Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் நினைத்தால் இரவோடிரவாக உங்கள் பத்திரிகைகளை இழுத்து மூடிவிட முடியும் ‐ யாழ் குடாநாட்டில் தொடரும் ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம்:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் அதிர்ந்து போய் கேட்டுக்கொண்டிருந்தனர்; கைகளை சொடுக்கிய படி அவர் உரத்துக்கூறினார். நான் நினைத்தால் இரவோடிரவாக உங்கள் பத்திரிகைகளை இழுத்து மூடிவிட முடியும்.

பலாலி அழைத்துச்செல்ல பயன்பட்ட இராணுவ வாகனங்கள் வெளியே காத்திருந்தன. குடாநாட்டிலிருந்து வெளிவரும் உதயன், யாழ்.தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் ஆசிரியர்கள் அவர்கள் அவரது மேசைக்கு முன்னாலுள்ள கதிரையில் சொல்வதற்கு ஏதுமின்றி வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தனர்.

இவ்வளவு எச்சரித்தவர் யாழ்.மாவட்ட இராணுவ தளபதியாக இருந்து தற்போது இராணுவ தலைமைய அதிகாரியாகவும், தற்போது தான் வன்னியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வளிக்கும் குழு தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்;டிருக்கும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி என நான் இக்கட்டுரையில் எழுதப்போவதில்லை. அதை எழுதிப்போய் நான் இனந்தெரியாதோரால் கொல்லப்படவோ அல்லது இரவோடிரவாக கடத்தப்பட்டு காணாமல் போகவோ தயாரில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சொன்னதை எனக்கு சொன்னதற்காக அந்த நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கும் அவ்வாறானதோர் நிலை ஏற்படாது காப்பாற்றவேண்டும். அது ஊடகவியலின் அடிப்படை தர்மமும் நியாயமும் ஆகும்.

அவர் தொடர்ந்தார் நீங்கள் குடாநாட்டினில் மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்மிடையேயுள்ள உறவை (?) சீர்குலைக்க முற்படுகிறீர்கள். நான் நினைத்தால் இன்று இரவோடிரவாக உங்கள் பத்திரிகைகளை மூடிவிட முடியும். நாங்கள் தான் உங்களுக்கு அச்சிடுவதற்கான கடதாசியை கூட கொழும்பிலிருந்து கொண்டு வர உதவுகின்றோம். மக்களுக்கு பாதுகாப்பு படையினர் செய்யும் சேவைகளை(?) பற்றி நீங்கள் எழுதுவதேயில்லை. நாங்கள் யாழ்ப்பாண மக்களுக்கு எவ்வளவோ செய்கின்றோம். நீங்கள் அதுபற்றி எல்லாம் எழுதவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்து நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கோ, அங்குள்ள ஊடகவியலாளர்களிற்கோ இவ்வாறான அச்சுறுத்தலொன்றும் புதிது இல்லை. 1981, ஜீன் இனில் ஈழநாடு பத்திரிகை தீக்கிரையாக்கப்பட்டது முதல் இந்திய அமைதிப்படை காலத்தினில் முரசொலி மற்றும் ஈழமுரசு குண்டுவைத்து தகர்ப்பு என தொடர்ந்து தற்போது உதயன் அலுவலகத்தினுள் உள்ளே புகுந்து படுகொலைகள் கைக்குண்டு வீச்சு என அவை தொடர்கின்றது.

ஊடக அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் என ஆரம்பித்த இக்கலாச்சாரம் பின்னர் ஊடகவியலாளர்களை படுகொலை செய்தலாக பரிணமித்தது. குடாநாட்டு ஊடகத்துறையில், வெளி உலகிற்கு தெரியவரும் வகையிலான முதல் ஊடகவியலாளர் படுகொலை 2000 ஆம் ஆண்டின் ஒக்டோபர் 19 இனில் அரங்கேறியது.

பி.பி.சி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் பலவற்றிலும் சூரியன் எவ் எம்மிலும் சுயாதீன செய்தியாளராக பணியாற்றி வந்த மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அரச ஆதரவு தமிழ் ஆயுத குழுவான ஈ.பி.டி.பி மீது இப்படுகொலைக்கான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது.

ஆயினும் இந்திய அமைதிப்படை பிரசன்னமாகியிருந்த காலப்பகுதியில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த முரசொலி நாளிதழின் ஆசிரியரான எஸ்.திருச்செல்வம் மீது படுகொலை முயற்சியொன்று இடம்பெற்றிருந்தது.

எனினும் அம்முயற்சியினில் அவர் தப்பித்துக்கொள்ள 19 வயதுடைய பாடசாலை மாணவனான அவரது மகன் அகிலன் பலியெடுக்கப்பட்டான்.

எனினும் பின்னர் நிமலராஜனை தொடர்ந்து உதயன் நாளிதழின் அலுவலக செய்தியாளர் செல்வராசா ரஜிவர்மன் சாளரம் மாணவர் இதழின் ஆசிரியர் சகாதேவன் நிலக்ஷன் மற்றும் சக்தி தொலைக்காட்சி,வானொலி ஊடகவியலாளரான பரநிருபசிங்கம் தேவகுமார் ஆகியோர் 2007‐2008 ஆம் அண்டுகளில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

2006 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 11 முதல் விடுதலைப்புலிகளிற்கும் படையினரிற்குமிடையே முன்னரங்க நிலைகளில் மீண்டும் மோதல்கள் வெடித்திருந்தன. ஏ‐9 வீதியூடான தரைவழிபோக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குடாநாடு திறந்த வெளிச்சிறை போன்றானது. அதேவேளை குடாநாட்டின் ஊடகத்துறையும் இருண்டதோர் சூழலை நோக்கி இழுத்துச்செல்லப்பட்டது.

2007 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத காலப்பகுதியியினில் வடமராட்சியின் கலிகைச்சந்திப்பகுதியினில் வைத்து மற்றுமொரு சுயாதீன செய்தியாளரான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் கடத்தப்பட்டார். படையினரால் இவர் விசாரணைக்கென தடுத்துவைக்கப்பட்டிருந்ததை நேரில் கண்ட சாட்சிகள் உண்டு. ஆனாலும் இன்று வரை இராமச்சந்திரன் வீடு திரும்பியிருக்கவில்லை.

1996 ஆம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரின் கைகளில் வீழ்ந்த பின்னர் ஊடகத்துறையை நிர்ணயிப்பதில் ஊடகவியலாளர்களுக்கப்பால் அவ்வப்போது பதவியேற்கும் இராணுவ தளபதிகளே முக்கியமானவர்களாயினர்.

குறிப்பாக முற்றுமுழுதாக இராணுவ பிரசன்னம் மிக்க யாழ்.நகரப்பகுதியில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குடாநாட்டு மொத்த ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை கேள்விக்குறியர்க்கியிருந்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.