Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தென்மராட்சி முகாம்களில் சுகாதார வைத்திய குறைபாடுகள் : முகாம்களில் தங்கியுள்ளவர்களது விபரங்களை வெளியிட அரச அதிபருக்கு தடை :

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்மராட்சிப் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் அங்கு போதிய வைத்திய அடிப்படை வசதிகள் இன்மையால் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மிக மோசமான நோய்த் தொற்றல்கள் வேகமாக ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முகாம்கள் அனைத்திலும் இலையான்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு நடமாடும் வைத்திய சேவைகளை வழங்கி வரும் வைத்திய நிபுணர்கள் மேலதிக வைத்திய நடவடிக்கைகளுக்காக சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் நோயாளர்களை அனுமதிக்குமாறு தொடர்ந்தும் அனுப்பி வருகின்றனர். இதனால் 500க்கும் அதிகமான நோயாளர்;கள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்த வைத்தியசாலை முற்றாக அழிவுற்றிருந்தது. தற்போது ஒரு பகுதி மட்டுமே மீள நிர்மாணிக்கப்பட்டு இயங்கி வருகின்ற நிலையில் 50 நோயாளர்களுக்கான படுக்கை வசதிகளை மட்டுமே கொண்டுள்ள போதிலும் 500க்கும் அதிகமானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதால் தரை மற்றும் நடைபாதைகளிலும் நோயாளர்கள் பலத்த சிரமங்களின் மத்தியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே அம்புலன்ஸ் வண்டிகளில் 25 நோயாளர்கள் இவ்வாறு நாள்தோறும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய மருத்துவ வசதிகளும் கிட்டாத நிலையும் இங்கு இருப்பதாகவும் இதனால் நோயாளர்களைக் கட்டுப்படுத்த முடியாத நெருக்கடியான நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முகாம் பகுதிகளில் சுற்றுப் புறச் சூழல் உரிய முறையில் பேணப்படாமையால் இலையான்கள் வேகமாகப் பரவி வருவதாகவும் இதனால் வாந்திபேதி கொலரா உட்பட்ட நோய்கள் வேகமாகப் பரவும் அபாயம்; ஏற்பட்டிருப்பதாகவும் குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி; பாரிய நெருக்குவாரங்கள் காணப்படுவதாகவும் அங்கு சென்று திரும்பிய அரசார்பற்ற அமைப்புகள் சார்பில் கூறப்படுகின்றது.

முகாம்களில் தங்கியுள்ளவர்களது பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு அரச அதிபருக்கு பாதுகாப்புத்தரப்பு தடை :

யாழ்க் குடாநாட்டிலுள்ள முகாம்களில் தங்கியுள்ளவர்களது பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு அரச அதிபருக்கு பாதுகாப்புத்தரப்பு தடை விதித்துள்ளது. யாழ்க்குடாநாட்டில் இடம்பெயர்ந்த வன்னிமக்கள் தங்கியிருக்கும் முகாம்களிலுள்ள மக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் யாழ் செயலகத்தின் ஊடாக வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டடிருந்தது.

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான பதிவுகள் அனைத்தும்; கொடிகாமம் திருநாவுக்கரசு அரசினர் மகாவித்தியாலயத்தில் வைத்து படையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் பிரதிகள் யாழ் அரச அதிபர் சாவகச்சேரி பிரதேச செயலர் மற்றும் கரவெட்டிப் பிரதேச செயலர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனினும் அவற்றை ஊடகங்களுக்கு வழங்க அவர்கள் மறுத்து வந்தனர்.

இந்த நிலையிலேயே பாதுகாப்புத் தரப்பு தற்போது அரச அதிபருக்கு அதனை வெளியிடவோ அல்லது பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தவோ வேண்டாம் என அறிவித்துள்ளது. இதனையடுத்து அரச அதிபரால் விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் இந்தப் பட்டியல்கள் உரிய காலம் வரும் போது வெளிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. இதனிடையே ஊடகங்கள் சிலவற்றில் இந்தப் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு விட்டதாக வந்த செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.

www.globaltamilnews.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.