புதிய பதிவுகள்2

ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?

20 hours 59 minutes ago
ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கெய்லின் டெவ்லின், டாம் எடிங்டன், யி மா பிபிசி வெரிஃபை 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஹோர்மூஸ் நீரிணை அருகே அவ்வப்போது கப்பல்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக 100க்கும் சற்று குறைவான கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன. உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து தினசரி போக்குவரத்து சுமார் 95% குறைந்துள்ளது. கூட்டு கடல்சார் தகவல் மையத்தின் கூற்றுப்படி, போருக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 138 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் சென்றன. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை சுமந்து சென்றது. கப்பல் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் வழங்கிய தரவுகள், இந்த மாதத்தில் இதுவரை 99 கப்பல்கள் மட்டுமே இந்த குறுகிய நீரிணையைக் கடந்துள்ளதை காட்டுகின்றன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 6 கப்பல்கள் மட்டுமே ஆகும். இந்த பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பிபிசி வெரிஃபை ஆய்வு செய்தது. எந்தெந்த கப்பல்கள் சமீபத்தில் இந்த பாதையைக் கடந்த கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு இரானுடன் தொடர்புடையவை என்று பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. இதில் இரானில் பதிவு செய்யப்பட்ட14 கப்பல்களும், இரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தடைகளை எதிர்கொள்ளும் பிற கப்பல்களும் அடங்கும். ஒன்பது கப்பல்கள் சீனாவுடன் தொடர்புடைய முகவரிகளைக் கொண்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானவை, அதே சமயம் ஆறு கப்பல்கள் இந்தியாவைத் தாங்கள் சேருமிடமாகக் குறிப்பிட்டுள்ளன. இரானுடன் தொடர்பில்லாத சில கப்பல்கள் அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதையும் இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. இதில் கிரேக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் அடங்கும். நீரிணையை வெற்றிகரமாகக் கடக்கும் சில கப்பல்கள் வழக்கத்தை விட நீண்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஓர் எண்ணெய் கப்பலின் பயணத் தரவுகள், அது மார்ச் 15 அன்று நீரிணை வழியாகச் செல்லும்போது, நடுப்பகுதியில் உள்ள வழக்கமான பாதையைத் தவிர்த்து, இரானியக் கடற்கரைக்கு மிக நெருக்கமாகப் பயணித்ததைக் காட்டுகின்றன. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல் திட்டம் என்ன? அமெரிக்க பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ரேண்ட் கார்ப்பரேஷனின் மூத்த ஆராய்ச்சியாளர் பிராட்லி மார்ட்டின், அந்த கப்பல் "இரானிடமிருந்து வந்த சில அறிவுறுத்தல்களுக்கு இணங்கி" செயல்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார் அந்த கப்பல் பயணித்த பாதையானது, அங்கு கண்ணிவெடிகள் இருப்பதையோ அல்லது இரானிய அதிகாரிகள் அந்த கப்பலை எளிதாக அடையாளம் காண்பதற்கான முயற்சியையோ குறிக்கலாம் என்று அவர் கூறுகிறார். கப்பல்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவதன் மூலம், அவை இரானின் கடல் எல்லைக்குள்ளும் இரானின் கடல்சார் விதிகளுக்குள்ளும் நுழைகின்றன என்று விண்ட்வார்ட் கடல்சார் பகுப்பாய்வை சேர்ந்த மிச்செல் வைஸ் பாக்மேன் கூறுகிறார். "தாக்குதல் மற்றும் கண்ணிவெடிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் இரான் இந்த நீரிணையை மூடி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதே நான் இதிலிருந்து தெரிந்துகொள்வது". "அதனால்தான் அனைவரும் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் செல்வதற்கு பதிலாக, இரானின் கடல் எல்லைப் பகுதியை ஒட்டியே செல்ல வேண்டியுள்ளது," என்று அவர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை பகுப்பாய்வு மையத்தின் மைக்கேல் கோனலும், கப்பல்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதை ஒப்புக்கொள்கிறார். ''வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இரானிய அதிகாரிகளுடன் அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம்.'' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல் கப்பல் போக்குவரத்தின் முன்னுள்ள அச்சுறுத்தல்கள் மோதல் தொடங்கியதிலிருந்து, இரானியக் கடற்கரையை ஒட்டி 20 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இவை அனைத்தும் ஹோர்மூஸ் நீரிணையின் நேரடி அருகாமையில் மட்டும் நடக்கவில்லை. மார்ச் 11 அன்று, தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட 'மயூரி நாரி' என்ற சரக்குக் கப்பல் அந்தப் பாதையைக் கடக்க முயன்றபோது, இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,மயூரி நாரி கப்பல் மார்ச் 11 அன்று தாக்கப்பட்டது. அந்த கப்பலின் 23 ஊழியர்களில் மூன்று பேரை இன்னும் காணவில்லை. கப்பல் தாக்கப்பட்டபோது அவர்கள் என்ஜின் அறையில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தப்பிப்பிழைத்த ஊழியர்கள் "கடலில் இரண்டு வெடிப்புகளால் தாக்கப்பட்டபோது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகினர்" என்று அக்கப்பலின் உரிமையாளர்கள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். அதே நாளில் கிரேக்கத்துக்குச் சொந்தமான 'ஸ்டார் க்வினெத்' மற்றும் அமெரிக்காவிற்குச் சொந்தமான 'எம்டி சேப்சீ விஷ்ணு' ஆகிய இரண்டு கப்பல்களும் தாக்கப்பட்டன. "வணிகக் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் போர்க்களங்களாக மாற முடியாது," என்று எம்டி சேப்சீ விஷ்ணுவின் உரிமையாளர் பிபிசி வெரிஃபையிடம் கூறினார். இராக் அருகே கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். எரியும் கப்பலில் இருந்து தப்பிக்க 28 ஊழியர்களும் தண்ணீரில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று எஸ்வி அஞ்சன் தெரிவித்தார். "அவர்கள் படை வீரர்கள் அல்ல... அவர்கள் உலகளாவிய வர்த்தகத்தை இயங்க வைக்கும் தொழில் வல்லுநர்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,துபை அருகே உள்ள வணிக கப்பல்கள் நிலவியல் அமைப்பை சாதகமாக பயன்படுத்தும் இரான் டிரோன்கள், ஏவுகணைகள், அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் கண்ணிவெடிகள் எனப் பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்துகின்றன என்று கிங்ஸ் கல்லூரியின் ஃப்ரீமேன் வான் மற்றும் விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த அருண் டாசன் கூறுகிறார். "மெதுவாகவும் கவனமாகவும் செயல்படும் ஒரு பாரம்பரிய கண்ணிவெடி அகற்றும் கப்பல் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது, கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வது மிகவும் கடினம்," என்று அவர் கூறினார். நீரிணையின் நிலவியல் அமைப்பையும் இரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நீரிணை குறுகலாகவும் ஆழம் குறைவாகவும் இருப்பது மட்டுமின்றி, அதன் கடற்கரைப் பகுதி மலைப்பாங்கானது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை இது இரான் உயரமான இடங்களிலிருந்து தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது. இதனால் கப்பல்கள் எதிர்வினையாற்றுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது. கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பல கப்பல்கள் ஏஐஎஸ் (ஏஐஎஸ் - தானியங்கி அடையாள அமைப்பு) எனப்படும் தங்களின் கண்காணிப்பு அமைப்பைத் திட்டமிட்டு அணைத்து வைப்பதாக தெரிகிறது. "இந்தக் கப்பல்களில் பெரும்பாலானவை தங்கள் கண்காணிப்பு சாதனங்களை அணைத்தபடி கடந்து செல்கின்றன" என்கிறார் கெப்லர் நிறுவனத்தைச் சேர்ந்த டிமிட்ரிஸ் அம்பாட்ஸிடிஸ். ஓமன் வளைகுடாவிற்குள் நுழையும்போது தங்களின் கண்காணிப்புக் கருவிகளை அணைப்பதன் மூலம், படகுகள் வரைபடங்களிலிருந்து மறைந்து விடுகின்றன. பின்னர் பல மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு மற்றொரு இடத்தில் மீண்டும் தோன்றுகின்றன. இது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை மறைக்க உதவினாலும், நீரிணையில் கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கெப்லர் போன்ற நிறுவனங்களுக்கு சவால்களை ஏற்படுத்துகிறது. "அனைத்துத் தகவல்களும் எங்களது பகுப்பாய்வாளர்களால் நேரடிச் சரிபார்ப்பு மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன," என்று அம்பாட்ஸிடிஸ் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். கூடுதல் தகவல் : டேனியல் பலம்போ மற்றும் ஜோசுவா சீதம் கிராபிக்ஸ் : டாம் ஷீல். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c203r13d2rzo

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

21 hours 3 minutes ago
தம்பர் & மக்கர் பிரைவேட் லிமிடெட் 😂 Politics makes strange bedfellows என்பார்கள். உக்ரேன் ஈயூ மெம்பர் ஒரு போதும் நேட்டோவில் இணையாது டொன்பாஸ் இராணுவம் நீக்கப்பட்ட சுயாட்சி அலகு (ரஸ்ய ஆளுகை) அல்லது இரெட்டை இறைமை அலகு (dual sovereignty) - பெயரளவில். மரியுபோல் மீண்டும் உக்ரேனிடம் ரஸ்ய ஏரி வாயு மீண்டும் சந்தைக்கு இப்படி ஒரு டீலுக்கு தம்பரை வெட்டி விட்டு, ஐரோப்பா போகக்கூடும்.

உங்களுக்கு தெரியாத வட கொரியா

21 hours 4 minutes ago
என்னுடைய இரத்த உறவினர் (அவருக்கும் எனக்கும் ஒரே "பிளட் குறூப்", அப்ப இரத்த உறவினர் தானே?) ஒருவர் வட கொரியாவின் உழைப்பாளர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரைப் றைற்றர் திருத்துபவராக இருக்கிறார். அவர் மூலம் தான் நான் தலைவன் கிம் பற்றிய சகல தகவல்களையும் பெற்று இங்கே பகிர்கிறேன் . இதை வாய் (oral) மூலம் நான் பெற்றுக் கொண்ட தகவல் என்று சொல்லக் கொஞ்சம் கூச்சமாகத் தான் கிடக்குது, என்றாலும் oral ஐ எண்டு oral தானே சொல்லலாம்😎?

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

21 hours 4 minutes ago
எண்ணெய்க்கு ரசியாவை நோக்கி படையெடுக்கிறார்களாம். முன்னரைப் போல மலிவு விலை இல்லையாம்.

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

21 hours 6 minutes ago
ஜோர்ஜ் புஸ் உட்பட்ட பல அமரிக்க ஜனாதிபதிகள் போக விரும்பாத சந்து ஹோர்மூஸ்/ஈரான். இராணுவ ஆய்வாளர்கள் கூட சொல்லி உள்ளார்களாம் தரை படையை இறக்காமல் ஹோர்மூசை பாதுகாக்க முடியாது. தரைபடையை இறக்கினால் அது நிரந்தர யுத்தமாக மாறும் என. ஹோர்மூசை அமரிக்காவல் திறக்க முடியாது போனால் - அரபு நாடுகள் ஈரானுடன் ஒத்து போவதை தவிர வேறு வழியில்லை. கியூபாவை தம்பர் தன் வசமாக்கினால் கூட, வளைகுடாவில் மேலே சொன்னது போல் ஒரு அடி விழுந்தால் - அதை கியூபா வெற்றி ஈடு செய்யாது.

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

21 hours 10 minutes ago
கியூபாவைப் பிடித்து அதை சரி செய்ய முனைகிறார். அதுவும் சரிவராது போல. ரசியா கியூபாவுக்கு உதவி செய்கிறது. Tax செய்து முடிந்துதோ? எல்லோருக்கும் வழமையைவிட கூட வந்திருப்பதாக சொல்கிறார்கள். இதன் முழுவிபரம் தெரியவில்லை.

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

21 hours 15 minutes ago
தம்பரை போல தம்மையும் கொண்டுபோய் ஹோர்மூஸ் சந்தில் சாணி அடி வாங்க வைத்து விட்டு, சமர் நேரம் உக்ரேனில் உள்ளே இறங்கி அடிக்கலாம் என செத்த கிளி கணக்கு போட்டிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஐரோப்பிய தலைவர்கள் தம்பர் போல் புட்டினின் பொக்கற்றுக்குள் இல்லை என்பதால் ஐரோப்பா, யூகே கழண்டு கொண்டன. இதனால் வீழ்ந்து கொண்டிருந்த ஸ்டாமரின் மக்கள் ஆதரவு கூட ஆரம்பித்த்துள்ளது. மக்ரோன், மேர்சுக்கும் இப்படித்தான் என நினைக்கிறேன்.

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

21 hours 15 minutes ago
உலக முடிவு மலைத் தொடரில் 'செல்பி' எடுக்கச்சென்று தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவி பாதுகாக்க மீட்பு Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 10:56 AM நுவரெலியாவில் அமைந்துள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் ‘செல்பி’ எடுக்க முயன்ற போது சுமார் 50 அடி உயரமுள்ள பாறையிலிருந்து தவறி விழுந்தார். வியாழக்கிழமை (19) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கீழே விழுந்த மாணவி மரக் கிளை ஒன்றில் தொங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை கண்டு கொண்ட ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் சாரதி ஒருவர், தனது உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் கீழிறங்கி, கிளையில் தொங்கிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு அருகிலிருந்த பாறையில் அமர்த்தியுள்ளார். பின்னர் பட்டிப்பொல பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இலங்கை 3வது சிங்கப் படைப்பிரிவு இராணுவத்தினர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸார் இணைந்து மேற்கொண்ட பல மணி நேர மீட்பு நடவடிக்கையின் மூலம் மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்கா முகாமையாளர் மஞ்சுள மொனரதென்ன தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241437

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

21 hours 17 minutes ago
🤣ஈலோன் மஸ்க்கும் ட்ரம்பும் டோஜி-DOGE மூலம் சிக்கனமாகச் சேமித்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தந்த மூவாயிரம் டொலர் இலாபச் செக்கே இன்னும் செலவழித்து முடியவில்லை! இதற்கிடையில் இந்த எண்ணை ஏற்றுமதி இலாபத்தையும் ட்ரம்ப் எங்களுக்குத் தந்தால், கடவுளே எங்க கொண்டே நாங்கள் காசைக் கட்டி வைக்கிறது😂?

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

21 hours 17 minutes ago
“ஈரான் சிதைக்கப்படுகிறது; போர் விரைவில் முடிவுக்கு வரும்” - நெதன்யாகு உறுதி டெல் அவிவ்: “ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய நெதன்யாகு, “முதலில், நான் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன். பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிப்பதற்கான பாகங்களையும், அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிக்கும் அவர்களின் தொழிற்சாலைகளையும்தான் நாம் இப்போது அழித்துக் கொண்டிருக்கிறோம். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுதக் கிடங்கு மிகப் பெரிய அளவில் சிதைக்கப்பட்டு அழிக்கப்படும். இஸ்ரேல் தான் அமெரிக்காவை இந்த போருக்குள் இழுத்துவிட்டது என்பது உண்மையில்லை. அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்ல முடியும் என உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறார்களா?. அமெரிக்காவுக்கு எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ, அதன் அடிப்படையிலேயே எப்போதும் அவர் தனது முடிவுகளை எடுக்கிறார். அதிபர் ட்ரம்ப்புடன் நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், எங்கள் ராணுவங்கள், உளவுத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம், நாங்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை அடைந்து வருகிறோம். இந்தப் போரில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. நாங்கள் முழு மத்திய கிழக்கையும் பாதுகாக்கிறோம். மேலும், முழு உலகத்தையும் பாதுகாக்கிறோம் என்று நான் துணிந்து கூறுவேன். ஈரான் விஷயத்தில் நானும் ட்ரம்ப்பும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம் உலகம் ட்ரம்ப்புக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது. ட்ரம்ப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைக்கும். முதல் உண்மை, தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகத்துக்கு எதிராக இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டது. இரண்டாவது உண்மை, எதிர்காலத் தாக்குதல்களைத் தள்ளிப்போடுமாறு அதிபர் ட்ரம்ப் எங்களிடம் கேட்டுக்கொண்டார், நாங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம். “ஈரான் சிதைக்கப்படுகிறது; போர் விரைவில் முடிவுக்கு வரும்” - நெதன்யாகு உறுதி

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

21 hours 22 minutes ago
தற்காலிக இலாபம். ஹோர்மூசை திறக்க அமரிக்கா வளைகுடாவில் இருந்து வெளி ஏற வேண்டும்…. யுவானில் எண்ணை வர்தகம் ஆரம்பம்… தய்வான் இழப்பு… இப்படி நடந்தால் பாரிய நீண்டகால நட்டமும், 1ம் நாடு என்ற நிலை இழப்பும் கிடைக்கும். நான் தம்பர் புட்டினின் ஏஜெண்ட் என ஒரு சதிகொள்கைகை காவி திரிவது தெரிந்திருக்கும். நேட்டோ/அமெரிக்காவினது நலன் பாதுகாப்பது தம்பரின் திட்டம் இல்லை என தெரிந்து கொண்டே - கனடா ஐரோப்பா இவ்வளவு உக்கிரமாக எதிர்கிறார்கள் என நினைக்கிறேன். தம்பர் பதவி விலக முன் நேட்டோவில் இருந்து அமெரிக்காவை வெளியே எடுக்க கூடும். அடுத்த நவம்பரில் வரும் மிட்டேர்மில் காங்கிரஸ் ஆதரவு குறையும் என்பதால் இப்போதே சிலதை செய்ய அவசரப்படுகிறார்.

செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!

21 hours 25 minutes ago
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் Mar 20, 2026 - 07:42 PM செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டது. சர்வதேச ரீதியாகவும் ஐக்கிய நாடுகள் சபையிலும் நாம் உறுதியளித்த போதிலும், மனிதப் புதைகுழி விசாரணைகளை நாம் முன்னெடுக்கவில்லை என நீதி அமைச்சரின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறைகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கும் அரசியல் இயக்கம் நாங்கள். உண்மையில் செய்த விடயங்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் செய்தவற்றைத் தெரிந்துகொண்டே விமர்சனம் செய்வதுதான் தவறானது. 1999ஆம் ஆண்டில்தான் இந்தப் புதைகுழியிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றிலிருந்து 2024 வரை 25 வருடங்கள் கடந்துவிட்டன. அந்த 25 வருட காலப்பகுதியிலும் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 15 எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டன. 2015 முதல் 2019 வரையான அரசாங்கத்தின் கீழ், தமிழ் அரசுக்கட்சி மற்றும் அதன் தலைவர்களான சுமந்திரன் போன்றோர் எதிர்க்கட்சியில் இருந்தபோதும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவர்களுக்கு விசேட செல்வாக்கு இருந்தது. அவர்களுக்கு அமைச்சர்களை விடவும் அதிக அதிகாரம் இருந்தது. அப்பகுதியின் பணிகளுக்காகப் பெருமளவு நிதியும் வழங்கப்பட்டது. அதில் நாம் தவறு காணவில்லை. ஆனால், அந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் அரசுக்கட்சித் தலைவர்களுக்கு ஏன் செம்மணி புதைகுழி மறந்து போனது? நாம் 2024 செப்டம்பரில் அதிகாரத்தைப் பொறுப்பேற்றோம். பாராளுமன்றப் பெரும்பான்மையை நவம்பரில் பெற்றுக்கொண்டோம். அன்றிலிருந்து இன்று வரையிலான இந்த 17 மாதங்களில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 239 ஆகும். இவ்வளவு பணிகளைச் செய்யும் அரசாங்கத்தின் மீதே தற்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழி அமைந்துள்ள தொகுதியிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அங்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரே உள்ளார். இது தொடர்பான முழுமையான விபரங்களை நாம் அறிவோம். ஆராய்ந்துள்ளோம். இதனை விசாரணை செய்வதற்கு எமக்கு மக்கள் ஆணை உள்ளது. இது மாத்திரமல்ல, மாத்தளை புதைகுழி குறித்தும் நாம் விசாரணை செய்கிறோம். நீதித்துறை பொறிமுறையின் ஊடாக நீதியை நிலைநாட்டும் போது அதற்கு காலம் எடுக்கும். ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmyza50h0008356p2030uayd

நயினாதீவில் மினி சூறாவளி

23 hours 21 minutes ago
நயினாதீவில் பலத்த காற்று: மினி சூறாவளியால் இறங்கு துறை கொட்டகைகள் சேதம். 20 Mar, 2026 | 10:58 AM நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (20) காலை மழை பெய்திருந்தது. அந்நிலையில் தீவக பகுதியில் பலத்த காற்றும் வீசி வருவதனால், தீவகத்திற்கான படகு சேவைகள் தாமதப்பட்டுள்ளது. அதேவேளை, நயினாதீவு பகுதியில் வீசிய காற்றினால் நயினாதீவு இறங்கு துறை பகுதியில் பக்தர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த நிழற் கொட்டகைகள் சேதமடைந்துள்ளன. நயினாதீவில் பலத்த காற்று: மினி சூறாவளியால் இறங்கு துறை கொட்டகைகள் சேதம் | Virakesari.lk

உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

23 hours 24 minutes ago
உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் March 20, 2026 5:53 pm மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுடனான இஸ்ரேல்–அமெரிக்க போர் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். அது உக்ரைனை பலவீனப்படுத்துவதோடு, அமெரிக்காவின் ஆதரவு மற்றும் வளங்களையும் வேறு திசைக்கு திருப்பும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “புடினுக்கு, ஈரானில் நீண்டகால போர் ஒரு நன்மை. இது எரிசக்தி விலைகளை பாதிப்பதோடு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பையும், வான்வழி பாதுகாப்பு உற்பத்தியையும் குறைக்கிறது. இதனால் நமக்கும் வளங்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது” என ஜெலன்ஸ்கி மேலும் கூறியுள்ளார். https://oruvan.com/ukraine-faces-missile-shortage/

இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !

23 hours 27 minutes ago
20 Mar, 2026 | 05:36 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புத்தளம் மாவட்டத்திற்கான தனது விஜயத்தின் போது உடப்பு கிராமத்திற்குச் சென்றார். தெற்கு இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அக்கமடம் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் முன்னோர்கள் வந்தவர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கும் இந்த உடப்பு கிராமம், வரலாற்று மற்றும் பண்பாட்டு ரீதியாக சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விஜயத்தின் போது, உயர்ஸ்தானிகர் உடப்பு ஸ்ரீ பார்த்தசாரதி ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ததுடன், கிராம மக்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். அப்போது, 17ஆம் நூற்றாண்டில் தங்கள் முன்னோர்கள் இலங்கைக்கு வந்து குறித்த பகுதியில் குடியேறியதாகவும், இன்றுவரை தங்கள் பாரம்பரிய மரபுகள் மற்றும் வழக்கங்களை பாதுகாத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், திரௌபதி அம்மன் வழிபாடு மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதிப்புதிருவிழா போன்ற தனித்துவமான பாரம்பரிய வழக்கங்களையும் அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தனர். இந்த சந்திப்பில் உரையாற்றிய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, உடப்புவ மக்களின் வரலாறு, இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நூற்றாண்டுகள் நீளும் மக்கள்-மக்கள் உறவுகளின் ஒரு முக்கிய சின்னமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு இணைந்து செயல்படுத்தி வரும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான டித்வா சூறாவளிக்கு பின்னராக மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் இணைப்பு வசதிகள் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். மேலும், இலங்கையின் அனைத்து மக்களும், குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்களும் முன்னேறுவதற்காக இந்தியா தொடர்ந்தும் உறுதியாக ஆதரவு வழங்கும் எனவும் அவர் உறுதிபடுத்தினார். இந்த விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான பண்பாட்டு மற்றும் மக்கள் மட்ட உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் ! | Virakesari.lk

கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு!

23 hours 28 minutes ago
20 Mar, 2026 | 06:14 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை (21) முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலைப் பீட சபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.இரகுராமின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த போதிலும், இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக - திருத்தச் சட்டம் செயற்பாட்டுக்கு வரும் வரையில் பல்கலைக்கழகங்களில் பீடாதிபதி தெரிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் திருத்தம் 2026 /2 கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என பல்கலைக்கழக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலைப் பீடாதிபதி தெரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இன்றைய தெரிவின்போது, கலைப் பீட சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா 27 மேலதிக வாக்குகளைப் பெற்று பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு! | Virakesari.lk

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது: 13 விசைப்படகுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றல்!

23 hours 29 minutes ago
20 Mar, 2026 | 05:35 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 53 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்புகளின் போது, 13 சிறிய ரக விசைப்படகுகள் (டிங்கி) மற்றும் 4 உழவு இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தல், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், அதிசக்தி வாய்ந்த மின்விளக்குகளைப் பயன்படுத்தல், அனுமதிப்பத்திரமின்றி இரவு நேரங்களில் கடலில் சுழியோடி மீன்பிடித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் விஞ்சுகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையகங்களுக்கு உட்பட்ட பின்வரும் பகுதிகளில் இச்சுற்றுவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. விடத்தல்தீவு, சவுத்பார், வங்காலை, புத்தளம், உடப்பு, உடையூர்பதி, வாகரை, கண்டலடி, களுவான்கேணி, பாலாச்சேனை, சவுக்கடி, யாழ்ப்பாணம் மண்டைதீவு, திருகோணமலை, கிண்ணியா, கொக்கிளாய் மற்றும் காலி அக்குரலை கடற்பகுதிகள். கைது செய்யப்பட்ட 53 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்புக்கடவை பொலிஸ் விசேட அதிரடிப்படை, மன்னார், புத்தளம், வாழைச்சேனை, மட்டக்களப்பு, மண்டைதீவு, நானாட்டான், கின்னியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகங்களிலும், காலி கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது: 13 விசைப்படகுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றல்! | Virakesari.lk

இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு

23 hours 31 minutes ago
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு - மற்றுமொரு பெண் சடலமாக.. மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நெல்லிக்காடு பால்பண்ணை பகுதிக்குச் சென்ற பொதுமக்கள், அங்கிருந்த பொதுக்கிணறு ஒன்றிலிருந்து அலறல் சத்தம் கேட்பதை உணர்ந்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அவதானித்து, உடனடியாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். விரைந்து வந்த பொலிஸார் அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். விசாரணைகளின்படி, மீட்கப்பட்டவர் கொத்தியாபுலையைச் சேர்ந்த 26 வயதுடைய முருகமூர்த்தி ரனுஜா எனத் தெரியவந்துள்ளது. நேற்று அவர் தனது மகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரது மகளைத் தூக்கி வீசிவிட்டு, ரனுஜாவைத் தாக்கி இந்தக் கிணற்றுக்குள் தள்ளியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், அதே கிணற்றினுள் மற்றுமொரு சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. இச்சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் நாற்பதுவட்டை பகுதியில் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் காணப்பட்ட காலணியை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ள போதிலும், முறையான மரண விசாரணை மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனைகளின் பின்னரே அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றப் பதில் நீதபதி தியாகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு அவர் பணிப்புரை விடுத்தார். அத்துடன், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் ஆகியோரும் விசாரணைகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் கடத்தப்படும் பெண்கள், கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட கிணற்றுக்குள் வீசப்படுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் அவர்கள் இக்கிணற்றுக்குள் தள்ளப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். எனினும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே இதன் பின்னணி குறித்து வெளியிடமுடியும் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmmyulqag0005356pepmf6lew

உங்களுக்கு தெரியாத வட கொரியா

23 hours 31 minutes ago
😂 சிறிமா இப்படி சொன்னார் என ஆதாரம் உங்களிடம் கட்டாயம் இருக்கும் போட்டு விடுங்கள்😂. அல்லது உங்களுக்கு மட்டும் காதுக்குள் சொன்னாரா?😂 வாசகருக்கு, மேலே உள்ள சொல்லாடல் ஒரு அதிகாரத்தில் உள்ளவர், மக்களிடம் இருந்து, அவர்களின் யதார்த்த துன்பங்களில் இருந்து எவ்வளவு தூரம் விலகி போய் உள்ளார் என்பதை காட்ட உதாரணமாக பயன்படும் சொல்லாடல். பிரெஞ் புரட்சி காலத்தில் இருந்து பிரபலமானது. 1998 இந்தியாவில் கூட, கார் விலை குறைந்ததை அரசு சுட்டி காட்டிய போது, உணவு விலை கூடியதை அரசு கண்டு கொள்ளவில்லை என்பதால், அது அண்டர்நட் போல பாணுக்கு பதில் கேக்கை சாப்பிடுங்கள் என சொல்லுவது போல் நடப்பதாக விமர்சித்தனர். இப்படியான அரசியல்வாதியை விமர்சிக்கும் போது let them eat cake எண்ற “தோரானையில்” அவர் நடப்பதாக அரசியல் எதிரிகள் விமர்சிப்பர். இதைத்தான் மேற்படியார் எங்கோ வாசித்து, தப்பாக மொழி மாற்றி விளங்கி கொண்டுளார் என நினைக்கிறேன். உவமையாக சொன்னதை, அச்சொட்டாக சொன்னதாக விளங்கியுள்ளார். தவிர அரசியலில் எதை சொல்ல கூடாது என்பதில் மேலே உள்ள வாசகம் ஒரு பாலபாடம். அதை சிரிமா சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை. ஆதாரமும் இல்லை.
Checked
Sat, 03/21/2026 - 10:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed