Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடுங்கள்: முதன்மை வேட்பாளர் இருவரிடமும் இலங்கையின் உயர் கல்விமான்கள் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடுங்கள்: முதன்மை வேட்பாளர் இருவரிடமும் இலங்கையின் உயர் கல்விமான்கள் வேண்டுகோள்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு முதன்மை வேட்பாளர்களும் காலம் தாழ்த்தாமல் அரசியல் தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் உயர் கல்விமான்கள் கூட்டாக வேண்டியுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே கல்விமான்கள் குழுவான ‘வெள்ளிக்கிழமை மன்றம்’ இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இந்தக் கடிதத்தில், அக்கறை கொண்ட குடிமக்கள் குழுவின் சார்பில் ஜயந்த தனபால கைச்சாத்திட்டுள்ளார்.

மேலும் - வண.பெலன்வில விமலரட்ண தேரர், பேராயர் ஒஸ்வோல்ட் கோமிஸ், ஆயர் டுலிப் டி சிகேரா, தேவநேசன் நேசையா, ஜெசிமா இஸ்மாயில், பேராசிரியர் சாவித்திரி குணசேகர, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கே.நீலகண்டன், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், ரஞ்சித் பெர்னான்டோ, சித்தி திருச்செல்வம், கே.சி.வெலியமுன, கலாநிதி ஏ.சி.விஸ்வலிங்கம், மனோரி முத்தட்டுவேகம, நாமல் வீரமுனி, பேராசிரியர் ஞானநாத் ஒபயசேகர, பேராசிரியர் அர்ஜுன அலுவிகார, டாக்டர் அநுர ஏக்கநாயக்க, மகேன் தயானந்த, டாக்டர் தீபிகா உடகம, சூரியா விக்கிரமசிங்க, டாக்டர் கயம்பதி விக்கிரமரட்ண, சுரேஷ் டி மெல், பிரசான் டி விஷர், அகிலன் கதிர்காமர், டாக்டர் செல்வி திருச்சந்திரன், ஆர்.சுரேந்திரன், சி.ஜயரட்ண ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

இந்தக் கடிதத்தில் மேலும் -

“அண்மைய யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் இருவரும் பங்களிப்புச் செலுத்தியுள்ளீர்கள். அதே சமயம் சமாதானத்தை இழந்துவிடும் ஆபத்து குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இருவரினது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் காணப்படும் பாரிய வெற்றிடம் குறித்து நாம் கவலையுடன் அவதானித்துள்ளோம். சிறிலங்காவில் வசிக்கும் பல சமூகங்களின் அடிப்படை உரிமைகள் குறித்து இரு விஞ்ஞாபனங்களிலும் குறிப்பிடக் கூடியதான விடயங்கள் இல்லை.

தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் இந்த நாட்டில் வாழ்கின்றனர். நீண்டகாலமாக நீடித்திருக்கும் அவர்களின் துன்பங்கள், அபிலாசைகள் தொடர்பாக உரிய முறையில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

நாட்டை மீள்கட்டமைப்புக்கு உட்படுத்துவதற்கான நம்பகரமான நடவடிக்கைகளை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

பன்முகத் தன்மையும், நெருக்கமான பிணைப்பைக் கொண்டதுமான சமூகமொன்றை இறுதியில் அடைவதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை இருவரும் வெளிப்படுத்தவில்லை.

அதாவது தேசிய வாழ்வில் எமது மக்கள் யாவரும் சமத்துவம், நீதியுடன் பங்கேற்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் பன்முகத் தன்மையும் ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்த விடயத்துக்குத் தீர்வு காணத் தவறுவது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்ல சகுனமாக அமையாது.

இந்தத் தருணத்திலாவது இதய சுத்தியுடனான - அர்த்தபூர்வமான - அரசியல் ரீதியான உத்தரவாதங்களை ஏற்படுத்தாவிடின் இன்னும் பல வருடங்களுக்குச் சமூகங்களுக்கு இடையிலான பதற்றம் மற்றும் பிளவுக்கு இடமளித்தது ஆகிவிடும்.

ஆகவே, காலம் பிந்திய இந்தத் தருணத்திலாவது அந்த மாதிரியான அரசியல் யோசனைகளை உள்ளீர்க்குமாறு நாம் வலியுறுத்துகிறோம். நாடு எதிர்நோக்கும் மிக முக்கியமான விடயம் குறித்து நீங்கள் இருவரும் அதிகளவுக்கு பரிசீலனைக்கு எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பொது மக்களின் பரிசீலனைக்காக அரசியல் யோசனைகளை முன்வைப்பதற்கான வரலாற்று ரீதியான இந்தச் சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக்கூடாது. இது வெறுமனே சிறுபான்மை குழுக்களின் சார்பாக விடுக்கப்பட்ட வேண்டுகோள் அல்ல என்பதை நாம் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.

தேசிய ரீதியில் கரிசனையுடைய இந்த விவகாரம் தொடர்பாக அக்கறையுடைய குடிமக்களின் கட்சி சாராத குழுவினால் விடுக்கப்படும் இந்த வேண்டுகோளைக் கவனத்துக்கு எடுங்கள்.” இவ்வாறு இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20100121100348

அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடுங்கள்: முதன்மை வேட்பாளர் இருவரிடமும் இலங்கையின் உயர் கல்விமான்கள் வேண்டுகோள்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு முதன்மை வேட்பாளர்களும் காலம் தாழ்த்தாமல் அரசியல் தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் உயர் கல்விமான்கள் கூட்டாக வேண்டியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில், அக்கறை கொண்ட குடிமக்கள் குழுவின் சார்பில் ஜயந்த தனபால கைச்சாத்திட்டுள்ளார்.

மேலும் - வண.பெலன்வில விமலரட்ண தேரர், பேராயர் ஒஸ்வோல்ட் கோமிஸ், ஆயர் டுலிப் டி சிகேரா, தேவநேசன் நேசையா, ஜெசிமா இஸ்மாயில், பேராசிரியர் சாவித்திரி குணசேகர, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கே.நீலகண்டன், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், ரஞ்சித் பெர்னான்டோ, சித்தி திருச்செல்வம், கே.சி.வெலியமுன, கலாநிதி ஏ.சி.விஸ்வலிங்கம், மனோரி முத்தட்டுவேகம, நாமல் வீரமுனி, பேராசிரியர் ஞானநாத் ஒபயசேகர, பேராசிரியர் அர்ஜுன அலுவிகார, டாக்டர் அநுர ஏக்கநாயக்க, மகேன் தயானந்த, டாக்டர் தீபிகா உடகம, சூரியா விக்கிரமசிங்க, டாக்டர் கயம்பதி விக்கிரமரட்ண, சுரேஷ் டி மெல், பிரசான் டி விஷர், அகிலன் கதிர்காமர், டாக்டர் செல்வி திருச்சந்திரன், ஆர்.சுரேந்திரன், சி.ஜயரட்ண ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

http://www.puthinappalakai.com/view.php?20100121100348

நீங்கள் எல்லோரும் சேர்ந்து தீர்வை முன் வைக்கலாமே.சாதாரண பாமரன் தீர்வை அரசிடம் கேட்கலாம்.அப்பாவி குடி மக்களின் வரி பணத்தில் படித்து பட்டம் பெற்ற உங்களுக்கு இந்த ஆட்சியாளரின் தயவு தேவை.அண்மையில் செய்தி ஒன்று பார்த்தேன்,நாட்டில் அதிகமாகவே படித்த உபவேந்தர்கள் கூடி வேட்பாளர் ஒருவருக்கு காவடி எடுப்பதாக.

வேலயை பாருங்கோ........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.