Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹஷோன் பலகாய (பிசாசுப்படை) எச்சரிக்கைக் கடிதம் - பாராளுமன்றில் வாசிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பு:

Featured Replies

ஆட்கடத்தல் காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் மஹஷோன் பலகாய (பிசாசுப்படை) எனும் அமைப்பு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் வியாழனன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் கடிதங்கள் தனிப்பட்ட முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது எனச் சபாநாயகரிடம் முறையிட்டுள்ளனர்.

எனினும் இக்கடிதத்தை சபையில் வாசிக்க அரச தரப்பினர் அனுமதியளிக்க மறுத்ததுடன் சபாநாயகரும் அனுமதியளிக்க மறுத்து விட்டார். வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சபாநாயகர் தினப்பணிகளை ஆரம்பிக்க முற்பட்ட போது குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியல்ல ஆட்கடத்தல், காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசும் தங்களது எம்பிக்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் பிசாசுபடையணி என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக்கூறி அது தொடர்பான அறிக்கை ஒன்றை வாசிக்க அனுமதி கோரினார்.

எனினும் தனக்கு அது பற்றி அறியத்தரப்படாமையால் அனுமதிக்க முடியாதென சபாநாயகர் மறுக்கவே இது முக்கியமான பிரச்சினை என்றும் எம்பிக்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் வாசிக்க அனுமதி வழங்கினால் விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் சபாநாயகருக்கு முன்னறிவித்தலின்றி சபைக்கு அறிக்கை ஒன்றை விடுக்க கடும் எதிர்ப்பு வெளியிட்ட சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சிறப்புரிமைப் பிரச்சினையென்றால் மட்டுமே இதற்கு இடமளிக்க முடியுமென்றும் இல்லாவிட்டால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவான சபை நடவடிக்கைகளை மீறுவதாக அமைந்து விடுவதோடு நினைத்த போதெல்லாம் சபாநாயகருக்கு முன்னறிவித்தலின்றி அறிக்கை விடுவது சம்பிரதாயமாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரின் கருத்தை சபாநாயகர் ஆமோதித்தார். அச்சமயம் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விகிரமசிங்க அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வாவை நோக்கி இவர் ஏன் குளம்புகிறார்? இவரும் பிசாசுப்படையணியைச் சேர்ந்தவரா எனக் கேள்வியெழுப்பினார்.

http://www.globaltamilnews.com/tamil_news....=1476&cat=1

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்னடா படை ஆனால் என்ன தங்கட சொந்தப்பெயரைத்தான் வைச்சிருக்கிறாங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.