Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதி அரசியல் - அரசியல் அகதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அகதி அரசியல் - அரசியல் அகதிகள்  
தொ. பத்தினாதன்

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்களிப்பு தமிழ்நாட்டுக்கும் உண்டு. தட்டையாக, நெட்டையாக, குட்டையாகப் பல பரிமாணங்களும் உடையன தமிழகப் போராட்டங்கள். அதேபோல் கறுப்பு - வெள்ளை என்று மட்டுமல்லாது பல வர்ணங்களையும் கொண்டது அது.

mknarayananmeetingchandrahasan.jpg

 

இத்தொடர் போராட்டங்களை அவதானிக்கும்போது ஒரு விடயம் தெள்ளத் தெளிவாகத் தென்படுகிறது; அதாவது ஈழத்தமிழருக்காகத் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் ஈழத்தமிழருக்குக் கிடைத்த நன்மைகளை விட போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுக்குத்தான் பல நன்மைகள் கிடைத்துள்ளன.

விதிவிலக்காக எங்கேனும் ஈழத் தமிழருக்கு நன்மைகள் ஏற்படுமாக இருந்தால் அது உலக அதிசயம். ஏற்ற இறக்கத்துடன் வண்டிவண்டியாக எவ்வளவு உயிர்களைக்கொடுத்துப் போராடினாலும் அரசுகள் நினைத்ததுதான் ஈழத்தில் நடந்திருக்கிறது. இந்நிகழ்வுகளின் தொடர் கதையாக நவம்பர் நான்காம் தேதி தி இந்து குழுமம் நடத்திய ‘அகதிகளின் எதிர்காலம்’ கருத்தரங்கில் எம்.கே. நாராயணன் தாக்கப்பட்டார். இது யாருக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதைவிட யார் நடத்துகிறார்கள் என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது. இன்னாரால் இவ்வளவுபேர் இறந்திருக்கிறார்கள் என்ற உணர்வுபூர்வ மனநிலை, பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அதேவேளை, லட்சம்பேர் (தமிழகம்வாழ் ஈழ அகதிகள்) தொடர் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்பது முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தமிழ்த் தேசியர்கள் இவ்வாறான வழிமுறைகளில்

தான் அகதிகளைப் புறக்கணித்து வந்திருக்கிறார்கள்.

அகதிகள் குறித்த கருத்தரங்கை நடத்திய வர்களுக்கு நற்சான்று வழங்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அவர்களின் கடந்தகால நிகழ்வுகளை நாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. அவர்கள் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் அப்பாற்பட்ட வர்கள் அல்ல. பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சம் அகதிகளின் மனநிலையைப் புறக்கணிக்கக்கூடாது என்ற கோணத்தில் இப்பிரச்சனையை அணுகவேண்டும்.

கொலைகாரர்களும் கொலைக்குத் துணைபோனவர்களும் கொள்கை வகுப்பதா என்ற உணர்வுபூர்வமான கேள்வி ஒருபுறமிருக்க, அவர்கள் செய்யக்கூடாது என்றால் அவர்களை எதிர்க்கிற நீங்கள் செய்திருக்கலாமே. அறிவுபூர்வமாக அகதிகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தி ஒரு தீர்மானம்போட்டு மாநில அரசு மூலமாக மத்திய அரசை அணுகி அழுத்தம் கொடுத்திருக்கலாம். போராட்டங்களைச் செய்கிற உணர்வாளர்கள் அகதிகளுக்கான ஆக்கப்பூர்வமான மீள்வாழ்வை ஏன் இத்தனை ஆண்டுகளில் உருவாக்க முன்வரவில்லை?

ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்நிலை, மனநிலைகுறித்து ஆக்கபூர்வமான ஆய்வுகளோ அவற்றை அடிப்படையாக வைத்துப் போராட்டங்களோ விவாதங்களோ நடத்தப்பட்டிருக்கிறதா? இங்கு அறிவைவிட உணர்ச்சி மட்டுமே தொடர்ந்து செயல்பட்டிருக்கிறது. இந்த உணர்ச்சி காலத்திற்கும் நபர்களுக்கும் ஏற்பத்தான் வெளிப்பட்டிருக்கிறது.

கூடிநின்று கோஷம்போடுவதால் என்ன நிகழ்ந்தது? உணர்வெழுச்சியின் உச்சம் 2009; அப்போதே எதுவும் நடந்துவிடாதபோது இனிமேல் என்னதான் நடந்துவிடப்போகிறது? ஈழத்தமிழர்களை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட / படுகிற தமிழகப் போராட்டங்களைத் தொடர்ந்து அவதானிக்கும்போது பார்ப்பன எதிர்ப்பாளர்கள்தான் தொடர்ந்து ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார்கள். ஈழத்தமிழருக்கு ஆதரவாக பார்ப்பனர்கள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தாலும் அது பார்ப்பன எதிர்ப்பாளர்களால் எதிர்க்கப்படுவதும் விமர்சிக் கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருவது கவனிக்கத்தக்கது. தாங்கள் மட்டும்தான் ஈழத்தவர்களுக்கு ஆதரவு என்று யார் இவர்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்தது?

நவம்பர் நான்காம் தேதி சென்னையில் நடந்த ஒட்டுமொத்த நிகழ்வைக் கவனிக்கும்போது, ஈழத்தமிழர் விவகாரம் எந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக அணுகப்பட்டதோ அதே அளவு பார்ப்பன எதிர்ப்பு என்ற அரசியல் நோக்கம் சார்ந்தும் வெளிப்பட்டிருக்கிறது. ஆக இவர்களின் தொடர்ச்சியான நிகழ்வான உள்ளூர் பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்கு ஈழத்தமிழ் அகதிகளை ஏன் பலிகடா ஆக்குகிறார்கள் என்று அகதிகளான நாங்கள் கேட்பது நியாயம்தானே?

உள்ளூரில் அரசியல் செய்யவும் அரசியல் கருத்துகளை காப்பாற்றிக்கொள்ளவும் ஈழத்தமிழன் இரத்தம்தான் வேண்டும். இவர்களால் எதிர்க்கப்படும் பார்ப்பனரும் யாழ்ப்பாணத்து வேளாளரும் பண்பளவில் அண்ணன், தம்பி போன்றவர்கள். இங்குள்ள பார்ப்பனரை எதிர்ப்பவர்களின் யாழ்ப்பாணத்து சைவ வேளாளர்கள் பற்றிய நிலைப்பாடுதான் என்ன? தி இந்து நிகழ்வில் கலந்துகொண்ட சைவ வேளாளரான சந்திரஹாசன் பற்றி வாய்திறக்காத மர்மம்தான் என்ன?

இன்னுமொரு கேள்வியும் உண்டு; அகதிகள் குறித்த இதே நிகழ்வைப் பார்ப்பனர்கள் நடத்தாமல் அதிகாரம்பெற்ற வலிமையான தமிழக இடைநிலைச்சாதிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராகக் களத்தில் இறங்குவீர்களா? ஆக, யாருக்காக என்ன பேசுகிறார்கள் என்பதைவிட யார் பேசுகிறார்கள் என்பது மட்டும்தான் கவனத்தில் கொள்ளப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழனின் மனநிலை ஊடாக சாதிப்பகைதான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற முடிவுதவிர வேறு முடிவுகளுக்கு வரமுடியவில்லை. ‘ஈழத்தமிழர் நலனுக்காக’ என்பது வெற்று வேஷம். இந்தியநலனுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் பலியாடுகள் என்றால் தமிழத்தில் உள்ளவர்களின் சாதிய மனநிலைக்குப் பலியாடுகள் ஒரு லட்சம் ஈழ அகதிகள்.

பார்ப்பன எதிர்ப்பாளர்களாக இருக்கும் இவர்கள் பூர்வீகத் தமிழர்களை அதிகாரம் செய்யும் யாழ்ப்பாணத்து சைவ வேளாளர்களை விமர்சனமின்றி ஆதரிப்பதும் அவர்களுக்காகப் போராடுவதும் முரண் இல்லையா? தமிழக தொப்புள்கொடி உறவுகளான (மலையகமக்கள்) இந்திய வம்சாவளித் தமிழர்களைத் தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என்று ஒதுக்கியவர்கள் இந்த யாழ்ப்பாணத்து சாதியவாதிகள். இந்த யாழ்ப்பாணத்து வேளாளர்களைப் போராட்டக்காரர்கள் ஆதரிப்பதில் முரண் ஏதும் இல்லை. மலையகத் தமிழர்களுக்காக இவர்கள் குரல் கொடுக்காதது ஏன்? அவர்களில் பெரும்பான்மையினர் தலித்துகள் என்பதாலா? மலையக மக்களுக்குப் பிரச்சனை வந்தபோது சைவ வேளாளர்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததுக்கு முக்கிய காரணம் சாதியே.

அதுபோல் இன்று தமிழகத்திலுள்ள அகதிகள் கேட்பாரற்று இருப்பதற்கும் முக்கிய காரணம் சாதி. ஆக, இங்கு இனம் - மொழி என்பது வெற்றுக் கோஷம்; சாதிப் பெரும்பான்மைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதுதான் உண்மை.

பார்ப்பனர்களுக்கு எதிராகக் கிளம்பிய பெரியார் யாழ்ப்பாணத்து சைவ வேளாளரை எதிர்க்கவில்லையா? பெரியார் பார்ப்பனர்களுக்கு எதிராகப் பேசியதை மட்டும் கூறும் இவர்கள் பெரியார் பேசியதை எல்லாம் நினைவில் நிறுத்தியுள்ளார்களா? விமர்சனப் பண்புடனேயே நிலவும் அமைப்புக்குள் இப்போதைக்கு எது சாத்தியமோ அதை அகதிகளை நோக்கித் திருப்ப வேண்டிய நிலை இருக்கிறது. அதை அகதிகள் புரிந்துகொள்ளுமளவுக்கு இங்கிருப்போர் புரிந்துகொள்வதில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தது தமிழக அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக அரசு சார்பாக ஒருவரை நியமிக்கும்படி மத்திய அரசு கேட்டது; அதற்குத் தமிழக அரசு வடக்கு கிழக்கில் நிலைமை சீராகவில்லை என்று காரணம்காட்டிப் பேச்சுவார்த்தையை ஒத்திவைக்கும்படிக் கேட்டுக்கொண்டது. காரணம் அப்போது தமிழகஅரசு புலனாய்வுத்துறைமூலம் முகாமை ஆய்வு செய்தது; பெரும்பாலானவர்கள் இலங்கை செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை.

அதற்குக் காரணம் மைத்திரிபால சிறிசேன அப்போதுதான் அதிபராகி இருந்தார். அடுத்துப் பிரதமர் தேர்தல் நடக்க இருந்தது.

தற்போது இலங்கையில் தேனும் பாலும் ஓடவில்லை. ஆனாலும் கால்நூற்றாண்டு கடந்தநிலையில் இனிமேல் இலங்கையில் எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படப்போவதாகத் தெரியவில்லை. இங்கு இந்த வதைமுகாம்களில் கிடந்துவாடுவதைவிட நாட்டுக்குத் திரும்பலாம் என்ற மனநிலை பெரும்பாலான அகதிகளுக்கு வர ஆரம்பித்திருக்கிறது.

ஆனால் வெறுங்கையோடு போகமுடியாது என்பதுதான் அகதிகளுக்கு இன்று நாடுதிரும்பப் பெரும் தடையாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் இங்கு வாழ்ந்தவர்களுக்குப் பிள்ளை களின் கல்வி தொடங்கி பல நடை முறைசார்ந்த சிக்கல்கள் இருக்கின்றன. இன்று ஹிழிபிசிஸி இல் ஊருக்குப் போகப் பதிவுசெய்தால் வீடுவரை அவர்கள் செலவில் கொண்டு போய்விடுவார்கள். அதற்கு அங்கு வீடு இருக்க வேண்டுமல்லவா? விமானத்தில் ஒரு நபருக்கு அதிக பட்சமாக 30 கிலோவரைதான் கொண்டு செல்ல அனுமதியுண்டு. போட்டிருக்கிற துணிமணிகளுடன் ஊரில்போய் அவர்கள் என்ன செய்வது? சமைத்து சாப்பிட பாத்திரம்கூடக் கொண்டு செல்லமுடியாத நிலை. தனிநபர்கள் குடும்பமான நிலையில் எங்கு போகமுடியும்? “15 வயதில் ஊரிலிருந்து வந்தேன். இன்றைக்கு 40 வயது; குடும்பம் இருக்கிறது. வரும்போது இருந்த அம்மாவும் இல்லை, நான் எங்கு போவேன்” என்கிறார் நண்பரொருவர்.

மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி இலங்கை அரசும் சேர்ந்துதான் இங்குள்ள அகதிகளுக்குக் குறைந்தபட்ச நம்பிக்கையையும் வாழ்க்கையையும் ஏற்படுத்தமுடியும். அதுதவிர்த்து எந்தக் கட்சியாலும் அமைப்பாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆனால் தொடர் கண்காணிப்புடன் இந்தியா தமிழக அரசுக்கு அழுத்தம் தருவதும் இப்போதைக்கு அகதிகளுக்கு செய்யும் பேருதவி.

ஐரோப்பாவில் உள்ளவர்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள். இவர்கள்போல் அகதிகளால் சுதந்திரமாகப் பேசவே முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டும். கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்ட சந்திரஹாசனையே சுதந்திரமாகப் பேச அனுமதிக்கவில்லை என்பது நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள். மத்திய அரசு நிலைப்பாட்டின் வேறு ஒரு வடிவம்தான் அன்றைய நிகழ்வு. இந்த நிகழ்வு அகதிகளுக்குச் சாதகமாக அமையுமா என்று அறிவுஜீவிகள் ஆய்வு செய்வது அகதிகளுக்குச் செய்யும் பேருதவி.

உணர்வுபூர்வமான எந்த நிகழ்வும் பலனைத் தராது. அது மேலும் சிக்கலை உருவாக்கும்; வாய்பேச முடியாமல் வாழவும் முடியாமல் ஊருக்குச் செல்லவும் முடியாமல் இக்கட்டில் நிற்கும் அகதிகளை வைத்து நடக்கும் நிகழ்வுகளை ஒரு அகதியான என்னால் ஏற்கமுடியவில்லை. இந்த ‘அகதி’ என்ற அவப் பெயரிலிருந்தும் அகதிமுகாம் வாழ்க்கையிலிருந்தும் விடுபடத் துடிக்கும் அகதிகளுக்கு யார் நல்லது செய்தால் என்ன? நல்லது நடந்தால் அந்தச் சமூகம் விழிப்புப் பெற உதவியாகவே இருக்கும்.

 

http://www.kalachuvadu.com/issue-192/page76.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.