Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1987 அமைதி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1987 அமைதி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம்

[sunday, 2011-02-27 12:24:57]

இந்திய - இலங்கை அமைதி உடன்பாட்டுக்குப் புத்துயிர் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசிடம் இந்தியா அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1987ல் செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை அமைதி உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை இலங்கை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக இந்தியா கருதுகிறது.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை இறுதித் தீர்வாக 1987ம் ஆண்டின் அமைதி உடன்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.

அமைதி உடன்பாட்டில் உள்ளது போன்று மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முன்னேற்பாடுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கம் இலங்கையிடம் கேட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முடிப்பதற்கு இலங்கைக்கு புதுடெல்லி உதவி வழங்கியதன் அடிப்படையில், அமைதி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளது.

அதேவேளை இருநாடுகளுக்கும் இடையிலான அடுத்த பேச்சுக்களின் போது இந்த அழுத்தங்களுக்கு சிறிலங்கா முக்கியத்துவம் கொடுக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

seithy.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த இந்தியா வலியுறுத்தியது பேச்சுவார்த்தை நடத்தவும் முடிபு

* Monday, February 28, 2011, 4:32

1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய சமாதான ஒப் பந்தத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கு இந்தியா கொழும் புக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இந்த சமாதான ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ள சில சரத்துக்களை இலங்கை அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப் பிடப்பட்டுள்ள சரத்துக்கள் சிலவற்றை நடை முறைப்படுத்தாமல் விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை கொழும்பு அவமதிக்கும் வகை யில் நடந்து கொள்வதாக இந்தியா கருதுகின் றது. 1987-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கைச்சாத்திட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்திய அர சாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.

இந்தச் சமாதான ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளமை போன்று மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முன்னேற் பாடுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத் திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு புதுடில்லி உதவி வழங்கிய தன் அடிப்படையில் சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு இந்தியா, இலங்கை அரசாங் கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளது.

அதேவேளை இவ்விரு நாடுகளுக்கும் இடை யிலான அடுத்து கட்டப் பேச்சுவார்த்தைகளின் போது இந்த அழுத்தங்களுக்கு இலங்கை அர சாங்கம் முக்கியத்துவம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.