Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படைப்பாளி குழுமத்திற்கு ஒரு பகிரங்ககடிதம்

Featured Replies

கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்ற முடிவு புலத்தில்தான் எடுக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தான் கஜேந்திரகுமாருக்குத் தலைப்பா கட்டி களத்தில் இறக்கியுள்ளார்கள். : நக்கீரன்

picture048b.jpg

கனடாவில் இருந்து கனடிய தமிழ்ப் படைப்பாளிகள்[ குழுமம் ]கழகத்தின் தலைவர் திரு நக்கீரன் அவர்கள் வழங்கிய நேர்காணலில் உள்ள சில விடயங்கள் தொடர்பாக வீரகேசரி வாரஏட்டின் பத்தி எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளருமான திரு இதயச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள பதிலை இங்கு தருகிறோம்.

நக்கீரன் அண்ணன் வணக்கம்.

1. எமது தீர்விற்கான திறவுகோல் டில்லியிடம் உள்ளதென கூறுகிறீர்கள். நல்லது. எமதுவிடுதலைக்கான வாசலை பூட்டி வைத்துள்ளது இந்தியா ,என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? தமிழ்நாடு- இந்தியா- உலகம் என்கிற பாதை 80 களோடு மாறிவிட்டது. புதிய உலக ஒழுங்கில், இந்துசமுத்திர பிராந்திய ஆதிக்கப்போட்டியில், சீனா-பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வகிபாகத்தை புறக்கணிக்க முடியாது. இலங்கையில் தற்போது நடைபெறும் முதலீட்டுப்போட்டிகளே , இதனை உணர்த்தும். இந்தியாவை மீறி, இலங்கையில் ஓர் அணுவும் அசையாது என்கிற குறுகியவாதங்கள், சரியான பார்வையை வெளிப்படுத்தாது.

”நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும், இந்துசமுத்திர பிராந்திய வல்லரசு இந்தியாதான்” என்கிற உங்கள் வாதம், சீனாவின் ஆசியபிராந்திய வல்லரசு ஸ்தானத்தை மலினப்படுத்துகிறது. சிங்கள தேசமானது, சீனாவையும், இந்தியாவையும் எவ்வாறு தந்திரோபாயமாக கையாள்கிறது என்பதையும், தனியே இந்தியாதான் ஆசிய வல்லரசு, என்று கருதாமல் , சிங்களம் தமது நகர்வுகளை மேற்கொள்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

2 . தமிழ் மக்களின் பேரம்பேசும் ஆற்றலின் அடிப்படையான கோட்பாடு , சமஷ்டியில் இருந்து செயற்படுமா? இங்குதான் சமஷ்டி குறித்த சிக்கல் எழுகிறது.

2 .1 இறைமையுள்ள சமஸ்டியா? அல்லது சிங்கள தேசத்தின் இறைமை, எமக்கு வழங்கும் அதிகார பகிர்வில், நாம் உருவாக்கும் சமஷ்டி கட்டமைப்பா? அதாவது, சிங்களம் ஆணித்தரமாக கூறும் ,முழு இலங்கைக்குமான சிங்கள இறைமையை நாம் ஏற்றுக் கொண்டால், தமிழ் தேசிய இனத்தின் இறைமை- அதன் தனித்துவத்தை, நாமே கைவிட்டது போலாகிவிடும்.

2 .2 கஜேந்திரகுமார் கூறும் ஒரு நாடு- இரு தேசங்கள் என்பது, தனித்துவமான இறைமை கொண்ட இரு தேசங்களின் [NATION ] கூட்டு ஆட்சியின் [confederation ] அடிப்படையில், தீர்வொன்றை வலியுறுத்துகிறது.

2 .3 Federation இற்கும் Confederation இற்குமிடையே உள்ள பாரிய வேறுபாட்டினை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

political solution3 . நீங்கள் நம்பும் இந்தியா, இணைந்த வட-கிழக்கு மாகாணத்தில், சமஷ்டி [ சிங்கள இறைமையின் கீழ்] கட்டமைப்பில் தீர்வொன்றை ஏற்கும்படி சிங்களத்திடம் வலியுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் என்று எதிர்பார்க்கிறீர்களா? எனது பார்வையில், தமிழ் மக்களின் உரிமைக்காக ,சிங்களத்துடன் இந்தியா பகைத்துக்கொள்ளாது என்பதுதான் உண்மை.

4 . 6 வது திருத்த சட்டத்தின் கீழ், தனித்துவமான இறைமையை பேணும் கூட்டாட்சி முறைமையை மட்டுமே, தற்போதைய நிலைமையில், இலங்கையில் முன் வைக்க முடியும். அதைதான் கஜேந்திரகுமார் முன் மொழிகிறார்.

5 . புவிசார் அரசியல் [geopolitics ] மிக வேகமாக மாறிவருகிறது. ஆசியாவில் இலங்கை என்கிற உணர்திறன்மிக்க மையம் , உலக வல்லாதிக்க சக்திகளின் ஆடு களமாக உருமாறுகிறது.

இவர்களுக்கிடையே நிகழும் ஆதிக்கப் போட்டியினையும், முரண் நிலை நகர்வுகளையும் , எமக்கு சாதகமாக கையாளும் நிலை ஏற்படும்வரை , அடிப்படை கோட்பாடுகளில் இருந்து விலகாமல், அதேவேளை, சிங்களத்தை இந்த சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப் படுத்தும் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுப்பதே சரியானதாகும்.

6 . இறுதியாக ஒரு விடயம் , தாயக கோட்பாட்டை கைவிட்டு, மகிந்தர் நடத்தவிருக்கும் ”வட மாகாண சபை தேர்தல் ” இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கு கொள்ளுமா என்பதை தெரியப்படுத்துங்கள்.தாயகம்-தேசியம்-தன்னாட்சி என்று சம்பந்தர் கூறுவது பொய் என கஜேந்திரகுமார் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு, நீங்கள் கூறும் பதில் பல விளக்கங்களை அளிக்குமென நம்புகிறேன்.

மாகாண சபைக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை முடக்குவதுதான் இந்தியா வகுத்திருக்கும் தந்திரோபாயம். தமிழ் மக்களின் பேரம்பேசும் வலு, வட மாகாணசபைக்குள் புதைக்கப்பட்டு விடும்.

எமது விடுதலைக்கான வாசலை இந்தியா பூட்டி வைத்துள்ளது என்பதே உண்மையானது

– இதயச்சந்திரன்-

http://tamilthesiyam.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.