செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தல் இராணுவ வசமாகிறது சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் வருடம் முதல் இந்த நடவடிக்கை இராணுவத்தினரிடம் ஒப்படைப்படவுள்ளது. வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதால் பெரும் தொகையை செலுத்தப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 357 views
-
-
வேலை செய்யும் இடங்களில்,பல சுவாரசியமான சம்பவங்களை சந்தித்திருப்போம். அவற்றினைப் பகிர்வோமா. £250, 000 செலவு வைத்த ஈமெயில். இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர் மேலை நாடுகளில் ஒரு பதட்டம். குறிப்பாக முஸ்லிம் பெயர் கொண்ட, அதிகமாக தமது மத நம்பிக்கைகள் குறித்து வெளிப்பாடாக பேசுவோர் குறித்த பதட்டம் கூடுதலாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்த 'Daimilar-Benz' கொம்பனியில் (அதுதான் நம்ம மேர்சீடிஸ் கார் கம்பெனி) ஒரு மத்திய கிழக்கு சேர்ந்த ஒருவர், help desk support ல் வேலை செய்து கொண்டிருந்தார். தமது மத நம்பிக்கைகள் குறித்து பீத்திக் கொண்டிருப்பார். அவரது முகாமையாளருக்கு, HR பகுதியில் இருந்து ஒரு மெயில் வந்து இருந்தது, குறித்த நபர் குறித்து கவனமாக இருக்குமாறும், எதற்கும் ஒரு கண் அவ…
-
- 0 replies
- 547 views
-
-
பறந்துக்கொண்டிருந்த விமானத்துக்குள் பாம்பு : பதற்றத்தில் பயணிகள் (படங்கள்) அலாஸ்காவின் அனியாக் நகரிலிருந்து அன்கோரேஜ் நகருக்கு சென்ற ராவன் அலாஸ்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பாம்பொன்று இருந்ததால் விமானத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் விமானத்துக்குள் பாம்பொன்று இருப்பது பற்றி விமானிகளுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து குறித்த விடயத்தை பயணிகளுக்கு விமான பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்போது விமானத்தின் இறுதி வரிசையிலிருந்த 7 வயது சிறுவனின் இருக்கைக்கு பின்னால் பாம்பொன்று இருப்பதை அவதானித்துள்ளான். இதனை விமான பணியாளர்களுக்கு கூற அவர்களும் குறித்த பாம்பினை பிளாஸ்டிக்…
-
- 0 replies
- 277 views
-
-
கணவரின் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், ஆவணங்கள், செய்திகள் அல்லது வேறேதும் தகவல்களை, கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு சேகரிப்பதற்கு, அவரின் மனைவிக்கு தடையுத்தரவு பிறப்பித்து கல்கிஸை மாவட்ட நீமன்றம் கட்டளையிட்டுள்ளது. தான் வீ்ட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் தனது தனிப்பட்ட கணினியிலுள்ள தகவல்களை தன்னுடைய மனைவி ஆராய்கிறார் என குற்றஞ்சுமத்தி கணவரொருவரால் கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது மனைவிக்கும் தனக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு இதே நீதிமன்றத்தில் நிலுவவையில் உள்ள நிலையில், தனது பல்வேறுபட்ட தகவல்களையும் தொலைபேசி உரையாடல்ளையும் தனது அறையில் ஒலி கண்காணிப்பு சாதனத்தைப் பொருத்தி, தன்னுடைய மனைவி தரவிறக்கம் செய்து…
-
- 0 replies
- 318 views
-
-
யாழ்.மாவட்டத்தில், மாறு வேடத்தில்... தலைமறைவாக இருந்த, கொலைச் சந்தேகநபர் கைது! யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு சந்தேக நபர் 2019ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சந்தேக நபர் கொக்குவிலை சேர்ந்தவரெனவும், தனுறொக் குறுப் என்ற வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. மேலும் உப்புமடம் – கோண்டாவில் பகுதியில் காட்வெயார்கடை உரிமையாளருக்கு தலையில் அடித்து கொலை செய்த வழக்கி…
-
- 0 replies
- 313 views
-
-
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் பொல்லார்ட். ஒசாமா பின்லேடனின் மகன் ஓமர் விந்துவும் அவரின் 54 வயது பிரித்தானிய மனைவி ஜைனாவின் முட்டையும் செயற்கை கருவுறுதல் மூலம் சுமக்க ஒப்புக் கொண்டவர் லூயிஸ் பொல்லார்ட். எட்டாவது வாரத்தில் நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மான்செஸ்டர் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற போது ஸ்கேன் செய்து பார்த்ததில் இரட்டை குழந்தைகள் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இரட்டை குழந்தைகள் இருப்பதை கண்டு மிகுந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார் லூயிஸ் பொல்லார்ட். ஓமர் பின் லேடன் தற்போது கத்தார் நாடுகளில் வாழ்ந்து வருகிறார். பிரித்தானியாவில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டவர் அவர். பிரித்தானியாவில் இருக்கும் அவரின் மனைவி குழ…
-
- 0 replies
- 670 views
-
-
இரும்பு பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு : மனைவி காயம்! Published By: NANTHINI 26 FEB, 2023 | 11:25 AM இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கலவான பபோடுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபராவார். இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்தபோது விசாலமான இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த குறித்த நபரை மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட நிலையில், கலவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த…
-
- 0 replies
- 601 views
- 1 follower
-
-
“கோழிக் கால் சாப்பிடுங்கள்” என மக்களிடம் இந்த அரசாங்கம் ஏன் சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,யோலந்தே நெல் பதவி,பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "கடவுளே, எங்களை கோழிக்கால் சாப்பிடும் நிலைக்கு தள்ளி விடாதே" என்று கீஸா சந்தையில் கோழிக் கடைக்காரரிடம் ஒரு நபர் கெஞ்சுகிறார். எகிப்து கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அங்குள்ள மக்கள் தமது குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கக்கூட கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
DOCTORS were baffled when a British man told them, "I can hear my eyeballs moving". But they finally diagnosed that Stephen Mabbutt had a rare ear condition, in which sounds inside the body were heard very loudly, The Sun reported. Mr Mabbutt, 57, could also hear his heart beating. When he chewed food, the noise was deafening. The dad of two was experiencing autophony, one of the symptoms of superior canal dehiscence syndrome, an illness that was unknown until 10 years ago. At first, he noticed that the internal sound of his own voice was beginning to drown out everything else around him. Over six years, the condition worsened as other bodily no…
-
- 0 replies
- 594 views
-
-
என்ன இருக்கிறது இந்த மர்ம புத்தகத்தில்? (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 17 யூன் 2015, 12:17.18 பி.ப GMT ] இத்தாலியில் 1912ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட The Voynich manuscript எனப்படும் கையெழுத்து பிரதியில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்பட முடியாத மர்மமாகவே விளங்குகிறது. இத்தாலியில் உள்ள மடமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கையெழுத்துப் பிரதியில் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் பல எடுத்துக்காட்டுக்கள் மற்றும் விளக்கப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கம் வரை செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ள அந்த கையெழுத்துப் பிரதியில் உள்ள செய்தியை பல்லாண்டுகளாக நிபுணர்கள் புரிந்து கொள்ள முயன்றும் இன்றும் சாத்தியமாகவில்லை. ”கார்பன் டேட்டிங்” என…
-
- 0 replies
- 614 views
-
-
190 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகச்சிறிய அளவிலான புத்தகமொன்றை, பாரிஸில் நடந்த ஏலத்தில் லண்டன் அருங்காட்சியகம் மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது. கிளாசிக் என்று போற்றப்படும் நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் சார்லட் பிராண்டே. இவர், தன் 14ஆவது வயதில் எழுதிய, மிகச்சிறிய கையெழுத்துப் பிரதியொன்று பாரிஸில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, லண்டன் அருங்காட்சியகம் இதனை 6 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. வெஸ்ட் யார்க் ஷயரில் உள்ள சார்லட்டின் வீட்டில் இது வைக்கப்படவிருக்கிறது. https://www.polimernews.com/dnews/89421/190-ஆண்டுகளுக்கு-முந்தையகையெழுத்து-பிரதி-ரூ.6.20கோடிக்கு-ஏலம் Bronte manuscript sells for 780,000 euros at Paris auction Written …
-
- 0 replies
- 356 views
-
-
மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறம் கண்டுபிடிப்பு! மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிவியல் உலகில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் குறித்த சாதனையை படைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ‘குறித்த நிறத்தினை வெறும் கண்களால் பார்க்க முடியாது எனவும், கண்களில் லேசர் ஒளியை துல்லியமாக செலுத்தி கண்களுக்கு பின் உள்ள ‘கோன்’ எனும் நிறம் உணரும் செல்களை தூண்டுவதன் மூலம் இந்த நிறத்தினைப் பார்க்க முடியும் எனவும் …
-
- 0 replies
- 204 views
-
-
எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து! எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நானுஓயாவில் விபத்திற்குள்ளானது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனத்தில் 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தினையடுத்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச்செல்வதைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431854
-
- 0 replies
- 109 views
-
-
கொஞ்சும் புறாவே 25,000 குற்ற்றப்பணம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்”. இந்த முடிவு நீதிமன்றத்தால்அறிவிக்கப் பட்டதில் இருந்து Inge Euler (74) நிலை குலைந்து போயிருக்கிறார். இப்படி ஒரு தண்டனை கிடைப்பதற்கு Inge Euler அப்படி பாரிய ஒரு குற்றமும் செய்துவிடவில்லை. கருணையை வெளிப்படுத்தப் போய் அவர் சிக்கலில் மாட்டிக் கொண்டார். அவர் செய்தது புறாக்களுக்கு தீனி போட்டது மட்டுந்தான். அதனால் வந்த வினையே இது. 1989 இல் Ingeயின் பக்கத்து வீட்டில் இருந்தவர் தகவல்களைப் பரிமாறும் புறாக்களை (அஞ்சல் புறாக்கள்) வளர்த்துக் கொண்டிருந்தார். அவற்றின் மேல் பரிவும் விருப்பமும் கொண்டதால் Inge அவற்றை அவரிடம் இருந்து பெற்று தனது பல்கணியில் கூடு அ…
-
- 0 replies
- 327 views
-
-
டொரொண்ட்டோ மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக் கூட்டத்தில் பெண் நோயாளிகளிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மருத்துவர் ஜார்ஜ் டூட்னாட்(வயது 64) மீது 21 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன. இவர் கடந்த 2006 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 25 வயது முதல் 75 வயது வரையிலான பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்குப் பதிவாகியுள்ளது. இவர் தான் மயக்கமருந்து கொடுக்க வேண்டிய பெண் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்த பின்பு அவர்கள் அரைகுறையாக மயங்கியிருந்த வேளையில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது அவர்களிடம் தவறாக நடந்திருக்கிறார். 2010ம் ஆண்டில், ஒரு பெண் நோயாளிக்கு கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தபோது அவர் இந்த மருத்துவர் தனக்கு முத்…
-
- 0 replies
- 360 views
-
-
மொபைலை நம்பினோர் கைவிடப்படார். - முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிடம் கேட்டால் இப்படி தான் சொல்வார். அதுவும் சந்தோஷமாகவே சொல்வார். ஏனெனில் மொபைல் மூலம் விளம்பர வருவாய் தான் பேஸ்புக்கிற்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பேஸ்புக்கின் இரண்டாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் படி பேஸ்புக்கின் வருவாய் 2.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இணையான காலாண்டு வருவாயான 1.81 பில்லியன் டாலரை விட இது 61 சதவிதம் அதிகம் என்பது மட்டும் அல்ல, இதில் 62 சதவீதம் அதாவது 1.66 பில்லியன் டாலர் மொபைல் மூலமான விளம்பர வருவாயாகும். ஆக மொபைல் வாரிக்கொடுத்ததால் பேஸ்புக் வருவாயை அள்ளியிருக்கிறது. இதில் விஷேசம் என்ன என்றால், பங்குச்ச…
-
- 0 replies
- 613 views
-
-
மட்டக்களப்பில்... வைத்தியரின் வீட்டில்... 10 கோழி, 1 நாய் திருடிய... 5 மாணவர்கள் கைது ! மட்டக்களப்பு தமட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழி திருடிய 5 மாணவர்கள் கைது !லைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழி நாய் என்பற்றை திருடிச்சென்ற உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 5 பாடசாலை மாணவர்களை கைது செய்து அவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ள சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியரின் வீட்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு உள்நுழைந்த 5 மாணவர்கள் வீட்டின் பின்பகுதியில் அமைந்துள்ள கோழிக் கூட்டில் இருந்த 10 கோழிகளை திருடிக் கொண்டிருந்த போது அங்கு வந…
-
- 0 replies
- 191 views
-
-
ஐஸ்லாந்தில மக்கள் புரட்சி நடந்து மக்கள் வென்றுள்ளர்கள், தற்பொழுது புதிய அரசியல் அமைப்பில் புதிய ஐஸ்லாந்து இயங்குகறது. 300 000 மக்கள் வசிக்கும் ஒரு சிறிய நாடு பொருளாதர சரிவின் பின் 2008 இல் ஆர்ஜன்தீனரைப் போல பானை சட்டிகளை தட்டி ஒலி எழுப்பித்தான் தங்கள் அரசாங்கத்தைக் விரட்டிணார்கள், Quand l’Islande réinvente la démocratie 16 décembre 2010 par Jean Tosti - www.cadtm.org ... Depuis cette crise dont elle est loin d’être remise, l’Islande a connu un certain nombre de changements assez spectaculaires, à commencer par la nationalisation des trois principales banques, suivie de la démission du gouvernement de droite sous la pressi…
-
- 0 replies
- 664 views
-
-
11 நாட்கள் இடைவிடாது பறந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற பறவை By T. SARANYA 06 JAN, 2023 | 04:01 PM அலாஸ்காவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு பட்டைவால் மூக்கன் (bar-tailed Godwit) என்ற பறவை 13 ஆயிரத்து 569 கிலோமீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று பயணத்தை தொடங்கிய இந்த பறவை சுமார் பதினொரு நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்றது 5ஜி செயற்கைக்கோள் மின்பட்டை (5G satellite tag) மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. அலாஸ்காவில் இருந்து பறக்கத் ஆரம்பித்த இந்த பறவை அவுஸ்திரேலியாவின் கிழக்கு தாஸ்மேனியாவில் உள்ள Ansons விரிகுடாவின் கரையில் தரை இறங்கியது. இதற்க…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்: சொல்கிறார்கள் பிரிட்டன் விஞ்ஞானிகள் பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலுக்கு மாற்றாக, செயற்கை பெட்ரோலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இதுகு…
-
- 0 replies
- 429 views
-
-
உலகப்புகழ்பெற்ற குரூஸ்ஸுக்கு அடுத்தபடியாக ஒபாமாவின் அழுத்தத்தால்(உள்ளூர்தயாரிப்புகளுக்கு முன்னுரிமை)சவரலே வழங்கும் 100 வீதம் மின்சாரத்தில் இயங்கும் கார் http://www.insideline.com/chevrolet/volt/2011/long-term-test-2011-chevrolet-volt.html http://www.chevrolet.com/volt/
-
- 0 replies
- 565 views
-
-
பலாங்கொடை மாராத்தென்ன தோட்டப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி ஒன்றிறை வன ஜீவராசிகள் பிரிவினரும் பொலிஸாரும்; இணைந்து நேற்று பிற்பகல் வேளையில் பிடித்துள்ளனர். மாராத்தென்ன தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளுக்கிடையில் ஒரு வித சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அங்கு ஆராய்ந்து பார்த்த போது மஞ்சள் நிறத்துடன் கூடிய விசாலமான புலி ஒன்றிருப்பதைக் கண்டுள்ளனர். இந்தப்புலிக் குறித்து தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரின் ஊடாக மாராத்தென்ன பொலிஸாருக்கும் வன ஜீவராசிகள் பிரிவினக்கும் அறிவித்தனர். அந்தப்பகுதிக்கு வருகைத்தந்த பொலிஸாரும் வன ஜீவராசிகள் பிரிவினரும் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு புலியைப் பிடித்துள்ளனர். http://www.virakesa…
-
- 0 replies
- 642 views
-
-
பூமியில் 125 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினமான ‘த டீப் ஏலியன்’ என்று அழைக்கப்படும் (ஆழ் கடலின் ஏலியன்) கோப்ளின் சுறாவின் புகைப்படம் சிட்னியில் உள்ள அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் சிறிய கத்திகளை போன்ற தோற்றம் கொண்ட அதன் பற்கள் பயத்தை உண்டாக்கும். கோப்ளின் சுறா அதன் இரையை கண்டறிந்ததும் தன் நெற்றியில் உள்ள கத்தி போன்ற வடிவத்தில் உள்ள உடலமைப்பினால் இழுத்து இரையை வேட்டையாடும். இந்த விலங்கின் தாடை நுட்பம் வசீகரமானது என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியக மீன் சேகரிப்பு மேலாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் ஈடன் கடற்கரைப்பகுதியில் சுமார் 200 மீட்டர் ஆழத்தில் இந்த மீனை மீனவர் ஒருவர் பிடித்துள்ளார். பின்…
-
- 0 replies
- 461 views
-
-
பிரித்தானிய நெடுஞ்சாலையில் 120 மைல் வேகத்தில் துரத்திப் பிடித்த பொலிசார்: காணொளியைப் பாருங்கள் சமீபத்தில் பிரித்தானிய நெடுஞ்சாலையான M1 இல் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்றை பொலிசார் மணித்தியாலக் கணக்கில் துரத்தி இறுதியாகப் பிடித்தனர். சுமார் 5 நிமிடம் காண்பிக்கப்படும் இக் காணொளி ஏதோ விறுவிறுப்பு சினிமா படம்போல அமைந்துள்ளது. http://www.youtube.com/watch?v=fVh6mosYtCw&feature=player_embedded#! M1 நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற கார் ஒன்றைப் பொலிசார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது அது மிகவும் லாவகமாகத் தப்பிச் சென்றுவிட்டது. அதனைக் கோட்டைவிட்ட பொலிசார், உடனடியாக உலங்கு வானூர்தியின் உதவியை நாடியிருந்தனர். கமரா பொருத்தப்பட்ட உலங்கு வானூர்த்தி M1 நெடுஞ்சாலையில் …
-
- 0 replies
- 539 views
-
-
திருமணமாகாத கில்லாடி ஜோடி சிக்கியது மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி (17) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.ராஜசிங்க தெரிவித்தார். கொத்மலை, தவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த செல்லையா சசிகுமார் (வயது: 46) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த சுபாஷ் செல்வராணி (வயது: 39) என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 334 views
-