Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊழலை எதிர்த்துப் போராடுவதில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் : ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா

12 JAN, 2024 | 07:43 PM
image

ஊழலை எதிர்த்துப் போராடுவதில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு (CIABOC), இப்போது ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (ACA) கீழ் அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

அண்மையில் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவிற்கு நீதிபதி நீல் இத்தாவல தலைமை தாங்கியுள்ள நிலையில், முறையான ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிய மக்கள் போராட்டம் (அரகலய) ஆழமாக வேரூன்றிய ஊழலும் ஆட்சிசார் பலவீனங்களும் இலங்கையில் முடங்கச் செய்யும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன என்பதை பொதுமக்கள் உணர்ந்ததை எடுத்துக்காட்டியது. 

இந்தப் பிரச்சினைகளை நல்ல மனதுடன் தீர்ப்பதற்கான அரசின் விருப்பம் குறித்து பரவலான ஏமாற்றமும் விரக்தியும் நிலவுகிறது. 

சிவில் சமூகம் மற்றும் சர்வதேச நன்கொடை நிறுவனங்கள், குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் (IMF), ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் உண்மையான முன்னேற்றம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முக்கியமானது என்பதை வலியுறுத்துகின்றன. 

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பு வரையறைகள், அதன் ஆட்சிசார் குறைநிறைகளைக் கண்டறியும் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் இலங்கையின் ஊழலுக்கு எதிரான தோற்றப்பாடு பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கையின் பரிந்துரைகள் என்பன CIABOC ஐ வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

CIABOC ஆனது, பெரிய ஊழல் வழக்குகளைக் குறிவைத்து, சிறிய குற்றச் செயல்களுக்கு அப்பால் சென்று பெரிய குற்றவாளிகளைத் தொடர்வதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீளப் பெற வேண்டியதன் உடனடித் தேவையை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) வலியுறுத்துகிறது. 

குறிப்பாக, பெரிய அளவிலான ஊழல் சம்பவங்களில், பொறுப்புக்கூறலை நிறுவுவது, விசாரணைக்கு வருபவர்களையும், சாட்சிகளையும் அச்சமின்றி முன்வர ஊக்குவிக்கும்.

CIABOC ஆனது முன்னேற்றமடைய, அது சொத்து அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் அணுகலை துரிதப்படுத்த வேண்டும், முக்கிய ஊழல் வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும், தனியார் துறை லஞ்சம் மற்றும் விளையாட்டு தொடர்பான ஊழலைக் கையாள்வதற்கான அதன் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும், மேலும் அதன் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாடு மற்றும் முன்னேற்றத்தை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இலங்கையில் பரவலாக காணப்படும் ஊழல் பிரச்சினையின் அளவைக் கருத்தில் கொண்டு, ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு தொலைநோக்கு, அச்சமற்ற தலைமைத்துவத்தை வழங்குமாறு புதிதாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் TISL வேண்டிக் கொள்கிறது.

நாட்டின் மீட்புப் பாதையில் இந்தத் தீர்க்கமான தருணத்தில் CIABOC க்கு தேவையான நிதி மற்றும் செயல்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஆதரவை வழங்குமாறு TISL அரசாங்கத்திடம் கோருகிறது.

https://www.virakesari.lk/article/173821

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிறுவனம் உண்மையாகவே லஞ்சம் ஊழலுக்கு எதிராக போராடுகின்றது. IMF உடனும் இது பற்றி விவாதித்தார்கள். அவர்களே இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.

 லஞ்ச ஊழல் ஆணைக்குழு இருந்தாலும் செயட்பாடு பூச்சியம்தான். இலங்கைஅரசும் அவைகளை பெயருக்குத்தான் வைத்திருக்குதே தவிர இயங்குவதட்கு அனுமதிப்பதில்லை.

ரணில், சஜித், ஜேவிபி யார் வந்தாலும் இலங்கையில் இதே நிலைமைதான். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.