Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசு தாக்குதலை நிறுத்தாதது ஏன் !

Featured Replies

சிறீலங்கா அரசு தாக்குதல்களை நிறுத்த வேண்டுமெனக் கேட்டு புலம் பெயர் நாடுகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிறீலங்கா அரசு தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வருகிறது. ஏன் என்ற கேள்விக்கு விடை காண வேண்டியது புலம் பெயர் தமிழ் மக்களின் கடமையாகும்.

வன்னியைப் பார்க்க முன்னர் பர்மாவில் இன்று ஆங் சாங் சுகி அம்மையார் படும் பாட்டை ஒரு தடவை அறிந்து கொள்ள வேண்டும். இதை எழுதிக் கொண்டிருக்கும்போது அவர் கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். கடந்த ஒரு வாரமாக டைரியாவால் பாதிக்கப்பட்ட இவரை வைத்தியரோ அல்லது மருத்துவத் தாதியரோ பார்க்க முடியாது என்று பர்மிய இராணுவ சர்வாதிகார அரசு கண்டிப்பாகக் கூறியுள்ளது.

பர்மாவில் ஒரு ஜனநாயகத்தை உருவாக்க வேண்டுமென போராடுவதால் கடந்த 19 ஆண்டுகளாக இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது 63 வயதாகும் இவர் மேலை நாடுகளில் நோபல் பரிசு பெற்ற தலைவராகும். இவர் பயங்கரவாத பட்டியலில் இல்லாத போராட்டத் தலைவர். இவருக்கே ஒரு வைத்தியரை அனுப்ப முடியாத நிலையில் ஐ.நாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

இதற்கு சில மாதங்கள் முன் நகர்த்தி சிந்தித்துப் பாருங்கள். இன்று வன்னியில் நடப்பதற்கு ஏறத்தாழ இணையான படுகொலைகளை பர்மீய அரசு தனது மக்கள் மீதே நிகழ்த்தியது. அதைப் பார்த்து இராணுவ சர்வாதிகாரிகள் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.நாவும் கோரிக்கை முன் வைத்தன ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

இன்று ஆர்பாட்டங்களில் ஈடுபட்ட ஜனநாயக சக்திகள் பர்மீய சிறைகளில் வாடுகிறார்கள். பர்மாவிற்கு புதிய துறை முகத்தை அமைத்துத் தருகிறேன் என்று இந்தியா அடுத்த நாள் தெரிவித்தது. அதுபோல சீனாவும் பர்மீய சர்வாதிகாரிகளுக்கு முண்டுகோல் கொடுத்து நிற்கிறது. மேலை நாடுகளால் ஒரு துரும்பைக்கூட தூக்கிப் போட முடியவில்லை. ஏன் என்று ஒவ்வொரு புலம் பெயர் தமிழரும் சிந்திக்க வேண்டும்.

அடுத்து நம் உறவுகள் கம்போடியாவில் நடந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். கம்போடியாவில் காலம் சென்ற பொல்பொட் நடாத்திய மானிடப் படுகொலைகள் ஆபிரிக்க ருவாண்டாவில் கூட நடைபெற்றதைவிட மிகப் பெரும் நிகழ்வாகும். இன்றும் அந்நாட்டில் பொல் பொட்டின் எச்சமாக மில்லியன் கணக்கில் மண்டையோடுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னால் இருந்தவர்கள் யாரென்று இங்கிருக்கும் கம்போடியரை கேட்டுப்பாருங்கள்.

சீனாவின் கம்யூனிச கொள்கையை அமல் செய்து பாPட்சார்த்தம் பார்க்க துணை போன தலைவரே பொல்பொட் என்று கூறுவார்கள். எத்தனையோ மக்களை கொன்று குவித்து செய்யப்பட்ட பரிசோதனை தோல்வியில் முடிந்தது. சீனா தனது கொள்கையை மாற்றிக் கொண்டது கம்போடியா கண்ணீரில் மூழ்கியது. இந்தப் படுகொலைகளை தடுக்க மேலை நாடுகளால் முடியாமல் போய்விட்டது ஏன் ?

இப்போது பர்மாவிலும் கம்போடியாவிலும் நடந்த அதே நாடகங்கள்தான் வன்னியிலும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளால் எதுவும் செய்ய முடியவில்லை. இன்று மேலை நாட்டு தலைவர்களுடன் கதைக்கப் போகும் புலம் பெயர் தமிழருக்கெல்லாம் ஐரோப்பிய தலைவர்கள் ஒரேயொரு விடயத்தைத்தான் சொல்கிறார்கள். சீனாவும் இந்தியாவும் தலையிட்டுள்ளதால் நம்மால் எதையும் செய்ய இயலவில்லை என்று கூறுகிறார்கள்.

இந்தியாவும் சீனாவும் இறுக்கமான கொள்கையை கடைப்பிடிக்கக் காரணம் என்னவென நாம் யோசிக்க வேண்டும். ஆசிய வட்டகைக்குள் அமெரிக்க ஐரோப்பிய சக்திகளை வருவதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்ற விடயத்தில் இரு நாடுகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. சீனாவும் இந்தியாவும் தம்மளவில் பகை நாடுகள்தான் இருந்தாலும் இந்த விடயத்தில் அவை பகை நாடுகள் அல்ல என்பதை பர்மா கம்போடிய பிரச்சனைகளும் இப்போது சிறீலங்கா பிரச்சனையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

சிறீலங்காவிற்கு எதிராக ஐ.நாவில் பிரேரணை கொண்டு வந்தால் சீனா வீட்டோ அதிகாரத்தைப் பாவித்துத் தடுக்கும். வீட்டோ அதிகாரம் இல்லாவிட்டாலும் இந்தியாவிற்காக சீனா அதை பயன்படுத்தும். ஆசியக் கண்டத்தின் வட முனையில் பனிக்கரடியாக ரஸ்யா இருக்கிறது. சீனா இந்தியாவின் கொள்கைகளை அதுவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக வீட்டோ பாவிக்க அதுவும் தயாராகவே இருக்கிறது.

இந்து சமுத்திரத்தில் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட நிலையில் இலங்கை இருக்கிறது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களுடைய விடிவிற்கு எதிராக ஆசியக் கண்டத்தின் மூன்று பக்கங்களில் மூன்று பெரும் வல்லரசுகள் இருக்கின்றன. இதற்குள் சிக்குப்பட்ட மூப்பது இலட்சம் ஈழத் தமிழரின் கண்ணீர்க்கதையைத்தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்கும் மேலை நாடுகள் சில தவறுகளை விட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் போன சில நாட்களில் தெருத்தெருவாக இருந்த தலைகளை வெட்டிப் போட்டவர்கள் யார் ? செஞ்சிலுவைச் சங்கத்தால் சேர்த்து எரியூட்டப்பட்ட இந்தப் படுகொலைகளின் இரத்தக்கறை மேலை நாடுகளின் கரங்களில் உள்ளது.

ஈராக்கின் வட புலத்தில் நுழைந்ததும் வெட்டி வீசப்பட்ட பல்லாயிரம் சடலங்களின் தலைகளை உலகம் எண்ண மறுத்து கண்களை மூடியதே அதைச் செய்தவர்கள் யார் ? ருவாண்டாவில் பத்து இலட்சம் பேர் ஒரு வாரத்தில் தலை வெட்டி கொல்லப்பட்டபோது ஐ.நா மௌமாக இருந்ததே ஏன் ? அதன் பின்னால் பிரான்ஸ் இருந்ததாக இதுவரை இரண்டு நூல்கள் வெளி வந்துவிட்டன. இவை தமிழில் வரவில்லை வந்தாலும் நமக்கு அதையெல்லாம் வாசிக்கும் பழக்கமும் இல்லை. அலைகளில் அதை மொழி பெயர்த்து எழுதியிருந்தோம் படிக்க ஆளில்லாமல் கிடந்து மறைந்தது.

ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க உளவு விமானங்கள் வந்து பல இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர்களை ஏற்றிச் சென்றதே அப்போது உலகம் ஏன் மௌமாக இருந்தது. இந்த உலகில் நடைபெறும் அத்தனை அநீதிகளும் ஆதிக்க சக்திகளால் நிகழ்த்தப்படுகின்றன. இறப்பிற்கும் அழிவிற்கும் ஆளாவது அதிகாரமற்ற ஏழை மக்களே என்பதை நாம் அறிவதற்கு பரந்துபட யோசிக்க வேண்டும்.

இன்றுள்ள ஆதிக்க சக்திகள் ஒரு நாட்டை சூறையாடி அதை அழித்து சில ஆண்டுகளை கழிப்பது பொருளாதார ஒழுங்காக உள்ளது. ஈராக்கிற்குள் நுழைந்த அமெரிக்கா அங்கு அணு குண்டு இல்லை என்றால் ஏன் உடனடியாக வெளியேறவில்லை. அதுபோல ஆசியாவிற்குள் நுழைந்து வளங்களை சூறையாடி வாழ நினைக்கும் மேலை நாட்டு ஆதிக்கச் சக்திகளை ஆசியாவிற்குள் வரவிடாது தடுக்க இந்தியா ரஸ்யா சீனா மூன்றும் முயன்றுள்ளன. ஆசியாவில் ஓர் இனம் முற்றாக அழிந்தாலும் இந்த இரும்புப் பிடியை இவர்கள் விலத்தவே மாட்டார்கள் இதுதான் நிதர்சனம். மேலும் அவர்கள் மேலை நாடுகளை மதிப்பதற்கான ஒழுக்கமோ கறைபடியாத கரங்களோ மேலை நாடுகளிடம் கிடையாது. எனவேதான் ஆதரிப்பவனும் திருடன் எதிர்ப்பவனும் திருடன் நடுவில் கிடப்பது நாம் என்பதே உண்மையாக உள்ளது.

மேலும் பர்மாவில் மேலை நாடுகளால் எதுவும் செய்ய முடியாமல் போனது சிறீலங்காவிற்கு தெரியும். அவர்களும் இந்த நம்பிக்கையில்தான் விடாப்பிடியாகக் களமிறங்கியிருக்கிறார்கள். அசட்டுத் துணிச்சலில் பயணித்தவர்கள் இப்போது திரும்ப முடியாத ஒரு குகைக்குள் போய்விட்டார்கள். திரும்பினால் அவர்கள் பேரழிவை சந்திப்பார்கள். காரணம் மீற வேண்டிய அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறிவிட்டார்கள் இனி வந்தவழியே திரும்ப அவர்களால் இயலாது. இந்த வழியால் சென்று தம்மை நியாயப்படுத்துவதைவிட அவர்களை நியாயப்படுத்த இனி வேறு வழி கிடையாது. பயங்கரவாதத்தை அழிக்கப் போகிறோம் என்ற இற்றுப் போன கயிற்றைப் பிடித்தவர்கள் ஒரு காலமும் கீழே இறங்க முடியாது. அதில் பற்றி மேலே மேலே போவதைத் தவிர வேறு வழி கிடையாது.

மேலைச் சக்திகள் ஆசியாவிற்குள் வர முடியாது என்று தடைபோட்டாலும் உள்ளே வர மேலை நாடுகள் தொடர்ந்து முயன்றபடிதான் இருக்கின்றன. இப்போது ஆப்கானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஏறத்தாழ நுழைந்துவிட்டார்கள். கைபர் கணவாயால் இந்தியாவிற்குள் ஆடு மேய்க்கும் ஆரியர் நுழைந்த கதை போல புதிய இடையர்கள் வரும் ஆபத்தான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அச்சம் ஆசிய வல்லரசுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

உண்மையில் இப்படியெல்லாம் உலகத்தை ஆட்டிப் படைக்கும் வல்லரசுகள் டைனசோர்கள் போன்றவை. அவை மிகவும் பிரமாண்டமானவை அவை மரண ஓலங்களைத் திரும்பிப் பார்ப்பதற்குள் சிறிய மிருகங்கள் இறந்துவிடும்.

அதேவேளை இன்றுபோல வல்லரசான டைனசோர்கள் யுகம் புவியில் முன்னரும் ஒரு தடவை இருந்திருக்கிறது. அந்த டைனசோர்கள் பெரியவை ஆனால் மூளை சிறியவை. மூளையற்ற அந்த இராட்சத மிருகங்களால் காலகாலமாக அழிவுற்ற சிறிய விலங்குகள் ஒரு நாள் வழிப்படைந்தன. சிறு விலங்குகள் டைனசோர்களின் கழுத்தை கவ்வியபோது அவைகளால் ஜெயிக்க முடியாமல் போயின. இன்றைய வல்லரசுகள் கையில் உள்ள அநீதிக்கு ஆதாரமான வீட்டோ அதிகாரம் போல பழைய டைனசோர்களும் வீட்டோ அதிகாரம் கொண்ட வல்லரசுகள் போலவே புவியில் இருந்து அழிந்துள்ளன.

நாம் உணர்ச்சி கொள்வதும் கண்ணீர் வடிப்பதும் இன்றுள்ள நிலையில் தவிர்க்க இயலாத விடயங்கள். ஆனால் மிகவும் ஆழமாக அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. நமக்கு ஆதரவான மேலை நாடுகள் விடுதலைப் புலிகள் மீது விதித்த தடையை விலத்த மறுப்பது ஏன்? முதலில் அதைச் செய்து தமது உண்மையான ஆதரவை இன்றுவரை காட்டாதது ஏன் ? எனவேதான் தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.

நன்றி

அலைகள்.

காரணம் இந்தியா & சீனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.