3 months ago
யார் இந்த நிரஞ்சன்? “நாமல் ராஜபக்ச முறையில்” சட்டத்தரணி ஆகி இருப்பார் போலுள்ளது. 1995 வரை சந்தையில் இருந்த காலணி, 1999, 2000 வரை பாவிக்கப்பட்டிருக்கலாமே? 1995 க்கு முன்னானது என நிறுவ முயல்வதன் மூலம், ரிவிரெசவின் பின் செம்மணி பகுதி படையினர் கட்டுப்பாட்டுக்குள் வரமுதல் புதைத்தவை என நிறுவ முயல்கிறார். ஆனால் இவை மண்டையன் குழுவின் புதைகுழியாகவும் இருக்கலாம். 87 இல் இந்தியன் ஆமியிம் உதுக்குள்ள நிண்டதெல்லோ.
3 months ago
கிரிமினல் வழக்குகள் என்ற போர்வையில் என் பி பி யின் அரசியல் எதிரிகள் துரத்தபடுவதன் இன்னொரு ஆதாரம் ?
3 months ago
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதவர் கோச்சாக வரலாறு படைத்த கதை - யார் அவர்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் அமோல் மஜும்தார் கட்டுரை தகவல் சாரதா மியாபுரம் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் மும்பையின் சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளி அணிக்காக விளையாடி 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து உலக சாதனை படைத்தபோது, ஒரு பேட்ஸ்மேன் நாள் முழுவதும் கால்களில் பேட்களைக் கட்டிக்கொண்டு தன் முறைக்காகக் காத்திருந்தார். பள்ளியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளியுடன் படித்த அந்த மாணவரின் பெயர் அமோல் மஜும்தார். அந்தப் போட்டியில் அவருக்கு ஒரு பந்து கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு புதிய வழியில் வரையறுத்தது, அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படத் தொடங்கினார். அமோல் மஜும்தார் முதல் தர கிரிக்கெட்டில் 30 சதங்களுடன் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். ஒரு காலத்தில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்பட்டார், ஆனால் அவருக்கு ஒருபோதும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சச்சின் மற்றும் காம்ப்ளி போல, அமோல் மஜும்தாரும் சாரதாஷ்ரம் பள்ளியின் மாணவர்தான் (கோப்புப் படம்) தனது 21 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், அமோல் மஜும்தார் ஒருபோதும் இந்தியாவின் தேசிய அணிக்காக விளையாடவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இப்போது ஒரு பயிற்சியாளராக அவர் மகளிர் அணியை உலக சாம்பியனாக்கி உள்ளார். இந்திய அணி பெண்கள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பயிற்சியாளர் அமோல் மஜும்தாரை நோக்கி ஓடி, அவருடைய கால்களில் விழுந்தார், பின்னர் கட்டிப்பிடித்து விம்மி அழுதுவிட்டார். அவரும் இந்த வெற்றியைக் கண்டு மனம் திறந்து சிரித்தார், ஹர்மன்பிரீத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். போட்டிக்குப் பிறகு, அவர் உற்சாகமான வார்த்தைகளில் மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றதில் மிகுந்த பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார். இந்திய அணி கோப்பையை வென்றது அவருக்கு ஒருவேளை 'சக் தே இந்தியா' திரைப்படத்தின் 'கபீர் கான்' தருணம் போல இருந்திருக்கலாம். மும்பையில் ஒரு அற்புதமான ஆரம்பம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அமோல் மஜும்தார் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர். அமோல் மஜும்தார் மும்பைக்காக விளையாடி தனது முதல் தர கிரிக்கெட்டைத் தொடங்கினார். ஃபரிதாபாத்தில் ஹரியாணாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டி அவருடைய முதல் ரஞ்சி போட்டியாகும். இந்தப் போட்டியில், அவர் ஒரு இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்து, தனது அறிமுகப் போட்டியிலேயே அனைவரையும் கவர்ந்தார். இந்தச் செயல்திறன் காரணமாக, அவர் 'பம்பாய் பேட்டிங் பள்ளியில்' இருந்து வெளிவந்த மற்றொரு 'பெரிய சாதனை' என்று பாராட்டப்பட்டார். எனினும், 'ஸ்போர்ட்ஸ்ஸ்டார்' விளையாட்டுப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சலில் அன்கோலா மற்றும் வினோத் காம்ப்ளி போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட நியூசிலாந்து சென்றபோதுதான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று அமோல் மஜும்தார் கூறியிருந்தார். ரஞ்சி கோப்பையில் விளையாட இந்த வாய்ப்பை மும்பை கேப்டன் ரவி சாஸ்திரி தனக்கு வழங்கினார் என்று மஜும்தார் கூறினார். மஜும்தார் 1994 இல் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். அவர் சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் உடன் இந்தியா-ஏ அணிக்காகவும் விளையாடினார். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்கள் எடுத்த போதிலும், அவருக்குத் தேசிய அணியில் ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான பயணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டில், மும்பையின் ரஞ்சி அணியின் தலைவராக அமோல் மஜும்தார். அமோல் மஜும்தார் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்துள்ளார். உண்மையில், அவர் இத்தகைய கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். மஜும்தார் தனது வாழ்க்கையில் 171 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 48.13 என்ற சராசரியுடன் 11,167 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 30 சதங்கள் மற்றும் 60 அரைசதங்கள் அடங்கும். அவர் இருந்த காலத்தில் மும்பை எட்டு முறை ரஞ்சி டிராபியை வென்றது. 2006-07 ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணி தொடக்கத்தில் மிக மோசமாக விளையாடிய போது அவர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த விளையாட்டைப் பார்த்து அணி வெற்றி பெறும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் கேப்டனாக அவர் அணியை முன்னின்று வழிநடத்தினார், மேலும் ரஞ்சி டிராபி பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தார். மும்பை அணியுடன் 17 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பிறகு, அவர் 2009-இல் அசாம் அணிக்காக விளையாடினார். பின்னர் ஆந்திரப் பிரதேச அணியுடன் இணைந்தார். அவர் 2014 இல் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பயிற்சியாளராக ஒரு புதிய அவதாரம் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் பயிற்சியாளராக தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அணிகளுக்குப் பயிற்சி அளித்தார், மேலும் மும்பை அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி குழுவிலும் இருந்துள்ளார். அக்டோபர் 2023 இல், அமோல் மஜும்தார் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2024 ஆம் ஆண்டில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அமோல் மஜும்தார் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர். இந்த உலகக் கோப்பையில் நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டியில் தோல்வியடைந்தது, இதனால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு குறைவாக இருந்தது. இந்தூரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் தோல்விக்குப் பிறகு, இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ஒரு சம்பவம் நடந்தது. இந்தியா ஆஸ்திரேலியாவை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்தபோது, ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் இந்தத் தகவல் கிடைத்தது. அதில், இந்திய அணி தொடர்ந்து மூன்று தோல்விகளுக்குப் பிறகு எப்படி மீண்டு வர முடிந்தது என்று கேப்டன் ஹர்மன்பிரீத்திடம் கேட்கப்பட்டது? ஹர்மன்பிரீத் தனது அருகில் நின்று கொண்டிருந்த பயிற்சியாளர் அமோலைக் கை காட்டி, "இங்கிலாந்திடம் தோற்ற பிறகு நான் டிரஸ்ஸிங் ரூமில் எதுவும் சொல்லவில்லை. அவர்தான் எல்லாவற்றையும் பேசினார். 'நீங்கள் இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும்' என்று அவர் கத்தினார்" என்று கூறினார். அவர் அருகில் நின்று கொண்டிருந்த அமோல், "ஆமாம், நான் டிரஸ்ஸிங் ரூமில் சில விஷயங்களைப் பேசினேன். ஆனால் நான் இவை அனைத்தையும் அணியின் நலனுக்காக மட்டுமே கூறினேன்" என்று உடனடியாகக் கூறினார். பின்னர் ஹர்மன்பிரீத் புன்னகையுடன், "அன்று சார் (அமோல் மஜும்தார்) கொஞ்சம் கோபமாகப் பேசினார். ஆனால் அனைவரும் அந்த வார்த்தைகளை நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள். ஏனென்றால் அவர் அணியின் நலனைப் பற்றி மட்டுமே பேசுகிறார். எங்களுக்கு அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் நேர்மையாகப் பேசுவார்" என்று கூறினார். "எங்களிடம் இருந்து சார் என்ன எதிர்பார்க்கிறார் என்று எங்களுக்குத் தெரியும். இந்த நாட்டிற்கு எங்கள் செயல்திறன் இப்படி இருக்கக் கூடாது. எல்லா வீரர்களும் அந்தக் கருத்தை நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள். எங்கள் செயல்திறனிலிருந்து நீங்கள் அதைப் புரிந்து கொள்ளலாம்." கேப்டன் ஹர்மன்பிரீத் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டிக்குப் பிறகு ஊடகங்களிடம், "சார் பயிற்சியாளரான பிறகு விஷயங்கள் முற்றிலும் மாறிவிட்டன. இதற்கு முன்பு பயிற்சியாளர்கள் வந்து சென்றார்கள். ஒரு நிலையான பயிற்சியாளர் வந்தது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது" என்று கூறினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்திய அணியின் ஜெர்சியை அணியாத அமோல் மஜும்தார், இப்போது ஒரு பயிற்சியாளராகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அவருடைய அணி உலக சாம்பியன் ஆகிவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04gv21d304o
3 months ago
பட மூலாதாரம், Fenamad கட்டுரை தகவல் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி உலக மக்கள் தொகை செய்தியாளர் 3 நவம்பர் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025, 05:26 GMT பெருவின் அமேசான் பகுதியில் உள்ள ஒரு சிறிய திறந்த வெளியில் தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டில் காலடிச் சத்தம் நெருங்குவதைக் கேட்டார். அவர் தான் சூழப்பட்டுவிட்டதை அறிந்து உறைந்து போனார். "ஒருவர் நின்று, அம்புடன் குறிவைத்துக் கொண்டிருந்தார்," என்று அவர் கூறுகிறார். "எப்படியோ நான் இங்கு இருப்பதை அவர் கவனித்துவிட்டார், நான் ஓடத் தொடங்கினேன்." அவர் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினரை நேருக்கு நேர் எதிகொண்டார். பல தசாப்தங்களாக, நுவேவா ஓசியானியா (Nueva Oceania) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் தாமஸ், வெளியாட்களுடன் தொடர்பைத் தவிர்க்கும் இந்த நாடோடி மக்களுக்கு அண்டை வீட்டாராகவே இருந்தார். இருப்பினும், மிகச் சமீப காலம் வரை, அவர் அவர்களை அரிதாகவே பார்த்திருந்தார். மாஷ்கோ பைரோ மக்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகத்துடனான தொடர்பைத் துண்டித்துள்ளனர். அவர்கள் நீண்ட வில் மற்றும் அம்புகளைக் கொண்டு வேட்டையாடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றுக்கும் அமேசான் மழைக்காடுகளை நம்பியுள்ளனர். "அவர்கள் மிருகங்களைப் போலவும், பல வகையான பறவைகளைப் போலவும் சத்தம் எழுப்பியும், விசில் அடித்தும் என்னைச் சுற்றி வளைக்கத் தொடங்கினர்," என்று தாமஸ் நினைவு கூர்கிறார். "நான் தொடர்ந்து 'நோமோல்' (Nomole) (சகோதரர்) என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். பின்னர் அவர்கள் கூடினர், அவர்கள் நெருக்கமாக இருந்ததாக உணர்ந்தோம். எனவே நாங்கள் ஆற்றை நோக்கி ஓடினோம்." படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்களைப் பாதுகாக்க தாமஸ் விரும்புகிறார்: "அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே வாழ விடுங்கள்." மனித உரிமைகள் அமைப்பான சர்வைவல் இன்டர்நேஷனல் (Survival International) சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை, உலகில் இன்னும் குறைந்தது 196 'தொடர்பற்ற குழுக்கள்' இருப்பதாகக் கூறுகிறது. மாஷ்கோ பைரோ பழங்குடியினர் அவற்றில் மிகப் பெரிய குழுவினர் என்று நம்பப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க அரசுகள் அதிக நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தக் குழுக்களில் பாதி பேர் அடுத்த தசாப்தத்தில் அழிக்கப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது. மரங்களை வெட்டுதல், சுரங்கத் தொழில் அல்லது எண்ணெய் எடுப்பது போன்றவற்றால் அவர்களுக்கு மிகப் பெரிய அபாயங்கள் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. தொடர்பற்ற குழுக்கள் சாதாரண நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள். எனவே, சுவிசேஷ மிஷனரிகள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடனான தொடர்பு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. சமீபத்தில், மாஷ்கோ பைரோ மக்கள் நுவேவா ஓசியானியாவுக்கு அதிகமாக வரத் தொடங்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்தக் கிராமம் ஏழு அல்லது எட்டு குடும்பங்களைக் கொண்ட ஒரு மீன்பிடி சமூகம். இது அருகிலுள்ள குடியிருப்புக்கு படகில் செல்ல 10 மணி நேரம் ஆகும் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி தொடர்பற்ற குழுக்களுக்கான பாதுகாக்கப்பட்ட காப்பகமாக அங்கீகரிக்கப்படவில்லை. இங்கு மரங்களை வெட்டும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மரங்களை வெட்டும் இயந்திரங்களின் சத்தம் சில சமயங்களில் இரவும் பகலும் கேட்கிறது. மாஷ்கோ பைரோ மக்கள் தங்கள் காடு அழிக்கப்படுவதைக் காண்கிறார்கள் என்று தாமஸ் கூறுகிறார். நுவேவா ஓசியானியாவில், மக்கள் முரண்பட்ட உணர்வுகளுடன் இருப்பதாகக் கூறுகின்றனர். மாஷ்கோ பைரோவின் அம்புகளைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள், ஆனால் காட்டில் வாழும் தங்கள் "சகோதரர்கள்" மீது அவர்களுக்கு ஆழ்ந்த மரியாதை உள்ளது, மேலும் அவர்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். "அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே வாழ விடுங்கள், நாம் அவர்களின் கலாசாரத்தை மாற்ற முடியாது. அதனால்தான் நாங்கள் இடைவெளியைக் கடைப்பிடிக்கிறோம்," என்று தாமஸ் கூறுகிறார். பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, பெருவின் மாட்ரே டி டியோஸ் மாகாணத்தில் ஜூன் 2024 அன்று எடுக்கப்பட்ட மாஷ்கோ பைரோ மக்களின் புகைப்படம் மாஷ்கோ பைரோவின் வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு, வன்முறை அச்சுறுத்தல் மற்றும் மரங்களை வெட்டுபவர்களால் மாஷ்கோ பைரோ மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக நுவேவா ஓசியானியா மக்கள் கவலைப்படுகிறார்கள். நாங்கள் கிராமத்தில் இருந்தபோது, மாஷ்கோ பைரோ மக்கள் மீண்டும் தங்கள் இருப்பை உணர வைத்தனர். இரண்டு வயது மகள் கொண்ட இளம் தாய் லெடிசியா ரோட்ரிக்ஸ் லோபஸ் காட்டில் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் சத்தத்தைக் கேட்டார். "பலரின் கூக்குரல் சத்தங்களை கேட்டோம். ஒரு பெரிய குழு கத்துவது போல இருந்தது," என்று அவர் எங்களிடம் கூறினார். மாஷ்கோ பைரோ மக்களை அவர் சந்தித்தது அதுவே முதல் முறை, அதனால் அவர் ஓடினார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகும், பயத்தால் அவரது தலை துடித்துக் கொண்டிருந்தது. "மரம் வெட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் காடுகளை வெட்டுவதால் அவர்கள் பயத்தில் ஓடி வந்து எங்களுக்கு அருகில் வந்து விடுகிறார்கள்," என்று அவர் கூறினார். "அவர்கள் எங்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது." 2022 இல், இரண்டு மரம் வெட்டுபவர்களை மாஷ்கோ பைரோவினர் தாக்கினர். ஒருவர் வயிற்றில் அம்பு பாய்ந்தது. அவர் உயிர் பிழைத்தார், ஆனால் மற்றொருவர் உடல் சில நாட்களுக்குப் பிறகு ஒன்பது அம்பு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. பெரு அரசு தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அவர்களுடன் தொடர்பை ஆரம்பிப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடனான ஆரம்ப தொடர்பால், நோய், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டு முழு குழுக்களும் அழிக்கப்படுவதைக் கண்ட பழங்குடி உரிமைக் குழுக்களின் பல தசாப்தகால போராட்டத்திற்கு பிறகு இந்த கொள்கை முதல் முறையாக பிரேசிலில் உருவானது. 1980களில், பெருவில் உள்ள நஹாவ் (Nahau) மக்கள் வெளி உலகத்துடன் ஆரம்பத் தொடர்பு கொண்டபோது, அவர்களின் மக்கள் தொகையில் 50% பேர் சில ஆண்டுகளில் இறந்தனர். 1990களில், முருகானுவா (Muruhanua) மக்கள் அதே விதியை எதிர்கொண்டனர். "தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்கள் தொற்றுநோயியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். எந்தவொரு தொடர்பும் அவர்களுக்கு நோய்களைப் பரப்பக்கூடும். எளிமையான நோய்கள் கூட அவர்களை அழித்துவிடக்கூடும்," என்று பெருவியன் பழங்குடி உரிமைக் குழுவான ஃபெமனாட்டைச் சேர்ந்த இஸ்ஸ்ரைல் அக்விஸ்ஸே கூறுகிறார். "கலாசார ரீதியாகவும் எந்தவொரு தொடர்பும் அல்லது தலையீடும் ஒரு சமூகமாக அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்." தொடர்பற்ற பழங்குடியினரின் அண்டை பகுதியை சேர்ந்தவர்களுக்கு, இந்த கொள்கையின் யதார்த்தம் சிக்கலானதாக இருக்கலாம். மாஷ்கோ பைரோவை அவர் சந்தித்த காட்டுத் திறந்தவெளியில் தாமஸ் எங்களைச் சுற்றிக் காட்டும்போது, அவர் நின்று, கைகளை குவித்து விசில் அடித்து, பின்னர் அமைதியாகக் காத்திருக்கிறார். "அவர்கள் பதிலளித்தால், நாம் திரும்பிச் செல்ல வேண்டும்," என்று அவர் கூறுகிறார். பூச்சிகள் மற்றும் பறவைகளின் சலசலப்பு மட்டுமே கேட்கிறது. "அவர்கள் இங்கு இல்லை." ஒரு பதற்றமான சூழ்நிலையைத் தனியாகச் சமாளிக்க நுவேவா ஓசியானியாவின் குடியிருப்பாளர்களை அரசு விட்டுவிட்டதாகத் தாமஸ் கருதுகிறார். மாஷ்கோ பைரோ குழுவினர் எடுத்துச் செல்ல தனது தோட்டத்தில் அவர் காய், கனிகளைத் தரும் செடிகளை நடுகிறார். இது அவரும் மற்ற கிராம மக்களும் தங்கள் அண்டை வீட்டாருக்கு உதவவும், தங்களைப் பாதுகாக்கவும் கண்டுபிடித்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். 'இந்த வாழைப் பழங்களை வைத்துக்கொள்ளுங்கள், இது ஒரு பரிசு', நீங்கள் அவற்றைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். என்மீது அம்பு எய்யாதீர்கள் என அவர்களிடம் சொல்வதற்கான வார்த்தைகள் எனக்கு தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும்." கட்டுப்பாட்டு நிலையத்தில்... அடர்ந்த காட்டின் மறுபுறத்தில், சுமார் 200 கிமீ தென்கிழக்கில், நிலைமை மிகவும் வேறுபட்டது. அங்கு, மனு ஆற்றுக்கு அருகில், ஒரு வனக் காப்பகமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியில் மாஷ்கோ பைரோ வாழ்கின்றனர். பெருவின் கலாசார அமைச்சகம் மற்றும் ஃபெனமாட் இங்கு 'நோமோல்' கட்டுப்பாட்டு நிலையத்தை நடத்தி வருகின்றன. இதில் எட்டு முகவர்கள் பணியாற்றுகின்றனர். மாஷ்கோ பைரோவுக்கும் உள்ளூர் கிராமங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல கொலைகளில் முடிந்தபின்னர், 2013 இல் இது அமைக்கப்பட்டது. கட்டுப்பாட்டு நிலையத்தின் தலைவராக உள்ள அன்டோனியோ ட்ரிகோசோ யடால்கோவின் வேலை அது மீண்டும் நிகழாமல் தடுப்பதுதான். மாஷ்கோ பைரோ மக்கள் அடிக்கடி, சில சமயங்களில் வாரத்திற்குப் பல முறை வருகிறார்கள். அவர்கள் நுவேவா ஓசியானியாவுக்கு அருகிலுள்ளவர்களை விட வேறுபட்டவர்கள். அவர்களுக்கு ஒருவருக்கொருவர் தெரியாது என்று முகவர்கள் நம்புகிறார்கள். பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தை அணுகுகின்றனர் "அவர்கள் எப்போதும் ஒரே இடத்தில் வெளியே வருகிறார்கள். அங்கிருந்துதான் அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்," என்று அன்டோனியோ அகலமான மனு ஆற்றின் குறுக்கே எதிரே உள்ள ஒரு சிறிய கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையைச் சுட்டிக் காட்டுகிறார். அவர்கள் வாழை, மரவள்ளிக்கிழங்கு அல்லது கரும்புகளைக் கேட்கிறார்கள். "நாங்கள் பதிலளிக்கவில்லை என்றால், அவர்கள் நாள் முழுவதும் அங்கேயே உட்கார்ந்து காத்திருக்கிறார்கள்," என்று அன்டோனியோ கூறுகிறார். சுற்றுலாப் பயணிகள் அல்லது உள்ளூர் படகுகள் கடந்து சென்றால், முகவர்கள் அதைத் தவிர்க்க முயல்கிறார்கள். பொதுவாகக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார்கள். கட்டுப்பாட்டு நிலையத்தில் உணவுப் பயிர்களை வளர்க்க ஒரு சிறிய தோட்டம் உள்ளது. உணவு தீர்ந்து போகும்போது, அவர்கள் உள்ளூர் கிராமத்தில் இருந்து பொருட்களைக் கேட்கிறார்கள். இவை கிடைக்கவில்லை என்றால், இன்னும் சில நாட்களில் திரும்பி வருமாறு முகவர்கள் மாஷ்கோ பைரோவினரிடம் சொல்கின்றனர். இதுவரை அது வேலை செய்து சமீபத்தில் சிறிய மோதல்கள் மட்டுமே நடந்துள்ளன. வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 40 பேரை அன்டோனியோ வழக்கமாகப் பார்க்கிறார். அவர்கள் தங்களுக்கு விலங்குகளின் பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள். தலைவருக்கு கமோடோலோ (தேனீ) என்று பெயர். அவர் ஒரு கண்டிப்பான மனிதர் என்றும் ஒருபோதும் சிரிப்பதில்லை என்றும் முகவர்கள் கூறுகின்றனர். மற்றொரு தலைவர், ட்கோட்கோ (கழுகு) ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவர், அவர் நிறையச் சிரிக்கிறார் மற்றும் முகவர்களை கேலி செய்கிறார். யோமாக்கோ (டிராகன்) என்ற ஒரு இளம் பெண் இருக்கிறார், அவருக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதாக முகவர்கள் கூறுகிறார்கள். மாஷ்கோ பைரோ வெளி உலகத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் சந்திக்கும் முகவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பற்றியும், அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்றும் கேட்கிறார்கள். படக்குறிப்பு, நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ள முகவர்களில் ஒருவருக்கு, மாஷ்கோ பைரோ மக்களால் பரிசாக வழங்கப்பட்ட குரங்குப் பல் அட்டிகை ஒரு முகவர் கர்ப்பமாகி மகப்பேறு விடுப்பில் சென்றபோது, குழந்தை விளையாடுவதற்கு ஒரு ஹவுலர் குரங்கின் தொண்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட கிலுகிலுப்பையை (rattle) அவர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் முகவர்களின் உடைகள், குறிப்பாக சிவப்பு அல்லது பச்சை நிற விளையாட்டு உடைகள் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். "நாங்கள் நெருங்கும் போது, பழைய, கிழிந்த, பொத்தான்கள் இல்லாத ஆடைகளை அணிந்து கொள்கிறோம் - அதனால் அவர்கள் அவற்றைப் பறித்துக் கொள்ள மாட்டார்கள்," என்று அன்டோனியோ கூறுகிறார். "முன்பு, பூச்சி நார்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அழகான பாரம்பரிய பாவாடைகளை அணிந்தார்கள், ஆனால் இப்போது அவர்களில் சிலர், சுற்றுலாப் படகுகள் கடந்து செல்லும்போது, ஆடைகள் அல்லது பூட்ஸ்களைப் பெறுகிறார்கள்," என்று கட்டுப்பாட்டு நிலையத்தில் ஒரு முகவரான எட்வர்டோ பாஞ்சோ பிஸார்லோ கூறுகிறார். பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் யார் என்பது பற்றி இன்னும் குறைவாகவே அறியப்படுகிறது. ஆனால் காட்டில் உள்ள வாழ்க்கை பற்றி குழுவினர் கேட்கும்போதெல்லாம், மாஷ்கோ பைரோ உரையாடலைத் துண்டிக்கிறார்கள். "ஒருமுறை, அவர்கள் எப்படித் தீ மூட்டுகிறார்கள் என்று நான் கேட்டேன்," என்று அன்டோனியோ கூறுகிறார். "அவர்கள் என்னிடம், 'உங்களிடம் மரம் இருக்கிறது, உங்களுக்குத் தெரியும்' என்று சொன்னார்கள். நான் வலியுறுத்திக் கேட்டபோது, அவர்கள், 'உங்களிடம் ஏற்கெனவே இந்த விஷயங்கள் அனைத்தும் உள்ளன - நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்டனர்." யாராவது சிறிது காலம் வராமல் இருந்தால், அவர்கள் எங்கே என்று முகவர்கள் கேட்பார்கள். மாஷ்கோ பைரோ, "கேட்காதே" என்று சொன்னால், அந்த நபர் இறந்துவிட்டார் என்று அர்த்தம் என்று அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பல வருட தொடர்பு இருந்தபோதிலும், மாஷ்கோ பைரோ எப்படி வாழ்கிறார்கள் அல்லது ஏன் காட்டில் இருக்கிறார்கள் என்பது பற்றி முகவர்களுக்கு இன்னும் குறைவாகவே தெரியும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், "ரப்பர் பிரபுக்கள்" என்று அழைக்கப்படுபவர்களால் பரவலான சுரண்டல் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பி, ஆழமான காட்டுக்குத் தப்பிச் சென்ற பழங்குடி மக்களின் வாரிசுகள் என்று நம்பப்படுகிறது. மாஷ்கோ பைரோ, தென்மேற்குப் பெருவின் ஒரு பழங்குடி மக்களான யினியுடன் (Yine) நெருங்கிய உறவுடையவர்கள் என்று வல்லுநர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ஒரே மொழியின் பழமையான வட்டார மொழியைப் பேசுகிறார்கள். அதை முகவர்களும் (அவர்களும் யினி பழங்குடியினரே) கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், யினி மக்கள் நீண்ட காலமாக ஆற்றுப் பயணிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களாக இருந்தனர். அதேசமயம், மாஷ்கோ பைரோ இந்த விஷயங்களை எப்படிச் செய்வது என்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க நாடோடிகளாகவும் வேட்டையாடுபவர்களாகவும் மாறியிருக்கலாம். "அவர்கள் ஒரு பகுதியில் சிறிது காலம் தங்கி, ஒரு முகாமை அமைத்து, முழு குடும்பமும் கூடுகிறார்கள் என நான் புரிந்துகொள்கிறேன்," என்று அன்டோனியோ கூறுகிறார். "அந்த இடத்தை சுற்றியுள்ள அனைத்தையும் வேட்டையாடியவுடன், அவர்கள் வேறொரு இடத்துக்குச் செல்கிறார்கள்." பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் அமேசான் மழைக்காடுகளில் ஈட்டிகள் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி வேட்டையாடுகிறார்கள். ஃபெனமாட்டின் இஸ்ஸ்ரைல் அக்விஸ்ஸே, 100-க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நேரங்களில் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வந்துள்ளனர் என்று கூறுகிறார். "அவர்கள் தங்கள் உணவை பல்வகைப்படுத்த வாழைப்பழங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கைக் கேட்கிறார்கள், ஆனால் சில குடும்பங்கள் அதன்பிறகு மாதங்கள் அல்லது வருடங்களாக மறைந்துவிடுகின்றன," என்று அவர் கூறுகிறார். "அவர்கள், 'நான் சில காலம் சென்றுவிட்டு, பின்னர் திரும்பி வருவேன்' என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்கள்." இந்தப் பகுதியில் உள்ள மாஷ்கோ பைரோ மக்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஆனால் சட்டவிரோதச் சுரங்கத் தொழில் பரவலாக இருக்கும் ஒரு பகுதியுடன் இணைக்கும் ஒரு சாலையை அரசு கட்டமைக்கிறது. ஆனால், மாஷ்கோ பைரோ வெளி உலகத்துடன் இணைய விரும்பவில்லை என்பது முகவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. "இந்த நிலையத்தில் எனது அனுபவத்திலிருந்து, அவர்கள் வெளியுலகுடன் நெருங்கிய தொடர்பை விரும்பவில்லை என்பது தெரிகிறது," என்று அன்டோனியோ கூறுகிறார். படக்குறிப்பு, நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தில் வழக்கமாக சுமார் 40 பேரைப் பார்ப்பதாக கூறுகிறார் அன்டோனியோ "ஒருவேளை குழந்தைகள் விரும்பலாம், அவர்கள் வளரும்போது, நாங்கள் ஆடை அணிந்திருப்பதைக் காணும்போது ஒருவேளை 10 அல்லது 20 ஆண்டுகளில் மாறலாம். ஆனால் பெரியவர்கள் மாற மாட்டார்கள். நாங்கள் இங்கு இருப்பதை கூட அவர்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார். 2016 இல், மாஷ்கோ பைரோவின் காப்பகத்தை நுவேவா ஓசியானியா உள்ளிட்ட பகுதிகளுக்கு நீட்டிக்க ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அது ஒருபோதும் சட்டமாக இயற்றப்படவில்லை. "அவர்கள் எங்களைப் போலச் சுதந்திரமாக இருக்க வேண்டும்," என்று தாமஸ் கூறுகிறார். "அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் அமைதியாக வாழ்ந்தார்கள், இப்போது அவர்களின் காடுகள் அழிக்கப்படுகின்றன - அழிக்கப்பட்டு வருகின்றன என்பதை நாங்கள் அறிவோம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj6ny718p8yo
3 months ago
2008/2009 பிரச்சினைக்கு கடன்பட்டவர்கள் மாதாந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமல்ல என்கிறீர்களா? "ஒப்புவிக்கக் கூடாது" என்று நேத்தி வைத்திருப்பதால், முகட்டைப் பார்த்து யோசிக்கும் போது உங்களுக்கு வெளிப்பதை எல்லாம் எழுதி ஏன் ஐயா களத்தைத் தவறான தகவல்களால் நிரப்புகிறீர்கள்😂 ? ஆர்வமுள்ள வாசகர்களுக்காக: தன் வருமானத்திற்கு மீறிய மாதாந்தக் கட்டணத்தைக் கொண்ட வீட்டுக் கடன்களை நிரந்தரமாகத் தொழில் இல்லாத பலர் எடுக்க மேல் வியாபாரி போன்ற ஊழல் நிறுவனங்கள் அனுமதித்தன. அந்த றிஸ்க் கொண்ட sub-prime கடன்களை, ஏனைய நம்பிக்கையான கடன்களோடு சேர்த்து மொத்தமாக காப்புறுதி செய்தனர். இந்தக் றிஸ்க் கொண்ட கடன்களை ஊழல் வழிகளில் பெற்றவர்கள் கட்ட முடியாமல் (default) வீட்டுச் சாவியை தங்கள் தபால் பெட்டியில் போட்டு விட்டு தலை மறைவாயினர். காப்புறுதி நிறுவனம், ஒரே சமயத்தில் நிகழ்ந்த எல்லா இழப்புகளையும் ஈடு செய்ய இயலாமல் வங்குரோத்தானது. ஒபாமா பதவிக்கு வந்தவுடன் "Troubled Asset Recovery Program" என்ற முறையை சட்டமாக்கி மக்களின் வரிப்பணத்தை வைத்து இந்த $700 billion ஓட்டையை அடைக்க வேண்டியிருந்தது. மக்கெயின் பதவிக்கு வந்திருந்தால் அதையும் செய்யாமல் இன்னும் மக்களை அல்லாட விட்டிருப்பார்.
3 months ago
அத்தோடு, யாழ் களப் போட்டிகளில் முதல் ஜந்துக்குள் மூன்றுதரம் வந்துள்ளேன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா - இரண்டாம் இடம். முதல் ஜவரும் ஒரே புள்ளிகள் IPL - RCB - நான்காம் இடம் ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா - ஒன்பதாம் இடம் ICC மகளிர் உலகக் கிண்ணம் - இந்தியா - மூன்றாம் இடம்
3 months ago
நான் பார்த்த மட்டில் நேற்று தான் அவா சிவத்த பொட்டு வைச்சு விளையாடினா................இந்தியர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்...........................
3 months ago
இதற்காக தான் இழுத்தடிப்பு என்பது எப்பவோ தெரிந்ததே!
3 months ago
தீப்தி எப்போதும் பொட்டு வைச்சுக்கொண்டுதான் விளையாடுவா. உண்மையிலேயே பார்க்க நல்லாயிருக்கும்.
3 months ago
பையன் சாரை மட்டும் என்றில்லை............ நீங்கள் தான் தீவிரம் அதிகம் என்றாலும், 'பொட்டு வைத்த தங்கம்..............' என்று செம்பாட்டனும் அவர் பங்கிற்கு ஒரு கவிஞராகவும் களத்தில் நின்றார்....................🤣.
3 months ago
மிக்க நன்றி @கந்தப்பு அண்ணா. போட்டியில் தொடக்கம் முதலே முன்னணியில் இருந்த 1) @Ahasthiyan அண்ணா, 2) @alvayan அண்ணா, 3) @செம்பாட்டான் அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து கொண்ட கள உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
3 months ago
இது என்னை மனசில் வைச்சு எழுதின மாதிரி தெரியுது லொள்😁...................
3 months ago
❤️.................... களத்தில் போட்டியை வெகுசிறப்பாக நடத்திய கந்தப்புக்கு மிக்க நன்றி..........🙏. போட்டியில் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் மற்றும் அடுத்த இடங்களைப் பிடித்த அல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவி ஐயாவிற்கு பாராட்டுகள். போட்டியை கலகலப்பாக கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றிகள். மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் மகளிரை தனியாகவும், கிரிக்கெட்டை தனியாகவும் பார்த்து, ஒரே கல்லில் இரண்டு காய்களை விழுத்த முயன்றவர்களுக்கும் விசேட பாராட்டுகள்...................🤣.
3 months ago
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. Babu Babugi
3 months ago
பங்குபற்றிய நான்கு யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்துள்ளேன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ICC மகளிர் உலகக் கிண்ணம் - இந்தியா
3 months ago
முதல் மூன்றில் வந்ததில் மகிழ்ச்சி. அதுவும் மழையுடன் விளையாட்டு. தொடர் நன்றாகவே போனது. போட்டியை நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி.
3 months ago
தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: விஜய் அதிரடி கோரிக்கை Editorial / 2025 நவம்பர் 03 , பி.ப. 03:46 - 0 - 26 இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்குச் சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கைது, மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் வலை வீசியபோது நடந்ததாகத் தெரிகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, கைது செய்யப்பட்ட 35 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று கோரினார். ஒன்றிய அரசு, மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே தமிழக மீனவர்கள் மீதும் காட்டி, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விஜய் மேலும், தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, ஒன்றிய அரசும் தமிழக அரசும் இணைந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினார். இலங்கைக் கடற்படையின் இந்த நடவடிக்கை, மீனவர்களின் உரிமைகளை மீறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முடிவாக, இந்தக் கைது சம்பவம், தமிழக மீனவர்களின் பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. விஜயின் அறிக்கை, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது, கடல் எல்லை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்பதை உணர்த்துகிறது. Tamilmirror Online || தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: விஜய் அதிரடி கோரிக்கை
3 months ago
யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு! செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞானந்த தேரர் தெரிவித்தார். கடந்த 01.11.2025 அன்று யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிய இந்த ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் கூட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவில்லை. தற்போது புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அந்த குழியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்பு கூடுகள் வெளிவந்த படங்களை பார்த்தேன். செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைக்க திட்டம் தீட்டுகிறது. அதேபோல் தெற்கில் பட்டலந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக ஆரம்பித்தவர்கள் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். இந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எதனையும் செய்யாது ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது எனக்கூறி இவ்வாறே ஐந்து வருடங்களையும் கடத்த போகிறார்கள். ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ளாது என அவர் மேலும் கருத்து தெரிவித்தார். செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு!
3 months ago
............ https://youtube.com/shorts/-QqUdHPgUcg?si=N1dCfHj1kL2mnfTw
3 months ago
மேலே மாட்டை பற்றி கேட்க, மாட்டை கொண்டு வந்து மரத்தில் கட்டி விட்டு, மரத்தை பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதே? போதவில்லையா😂. எமக்கு எப்படி நாமாம்? இது எந்த வகையில் கட்டப்படாமல் தேங்கிய வரி என்பது தெரியவில்லை (மேலே இப்படித்தான் தேங்கி இருக்கலாம் என ஒரு ஊகம் கொடுக்கப்பட்டுள்ளது). ஆனால் முதல் பக்கத்தில் பதிந்த செய்திகளின் அடிப்படையில், திவாலாகுக் போது 240 மில்லியன் வரை HMRC க்கு இந்த நிறுவனம் கடனை கட்டாமல் விட்டு விட்டு திவாலாகியுள்ளது. 250 மில்லியன்க்கு 6-8 secondary schools ஐ கட்டலாம் என்கிறது ஜெமினி. இது ஒவ்வொரு யூகே வரியிறுப்பாளருக்கும் நாமம்தானே?
Checked
Sun, 02/08/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed