அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3253 topics in this forum
-
-
- 2 replies
- 1.9k views
-
-
"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" இது பழமொழி. அதுவே அறிவியல் ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய புது மொழியானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எமது சமையலில் கடுகுக்கு முக்கிய இடம் இருக்கும் அதன் வாசனைக்காக. ஆனால் அறிவியலில் அதன் பயன் உணவு பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிக…
-
- 1 reply
- 3.4k views
-
-
ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய கண்ணாடிப்பலகையின் விளிம்புப் பகுதிகள் பச்சை நிறத்தில் காணப்படுவது ஏன்? பல்வேறு கலவை வண்ணக்கூறுகள் (tints) கண்ணாடியில் உண்டாவதற்கு அதிலுள்ள மாசுப் பொருட்களே காரணம். Fe என்ற அயனிகள் (ions) கண்ணாடியில் இருப்பதால் பச்சை நிறம் தோன்றுகிறது. கண்ணாடியை உற்பத்தி செய்யும்போது அதன் கச்சாப் பொருட்களை முழுமையாகத் தூய்மைப் படுத்தாமல் விட்டு விடுவதே இதற்குக் காரணம். எனவே தரக் குறைவான கண்ணாடியிலேயே இப்பச்சை நிறம் காணப்படுகிறது எனலாம். அத்தகைய கண்ணாடிப் பலகையின் விளிம்பின் பார்வைக்கோட்டில் கலவை வண்ணக்கூறுகள் சற்று மிகுதியாகக் காணப்படுவதும் பச்சை நிறத் தோற்றத்திற்குக் காரணமாகும். அடுத்து, பல்வேறு நிறமுடைய கண்ணாடிப் பலகைகளை உற்பத்தி செய்வதற்கு சில மாசுப் பொரு…
-
- 2 replies
- 2.1k views
-
-
இதுவரை நாம் புத்தகங்களில் படித்த ஒரு செய்தியை, உண்மை என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்த செய்தியை, அப்படியே தவறு என்று துல்லியமாக நிரூபித்து ஒரு கட்டுரை வந்தால் எப்படி இருக்கும்? ஸ்தம்பித்து விடாது? அப்படித்தான் சமீபத்தில் எல்லா விஞ்ஞானிகளுக்கும் ஆகிவிட்டது. ப்ராங்க் கெப்ளர் மற்றும் தாமஸ் ராக்மேன் என்கிற இரு விஞ்ஞானிகளும் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டு விஞ்ஞானிகள் உலகத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள். அவர்கள் சொல்லியிருப்பது என்ன? இதுவரை மீத்தேன் என்கிற இயற்கை வாயு ஆக்ஸிஜன் தேவைப்படாத பாக்டீரியாக்களின் செயல்பாட்டின் போதுதான் வெளிவருகிறது என்று நம்பப்பட்டிருந்தது. ஆனால், மேற்சொன்ன இருவரும் சாதாரண மரம் செடி கொடிகள் கூட மீத்தேனை வெளியிடுகின்றன என்று நிரூபித்திருக்கி…
-
- 14 replies
- 3.5k views
-
-
பூமியில் வெப்பம் அதிகரித்தலும், கியோட்டோ ஒப்பந்தமும் சூரிய குடும்பத்தின் கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் காரணத்தால், உயிருள்ள கிரகமாக கூறப்படுவது நமது பூமியாகும். நிற்காமல் சுழன்றுகொண்டிருக்கும் இந்த பூமி பந்தில் இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அழகான வளங்கள் ஏராளம். கவின் மிகு காட்சிகள் நிறைந்த எழில் கொஞ்சும் உருண்டை பந்து நமது உலகம். உலகம் தோன்றி உயிர்கள் தோன்றி பல மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆன நிலையிலும் சக்கரம் தேயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த பூமி, பல அழிவுகளுக்கு முகம் கொடுத்த பின்னும் துவளாமல் உயிர் வளர்த்து, உயிர் வாழ வளம் கொடுத்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 4.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையதாக கூறப்படும் இந்த பூமி ஏற்கனவே 5…
-
- 1 reply
- 3.1k views
-
-
சூப்பர் நோவா என்பது விண்மீன் வெடித்து சிதறும் நிகழ்வு. மிகவும் ஒளியுள்ள ப்ளாஸ்மா எனும் அயனிய பொருண்மை நிலைக்கு (ionized state of matter) விண்மீன் வெடித்து செல்லும் நிகழ்வையே சூப்பர் நோவாவாக வெடித்தல் என நாம் கூறுகிறோம். இவ்வெடிப்பு நிகழ்ந்திடும் இச்சிறிய தருணத்தில் வெளிப்படும் ஆற்றலானது நம் சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் வெளியிடும் ஆற்றலுக்கு சமம் ஆகும். எல்லா விண்மீன்களும் சூப்பர் நோவாவாகிடும் என கூறமுடியாது. சூரியனின் நிறைக்கு 8 மடங்கும் அதிகமாகவும் இருக்கும் விண்மீன்களே சூப்பர்நோவா ஆகின்றன. நமது சூரியன் சூப்பர் நோவா ஆகாது. தற்போது சந்திரா-எக்ஸ்-ரே விண்மீன் கண்காணிப்பு நிலையம் (விண்ணில் அமைந்துள்ளது இது) SN2006gy என்கிற சூப்பர்நோவாவைக் கண்டுபிடித்த…
-
- 0 replies
- 1.8k views
-
-
நமது சூரிய மண்டலங் களுக்கு அப்பால் 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் கிளீஸ்-581 என்ற நட்சத்திரத்தை சுற்றி சூப்பர் பூமி என்ற புதிய கிரகம் சுற்றி வருவதை கண்டறிந்தனர். இந்த புதியகிரகம் பூமியை போலவே உள்ளது. இப்போது கரோட் எக்சோ 1 பி என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள் ளனர். மானோசிரஸ் என்ற நட்சத்திர கூட்டங்களை இந்த புதிய கிரகம் சுற்றி வருகிறது. இந்த நட்சத்திர கூட்டங்களில் இருப்பது 1500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது உள்ளது. பிரான்சு நாட்டு விஞ்ஞானிகள் அனுப்பிய கரோட் என்ற விண்கலம் இந்த புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. குரு கிரகத்தை வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!! ஏப்ரல் 25, 2007 வாஷிங்டன்: பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இந்த புதிய கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட குழுவின் தலைவருமான ஸ்டீபன் உத்ரி கூறுகையில், சூரிய குடும்பத்திலிருந்து இது தனித்து வெளியே இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இந்த கிரகம் காணப்படுகிறது. இதற்கு OGLE-2005-BLG-390Lb என பெயரிடப்பட்டுள்ளது. பூமியை விட மிகப…
-
- 6 replies
- 1.7k views
-
-
இத்தாலி செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., ராக்கெட் * "இஸ்ரோ'வின் வர்த்த ரீதியான முதல் செயல்பாட்டுக்கு வெற்றி சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்தாலி நாட்டின் "ஏஜைல்' செயற்கைக் கோளை, நமது ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முதல் முயற்சியே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் வர்த்தக ரீதியாக இஸ்ரோவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அதன் தலைவர் மாதவன் நாயர் பெருமையுடன் கூறினார். விண்வெளி ஆய்வில் இஸ்ரோ ( இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) தொடர்ந்து பலசாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஏற்கனவே பல வகையான …
-
- 0 replies
- 1.3k views
-
-
10:10 உலகில் உள்ள பெரும்பாலான கடிகாரக்கடைகளிலும் சரி, கடிகாரம் சம்பந்தமான விளம்பரங்களிலும் கூட நேரம் 10:10 என்று காட்டுவதாக முட்களை திருப்பி வைத்து இருப்பதற்கு காரணம் தெரியுமா? இந்தக் கேள்வியை நான் கல்லூரி படிக்கும்போது நண்பன் ஒருவன் கேட்க, நான் உள்பட எல்லோருமே திருதிருவென்று விழித்தோம்! அந்த 10:10 நேரத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் கையில் கட்டப்பட்டிருந்த வாட்ச் 10:10 மணியில் நின்று கொண்டிருந்தது. இது ஒரு அதிசய சம்பவமாகும். லிங்கனின் மறைவினை நினைவு படுத்த வேண்டி அமெரிக்காவில் உள்ள எல்லா வாட்ச் கடையிலும் கடிகாரங்கள் 10:10 மணியை காட்டும்படி செய்தனர். இதன் மூலம் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுக்கு அஞ்சலி செலுத்த…
-
- 4 replies
- 1.9k views
-
-
பைசா நகர சாய்ந்த கோபுரம் போனானோ பிஸ்ஸானோ என்பவரால் கட்டப்பட்டது. 1173ல் அவர் அந்தக் கோபுரத்தை கட்ட ஆரம்பிச்சார். சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டதால், பத்தரை மீட்டர் உயரம் எழும்பியதுமே, கோபுரம் லேசாகச் சரிய ஆரம்பித்துவிட்டதாம்... என்றாலும், இந்தச் சரிவைக் கட்டடம் உயர உயரச் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் போனானோ மூன்று மாடிகள் வரை கட்டி... அத்துடன் நிறுத்தி விட்டாராம்... "பின்னால், டோமாஸ்ஸோ என்பவர் இந்த வேலையை தொடர்ந்து சாமர்த்தியமாக எட்டு மாடிகள் வரை கட்டினாராம்... 1300ல் இது முற்றுப் பெற்றதாம்... மொத்தம் 54 மீட்டர் உயரம். வட்ட வடிவில் அமைந்த எட்டு மாடிகளுக்கும் வெளித் தாழ்வாரங்கள் உண்டு. "ஒவ்வொரு மாடியிலும் உள்ள பால்கனித் துõண்கள், அதற்கு மேல் உள்ள மாடிகளைத்…
-
- 0 replies
- 1.8k views
-
-
வானவில் தோன்றிய சில மணிநேரத்தில் மறைந்து விடுகிறதே ஏன்? ஆகாயத்தில் நீராவி ரூபத்தில் நீர்த்துளிகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டுள்ளன. அதன் மீது எதிர் திசையிலிருந்து சூரிய ஒளி படுகிறது. இதனால் நிறப்பிரிகை அடையும் ஒளி, நம் கண்களில் படும் போது வானவில் தோன்றும். சூரியனின் ஒளிக்கோணம் மாறினாலோ, அல்லது நீர்த்திவளைகள் ஆகாயத்திலிருந்து நீராவியாக மறைந்துவிட்டாலோ வானவில் மறைந்துவிடும். சூரியன், நீர்த்திவளைகள், நமது கண் மூன்றும் சரியான கோணத்திலிருக்கும் போது மட்டுமே வானவில் தெரியும் வெள் ஒளி மழைத்துளியினூடாகச் (அல்லது வேறு நீர் மூலத்திலிருந்து உருவாகிய நீர் துளிகள்) சென்று பிரிகை அடைவதை இந்தப் படம் விளக்குகின்றது. சிவப்பு நிறம் குறைந்த விலகலையும் ஊதா நிறம் கூடிய விலகல…
-
- 0 replies
- 1.8k views
-
-
உலக மொழிகள் உலக மொழிகள் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வாளர்களால் ஆராயப்படுகின்றது. 1.திராவிட மொழிகள்: தமிழ்,தெலுங்கு,மலையாளம்,துளு,
-
- 5 replies
- 1.7k views
-
-
எத்தனையோ குடையினை வேண்டி உபயோகிக்கிறோம். சீனாக்காரனுக்கு தமிழீழ தமிழனால் நவீன குடை விற்க முடியுமா? நினைத்தால் முடியும் தானே எப்படி நாங்கள் கண்டுபிடிக்கப்போகும் குடை பெரும் காற்றுடன் மழை பெய்தாலும் பின்னால சுருங்கக்கூடாது. அதே நேரம் கம்பிகளும் உடயைக்கூடாது. அப்படி ஒரு குடை என்னமும் உலகthதில் இல்லை. எங்கே உங்கள் கருத்துக்களினை பகிருவோமா? இப்படியான களத்தில் ஒரு பாஸ்வாட் கொண்டு எமது கருத்துக்களை மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு மோகன் நினைச்சால் செய்யலாம் அல்லவா? ஒரு கண்டு பிடிப்பு என்பது பெரிய அல்சல்களோடு உருவாவது.
-
- 17 replies
- 4.4k views
-
-
பொதுவாக, ஒரு மனிதனின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வயது எல்லையின் பின்னர் மூளையின் வளர்ச்சி, இதர உடல் உறுப்புக்களைப் போல, தனது இறுதி வளர்ச்சி நிலையினை (அதாவது இந்நிலைக்கு மேல் மாற்றமில்லை என்ற நிலை) அடைந்து விடும் என்ற கருத்தே மருத்துவ வட்டாரங்களில் மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. அதாவது, மனித மூளையானது plasticity அற்றது என்பதே இந்தப் புரிதல். எனினும் அண்மைக் காலமாக இந்தப் புரிதல் தவறானது என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டு மருத்துவ வட்டாரங்களில் பலத்த பரபரப்பினை எற்படுத்தி வருகின்றது. இந்தக் கண்டுபிடிப்பிற்கு வழி வகுத்த சம்பவம் சுவாரசியமானது. ஓரு மருத்துவ பேராசிரியர். அவரது மகன்களும் மருத்துவர்கள். பேராசிரியரிற்கு ஒரு நாள் திடீரென ஏற்பட்ட ஒரு பாரிய மாரடைப்பின் …
-
- 16 replies
- 3.3k views
-
-
. அப்துல் கலாம் சிலர் பிறக்கும்போதே உயர்ந்தவர்களாகப் பிறக்கின்றனர்; வேறு சிலர் உயர்நிலையை அடைகின்றனர்; இன்னும் சிலர் மீதோ உயர்வு திணிக்கப்படுகின்றது" இவ்வாறு உயர்ந்த நிலையில் இருப்போரை ஷேக்ஸ்பியர் மூன்று வகையாகப் பிரிக்கிறார். டாக்டர் அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், இவற்றுள் இரண்டாம் நிலைக்குரியவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அயராத உழைப்பு, விடாமுயற்சி, ஈடுபாட்டுடன் கூடிய ஆற்றல் மற்றும் திறமை ஆகியவற்றால் இந்தியாவின் குடியரசுத்தலைவர் என்ற புகழேணியின் உச்சியை அடைந்தவர். 1931ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ம் நாள், தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்கோடியில், நடுத்தர இசுலாமியத் தமிழ்க் குடும்ப…
-
- 0 replies
- 6.9k views
-
-
-
இணையமும் இந்த GPS (இதன் தமிழ் ? ) தொழில்நுட்பத்தாலும் "உலகம் எங்களின் கைகளில்" இந்த GPS பற்றி நன்கறிந்தவர்கள் ... உங்கால ஒருகைபாருங்கோ.... நன்றி.
-
- 4 replies
- 3.4k views
-
-
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கி ( Food-borne pathogen): அறிமுகம் Listeria monocytogenes ஆனது உணவு பொருட்களோடு மனிதனை அடைந்து மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியா (Bacteria) ஆகும். இது 2 பாகை டிகிரி செல்சியசில் இருந்து 45 பாகை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடிய பக்ரீரியா ஆக இருந்த போதும், இது வளர்வதற்கு மிகவும் உவப்பன வெப்பநிலை 30-37 பாகை டிகிரி செல்சியஸ் ஆகும். Listeria monocytogenes மனிதனில் ஏற்படுத்தும் நோயை (லிஸ்ரிரியோசிஸ்) listeriosis என அழைப்பர். இது பிரதானமாக 1. நிர்பீடன குறைபாடு உள்ளவர்கள் (immunocompromised): உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் 2. பிறந்த குழந்தைகள் 3. வயத…
-
- 3 replies
- 1.5k views
-
-
Hamburger பிரியர்கள் எல்லோரும் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெரும்பாலான உணவு தரப்படுத்தும் அரச நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள். முக்கிய காரணம் Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவதே காரணமாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி முதல் தியரி – பிரவுனியன் மோஷன் பிரவுனியன் மோஷன் என்பது ஒரு திரவத்திலோ வாயுவிலோ நுட்பமான அணுக்களும் மாலிக்யூல்களும் கால்பந்தாட்டம் போல் மோதிக் கொள்ளும் தற்செயலான இயக்கத்துக்கு வைத்த பெயர். தூசு படிந்த வீட்டில் வெயில் கற்றை சாயும் போது அல்லது பி.சி.திருராம் படங்களiல் கதவைத் திறந்தால் சின்னச் சின்ன துகள்கள் கன்னாபின்னா என்று ஒளiக்கற்றையில் அலையுமே, அது பிரவுனியன் மோஷனுக்கு உதாரணம். திரவ, வாயுப் பொருள்களiல் நிகழும் தன்னிச்சையான மாலிக்யூலர் மோதல்கள். 1827ல் ராபர்ட் பிரவுன் என்பவர்தான் இதை முதலில் கவனித்தார். இதற்கு மற்றவர்களைவிட, ஐன்ஸ்டைன் தந்த விளக்கம் பிரசித்தமானது. அணு என்பது அதுவரை சந்தேகக் கேஸாக இருந்தது. கைனெட்டிக் திய…
-
- 2 replies
- 7.5k views
-
-
(படம்:ஸ்வாடின்சரின் பூனை) தமிழ் இணயப் பரப்பில் இந்து சமயம் முதல் பின் நவீனத்துவும் வரை தாம் சார்ந்த தத்துவத்தை நியாயப்படுத்துவதற்காக அறிவியல் உலகத்தில் இருந்து இன்று பலராலும் மேற் கோள்காட்டப்படும் தத்துவம் 'குவான்ரம்' இயற்பியலாக இருக்கிறது.அறிவியல் என்பது இன்று எம் கண் முன்னால் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டுள்ளது, கொண்டுவருகிறது.மனிதனின் பறப்பத்தைப் பற்றிய புனைவுகளை நிஜமாக்கியது அறிவியல், இன்று எம்மால் உலகமெங்கும் தொடர்பாடக் கூடியதாக இருப்பது அறிவியலின் விளைவே.ஆகவே கற்பனைகளான தத்துவங்களை இன்று நியாயப்படுத்த அறிவியல் என்பது ஒரு தேவையான வலிய சாதனமாக உள்ளது.ஆனால் குவான்ரம் தத்துவத்தை தமது கோட்பாடுகளுக்கு ஏற்புடையதாக் காட்டுபவர்கள் ,குவான்ரம் தத்துவத்தைப் பற்றி …
-
- 0 replies
- 1.5k views
-
-
உயரமாக பறக்கும் விமானங்கள் சில சமயம் விபத்துக்கு உள்ளாகிறது. இதற்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்களுக்கு கருப்பு பெட்டி என்னும் சாதனம் உதவுகிறது. இது எல்லா விமானங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். கருப்பு பெட்டி என்ற பெயர் கொண்டு இது அழைக்கப்பட்டிருந்தாலும், இதன் நிறம் கருப்பு கிடையாது. ஆரஞ்சு வண்ணம் கொண்டது. சில பெட்டிகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பெரிய விமானங்கள் எனில் இரண்டு கருப்பு பெட்டிகள் இருக்கும். இதில் `காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர்' என்னும் சாதனம் விமானியின் அறையில் நடக்கும் உரையாடலை பதிவு செய்கிறது. `டேட்டா ரிக்கார்டர்' என்னும் மற்றொரு சாதனம் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளின் இயக்கங்களை பதிவு செய்யும். இதன் அடிப்படையில்தான் …
-
- 2 replies
- 1.2k views
-
-
பதிவு இணையத்தளத்திலிருந்தது: இது 2011 தான் சந்தைக்கு வருகிறதாம். வாகன தொழிநுட்பத்தில் பரீட்சயமுள்ள புலிபாசறை போன்றோர் இது பற்றி கொஞ்சம் சிந்திக்க முடியுமா...இன்னும் அஞ்சு வருசம் காத்திருக்கேலாது..அவசரமா பறக்கோணும். வண்டி தேவையில்லை, அந்த ஜீரோகொப்ரர்' எனும் ரெக்னோலஜி தெரிஞ்சா போதும் - நம்ம ஆட்டோவை கொஞ்சம் சப்பளிச்சு மேல விசிறியை பூட்டி குறைஞ்ச செலவில் உல்லாசமா சுத்த வேண்டிய இடத்தை 'சுத்தி' பார்க்கலாம். மாப்பு சார், குட் யு கிவ் மி எ காண்ட் பிலிஸ்.. ஒன் கிராபிக்ஸ் கொழும்பில் ஓடும் ஆட்டோவின் ஒரு படத்தையும் இதிலுள்ள விசிரியையும் கச்சிதமாக பொருத்தி ஒரு கிராபிக்ஸ் செய்யோணும்...முடியுமா.. flying car-video-1 flying car-video-2 Attention maapu: T…
-
- 8 replies
- 2.8k views
-
-
எமக்கு என்று ஒரு கார் தயாரிக்க யோசிக்க முதல் நீங்கள் இளம் தலைமுறை எனவே சிந்தனைத்திறன் கூடியவர்கள். எனக்கு தெரிந்த அறிந்தவற்றை முதலில் பார்ப்போம், அதே போல் உங்களுக்கு தெரிந்த கார் சம்பந்தமானதுகளினை நீங்கள் எழுதுங்கள் எல்லாருமாக செர்ந்து படிப்போம். தெரியாதவை களை பகிர்ந்து கதைத்து தெரிந்து கொள்வோம்.எங்கே இணையுங்கள். ஏங்க இதில டொக்கிமன்ட்ஸ் இணப்பதென்றால் பைல் சைஸ் எவ்வளவு இணைக்கமுடியும். எனது ஜெ.பி.ஈ.ஜி ஒவ்வொன்றும் ஒரு மெகா பைட்ஸ் இணைப்பு வருகுதில்லையே என்ன செய்ய?
-
- 6 replies
- 2.4k views
-