16 hours 29 minutes ago
வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல் Feb 3, 2026 - 07:21 PM வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) விளக்கமளித்தார். இந்த சட்டமூலத்தின் நோக்கமாக அமைவது வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இடையே உள்ள உறவைப் பாதுகாப்பதாகும் என அமைச்சர் கூறினார். அதன்படி வாடகை அடிப்படையில் வீடொன்றை வழங்கும்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும் என்றும், எந்த வகையிலாவது அந்த ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்றைய தினத்திலிருந்து மேலும் ஒரு மாத காலம் இந்த சட்டமூலத்திற்காக மக்கள் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. அந்த கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு இதை மேலும் திருத்தம் செய்ய முடியும். இறுதி வடிவத்திற்கு அதன் பின்னரே செல்ல முடியும். இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதன் எதிர்பார்ப்பு சட்டரீதியான பிணைப்புக்கு, இணக்கப்பாட்டுக்கு உட்பட்ட வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகை குடியிருப்பாளர் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதாகும். அதில் இருதரப்புக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில்தான் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த செயல்முறையில் வீட்டு உரிமையாளருக்குப் பிரச்சினைகள் வருகின்றன, அவர் சட்டத்தின் முன் தஞ்சம் கோர முடியாத சந்தர்ப்பங்கள் உள்ளன. அதேபோல் வாடகை குடியிருப்பாளர் அநீதிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்த வாடகை குடியிருப்பாளர் மற்றும் வீட்டு உரிமையாளர் என்ற இருதரப்பையும் பாதுகாத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சட்டம் இது. இந்தச் சட்டம் பொருந்துவதே ஏதேனும் இருதரப்பினர் ஒப்பந்தம் செய்துகொண்டால், அந்த ஒப்பந்தத்திற்குப் புறம்பாக யாராவது செயல்பட்டால், அவ்வாறு அநீதிக்கு உள்ளாகும் நபர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் உதவி கிடைக்கிறது. ஒப்பந்தத்திற்கு வெளியே சென்று காலம் தாழ்த்தி இருந்தால் இந்தச் சட்டம் பொருந்தாது, அதற்குப் பொருந்துவது சாதாரண சட்டமாகும். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த ஒப்பந்த காலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. அதாவது ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, இரண்டு மாதங்களுக்கு முன் வெளியேற முடியும் என்று ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் துண்டித்தோ, நீரைத் துண்டித்தோ, பல்வேறு விதமாக துன்புறுத்தல்கள் செய்தோ அனுப்ப முயன்றால் அல்லது இந்த வகையில் அநீதிக்கு உள்ளானால், அந்த நபர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cml6npmel04sgo29nfa1475t7
16 hours 38 minutes ago
ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Feb 3, 2026 - 06:28 PM ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (3) ரிட் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய போதே, ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தம்மிக்க கணேபொல, மாயாதுன்ன கொரயா, பி. குமாரன் ரட்ணம், சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினாலேயே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், புதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின், கோட்டை நீதவான் நீதிமன்றில் உள்ள குறித்த தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது. இம்மனுவின் பிரதிவாதிகளாக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரான ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட பிரதிவாதிகள் தனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் 2022 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் திருப்தியடைந்த நீதவான், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவுகளை சாட்சியங்களாகக் கருத முடியாது எனச் சுட்டிக்காட்டும் மனுதாரர், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நீதவான் எடுத்துள்ள முடிவு சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தனக்கு எதிராக பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவை வலுவிழக்கச் செய்யும் வகையில் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cml6lu35004seo29nn817abfi
16 hours 45 minutes ago
புரியுது உங்களின் வேதனை................அர்ச்சுனாவால முரளிதரன் தப்பினார் இல்லையேன் அவரும் எப்பவோ காணாமல் போய் இருப்பார்........................
16 hours 47 minutes ago
சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்? பட மூலாதாரம்,AFP via Getty Images கட்டுரை தகவல் பீட்டர் ஹோஸ்கின்ஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்சார வாகனங்களில் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. இதன் மூலம் பில்லியனர் ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வடிவமைப்பின் பயன்பாட்டை நிறுத்திய முதல் நாடாக மாறியுள்ளது. சீனாவில் ஷாவ்மி மின்சார வாகனத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட இரண்டு விபத்துகள் உட்பட பல ஆபத்தான சம்பவங்களுக்குப் பிறகு, உலகம் முழுவதிலும் உள்ள பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் மின்சார வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி மின்சார வாகன விபத்துகளில் ஆற்றல் தடைபட்டதன் காரணமாக கதவுகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அரசு ஊடகங்களின்படி, புதிய விதிமுறைகளின் கீழ், கார்களின் கதவுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் இயந்திர ரீதியாகத் திறக்கும் வசதி (காரின் கதவை மின்சாரம் இல்லாவிட்டாலும் கைப்பிடி, கம்பி அல்லது சாவி போன்ற முறையில் திறக்க முடியும்) இருந்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இந்தப் புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. பட மூலாதாரம்,Getty Images 60% வாகனங்களில் இந்த வசதி தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளின்படி, டிக்கி தவிர ஒவ்வொரு பயணிகள் கதவின் வெளிப்புறமும் கைப்பிடியை அணுகுவதற்கு வசதியாக 6 செ.மீ x 2 செ.மீ x 2.5 செ.மீ-க்கு குறையாத அளவில் ஒரு உள்நுழைந்த இடம் இருக்க வேண்டும். காரின் உள்ளே, கதவை எப்படித் திறப்பது என்பதைக் காட்ட குறைந்தபட்சம் 1 செ.மீ x 0.7 செ.மீ அளவுள்ள அடையாளங்கள் இருக்க வேண்டும். ஏற்கெனவே அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, சீனச் சந்தையில் நுழைவதற்கான இறுதிக்கட்டத்தில் இருக்கும் கார்கள், அவற்றின் வடிவமைப்புகளை மேம்படுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் பெறும். மின்சார வாகனங்கள், ஹைப்ரிட் கார்கள் மற்றும் எரிபொருள் செல்கள் மூலம் இயங்கும் கார்களை உள்ளடக்கிய சீனாவின் புதிய ஆற்றல் வாகன சந்தையில் மறைக்கப்பட்ட கைப்பிடிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள 'சீனா டெய்லி' நாளிதழ் மேற்கோள் காட்டிய தரவுகளின்படி, அதிகம் விற்பனையாகும் முதல் 100 புதிய ஆற்றல் வாகனங்களில் சுமார் 60% வாகனங்களில் இந்த வசதி இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் சீனச் சந்தையில் விற்கப்படும் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், உலகளாவிய கார் தொழில்துறையில் அந்த நாட்டின் பெரும் இருப்பு காரணமாக, இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,Getty Images டெஸ்லாவில் பிரச்னையா? டெஸ்லாவின் கதவு கைப்பிடிகள் ஏற்கெனவே அமெரிக்க பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் ஐரோப்பிய அதிகாரிகளும் தங்கள் சொந்த விதிகளை பரிசீலித்து வருகின்றனர். நவம்பரில் டெஸ்லாவின் மின்சாரத்தில் இயங்கும் கதவு கைப்பிடிகள் திடீரென வேலை செய்யாமல், காருக்குள் குழந்தைகள் சிக்கிக்கொண்டதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் ஒரு விசாரணையைத் தொடங்கியது. நிறுவனத்தின் முதன்மை மாடலான டெஸ்லாவின் 2021 மாடல் Y கார்களில் உள்ள கைப்பிடிகள் குறித்து ஒன்பது புகார்கள் வந்ததாகவும் அது தெரிவித்துள்ளது. இதில் நான்கு சம்பவங்களில், கார் உரிமையாளர்கள் இப்பிரச்னையைத் தீர்க்க கார் ஜன்னலை உடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp87gy2x12mo
16 hours 54 minutes ago
சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை Feb 3, 2026 - 06:09 PM 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. 2020 தொடக்கம் 2021 வரை மூன்று தடவைகள் குற்றம் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 27 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அத்துடன் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நட்டஈட்டை செலுத்தாத விடத்து 3 குற்றச்சாட்டிற்கும் மேலும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. -அம்பாறை நிருபர் ஷிஹான்- https://adaderanatamil.lk/news/cml6l5vos04sdo29nn7uk8u67
17 hours 9 minutes ago
"சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல" காலனித்துவ ஆட்சிக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கை இன்னும் கடினமான கேள்விகளைக் கேட்டு வருகிறது: பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? குழந்தைகள் பயத்திலிருந்து விடுபட்டுள்ளார்களா? நீதி சமமானதா? நிலம் திருப்பித் தரப்படுகிறதா? நினைவு கூறல் ஒரு குற்றமா? பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு - சுதந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது, நீதி தாமதமாகிறது, மற்றும் நல்லிணக்கம் நிபந்தனைக்குட்பட்டதாக உள்ளது. உண்மையான சுதந்திரம் தொடங்குவது: உண்மை அடக்கப்படாதபோது, சட்டம் ஆயுதமாகாதபோது, பயம் இல்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கும்போது. அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல - நிறைவேறாத விடுதலையின் நினைவூட்டல். — கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் "Independence is not just a flag or a date" 78 years after colonial rule, Sri Lanka is still asking hard questions: Are women safe? Are children free from fear? Is justice equal? Is land returned? Is memory a crime? For many—especially Tamil-speaking people— freedom remains selective, justice delayed, and reconciliation conditional. True independence begins when: truth is not silenced, law is not weaponised, and every citizen lives without fear. Until then, February 4th is not just a celebration— it is a reminder of unfinished freedom. — Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna துளி/DROP: 2012 ["சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல"] https://www.facebook.com/groups/978753388866632/posts/33616508844664331/?
17 hours 53 minutes ago
அரசியலில் இருந்து பாதுகாப்பு விளையாட்டு என்று எதுவானாலும் தமிழர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஸ்டமாக உள்ளது. அப்போதிருந்து இப்போது வரைக்கும் விளையாட்டிலேயே இலங்கைக்கு எதிராக ஆடும் அணிக்கே ஆதரவாக குரல் கொடுக்க மனம் வேண்டுகிறது.
18 hours 4 minutes ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 96 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 96 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வாசபா - எல்லாளன் உடனான ஒரு ஒப்பீடு: தமிழ் மன்னரான எல்லாளன் 44 ஆண்டுகள் (கிமு 205–161) ஆட்சி செய்தான். அதேபோல, மன்னன் வாசபா கூட, 44 ஆண்டுகள் (கிபி 67–111) ஆட்சி செய்தான். அவர்களின் ஆட்சிக் காலங்களில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை சுவாரஸ்யமானது. எல்லாளன் ஒரு நீதியுள்ள ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார், அதே நேரத்தில் வாசபா நீர்ப்பாசனம் மற்றும் பௌத்த நிறுவனங்களுக்கு அளித்த பங்களிப்புகளுக்காக அறியப்பட்டார். விதி மற்றும் மத நன்மைகள்: மகாவம்சம் பெரும்பாலும் வரலாற்றுக் கதைகளில் புராணக் கூறுகளை உள்ளடக்கியது. நிகழ்வுகள் கர்மா மற்றும் தகுதியால் [karma and merit] ஏற்படுகிறது என்று கூறுகிறது. மதச் செயல்கள் காரணமாக வாசபாவின் ஆட்சிக்காலம் [அதனால் ஆயுட்காலமும்] 12 இல் இருந்து 44 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டது என்ற கருத்து ஒரு உண்மைக் கணக்கை விட ஒரு புராணக்கதையாகும். பண்டைய வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் புத்த சமய நம்பிக்கை மற்றும் புத்தரின் அருள் போன்றவற்றை வரலாற்றில் புகுத்தி, அதை பெருமை படுத்திக் காட்டிட புராணங்கள் அல்லது கதைகள் மூலம் முயலுவது ஒரு வழமையாக காண்கிறோம். ஆனால், புத்தர் இப்படியான செயல்களில் நம்பிக்கையற்றவர், வெறுக்கிறார் என்பது எனோ இவர்களுக்கு புரிவதில்லை? வாசபா அல்லது வசபனின் மகன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasika Tissa, also known as Vakunaha Tiss] என்பவன் பருவக் காளையாக வளர்ந்திருந்தான். வசபன் அவனுக்கு ஏற்ற மனைவியைத் தேடிக் கொண்டிருந்தான். பெண்களின் சுப லட்சனங்களை அறிந்தவர்கள் செங்கல் தொழிலாளியிடம் வளர்ந்து வரும் பெண்ணைப் பற்றி, அரசனிடம் வந்து சொன்னர்கள். அரசன் அவளை அழைத்து வர ஆளனுப்பினன். செங்கல் தொழிலாளி "இவள் ஒரு ராஜகுமாரி" என்று வசபனிடம் கூறினன். சுபகராஜனுடைய மகள் என்பதைக் கூறி அடையாளமாக ராஜ முத்திரையைக் காட்டினன். இது கேட்டு மகிழ்வடைந்த மன்னன் அவளைத் தன் மகனுக்கு மணம் செய்து வைத்தான் என்று அத்தியாயம் 35 கூறுகிறது. வங்கனாசிக தீசனும் அவனது மனைவி, பின்னர் மகா மாதா [Mahamatta] என்று அழைக்கப்பட்டவளும் தமிழர்களாக இருக்கலாம்? இருப்பினும், வங்கனாசிக தீசன் மற்றும் அவரது மனைவி மகா மாதா இருவரும் தமிழர்கள் என்ற கூற்றைப் பொறுத்தவரை, இதை முழுமையாக ஆதரிக்க வலுவான வரலாற்று ஆதாரங்கள் குறைவு. நாளாகமங்கள் முதன்மையாக மன்னர்களின் அரசியல் மற்றும் மத அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன மற்றும் அவர்களின் இன தோற்றம் பற்றிய வரையறுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே வழங்குகின்றன. எனினும் அவர்களின் பெயரின் அமைப்பு, அவர்கள் வாழ்ந்த இடம், மற்றும் அவர்களின் செயல், உதாரணமாக விகாரைக்கு 'வள்ளி விகாரை' என்ற பெயரிடுதல் போன்றவை சான்றுகளாகின்றன. பண்டைய காலக் கதைகளின் படி, மன்னர் வாசபாவுக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் அவரது வம்சாவளியைப் பற்றிய கூடுதல் தரவுகளைக் வழங்குகின்றன. குருநாகல் மாவட்டத்தில் உள்ள தம்மன்னாவாவில், [Tammannava Inscription (Kurunegala District)] பிராமி எழுத்துக்களில் இரண்டாம் நூற்றாண்டின் பாறைக் கல்வெட்டு, தூதாக - மகாராஜா [Dutaga - Maharaja] என்ற ஆட்சியாளரைக் குறிக்கிறது, அவர் "பெரிய மன்னன் வஹாபா " [Vahaba] வின் (வாசபா) மகனாக அடையாளம் காணப்படுகிறார். மொனராகலா மாவட்டத்தின் புத்தலாவில் உள்ள ஹபேசாவில் உள்ள மற்றொரு கல்வெட்டு [Habessa Inscription (Buttala, Monaragala District)] , வாசபாவின் பேரனும் மன்னன் உத்தராவின் [King Uttara] மகனுமான நாகா [Naga] என்ற உப-ராஜாவைக் [துணை அரசனை] குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டுகள் வரலாற்றாசிரியர் பரணவிதான (1969) வாசபாவுக்கு மூன்று மகன்கள் இருந்ததாகக் கூற வழிவகுத்தன: தீசன் (வங்கனாசிக தீசன்), தூதாக மற்றும் உத்தரா. வாசபாவின் மரணத்தைத் தொடர்ந்து, இராச்சியம் இந்த மூவருக்கும் இடையில் பிரிக்கப்பட்டது என்றும் தீசன் தலைநகரான அனுராதபுரத்தை ஆட்சி செய்தான் என்றும்; தூதாக குருநாகல் பகுதியை ஆட்சி செய்தான் என்றும்; உத்தரா ருஹுணாவை ஆட்சி செய்தான் என்றும் முடிவு செய்தார். இந்தக் கோட்பாடு, வாசபாவின் மரணத்திற்குப் பிறகு, அவனது மகன்கள் தந்தையிடமிருந்து மகனுக்கு என்ற கடுமையான வாரிசுரிமையை, மற்ற எல்லா இலங்கை அரசுகளிலும் பின் பற்றியது போல பின்பற்றாமல், அதற்குப் பதிலாக மூவரும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்ற பரணவிதானவின் கருத்து, மற்றும் பாரம்பரிய நாளாகமங்கள் (மகாவம்சம், தீபவம்சம் போன்றவை) தூதாக மற்றும் உத்தராவைப் பற்றிக் குறிப்பிடாததாலும் உலகளவில் அவரின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால், சில வரலாற்றாசிரியர்கள் கல்வெட்டுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மன்னர்களைக் காட்டிலும், பிராந்திய ஆட்சியாளர்கள் அல்லது உள்ளூர் இளவரசர்களைக் குறிக்கலாம் என்று வாதிடுகின்றனர். Part: 96 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Vannakatissa was Vasabha’s son and the king was looking for a suitable marriage partner for him. By another storey in the chapter 35, Vannakatissa is happened to marry the daughter of the previous king Subharajah. The Husband Vannakatissa and the wife, later Mahamatta, are both Tamils. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 97 தொடரும் / Will follow துளி/DROP: 2010 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 96 https://www.facebook.com/groups/978753388866632/posts/33615883958060153/?
18 hours 6 minutes ago
எப்ஸ்டீனமே இவ்வளவு இருந்திருக்கு… அப்ப அவரின் பாஸ் புட்டினிடம்?
18 hours 12 minutes ago
இன்னொரு விடயம். மேலே எழுதபட்டுள்ளது மிக தந்திரமாக தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏதுவாக வரலாற்றை திரிக்கும் முயற்சி. புலிகள் அழிய முன்னோ, அழிந்து கொண்டிருக்கும் போதோ…புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என சம்பந்தர் கூறியதில்லை. சங்கரி, டக்லஸ், கருணாதான் அப்படி கூறியவர்கள். சம்பந்தர் சொன்னது… புலிகள் அழிந்த பின், அவர்களின் அழிவுக்கு பின் தீர்வை தருவோம் என சொன்னோர்… சொன்னபடி தந்தால்…புலிகளின் அழிவை ஒரு நல்ல விடயமாக கருதலாம் என்பதே. இரெண்டுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. இந்தியாவில் போய் போனை ஆப் பண்ணி போட்டு குப்புற படுத்தது - இதை அத்தனை எம்பிகளும் செய்தார்கள். சிலர் இந்தியாவில், சிலர் இலண்டனில், ஈழவேந்தன் கனடாவில், சிலர் கொழும்பில்…. குப்புறபடுத்தார்கள்…எங்கே என்பதுதான் வித்தியாசம். பொன்னரும், சந்திரநேருவும், குதிரை கஜனும்…போரை நிறுத்த சொல்லி ஜெனிவாவில் தீக்குளிக்கவும் இல்லை, இலண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் இல்லை. இவ்வளவு ஏன், முடிவு நெருங்கியதை அறிந்த பின், புலிகளின் தளபதிகள் கூட குடும்பங்களை ஆமி, நேவியிடம் அனுப்பி வைத்தனர்.
18 hours 15 minutes ago
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 7 🌙 பாகம் 07 – மேகங்களைத் தொட்ட கோபுரம் (Palm Tower – பாம் கோபுரம்) துபாயில் காலை சூரியன் வானத்தில் ஒரு தங்க முத்துப் போல உதித்தது. தாத்தா மற்றும் மூன்று பேரன்களும் ஒரு புதிய சாகசத்திற்காக புறப்பட்டபோது காற்று மென்மையாக, சிறு வெப்பத்துடனும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் வீசியது. இன்று அவர்கள் மூச்சடைக்க வைக்கும் காட்சிகள் மற்றும் மேகங்களுக்கு மத்தியில் நடப்பது போன்ற உணர்வைத் தரக்கூடிய ஒரு இடத்துக்கு பயணிக்க முடிவு செய்திருந்தார்கள். தீவின் மையப்பகுதியில் அழகாக உயர்ந்து நிற்கும் பாம் கோபுரத்தை, நிலன் அவர்களின் கார் சாளரத்தின் ஊடாக தூரத்திலேயே பார்த்தான். அதன் தங்கக் கண்ணாடிச் சுவர்கள் [golden glass walls], சூரிய ஒளியை பிரதிபலித்து, கடலின் மேல் மிதக்கும் பொற்கலன் போல் தோன்ற வைத்தது. “தாத்தா, பாருங்க! இது தண்ணீரின் மேல் கட்டப்பட்ட கோபுரம் மாதிரி இருக்கு!” என்று நிலன் ஆச்சரியமாய் சொன்னான். திரேன் மகிழ்ச்சியுடன், கண்கள் விரிந்து தலையசைத்தான். “மேலே இருந்து பார்த்தால், பாம் வடிவிலான முழு தீவையும் நாம் உண்மையில் பார்க்க முடியுமா?” தாத்தா புன்னகையுடன், “ஓ ஆமாம், பசங்களா. இன்று, கற்பனை எப்படி நிஜமாகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள்.” என்றார். அவர்கள் பாம் டவரில் [Palm Tower] அடியெடுத்து வைத்ததும், மென்மையான இசை காற்றை நிரப்பியது. லிஃப்ட் [elevator or lift] கதவுகள் மூடப்பட்டன, மேலும் அவை உயரத் தொடங்கியதும் விளக்குகள் மங்கின - 10 ஆவது மாடி, 20, 30... இறுதியில் 52 ஆவது மாடி – பாம் கோபுரத்தில் உள்ள காட்சிகள் பார்க்கும் தளத்துக்கு ['The View at The Palm'] அடைந்தனர். அவர்கள் அங்கு அடைய, கதவுகள் திறக்கப்பட்டன, தாத்தாவும் மூன்று பேரன்களும் வானத் தளத்தில் [ஸ்கைடெக்கில் / skydeck] இறங்கினர். ஒரு மென்மையான காற்று அவர்களை வரவேற்றது. அவர்கள் இதுவரை கண்டிராத ஒரு காட்சி அவர்கள் முன் விரிந்தது - முழு பாம் ஜுமேராவும் [Palm Jumeirah], அதன் இலைகளும் வட்டங்களும் [பனங்காய் வடிவில்] நீலக் கடலில் [turquoise sea] மிதக்கும் ஒரு பெரிய பாம் மரத்தைப் [Palm tree] போல சரியான வடிவத்தில் இருந்தன. பாம் ஜுமேரா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் உருவாக்கிய ஒரு செயற்கைத் தீவு ஆகும். பாம் ஜுமேரா தீவின் கட்டுமானம் 2001 ம் ஆண்டு தொடங்கியது. இத்தீவை 94.000.000 m3 மணலையும் ஏழு மில்லியன் டன் பாறைகளையும் கொண்டு உருவாக்கினார்கள். “விமானத்திலிருந்து கீழே பார்ப்பது போல் இருக்கிறது!” என்று திரேன் கிசுகிசுத்தான். நிலன் மூச்சு விடாமல் கண்ணாடிச் சுவரில் கைகளை அழுத்தினான். “எனக்கு அட்லாண்டிஸ் ஹோட்டல் [Atlantis Hotel] தெரியுது ... கடற்கரைகள் கூட!” என்று ஒரு போடு போட்டான். குட்டி ஆரின் வானத்தை நோக்கி தன் சின்னக் கையை நீட்டி, மிதக்கும் மேகங்களைப் பார்த்து சிரித்தான். தாத்தா அவனைத் தூக்கி, மெதுவாகச் சொன்னார், “என் குட்டியே ... பார் கீழே, மேலிருந்து நீ பார்க்கும் போது உலகம் மிகவும் அமைதியாகத் தெரிகிறது இல்லையா ?.” என்று கேட்டார். அவர்கள் நால்வரும் மேகங்களில் தொங்கும் பாலமான, கண்ணாடி வான் நடைபாதையில் [ஸ்கைவாக்கில் / skywalk] கால் வைத்தனர் - அது ஒளிபுகும் கண்ணாடி பலகைகளால் [transparent glass panels] ஆன ஒரு பாலம் ஆகும். நிலன் ஒரு கணம் தயங்கினாலும், பின் கீழே சிறிதாக தெரிந்த சாலைகளையும் கார்களையும், தாத்தாவுடன் பார்த்தான். “கவலைப்படாதே, நிலன்,” தாத்தா அவனின் முதுகைத் தட்டி மெதுவாகச் சொன்னார். “அது வலிமையானது - நம் தைரியத்தைப் போலவே அதுவும் வலிமையானது.” என்றார். அவர் தனது பேரனின் கையைப் பிடித்தார், இருவரும் சேர்ந்து கண்ணாடி பாலத்தில் முன்னேறினர். என்றாலும் திரேன் தைரியமாக தனியாக சிரித்தபடி தாத்தாவை பின் தொடர்ந்தான். அவர்கள் அடியடியாக நகர்ந்தபோது கண்ணாடி கீழே மின்னியது; நீலக் கடல் அதன் அடியில் வைரம் போல ஜொலித்தது. கடற்பறவைகள் [அல்லது கடற்காகம் / Seagulls] தூரத்தில் வானில் பறந்து சென்றன. சூரிய ஒளியில் அவற்றின் சிறகுகள் வெண்மையாக மின்னின. பூமிக்கும் வானத்துக்கும் இடையில் பாதி தூரத்தில், தாத்தாவும் மூன்று பேரன்களும் ஒரு கனவில் நடந்து செல்வது போல் - அது அவர்களுக்கு இருந்தது. “தாத்தா,” என்று, தாத்தாவின் பார்வையைத் தன்மேல் பதித்து, “மேகங்களுக்கு கதவுகள் இருந்தால், இது அவற்றில் ஒன்றாக இருக்கும்!” என்று திரேன் கூறினான். தாத்தா மெதுவாகச் சிரித்து, “ஆம், இன்று, நாங்கள் அதைத் திறந்துவிட்டோம்." என்று ஒருபடி மேலே போனார். அவர்கள் தொலைநோக்கிகள் அமைந்த பார்வையிடும் பகுதிக்குச் சென்றனர், அங்கு ஒரு வழிகாட்டி பாம் ஜுமேரா [Palm Jumeirah] தீவு எப்படி உருவானது என்று விளக்கினார் - கடலில் மணலைக் கொண்டு, பாறையை கொண்டு மனித கற்பனை மற்றும் தொழில்நுட்பத்துடன் வடித்த அற்புதம் அது - 🌴பாம் மரத்தை போல் உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் கதை இதுதான் என்றார்! "ஒரு காலத்தில், இது வெறும் கடல் - ஆனால் யாரோ கடலையே வடிவமைக்க கனவு கண்டார்கள். இது கனவுகளின் மரம் என்று கூட கூறலாம் " தாத்தா, காட்சிகளை உன்னிப்பாக பார்த்துக்கொண்டே கூறினார். நிலன் ஒரு கணம் சற்று யோசித்துவிட்டு, "நாங்கள் மணல் கோட்டைகளை எப்படி கட்டுகிறோம் என்பது போல - ஆனால் இன்னும் பெரியது." என்றான் குறும்பாக. "சரியாகச் சொன்னாய், பாம் மர கோபுரம் உலகின் மிகப்பெரிய மணல் கோட்டை [sandcastle] என்று தாத்தா சிரித்தார். அதன் பின் அவர்கள், அங்கிருந்த வான் கஃபேக்கு [🍹Sky Café] போனார்கள். அங்கு சிறுவர்கள் ஜன்னல் ஓரமாக அமர்ந்து குளிரான பழச்சாறுடன் குரோசண்ட்களை [fruit juice and croissants] சுவைத்தனர். அப்பொழுது அங்கே, கண்ணாடி வழியாக சூரிய ஒளி உள்ளே வந்து, தரையில் மேகங்களின் மென்மையான பிரதிபலிப்புகளை வீசியது. ஆரின் கடந்து செல்லும் ஒவ்வொரு கடற்பறவைக்கும் கைதட்டினான். அதே நேரத்தில் நிலன், தான் பார்க்கும் 'நீல நீர் மற்றும் வெள்ளை படகுகளால் சூழப்பட்ட ஒரு பனை [பாம்மர] வடிவ தீவை' வரைய முயன்றான். திரேன் அதன் மேலே சிறிய நட்சத்திரங்களைத் தீட்டி, "இரவில் இப்படித்தான் இருக்கும்" என்று கூறினான். தாத்தா மெதுவாகத் தேநீர் அருந்திக்கொண்டு கீழே பார்த்து, "தெரிகிறதா, சிறுவர்களே? இங்கிருந்து, உலகம் ஒன்றுபட்டதாகத் தெரிகிறது - கடல், நிலம் மற்றும் வானம். எல்லாம் நம்மைப் போலவே இணைக்கப்பட்டுள்ளது." என்றார். 🌅மாலை நேரம் மெதுவாக மறைந்துகொண்டு இருந்தது. வானம் சிகப்பு, ஆரஞ்சு, தங்க நிறங்களால் பூசப்பட்டது. கோபுரத்தின் கண்ணாடிச் சுவர்கள் மினுமினுக்க, கீழே நகரத்தின் விளக்குகள் நட்சத்திரங்களைப் போல மின்னின. “தாத்தா,” நிலன் மெல்லச் சொன்னான், “நாம் மேகங்களில் இருக்கிறோம் போலிருக்கிறது.” தாத்தா தன் தலையை அசைத்து, கைகளை அவர்களின் தோள்களில் வைத்தார். “ஆம், என் குட்டிகளே. ஆனால் நினைவில் கொள்க — கீழே இறங்கினாலும், இந்த மேகங்கள் உங்கள் உள்ளத்தில் என்றும் இருக்கும்.” அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று சூரியன் கடலில் மறையும் அற்புதக் காட்சியைப் பார்த்து, தமது அன்றைய நாளை உண்மையிலேயே வானத்தைத் தொட்ட நாளாக நினைவுகூர்ந்தனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 08 தொடரும் துளி/DROP: 2009 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 7 https://www.facebook.com/groups/978753388866632/posts/33615262391455643/?
18 hours 37 minutes ago
அன்மையில் விளையாடின விளையாட்டை எல்லாம் பார்க்கனும் நான் இத்தாலி அணிய கவனிக்க வில்லை இத்தாலி அணியில் நல்ல வீரர்கள் விளையாடுகினம்.............. போட்டி தொடங்க முதல் கலந்து விட்டேன் அண்ணா....................
18 hours 40 minutes ago
சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது . கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து , "நீ என்ன பண்ணுவியோ தெரியாது . ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்." என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது . அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும் . யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் . தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது , அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற , அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு. ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு , பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல . என்னைப் பாத்ததும் , 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா? ' ன்னு கேட்டா. நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன் . நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான் . எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி . அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன் . அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான் . நான் உடனே கிச்சனுக்குள்ள போய் , பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து , பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு , அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு , அவன நசுக்கி கொன்னுட்டேன். இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்." அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம் ." என்றது . அவன் போன சற்று நேரம் கழித்து , இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற , அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான். "நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம் . அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க . திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன் , பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன் . நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி. அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ் அ என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்." அவன் பேசி முடித்ததும் , தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது. மூன்றாவதாக ஒருத்தன் வந்தான் . அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது . அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன். அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா . நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான் . அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா . நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...? Paranji Sankar
19 hours 46 minutes ago
இத்தாலி அணியில் வெளி நாட்டு வீரர்கள் அதிகம் தலைவரே இத்தாலி பெரிய அணிகளை வெல்லவும் கூடும்..........................
19 hours 52 minutes ago
@goshan_che இப்படி ஆதாரம் கேட்டு ரோதனை பண்ணக் கூடாது. நான் பாடினால் அது கவிதை. நான் வரைந்தால் அது ஓவியம். அப்படி ஏற்று கொள்ளப் பழகவேணும். அதுவே நல்ல பிள்ளைக்கு அழகு. நாங்களும் அப்படி தான் வளர்ந்தனாங்கள். அது தான் எங்க மரபு, பாரம்பரியம், கலாசாரம்.
20 hours 5 minutes ago
இருப்பு 168,123.35 +10,680.27=178,803.62 தற்போதைய வங்கி மீதி. இன்று ரூபா 10,680.27 சதம் வங்கிக்கணக்கிற்கு நன்கொடை வந்துள்ளது. அனுப்பி வைத்த நன்கொடையாளரிற்கு உளப்பூர்வமான நன்றிகள்.
20 hours 11 minutes ago
இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறை Feb 3, 2026 - 04:49 PM இலங்கை கடற்பரப்பிற்கும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் டிசம்பர் 28 ஆம் திகதி கைதான மூவரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி 2 ஆம் திகதி கைதான 11 இந்திய மீனவர்களையும் இம்மாதம் 13 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cml6iaezl04sbo29n9drcx5um
20 hours 11 minutes ago
பகிடியான சிகப்பு அட்டை தருணங்கள் .......! 😂
20 hours 14 minutes ago
கறுப்பு ஜூலையால் இல்லாமல்போன ஜப்பானின் பெரும் முதலீடு - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் #indrajithkumaraswamy #formergovernor #powermoves #NewsFirstTamil #lka #srilanka
20 hours 34 minutes ago
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 100க்கு மேற்பட்டோர் பலி! 03 Feb, 2026 | 04:51 PM அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் வீசும் கடும் பனிப்புயலால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல மாநிலங்களில் வீசிவரும் அதிகப்படியான பனிப்புயல் காரணமாக விபத்துக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும் பல இடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கடுமையான குளர் நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. வாகன விபத்துக்கள், பனிச்சரிவுகள், பனியை அள்ளி வீசுவதால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்கள் முதலான காரணங்களால் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நியூயோர்க் நகர அதிகாரிகள் 14 பேர் குளிரில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறபோதும், அவர்களது இறப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய இந்த பனிப்புயல் காரணமாக வட, தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிக் குவியல்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237724
Checked
Wed, 02/04/2026 - 07:31
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed