Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் வீடுகளில் சிங்களர்கள்-முகாம்களில் இருந்து வெளியேறி நடுத்தெருவில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வீடுகளில் சிங்களர்கள்-முகாம்களில் இருந்து வெளியேறி நடுத்தெருவில்!

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2009, 9:51 [iST]

கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிய சுமார் 1,500 தமிழர்களின் குடும்பங்களின் வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும் நிலங்களையும் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் தமிழர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை நீண்ட நாட்களாக இலங்கை அரசு விடுவிக்கவில்லை. காரணம் கேட்டால், தமிழர் பகுதிகளில் புலிகள் வைத்த கண்ணி வெடிகள் இருப்பதாகவும், இதனால் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவற்றை நீக்கிவிட்டே தமிழர்கள் குடியமர்த்த்படுவர் என்றது.

ஆனால், கண்ணி வெடிகள் என்று பூச்சாண்டி காட்டி தமிழர்களை தொடர்ந்து முகாம்களிலேயே முடக்கி வைத்திருந்தற்கான காரணம் இப்போது வெளியில் விட்டது.

முன்பு தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்த வசதியாகவே இத்தனை நாட்களாக தமிழர்களை முகாம்களில் முடக்கி வைத்துள்ளது.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 1,500 குடும்பங்கள் திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள தமது வீடுகளுக்கு திரும்பியபோது அவர்களது வீடுகள், நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.

இத் தகவலை இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் ஆரியநேத்திரனும் உறுதி செய்துள்ளார்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டு, தமிழர் சொத்துக்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு அதிபர் ராஜபட்சவுக்கு அவர் கடிதமும் அனுப்பியுள்ளார்.

இதற்கிடேயே 3 லட்சம் பேர் வரை இருந்த முகாம்களில் இப்போது 1.8 லட்சம் தமிழர்கள் தான் உள்ளதாகவும், ஐ.நா, அமெரிக்கா தலையீட்டால் தான் 1.2 லட்சம் பேர் அவரவர் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

தமிழக எம்பிக்கள் குழு தான் காரணம்..கனிமொழி:

இந் நிலையில் தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்ற பிறகு தான் இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

அவர்கள் தங்கள் சொந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து முள்வேலியில் இருந்து தமிழர்களை விடுவிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அங்கு முழு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.

அகதிகளுக்கு மத்திய அரசு நிதி தரவில்லை:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,

இலங்கை தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரடியாக பார்த்து குறைகளை தொகுத்து, ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ.16 கோடி நிதி உதவி கோரி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை நிதி தரவில்லை.

பொதுவாகவே, இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு மத்திய அரசுதான் நிதி ஒதுக்குகிறது என்றார்.

தற்ஸ்தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நிலங்களை திருப்பிக்கொடுக்க மறுக்கும் சிங்களவர்கள்

on 03-11-2009 06:17

Published in : செய்திகள், இலங்கை

திருகோணமலை, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த 1486 க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களின் நிலங்களை சிங்களவர்கள் சட்டவுரோதமாக ஆக்கிரமித்துள்ளதால் தமிழர்கள் மீளக்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழர் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தன் மற்றும் பா.உ பாக்கியசெல்வம் அரியேந்திரன் ஆகியோர் கூறியுள்ளதாக த நேஷன் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழருக்குச் செந்தமான மேற்படி பகுதிகளில் குடியேறியுள்ள 500 சிங்களக் குடும்பங்கள் இப்போது தமக்கான வீடுகளை அமைத்து பயிர்செய்கையில் ஈடுபட்டு வருவதாக பாக்கியசெல்வம் அரியேந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து தாம் கடந்த செப்ரம்பர் 16 இல் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டி ஜனாதிபதி குறித்த அரச அதிபர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளடாகவும் கூறிய அரியேந்திரன் அரச அதிபர்களைத் தாம் இது குறித்து சந்தித்து பேச விரும்புவதாகவும் கூறினார்.

சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரட்ணபுரம், சோடைக்குடா, காகத்கரைச்சனன், சம்பூர்காளி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட 1486 குடும்பங்களின் நிலங்கள் பாதுகாப்பு உயர் வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் மீளக்குடியமர முடியவில்லை என சம்பந்தன் கூறியுள்ளதாக த நேஷன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.