செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
ஃபேஸ்புக்கில் அதிக லைக்குகள் பெற விரும்பி குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்ட தந்தை கைது சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிக எண்ணிக்கையில் `லைக்`பெற வேண்டும் என்பதற்காக, வீட்டு ஜன்னலில் இருந்து தனது குழந்தையை தொங்கவிட்ட ஒருவருக்கு அல்ஜீரியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTFACEBOOK மிகவும் உயரமான கட்டடத்தில் ஒரு ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ''1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்'' என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார். இந்த பதிவால…
-
- 0 replies
- 187 views
-
-
கீமோதெரபி செய்துகொண்டதால், தனது தலைமுடியை இழந்த மார்லி, தன் மொட்டை தலையைக் கண்டு தனது நண்பர்களும், ஆசிரியர்களும் கிண்டல் செய்வார்களோ என்ற கவலையுடன் பள்ளிக்குத் திரும்பினாள்.ஆனால், அவர்களின் செயலோ, மார்லியை ஆச்ர்யத்தில் ஆழ்த்தியது. தனது நண்பர்களும், ஆசிரியர்களும் தன்னை கிண்டல் செய்யாமல், ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, அவர்களில் பலர் தன்னைப் போலவே தலையை மொட்டை அடிக்க முடிவு செய்ததைக் கண்ட மார்லியுடைய மகிழ்ச்சியின் முன், புற்றுநோய் தோற்றே விட்டது. அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தில் உள்ள ப்ரூம்ஃபீல்ட் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி மார்லியின், இடது கால் பாதத்தில், சிறிய வீக்கத்தினை கண்ட மார்லியின் தாய், அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அது புற்றுநோய் என தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 187 views
-
-
யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுகின்றனர்? கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளாந்தம் காலை முதல் மாலை வரை யாசகம் பெறும் இவர்கள், இரவில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாகவும், நட்சத்திர தரத்திலான ஹோட்டல்களில் கூட உணவு உண்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது. பிரதான வர்த்தக நிலையங்களுக்கு தேவையான இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், 100 ரூபாய் போன்ற நாணயத்தாள்களை யாசகர்களே வழங்கிவருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன், யாசகத்தை பிரதான தொழிலாக கொண்டு செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. …
-
- 1 reply
- 187 views
-
-
கடலில் மூழ்கி காணாமல் போன இரு சிறுவர்களும் சடலங்களாக மீட்பு January 16, 2022 மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கயுவத்தை கடலில் நேற்றைமுன்தினம் (14) நீராடிய ஏழு சிறுவர்களில் கடலில் மூழ்கி காணாமல் போன சிறுவா்கள் இருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்தச.அக்சயன் (வயது 16), ஜீவானந்தா சுஜானந்தன் (வயது 16) (வயது 16) ஆகிய இரு சிறுவர்களது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன இரு சிறுவர்களையும் தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில், நேற்று (15) பிற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா்…
-
- 0 replies
- 187 views
-
-
Published By: RAJEEBAN 27 APR, 2023 | 03:31 PM பீகாரைச் சேர்ந்த ’ஏடிஎம் பாபா’ என்பவர் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சிலருக்கு ஏடிஎம்-ஐ எவ்வாறு கொள்ளையடிப்பது என்று 3 மாத பயிற்சி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தை திருடியதாக நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9.13 லட்சத்தை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. பீகார் மாநிலம் சப்ராவைச் சேர்ந்தவர் சுதிர் மிஸ்ரா. இவர் ‘ஏடிஎம் பாபா’ என்று அழ…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
பேஸ்புக் விருந்துபசாரம் :15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது. பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக ம…
-
- 1 reply
- 187 views
-
-
10 APR, 2025 | 12:49 PM புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட யானை குட்டி ஒன்று பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதம் மதிக்கத்தக்க யானை குட்டி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்த யானை குட்டி தற்போது புத்தளம் கால்நடை வைத்தியர்களின் பராமரிப்பில் இருப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/211693
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
வெளிநாட்டில் தமது பிள்ளைகளுடன் 70 வது பிறந்த தினத்தை கொண்டாடிய பின் இலங்கை திரும்பவிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடு திரும்பாமல் கனடாவிற்கு அவசர பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்துள்ள நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடு திரும்பியதும் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை விடுக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. எனினும் அவர், அவசரமாக கனடா சென்றதாகவும், அங்கு அவர் ஒருவார காலம் தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்யும் திட்டங்களை கனடாவில…
-
- 0 replies
- 186 views
-
-
மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் போலி தடுப்பூசி முகாம்? ; அதிர வைக்கும் மோசடி! - நடந்தது என்ன? மு.ஐயம்பெருமாள் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பு கட்டடம் மும்பையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 390 பேருக்கு வழக்கமாக வரக்கூடிய எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாததால், போடப்பட்டது போலி தடுப்பூசியாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மும்பையில் இப்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு நிறுவன வளாகத்திலேயே தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். சில குடியிருப்பு கட்டடங்களில் இது போன்ற தடுப…
-
- 0 replies
- 186 views
-
-
வானில் திடீரென தோன்றிய நான்கு மர்ம ஒளியினால் வேற்றுக்கிரக வாசிகளின் படையெடுப்பாக இருக்கலாமோ என அச்ச நிலையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றைய தினம் சிலி நாட்டில் வானில் தோன்றிய மிதக்கும் விளக்குகள் வேற்று கிரகவாசிகளின் படையெடுப்பா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று சிலி. வேற்றுகிரகவாசிகள் இங்கு அதிகளவில் தென்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலியின் சாண்டியாகோ நகரில் வானத்தில் திடீரென பிரகாசமான வெளிச்சத்துடன் 4 மர்ம பொருட்கள் தென்பட்டது. சிறிது நேரம் அப்படியே வட்டமடித்தபடி இருந்த அவை பின்னர் பிரிந்துசென்று காணாமல் போனது. அந்நகரை சேர்ந்த பெண் ஒருவர் இந்த காட்சிக…
-
- 0 replies
- 186 views
-
-
கருணைக் கொலை "காப்ஸ்யூலில்" உயிரிழந்த பெண்: சுவிட்சர்லாந்தை உலுக்கிய சம்பவம்! கருணைக் கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட சர்கோ பாட் எனும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 64 வயதுடைய அமெரிக்க பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து – ஜெர்மனி எல்லைக்கு அருகில் ஒரு வனப்பகுதியில் உள்ள தி லாஸ்ட் ரிசார்ட் என்ற பெயர் கொண்ட ரிசார்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காப்ஸ்யூல் வடிவில் இருக்கும் குறித்த சர்கோ பாட் இயந்திரத்துக்குள் நுழைந்து உள்ளே இருக்கும் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து நைட்ரஜன் வாயு வெளியாகும் எனவும் இதனால் ஆக்ஸிஜனைக் குறைத்து உள்ளே இருப்பவர் சில நிமிடங்களிலேயே உயிரிழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 186 views
-
-
Published By: SETHU 11 JUL, 2023 | 11:25 AM 'தம்ஸ் அப்' இமோஜி ஆனது கையெழுத்தாக செல்லுபடியாகும் என கனேடிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒப்பந்த படிவமொன்றுக்கு தம்ஸ்அப் இமோஜியை பதிலாக அனுப்பிவிட்டு, ஒப்பந்த்தை நிறைவேற்றாத நபருக்கு 82,000 கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சஸ்கட்சேவன் மாகாணத்தின் உயர் நீதிமன்றம் கடந்தவாரம் இத்தீர்ப்பபை அளித்துள்ளது. 2021 மார்ச்சில் கென்ட் மிக்கல்பரோ என்பவர், 86 தொன் ஆளிவிதை எனும் தானியத்தை வாங்குவதற்கு விளம்பரம் செய்திருந்தார். இது தொடர்பாக கிறிஸ் ஆச்சர் எனும் விவசாயியடன் மிகில்பரோ தொலைபேசியில் உரையாடினார். அதன்பின் ஒரு புசல் 17 டொலர்கள் வீதம் நவம்பர் மாதம் ஆ…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி 20 September 2025 மனிதர்களைக் கடந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை உண்டு என்பதை நிருபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று யாழ். மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சென்று பார்வையிடுவது வழக்கமானதொன்றாகும். அந்த வரிசையில் தனது எஜமானை பார்க்க நாய் ஒன்று சென்றுள்ள சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ். மருத்துவமனையின் 24 ஆம் இலக்க விடுதியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பதிவானதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைக்குள் எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் குறித்த ந…
-
- 0 replies
- 186 views
-
-
கனகராசா சரவணன் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு (ஐ லவ் யூ) தெரிவித்த அதே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக அந்த பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது; ஆண், பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் சம்பவதினமான நேற்று குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் (ஐ லவ் யூ) என தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
கழிப்பறை கட்டுமாறு காலில் வீழ்ந்து பிரசாரத்தில் ஈடுபடும் ஊராட்சித் தலைவர் இந்திய கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றில் வீட்டுகளில் கழிப்பறை கட்டுமாறு வலியுறுத்தி கர்நாடக ஊராட்சித் தலைவர் ஸ்ரீநிவாஸ் கர்தூரி காலில் வீழ்ந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் கங்கவாதி அருகே ராம்நகர் கிராமம் உள்ளது. இங்குள்ள 2,100 வீடுகளில் 441 பேரின் வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளது. பெரும்பாலானவர்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், கிராமமும் அசுத்தமடைகிறது. …
-
- 0 replies
- 185 views
-
-
உலகில் நம்ப முடியாத எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; செய்திகளில் படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். அப்படி ஒரு சம்பவம் பிரேசிலில் நடந்தது 2011, மே. பிரேசில். ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே இருக்கும் ஒரு தீவு. அந்த முதியவருக்கு வயது 71. பெயர், ஜோவோ பெரீரா டி சோஸா ( Joao Pereira de Souza). எப்போதாவது தோன்றினால், கடலுக்குச் சென்று மீன்பிடிப்பார். அன்றைக்கு மாலை நேரத்தில் கடற்கரைக்கு நடக்க சென்றார். முதுமை உடலைத் துளைத்திருந்தாலும், கடற்கரை மணலில் கால் புதைய நடப்பது சற்று சிரமமாக இருந்தாலும் கடற் காற்றும், அலை தெறித்து தன் மேல் விழும் சிறு நீர்த்துளிகளும் அவருக்குத் தேவையாக இருந்தன. மெல்ல நடந்தார். கடற்கரை ஓரமாக, மணல்வெளியில் ஏதோ ஒன்று கிடப்பதைப் …
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
Published By: SETHU 24 MAY, 2023 | 10:59 AM வெள்ளை மாளிகையின் பாதுகாப்புத் தடைகள் மீது மோதிய லொறியின் சாரதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வொஷிங்டன் டிசி நகரிலுள்ள வெள்ளை மாளிகையின் பாதுகாப்புத் தடைகள் மீது உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு ட்ரக் வண்டியொன்று மோதியது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாகனத்தை பொலிஸார் ஆராய்ந்தபோது, ஹிட்லர் தலைமையிலான நாஸிகளின் சுவஸ்திகா பதாகையொன்று அதில் காணப்பட்டது, இம்மோதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவ்வாகனத்தின…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
பிகார்: சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - வெளியே எடுத்த மருத்துவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,VIVEK படக்குறிப்பு,சிறுமி குணமடைய இன்னும் சில காலம் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர்,சிது திவாரி பதவி,பிபிசி செய்தியாளர் பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமியின் வயிற்றில் இருந்து, பெரிய முடிக் கொத்து ஒன்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சுமார் இரண்டு மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியில் எடுக்கப்பட்ட இந்த முடிக் கொத்தின் எடை ஒரு கிலோ. அதைத் தொடர்ந்து, முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைய…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
13 APR, 2025 | 10:38 AM யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக சனிக்கிழமை (12) அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https:/…
-
- 1 reply
- 184 views
- 1 follower
-
-
2017ல் பூனையாகிய டொனால்ட் டிரம்ப் 2018ல் நாயாக வடிவமைக்கப்பட்டு உள்ளார்.. சீனாவில் ஷாங்ஸி மாகாண தலைநகர் தையு யான் நகரில் உள்ள வியாபார கடைத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ராட்சத நாய் பொம்மை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது டிரம்ப் போன்று இடது கை விரலை மேலே தூக்கியபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவில் விலங்குகள் பெயரில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு நாய் புத்தாண்டு வருகிறது. அதை வரவேற்கும் வகையில் டிரம்ப் உருவத்தில் நாய் பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மையின் கண் இமைகள் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கழுத்தில் சிவப்பு …
-
- 0 replies
- 184 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், அல்பேஷ் கர்கரே பதவி, பிபிசி மராத்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பை காவலர் ஒருவரின் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மகன், ஒரு சிக்கலான குற்றத்தை எவ்வாறு தீர்த்தார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மும்பையின் நெரிசலான தாதர் ரயில் நிலையத்தில் ஒரு சூட் கேஸில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர், காது கேளாதவர்களாகவும், வாய் பேச முடியாதவர்களாகவும் இருந்தனர். இதனால், மும்பை காவல்துறை இந்த வழக்கை தீர்ப்பதிலும், விசாரணையிலும் பல சிரமங்களை எதிர்கொண்டனர். இறுதியாக, ஒரு மும்பையை சேர்ந்த காவலர் ஒருவரின் மகன் இந்த வழக்கின் மர்மத்தைத் தீர்த்தார். இந்த வழக்கு மும்பையில் உள்ள பைதுனி காவல் …
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
பூஜை பரிகாரத்தின் போது எலுமிச்சைப் பழம் தொண்டையில் சிக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அனுராதபுரம் பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியும் எஸ்.எம்.எச்.எம்.என்.சேனநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தப் பெண்ணின் உடலில் இருபதுக்கு மேற்பட்ட எரிகாயங்களும், அடிகாயங்களும் காணப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 36 வயதான குறித்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற வேளை குறித்த மந்திரவாதியினால் இந்தப்பெண்ணுக்கு எலுமிச்சம்பழம் ஒன்று விழுங்குவதற்கு வழங்கப்பட்டதாக உ…
-
- 0 replies
- 184 views
-
-
விபத்தில் உயிரிழந்த யாசகரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும் 5 வங்கி புத்தகங்களும் மீட்பு By T. SARANYA 08 NOV, 2022 | 11:58 AM புத்தளம் - சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த யாசகர் ஒருவர் 135,000 ரூபா பணத்தை வைத்திருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் - சிலாபம் வீதியில் ஆணைவிழுந்தான் பகுதியில் சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். ஆணைவிழுந்தான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனி…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
சவூதி தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் மட்டக்களப்பில் வேகமாக நடைபெற்று வரும் மதமாற்றம் [ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 03:36.28 PM GMT ] மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிய வருகின்றது. முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் சவூதியில் உள்ள தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடைபெற்ற வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு தினங்களில் எட்டுக் குடும்பங்கள் இவ்வாறு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வறுமையினை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட…
-
- 0 replies
- 183 views
-
-
உரும்பிராயில்... பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட, குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது! நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யோகபுரம் பகுதிக்கு சென்று இருந்தனர். அதன் போது அங்கு …
-
- 0 replies
- 183 views
-