Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எழுச்சி கொள்ளும் தமிழகமும் இந்திய மத்திய அரசும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுச்சி கொள்ளும் தமிழகமும் இந்திய மத்திய அரசும்

- தாரகா -

சமீப நாட்களாக தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கான ஆதரவுச் செயற்பாடுகள் முன்னர் எப்போதும் இல்லாதளவிற்கு அதிகரித்துள்ளது.

இதுவரை தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மற்றும் அதற்கான அமைப்புக்கள் சார்ந்த வட்டத்திற்குள் மட்டுமே அதிகம் வெளிப்பட்ட ஈழ ஆதரவு நிலைப்பாடானது, தற்போது கம்யூனிஸ்ட் கட்சியே, ஈழத் தமிழ் மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடும் அளவிற்கு நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியம், திராவிட அரசியல் குறித்து விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்த கம்யூனிஸ்ட் கட்சி தற்போது அனைவரும் ஈழத் தமிழ் மக்களுக்காக ஓரணியில் திரள வேண்டிய அவசியப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.

கட்சி ரீதியாக கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு என அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் சந்தித்து வரும் அதேவேளை மறுபுறம் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னனி, தமிழ்நாட்டு புரட்சிகர சிறு அமைப்புக்கள் என பலரும் ஓரணியில் திரண்டு ஈழத் தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இது விரைவில் தமிழகத்தின் சகல பகுதிகளிலும் பெருமளவு தாக்கத்தை செலுத்தக்கூடிய வாய்ப்புண்டு.

சமீப நாட்களாக அதிகரித்திருக்கும் இவ்வாறான ஈழ ஆதரவுச் செயற்பாடுகளின் தாக்கம் உணர்ந்தே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் அதில் அவரது கட்சி கலந்துகொள்ளாமைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படாத போதும் எதிர்காலத்தில் இடம்பெறும் ஈழத் தமிழர் ஆதரவுச் செயற்பாடுகளிலிருந்து தமிழக அரசியல் சக்திகள் எவரும் விலகி நிற்க முடியாதளவிற்கு சூழல் மாறி வருகிறது என்பதே உண்மை.

இந்த நிலைமைகளை தொடர்ந்தும் கண்டு கொள்ளாதவர்கள் போல் இருக்க முடியாத நிலைமை தற்போது தமிழகத்தை ஆளும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. விற்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஈழத் தமிழர் ஆதரவுச் செயற்பாடுகள் பிறிதொரு வகையில் கருணாநிதிக்கு பெரும் அழுத்தமாகவும் மாறியுள்ளது.

எனவே வரும் நாட்களில் கருணாநிதி ஈழத் தமிழர் அரசியல் தொடர்பாக தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் பரிணமித்த காலத்திலிருந்து அதன் தீர்க்கமான ஆதரவு சக்தியாக தமிழகம் இருந்து வருகிறது.

இதற்கு தமிழர்கள் என்ற அடையாளம், கலாசார ரீதியான தொடர்புகள், வரலாற்று ரீதியான உறவு போன்ற பல காரணங்;கள் இருந்தன.

மறுபுறமாக இந்த காரணிகளையே இந்திய மத்திய அரசு தனது பிராந்திய மூலோபாய நகர்வுகளுக்கும் பன்படுத்திக்கொண்டது.

ஆறு கோடி தமிழ் மக்களைக் கொண்ட இந்தியா ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பில் மௌனமாக இருக்க முடியாது என்ற தொனியில் சிறிலங்கா அரசை தனது வழிக்கு கொண்டுவரும் நோக்கில் ஈழத் தமிழர் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முயன்றது.

அதன் விளைவாக வந்ததுதான் 1987 இல் இடம்பெற்ற இந்தி-இலங்கை ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் மூலோபாய காய்நகர்த்தல்.

இது குறித்து அதிகம் இந்த இடத்தில் விளக்கிச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஏலவே நாம் அதிகம் இதில் காலத்தை விரயமாக்கியிருக்கிறோம்.

இந்தியாவின் தவறான தலையீடுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் விளைவாக, இந்தியா புலிகளை இந்தியாவில் கால் பதிக்க முடியாத ஒரு அமைப்பாக தடை செய்ததும் அதனைத் தொடர்ந்து தமிழர் போராட்டத்தின் பின்தளம் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ நேர்ந்த ஜரோப்பிய நாடுகளை நோக்கி நகர்ந்ததும் நாம் அறிந்ததே.

தமிழர் போராட்டத்தின் ஆதரவுத்தளம் ஜரோப்பாவை நோக்கி நகர்ந்த காலத்தில் தமிழக ஆதரவுத்தளம் குறித்த அக்கறை நமது சூழலில் சற்று குறைந்ததும் உண்மை.

இதற்கு இந்திய புலனாய்வுத்துறையினதும் அதன் ஊது குழலாக செயற்பட்ட தமிழக ஊடகங்களினதும் பிரச்சாரங்களும் ஒரு முக்கிய காரணம்.

ராஜீவ் காந்தி விடயத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் கரிசனை வீழ்ச்சியடைந்துவிட்டது, ஈழத் தமிழ் மக்கள் தமிழக ஆதரவை இழந்துவிட்டனர் என்றவாறான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இது கணிசமான அளவு தமிழ்த் தேசிய சக்திகளை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.