Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் களத்தில் நேரடியாக மோதுவதற்கு ராஜபக்ஷ பொன்சேகா தரப்புகள் ஆயத்தம்

Featured Replies

நேற்று(22.11.2009) அன்று "சண்டே ரைம்ஸ்" பத்திரிகையில் வெளியாகிய அரசியல் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள் இவை.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவ தற்கான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலையில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு வாரங்களின் பின்னர் வேட்புமனுக் கள் கோரப்படலாம். பெரும்பாலும் டிசெம்பர் 9 அல்லது 10ஆம் திகதி யன்று, ஆறுவாரங்கள் பிரசாரங்கள் இடம்பெற்றதன் பின்னர் அநேகமாக ஜனவரி 23ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க் கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்தியாக வேண்டும் என்று மிகக் கண்டிப்பாக ஜனாதிபதி இருந்து வந்துள்ள போதிலும், பொதுத் தேர் தலையே முதலில் நடத்தும்படியாக பெரும் அழுத்தத்துக்குள்ளாகி வந்துள்ளார்.

மஹிந்த தோல்வியுற்றால்:

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியுறுமானால், வெற்றியடைந்தவர்களில் சிலரைத் தம்பக்கம் இழுத்து அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கும். அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமும் அரசமைப்பின் பிரகாரம் அவருக்கு இருக்கும். மேலும் அவசியமானால் ஒரு வருடத்தின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. அவ்வாறு இல்லாது போனால் இந்தவிதமான முடிவு எதனையும் செய்யும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும் என்று அழுத்தம் கொடுத்தவர்கள் வாதித்து வந்துள்ளார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டிகள் மிகக் கடுமையாக இருக்கும் என்று ஜனாதிபதியுடன் நெருக்கமாகக் தொடர் புள்ளவர்கள் கருதினார்கள். ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் பொன் சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயன்று வந்தமையினால் இந்த நிலைமை தோன்றி இருந்தது.

ஒருவேளை ஜனாதிபதி தோல்வியடைய நேரின் வேறு வழியின்றி அதிகாரங்களை விட்டுக்கொடுத்து பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும். அது மிக கஷ்ரடமான ஒரு நிலைமையாக உருவெடுத்துவிடும் என்று அவர்கள் வாதிட்டார்கள். இருந்த போதிலும் தாம் நினைத்த படி முன்னகர்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்து விட்டார்.

மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று அரசியலுக்குள் நுழைய தீர்மானித்திருப்பது அரசுக்கு ஒரு பின்னடைவையே தோற்றுவித்துள்ளது.

துரோகிகளாகும் தேசப்பற்றாளர்கள்

கடந்தவாரம் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டில் பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த வேண் டும் என்று விரும்புகிறவர்களை கை உயர்த்தும்படி கேட்டுக் கொண்டார். அநேகர் கை உயர்த்தினார்கள். பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்கு எவரும் கையுயர்த்தியதாகத் தெரியவில்லை. அதேவேளை ராஜ பக்ஷ அந்தக் கூட்டத்தில் ஒருகருத்தையும் வெளியிட்டார். "நேற்றைய வீரர்கள் இன்றைய துரோகிகளாக மாறிவிடுகிறார்கள்'' என்று குத்தலாகக் கூறினார் ஜனாதிபதி. புலிகளுக்கு எதிரான போரில் தம்முடன் இணைந்து போரிட்ட ராணுவத் தளபதியை மனதில் வைத்துக்கொண்டுதான் அவர் இதைக் கூறியிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இதுதான் ராஜபக்ஷ நிர்வாகத்தின் ஒரு அடையாளமாக மாறி வருகின்றது. அரசுக்கு எதிராக கருத்துக்களை எவரும் வெளியிட்டு விட்டால் இலகுவாக இந்தப்பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். முன்னர் பத்திரிகையாளர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த இந்தப் பட்டமானது இப்பொழுது முதல் தடவையாக புகழ் பெற்ற ராணுவ ஜெனரலுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

"நாட்டுப்பற்று" என்றசொல்லுக்கு சர்வதேச மட்டத்திலும் உள்ளூரிலும் இலங்கை அரசுக்குத்தான் காப்புரிமை இருப்பதுபோல் தெரிகின்றது. தனக்கும் தமது நண்பர்களுக்கும் மட்டுமே அதனைப் பிரயோகித்துக் கொள்வதும் விருப்பமில்லாதவர்களை "துரோகிகள்" என்று அழைத்துக் கொள்வதும் வழக்கமாகிவிட்டது.

கடந்த வாரம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் பொன் சேகாவுடன் இரகசிய இடம் ஒன்றில் இரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள். எதிர்த்தரப்பில் முக்கிய தலைவர்களை இராணுவ கூட்டுப்படை அதிகாரிகளின் முன்னாள் தலைவர் சந்தித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.வின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு), தலைவர் மங்கள சமரவீர, அவரது நெருங்கிய தொடர்பாளர் ரிரான் அலஸ், ஜே.வி.பி தலைவர்கள் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் விமால் ரட்ணாயக்க முதலியவர்கள் இதில் கலந்து கொண்டனர். கடந்த செவ்வாயன்று இரவு நெடுநேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் ஜெனரல் பொன்சேகாவுடன் ஜே. வி. பி. யு. என்.பி தலைவர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஜெனரல் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பதில் கருத்தொற்றுமை இரு தரப்பிற்குமிடையில் ஏற்பட்டுள்ள போதிலும் ஐ.தே.க இன்னமும் முறையாக அங்கீகரிக்கவில்லை என்று தெரிகின்றது.

ஐ.தே.க வின் அமைப்பு விதிகள்

இதுபற்றி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது பல உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களுக்கு தலைவர் ரணில் விக்கிரமசிங்க விளக்க மளித்தார். பொன்சேகாவுக்கு ஐ.தே. கட்சி ஆதரவளிக்கவிருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். ஐ.தே. கட்சியின் அமைப்பு விதிகளின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டதின் பின்னரே வேட்பாளர் தெரிவு செய்யப்படவேண்டும் என ரணில் விளக்கம் அளித்தார். இந்த நடை முறை பின்பற்றப்படும் என்று அவர் கூறினார். இருந்தாலும் உறுப்பினர்கள் பலரையும் அவர் சந்தித்து அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள முயன்று வந்துள்ளார். இதற்கிடையில் ஐ.தே.கவின் சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருடன் இரகசிய சந்திப்புக்களை நடத்திவருவதாகவும் அவர்கள் ஜெனரல் பொன்சேகா பொதுவேட்பாளராக நியமிகப்படுவதை ஆதரிக்கவில்லையென்று தெரிவித்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த உறுப்பினர்களைப் பயன்படுத்தி ஐ. தே. க.வில் சிக்கல்களை ஏற்படுத்தவும் முரண்பாடுகளை உருவாக்கி விடவும் மக்கள் சுதந்திரமுன்னணியின் சில தலைவர்கள் முயன்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கவரும் முயற்சி

இதற்கிடையில் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக் கொள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் ரவூப் ஹக்கீம் முயன்று வரும் அதே வேளை, அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தனக்குரிய முறையில் முயன்று வருகின்றது. ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எட்டு எம்.பிக்களை இரத்மலானையில் இருந்து வவுனியாவிற்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து அவர்கள் இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள மெனிக் பாமிற்கு விமானத்தில் கொண்டு போய் இறக்கப்பட்டுள்ளனர். அதன் பின் துணுக்காயில் 600 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் ராஜபக்ஷவை சந்தித்து முகாம்களில் நிலைமைகள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக அவர்கள் நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

ஜன 23இல் ஜனாதிபதித்தேர்தல்

இன்று மாலை அறிவிப்பு வரும்

என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேறு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இம்மாதிரி ஏற்பாடு செய்யப்படும் பயணத்தில் பங்குபற்றுவதற்கு தாங்கள் விரும்பவில்லை யென்றும் அவர்கள் தெரிவித்தனர். தேர்தல்கள் விரைவில் நடை பெறவிருப்பதாலேயே இந்தப் பயணத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்கள் என்று அவர்களில் ஒருவர் கூறினார். இதுவரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஏனையோரும் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளவர்களை போய்ப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் பஸில் ராஜ பக்ஷ வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று டிசெம்பர் முதலாம் திகதி தொடக்கம் அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என்றும் அறிவித்தார்.

ஜெனரல் பொன்சேகா பொது வேட்பாளராக நியமிக்கப்படுவதில் ஐ.தே.கவுக்கும் ஜே. வி. பிக்கும் இடையில் பிரச்சினை இல்லாது போனாலும் வேறுபல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றன.

எந்தக் கட்சியின் "டிக்கட்" டில் போட்டி?

அவைகளில் ஒன்று பொன்சேகா எந்தக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவது என்பதாகும். ஐக்கிய தேசிய முன்னணியின் டிக்கட்டில் அவர் போட்டியிடுவதை ஜே.வி.பி.விரும்பவில்லை. அது புதுக்கட்சியொன்றை பதிவு செய்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளது. " எக்ஸத் பிரஜாதந்திர வாத பெரமுன"(ஐக்கிய ஜனநாயக முன்னணி) என்பதாகும் அது. ஆனால் அது இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது மற்றும் ஊடக சுதந்திரத்தை மீண்டும் எவ்வாறு நிலை நாட்டுவது என்பவை தீர்க்கமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை.எனினும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் அமுலில் இருக்கும் அவசரகால நிலைமையை நீக்குவது போன்ற விடயங்களில் விரிவான உடன் பாடுகள் காணப்பட்டுள்ளன.

ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகள் தமது வேட்பாளரின் சம்மதத்துடன் கொள்கை பிரகடனமொன்றை தயாரித்து ஆவணமாக வெளியிடவிருக்கின்றன.

நன்றி http://www.uthayan.com/Welcome/afull.php?id=190&L=T&1258964008

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.