Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞரை ஆதரித்துப் பேசியமையால் சந்திரசேகரன் மீது மஹிந்த பாச்சல்

Featured Replies

ஈழத்தமிழர் இனப்பிரச்சனை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றுப் பேசிய மலையக மக்கள் முன்னனி தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் அதற்காக மஹிந்தனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

அமைச்சரை நேற்று நேரில் அழைத்து அவரிடம் காட்டமாக கண்டிப்பாக பேசிய மஹிந்த பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை அவர் மீற முடியாது என்றும் வலியுறுத்தினார்.

சுமார் இரண்டு மணி நேரம் இடம் பெற்ற இச் சந்திப்பின் போது தமது நிலைப்பாட்டிற்கான நியாயங்களை சந்திரசேகரன் மஹிந்தவிற்கு விளக்கினார் என்றும் தெரியவந்துள்ளது.

இலங்கைத் தமிழர் தாயகத்துக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி முதல்வா கருணாநிதி தலைமையில் தமிழ் நாட்டில் கிளர்தெழுந்துள்ள எழுச்சியை வரவேற்கும் வித்திலும் ஈழத் தமிழர் பிரச்சினையை ஒட்டி புதுடில்லி தெரிவிக்கும் கருத்துக்களை கொழும்புக்கு இணக்கமில்லாத நிலையில், புது டில்லியின் போக்கை வரவேற்றும் அமைச்சர் சந்திசேகரன் வெளியிட்ட கருத்துக்களே பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றன.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி, அவர் தம்பாட்டில் அமைச்சரவையின் நிலைப்பாட்டுக்கும் அரசின் நிலைப்பாட்டுக்கும் மாறாக கருத்து வெளியிட்டமை பெரும் தவறு என்று சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் மற்றும் பௌத்த சிங்களத் தீவிர போக்குடைய அரசியல் தலைவர்களும் சீறி எழுந்தனர்.

இந்த சர்ச்சை கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றிலும் பெரும் களேபரத்தையும் சூடான வாதப் பிரதிவாதங்களையும் கிளப்பியிருந்தது என்பது தெரிந்ததே.

நேற்று முன்தினம் இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் சூடு பிடித்தது. அக்கூட்டத்துக்கு அமைச்சர் சந்திரசேகரனின் செயற்பாட்டுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்றும், மஹிந்த இவ்விடயத்;தில் சூடான கருத்துக்களை அங்கு வெளியிட்டார் என்றும் தெரியவருகின்றது.

இவ்விவகாரம் குறித்து அமைச்சர் சந்திரசேகரனை அழைத்துத் தாம் நேரில் விளக்கம் கோருவார் என மஹிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தாh.

அதனடிப்படையில் சந்திரசேகரன் நேற்று மஹிந்தவால் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டார். அங்கு மஹிந்த காட்டமாகக் கருத்துக்களைக் குறிப்பட்டார் என்று கூறப்படுகின்றது.

எனினும், தாம் தமது மக்கள் கருத்துக்களை மஹிந்தவிற்கு தெளிவாக எடுத்துரைத்தார் என்று சந்திரசேகரன் கூறிப்பிட்டார் என கூறப்படுகிறது.

'நான் எனது அடிமனதில் இருந்த கருத்துக்களையே வெளிப்படுத்தினேன் என்பதை மஹிந்தவிற்கு தெளிவுபடுத்தினேன்'.

'தமிழ் மக்களின் உணர்வுகளை மறைக்காமல் வெளியிட வேண்டிய கடப்பாடு எனக்கும் ஏனைய தமிழத் தலைவர்களுக்கும் உள்ளது என்று நான் குறிப்பிட்டேன்.'

'தமிழ் மக்களுக்காக தொலைநோக்கோடு சிந்தித்துக் கருமமாற்றும் பொறுப்பு எனக்கு உண்டு. இவ்விடயத்தில் நாம் வெளிப்படுத்திய கருத்து என்னுடைய தனிப்பட நிலைபாடு அல்ல. அது மலையக மக்கள் முன்னணியினதும் எமது மக்களினதும் கருத்தே. மலையக மக்கள் முன்னணி உருவாக்கபட்ட காலத்திலிருந்தே வடக்கு கிழக்கு மக்களின் அரசில் போராட்டத்தை நாம் ஆதரித்து வந்திருக்கின்றோம். அதை நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை அரசும் ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

'அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறுவது எனது நோக்கமல்ல. ஆனால் எனது மக்களின் தமிழ் சமூகத்தின் அடிமனக் கருத்துணர்வை மூடிவைக்க நான் துணை போக முடியாது என்ற கட்டாயத்தால் எனது கருத்து நிலப்hபட்டை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருந்தது என நான் மஹிந்தவுக்கு விளக்கினேன்.' என்றார் சன்திரசேகரன்.

அமைச்சரின் கருத்துக்ளை உள்வாங்கிய மஹிந்த எதிர்காலத்தில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறாமல் நடந்து கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தினார். கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தால் முதலில் அது குறித்து தம்முடன் நேரில் வந்து உரையாடும் படியும் அதன் பின்னர் அப்பிரச்சினையை பகிரங்க மேடையில் பேசுவது குறித்துத் தீர்மானிக்கலாம் என்றும மஹிந்த அமைச்சருக்கு எடுத்துரைத்தார் என்றும் தெரியவந்துள்ளது.

நன்றி சுடா ஒளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர் இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றுப் பேசிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் அதற்காக ஜனாதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டினார்.

அமைச்சர் சந்திரசேகரனை நேற்று நேரில் அழைத்து அவரிடம் காட்டமாக - கண்டிப்பாக - பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை அவர் மீற முடியாது என்றும் வலியுறுத்தினார்.

சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது தமது நிலைப்பாட்டிற்கான நியாயங்களை அமைச்சர் சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு விளக்கினார் என்றும் தெரியவந்தது.

இலங்கைத் தமிழர் தயாகத்துக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் நாட்டில் கிளர்ந்தெழுந்துள்ள எழுச்சியை வரவேற்கும் விதத்திலும் -

ஈழத் தமிழர் பிரச்சினையை ஒட்டி புதுடில்லி தெரிவிக்கும் கருத்துகள் கொழும்புக்கு இணக்கமில்லாத நிலையில், புதுடில்லியின் போக்கை வரவேற்றும் -

அமைச்சர் சந்திரசேகரன் வெளியிட்ட கருத்துக்கள பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றன.

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறி, அவர் தம்பாட்டில் - அமைச்சரவையின் நிலைப்பாட்டுக்கும் அரசின் நிலைப்பாட்டுக்கும் மாறாக - கருத்து வெளியிட்டமை பெரும் தவறு என்று சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் மற்றும் பௌத்த - சிங்களத் தீவிரப் போக்குடைய அரசியல் தலைவர்களும் சீறி எழுந்தனர்.

இந்த சர்ச்சை கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றிலும் பெரும் களேபரத்தையும் சுடான வாதப் பிரதிவாதங்களையும் கிளப்பியிருந்தது என்பது தெரிந்ததே.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் சூடு பிடித்தது. அக்கூட்டத்துக்கு அமைச்சர் சந்திரசேகரன் சமூகம் தரவில்லை. எனினும் பல அமைச்சர்கள், சந்திரசேகரனின் செயற்பாட்டுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்றும், ஜனாதிபதியும் இவ்விடயத்தில் சூடான கருத்துக்களை அங்கு வெளியிட்டார் என்றும் தெரியவருகின்றது.

இவ்விவகாரம் குறித்து அமைச்சர் சந்திரசேகரனை அழைத்துத் தாம் நேரில் விளக்கம் கோருவார் என ஜனாதிபதி அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார் என்றும் தெரிகின்றது.

அதன்படி அமைச்சர் சந்திரசேகரன் நேற்று ஜனாதிபதியால் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டார். அங்கு ஜனாதிபதி காட்டமாகக் கருத்துக்களைக் குறிப்பிட்டார் என்று கூறப்படுகின்றது.

எனினும் தாம், தமது மக்கள் கருத்துக்களை ஜனாதிபதிக்குத் தெளிவாக எடுத்துரைத்தார் என்று சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

"நான் எனது அடிமனதில் இருந்த கருத்துக்களையே வெளிப்படுத்தினேன் என்பதை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தினேன்.

"தமிழ் மக்களின் உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்கும் ஏனைய தமிழ்த் தலைவர்களுக்கும் உள்ளது என்று நான் குறிப்பிட்டேன்.

"தமிழ் மக்களுக்காக தொலைநோக்கோடு சிந்தித்துக் கருமமாற்றும் பொறுப்பு எனக்கு உண்டு. இவ்விடயத்தில் நாம் வெளிப்படுத்திய கருத்து என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல. அது மலையக மக்கள் முன்னணியினதும் எமது மக்களினதும் கருத்தே. மலையக மக்கள் முன்னணி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே வடக்கு - கிழக்கு மக்களின் அரசியல் போராட்டத்தை நாம் ஆதரித்து வந்திருக்கின்றோம். அதை நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை அரசும் ஏனையோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

"அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறுவது எனது நோக்கமல்ல. ஆனால் எனது மக்களின் - தமிழ் சமூகத்தின் - அடிமனக் கருத்துணர்வை மூடிவைக்க நான் துணைபோக முடியாது என்ற கட்டாயத்தால் எனது கருத்து நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருந்தது என நான் ஜனாதிபதிக்கு விளக்கினேன்." - என்றார் சந்திரசேகரன்.

அமைச்சர் சந்திரசேகரனின் கருத்துக்களை உள்வாங்கிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறாமல் நடந்து கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தினார்.

கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தால் முதலில் அதுகுறித்து தம்முடன் நேரில் வந்து உரையாடும் படியும் -

அதன் பின்னர் அப்பிரச்சினையை பகிரங்க மேடையில் பேசுவது குறித்துத் தீர்மானிக்கலாம் என்றும் -

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் சந்திரசேகரனிடம் எடுத்துரைத்தார் எனவும் தெரியவந்தது.

uthayan.com

  • தொடங்கியவர்

வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஆராய்ந்து, அதில் தலையிடுமாறு வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த மஹிந்த தீர்மானித்துள்ளார். தமது உரை தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரனிடம் விசாரணைகளை மேற்கொள்ள, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமையில் ஜனாதிபதி குழுவொன்றை அமைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக்குழுவில் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். தற்போது வெளிநாடு சென்றுள்ள பிரதமர் நாடு திரும்பியதும், அமைச்சர் சந்திரசேகரனிடம் விசாரணைகளை நடத்தி, ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்

நன்றி : www.globaltamilnews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.