செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7129 topics in this forum
-
மாமியாரின் மூக்கை... அறுத்துக் கொலை செய்த, மருமகள் கைது. மும்பை : மகாராஷ்டிராவில் குடும்ப சண்டையில் மாமியாரின் மூக்கை அறுத்துக் கொலை செய்த மருமகளைப் போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு பிரகதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா (55). இவரது மருமகள் சாந்தினி (28). சாந்தினிக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். கடந்த சில நாட்களாகவே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மோதல் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாந்தினி சமையல் அறையில் இருந்த கத்தியால் மாமியாரின் மூக்கை அறுத்து…
-
- 0 replies
- 550 views
-
-
பூமியை விட்டு பல இலட்சம் கிலோ மீட்டர் தொலைவு நோக்கிச் சென்று காலடி பதித்துவிட்ட மனிதனால், பூமியில் உள்ள ஓரிடத்திற்கு மட்டும் செல்லவே முடியவில்லை. அந்த இடத்தின் பெயர் சேலஞ்சர் டீப் (Challenger Deep). இது உலகின் மிக ஆழமான கடற்பகுதி. கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. ஆனால், இங்கோ கிட்டத்தட்ட 11 கி.மீ. எவரெஸ்ட்டை அப்படியே பெயர்த்து எடுத்து இந்த இடத்தில் போட்டாலும் 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். கடல் நீரின் அழுத்தம் காரணமாகவே மனிதனால் இந்த இடத்திற்குச் செல்ல முடிவதில்லை. காற்றுக்கும் அழுத்தம் உண்டு. அது எப்போதும் நம் உடலை அழுத்திக் கொண்டே இருக்கும். நமது உடலுக்கு அதைத் தாங்கக்கூடிய சக்தி இருப்பதால் அந்த அழுத்தம் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. கடலில் 10 மீட்டர் ஆழத்திற்கு சென…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடா- பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றத்தில் பாலியல் விசாரனயில் சாட்சியளித்த ஒரு 10 வயது சிறுமிக்கு அவளின் வலியை தாங்க பொலிஸ் நாய் ஒன்று உதவியுள்ளது. இந்த சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பிய நீதிமன்றத்தில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது. திரை ஒன்றினால் பாதுகாக்கப்பட்ட சாட்சி கூண்டில் காபர் என்ற ஒரு மஞ்சள் லப்றடோர் பொலிஸ் நாய் கட்டிலில் படுத்திருந்த சிறுமியின் காலடியில் அமைதியாக படுத்திருந்தது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் சறே மாகாண நீதிமன்றத்தில் இச்சம்பவம் நடந்தது. சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையான பாதிப்பை அவள் முழுமையாக தெளிவாக விபரிக்க கூடியதாக நாய் அவளை அமைதிப்படுத்தியுள்ளது என அரச வழக்கறிஞர் வின்ஸ்ரன் செய்சன் தெரிவித்தார். சிறுமி சாட்சியம் அளிக்கும் போது கீழே குனிந்து ஒரு செல…
-
- 0 replies
- 278 views
-
-
நீரில் நடப்பேன், நெருப்பில் குளிப்பேன், வானத்தை வில்லாக வளைப்பேன், மணலை கயிறாக்குவேன் என சில வாய்ஜாலப் பேர்வழிகள் சவடால் அடிப்பதுண்டு. இதில் முதல் சவடால் சாத்தியமானதே.., என்பதை நிரூபிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேக்கியாவை சேர்ந்த லெங்கா டான்னர் என்ற பெண் நீரின் மீது நடந்தும், ஓடியும் சாதனை படைத்து வருகிறார். 28 வயது நீச்சல் வீராங்கனையான இவர், சுமார் 20 ஆண்டுகால தீவிர பயிற்சியின் மூலம் நீரில் நடப்பது மற்றும் ஓடுவது போன்ற ஜால வித்தைகளை வெகு சாதாரணமாக நிகழ்த்தி அனைவரையும் பரவசத்துக்குள்ளாக்குகிறார். இதில் ஒரு தலைகீழ் மாற்றம் என்னவென்றால்.., நீருக்குள் தலைகீழாக பாயும் லெங்கா டான்னர், நீரின் ஆழத்தில் இருந்து உந்தி, மேல்பகுதிக்கு வரும்போது கை,க…
-
- 0 replies
- 293 views
-
-
அங்கஜன் வீட்டில் மைத்திரி. May 30, 201511:01 am ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் கொழும்பு இல்லத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அங்கு சில முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளதாக அங்கஜன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்ற அதே வேளை யார் சசந்தித்தார்கள் என்கிற விபரத்தை வெளியிட அங்கஜன் தரப்பு மறுத்து விட்டது. http://www.jvpnews.com/srilanka/110914.html
-
- 0 replies
- 383 views
-
-
அமெரிக்க பாலைவனத்தில் பறக்கும் தட்டுகள் விபத்தில் சிக்கி விழுந்தன என்றும் அதில் வேற்று கிரகவாசிகள் இருந்தன என்றும் நிலவில் நடந்த நாசா முன்னாள் விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பகுதியில் ராஸ்வெல் நகரில் கடந்த 1947ம் ஆண்டு நடந்த பறக்கும் தட்டு விபத்தில் வேற்று கிரக வாசி ஒன்று இறந்தது போன்ற புகைப்படம் ஒன்றை நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான எட்கர் மிட்செல் வெளியிட்டு பரபர்ரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த படம் பொய்யானது அல்லது இது ஒரு வதந்தி என்று பரவலாக நம்பப்படுகிறது. உயிருடன் பிடிபட்ட வேற்று கிரகவாசிகள் எனினும் கடந்த வாரம் நடந்த பி விட்னஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிட்செல் விடாப்பிடியாக கூறும்போது, கடந்த 70 வருடங்களுக்கு முன்பு ஒன்றிற்கும் …
-
- 0 replies
- 590 views
-
-
மோசமான வானிலை காரணமாக தாமதமான விமானம்: பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானி [ வெள்ளிக்கிழமை, 29 மே 2015, 06:00.38 பி.ப GMT ] அமெரிக்காவில் மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமானதால், அதில் இருந்த பயணிகளை குளிர்விப்பதற்காக பீட்சா வரவழைத்து விமானி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) நகரில் இருந்து அட்லாண்டா(Atlanta) நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுசென்றது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் டென்னெஸீ (Tennesse)பகுதியில் இருக்கும் நாக்ஸ்வில்லே(Knoxville) விமான நிலையத்துக்கு திசைதிருப்பி விடப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் விமானம் அங்கே நிறுத்திவைக்கப்பட்டது. இத…
-
- 0 replies
- 441 views
-
-
உணவுப்பொருட்களில் மிதக்கும் உயிரினங்கள்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் [ சனிக்கிழமை, 30 மே 2015, 04:12.46 பி.ப GMT ] கனடாவில் உணவு பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவற்றில் பல உயிரினங்கள் கலந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் முக்கியமான சில நிகழ்வுகள: நியு பவுன்லாந்து (New foundland) பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மளிகை கடை யில் இருந்து வாங்கிய உறைந்த புறொக்கோலி பைக்குள் பல்லியின் தலை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல் சென்.ஜோன்சை (St.Jones) சேர்ந்த பெண் புளு டயமன்ட் என்ற பாதாம் பாலை வாங்கியுள்ளார். அதற்குள் 10முதல் 12 அங்கு…
-
- 1 reply
- 389 views
-
-
அதி பயங்கரமாக தாக்கிய மின்னல்: நூலிழையில் உயிர் தப்பிய பொலிசார் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 30 மே 2015, 08:50.35 மு.ப GMT ] அமெரிக்காவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் திடீரென மின்னல் தாக்கியதில் பொலிசார் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிசிசிபி மாகாணத்தின் Gautier என்ற நகரில் உள்ள I-10 என்ற சாலையில் சில தினங்களுக்கு முன் பொலிஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனும் இடி, மின்னலுடன் காணப்பட்டுள்ளது. மெதுவாக கார் சென்றுக்கொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் பூமியை பிளப்பது போல் பளீரென்ற ஒளியுடன் சாலையை மின்னல் தாக்கியுள்ளது. கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவம் பொலிசாரின் வாகனத்…
-
- 0 replies
- 374 views
-
-
விமான என்ஜினில் ஒட்டப்பட்ட செல்லோடேப்: படம் எடுத்து இணையத்தில் விட்ட பயணி [ சனிக்கிழமை, 30 மே 2015, 06:39.10 பி.ப GMT ] பிரித்தானியாவில் விமானம் ஒன்று புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் ஒட்டப்பட்டதை விமான பயணி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரித்தானியாவில் ’ஈஸி ஜெட்(Easy Jet) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் போட்டு ஒட்டினார். இதை பயணியான ஆடம்வுட் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த காட்சியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து டுவிட்டர் இணையதளத்தில் பதிவேற்றினார். அதை பல்லாயி…
-
- 0 replies
- 387 views
-
-
வானில் தெரிந்த வினோத பொருள்: ரஷ்யாவின் ரகசிய ஏவுகணை சோதனையா? (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 30 மே 2015, 05:08.06 பி.ப GMT ] ரஷ்யாவில் அடையாளம் தெரியாத பயங்கர வெளிச்சத்துடன் பறக்கும் பொருள் ஒன்று படம் பிடித்து யூடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், பூமியில் இருந்து வானத்தை நோக்கி ஒரு ஒளி வெள்ளம் செல்கிறது. அது மஞ்சள் வடிவ நீராவி பாதையை காட்டுகிறது, பின்னர் அது ஒரு பிரகாசமான பொருளாக மாறுகிறது. கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவின் பேர்ம் பகுதியில் கிஷல் அருகே இது படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பொருள் மேலும் மேலும் உயர்ந்து செல்கிறது. பின்னர் அது மூன்றுக்கும் மேற்பட்ட பொருளாக பிரிந்து இருண்ட வானத்தில் உலா வருகிறது. இது குறித்து இங…
-
- 0 replies
- 360 views
-
-
யாழ்.குடாநாட்டில் மாணவர்களிடம் போதையூட்டப்பட்ட பாக்கு பாவனை அதிகரிப்பு! [ சனிக்கிழமை, 30 மே 2015, 03:44.08 PM GMT ] யாழ்.குடாநாட்டில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாநகரசபை எல்லைக்குள் குறித்த பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும் மற்றைய இடங்களில் குறித்த பாக்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகின்றது. ஒரு பொட்டலம் 50 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் பாடசாலை மாணவர்களால் இந்த பாக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பாக்கு செய்வதற்காக சீவப்பட்ட பாக்கு சுண்ணாம்பில் ஊற வைக்கப்படுவதுடன்,…
-
- 0 replies
- 267 views
-
-
உணர்ச்சிப்பூர்வமான விலங்குகளாக யானைகள் இனங்காணப்பட்டவை. அண்மையில், தென்னாபிரிக்காவில் அதிக வாகனப் போக்குவரத்து மிக்க வீதியொன்றைக் கடக்க முயன்ற யானைக் குட்டியொன்று வீதியின் நடுவே சரிந்து வீழ்ந்த நிலையில், அதனை யானைகள் கூட்டமாக வந்து மீட்ட காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. யானைகள் தமது துதிக்கையால் வீதியில் வீழ்ந்த யானைக்குட்டியை தூக்கி நிறுத்தி தம்முடன் அழைத்துக்கொண்டு செல்லும் காட்சியைப் பாருங்கள். http://ilakkiyainfo.com/வீதியில்-வீழ்ந்த-யானைக்க/
-
- 0 replies
- 368 views
-
-
முள்ளிவாய்க்காலில் “டபுள் சயனைட்” பொட்டு அம்மான் குப்பியா..? May 29, 20153:37 pm மைத்திரி அரசாங்கத்தின் பீல்ட் மார்சலான சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடை பெற்றால் அதனை தான் வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இன் நிலையில் முள்ளிவாய்க்காலுக் வட்டு வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதி ஒன்றில் ஒரு தொகைச் சடலங்களை தாம் கண்டெடுத்துள்ளதாகவும் அச் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் இருந்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு அருகே இரந்த சயனைட் குப்பிகள் சற்று வித்தியாசமான நிறத்தில் இருந்ததால் தாங்கள் அதனை பகுப்பாய்வு செய்ய கொழும்புக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். “Double Distilled” என்று சொல்லப்படும் இரண்ட…
-
- 0 replies
- 462 views
-
-
கட்டுநாயக்காவில் மாட்டிய யாழ்.யுவதி. May 29, 20153:57 pm போலி கடவுச்சீட்டு மற்றும் போலி விசாக்கள் 50யை எடுத்துகொண்டு இங்கிலாந்துக்கு செல்வதற்காக வருகைதந்த இலங்கை பெண்ணை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக விமான நிலை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர், இலங்கை விமான சேவைக்கு சொந்தான யு.எல்.503 விமானத்தில் இங்கிலாந்துக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளார். அவரிடம் போலியான இந்திய கடவுச்சீட்டு மற்றும் அமெரிக்க விசாக்கள் 50 இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அந்த கடவுச்சீட்டு மற்றும் போலியான ஆவணங்களை கட்டு…
-
- 0 replies
- 332 views
-
-
நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் வானில் விநோத உருவங்கள் வட்டமிடுவதாக பரவிய தகவலால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். காரணம், கடந்த சில தினங்களாக அப்பகுதியில் வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக கூறப்படுகிறது. முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகளாக இருக்கும் என நினைத்த பொதுமக்கள், பின்னர் அவை மனித உருவத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மிக உயரத்தில் பறக்கும் இந்த விநோத உருவங்கள் திடீரென பூமிக்கு வெகு அருகில் வருவதாகவும், பின்னர் அவை மீண்டும் வானத…
-
- 2 replies
- 1.5k views
-
-
கனடா- மிதக்கும் உணவகமும் ரொறொன்ரோவின் ஒரு மைல்கல்லுமான பெரிய ஒரு கப்பல் நகரத்தின் நீர் முகப்பிலிருந்து இழுத்து செல்லப்பட்டது. Captain John’s .அதன் நீண்ட கால தங்குமிடமான யங் வீதி அடிவாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பயனற்ற கப்பல்கள் ஒதுக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல இழுவை படகுகள் வழிகாட்ட காலை 10மணியளவில் தனது பயணத்தை ஆரம்பித்தது. இதனை பாதுகாப்பாகவும் கவனமாகவும் ரொறொன்ரோ துறைமுகத்திலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமானதென் ரொறொன்ரோ துறைமுக பிரிவினர் தெரிவித்தனர். லேக் ஒன்ராறியோ ஊடாக இழுவை படகுகள் மரைன் மறுசுழற்சி காப்பரேசனிற்கு இழுத்து சென்றன. இந்த முழு செயல்முறையும் பூர்த்தியாக 18 முதல் 20 மணித்தியாலங்கள் செல்லும். Captain John’s .நன்றாக உணவருந்தும…
-
- 0 replies
- 870 views
-
-
சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு என்ஜின்களும் தற்காலிகமாக செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பயணிகள் அனைவரும் பத்திரமாக ஷாங்காய் வந்து சேர்ந்தனர். ஏர் பஸ் ஏ.330-300 என்ற அந்த விமானம் கடந்த சனிக்கிழமையன்று சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 3.5 மணி நேரம் வானில் பயணித்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென விமானத்தின் இரு என்ஜின்களும் மின்சக்தியை இழந்தன. அப்போது விமானம் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. எனினும் செயல்பாட்டு வழிமுறைகளை திறமையாக கையாண்ட விமானி, விரைவில் இரு என்ஜின்களையும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவந்…
-
- 1 reply
- 315 views
-
-
உலகில் பல தரப்பினரையும் ஒரு போதை போன்று பேஸ்புக் மோகம் ஆட்டிப்படைக்கிறது.தனது குழந்தையை கொடுமைபடுத்தி பேசஸ் புக்கில் பதிவு செய்து மகிழ்ந்த கொடூர தாய் தற்போது மாட்டி கொண்டார்.அவர் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் பதான் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன ஒரு வயது குழந்தையின் கழுத்தில் கயிறை கட்டி தரையில் பிளாஸ்டிக் கோப்பையில் உள்ள உணவை (விலங்கு ) சாப்பிடுவது போல் படம் எடுத்து தனது பேஸ் புக்கில் புகைபடம் போட்டு இருந்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் சமூக நல மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கண்டு பிடித்து குழந்தையை மீட்டனர். தாயாரை மன …
-
- 0 replies
- 420 views
-
-
பூகம்பம், எரிமலை சீற்றம், சுனாமி, கடல் கொந்தளிப்பு என ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றது. நமது ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல, 21ஆம் நூற்றாண்டின் முதலில் இருந்தே உலகம் இதோ அழிந்துவிடும், அதோ அழிந்துவிடும் என்று பூச்சாண்டி காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!! ஆனால், இதை நாம் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. டைனோசர் எனும் மாபெரும் உயிரினம் அழிந்ததற்கு காரணமும் ஓர் தொடர் இயற்கை சீற்றம் தான். ஏன், மனித இனத்தின் தோற்றமான குமரிக் கண்டம் அழிந்ததற்கு காரணமும் ஓர் மாபெரும் கடல் கொந்தளிப்பு தான். ஓர் கண்டத்தையே உள்வாங்கும் அளவு ஏற்பட்டது அந்த இயற்கை சீற்றம். ஏலிய…
-
- 0 replies
- 1.6k views
-
-
உங்களால் முடியுமா?? https://www.facebook.com/photo.php?v=277055735790130
-
- 50 replies
- 7.5k views
-
-
டெல்லியில் புகையிரதத்தின் பெண்கள் பகுதிக்குள் நுழைந்த ஆண்கள் a0fc0df0f25fbf6a0a4436f4bf05d801
-
- 2 replies
- 574 views
-
-
சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின. அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது உள்ளிட்ட பல சுவையானத் தகவல்களை ...... ஏர்பஸ் ஏ380 விமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. அந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுக்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டது.இந்த விமானத்தில் வெறும் எக்கானமி கிளாஸ் இருக்கைகளுடன் அமைத்தால் 853 பேர் பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை சவூதி இளவரசர் தனத…
-
- 2 replies
- 806 views
-
-
குறைபாடுடைய மாணவர்களுக்குள் மலர்ந்த காதல்: மனதை வருடும் காட்சி (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 27 மே 2015, 02:25.26 பி.ப GMT ] நியூயோர்க்கில் டவுண் சிண்ட்ரோம் என்ற குறைபாடுடைய இளம் காதலர்கள் டேட்டிங் செல்லும் வீடியோ இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது. தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பவர்கள் டவுண் சிண்ட்ரோம் குறைபாடுடையவர் ஆவர். மேலும், தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தைவிட சிறிதாக இருக்கும். காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக்கொண்டும் காணப்படும். "டவுன் சிண்ட்ரோம்" குறைபாடுள்ள குழந்தைகளின் அறிவுத்திறன் மற்ற குழந்தைகளைப்போல் முறையாக வளர்ச்சியடைவதில்லை. …
-
- 0 replies
- 381 views
-
-
ஜோத்பூரை பீதியில் உறைய வைத்த சத்தம்: விடை தெரியாமல் நீடிக்கும் மர்மம் [ புதன்கிழமை, 27 மே 2015, 09:13.45 AM GMT +05:30 ] உலகில் தினமும் பல்வேறு வித்தியாசமான விடயங்கள், புரியாத புதிர்கள், குழப்பமான நிகழ்வுகள் நடந்த கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 18ம் திகதி ஜோத்பூரில் நடந்த சம்பவம் தற்போது வரை ஒரு புதிராக உள்ளது. அந்த அற்பதமான சம்பவம் எதனால் நடந்தது என்பது இன்னும் மறைக்கப்பட்ட வரலாறாகவே இருக்கிறது. காலை சரியாக 11.25 நிமிடத்தில் காதை பிளக்கும் சத்தத்துடன் அணு குண்டு வீசப்பட்டது போல், ஒரு விமானம் போன்ற பொருள் வானத்தில் இருந்து விழுந்தது போல ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது. அ…
-
- 0 replies
- 389 views
-