2 days 1 hour ago
19 Mar, 2026 | 05:05 PM வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய பகுதியில் அமைக்க பிரதேச சபை அனுமதியளித்துள்ளது. வேலணை பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்புடன் 90 மற்றும் 91 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமது பிரதேச மக்களின் நினைவுகளை நினைவுகூர ஒரு பொது நினைவுச் சதுக்கம் அமைக்க எடுக்கும் முயற்சிக்கு உரிய இடத்தை அடையாளப்படுத்தி, அவ்விடத்தில் குறித்த தூபியை அமைக்க சபை அனுமதிக்க வேண்டும் என சபையின் உறுப்பினர் திருநாவுக்கரசு சிவகுமாரால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த முன்மொழிவின் நோக்கம் வேலணை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுகளை மையப்படுத்தி நினைவுகூரும் வகையில் அமைக்கபடுவதால் சபையின் உறுப்பினர்கள் அதற்கு தமது சம்மதத்தை வழங்கியமைக்கு அமைய பிரதேச சபை அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம் | Virakesari.lk
2 days 1 hour ago
கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையதத்தையும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு 100 வருட குத்தகையில் விடலாம். அவர்கள் அந்த நிலத்தில் மாடிவீடுகள், வர்தக நிலையங்கள் அமைக்கலாம். ரயில் நிலையம், மேடைகள் புனரமைக்கப்பட்டு அரசிடம் கொடுக்க வேண்டும். வருடாவருடம் குறித்த அளவு நில வாடகையும் அரசுக்கு செலுத்த வேண்டும். ஐடியா இல்லாத பசங்க.
2 days 1 hour ago
“ஈரான் போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது” - அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு இயக்குநர் ராஜினாமா வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவே டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஈரான் மீது போரைத் தொடங்கியது என்று அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் நெருக்கமான அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ஜோ கென்ட், தனது ராஜினாமா கடிதத்தில் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதிபர் ட்ரம்ப், மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் இயக்குநர் பதவியிலிருந்து இன்று முதல் விலகுகிறேன். ஈரானில் நடக்கும் இந்தப் போரை எனது மனசாட்சியின்படி என்னால் ஆதரிக்க முடியாது. ஈரான் நமது நாட்டுக்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் தரவில்லை. இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தம் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 2016, 2020, 2024 தேர்தல்களில் நீங்கள் முன்வைத்த வெளியுறவுக் கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். ஜூன் 2025 வரை, மத்திய கிழக்கு நாடுகளின் போர்கள் அமெரிக்க வீரர்களின் உயிரையும் செல்வத்தையும் வீணடிக்கும் ஒரு வலை என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள். உங்கள் முதல் ஆட்சியில், ஒரு முடிவில்லாத போருக்குள் சிக்காமல் ராணுவ பலத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதில் நீங்கள் சிறந்த அதிபராக இருந்தீர்கள். ஆனால், இந்த ஆட்சியின் தொடக்கத்தில் இஸ்ரேலிய அதிகாரிகளும் அமெரிக்க ஊடகங்களும் சேர்ந்து ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாக உங்களை நம்பவைத்து, போருக்குத் தூண்டினர். ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட அதே தந்திரத்தை இப்போதும் பயன்படுத்தி நம்மை ஏமாற்றியுள்ளனர். போர்க்களத்திற்கு 11 முறை சென்ற ஒரு வீரனாகவும், இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட ஒரு போரில் தனது மனைவியைத் தொலைத்தவனாகவும், அமெரிக்க மக்களுக்குப் பயன் தராத இந்தப் போருக்கு அடுத்த தலைமுறையை அனுப்ப என்னால் முடியாது. ஈரானில் நாம் யாருக்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் இந்தத் தவறான பாதையை இப்போதே மாற்றி நாட்டைச் சரியான வழிக்குக் கொண்டு செல்ல முடியும். உங்கள் ஆட்சியில் பணியாற்றியதை கவுரமாக கருதுகிறேன்” இவ்வாறு ஜோசப் கென்ட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். வளைகுடா பிராந்தியத்தில் போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரே போரின் நியாயத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “ஈரான் போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது” - அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு இயக்குநர் ராஜினாமா
2 days 1 hour ago
19 Mar, 2026 | 05:26 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீன தரத்திற்கு உயர்த்தும் பணிகளின் முதற்கட்டம் வியாழக்கிழமை (19) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இப்பணிகள் தொடங்கப்பட்டன. ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், Dawoodi Bohras சமூகத்தின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நிர்மாணப் பணிகளை Amic Engineering Private Limited நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலைய நடைமேடைகள் தரமுயர்த்தப்படுவதுடன், நவீன இருக்கை வசதிகளும் அமைக்கப்படுகின்றன. மழைநீரால் பாதிக்கப்படாத வகையில் நிலையத்தின் கூரை முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. மேலும், துருப்பிடிக்காத வலுவான உலோகப் படிக்கட்டுகள் அமைக்கப்படுவதோடு, நவீன மின்விளக்கு வசதிகள் மற்றும் CCTV கண்காணிப்பு அமைப்புகளும் நிறுவப்படவுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் விசேட அணுகுமுறைப் பாதைகள் (Easy Access Routes) உருவாக்கப்படவுள்ளன. அதேபோல், ரயில்களின் நேர அட்டவணையை துல்லியமாக அறிய நவீன காட்சிப் பலகைகள் நிறுவப்படுகின்றன. இத்திட்டம் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையில், நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏற்கனவே தல்பே ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி, தெஹிவளை, பொலன்னறுவை, கண்டி மற்றும் மருதானை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களும் விரைவில் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உயர்த்துவதோடு, நாட்டின் ரயில் சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கல் ஆரம்பம் : 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களில் பணிகள் நிறைவு | Virakesari.lk
2 days 1 hour ago
ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதலைத் தணிக்க ஜீ - 7 நாடுகளுடன் கனடா முன்னெடுக்கும் கூட்டு முயற்சி Published By: Digital Desk 3 19 Mar, 2026 | 03:42 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் இடையேயான மோதல்களைத் தணித்து, பிராந்திய போர் மேலும் விரிவடைவதைத் தடுப்பதற்காக ஜீ -7 நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டு இராஜதந்திர முயற்சியை கனடா முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand), மோதலின் தீவிரத்தைக் குறைக்கும் நோக்கில் ஒரு “கொள்கை ஆவணத்தை” (Document of Principles) தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆவணம், பிராந்தியத்தில் போர் பரவுவதைத் தடுப்பதோடு, பொதுமக்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைப்பதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் யவெட் கூப்பர் (Yvette Cooper) உடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் பேசிய அனிதா ஆனந்த், பிரான்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள அடுத்த ஜீ -7 கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த மோதலில் கனடா நேரடியாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், எதிர்காலத்திலும் அதில் பங்கேற்கும் திட்டம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார். கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமீபத்தில் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டிய அனிதா ஆனந்த், “மத்திய சக்திகள் (Middle Powers)” ஒன்றிணைந்து செயல்பட்டால் உலக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக சிக்கல்களுக்கு மத்தியில், கனடா தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருவதாகவும், கடந்த ஆறு மாதங்களில் நான்கு கண்டங்களில் 12-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுடன் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரான் மீண்டும் தாக்கப்பட மாட்டோம் என்ற உறுதியை கோரினாலும், தற்போதைய சூழலில் அத்தகைய உத்தரவாதம் வழங்குவது சிக்கலானதாக உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கியமான சவால்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/241376
2 days 1 hour ago
நாதகவின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இடம் பிடிக்கும் உச்சபட்ச முட்டாள்தனமான கொள்கை. முன்பே பலமுறை இதை யாழில் கிழித்து தொங்கவிட்டாகிற்று. இதைவிட புதியதொரு நகரை தலைநகராக தமிழ் நாட்டின் மத்தியில் நிர்ணயிக்கலாம். புதிய சூழலியல், கட்டுமான வசதிகளோடு.
2 days 1 hour ago
நல்ல கொள்கை. சீமான் தனது சாதி வாக்குகளை கவர உள்ளீர்கப்பட்ட திட்டம். இது தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கும் அளவு பெரிய விடயம் இல்லை. இது மிகவும் வலதுசாரி தனமான, இடைத்தரகர்களுக்கு இலாபம் கொடுக்கும், முதலாளிதுவ கொள்கை. நிர்ணயிக்க பட்ட குறைந்த விலை இல்லாமல் போகும் போது, நிரம்பல் கூடிய பொருட்கள், உற்பத்தி செலவுக்கும் கீழே விற்கும் நிலைக்கு விவசாயிகள் உள்ளாவர்.
2 days 1 hour ago
ஏலவே சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைவதாக முடிவாகி விட்டது. முன்னர் ஒரு முறை நான் நாஜிகளோடு நாதக வை ஒப்பீடு செய்தபோது பலர் எதிர்த்தனர். இப்போ அதே வழியில் வருகிறார் சீமான். இதை ஆங்கிலத்தில் benevolent dictatorship என்பார்கள். ஆனால் அன்பானதோ, இல்லையோ சர்வாதிகார ஆட்சியை ஒரு மாநிலத்தில் ஒரு நாள் கூட அனுமதிக்காது இந்திய மத்திய அரசு/ நீதிமன்று. இரெண்டுமே தமிழக அரசால் செய்ய கூடியன அல்ல. ஒட்டு மொத்த இந்தியாவின் மக்கள் பிரதிநிதிதுவ சட்டத்தினை மாற்ற வேண்டும். ஒன்றில் மத்திய அரசில் நாதக தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் அல்லது பிஜேபி கூட்டணியில் சேர்ந்து இதை வலியுறுத்த வேண்டும். மேலே சொன்னது போலவே இதுவும். தனியே ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியால் இதை செய்ய முடியாது. இன்றுவரை நாதக யார் தமிழர் என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை. சீமானிடம் நேரடியாக கேட்டபோது கூட பதில் இல்லை. எனவே இதுவும் செயல்படல்டுத்த முடியாத கற்பனை கோஷம்.
2 days 1 hour ago
சாப்பிடணுமே😂
2 days 1 hour ago
ஊரான் துறையில உள்பாவாடை காணாமல் போனாலும் சுமந்திரனே பொறுப்பு😂
2 days 1 hour ago
ஆரோவில் சோலார் கிச்சன்: காஸ் சிலிண்டர் தேவையின்றி சூரிய சக்தியில் இயங்கும் சமையலறை! - ஒரு விசிட் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு படைகள் தாக்குதல் மேற்கொண்டதால் மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலி இப்போது இந்திய தேசத்தின் சமையலறையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் உணவகங்களுக்கு விநியோகிக்கப்படும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்களின் வழக்கமான செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. சில உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகுகளுக்கு மாறியுள்ளன. இந்த நிலை தற்போது சீரடையத் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில் புதுச்சேரிக்கு அருகே தமிழகப் பகுதியில் அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில் நகரில் சூரிய சக்தியில் இயங்கும் ‘சோலார் கிச்சன்’ இயங்கி வருகிறது. இதன் செயல்பாடு குறித்து பார்ப்போம். நவீன வடிவிலான சோலார் பேனல்கள் இல்லாமல் ‘சோலார் Bowl’ மூலம் சூரிய ஒளி மூலம் நீரினை வெப்பமடைய செய்து, அதைக் கொண்டு இந்த சோலார் கிச்சனில் சுமார் 80 சதவீத உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் செயல்பாடு குறித்து சோலார் கிச்சனில் பணியாற்றி வரும் ரஜினிகாந்த் விவரித்தார். “சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆரோவில் நகரில் சோலார் கிச்சன் நிறுவப்பட்டது. ஆரோவில் நகரில் வசிக்கும் சமூக மக்கள் மற்றும் ஆரோவில் அறக்கட்டளையும் இணைந்து இதனை நிறுவினர். இதன் நிர்வாகத்தை ஆரோவில் அறக்கட்டளை கவனித்து வருகிறது. இங்கு இயற்கையாக கிடைக்கும் ஆற்றலை கொண்டு இந்த சமையலறையை இயக்க செய்ய வேண்டுமென்ற முடிவில் இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது. இந்த சோலார் கிச்சனில் சிறப்பு என்னவென்றால், இங்குள்ள அமைக்கப்பட்டுள்ள சோலார் Bowl தான். இதில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் சூரிய ஒளி படர்ந்து மேற்புறம் உள்ள ரிப்ளக்டரில் விழும். அந்த வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிப்ளக்டர் வெப்பமடைந்து அதனோடு இணைக்கப்பட்டுள்ள குழாய் வெப்பமடையும். அந்த வெப்பம் உணவகத்தின் கீழ் பக்கம் உள்ள கொதிப்பானுக்கு கடத்தப்படும். அதன் மூலம் அதில் உள்ள நீர் வெப்பமாகும். அதை கொண்டு நாங்கள் இந்த உணவகத்துக்கு தேவையான 80 சதவீத உணவுகளை தயாரிக்கிறோம். இதர சமையல் பணிகளுக்கு விறகுகளை பயன்படுத்துகிறோம். இதன் பராமரிப்பு மிகவும் முக்கியம். அதனால் சீரான இடைவெளியில் அதற்கான பணிகளை மேற்கொள்வோம். அதனால் எங்கள் உணவகத்தில் காஸ் சிலிண்டர் தேவை என்பது இல்லை. முழுவதும் ஆரோவில்லில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொண்டு இங்கு உணவு தயார் செய்கிறோம். மதியம் மற்றும் மாலை உணவு இங்கு கிடைக்கும். இது ஆரோவில் சமூக மக்களுக்கான உணவுக்கூடம். வெளிநபர்கள் இங்கு வந்து உணவு சாப்பிட முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். நாளொன்றுக்கு சுமார் 1,500 பேருக்கு உணவு தயாரிக்கிறோம். இதில் சரிபாதிக்கும் மேலான உணவு இங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவகமாக உள்ளது. இதோடு ஆரோவில் நகரில் உள்ள மூத்த குடிமக்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கேற்ற பிரத்யேக உணவுகளும் (டயட்) தயாரிக்கப்படுகிறது. இந்த உணவகம் மூலம் ஆரோவில்லை சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் மக்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவினாலும் எங்களுக்கு அதனால் பாதிப்பில்லை” என அவர் தெரிவித்தார். சாதம், சாம்பார், வேகவைத்த காய்கறிகள், இட்லி, சாலட், பாஸ்தா உள்ளிட்ட உணவுகள் சோலார் கிச்சனின் மெனுவில் இடம்பெற்றுள்ளது. முழுவதும் சைவ உணவு மட்டுமே இந்த சோலார் கிச்சனில் தயாரிக்கப்படுகிறது. ஆரோவில் சோலார் கிச்சன்: காஸ் சிலிண்டர் தேவையின்றி சூரிய சக்தியில் இயங்கும் சமையலறை! - ஒரு விசிட்
2 days 2 hours ago
5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள் சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026 சென்னை: அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்: தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்: சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும். தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்: தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும். பெண்களுக்குத் தனித்தொகுதி: உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும். மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி: இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது. இவை தவிர, ஒன்றிய அரசும் மாநில அசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கிறது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது. எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம். தமிழர்களுக்கு முன்னுரிமை: தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும். தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை: தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை: தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஆட்சிமுறை தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையாக இருக்கும். மணல் கொள்ளைத் தடுப்பு: அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்படி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுமையாக தடுக்கும். பனை தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இரக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனைமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம். வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்: குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும். ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி: ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்று நாதக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்
2 days 2 hours ago
‘குடி’யை நிறுத்திவிட்டேன் - சாஹல் ‘ஓபன் டாக்’ யுவேந்திர சாஹல் ஆர்.முத்துக்குமார் Updated on: 19 Mar 2026, 11:45 am 1 min read இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல் தன் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், குடிபோதை அவதி போன்றவை பற்றி மனம் திறந்துள்ளார். மதுபான பழக்கத்தை முழுமையாக கைவிட்டது தனது உடல் மற்றும் மனநிலைக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். 2023 முதல் ஐபிஎல் தொடரில் 172 போட்டிகளில் 221 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான பவுலராகத் திகழ்கிறார் யுவேந்திர சாஹல். 2005 ஆஷஸ் தொடரை இழந்த பிறகு கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் ‘ஆல்கஹால் எனக்குப் பெரிய பிரச்சனை தான்’ என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அது போன்ற ஒரு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் மனநிலை துணைக்கண்டத்தின் வீரர்களுக்குக் கிடையாது, இப்பகுதி சமூகம், கலாச்சாரம் அத்தகைய ஏற்புடைமை கொண்டதல்ல. 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சாஹல், இறுதிப்போட்டியில் பட்டத்தை வெல்ல முடியாதது இன்னும் மனதில் ஏமாற்றமாக இருப்பதாக தெரிவித்தார். அந்தப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மன வருத்தத்தை அளிக்கிறது என்றார். அந்த இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்க்கோ யான்சென் இல்லாதது அணிக்கு பெரிய பாதிப்பாக இருந்ததாக சாஹல் கூறினார். “அவர் இருந்திருந்தால், முடிவை மாற்றியிருக்க முடியும்” என்ற நம்பிக்கையையும் யான்சென் வெளிப்படுத்தினார் என்கிறார் சாஹல். மேலும் தொடரின் முக்கியக் கட்டத்தில் தான் காயமடைந்ததும் அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது என்றார். மேலும், 35 வயதில் தனது உடல்நலத்திற்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் மதுபானத்தை 6 மாதங்களாக கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “சிறந்த உடல்நிலை மற்றும் கட்டுப்பாடு இருந்தால் தான் அணிக்கு 150% கொடுக்க முடியும்” என்றார். ஏ.பி.டிவில்லியர்ஸ் யூடியூப் சேனலில் சாஹல், கூறியதாவது, “அந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் யான்சென் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையைத் தூக்கியிருப்போம். அந்தத் தொடர் முழுதுமே யான்சென் அற்புதமாக வீசினார். பேட்டிங்கிலும் கடைசியில் இறங்கி 2-3 சிக்சர்களை அவர் அடிக்கக் கூடியவர். வரும் ஐபிஎல்-ல் அவர் சக்தியாகத் திகழ்வார், இப்போது இன்னும் பிரமாதமாக வீசுகிறார். கேகேஆர் மேட்சுக்குப் பிறகு நான் காயமடைந்தது எனக்கே ஏமாற்றமளித்தது. அரைஇறுதி, இறுதிப் போட்டிகளில் என்னால் லெக்ஸ்பின் வீச முடியவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் நன் என் உடல் நிலை மீது அக்கறை செலுத்த முடிவெடுத்தேன். உங்களுக்கு ஒரு நற்செய்தியும் கூறுகிறேன். நான் மதுப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிட்டேன். 6 மாதமாகிறது. இப்போது எனக்கு வயது 35, நான் இன்னும் சுறுசுறுப்பாக இயங்க விரும்புகிறேன்.” என்றார். ‘குடி’யை நிறுத்திவிட்டேன் - சாஹல் ‘ஓபன் டாக்’
2 days 3 hours ago
வடமாகாணத்திலை சிங்களவனுக்கு... தெருவுக்கு தெரு விகாரை இருக்கு, எல்லா இடமும் இராணுவ முகாம் இருக்கு காவல் துறைகளில் 90 வீதமானவர்கள் சிங்களவர்கள் நினைத்த இடத்தில்... குடியேறி சிங்கள கிராமமாக மாற்ற அரச ஆதரவு இருக்கு. இனி சிங்களவனுக்கு என்ன பிரச்சினை. உழைத்து சாப்பிடுங்க(டா) "சிங்ஹிந்தியா" என்ற பெயரை பார்க்க... இந்தியாவின் வழமையான சகுனி விளையாட்டு நடைபெறுகின்றது போலுள்ளது.
2 days 4 hours ago
லிங் என மொட்டையாக கேட்டது என் தவறுதான். அரசியல் கருடன், அரசியல் குருடன் என தம்மை தாமே அழைத்து கொள்ளும் அநாமேதய யூடியூபர் அல்லாமல் … நமபகமான லிங் ஏதும் உள்ளதா ஐயா😂
2 days 4 hours ago
பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ , அமைப்புகளோ நேரடியா சென்று நூல் வழங்க முடியாது – வட மாகாண ஆளுநர் திட்டவட்டம்! பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1469178
2 days 4 hours ago
இந்த இரு பந்திகளும் என்ன நடந்தது என தெளிவாக காட்டுகிறன. எப்போதும் பைபிளை புரெட்டஸ்தாந்து மாணவருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதே மத அமைப்பின் வேண்டுகோள். கல்வி அலுவலகத்தின் முதல் கடிதம் இதை தெளிவாக சொல்லவில்லை. இந்த மயக்கத்தை அதே அலுவலகத்தின் இரெண்டாம் கடிதம் விளக்கி சொல்லி விட்டது. அத்தோடு முடிந்திருக்க வேண்டிய உள்ளக விடயம் இது. இரெண்டு சங்கிகள், ஒரு சம்பந்தமே இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர், கடைசியாக ஜனநாயக விரோத ஆளுனர், மூவரும் இதை ஊதி பெரிதாக்கி தமக்கு ஊடக வெளிச்சம் பாய்ச்சி உள்ளார்கள். சும்மா நாங்களும் நேரத்தை வீணடித்துள்ளோம். பிகு மேலே கொடுக்கப்பட இருப்பது கிங் ஜேம்ஸ் பைபிள் என நினைக்கிறேன். இதை கத்தோலிக்க மாணவருக்கே கொடுக்க முடியாது, இப்படி இருக்க இதை சைவ, இஸ்லாமிய அனைத்து மாணவருக்கு கொடுப்பார்கள் என்பது நம்பகூடியதல்ல, ஆரம்பத்தில் இருந்தே.
2 days 4 hours ago
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொலரை கோரும் பென்டகன்! ஈரான் போருக்கு நிதியளிப்பதற்காக 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க காங்கிரஸிடம் கோருவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பென்டகன் வெள்ளை மாளிகையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரியை மேற்கோள் காட்டி வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்க மக்களின் ஆதரவு மந்தமாக இருப்பதாலும், ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருவதாலும் இந்த நிதிக் கோரிக்கை காங்கிரஸில் ஒரு பெரிய அரசியல் போராட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்தப் பத்திரிகை விளக்கியுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தப் போர் நிதி வலு சேர்க்கும் என்றும், மோதலின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. இதுவரை அமெரிக்கப் படைகள் 7,800-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன, 8,000-க்கும் மேற்பட்ட போர் விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளன, மேலும் 120-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியுள்ளது. போரின் முதல் வாரத்திலேயே, அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக 11 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டிருந்தது. தற்போது மேலதிகமாக செலவிடப்படும் 200 பில்லியன் டொலருடன் சேர்த்து, போருக்கான அமெரிக்காவின் மொத்தச் செலவினம், 2025 ஆம் ஆண்டில் 356.51 பில்லியன் டொலர்களாக இருக்கும் ஈரானின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதியை விட அதிகமாக இருக்கக்கூடும் என ‘World Meters‘ அமைப்பு தெரிவித்துள்ளது. 2026 நிதியாண்டிற்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டிற்காக 838.5 பில்லியன் டொலரை காங்கிரஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1469194
2 days 4 hours ago
உவரின் மருமோன் யுதர். மற்றது புட்டின்னை போலவே, இஸ்ரேலிடமும் தம்பரின் எப்ஸ்டீன் லீலை வீடியோக்கள் இருக்கலாம் என நினைக்கிறேன். வேறு வழியில்லாமல் அவர்களின் டுயூனுக்கு ஆடுகிறாரோ?
2 days 4 hours ago
நன்றி அண்ணா, பாரதியை பவுடர் டப்பாவுடன் நான் ஒப்பிடவில்லை. அது எத்தகைய அபத்தம் என்பதை நான் அறிவேன். நான் சொல்ல வருவது இரெண்டு விடயங்கள்: Beauty is in the eyes of the beholder என்பார்கள். எது இலக்கியம், அதிலும் எது நல்ல இலக்கியம் என்பதுவும் இப்படியே. மேலே ஹாப்பர் லியின் ஆங்கில நாவலை சுட்டி இருந்தேன். செங்கை ஆழியனின் சில (அனைத்தும் அல்ல) நாவல்கள் அந்த தரத்தை எட்டி பிடிக்க முயல்வன. எனது பார்வையில். ஆனால் பலருக்கு அப்படி இல்லை. மேலே சொன்னதன் அடிப்படையில்தான் விருதுகளும் அமையும். நான் விருது குழுவில் இருந்தால் - செங்கை ஆழியனை பரிந்துரைப்பேன். இத்தோடு பழதட்டு கலாச்சாரமும் சேர்ந்து கொள்ள - இதுதான் விருது வழங்கும் முறை. இதுதான் காலகாலமான நடைமுறை. ஞானபீடம் மட்டும் அல்ல அத்தனை கலை விருதுகளும் இப்படியே. விளையாட்டு விருதுகள் போன்றவை objective ஆக ஓட்ட போட்டியில் யார் முன்னுக்கு வந்தார் என்பதை வைத்து கோல்ட் மெடல் கொடுக்கப்படும். கலை விருதுகள் subjective ஆனவை. அதுதான் அதன் இயற்கை (nature of the beast).
Checked
Sat, 03/21/2026 - 13:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed