Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமான் - சேரன் - அமீர் கைது செய்யப்படலாம் - திரையுலகம் இவர்களின் பின்னால் திரள வேண்டும் - சத்தியராஜ்

Featured Replies

தமிழ் திரைப்பட இயக்குனர்களான சீமான், சேரன் மற்றும் அமீர் ஆகியோரை தமிழக காவற்துறையினர் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தமிழ் திரையுலகின், ஈழ தமிழர்களுக்கு ஆதரவான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்,

இந்த இயக்குனர்கள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசியதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. அத்துடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைதுசெய்யப்பட்டதை அடுத்து, சீமான், சேரன், அமீர் ஆகியோரும் கைதுசெய்யப்படலாம் என தமிழக காவற்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர்களை கைதுசெய்ய முடியுமா என காவற்துறையினர் சட்டஆலோசனைகளை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

அதேநேரம் முழு தமிழ் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் உரையாற்றிய அவர், தனது வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்று காரணமாக தன்னால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய பேரணியில் கலந்துகொள்ள முடியாது போனதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை தான் வரவேற்பதாகவும் முதல்வர் கூறியது போல், போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்க அருகதையற்றவர்கள் என சத்தியராஜ் கூறியுள்ளார் தான் இதனை கட்சி சார்பாகவோ அல்லது வேறு எவருக்கும் வால்பிடிப்பதற்காகவும் கூறவில்லை எனவும் தமிழன் என்ற உணர்வோடு தெரிவிப்பதாக சத்தியராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இன பேதமின்றி அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இயக்குனர் அமீர், சீமானை அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுகின்றனர். இவர்கள் பேசியது சரியா, தவறா என தான் கூறவில்லை எனவும் இந்த விடயத்தில் முழுத் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என சத்தியராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். ஏனெனில் தனக்கு தனிப்பட்ட முறையில் இதுபோன்ற பிரச்சினை எற்பட்ட போது திரையுலகம் தன்பின்னால் நிற்கவில்லை.

திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும் தான் தனக்கு உதவி செய்ததாகவும் ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் அமீரும் சீமானும் இவ்வாறு பேசி உள்ளனர். எனவே இவர்கள் பின்னால் திரையுலகம் நிற்க வேண்டும் எனவும் சத்தியராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை மனிதச் சங்கிலி போராட்டம்:

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் சார்பில் நாளை சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் (ஒக்21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மனிதச் சங்கிலி போராட்டம், சென்னையில் பெய்த கடும்மழை காரணமாக 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு எதிரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு மனிதச் சங்கிலி போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதி மனிதச் சங்கிலியை ஆரம்பித்து வைத்து, நிறைவடையும் வரை அதனை பார்வையிட உள்ளார்.

இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் அதிமுக மதிமுக, தேமுதிக பாஜக ஆகிய கட்சிகளைத் தவிர, தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்கின்றன. மேலும் திரையுலகத்தினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் எராளமான பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன

இலங்கை‌த் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பேசிய விவகாரத்தில் இயக்குனர்கள் சீமா‌ன், அ‌‌மீரை தமிழ் திரையுலகம் விட்டுக்கொடுக்கக் கூடாது எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் இவரு‌க்கு‌ம் துணை ‌நி‌ற்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் நடிகர் சத்யராஜ் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற 'லாடம்' படத்தின் பாடல் வெளி‌யீ‌ட்டு விழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்டு பே‌சிய நடிக‌ர் ‌ச‌த்யரா‌‌ஜ், அ‌ண்மை‌யி‌ல் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பது பற்றி ‌சில‌ர் பேசி வருகின்றனர்.

இலங்கை‌த் தமிழர்களுக்காக சென்னையில் நாளை மனித சங்கிலி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தைதான் நான் வரவேற்கிறேன். அவர் சொன்னது போல் இப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழக‌த்‌தி‌ல் இருக்க லாயக்கற்றவர்கள்.

இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேச‌வில்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் கட்சி, ஜாதி,மத, இன பாகுபாடின்றி அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

இப்போது ஒட்டுமொத்தமாக இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோரை அரசியல் கட்சிகள் ஓரம்கட்டி வருகின்றனர். அவர்கள் பேசியது பற்றி சரி, தவறு என்று பேசவில்லை. ஆனால், இந்த விடயத்‌தில் ஒட்டுமொத்த திரையுலகமும் இவர்கள் இருவருக்கும் ஆதரவு தெரிவித்து குரல் கொடுக்க வேண்டும்.

ஏனென்றால் எனக்கு இதுபோன்று இரண்டு முறை தனிப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட போது திரையுலகம் எனக்குப் பின்னால் நிற்கவில்லை. திராவிடர் கழகம், விடுதலைச்சிறுத்தைகள் போன்ற கட்சிகள்தான் எனக்கு உதவியது. ஈழத் தமிழர்கள் நலனுக்காக அ‌மீரு‌ம், ‌சீமானு‌ம் பே‌சியு‌ள்ளன‌ர். எனவே அவ‌ர்க‌ள் ‌பி‌ன்னால் நா‌ம் அனைவரு‌ம் ‌‌‌நி‌ற்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ச‌த்யரா‌‌‌‌ஜ் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

http://www.tamilseythi.com/tamilnaadu/sath...2008-10-23.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.