Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதாபிமானம் பேண ........ காலம் கடந்துவிடவில்லை.

Featured Replies

இலங்கை விவகாரத்தில் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒருபெரும் மனிதாபிமானப் பிரச்சினையில் உலகப் பெருமன்றம் என்று மதிக்கப்படும் ஐக்கியநாடுகள் சபை இரட்டை வேடம் போடுகிறதா என்ற சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் சபைக்கு நெருங்கிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆய்வாளர்கள் சிலர் இந்தச் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்கள்.

இலங்கையின் தமிழர் பிரச்சினை வெறும் அரசியல் தகராறு என்ற நிலையில் இருந்து உருமாறி ஓர் இனத் தைச் சேர்ந்த மக்கள் செத்து மடியும் உயிர் விவகாரமாக மாறி விட்டது. அரசியல் விவகாரம் போன்று நாட்டுக்கு நாடு, அதிகாரிக்கு அதிகாரி கருத்து வேற்றுமைகளை நடுப்புள்ளியாகக் கொண்டு ஒருபக்கச் சார்பாக அல் லது இரட்டை முகம் காட்டக்கூடிய ஒன்றல்ல மனிதா பிமான விவகாரம்.

மக்கள் அழிந்து போவதை, அங்கவீனராவதை, இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாது அவலப்படு வதை, மனநலம் மலினப்பட்டு மசிந்து போவதை மிகப்பெரிய அளவில் உள்ளடக்கிய மனிதப் பேரவலம் வன்னியில் கட்டவிழ்ந்து உச்சாணிக் கொம்புக்கு ஏறி யுள்ளது.

இதனை நாம் மட்டும் சொல்லவில்லை. உலகின் அரசியல் தலைவர்கள், மனிதாபிமானப் பிரச்சினைக ளைக் கையாள்வதில் கை தேர்ந்தவர்கள், அத்துறைசார் வல்லுநர்கள் என்று பலதரப்பாரும் சொல்கிறார்கள். உடனடியாகக் கரிசனை காட்டி, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது. மனித உயிர்களோடு சம்பந்தப்பட்ட அவசரமான மிக மிக அத்தியாவசியமான விடயம் இது.

ஐ.நா. பெருமன்றம் இந்த விவகாரத்தைத் தட்டிக் கழித்துத் தாமதிப்பதோ, தயங்கித் தயங்கிக் காலத்தைக் கடத்துவதோ, ஒருபக்க வாதங்களை மட்டும் நிறுத்துக் காட்டி பக்கம் சார்வதோ அடுக்காது.

அவர் சொல்வது சரி, இவர் சொல்வது சரி என்று வாதப்பிரதிவாதம் செய்து இலட்சக்கணக்கான மக்க ளின் உயிர்களைக் காப்பது குறித்து (வன்னியில் முல்லைத்தீவில் 150,000 தொடக்கம் 190,000 வரை யான பொதுமக்கள் சிக்குண்டுள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவரே தமது அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டியி ருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது) காலம் போக்கும் அல்லது காலம் கடத்தும் விடயம் அல்ல இது.

ஒரு மனித உயிர் பறிக்கப்பட்டால், பொலிஸ் விசா ரணை, நீதிமன்றத் தீர்ப்பு, தண்டனை என்ற இத்தியாதி விதிமுறைகள், உலகளாவிய ரீதியில் பொதுவான நடைமுறைகள் உள்ள ஜனநாயக நவயுகம் இது. ஒவ்வொரு மனிதனதும் ஒவ்வொரு பிரசையினதும் மனித உரிமை கள் காக்கப்பட வேண்டும், பேணப்பட வேண்டும் என் பது உலக நியதியாகி உலக விதியாகி விட்ட காலம் இது.

அப்படியிருக்க, இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு அதன் உயர் அதிகாரிக ளுக்கு உண்டு. அவர்கள் அதனை தட்டிக் கழிக்க நினைப் பதோ, அதன்பால் இரட்டை வேடம் போடுவதோ, அல் லது பக்கம் சாய்வதோ கண்டனத்துக்கு உரியதாகும்.

வன்னியில் மோதல்களில் சிக்கியுள்ள மக்கள் குறித்து தான் பெரிதும் கவலை அடைவதாகக் காட்டிக் கொள்ள ஐ.நா.ஒருபக்கம் முயல்கிறது.

அதேவேளை

இலங்கை மீதான விமர்சனங்களுக்கு அந்நாட்டு அரசு காட்டிவரும் எதிர்ப்பின் காரணமாக, மனிதாபி மான மோதல் தவிர்ப்புக்கு அழைப்பு விடுப்பதற்குக் கூட, ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான்கிமூன் விரும்பவில்லை என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டு கின்றனர்.

மறுபுறத்தில், ஐக்கியநாடுகள் சபையின் உயர் அதி காரிகளில் ஒருவரான மனிதாபிமான விவகாரங்களுக் குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் @ஹாம்ஸ் வன்னிக் கடற்கரையில் (புதுக்குடியிருப்புக் கடற்கரையில்) இரத்தக் களரி ஏற்படக்கூடிய அபாயம் உண்டு என்று எச்சரித்த பின்னரும்

ஐ.நா அதுவிடயத்தில் உரிய முறையில் தலை யிட்டு உடன் நடவடிக்கையில் இறங்காது மௌனம் காப்பது, உறுத்து, உரத்து இலங்கை அரசை தூண்டு தல் செய்யாது, ஊக்குவிக்காது இருப்பது

ஐ.நா.தலைமைப் பீடத்தின் அதிகாரிகள் மட்டத்தி லான இரட்டை வேடத்தையே புலப்படுத்துகிறது. ஒரு மனித உயிர் பிரியாமல் தடுப்பதற்கு தங்களை அர்ப்ப ணித்து சொந்தக் கஷ்டங்களையும், விருப்பு வெறுப்பு களையும் ஒதுக்கி வைத்துவிட்டு நோயாளி என்ற வகை யில் மட்டுமே பார்த்து கருணையே கண்ணாகப் பணி யாற்றும் வைத்தியர்களைப் போன்று

இலட்சக்கணக்கான வன்னித் தமிழ் மக்களின் உயிர் களைக் காப்பாற்றவேண்டும் என்ற கரிசனை மற்றும் இரக்கம், மனிதாபிமானப் பண்பு இல்லாதவர்கள் ஐ.நா. மன்றத்துக்கு தலைமை வகிக்க, உலக மக்களின் நல னுக்கு உழைக்க எந்த வகையிலும் தகுதியற்றவர்கள்.

அவ்வாறு இல்லையெனில்

நேற்று முன்தினம் வியாழக்கிழமை புதுக்குடியிருப் பில் தோன்றியுள்ள களநிலையை, ஐ.நாவின் சொந்த அதிகாரிகளே (ஜோன் @ஹாம்ஸூம், கலாநிதி வால்ட் டர் கலினும் எதிர்வு கூறிய பெருநாசம் வராமல்) தடுப் பதற்கு இன்னும் அவகாசம் உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் உச்சநிலை நிர்வாகிகளும் சக்தியுள்ள தேசங்களும் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு (காலம் நிமிடத்துக்கு நிமிடம் கழிந்து கரையாமல் ) மனிதத் தின் பெயரால், மனித நேயத்தின் பெயரால் செயற்பட அவகாசம் உண்டு. அதனை அவர்கள் பயன்படுத் தாவிடின் உலக சரித்திரத்தில் "பாவிகள்" என்ற பட்டப் பெயரைத் தாமே தேடிச் சூட்டிக்கொள்ள நேரிடும்.

www.uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.