Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழரை கொன்று குவிக்கும் சிங்கள பேரினவாதத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

Featured Replies

ஈழத்தமிழரை கொன்று குவிக்கும் சிங்கள பேரினவாதத்தை கண்டித்து தூத்துக்குடி பெரியார் திராவிடர்கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

இன்று(22.10.2008. ) மாலை அறிவன் கிழமை மாலை 4.00 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் தி.க. மாவட்டத்தலைவர் தோழர் கோ.அ.குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச்செயலாளர் தோழர் இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன் ,பெரியார் தி.க.வின் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வே.பால்ராசு , தலித்திய சமூக நீதி பேரவையின் தோழர் தவராசு பாண்டியன் , புரட்சிப்புலிகள் தோழர் கிட்டுபாலு ஆகியோர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து சிறப்புரையாக கிறித்துவர் வாழ்வுரிமை இயக்கத்தின் அருட்தந்தை ஜார்ஜ் வில்பிரட் சிறப்பாக தனது கண்டனத்தினை பதிவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தின் விளக்கவுரையினை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் சிங்கள அரசின் சிங்கள வெறியினையும் ஜே.வி.பி. யின் தோழமை அமைப்பான இந்திய மார்க்சிசுடு கம்யூனிசுடு கட்சியின் பார்ப்பன முகத்தையும் இந்து இராம் போன்ற சிங்கள கைக்கூலிகளைப்பற்றியும், இராசீவ் காந்தியின் மர்ம மரணத்தில் ஜெயின் கமிசன் அறிக்கையில் வந்த சந்திராசாமி மற்றும் அப்பொழுது நடைபெற்ற அரசியல் சதிகளைப்பற்றியும் , அரசியல் பிரிவு தலைவர் மாவீரர் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களை இந்திய இராணுவமும் பாகிசுதான் இராணுவமும் இணைந்து கொன்றதைப்பற்றியும் , இங்குள்ள காங்கிரசு கட்சியின் மனிதநேயமற்ற செயலைப்பற்றியும் மக்களுக்கு தெளிவுபட விளக்கிகூறினார்.

இவ்வார்ப்பாட்டத்தினை பெரியார் தி.க. தோழர்கள் மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு, பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன்,மாவட்ட துணைச்செய்லாளர் தோழர் க.மதன், நகரச்செயலாளர் பால்.அறிவழகன் , தோழர் அறிவுபித்தன் மற்றும் மாணவரணி தோழர் வ.அகரன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் தலைமைக்கழக உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன், நெல்லை இராசா, நெல்லை அரியமுத்து . ஆதித்தமிழர் பேரவையின் தோழர்கள் மாநில இளந்தமிழரணி தலைவர் தோழர் சு.க.சங்கர், அருந்ததியரசு, விடுதலைவீரன் , வீரக்கவுதம் , கிறித்துவர் வாழ்வுரிமை இயக்கத்தைச்சேர்ந்த வெனி.இளங்குமரன் , அருதந்தை சுந்தரிமைந்தன், அந்தன் , ஜெரோம் , அன்சல் புரட்சிப்புலிகள் தோழர்கள் பிரபாகரன் , கணேசு, பாண்டிராச், மாவட்ட ஒருங்கிணைபாளர் தாசு மற்றும் பொதுமக்களும் தமிழின ஆதரவாளர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி ஈழத்தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்ட முழக்கம்:

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்

பெரியார் தி.க. ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழரை கொன்று குவிக்கும்

சிங்கள அரசைக்கண்டித்து

கண்டன ஆர்ப்பாட்டம்

சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கும்

இந்திய அரசைக்கண்டித்து

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

ஈழத்தமிழரை கொன்று குவிக்கும்

சிங்கள அரசை கண்டிக்கிறோம்

சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கும்

இந்திய அரசைக்கண்டிக்கிறோம்

இந்திய அரசே இந்திய அரசே

ஈழத்தமிழரை கொன்று குவிக்கும்

சிங்கள அரசுக்கு

ஆயுத உதவி செய்யாதே

அனுமதியோம் அனுமதியோம்

எங்கள் வரிப்பணத்திலே

ஈழத்தமிழரை கொல்வதற்கு

இனியும் நாங்கள் அனுமதியோம்

இந்திய இராணுவமா?

சிங்களவனுக்கு கூலிப்படையா?

திரும்ப பெறு திரும்ப பெறு

சிங்களவனுக்கு அளித்துவரும்

இராணுவ உதவியை திரும்பபெறு

சிங்களவன் உனக்கு பங்காளியா?

தமிழன் என்ன பகையாளியா?

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

சிங்கள கைக்கூலி

இந்து இராமை கண்டிக்கிறோம்

தனிநாடு கேட்பது ஈழத்தமிழனின் உரிமை

அதை ஆதரிக்க வேண்டியது தமிழனின் கடமை

இடையில் வந்து தடைகள் போட

இந்து இராம் யாரடா?

எங்கள் இரத்தம் எங்கள் இரத்தம்

ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்

ஈழத்தமிழரை காப்பாற்ற

உணவு வழங்கு மருந்து வழங்கு

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு

தமிழக மீனவர்களை காப்பாற்ற

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு

மீட்டெடு மீட்டெடு

கச்சத்தீவை மீட்டெடு

தடையை நீக்கு தடையை நீக்கு

விடுதலைப்புலிகள் மீதான

தடையை நீக்கு தடையை நீக்கு

வெல்லட்டும் வெல்லட்டும்

ஈழத்தமிழர் போராட்டம்

வெல்லட்டும் வெல்லட்டும்

மலரட்டும் மலரட்டும்

தமிழீழம் மலரட்டும்

http://www.tamilseythi.com/tamilnaadu/peri...2008-10-22.html

- தமிழக நிருபர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.