Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அவர்களுக்குரிய இடத்தில ஒழுக்கமாக இருந்து தமது பணியை செய்திருந்தால் ஏன் இந்த உபத்திரவம் எல்லாம் வருகுது? தவறு செய்யும்போது தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டும்.
  3. ஐக்கிய அமீரகம் அணியும் அடிச்சு ஆடுகின‌ம் 160ர‌ன்ஸ் அடிப்பின‌ம் போல் தெரியுது..........................
  4. “நானா” வின், காணொளி: 📽️👉 https://www.facebook.com/reel/905203261910665 👈 “Creepy Camera man” என அழைக்கப்படும் இவரது பெயர் முஹம்மது அஸ்கார் முஹம்மது-ராசிக் (Mohamed Askar Mohamed-Razik). 45 வயதான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அண்மையில் கனடாவின் டொராண்டோ நகரில் இவர் செய்த காரியங்கள் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் அச்சுறுத்தி வந்த முஹம்மது அஸ்கார் ராசிக் என்பவரின் அட்டகாசங்களுக்கு ஒருவழியாக கனடா காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. "சமூக வலைதளப் பிரபலம்" என்கிற போர்வையில் இவர் செய்த அநாகரீகச் செயல்கள் தற்போது உலகறிய வந்துள்ளன. இவரது வீடியோக்களைப் பார்த்த எவருக்கும் ஒன்று தெளிவாகத் தெரியும், இவர் ஒரு சாதாரண படைப்பாளி அல்ல. ஆள் ஒரு மோசமான நபர் என்பது…. பொது இடங்களில் செல்லும் பெண்களை வழிமறிப்பது, அவர்களை வம்புக்கு இழுப்பது, மற்றும் அவர்கள் பயப்படும் வரை கேமராவை முகத்திற்கு நேரே பிடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்வது இவரின் வாடிக்கை. இவரது வன்முறை கலந்த அணுகுமுறை மற்றும் இவர் பெண்களிடம் காட்டிய ஆக்ரோஷம் பலரை பொது இடங்களில் அச்சத்துடன் நடமாட வைத்தது. “வீடியோ எடுக்க வேண்டாம்" என்று பெண்கள் மறுத்த பிறகும், ஒரு நிழலைப் போல பின்தொடர்ந்து துன்புறுத்துவதை ஒரு ‘மிகவும் அனுபவித்து’ செய்து வந்துள்ளார். பல நாட்களாக இவரை ஏன் யாரும் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது கனடா காவல்துறை இவரை 'Criminal Harassment' (குற்றவியல் துன்புறுத்தல்) பிரிவில் கைது செய்துள்ளது. இனி சட்டத்தின் பிடியில் இருந்து “மைனர் மாப்பிளை” தப்புவது இனி கடினம். "இலங்கையர்" என்ற அடையாளத்தோடு இவர் செய்த இந்த அருவருப்பான காரியங்கள், உலகெங்கிலும் வாழும் கண்ணியமான இலங்கை மக்களுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளது. இவரைப் போன்ற ஒரு தனிநபரின் வக்கிரமான குணத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை கூற முடியாது. ஆனால், இவரைப் போன்றவர்கள் சமூகத்தின் பெயரால் உலவுவதை அனுமதிக்கக்கூடாது என்பதில் இலங்கைச் சகோதரர்கள் உறுதியாக உள்ளோம். காவல்துறை இவருக்கு உரிய தண்டனையை வழங்கும் என நம்புவோம். அதே சமயம், சமூக ரீதியாக இவரைப் போன்றவர்களைப் புறக்கணிப்பதன் மூலமே எமது சமூகத்தின் கண்ணியத்தை நாம் நிலைநாட்ட முடியும். Mukinthan Thurairajasingham
  5. தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் உறவினர் தெரிவிப்பு! அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது வாகனத்தினை ஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். அந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில் , சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் , அவர் வாகனம் ஓட்டுவதனை தொழிலாக செய்து வந்தார். எனவும் பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி சாரதி அனுமதி பத்திரம் இன்றி சாரத்தியம் செய்து வந்தார் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அருவி வெட்டு நடவடிக்கைக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்ற போது தன்னிடம் பணம் இல்லாததால் தான் பொலிஸார் மறித்த போது நிறுத்தாமல் பயணித்துள்ளனர் எனவும் அதனாலயே பொலிஸார் சுட்டுள்ளனர் எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதேவேளை, அவருடன் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் நெருங்கிய உறவினர்களே எனவும் குடும்ப கஷ்டம் காரணமாகவே 17 வயதில் அவர் உழைக்க சென்றதாகவும் அவரை அநியாயமாக சுட்டு கொன்று விட்டார்கள் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை பொலிசாரின் கட்டளையை மீறி சென்றதாக தெரிவித்து ஹயஸ் ரக வாகனம் ஒன்றின்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464076
  6. விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்! ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்கட்டமாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 100 பேருந்துகளைக் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்காக, கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பேருந்துகளையும் அவற்றின் இயக்க நடவடிக்கைகளையும் அந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2026/1464095
  7. யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு! யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார். வந்தவர் அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினாவியுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் , அவரது இடுப்பு பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் காணப்பட்டதாக, சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் அறிவித்துள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு , துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591331 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2026/1464079
  8. இன்றையான் ப‌ரிட்சையும் பிழை விடாம‌ பாஸ் ஆகியாச்சு நாளையான் ப‌ரிட்சையை ப‌ற்றி ந‌ம்ம‌ @வாத்தியார் சொல்லித் த‌ர‌ வில்லை............ச‌ரியான‌ நேர‌ம் பார்த்து பார்த்தியார் பாட‌சாலை வ‌ர‌ வில்லை பாட‌ம் எடுக்க‌ நாளைக்கு முட்டை கிடைச்சா அந்த‌ முட்டையால் மாண‌வ‌ர்க‌ள் வாத்தியாருக்கு எறிவ‌தாக‌ கூடி பேசி இருக்கிறோம்😁😃😄.....................
  9. Today
  10. சிறிமாவின் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்திய விதம் விமர்சனத்துக்குரியது. பல பொருளாதார வல்லுனர்கள் இது பற்றி கூறியுள்ளார்கள். ஆனால், வடபகுதி விவசாயிகள் மட்டுமல்ல, அகில இலங்கை உள்ளூர் உற்பத்தியாளரும் இந்த பொருளாதாரக் கொள்கையால் நன்மையடைந்தனர். மக்கள் அன்றாட பாவனையில் இருந்த வெங்காயம், மிளகாய் ஆகியனவற்றை வட பகுதி விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்ததால் நல்வாய்பாக வட பகுதி விவசாயிகள் உடனடி நன்மையடைந்தனர். மற்றபடி, பாணுக்கு கியூவால் பாதிக்கப்படவர்கள் சிங்கள மக்கள் மட்டுமல்ல, யாழ்பாணம் உட்பட வட கிழக்கிலும் அதே நிலை தான். சடுதியான இறக்குமதி தடையையல் 1973 ன் இறுதியில் இருந்து குறுகிய காலத்திற்கே அது இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் அரச/ தனியார் துறை ஊழியர்கள். சுய தொழில் செய்வோர் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படவில்லை. ஆனால், . 1974 ன் நடுப்பகுதியின் பின் நிலமை சற்று சீராகியது. ஒட்டு மொத்தமாக உள்ளூர் உற்பத்திகள் அதிகரித்தன. பல தரவை நிலங்கள் விவசாய நிலங்களாகின. படித்த வாலிபர் திட்டம் என்ற திட்டதின் மூலம் மக்களுக்கு வன்னியில் அரசால் காணிகள் வழங்கப்பட்டது அந்த காலத்தில் தான். ஆனால் திட்டத்தின் எதிர்பார்ப்பின் அளவுக்கு யாழ் மக்கள் தமது சோம்பேறித்தனத்தால் அங்கு செல்லவில்லை என்பது வேறு விடயம். எந்த ஒரு பொருளாதார திட்டமும் அதன் பலனை கொடுக்க சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் இலங்கை போன்ற நாடுகளில் வழமையான பொதுத்துறை ஊழல் இந்த பொருளாதார கொள்கை நடைமுறை படுத்தலில் பாரிய சிக்கல்களை உருவாக்கியது. அரச துறையில் ஊழல்கள் மலிந்தது இத்திட்டதை பெரிதும் பாதித்தது. ஊழலை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியது. ஆளும் கட்சியினரே பல ஊழல்களை செய்தனர். இது பல எதிர்மறையான அனுபவங்களை மக்களுக்கு கொடுத்தது. இதன் பலனை ஐக்கிய தேசியக்கட்சி 1977 ல் அறுவடை செய்தது. மற்றப்படி நான் சிறிமா ஆட்சியை அப்படியே முழுமையாக ஆதரித்து எப்போதுமே கருத்திடவில்லை. எந்த ஆட்சி என்றாலும் அவர்களால் தமிழருக்கு நன்மையான திட்டங்கள் வரும் போது தந்திரோபாய ரீதியில் கண்டும் காணாமல் அனுமதிக்க வேண்டிய தமிழரசு எல்லா திட்டதையும் மூர்க்கமாக தனது அரசியல் பிழைப்புக்காக எதித்தது. அதற்கு வழமைபோல் பல சொத்தைக் காரணங்களை தூக்கி பிடித்து உணர்சசி அரசியலை மட்டும் செய்தது. அதைத் தவறு என்று குறிப்பிட்டதை தூக்கிப் பிடித்து நான் சிறிமாவை ஒரேயடியாக புகழ்ந்ததாக மடைமாற்றுவது தமிழ் தேசியவாதிகளின் இயல்பு தான் என்பதால் அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியம் இல்லை. மக்கள் நன்றியறிதலுக்காக வாக்களித்ததாக கூறியவுடன் நன்றி இலங்கை தமிழரின் இரத்தத்தில் ஊறியது DNA யில் ஊறியது என்று வெற்றுப் பெருமை மார்தட்ட வேண்டாம். இப்படியான வெற்றுப் பெருமை மார்தட்டல்கள் தான் தமிழரை அழித்து இந்த நிலைக்கு கொண்டு வந்தது. கொப்பேகடுவ்வுக்கு வடபகுதி மக்கள் வாக்களித்தது நன்றியறிதல் மட்டுமல்ல மீண்டும் சு. க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இறக்குமதி தடை வரும் நாம் நன்மையடையலாம் என்ற சுய நல எதிர்பார்ப்பினாலும் தான். அதில் தவறில்லை சாதாரண மக்கள் அரசிடம் தமக்கு நன்மைகளை எதிர்பார்த்து வாக்களிப்பது இயல்பானது.
  11. ந‌மீபியா கூட‌ ர‌ன்ஸ் அடிப்பின‌ம் என‌ நானும் நினைத்தேன் நெத‌ர்லாந் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு மிக‌ அருமை நெத‌ர்லாந் வீர‌ர் த‌னி ஒருவ‌னாய் அடிச்ச‌ அடி வ‌வ்வ்வ்வ்வ்வ்வ்🏏💪..................
  12. நமீபியா அடிக்கத் தொடங்கிற நேரமெல்லாம் விக்கட் விழுந்துது. நெதர்லாந்து அடிக்க அடிக்க ஓட்டம் கூடிச்சு. இலகுவான வெற்றி.
  13. நெத‌ர்லாந்தின் திற‌மையான‌ ப‌ந்து வீச்சு பராட்ட‌ த‌க்க‌து...........ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளும் த‌ங்க‌ட‌ ப‌ங்க‌ளிப்பை ச‌ரியாக‌ செய்த‌ ப‌டியால் ஈசியாக‌ வென்று விட்டின‌ம்........................
  14. நெதர்லாந்து டெல்லி வெதரையும் விரட்டி நமீபியாவையும் வென்று விட்டார்கள் ...........!
  15. அடுத்த‌ மைச் பெரிய‌ ஆர்வ‌ம் இருக்காது பார்க்க‌ மேல் ஓட்ட‌மாய் ஸ்கோரை பார்க்க‌ போகிறேன் லொள் ஹா ஹா..........................
  16. அந்த தோட்டத்தொழிலாளர்களின் மகிழ்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கு . .......! 😂
  17. இர‌ண்டு ஓவ‌ர் இருக்க‌ த‌க்க‌ நெத‌ர்ந்லாந் ம‌ச்சை வென்று விட்டின‌ம்.................அமோக‌ வெற்றி....................... ச‌கோத‌ர‌ர் @ஏராளன் இன்று முத‌ல‌மைச்ச‌ர் ஆகிறார் ஹா ஹா😍......................
  18. 1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி! ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நோர்வூட் எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பாற்சோறு சமைத்து நன்றியை தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, மக்களை வீதிக்கு இறக்காமல், ஜனாதிபதி உறுதியளித்தபடி சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்காக ஜனாதிபதிக்கும் பெருந்தோட்டத் துறை அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். மேலும் சிலர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த போதிலும், அது போதியளவில் அமையவில்லை என்றும், வரவுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். தற்போதைய ஜனாதிபதி எந்தவித போராட்டமும் இன்றி கூடுதல் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது எனவும், இதற்காக ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததாகவும் கூறினர். https://athavannews.com/2026/1464002
  19. உங்கள் கருத்துகளுக்கு நன்றி கோசான். ஒரு விடயத்தை மட்டும் சுட்டிக் காட்ட விழைகிறேன். தமிழ்த் தேசிய போர்வையை போர்ததியதன் மூலம் தமது வண்டவாளங்களை அந்த போர்வைக்குள் மறைத்து, நல்ல தமிழன், நல்ல அரசியல்வாதி, நல்ல மனிதன் என்ற பெயரை பெற்றவர்கள் தமிழ் அரசியல்வாதிகளில் பலர் உண்டு. அன்றும் இன்றும் அது தான் உண்மை. எவ்வளவு இறுக அந்த போர்வையை போர்கிறர்களோ அந்தளவுக்கு அவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறாது காப்பாற்றப்படும் கேடயமாக அது செயற்படும் என்பதை புரிந்தவர்கள் அவர்கள். உதாரணங்கள் தந்தால் அதுவே நீண்ட விவாதம் ஆகும் என்பதால் தவிர்ககிறேன். டக்லஸ் நீண்ட காலம் அரசாங்கத்தில் அமைசராக இருந்தாரே தமிழ் மக்கள் சார்பாக செயற்பட்டு தவிர ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் ஏதாவது திட்டங்கள் ஏதாவது செய்தாரா? எனது பார்வையில் அப்படி இல்லை. ஒரு வேளை எனது கண்ணுக்கு அது தெரியவில்லையோ? அவ்வாறு செய்தார் என்பதை நீங்கள் நிரூபித்தால் அவரது அந்த செயலை நான் ஆதரித்து எழுதுவேன். (கவனிக்க அந்த செயலை மட்டும்)
  20. டெல்லி மைதான‌த்துக்கு இது சின்ன‌ ஸ்கோர் நெத‌ர்லாந் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு............... நெத‌ர்லாந் தோத்தால் என‌க்கு முட்டை உங்க‌ளுக்கு புள்ளி நெத‌ர்லாந் வென்றால் என‌க்கு புள்ளி.........................
  21. மணிபல்லவம்: இறகைப் போல விழும் வெடிகுண்டு- சிறில் அலெக்ஸ் அன்புள்ள ஜெ, வாசு முருகவேல் எழுதிய மணிபல்லவம் நாவல் சென்னை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு சிறப்பான கவனத்தை பெற்றிருக்கிறது. நாவல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு The Zone of Interest என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆஷ்விட்ச்சின் (Auschwitz) தலைமை அதிகாரியான ரூடால்ஃப் ராஸ், அவரது குடும்பத்தினருடன் ஆஷ்விட்சை ஒட்டியிருந்த குடியிருப்பில் தங்கள் அன்றாட குடும்பவாழ்க்கையில் சாதாரணமாக தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பதுதான் படத்தின் கதையின் சாரம். பின்னணியில் உயர்ந்து நிற்கும் புகைபோக்கிகளில் என்னேரமும் கரும்புகை பொங்கி வானை நிறைத்துக்கொண்டிருக்கிறது. அவர் தன் பணியை ஒரு அரசாங்க சிப்பந்தியைப் போல செய்துகொண்டிருக்கிறார், வேலை போய்விடுமோ என கவலை கொள்கிறார். அங்கிருக்கும் கொலைக்கூடங்களின் திறனை அதிகரிப்பது குறித்து திட்டஙளிடுகிறார். அரசுக்கு அறிக்கைகளை அனுப்பி வைக்கிறார். வீட்டில் கணவனும் மனைவியும் குடும்ப சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். சமையல், துணி துவைப்பது, தோட்டத்தை பராமரிப்பது பிள்ளை வளர்ப்பு என அன்றாடப் பணிகள் அதனதன் போக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பின்னணியில் புகைபோக்கிகள் ஓய்வின்றி வானைக் கரியாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்திற்கும் மணிபல்லவத்திற்கும் இரு தொடர்புகள் உள்ளன. முதலில் இரண்டாம் உலகப்போர் குறித்து இன்னும் சொல்லி முடிக்கப்படாத கதைகள் இருப்பதைப் போலவே ஈழப் போரும் இன்னும் சொல்லித் தீராத ஒன்றாகவே உள்ளது. வாசு வருடத்திற்கு ஒரு நாவல் என்பதற்குப் பதில் அன்றாடம் ஒன்று என எழுதினாலும் அதன் கதைகள் தீரப் போவதில்லையோ என்று தோன்றுகிறது. அவருடன் ஷோபா சக்தியும், அகரமுதல்வனும், சயந்தனும், காலம் செல்வமும் எனப் பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் எழுதுவார்கள். இரண்டாவது தொடர்பு அல்லது ஒற்றுமை இரண்டிலும் பெருங்கொடுமைகள் அன்றாட வாழ்க்கையைச் சுற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பது. (The Zone of Interest படம் ஹானா ஆரண்ட்டின் Banality of violence உடன் ஒப்பிடப் படுகிறது.) உண்மையில் ஒரு விபத்து அல்லது கொடூரம் நிகழும் ஒரு நொடிக்கு முன்புவரை வாழ்க்கை இயல்பானதாகவே உள்ளது. நம் அன்றாடங்களுக்கு மத்தியில்தான் ஒரு போரின் முதல் குண்டு வந்து விழுகிறது, ஒரு கொலைக்கு முன்பான முதல் சலசலப்பு நிகழ்கிறது. காலையில் எழுந்து முகம் கழுவி உடை மாற்றி சாப்பிட்டு விட்டு ஒரு படகிலேறும் தீவுவாசிகளின் அன்றாடத்தில் நேவி நுழைகிறது. வாசு இந்த நாவலில் அதிகம் சொல்லியிருப்பது ‘நயினாத் தீவின்’ அன்றாட வாழ்க்கையை, அங்கிருந்த ‘ஆமி காம்பின்’ அன்றாடத்தை, கதைநாயகி ஷோபாவின் அன்றாடத்தை. இவற்றை இத்தனை இயல்பானதாகச் சொல்லியிருப்பதால் நாவலின் பிற முக்கிய நிகழ்வுகள் தனித்து தெரிகின்றன போலும். அதாவது வாசு நாவலை எதை நோக்கியும் செலுத்தவில்லை. அவர் சில நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டு செல்கிறார். அந்த அன்றாடம் அசாதரணாமக மாறிய நாட்கள்கூட அதே நிதானத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசுவின் ஒடுக்கமான உடலிலிருந்து கூக்குரல் எழுவதில்லை அவர் நம்முடன் சாதாரணமாக உரையாட மட்டுமே செய்கிறார். அதுவும் தனக்கேயுரிய தயக்கத்துடன்… இந்த நாவலை வாசு எப்படி திட்டமிட்டிருபார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. என்னால் இந்த வடிவத்தை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் வாசு ‘ஏன் எடுத்த மாட்டிலேயே ஒரு நாடகத்தைப் பின்னவில்லை? ஏன் அவர் படைத் தளபதிகள் திட்டங்கள் தீட்டும் காட்சிகளை எழுதவில்லை, எதிரியின் கொக்கரிப்பை ‘ஹ ஹ ஹ’ என்று எழுதவில்லை? ஏன் அவர் கொல்லப்படுபவர்களின் பரிதாபப் பின்னணிகளைச் சொல்லவில்லை?, அவர் ஏன் அவர்களை குற்றமற்றவர்களாகக் கூட காண்பிக்க முயலவில்லை?’ என்று என்னால் யோசிக்க முடியவில்லை. ஒரு குறைந்த பட்ச கொந்தளிப்புகூட இல்லாமல் ஒரு கொடுமையை எழுதிவிட முடியுமா! வாசு அதைத்தான் செய்திருக்கிறார். ஷோபா காலையில் எழுகிறாள், மீன்வாங்குகிறாள், குளம்பு வைக்கிறாள், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறாள், தெருவில் சைக்கிளோடு விழுந்து கிடப்பவனுக்கு உதவுகிறாள், தன் வீட்டுக்கு வருபவர்களுக்கு கசந்த தேனிரைத் தந்து உபசரிக்கிறாள், அவர்களது அறிவுரைகளைக் கேட்கிறாள் (காதில் மட்டும்) ஒரு நாள் கிளம்பி குழந்தையை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்கிறாள். அன்றாட, சாதாரண, தினசரி நிகழ்வுகள்… சிலர் பழைய தினசரித் தாளில் பலகாரத்தைப் பொதிந்து எடுத்துச் செல்வார்கள், சிலர் தங்கத்தைப் பொதிந்து கொண்டு செல்வார்கள், வாசு இரத்தம் தோய்ந்த கொடுவாள் ஒன்றைப் பொதிந்து வைத்துள்ளார். வாசுவும் அவர் படைப்புகளும் அரசியலற்றவை அல்ல என்பதும் நமக்குத் தெரியும். அதில் அவர் வெளிப்படையானவர். ஆனால் அரசியல் எத்தனை கவனத்துடனும், நயத்துடனும் பேசப்படுகிறது என்பது மணிபல்லவத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. நாவலின் முதல் சில வரிகள் இவை… ‘ஷோபா அன்றைக்குக் காலையில் எழும்பும்போது மணி அதிகாலை ஐந்தரைதான். ஆறு மணிக்கு வழமை போல இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சாரம் நிறுத்தப்படும். ஓம், ஊரில் மின்சாரமும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.’ அந்த கடைசி வரியில் அவர் பல பக்கங்களில் எழுதப்பட வேண்டியவற்றை எழுதிவிடுகிறார். உண்மையில் இந்த நாவல் இருனூறு முன்னூறு பக்கங்களாக விரித்து எழுதப்படும் சாத்தியங்களை உள்ளடக்கியது. மணிபல்லவம் வாசக இடைவெளி மிகுந்த படைப்பாக உள்ளது. எனவே சிறிய நாவலாக இருந்தாலும் அதை ஒரே வாசிப்பில் முடிக்க இயல்வதில்லை. நாவலின் நிகழ்வுகளும் இடம், காலம் இன்றி முன்னும் பின்னுமாக அடுக்கப்பட்டுள்ளன எனவே சீரிய, தீவிர வாசிப்பைக் கோரும் நாவலாக அமைந்துள்ளது, அதே நேரம் மிக எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிக எளிய வகையிலேயே சொல்லிச் செல்கிறார். இந்த அம்சம் நாவலுக்கு ஒரு தனித்துவத்தை அளிக்கிறது. சில இடங்களில் என்ன நடக்கிறது என்பதை யூகிக்கத்தான் முடிகிறது, ஆனாலும் சுவாரஸ்யம் குறைவதில்லை உதாரணமாக கொத்தலாவ பாத்திரத்தின் இறுதிப் பகுதியைச் சொல்லலாம். மணிபல்லவம் பேசும் அரசியலை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் தமிழர்கள் புத்தரையும் வணங்கியவர்கள். பின்னர் புத்தரை அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக ‘பிரித்தெடுத்தவர்கள் வந்தார்கள்’. நாகர்கள் மத்தியில் இருந்த பதவிப் போரை நிறுத்தி அமைதியைக் கொண்டு வந்த புத்தரின் கதையை உள்ளடக்கிய இந்த நாவல் தமிழர் சிங்களவர் ஒற்றுமைக்கும் புத்தரே காரணமாய் அமைந்திருக்கக் கூடும் எனும் ஏக்கத்தை முன்வைப்பதைப் போல உள்ளது. அதே நேரம் புத்த பிக்குகளே நேரடியாக அரசியலிலும் அரசியல் கொலைகளிலும் ஈடுபட்ட வரலாற்றையும் பதிவு செய்கிறது. அரசியல் கலந்த கதைகளை எழுதும்போது ஒற்றைப் படையான கதாபாத்திரங்களை முன்னிறுத்துவது எளிதானது. பல நேரங்களில் இது ஆசிரியர் அறியாமலேகூட நடந்துவிடுகிறது. ஆனால் வாசு இதை மிகச் சரியாக கையாண்டிருக்கிறார். இரு பக்கங்களிலும் சுற்றி நடக்கும் அரசியலை விரும்பியும் விரும்பாமலும் கவனித்தும் கவனிக்காமலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை நமக்குக் காண்பிக்கிறார். சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளால் தவிர்க்க முடியாமல் இந்தப் போர் அரசியலுக்குள் தள்ளப்படும் சில முக்கிய கதை மாந்தர்களும் உள்ளனர். இரு பக்கமும் தீவிர ஆதரவாளர்களும், கடும்போக்காளர்களும் உள்ளனர், இரு பக்கமும் சூழ்நிலைக் கைதிகள் உள்ளனர் இரு பக்கமும் தங்கள் இன அரசியலின் கடும்போக்குகளை ஆதரிக்காதவர்களும் உள்ளனர், இரு பக்கமுமே போருக்கு மத்தியில் தன் அன்றாட, சாதாரண வாழ்க்கையை நடத்திக்கொள்ளும் அப்பாவி மக்களும் உள்ளனர். இது நாவலுக்கும், நாவல் சொல்லும் அரசியலுக்கும் சமநிலையை அளிக்கிறது. ஒரு நியாயத் தராசில் எடைபோட்டதைப் போன்ற இந்த அமைப்பு நாவலுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது, கதை மாந்தர்கள் மீது ஈடுபாட்டைக் கொண்டு வருகிறது. வாசு ஒரு யுக்தியை சரியாகக் கையாண்டிருக்கிறார். அரசியலை நேரடியாக எழுதாமல் கதைமாந்தர்களின் பின்னணியில் சேர்த்து விடுகிறார். உதாரணமாக சிங்களம் கட்டாயமாக்கப்பட்டதால் ‘கவுரவமான’ அரசு வேலையை இழந்துவிட்ட ஒரு பாத்திரம் அவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையைச் சொல்கிறது. ஆனால் அது அரசியல் என்று நம்மால் நேரடியாக உணர்ந்துவிட முடியாதபடி வாசு எழுதியுள்ளார். வேலை இழந்து வீட்டில் உள்ளவர்கள் மீது எரிச்சல் அடைந்து கிட்டத்தட்ட மன நலம் குன்றி அவர் சென்று சேரும் இடம் கவுரவமற்ற இன்னொரு ‘அரசுப்’ பணியில். இதே போல இயக்கத்துக்கு ஓடிச் செல்லும் மனிதர்களின் குடும்பங்களின் தவிப்பையும், சிறுவர்களை கடத்திச் சென்று போர்ப் பயிற்சி தரும் இயக்கத்தைக் குறித்தும் எழுதியிருக்கிறார். நாவலின் துவக்க வரிகளைச் சுட்டிக்காட்டியதுபோல நாவல் முழுவதும் வரும் ஆசிரியரின் கூற்றுக்கள் பலவும் அரசியலையும் சில வியப்பூட்டும் கண்ணோட்டங்களையும் முன்வைக்கின்றன. வாசுவின் எழுத்தில் இந்த முதிர்ச்சி வந்திருப்பதை அவரது முந்தைய நாவல்களை வாசித்தவர்கள் உணர முடியும். ‘வேறுபடுத்துபவர்கள் வந்தார்கள். அவர்கள் சிங்களவரில் இருந்துதான் வந்தார்கள், பவுத்தர்களில் இருந்து வந்திருக்க முடியாது இல்லையா!’ ‘உலகத்துக்கு இலங்கையும் ஒரு குட்டித் தீவுதான் என்பது குறித்துச் சிந்திக்கும் யாரும் இன்னும் இலங்கையை ஆண்டதாகத் தெரியவில்லை.’ ‘பண்டாரவின் உழைப்புக்கும் இலங்கையின் அத்தியாவசிய பொருட்களின் விலைக்குமான வித்தியாசம் கூடிக்கொண்டேதான் இருந்தது.’ ‘சமாதானத்தில்தான் சந்தேகங்களும் கேள்விகளும் அதிகம் தோன்றுகின்றன.’ ‘பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் வாழ்க்கை பலநேரம் ஒற்றையடிப் பாதையாகவே மாறிவிடுகிறது’ இதுபோன்ற பல வரிகளைச் சொல்ல முடியும். ‘போர்க்களத்தில் எல்லோருக்கும் சம பங்குதான். அது ஆணின் இரத்தமானாலும் பெண்ணின் சதையானாலும்.’ இந்த வரியில் பெண்ணின் ‘சதை’ என்ற பதம் சொல்லும் நுட்பமான செய்தி அல்லது அரசியலை ஒரு தேர்ந்த வாசகர் எளிதில் புரிந்து கொள்வார். அது வெறுமனே சொல் நயத்துக்காக எழுதப்பட்டதல்ல. மீண்டும் மீண்டும் எழுதப்பட்டாலும் முன்னர் நாம் அறிந்தேயிராத நிகழ்வுகள் பல ஈழத்தில் இருக்கின்றன என்பதை மணிபல்லவம் நினைவூட்டுகிறது. போரை பல நூற்றாண்டு வரலாற்றை துரிதப்படுத்தும் ஒரு நிகழ்வாகப் பார்க்கலாம். எல்லாப் போர்களுக்கும் நீண்ட வரலாற்றுக் காரணங்கள் அளிக்கப்படுகின்றன. பல காரணங்கள் புராண காலத்திலிருந்தே துவங்கவும் செய்கின்றன. அதேபோல நீண்ட வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளை அல்லது பிழைகள் என தான் கருதுவதை தன் தலைமுறையிலேயே தீர்த்துவிட வேண்டும் என்று செயல்படும் தலைவர்கள் வருகின்றனர். போர்களின்போது வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தீவிரச் செயல்கள் ஒரு குறுகிய காலத்திலேயே நிகழ்ந்துவிடுகின்றன. எனவே போர் குறித்த இலக்கியங்கள் மீண்டும் மிண்டும் எழுதப்படுகின்றன. பல நிகழ்வுகள், பல கோணங்கள், பல மரணங்கள், பல பாடல்கள். மேலும் போர் மனிதனின் ஆதி குணங்களை மீட்டெடுக்கிறது. தன் விலங்கியல்பைக் கண்டு அவனே மலைத்துப் போகிறான். அதை மறுக்க பல காரணங்களைத் தேடிக் கொள்கிறான், அல்லது அtதை ஆராய்கிறான். எனவே போர் ஒரு முக்கிய பாடுபொருளாக இன்றும் இருந்து வருகிறது. மணிபல்லவத்தில் வாசு மனிதர்களை மட்டுமல்ல சில பொருட்களையும் மறக்க முடியாத படிமங்களாக மாற்றியுள்ளார். ‘தண்ணி நீலம்’ என்றொரு புதிய வண்ணத்தை அறிமுகப் படுத்துகிறார். அவ்வண்ணத்தில் ஒரு ‘கடுதாசிப் பூ’ உள்ளது. கடுதாசிப் பூக்கள் (போகைன் வில்லா) நாவலில் ஆங்காங்கே வந்துவிடுகின்றன. ஷோபாவுக்கு அவற்றைப் பிடிக்கும் இல்லையா? இப்பக்கமோ அப்பக்கமோ, வீசும் காற்றில் இழுபடும் பூக்கள். ஒரு தொப்பி, ஒரு சைக்கிள், சில மரச் சாமான்கள். ஒரு கண்காணிப்பு கோபுரம், அம்மாள் கோவிலில் கட்டப்படும் பச்சைக் கயிறு புத்த விகாரத்தில் கட்டப்படும் வெள்ளைக் கயிறு. நான் ஏன் இவற்றை நியாபகத்தில் வைத்துள்ளேன்! The Zone of Interest படத்தில் அகச்சிவப்பு கதிர் கொண்டு படம்பிடிக்கப்பட்ட ஒரு பகுதியில் யூத கைதிகள் நடந்து செல்லும் பாதையில் ஒரு சிறுமி பழங்களையும் ரொட்டித் துண்டுகளையும் மறைத்து வைக்கிறாள், ஆஷ்விட்ச்சின் உலையிலிருந்து தப்பியவர்கள் தந்த சாட்சியங்களின் அடிப்படையில் அந்த பெயர் தெரியாதவரின் இரக்கம், கரிசனை பதிவாக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தனக்கு பணிக்கப்பட்டதை, அது எத்தகையக் கொடூரமான செயலாக இருந்தாலும், செவ்வனே செய்து முடிக்கும் ஒரு அதிகாரி, அவனது குடும்பம். இன்னொருபுறம் ஒரு மாபெரும் கொலை எந்திரமாக மாறியிருந்த ஒட்டு மொத்த நாட்டையும் பற்றி கவலை கொள்ளாமல் தன் ‘எதிரியான’ சக மனிதனைக் குறித்த கவலை கொண்ட்ட அச்சிறுமி. போர் மனிதர்களுள் இருக்கும் விலங்குகளை மட்டுமல்ல தெய்வங்களையும் வெளிக் காட்டுகிறது. பெர்லின் சுவர் அருகே இருந்த அருங்காட்சியகத்திற்கு நாம் சென்றிருந்தபோது அங்கே பல புகைப்படங்களில் யூதர்களுக்கு உதவிய பிற ஜெர்மானியர்கள் மொட்டையடிக்கப்பட்ட பொதுவில் அவமானப் படுத்தப் பட்டதைக் கண்டது நினைவுக்கு வருகிறது. ஹிட்லரின் வதை முகாம்களில் 30,000 கிறித்தவர்கள் இதே காரணத்திற்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள். மணிபல்லவம் இந்த திரைக்கதையை ஒத்த அடிச் சரடுகளைக் கொண்டது. இரண்டுக்கும் அளவில் வித்தியாசம் இருந்தாலும் வீரியத்தில் இல்லை. நாவலின் அட்டைப்படத்தைக் குறிப்பிட வேண்டும். கதையைச் சரியாக உள்வாங்கி அதனால் தீவிரமாக உந்தப் பட்ட ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு அட்டைப் படத்தை வடிவமைக்க முடியும். சந்தோஷ் நாராயணன் பல புத்தகங்களுக்கும் சிறப்பாக வடிவமைப்பைச் செய்கிறார். என்னைப் பொறுத்தவரை மணிபல்லவத்தின் அட்டைப்படமே ஒரு தனித்த படைப்பாக உள்ளது என்பேன். நாவலைப் போலவே தொன்மத்தையும் நவீனத்தையும், அமைதியையும் வன்முறையையும், கடலையும் இரத்தத்தையும் அட்டைப்படம் காண்பிக்கிறது. மானுடத்தின் சில அடிப்படை விதிகள் எல்லா பண்பாடுகளிலும் உள்ளன. அவற்றில் ஒன்று ‘வலிமை மிகுந்தவன் எளியவனை தாக்கக் கூடாது’ என்பது. எல்லா பண்பாடுகளும் அதை மாபெரும் கோழைத்தனமாகவே கருதுகின்றன. அப்படி ஒரு நிகழ்வை நாவலின் மையமாக வைத்து ஒரு சிற்றுயிரை இரத்தச் சகதியில் உருளவிட்டு, அதுவும் அதற்கு முந்தைய பத்தி எந்த தொனியில், ஒரு நிகழ்வாக, எழுதப்பட்டிருந்ததோ அதே தொனியில் சொல்லிச்செல்லும் வாசு நினைத்திருந்தால் ஒரு கூக்குரலை எழுப்பியிருக்க முடியும், ஒரு ஒப்பாரியை நிகழ்த்தியிருக்கலாம், அறம் பாடியிருக்கலாம் நான்கு வார்த்தைகளில் ஒரு சாபத்தையாவது விட்டிருக்கலாம். கவலை வேண்டாம் வாசு மணிபல்லவத்தின் வாசகர்கள் அப்படிச் செய்யக் கூடும் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மணிபல்லவமோ மிக இயல்பாகத் தன் எதிரிக்கு அன்பு செய்த ஒரு பெண் ஒரு சிறு தெய்வமாக மாறிய கதை. வாசு முருகவேலுக்கு வாழ்த்துக்களும் அன்பின் முத்தங்களும். சிறில் அலெக்ஸ் மணிபல்லவம் வாங்க https://www.jeyamohan.in/228072/
  22. வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் இரு மாகாணங்களிலும் விசேட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காக நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வடக்கு மாகாண சபையால் ஏற்கனவே 32 மிகப் பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டங்களைத் தற்போதைய சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மீள் பரிசீலனை செய்து, உடனடியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய திட்டங்களை வடிவமைக்கும் போதும், இருக்கும் திட்டங்களை மீளாய்வு செய்யும் போதும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார். திட்டங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். எமது மாகாண இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களாக அவை அமைய வேண்டும். மாகாணத்தில் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் இயற்கை மற்றும் ஏனைய வளங்களைப் பயனுள்ள வகையில் கையாளக் கூடியதாக இருக்க வேண்டும். மாவட்ட ரீதியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். 'வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmlg78yf80006356nyj0z1hcm
  23. விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது Feb 10, 2026 - 10:53 AM உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் இன்று (10) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும் என நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி 27-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். பவளப்பாறைகள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைவதைத் தடுப்பதற்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் என்ற காரணத்தினால் இந்த விஞ்ச் இயந்திரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த தடையை நீக்கக் கோரியும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் பெப்ரவரி 5-ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தச் சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். https://adaderanatamil.lk/news/cmlg5ni980008356n5tobmb34
  24. சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம் Published By: Vishnu 10 Feb, 2026 | 02:49 AM திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்போது சந்தேகநபர் ஒருவரை சிறைச்சாலை அதிகாரி பலவந்தமாகப் பிடித்து பேருந்திற்குள் தள்ளியதாகக் கூறி, அங்கு கூடியிருந்த பிக்குகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவான் பெல்லந்துடாக்க, "இந்த அரசாங்கத்திற்குப் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் எண்ணம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித நேரடிச் சான்றுகளுமின்றி பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் பிக்குகளுக்கு உரிய முறையில் தானம் வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களது மதச் சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் சாடினார். அங்கு கூடியிருந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிக்குகள், "இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே இந்தப் புனிதப் பூமி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றைச் சுயாதீனமாகச் செயற்பட விடாது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது" எனக் கோஷமிட்டனர். தற்போதைய அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி, பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைக்கும் தேரர்களைச் சிறையில் அடைப்பதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசாங்கத்தின் இச்செயற்பாடு பௌத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனத் தெரிவித்தனர். இந்தத் திடிர் போராட்டத்தினால் நீதிமன்றச் சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238270

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.