற, சபேசன் "என்னக்கா நீங்கள், நேற்று சரி சரி என்று சொல்லீற்று இன்று இப்படிச் சொல்கிறீர்கள். இனி எல்லாம் திரும்பக் களற்றிப் பூட்ட வேண்டும்" என்றவுடன் நான் கோபத்துடன் "நேற்றே நான் சொன்னதுபோல் பூட்டியிருந்தால் உந்தப் பிரச்சனை இல்லை. உங்களுக்குத்தான் எல்லாம் தெரிஞ்சமாதிரி இதில பூட்டினாலத்தான் நல்லாய் இருக்கும் என்று பூட்டிவிட்டீர்கள். இப்ப பாக்கத்தான் அது பிழையாக இருக்கு" "அக்கா நீங்கள் ஓம் என்று சொன்ன பிறக்குதானே பூட்டினனாங்கள்" என்று கதைத்துக்கொண்டிருக்கும்போதே இடையில் நுழைகிறார் சபேசன். " நீர் வாயை மூடும். நான் கிரியுடன் கதைக்கிறன். கிரி ,நான் முதலே உங்களுக்குச் சொன்னனான் தானே. இப்ப எனக்குத்தான் காசு நட்டம். இவர் ஏதோ தான் எனக்கு ஓசியில வேலை செய்து தாரமாதிரிக்க கதைக்கிறார்" என்றவுடன் கிரி "சபேசன் நீ பேசாமல் இரு" என்றுவிட்டு நான் கூறியபடி இரண்டு கமராக்களையும் பூட்டி முடிய நான் ஜன்னலால் வெளியே பார்த்தபோது சபேசன் கமரா பூட்ட எடுத்த எமது ஏணியை எடுத்து நிலத்தில் சாய்கிறார். என்னடா, அக்கறையாய் வேலை செய்கிறானே என்றுதான் நான் நினைத்தேன். உள்ளே வந்தவன் கணனியில் எல்லாம் சரியோ எண்டு பாருங்கோ அக்கா என்று 12 கமறாக்களின் வியூ வையும் எனக்குக் காட்டிவிட்டு எனது போனில் பழையதை அழித்துவிட்டு புதிதாகப் போட்டுவிடுறன் என்று கூற. நானும் அட பெடியும் நல்ல பெடிதான். நான் தான் சும்மா ஏசிவிட்டேன் என்று எண்ணி இருவருக்கும் பால்த்தேனீரும் போட்டு குடுத்து அனுப்பிவிட்டு நானும் இணுவிலுக்குச் சென்றுவிட்டேன். இரவில் ஒரு பக்க லைற்றைப் போட்டுவிட்டுத்தான் செல்வேன். அடுத்த நாள் காலை வீட்டுக்கு வரும்போது பின் வீட்டு பிள்ளையை எமது வீட்டுக்கு முன்னால் காண்கிறேன். "என்னக்கா நேற்று லைற்றைப் போட மறந்துபோனியளோ? என்கிறா. இல்லையே நான் போட்டுவிட்டுத்தானே போனேன். சுட்டுப்போட்டுதோ. 1500 ரூபாய் வல்ப். ஒரு வருடம் ஆகேல்லை. கறன்ரி இருக்கு என்றபடி வீட்டுக்குச் சென்று பின்பக்கம் சென்று பார்த்தால் மூன்று வல்ப்புகள் கழற்றப்பட்டிருக்கு. உடனேயே ஆரோ வளவுக்குள்ள வந்திட்டினாமோ இரவு என்ற பதட்டத்துடன் கணவருக்கு போன்செய்து விபரம் கூற, இத்தனை கமரா இருக்கு. ஒருத்தரும் வந்திருக்கமாட்டினம். நீ நேற்று அந்தப் பேடியனுக்கு ஏசின்னி எல்லோ. அவன்தான் கோபத்தில பல்ப்பைக் கழட்டி உங்கினேக்க எறிஞ்சிருப்பான். தேடிப்பார் என்கிறார். உடனே நான் சென்று தேடிப் பார்த்தால் ஒரு இரண்டு மீற்றர் தள்ளி ஒரு பல்ப் இருக்க, மற்றது ஒண்டையும் காணவில்லை. நல்லகாலம் பல்ப் உடையாவோ பழுதடையாவோ இல்லை. புற்களின் மேவிழுந்ததில் தப்பியிருந்தது. அவன் இரண்டை தன் பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு போயிருப்பான். மூண்டாவதை வைக்கஇடமில்லாததால போட்டுட்டுப் போட்டான் என்கிறார். அப்போதுதான் எனக்கு விளங்குகிறது அவன் ஏன் ஏணியைச் சரித்து வைத்தான் என்றும் போனில் பழையதை ஏன் அழித்துவிட்டுப் புதியதைப் போட்டான் என்றும். உடனே கொம்பனிக்கு போன்செய்து நடந்ததைக் கூறி சபேசனிடம் கூறுங்கள் அவன்தான் எடுத்தது என்று எனக்குத் தெரியும் என்று. இதுவரை அப்பிடி ஒன்றும் நடக்கவில்லை அக்கா என்கிறார் அவர். அவன் எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லிக்கொண்டா செய்கிறான் என்று அவர் வாயை அடைக்கிறேன். நானும் வேண்டும் என்று 3 நாட்கள் போன் செய்து வேறு வேறு வேலை செய்யும் ஆண்கள் பெண்கள் என்று அவனைப்பற்றிக் கூறுகிறேன். உங்கள் முதலாளியிடம் கதைக்கவேண்டும். அவருக்கு போன் செய்தால் அவர் போன் நிப்பாட்டி இருக்கு எந்நேரமும். எப்பிடி அவருடன் கதைப்பது என்றதற்கு அவர் கனடா விசாவில் அங்கு சென்றுவிட்டார் அக்கா. இப்போதைக்கு வரமாட்டார் என்கின்றனர் வேலை செய்பவர்கள். கிரிக்கு போன் செய்து கதைத்தபோது சொறி அக்கா. எனக்கு எதுவும் தெரியாது. இனி நானும் நீங்கள் கூப்பிட்டால் வரமுடியாது அக்கா. எனக்கும் கனடா விசா வந்திட்டுது என்கிறாரர்.
  8. அத்தார் ஊருக்குப் போனால் ஐந்தாரைக்கே எழும்பி இருந்து தோட்டம் முழுதும் அலைவார். அவருக்கு எல்லாம் ஓகே
  9. நீங்கள் துணிந்து வாங்குங்கோ. எழுதுற விடயத்தில் உதவி தேவை என்றால் மணிவண்ணனின் போன் இலக்கம் தாறன் 😂 சமதரையில் புல்லு வெட்டுவதற்குத்தான் உந்த மெஷின் சரி. பாத்தி கட்டியிருக்கிற இடத்தில அதை நகர்த்துவது கடினம். உங்களுக்கு தோட்டத்தின் அனுபவம் இல்லை. அதனாலத்தான் உப்பிடிக்க சொல்கிறீர்கள். இந்தியாவில் எல்லாமே இருக்கு. எமது நாட்டில் எல்லாம் இறக்குமதி இல்லை. சிறிய உளவு இயந்திரங்கள், மரம் தடிகளை அரைக்கும் மிஷின் என்று எமக்கும் நிறைய ஐடியா இருக்கு. ஆனால் போய் இருக்காமல் எதையும் புதிதாக வாங்கி ஆரையும் நம்பி வைத்துவிட்டு வரும் எண்ணம் இல்லை.
  10. நீங்கள் கேட்பது உங்கள் பெயரில் உள்ளதை வேறு ஒருவருக்கு மாற்றுவது பற்றியா ? அல்லது அங்கு உள்ளதை உங்கள் பெயருக்கு மாற்றுவது பற்றியா? எனக்கு இலங்கைக் குடியுரிமை இல்லை. யேர்மன் மற்றும் பிரித்தானியக் குடியுரிமை உள்ளதால் மூன்றாவது தரமாட்டார்கள். நான் வீடு வாங்கியது பிரிடிஷ் பாஸ்போட்டை வைத்துத்தான். நிரந்தர வதிவிட உரிமை எடுக்கலாம் என்று கூறுகின்றனர்.( PR ) இம்முறை போய்த்தான் அதுபற்றி கதைக்கவேண்டும்.
  11. அங்குள்ள பெரும் பிரச்சனையே கூலி வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை. ஒரு சிலர் நன்றாக வேலை செய்பவர்களிருந்தாலும் அவர்கள் தாம் தொடர்ந்து செய்யும் வேலையை விட்டுவிட்டு எம்மிடம் வரமாட்டார்கள். புற்கள் பிடுங்குவதுதான் பெரிய வேலை. மற்றப்படி கணவரும் நானுமே சேர்ந்து பல வேலைகளைச் செய்வோம். அந்த வெயில் களைப்புத்தான் என்னை வேலை செய்ய விடாது.ரதியுடன் நான் பிரச்சனைப் படாததற்குக் காரணம் அவர்கள் அங்கேயே நிரந்தரமாக இருப்பவர்கள். வேண்டுமென்றே ஏதாவது செய்ய நினைக்கலாம். வெளிநாட்டில் எமது வீரத்தைக் காட்டுவதுபோல் அங்கு காட்ட முடியாது. வரும் கோபதாபத்தை அடக்கி எம்பாட்டில் வாழ்ந்தால் தொடர்ந்தும் அங்கு இருக்க முடியும் என்று எண்ணுகிறேன். நாம் போய் இருந்துகொண்டு ஒரு நல்ல தோட்டவேலைகளில் ஆர்வமுள்ள நேர்மையானவர்களைத் தேடிப் பிடித்து எம்முடன் வைத்திருக்கவேண்டும் என்ற எண்ணமும் உண்டு. ஆனாலும் ஆரையும் எப்படி நம்புவது என்ற எண்ணமும் பெரிய யோசனைதான்.
  12. யார் உங்களுக்குச் சொன்னது. நான் இங்கு இருந்தபோது NRS தான் வைத்திருந்தேன். அங்கு சென்றபின் வங்கியில் சென்று விசாரித்தபோது நாம் இங்கு வந்து இருக்கப்போகிறோம் என்று கூற உடனேயே எனக்கும் கணவருக்கும் திறந்துவிட்டனர். காணியும் என் பெயரில் தான் இருக்கிறது. காணி வாங்கும்போது காட்டும் வரிதான் வெளிநாட்டினருக்கு இருமடங்கு.
  13. தாராளமாக வெளிநாட்டினர் சொத்து வைத்திருக்கலாம். நாம் வீடோ நிலமோ வாங்கும்போது இருமடங்கு வரி செலுத்தியே வாங்கவேண்டும். மற்றப்படி ஒன்றும் இல்லை. நான் விசாரித்துவிட்டுத்தான் வாங்கினேன்.
  14. உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். உதவி செய்யப்போய் நாம் கஷ்ரப்பட்டு உழைத்த காசையும் இழந்து அவர்கள் அதைப் பயன்படுத்தாமல் எங்களை முட்டாளாக்கிய கதை எத்தனையோ இருக்கு. அதை இன்னொருநாள் எழுதிறன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.