Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. "கலகலவென சிரி... கண்ணில் நீர் வர சிரி'... இன்று உலக சிரிப்பு தினம்! சென்னை : ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை, மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை. எனவே, ஆண்டுதோறும் உலக சிரிப்பு தினம் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முடிந்தளவு மக்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடி சிரித்து, களித்து மகிழ்கிறார்கள். •கடந்த 1998ம் ஆண்டு உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா (Dr. Madan Kataria) என்பவர் உருவாக்கினர். •இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி…

  2. கென்யாவின் மிஸ்டர் வி.ஐ.பி.! கமாண்டோக்கள் பெரிய துப்பாக்கிகளோடு 24 மணிநேரமும் ஒருவரைச் சுற்றி பாதுகாக்கிறார்கள் என்றால் அவர் நிச்சயம் வி.ஐ.பி.தான். இதில் ஏதும் சந்தேகம் இல்லை. தனி டாக்டர்கள், தனி வேலையாட்கள் என்று கென்யா காட்டில் ராஜஉபசாரத்தை அனுபவிக்கும் வி.ஐ.பி. யார் என்கிறீர்களா, அவர்தான் மிஸ்டர் காண்டாமிருகம். காண்டாமிருகத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்று கேட்பவர்களுக்கு... உலகத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆண் வெள்ளை காண்டாமிருகம் (Northern white rhino) இதுதான். இதை வேட்டைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றவும், வேறு எந்த விதமான ஆபத்தும் வராமலும் பாதுகாப்பதற்காகவும் கென்யா அரசாங்கம் துப்பாக்கி ஏந்திய கமண்டோக்களை நியமித்துள்ளது. இந்தக் காண்டாமிருகம் மேய்ச்சலுக்குச் செ…

  3. தனது பள்ளித் தோழியை கரம் பிடித்தார் தினேஷ் சந்திமால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார். தினேஷ் சந்திமால் தனது பள்ளித் தோழியான இஷிகா ஜயசேகரவை கரம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இவர்களின் திருமண விழா கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம் பெறுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/05/01/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE…

  4. கணவர் வீட்டை விட்டு வெளி­யே­று­வதை தடுக்க அவரை இரு வரு­டங்­க­ளாக சங்­கி­லியால் கட்டி வைத்த மனைவி தனது கணவர் வீட்டை விட்டு வெளி­யே­று­வதை தடுக்க அவரை இரு வருட கால­மாக வீட்­டுடன் இணைந்த மரத்­தா­லான குடி­லொன்றில் மனை­வி­யொ­ருவர் சங்­கி­லியால் கட்டி சிறை வைத்த சம்­பவம் பெருவில் இடம்­பெற்­றுள்­ளது. சிறிய கிரா­ம­மான ஹுவா­யு­யானைச் சேர்ந்த பப்லோ தமாரிஸ் கொரா­கு­யில்லோ என்ற 86 வயது நபரே இவ்­வாறு தனது மனை­வியால் கட்டி வைக்­கப்­பட்­டுள்ளார். இந்­நி­லையில் அய­ல­வர்கள் வழங்­கிய தக­வலின் பிர­காரம் கொட்­டிலில் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த தமா­ரிஸை உள்ளூர் அதி­கா­ரிகள் மீட்­டுள்­ளனர். மிகவும் பல­வீ­ன­ம­டைந்த நிலையில் காணப்­பட்ட அவர் தற்­போது சிகிச்­சைக்­காக மருத்­து­வ­ம­னையில் அனு…

    • 11 replies
    • 805 views
  5. முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற மணிரத்தினம், அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்நத ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. முல்லைத்தீவின் உடையார்கட்டு சந்திக்கு அண்மையாக கட்டிடமொன்று யாழ் ஒப்பந்தக்காரர் ஒருவரால் கட்டப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தக்காரரின் கீழ் பணியாற்றும் கிளிநொச்சி கோணாவில் கிராமத்தை சேர்ந்த மணிரத்தினம் என்ற 32 வயது ஆசாமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல்ப்பொழுதில் கட்டிடகாவல்ப்பணியில் இருந்துள்ளார். அந்தச்சமயத்தில் அயல்வீட்டில் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்ததை மோப்பம்பிடித்துச் சென்று, மறைந்து நின்று அவர் குளிப்பத…

    • 11 replies
    • 1.3k views
  6. பிரித்தானிய அரச குடும்பத்தை பற்றி அறியாதவர் இல்லையெனலாம். குறிப்பாக சார்ல்ஸ், டயனா தம்பதியினரை பற்றி எழுதாத ஊடகங்கள் இல்லை எனக் கூறலாம். அவர்களது வாழ்வைப் பற்றிய நிஜ சம்பவங்களும், வதந்திகளும் பல ஊடகங்களின் முதற்பக்கத்தை அலங்கரித்துள்ளன. சார்ல்ஸ், டயனா தம்பதியினருக்கு வில்லியம்ஸ் , ஹரி என இரு புதல்வர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இவர்களுக்கு மேலதிகமாக இருவருக்கும் ஒரு பிள்ளை உள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது வெளிச் சோதனை முறை கருக்கட்டல்மூலமாக இக் குழந்தை பிறந்த தாகவும் , அக் குழந்தை தற்போது பெரியவளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அப் பெண்ணுக்கு 33 வயது எனவும் அண்மையில் அங்கு விஜயம் செய்த க…

    • 0 replies
    • 430 views
  7. 13 கோடி ரூபாயுடன் இலங்கை வந்த நடாலி, நாதியா. April 28, 20159:10 am ‘செவ்வய்வர்’ எனப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியீட்டியவரான இலங்கையை பூர்வீகமாக க் கொண்ட நடாலி எண்டர்சன் தனது தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய அவருக்கு கிடைத்த பணப் பரிசுத் தொகை 13 கோடி ரூபா (இலங்கை ரூபா) நடாலி எண்டர்சனுடன் அவரது இரட்டைச் சகோதரியான நாதியா எண்டர்சனும் இலங்கைக்கு வந்துள்ளார். அவரும் குறித்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்த போதும் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறியிருந்தார். தான் வெற்றி பெற்ற பணத்தில் ஒரு தொகையை இலங்கையில் உள்ள வறிய குழந்தைகளுக்கு செலவிடவுள்ளதாக நடாலி தெரிவிக்கின்றார். நடாலி மற்றும் நாதியா அமெரிக்காவ…

    • 0 replies
    • 2.4k views
  8. பிரான்சில் லியோன் என்னும் இடத்தில் (பரிசிலிருந்து 400 கிலோமீற்றர்) நடந்த கார் விபத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். காரைச்செலுத்தி வந்தவரும் படுகாயமடைந்துள்ளார். பலியான இளைஞர் சமூக சேவையில் பல வருடங்களாக தம்மை அர்ப்பணித்தவரும் புங்குடுதீவைச்சேர்ந்தவருமான திரு. திருமதி நல்லையா வாசுகி அவர்களின் மகனாவார். ஏனையவிபரங்களை பின்னர் தருகின்றேன். யாழுக்காக பிரான்சிலிருந்து விசுகு...

    • 19 replies
    • 1.2k views
  9. அமெரிக்க வாழ் இந்தியர் சங்கீதா பாட்டியா. இவர் ஒரு விஞ்ஞானி ஆவார். இவர் செயற்கையாக மனித கல்லீரல் உருவாக்கியுள்ளார். நோய்களை குணமாக்க எந்த வகையான மருந்து பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த செயற்கை கல்லீரல் மூலம் சோதனை நடத்த முடியும். இதற்காக அவருக்கு 2015–ம் ஆண்டுக்கான ‘ஹெனீஷ் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.1 கோடியே 50 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மசாசூசெட்வ் தொழில் நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இவர் செயற்கை கல்லீரலுக்கு மலேரியா நோய் சிகிச்சைக்கான மருந்தை வழங்கி முற்றிலும் குணமடைய செய்துள்ளார். - See more at: http://www.canadamirror.com/canada/41803.html#sthash.LrDA60q0.dpuf

    • 0 replies
    • 286 views
  10. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹவ்ஸ்டன் நகரைச் சேர்ந்தவர் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட். 20 வயது வாலிபரான இவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் மீது தான் வைத்திருக்கும் மட்டில்லாத பாசத்தை உலகத்துக்கு உணர்த்தும் விதமாக, கடுமையான வலியையும் பொருட்படுத்தாமல் மகனின் முகத்தை இவர் தனது இடது தாடையில் பச்சையாக குத்திக் கொண்டுள்ளார். தனது இந்த புதிய தோற்றத்தை சமீபத்தில் ‘பேஸ்புக்’ பக்கத்தில் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட் வெளியிட்டுள்ளார். இதற்கு நண்பர்கள் தரப்பில் இருந்து பெருத்த வரவேற்பும் ஒருசிலரிடம் இருந்து அதிருப்தியும் கிடைத்துள்ளது. இப்படி, உன் முக அழகையும், அமைப்பையும் கெடுத்துக் கொண்டால் வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட், விசா போன்றவற்றில் எதிர்காலத்தில் உனக்…

    • 0 replies
    • 449 views
  11. ஒரே ஆணுடன் சுற்றித்திரியும் இரு பெண்கள்: இது செம டேட்டிங் (வீடியோ இணைப்பு) அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே ஆணுடன் டேட்டிங் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த்(Perth) நகரில் லூசி-ஆனா சினிகியூ(Lucy and Anna DeCinque Age-28) என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வருகின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமான இவர்கள் இருவரும், தற்போது ஒரே வாலிபரை காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். இதுகுறித்து அவர்கள் பேசுகையில், நாங்கள் இருவரும் ஒருவர் இல்லாமல் ஒருவர் ஷாப்பிங் கூட செல்வது இல்லை.ஒருவரை விட்டு ஒருவர் விலக மாட்டோம் என பேசியுள்ளனர். மேலும் காதலருடன் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இரட்டையர் இர…

  12. TNA கூட்டம், ஒப்பந்தம் கைச்சாத்தாகாது! April 20, 201511:01 pm தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சிகளிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. மாதிவெலவிலுள்ள நாடாளுமன்ற விடுதியில் இந்த கூட்டம் நடக்கவுள்ளது. எனினும், நாளைய கூட்டத்திலும் கட்சிகளிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகது என தீபத்திற்கு நம்பகரமாக தெரிய வந்துள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நாடு திரும்பி, 22.04.2015 கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும், நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை சாத்தியமில்லையென்பதை கட்சித்தலைவர்களிற்கு அறிவித்தும் விட்டார். ஏனைய கட்சிகளினால் தமிழரசுக்கட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பில் உள்ள விடயங்கள் பல தொடர்…

    • 7 replies
    • 675 views
  13. நாடாளுமன்றத்தில் மகிந்தவிற்காக பகல், இரவாக உறுப்பினர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது 24 இலட்சம் பெறுமதியான மோதிரம் காணாமல் போயுள்ளதாகவும், இதன் மூலம் திருடன் யாரென மக்களுக்கு புரிந்துகொள்ள முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை தொலைத்து விட்டாராம். மோதிரத்தின் விலை 24 இலட்சம் என்றால் இதனை தனது சொத்து விபரத்தில் குறித்த உறுப்பினர் உள்ளடக்கியுள்ளாரா என பிரதமர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை அணிந்துக்கொண்டு எதற…

  14. கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த இலங்கை அரச பேரூந்து ஒன்றில் பெண் பயணி ஒருவர் நேற்று சனிக்கிழமை அதிகாலை தனிமையாக இறக்கி விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குறித்த பெண் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அந்தப்பெண் குறிப்பிட்டபோது- “நேற்று சனிக்கிழமை 25 ஆம் திகதி அதிகாலை 2.45 மணியளவில் கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு செல்ல வேண்டிய அரச பேரூந்து மன்னார் அரச பேரூந்து நிலையத்தினை வந்தடைந்தது. குறித்த பேரூந்து உடனடியாக மன்னார் சாலையில் இருந்து பயணிகளுடன் தலைன்னார் வரை செல்வதற்காக காத்திருந்தது.இதன் போது குறித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேரூந்தில் நான் பேசாலை செல்வதற்காக ஏறச்சென்…

    • 0 replies
    • 256 views
  15. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தில் நுழையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆலோசனையில் கோட்டா தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை, தற்போதைய அரசாங்கம் கோட்டா மீது முன்வைத்துள்ள நிலையில், இவ்வாறானதொரு செய்தி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/41745.html#sthash.wcZhyh4N.dpuf

    • 0 replies
    • 283 views
  16. கனடாவில் வனவிலங்கு உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் வருடாந்தம் நடைபெறும் CN Tower ஏறும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று பங்கெடுத்தார்கள்.உலக வனவிலங்கு நிதியத்தின் ஏற்பாட்டில் 25வது வருடமாக நடைபெற்ற நிகழ்வில், இன்று சுமார் 6000 பேர் கலந்துகொண்டார்கள். காலை ஆறு மணிக்கு சி.என்.டவரை படிகள் மூலம் ஏறும் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமாகியது . சி.என்.டவரின் 1776 படிகளை இவர்கள் ஏறினார்கள்.இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சேகரித்த நிதி, வனவிலங்குகளைப் பேணும் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும், சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாட்டிற்காக, இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பங்களிப்பதாக, வனவிலங்கியல் நிதியத்தின் தலைவரும் டொரன்டோ நகரின் முன்னாள் ம…

    • 0 replies
    • 313 views
  17. சிங்கப்பூர்: பால்கனியில் தொங்கிய பச்சிளம் குழந்தை... பத்திரமாக மீட்ட தமிழர்களுக்கு விருது சிங்கப்பூர்: அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியின் மாடியில் தவறிவிழுந்து தொங்கிக்கொண்டிருந்த பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி ஹீரோக்களாக மாறியுள்ளனர் இரண்டு தமிழர்கள். சிங்கப்பூரில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அவர்களுக்கு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை விருது வழங்கி கவுரவித்துள்ளது. சிங்கப்பூரில் ஜூராங் கிழக்கு எஸ்டேட் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில், தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கம்பித் தடுப்பைத் தாண்டி தவறி விழுந்தது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்த குழந்தையின் கழுத்து, கம்பியில் மாட்டிக்கொண்டது. மேலே ஏறவும் முட…

  18. அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) உலகில் பல அழகான வசிப்பிடங்கள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எம் நாட்டின் மலையகத்தைப் போன்று பார்வைக்கு அழகாகத் தோன்றும் அவை, ஆபத்தானவையும் கூட. அழகான, ஆபத்தான இடங்களையும் மனிதர்கள் தமது வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். இது பிலிப்பைன்ஸின் ஓகஷிமா எனும் பகுதியாகும். நடுக்கடலில் மலையிடையே சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆபத்தான ஒரு எரிமலையின் வாயில் இந்த அழகிய நகரம் அமைந்துள்ளது. மலைப்பாறைக்குப் பின்னால் மறைந்திருக்கும் இந்தக் குட்டி நகரம் கிரேக்கத்தின் கடலோரம் அமைந்துள்ள ஓர் தீவாகும் இராட்சத தேன்கூடு போன்ற வடிவில் தோன்றும் இந்த குகை வாய்ப் பகுதியிலும் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் சன்ஸ்கார் பகுதிய…

    • 3 replies
    • 1.1k views
  19. ரோம்: நடு வானில் விமானத்தின் முக்கிய உபகரணத்தின்மீது காபியைக் கொட்டி, அதைத் துடைக்கப் போய், ஆட்டோ பைலட் ஆப் ஆகி, விமானம் குலுங்கியதால், அதில் பயணித்த செர்பிய அதிபர் மரண பீதியில் உறைந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டதாம்.. எல்லாம் அந்த விமானத்தின் துணை பைலட்டால் வந்த வினைதான். செர்பிய அதிபர் டோமிஸ்லோவ் நிக்கோலிக், கடந்த வாரம் இத்தாலிக்கு பயணம் செய்தார். அரசு விமானத்தில் அவர் பயணித்தார். அவருடன் உதவியாளர்களும் பயணம் செய்தனர். 34 வயதான பிரான்சில் வடிவமைக்கப்பட்ட பால்கன் 50 ரக விமானத்தில் அவர்கள் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானம் குலங்கியது. வேகமாக உயரம் குறைந்து இறங்கத் தொடங்கியது. இதனால் அதிபரும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். விமா…

  20. உடலில் தோன்றிய மின்சாரம்: அமானுஷ்ய சக்தியுடன் வாழ்ந்த வினோதப் பெண்! [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 11:32.40 மு.ப GMT ] இங்கிலாந்தை சேர்ந்த ஜாக்குலின் என்ற பெண்மணிக்கு உடலில் ஒரு அமானுஷ்ய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசித்து வந்த ஜாக்குலின் என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் ஒரு நாள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜாக்குலின், அவரது கணவரிடம் “உங்கள் கழுத்து உடைந்தால் என்ன?” என்று கத்தியுள்ளார். இதையடுத்து தான் ஜாக்குலின் வாழ்வில் பல அமானுஷ்ய விடயங்கள் தொடர் கதையாகியுள்ளன. இந்த சண்டையை அடுத்து கோபத்தில், வீட்டைவிட்டு வெளியேறி ஸ்கூட்டரில் சென்ற ஜாக்குலினின் கணவர் ரான் விபத்தில் சிக்கி கழுத்து மற்றும…

  21. இரவில் வானில் தோன்றிய மர்ம தீக்கோளம்: பீதியில் உறைந்த பொது மக்கள் [ கேரளாவில் மீண்டும் வானில் தோன்றிய மர்ம தீக்கோளத்தால் பொது மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். கேரளாவில் அடிக்கடி வானில் தீக்கோளங்கள் தோன்றும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற இடங்களில் இதுபோல வானில் தீக்கோளங்கள் தோன்றின. மேலும் சில இடங்களில் இந்த தீக்கோளங்கள் தரையில் விழுந்து சிதறியதாகவும் கூறப்படுகிறது. இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இவை எரிகற்களால் ஏற்பட்ட தீக்கோளம் என்று தெளிவு படுத்தினார்கள். இந்நிலையில் எர்ணாகுளம் அருகே திருப்புனித்துரா என்ற இடத்தில் இரவு 9.30 மணி அளவில் மீண்டும் இதுபோன்ற தீக்கோ…

  22. வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சேத் ஷோஸ்டாக் விஞ்ஞானி கூறும் போது இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் என கூறி …

  23. உலகின் மிக அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா தேர்வு, Hollywood actress Sandra choice of the world's most beautiful woman The US-based celebrity 'People' magazine, 2015, the world's most beautiful woman in Hollywood actress Sandra puller, choosing releasing his picture on the cover. The 50-year-old actress won an Oscar. Sandra Bullock has been chosen as the world's most beautiful woman commented, '' which is the subject of ridicule. I did not tell anyone about it. My 5 year old son and I will be a mother to Beauty, '' he said that, '' the real beauty is silent. And in this city. I want to be like him, does not have to be a good person. But to be a good mother…

  24. Started by BLUE BIRD,

    Freedom For Everyone Homeless' Child Begged For Money In The Freezing Streets On New York City, wtach what the homeless man did https://www.facebook.com/714637455256618/videos/vb.714637455256618/796561123730917/?type=2&theater

    • 0 replies
    • 364 views
  25. “எனக்கே” இப்படி – வீதியில் அழுது புலம்பிய கோத்தா. April 23, 20158:42 am நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கிய தனக்கே இவ்வாறு செய்வதானால் (ல.ஊ ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டமை) இனி எந்தவொரு அரசியல் அதிகாரியாகவும் நாட்டை முன்னிறுத்திப் பணியாற்றுவார்கள் என தான் நினைக்கவில்லையென தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. இன்று காலை லஊ ஆணைக்குழுவின் அழைப்பையேற்று அங்கு சென்றிருந்த அவருக்கு ஆதரவாக நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அவர் அழைக்கப்பட்டது இது இரண்டாவது தடவையென்பதும் இம்முறை அவருக்கு எதிராக முன்வைக்கப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.