2 days 19 hours ago
அரையிறுதிப் போட்டிகளின் scenarios எல்லாம் தெளிவாக இல்லை. எனினும் இப்போதுள்ள புரிதல்களின்படி தெரிவுகளை மேற்கொண்டால் போதும். மைதானங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் புள்ளிகளை இழக்கவேண்டி வராது🙂
2 days 20 hours ago
இரன்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர், ஜேர்மனி மற்றும் ஜப்பான் இரண்டினையும் அதன் சொந்த இராணுவத்தினை பேண கூடாது எனும் கட்டுப்பாட்டிலேயே இவ்வாறான உடன்பாட்டிற்கு வந்ததாக நினைவுள்ளது. இரண்டு நாடுகளும் போர் இழப்பின் பின்னர் போர் வெற்றி, வீரம் என பேசி காலம் கடத்தாமல் அவர்களுக்கிருந்த கட்டுப்பாடுகளுக்குள்ளாகவே பொருளாதார ரீதியாக தம்மை கட்டமைத்தார்கள். எங்கோ இருக்கும் அவுஸ்ரேலியா தனது வழஙகளில் குறிப்பிட்ட பகுதியளவு உரிமை எடுக்க முற்பட்டாலே ஆட்சி கவிழ்ப்பு நிகழுகின்ற நிலை காணப்படுகிறது. அவுஸ்ரேலியாவில் வர்த்தக வரி 28% என நினைக்கிறேன், ஒரு அதிபர் மிக பெரும் இலாபம் பெறும் சுற்றுசூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் சுரங்க அகழ்வு வர்த்தகத்திற்கு 40% வரி விதிக்கப்போவதாக கூறினார் (அதிகரித்து வரும் வயோதிகர்களின் எண்ணிக்கையினை சமாளிப்பதற்கான பணத்தினை பெறும் முயற்சி), அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதற்கு முன்னரும் பிரச்சினை ஏற்படுத்தும் அதிபர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
2 days 20 hours ago
மோகன் அண்ணா மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாருக்கு கண்ணீரஞ்சலி.
2 days 20 hours ago
இந்தியா, இலங்கை எல்லாம் வெறும் லேபிள்தான், உரிமைகள்தான் முக்கியம். பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருபதனை விட ட்ரம்பிடம் காசு வாங்கிக்கொண்டு அமெரிக்காவுடன் சேர்ந்தால் (கிறீன்லாந்து பேரம்) நல்ல தனிமனித உரிமை, பொருளாதார சுதந்திரம் எல்லாம் இருக்கும் (இந்தியா என லோக்கலா சிந்திக்காமல் இன்ரனெசனாலா போகலாமே), பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் இருக்கிறதையும் பிடுங்கி விடுவார்கள்🤣. 20. இந்தியாவின் அரசியல், பொருளாதார பங்களிப்புகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது. இந்தியா என்றைக்குமே உலக வல்லரசாக முடியாது என்பதே தற்போதய யதார்த்தம் .
2 days 20 hours ago
யூடியூப் பேஸ்புக் இரண்டுமே பின் தொடர்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பகிர்பவர்களுக்கும் அலையும் கோஷ்தான், அடுத்தவனின் தனிப்பட்ட விஷயங்களில் நுழைந்து விமர்சனம், ஆய்வு வாய்வு செய்யும் அசிங்கம் பேஸ்புக்கிலேயே அதிகம். அதனால் பக்கங்கள் முடக்கப்படுவதும் பேஸ்புக்கில்தான் அதிகம். இந்த செய்தியை பகிர்ந்த பேஸ்புக்காரர் சமுதாயத்துக்கு ஆற்றிய அறிவுபூர்வமான தொண்டுதான் என்ன? ஒவ்வொருவரும் உங்கள் ஆதாயத்திற்காக ஏதோஒன்று பண்ணுகிறீர்கள் , உங்களின் அதே தொழிலை செய்யும் இன்னொருவரை விமர்சிக்க அதிகாரம் எங்கிருந்து பெற்றீர்கள்? பேஸ்புக் காரருக்கும் யூடியூப் காரருக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம் பேஸ்புக் காரர் அதனையே முழுநேர தொழிலாக செய்வதில்லை, யூடியூப் காரர் அதுவே தொழிலாக வைத்திருக்கிறார்கள், அது வருத்ததுக்குரிய விஷயம் மட்டுமல்ல எதிர்காலம் குறித்த அச்சம் தரும் தொழிலும்தான்.
2 days 20 hours ago
கற்கால மனிதன் காட்டினில் வாழ்ந்த காலத்தில் இருந்த சுய பாதுகாப்பு பொறிமுறை முழுவதும் பல தலைமுறையாக இக்கால மனிதனுக்கும் கடத்தப்படுகிறது. இருளை கண்டால் இயல்பாக ஏற்படும் பயம், எமது புலன் மட்டுப்படுத்தப்படும் போது அதன் பின்னால் இருக்கும் ஆபத்திலிருந்து காக்க சுய பாதுகாப்பு பொறிமுறை பயத்தினை தூண்டிவிடுகிறது. இவ்வாறான பயமான சூழலில் விரைவாக செயற்படுவதற்காக மூளை குறுக்கு வழிகளை தேடுகின்றது. நவீன காலத்திற்கு இந்த விதமாக வேகமாக சிந்திப்பது பாதகமானது, ஆனால் மிருகங்கள் போல மனிதனும் சுய பாதுகாப்பு பொறிமுறையால் தூண்டப்படுகின்ற நிலை தொடர்ந்து காணப்படுகிறது. இந்த ஒலி ஆயுதம் தொடர்பாக கூறும் ஒரு தமிழ் யுரியூப் காணொளியாளர் மிகையான ஒலி அலைகளை பயன்பாடுபற்றி கூறியவர் பின்னர் இறந்த கியூப பாதுகாப்பாளர்கள் உடலங்கள் சிறிய பெட்டியில் கொண்டு செல்லப்பட்டதாக இரண்டையும் தொடுக்குக்கின்றார். ஆதிகாலத்தில் இடி மின்னல் போன்ற இயற்கை விளைவுகள் ஏற்படும் போது மனிதன் அதன் காரண காரியத்தினை விளங்கிக்கொள்ளமுடியாத நிலையில், அந்த இயற்கை விளைவுகலை தமக்கான ஆபத்தாக பார்த்து அதிலிருந்து தப்ப முதன் முதலில் உருவாக்கப்பட்டதுதான் இயற்கை தெய்வ வழிபாடு (எமது இந்து மதத்தில் அதன் தொடர்ச்சி இன்னமும் காணப்படுகிறது). பனிப்போர் காலத்தில் இரஸ்சியா "மொஸ்கோ சிக்னல்" (அதிக ஒலி அதிர்வுகள்) மூலம் வெளிநாட்டு தூதுவர்களது உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவ்வாறான விடயங்கள் எமது புரிதலுக்கு அப்பாற்பட்டிருக்கும் போது ஏற்படும் மிகைப்படுத்தப்பட்ட பயம் தூண்டப்படும், அதே நேரம் பயத்தில் இருக்கும் போது எமது புரிதல்கள் மட்டுப்படுத்தப்படும் (இரு வழிகளிலும் நிகழும்). இது ஒரு அமெரிக்க உளவியல் யுத்த பிரச்சாரம், இது போல எதிர்த்தரப்பினை பலவீனப்படுத்த பல யுத்திகள் அமெரிக்காவினால் கடந்த காலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்ல சொந்த மக்களுக்கெதிராகவும் உதாரணமாக ஒரு எதிர்த்தரப்பு மிக பயங்கரமான கொடிய ஆயுதம் வைத்துள்ளது என கூறி மக்களை பீதிக்குள்ளாக்கி தனது நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பது போன்ற செயல்கள். இவ்வாறான ஆயுதங்களின் பயன்பாடு மிக மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு கொண்டதாகவே உண்மையில் இருக்கும் ஆனால் அவை மிகைப்படுத்தப்படுவதற்காக அது பற்றிய குறிப்புகளை கூறாமல் விடுவதன் மூலம் மக்களின் இயல்பான சுய பாதுகாப்பு பொறிமுறையினை தூண்டிவிட்டு அதனை மிகைப்படுத்துகிறார்கள் (வெனிசுலா இராணுவத்தினர் தாம் இராணுவ சட்டத்தினை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் பரப்புரையினை பயன்படுத்தியிருக்கலாம்). போரில் இந்த உளவியல் யுத்தம் மிக காத்திரமானது.
2 days 21 hours ago
ஏதோ நமக்கு நல்லாய் பொழுதுபோகுது. பல விடயங்களையும் அறியக்கூடியதாய் உள்ளது. அதற்கொரு பெரிய நன்றி இலங்கை யூரியூப்பர்களுக்கு சொல்லத்தான் வேண்டும்.
2 days 21 hours ago
என்னய்யா, எங்கள் அரசியல் பனங்காய்கள் கடைசியில் புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் நாங்கள் இலங்கையில் இருந்து பிரிந்து உலக வல்லரசு இந்தியாவுடன் இணைந்திடலாம் என கதையை முடித்து வைக்க போகின்றார்களோ? எதற்கும் முப்பது நாட்களில் கிரமமாக கிந்தியில் கதைப்பது எப்படி என்கிற புத்தகத்திற்கு ஒரு ஓடர் கொடுப்போம்.
2 days 21 hours ago
ஜஸ்பிரிட் பும்ரா
3 days ago
ஆதாரம் இருக்கா அல்லது புலவர் எழுதினாலே அது ஆதாரம்தான் என்கிறீர்களா? 😂 ஆனால் இவை எல்லாம் புலிகள் மீது நான் உட்பட பலரும் முன்வைத்த விமர்சனங்கள்தான். ஆனால் இதை வைத்து புலிகளை அழித்தமைக்கு மகிந்தவுக்கு நன்றி சொன்னார் என்றோ அல்லது மேற்கு நாடு தன்னிடம் புலிகளை அழித்த பின் தீர்வு தருவதாக சொன்னார்கள் என சொன்னார் என்றோ நிறுவ முடியாது. 2008, 2009 நேரம் சம்பந்தரிடம் மட்டும் அல்ல, போரை நிறுத்த சொல்லி இலண்டன் உட்பட வெளிநாட்டில் சந்தித்த இடங்களில் கூட,…. போரை நிறுத்த முயல்கிறோம், இல்லை எனில் போரின் பின் தக்க தீர்வை கொடுக்க வலியுறுத்துவோம் என பலரிடம் கூறினார்கள். மன்மோகன் சிங் நேரடியாகவே இலங்கை விஜயத்தில் 13+ கொடுப்பதாக சொன்னீர்களே என வலியுறுத்தினார் என வாசித்த நியாபகம். அதைத்தான் சம்பந்தர் சொல்லியுள்ளார்.
3 days ago
விடுதலைபுலிகள் அழிவதற்கு வெளிநாடுகளுக்கும், மேற்குக்கும், இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறுவேற்றி, அதன் மூலம் 13 பிளஸ் தமிழருக்கு கொடுக்கபடின், அவர்களின் அழிவை ஒரு நல்ல விடயம் என கருதலாம் என சம்பந்தர் மேலே கூறி உள்ளார். இதில் எமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம் - ஆனால்…. புலிகளை அழித்தமைக்காகக சம்பந்தர் மகிந்தவுக்கு நன்றி கூறினார் என்பதற்கு இது ஆதாரம் அல்ல. அதற்கான ஆதாரம் உங்களிடம் கட்டாயம் இருக்கும் - போட்டு விடுங்கள். இல்லை… இதுவும் நான் மேலே சொன்னது போல் கஜன் கட்சி தீவிர ஆதரவாளர் (யாழ்கள பிரச்சார பீரங்கி) புலவர், சம்பந்தன் கூறியதன் சூழமைவை தவிர்த்து விட்டு, அதற்கு கை, கால் எல்லாம் வைத்து உருட்டும், உருட்டே. மகிந்த அவர்களே, புலிகளை அடித்து விட்டீர்கள் நன்றி. என சம்பந்தர் கூறியதாக எனக்கு நினைவில்லை.
3 days ago
முட்டாள்தனமாக ஆதவன் செய்திக்கு தலையங்கம் கொடுத்துள்ளது. தலையங்கத்தை மட்டும் மேய்ந்து விட்டு கச்சேரி வேறு களை கட்டுகிறது😂. இதுதான் செய்தி. இதை ஏலவே எக்ஸ் செய்கிறது. எக்ஸுக்கு சந்தா கட்டினால் சில சலுகைகள், ஏ ஐ கருவியான கொரொக்கின் முழு பாவிப்பு கிடைக்கும். இல்லை எண்டால் அடிப்படை சேவை இலவசம்.
3 days 1 hour ago
பல பிரபல்யங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்காலம் மூடு விழாவை நோக்கி நகர்கின்றது போல் உள்ளது. படம்,வீடியோ எக்ஸ்சற்றா என எனைய பொது ஊடகங்களில் போட்டு வெளுத்து வாங்குகின்றார்கள்
3 days 1 hour ago
71,72 வது கேள்விகளில் சின்ன சந்தேகம் ( அரைஇறுதி போட்டிகள்) 71 வது கேள்வி- சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் 72 வது கேள்வி- சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 1 இரண்டாவது இடம். உ+ம் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகாமல் குழு ஒன்றில் இந்தியா முதல் இடம் பெற்றால், இந்தியா முதலாவது அரை இறுதி போட்டி நடக்கும் ஏடென்கார்டன்ஸில் விளையாடவேண்டும். இரண்டாவது போட்டி மும்பாயில் நடைபெறும். அண்மையில் நடைபெற்ற மகளிர் உலக கிண்ண போட்டியில் முதலாவது அரை இறுதி போட்டியில் ஆரம்ப சுற்றில் முதல் இடம் பிடித்த அவுஸ்திரேலியாவும் 4 ம் இடம் பிடித்த இந்தியாவும் விளையாடி இருக்கவேண்டும். ஆனால் அவுஸ்திரேலியா, இந்தியாவுக்கு இடையிலான போட்டி சுழல் பந்து விச்சுக்கு சாதகமான மும்பாய் மைதானத்தில் ( இரண்டாவது போட்டி) நடைபெற்றது. இம்முறை கொல்கத்தா, மும்பாய் இரு இடங்களும் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமானவை. எனினும் போட்டி நடாத்தும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி இம்முறையும் மும்பாயில் இந்தியா விளையாடும் அரை இறுதி போட்டியை (2 வது போட்டி)நடாத்துமா ???😳
3 days 1 hour ago
பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக கணிக்க..... எங்கடை தமிழ் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இனவாத சிங்களத்தின்ர சுதந்திர தின விழா மேடையிலை குந்தியிருந்து வேடிக்கை பாத்துக்கொண்டிருங்குங்கள். ஐ மீன் சுமந்திரம் உட்பட.....😎
3 days 2 hours ago
எல்லாம் ஒரு கொஞ்ச நாளைக்குத்தான்.....
3 days 2 hours ago
நல்ல விசயம்.👍 ஓசியில பணியாரம் சுடுற கொம்பனியளுக்கு நல்ல சூடு.👁🗨 வணக்கம் யாழ்களம் 🙏
3 days 2 hours ago
கூடுதலானவர்கள் தலைப்புக்கும் உள்ளே இருப்பதற்கும் சம்பந்தமே இல்லாமல் போடுவார்கள். நாங்க ஒருக்கா தட்டினால் அவர்களுக்கு பணம் போயிடும்.
3 days 2 hours ago
கட்டயாம் கலந்து கொள்கிறேன்.
3 days 3 hours ago
@suvy தலைவரே களத்தில் துணிந்து குதிக்கவும்.......................
Checked
Thu, 02/05/2026 - 01:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed