Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 2 தலை, 6 கால்களுடன் காணப்படும் அதிசய கடல் ஆமை உக்ரைன் நாட்டில் கீவ் நகில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் இரு தலையுடன் மற்றும் 6 கால்களுடன் கூடிய அதிசய கடல் ஆமை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அது மட்டுமின்றி இந்த ஆமை வேறு சில புதுமைகளுடன் காட்சி அளிக்கிறது. அதாவது சுமார் 5 வயதுடைய இந்த ஆமையின் மேற்பகுதி ஓடானது இருதயம் போன்று காணப்படுவதுடன் இதற்கு 6 கால்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த ஆமையை ஏராளமான மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது குறிப்பிடத்தக்கது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Gjm1KVaa7c4 http://www.youtube.com/watch?v=Gjm1KVaa7c4

  2. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு இடித்துரைக்கும் வகையில் செயற்படும் ஊடகவியலாளர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். அந்தவகையில் தம்மால் முடிந்தவரை , தமிழினத்தின் இரத்தம் சிந்தும் வாழ்வை வெளியுலக மக்களிற்கு எடுத்துரைத்த மேரி கொல்வின் அம்மையார் சிரியா நாட்டிற்கு செய்திசேகரிக்கும் பணிநிமித்தமாகச் சென்றிருந்தவேளை, அங்கு இடம்பெற்ற வன்முறைப்போருக்குள் சிக்குண்டு உயிரிழந்த சேதியானது, அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் தருகிறது. இரண்டாம் கட்ட விடுதலைப்போர் வன்னிப்பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, உண்மையை வெளியுலகிற்குக்கொண்டுவரும் நோக்குடன் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி துணிவுடன் வன்னிப்பகுதிக்குள் நுழைந்து, செய்தி சேகரித்துத் திரும…

  3. (செய்தி தொகுப்பு – இளந்தி 26/02/2012) வடகிழக்கு மக்களின் நல்வாழ்வுக்காக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதாகக் கூறும் இலங்கை அரசு மக்களின் நிலத்தை வகை தொகையாய் அபகரிக்கிறது. இதற்கு முடிவே கிடையாதா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். கடற்படை கரையோர மக்களின் நிலங்களைப் பறிக்கும் போது தரைப்படை கிராமம், நகரம் என்ற வேறு பாடின்றி பாரிய நிலப்பரப்புக்களை தனக்காக எடுத்துக் கொள்கிறது. அரசு கூறும் இன நல்லிணக்கம் காற்றில் பறக்க விடப்படுகிறது. காங்கேசன்துறை, கீரிமலை, மாதகல், ஒட்டகப்புலம், துணுக்காய் ஆகிய பகுதிக் காணிகள் அரசுடமையாக அறிவிக்கப்பட்டுள்ளன. போர்க் காலத்தில் பல காணி நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயருடன் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன. ஆனால் போர் முடிந்து இயல்பு ந…

  4. எல்லோருடைய கனவுகளையும் அந்த சின்னஞ்சிறுமி கண்ணீர் ததும்பிநிற்கும் கண்களுடன் சொன்னதை கேட்ட அனைவரும் நிச்சயமாக உடைந்துபோய் இருப்பார்கள். ஒரு தேசம் எப்படி இவர்களிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு, எப்படி இவர்கள் உலகின் திக்கெல்லாம் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள் என்பதை விஜய் தொலைக்காட்சியின் ஒரு பாட்டுப்போட்டி ஒன்றின் அங்கம் ஒன்றில் சரிகா நவநாதன் மிகஆழமாக புரியவைத்திருந்தார். அவருடைய தந்தையான பெரியதம்பி நவநாதனுடன் கதைத்தபோது அவர் சொன்னார், இப்படி ஒரு சந்தர்ப்பம் அந்த பாட்டுப்போட்டியில் கிடைத்தால் நிச்சயமாக இந்தப் பாடலைத்தான் தான் படிப்பேன் என்று அந்த சிறுமி தன்னிடமும் தாயிடமும் சொல்லி இருந்தார் என்று சொன்னார். தனக்கு எங்காவது கிடைக்கும் ஏதாவது ஒரு அரிய சந்தர்ப்ப…

  5. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அந்தச் சிறைச்சாலை அதிகாரிகள் மீது இன்று (25) தாக்குதலை நடத்தினர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. கையடக்கத் தொலைபேசியொன்று கைதி ஒருவரிடம் உள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து அதனைக் கைப்பற்றும் நோக்கில் சென்ற சிறை அதிகாரிகள் மீதே இந்தக் கைதிகள் தாக்குதல் நடத்தியதுடன் தண்ணீரையும் பீச்சியடித்துள்ளனர். அத்துடன் குறித்த கைதிகள் கற்களாலும் அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர் எனச் செய்திகள் கசிந்துள்ள போதும் இது ஒரு திட்டமிட்ட செய்தி பரப்பலாக இருக்கக்கூடும் என்பதோடு இதை சாட்டாக வைத்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மீது சிங்கள ராணுவத்தினர் த…

  6. புரட்சிகரமான தமிழ் உறவுகளே.இது தூங்குவதற்கான நேரமல்ல. ஒன்று திரண்டு உன் வரலாற்று கடமையை நிறைவேற்றும் நேரமிது. உனக்காக வீழ்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களது கனவுகளை நிறைவேற்றும் நேரமிது. உனது உடன் பிறந்த உனது உடம்பில் ஓடுகிற அதே தமிழ்ரத்தம் ஓடுகிற உனது சகோதரர்களை கூண்டோடு அழித்தவனை குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் நேரமிது. மறக்காகாதீர்கள். எம் அருமை உறவுகளே. வருகின்ற 05.03.2012 அன்று ஜெனீவா ஐநாப்பொதுமன்றத்தின் முன்றலிலே நெருப்புத்தமிழன் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலே நடைபெற இருக்கின்ற பேரணியில் உணர்வுள்ள அனைத்துத் தமிழனும் பங்குபற்றவேண்டும். ஏனென்றால் உலகத்தமிழர்களுக்கு இது மாபெரும் பேரணி மட்டுமல்ல. உலகத்தமிழனின் 60 ஆண்டுகாலப்போராட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை …

  7. தமிழினம் தங்களது வாழ் நாளிலேயே ஈகத்தின் உன்னதங்களையும், வீரத்தின் விளை நிலத்தையும், இலட்சியங்களின் உறுதியையும், அர்ப்பணிப்புக்களின் அணிவகுப்புக்களையும், கூடவே துரோகங்களின் குழிபறிப்புக்களையும், எதிரிகளின் கொடூரங்களையும் தரிசனம் செய்து வருகின்றது. எங்கள் ஈழத்தின் கல்லறைகள் யாவும் வரலாற்றின் பதிவுகளாக மட்டும் அல்லாமல், துரோகங்களின் பதிவுகளாகவும் சாட்சி பகர்கின்றன. தமிழீழ விடுதலைப் போரில் ஈகங்கள் மட்டுமல்ல, துரோகங்களும் கல்லறைகளற்ற பல புதை குழிகளையும், அடையாளம் அழிக்கப்பட்ட சாம்பல் மேடுகளையும் உருவாக்கியுள்ளன. வீழ்த்தப்பட்ட புலிகளுக்கும், கொலைக்களத்தில் சாய்ந்து போன மக்களுக்கும் எதிரிகள் மட்டும் காரணம் அல்ல, துரோகிகளும் கூடவே இருந்து குழிபறித்த வரலாறுகளும் உள்ளன. மரணங்…

  8. 21ம் நூற்றாண்டின் மனித உரிமைகளுக்கான சர்வதேசப் பாதுகாப்பும் மற்றும் அதற்கான சவால்களும் என்னும் தலைப்பில் ஓர் மாநாடு, போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. கனடாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 550 பேர் பங்குபற்றியிருந்தார்கள். இவர்களுடன் இம்மாநாட்டில் பங்குபற்றிய‌ ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளிலிருந்து வருகைதந்த‌ அறிஞர்களினாலும் ஆசிய மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு, சர்வதேச பொதுமன்னிப்புச் சபை, சர்வதேச தமிழர் ஒருங்கிணைப்புக்குழு போன்ற அமைப்புகளிலிருந்து பங்குபற்றிய 8அங்கத்தினரைக் கொண்ட புலமைசார் மனித உரிமைவாதிகளினாலும் மற்றும் இம்மாநாட்டில் பங்குபற்றிய கனடிய மத்திய அர…

  9. ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலஙகைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்து நேற்று குருநாகல் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் குருநாகல் பெரிய ஜுமஆப் பள்ளி தொழுகை முடிந்ததுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நகிழ்வில் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது இதில் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொடும்பாவிப் பதாதை தீயிட்டு எரிக்கப்பட்டது. பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.

    • 8 replies
    • 897 views
  10. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி எனும் ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய நாடுகள் சபையின் 19 மனித உரிமைகள் பேரவையில் அரச பிரதிநிதியாக கலந்து கொள்வதற்கு ஜெனீவான சென்றுள்ளார். அவர் ஜெனிவா செல்லும்போது கட்சியின் பொறுப்புக்கள் யாவற்றையும் அவரது சகோதரன் தயானந்தாவிடம் கையளித்து விட்டுச் சென்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. நேற்று ஜனாதிபதி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் டக்ளசின் சகோதரன் தயானந்தா ஈபிடிபி சார்பில் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. ஈபிடிபி யினுள் உள்முரண்பாடுகள் வலுத்து யாழ் மாவட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்கள் வெளியேறியுள்ள சந்தர்ப்பத்தில் இச்சந்திப்பில் தயானந்தா கலந்து கொண்டது கட்சி வட்டாரங்களில் பெரும் அதிருப்தியை உருவாக்கி…

  11. மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் அதிகாரம் பெற்ற ஐநா மனித உரிமைக் கவுன்சில் வருடமொன்றுக்கு மூன்று தடவை சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் தனது கூட்டத் தொடரை நடத்துகிறது. ஐநா மனித உரிமை ஆணையம் என்ற முன்னாள் அமைப்பு 2005ம் ஆண்டு உலக உச்சி மாநாட்டில் மனித உரிமைக் கவுன்சிலாக பெயர் மாற்றப்பட்டது. இப்போது நடக்கும் 19ம் கூட்டத் தொடரில் சிறிலங்கா போர்க் குற்றங்கள் தொடர்பான காரசாரமான விவாதங்கள் நடக்குமென எதிர்பார்க்கப்டுகிறது. மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டு வரலாம் என்ற தகவல் கசியத் தொடங்கியுள்ளது. இப்படியான பிரேரணைகள் கொண்டு வரப்படலாம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இது தொடர்பான கசிவுகளை ஒரு சிறிலங்கா மீதான அழுத்தம் பிரியோகிக்கும் …

  12. கீ.மு 10ம் நூற்றாண்டுக்கு முன் பண்டைய தமிழர்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமாக தெளிவான ஆறு புலன்களின் மூலம் அதாவது தொடுதல், சுவைத்தல், மணத்தல், பார்த்தல், கேட்டல், அறிதல் என வகுத்துள்ளான்.

  13. அமெரிக்காவில் சாக்லேட் சாப்பிட்டதற்கு தண்டனையாக 3 மணி நேரம் ஓடிய சிறுமி பலி அலபாமா: சாக்லேட் சாப்பிட்டதற்காக 9 வயது சிறுமியை தண்டிக்க அவரை 3 மணி நேரம் நிற்காமல் ஓடும்படி செய்துள்ளனர். இதனால் நா வறண்டு மயங்கிய சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார். அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த சிறுமி சவன்னா ஹார்டின்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தாள். அவளது மாற்றான் தாய் ஜெசிகா மே ஹார்டின்(27), பாட்டி ஜாய்ஸ் ஹார்டின் காரட்(47). கடந்த வெள்ளிக்கிழமை சவன்னா சாக்லேட் சாப்பிட்டுவிட்டு பாட்டியிடம் இல்லை என்று பொய் சொல்லியிருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த ஜெசிகாவும், ஜாய்ஸும் சவன்னாவை 3 மணிநேரம் நிற்காமல் ஓடச் செய்துள்ளனர்.…

  14. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை திறம்பட நடைமுறைப்படுத்தினால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்றுபடுத்துவதற்கான நடவடிக்கையில் முக்கியமான பங்களிப்பை செய்ய முடியும். சிறிலங்காவில் இனமுரண்பாட்டுக்கு மூலகாரணமான தமிழ்மக்களின் உண்மையான குறைகளை தீர்ப்பதில் கடந்தகால அரசாங்கங்கள் தவறியுள்ளன என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் கருத்தை ஐரோப…

  15. முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தவர்களுக்கும், வீழ்த்தப்பட்டவர்களுக்குமானதொரு பெரும் போர்க் களம் ஜெனிவாவில் மையங்கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைக்காக அக்கினி வேள்வி நடாத்திய விடுதலைப் புலிகள் களத்தினை இழந்த பின்னர், தமிழீழ விடுதலைக்கான புதிய போர்க் களம் புலம்பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க் களத்தில் நாங்கள் மீண்டு எழுவது ஒன்றே, ஈழத் தமிழர்களது வரலாற்றைத் திருத்தி எழுதப் போகின்றது. வஞ்சகத்தால் வீழ்ந்த தமிழினம், மீண்டும் அதே வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டது. அந்த வரலாற்றை மீட்டெடுக்கும் போர்க் களமாக எதிர்வரும் மார்ச் 05-ம் திகதி ஜெனிவா முருகதாசன் திடல் மாறப் போகின்றது. முள்ளிவாய்க்காலில் ஏன் என்ற கேள்விக்கே இடம் இல்லாமல் ஈழத் தமிழினத்தைக் கோரக் க…

  16. தமிழீழம் என்பது வெறும் கனவு அல்ல இலட்சத்திற்கும் மேற்பட்ட எம்தமிழ் உறவுகளின் இலட்சியம். அந்த உயர்ந்த இலட்சிய நோக்கோடு பல வழிப்போராட்டங்களை எம்தமிழ் உறவுகள் அனைத்து நாடுகளிலும் முன்னெடுத்தார்கள், வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அப்போராட்டங்கள் அந்தந்த நாட்டு நீதியின் கதவுகளை அழுத்தி தட்டியிருக்கின்றன. எந்தவொரு நாட்டிலும் நீதிக்கான போராட்டங்கள் ஓய்ந்ததில்லை என்பதையே இப்போதும் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நீதிக்கான நடைப்பயணமும் பறைசாற்றி நிற்கின்றது. பெரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விடுதலை, இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்டு புறப்பட்டிருக்கும் எம்தமிழ் உறவுகளான வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா, மற்றும் ஜக்கமுத்து க்ராசியன் ஆகிய மூவரோடு…

  17. இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம் வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி 18 நாட்களைக் கடந்து எழுச்சி வலுப்பெற நடைப்பயணம் தொடர்கின்றது. Mühlhausenஅருகாமையில் தொடர்ந்துகொண்டிருக்கும் நடைப்பயணம் ஐரோப்பிய வடகடலையும் சுவிஸையும் இணைக்கும் Rain நதி ஓரமாக நகர்ந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுவிஸை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைப்பயணத்தை தொடர் எழுச்சியுடன் ஜெனிவா வரை அழைத்துச் செல்வதற்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். தமிழர்களின் வெளியக வெகுயனப் போராட்டங்களினதும் உள்ளக இராயதந்திர நகர்வுகளினதும் …

  18. அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அதியு யர்மட்ட இராஜதந்திரியொருவர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா அமர்வில் பார்வையாளராகக் கலந்துகொள்ளவிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இம்முறை அமர்வின்போது இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டுவருவதில் அமெரிக்கா வெகுவான அக்கறை காட்டிவருகின்ற நிலையில் மேற்படி தகவல் நேற்று வெளியாகியுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மார்ச் முதல் வாரத்தில் முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அன்றையதினம் அமெரிக்காவின் அந்த உயர்மட்ட இராஜதந்திரி பார்வையாளராகக் கலந்துகொள்வாரென்றும் இலங்கைக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவது அமெரிக்க பிரதிநிதியின் இந்த பிரசன்னம் உ…

  19. ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுத் தலைவரும், ஆயுதக் குழுவை வைத்திருக்கும் நபருமான டக்ளஸ் தேவானந்த நேற்றிரவு சுவிசுக்கு பயணமாகியுள்ளார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் இவர் கலந்துகொள்ளவிருக்கிறாராம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சூளைமேட்டில் வைத்து தனது கைத்துப்பாக்கியல் திருநாவுக்கரசு என்னும் தமிழ்ச் சகோதரரை சுட்டு, நடு ரோட்டில் காட்டு மிராண்டித்தனம் காட்டிவர் இந்த டக்ளஸ் தேவானந்தா. இக் குற்றச்செயலுக்காக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது(சென்னை நீதிமன்றில்). வட கிழக்கில் ஆயுதக் குழுவொன்றை வைத்து மக்களை மிரட்டி தனது காரியங்களைச் சாதித்துவரும் இவர், மனித உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பது பெரும் நகைப்புக்குரிய விடையமாகும். பின்னர் கள்ளமாக…

    • 2 replies
    • 563 views
  20. நேர்காணல் காணொளி : Part :1 Part 2: http://youtu.be/2ovCehRZv_A Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக அனுபவித்த சம்பவங்களை கொண்டு உண்மை கதையில் எழுதப்பட்ட நாடகம் பெர்லின் நகரத்தில் சென்ற கிழமை பல்லின மக்களுக்கு காண்பிக்கப்பட்டது . குரல் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மனிதர்களின் உண்மைக் கதைகளை உலகத்திற்கு கொண்டு செல்வது Annet Henneman அவர்களின் நோக்கம் ஆகும்.அத்தோடு புலம்பெயர்ந்து அகதிகளாக பல கஷ…

  21. மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர். தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன. தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் இந்த அறிக்கை எழுதப்பட்டு இருக்கின்றது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்ட மனிதாபிமான அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஊழியர்களை கருணா குழுவினர் கடத்தி உள்ளனர் என்று…

  22. இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது. தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது. இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இ…

  23. சனல்-4 தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஈழமனிதப்படுகொலை காணொளி காட்சிகளால், பன்னாட்டு மட்டத்தில் எழுந்துவரும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஐநா மனித உரிமைகள் மாநாடு, பெப்,27,2012 ஜெனீவாவில் கூட இருக்கிறது. மாநாட்டு அமர்வில் இலங்கைக்கு எதிராக (இந்தியா தவிர்ந்த) அனேக நாடுகள் எதிர்நிலையெடுக்க இருப்பதாக சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. அப்படி ஏற்படாமல் தடுப்பதற்கு இலங்கை அரசும் தன்னாலான தந்திரங்கள் அனைத்தையும் பலமாதங்களாக செய்துவருகிறது. அதற்கான அறிவுறுத்தல்களையும் திசை திருப்புதலுக்கான உத்திகளையும் நண்பன் இந்தியா சிரமேற்கொண்டு பொறுப்புடன் உதவிவருவதாக தெரிகிறது. இருந்தும் சர்வதேசநாடுகள் பலவும், ராஜபக்க்ஷ மீது பெருத்த …

  24. சர்வதேசத்தை ஏமாற்ற காலத்திற்கு காலம் பல்வேறு குழுக்களை அமைத்துவரும் சிறீலங்காவின் புதிய அவதாராகமாக பிறப்பெடுத்துள்ளது ‘இராணுவ நீதிமன்றம்’. போர் நிறைவடைந்ததன் பின்னர் சர்வதேச அழுத்தங்கள் எழுந்தபோது நல்லிணக்க மற்றும் கற்றுக்கொண்ட ஆணைக்குழு ஒன்றை மகிந்த அமைத்து காலத்தை ஓட்டிவந்தார். தங்களது நிபுணர் குழுவின் அறிக்கையைக்கூடக் கிடப்பில் போட்டுவிட்டு, மகிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து இலவுகாத்த கிளியாகக் காத்துக்கிடந்தது ஐ.நா. ஆனாலும் மகிந்த காலத்தை இழுத்தடிப்பதைப் புரிந்துகொண்ட, மனித உரிமை அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் உடனடியாக அறிக்கையை வெளியிடவேண்டும் என்று அழுத்தம் போட்டன. வேறுவழியின்றி மகிந்தவும் அறிக்கையை வெளியிட்டுவைத்தார். மகிந்தவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.