செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7075 topics in this forum
-
இது இன்டர் போலில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் இருப்பவர் நெடியவனா இல்லையா என்பது அவரை தெரிந்தவர்களிற்க்கே வெளிச்சம். http://www.interpol.int/@en/Wanted-Persons/(wanted_id)/2012-4907
-
- 0 replies
- 588 views
-
-
130 ஆண்டு கால வரலாற்றில் ஜப்பானில்(japan) உள்ள பூஜி (Fuji )மலை சிகரத்தில் உள்ள பனி முழுவதுமாக உருகியுள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஜப்பானின் கண்கவரும் இயற்கை அழகுகளில் ஒன்றாக இருப்பது ஃபூஜி மலை சிகரம். சுமார் 12,460 அடி உயரம் கொண்ட ஃபூஜி சிகரமானது ஜப்பானின் மிக உயரமான சிகரம் மட்டுமல்லாது, ஜப்பானின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது உயரமான மலைச்சிகரம் மட்டுமல்ல உறக்கத்தில் இருக்கும் பெரிய எரிமலையும் ஆகும். எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும் இந்த ஃபூஜி சிகரத்தின் உச்சியில் எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும். ஆனால் அண்மைக்காலமாக ஜப்பானின் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை உயர்ந்த நிலையில், இந்த ஆண்டு வரலாறு காணாத விதமா…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
பூஜை பரிகாரத்தின் போது எலுமிச்சைப் பழம் தொண்டையில் சிக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அனுராதபுரம் பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியும் எஸ்.எம்.எச்.எம்.என்.சேனநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தப் பெண்ணின் உடலில் இருபதுக்கு மேற்பட்ட எரிகாயங்களும், அடிகாயங்களும் காணப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 36 வயதான குறித்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற வேளை குறித்த மந்திரவாதியினால் இந்தப்பெண்ணுக்கு எலுமிச்சம்பழம் ஒன்று விழுங்குவதற்கு வழங்கப்பட்டதாக உ…
-
- 0 replies
- 184 views
-
-
[size=4] உளவு நடவடிக்கைகள் மூலம் தகவல் சேகரிப்பு, எதிரிகளின் திட்டங்களை முறியடித்தல், எதிரி நாட்டிற்குள் ஊடுருவல், எதிரியின் கேந்திர நிலைகள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இதை விடத் திரைமறைவு நடவடிக்கைகள் என்ற பகுதியும் இருக்கிறது.[/size][size=4] திரைமறைவு நடவடிக்கைகள் புலனாய்வுத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது பற்றிப் பெரிதாகப் பேசப்படுவதில்லை, ஏனெற்றால் அது மிகவும் இரகசியமாக நடத்தப்படுகிறது. ஆனால் அப்படியானதொரு நடவடிக்கை இருப்பது நூறு விழுக்காடு உண்மை.[/size][size=4] உலகின் முக்கிய உளவமைப்புக்கள் திரைமறைவு எனப்படும் இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இந்த வகை நடவடிக்கை (Clandestine Activities) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க சிஜஏ அ…
-
- 0 replies
- 723 views
-
-
களுத்துறை – அத்துளுகமையில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2ம் திகதி அத்துளுகமை பகுதியில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு சென்ற சுகாதார பரிசோதகர் மீது இவர் எச்சில் துப்பியிருந்தார். இந்நிலையில் பாணந்துறை நீதிமன்றால் இன்று (21) மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இவருக்கு ஆறு ஆண்டுகள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/பி-எச்-ஐ-மீது-எச்சில்-துப்/
-
- 0 replies
- 374 views
-
-
விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகொப்டர், கியாஸ் பலூன், ரொக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின. தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி தானாகவே வானில் பறக்கும் யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக 1இலட்சம் டொலர் செலவில் விசேஷ உடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நியூசிலாந்தை சேர்ந்த நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். பறக்கும் விசேஷ உடை 2 சிலிண்டர்களை கொண்டது. அதில் முன்னோக்கி தள்ளக்கூடிய காற்றாடிகள் உள்ளன. அவை கார்பன் இழையால் ஆன சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சட்டையை வானில் பறப்பவர் முதுகில் மாட்டிக் கொண்டு அதில் உள்ள பட்டை வாரினால் இறுககட்டிக் கொள்ள வேண்டும். பறக்கும் போது அதில் உள்ள 2 கைப்பி…
-
- 0 replies
- 626 views
-
-
கடவுளுடன் ஒரு #பேட்டி: ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது எனக்கு... “உள்ளே வா” – அழைத்த #கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” கடவுள் சிரித்தார். “என் நேரம் முடிவற்றது எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?” “மனித இனத்தில் உங்களை ஆச்சரியப்படுத்துவது எது?” கடவுள் சொன்னார்… “மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான். பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்! எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பத…
-
- 0 replies
- 519 views
-
-
கூரையைப் பிய்த்துக் கொட்டிய அதிர்ஷ்டம் ஹொரணைப் பிரதேசத்தில் பழைய பத்திரிகைகளைக் கொள்வனவு செய்யும் தொழிலில் ஈடுபடுவருக்கு எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. 100 ரூபா கொடுத்து வாங்கிய பழைய பத்திரிகைக்குள் 5 ஆயிரம் ரூபா தாள்கள் 60 கிடைத்துள்ளன. 100 ரூபா கொடுத்து வாங்கிய பழைய பத்திரிகைக்குள் 3 லட்சம் ரூபா பணம் இருந்துள்ளது. அந்த நபர் தனக்குக் கிடைத்த பணத்தை உரிமை யாளரிடம் ஒப்படைத்துள்ளார். ஹொரணை நகர்ப் பகுதியில் பழைய பத்திரிகைகளைச் சேகரிக்கும் போது அந்தப் பகுதியில் பெண்ணொருவர் 10 கிலோ கிராம் பழைய பத்திரிகைகளை 100 ரூபாய்க்கு விற்றுள்ளார். பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்ட பத்திரிகை களைத் தரம் பிரித்தபோது, அதற்குள் 3 லட்சம் ரூபா பெற…
-
- 0 replies
- 344 views
-
-
http://www.nerudal. com/nerudal. 16844.html ஈழத்தமிழர்கள் வாழ்வு செய்தியாகவே முடியவேண்டாம் இவ் விடயம் 05. 06. 2010, (ஞாயிறு), தமிழீழ நேரம் 19:40க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. என்பது பற்றிய செய்தி. எவ்வளவு இருக்கிறதோ, அதை விட பலமடங்கு ஈழத்தைப் பற்றிய அதிர்ச்சி செய்திகள் உலகம் முழுவதும் சென்று, செய்தியாகவே முடிந்துகொண்டிருக்கிறது. கிளிநொச்சி, கணேசபுரத்தில் அடுத்தடுத்து மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, அதன் மூலத்தை அறிந்து உண்மையை வெளிக்கொண்டுவர எவராலும் எந்த நாட்டாலும் முடியவில்லை, எந்த விடயத்தை தொட்டு செய்தி வந்ததோ அந்த விடயத்தை அப்படியே வி…
-
- 0 replies
- 602 views
-
-
மாப்பிள்ளைகளா, இனி வேட்டிய கட்ட வேண்டாம், ஒட்டினால் போதும் சென்னை: விழுப்புரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று மாடர்ன் மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்று நவீன கால மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. திருமணம் என்றால் மாப்பிள்ளைகள் நிச்சயம் வேட்டி கட்ட வேண்டும். தற்போது ஜீன்ஸ் பேண்ட் போட்டு பழகியவர்களுக்கு இடுப்பில் வேட்டி நிற்க மறுக்கிறது. இதனால் பெல்ட் போட்டு வேட்டி கட்டுகிறார்கள். மாப்பிள்ளைகளா, இனி வேட்டிய கட்ட வேண்டாம், ஒட்டினால் போதும் இந்த பிரச்சனை தீர்க்க மாடர்ன் மாப்பிள்ளைகளுக்கான வேட்டியை அந்த கடை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேட்டியில் செல்போனை வைக்க பா…
-
- 0 replies
- 870 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 20 ஏப்ரல் 2023, 05:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் குழந்தையாக இருக்கும்போது, தனது பெற்றோருடன் மொடெனா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கத்தோலிக்க ஜெபக் கூட்டங்களில் பங்கேற்பதை கேப்ரியல் அமோர்த் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நகரம் இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரார்த்தனையில் கவனம் செலுத்தாமல், சிறுவயது குழந்தைகளுக்கே உள்ள குறும்புத்தனத்துடன் தேவாலயத்தை சுற்றி கண்ணாமூச்சி விளையாடுவதில் அவர் ஆர்வம் செலுத்தினார். அதேவேளையில், அவரது நன்னடத்தைக்காக அம்மா இனிப்புகளை வழங்கும்போது சமத்தாகிவிடுவார். தனது குறும்புக்கார மகன் உலகின் …
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
சமூக வலைதளமான பேஸ்புக்கில் ’லைக்’ வாங்கும் மோகத்தினால் பலர் ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு உயிரிழப்பதும், சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக பணிநீக்கம் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அமெரிக்காவின் பரபரப்பான சிகாகோ விமான நிலையத்தில் வழக்கம் போல், விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏறத் தொடங்க, அந்த விமானத்தின் பணிப்பெண்களில் ஒருவரான எரிக்கா(41), விமானத்தின் எஞ்ஜினுக்குள் திடீரென ஏறி நின்றுகொண்டு விதவிதமாக ‘போஸ்’ கொடுக்க தொடங்கினார். என்ஜினுக்குள் எரிக்கா நிற்பதும், அவரை தோழி ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின், புகைப்ப…
-
- 0 replies
- 442 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழீழத்தின் கதையும் முடிந்துவிட்டது என்று சிலர் கற்பிதம் செய்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். அதற்கும் அப்பால், விடுதலைப் புலிகளது அரசியல் தெளிவின்மையே அவர்களது அழிவுக்குக் காரணம் என்று கதை சொல்லவும் ஆரம்பித்துள்ளார்கள். தமிழீழம் என்பது இனிமேல் சாத்தியம் இல்லை, சிங்கள தேசத்துடன் இணங்கிப் போவதனூடாகக் கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற புத்திமதிகளும் கூறப்படுகின்றது. தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றமும், பௌத்த விஸ்தரிப்பும், இராணுவ அடக்குமுறையும், கலாச்சாரச் சீரழிவுகளும் உச்சம் பெற்றுள்ளன. இதிலிருந்து மக்களை மீட்பதற்காக தற்போதைக்கு கிடைக்கக்கூடிய மாகாண சபைகளையாவது பெற்றுக்கொண்டு, பின்னர் அடுத்த கட்டம் பற்றி யோசிக்கலாம் என்ற அருளுரைகளும், ஆசியு…
-
- 0 replies
- 382 views
-
-
பிரான்ஸ் நாட்டில் இரட்டை சகோதரிகள் 2 பேர் தங்களது நூறாவது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள ஃபே - டி- ப்ரெடக்னே நகரில் கடந்த 1919ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இருவரும் பிறந்தனர். அவர்களின் பெயர், மேரி லீமேரி, ஜெனிவிவிபோலிகான்ட் ஆகும். அவர்களின் நூறாவது பிறந்த தினம் உறவினர்கள், நண்பர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு, சகோதரிகள் 2 பேரும் கேக்குகளை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். மதுபழக்கம் இல்லாதது, குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது ஆகியவையே தங்களது நீண்ட நாள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமென்று சகோதரிகள் 2 பேரும் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 321 views
-
-
300 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் வாக்குமூலம்! சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் ஜோல் லே மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் குறித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த 300 பேரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளதுடன் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களும் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தான் மிகவும், அருவறுக்கத்தக்க செயல்களை செய்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகத் தான் மிக மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் அடைந்த காயங்க…
-
- 0 replies
- 140 views
-
-
நாம் வாழும் இந்த பூமியில் மிக நீண்ட ஒற்றை தூரம் ஒன்றில், நாம் நடக்க துவங்கினால் இறுதியில் எவ்வளவு தூரம் நடந்திருப்போம் தெரியுமா.? அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. பூமியில் மிக நீண்ட தூரம் நடக்கக்கூடிய ஒற்றை தூரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 14,000 மைல் தொலைவில் உள்ளது. தென் ஆப்பிரிக்கவின் கடலோர கிராமமான எல் அகுல்ஹாசிலிருந்து வடக்கு ரஷியாவின் மகடான் நகர் வரை உள்ள தூரமே, மனிதன் அதிகபட்சமாக நடந்து செல்ல கூடிய தொலைவாக தற்போது கணக்கிடப்பட்டுள்ளது. 14,000 மைல்கள் தொலைவுடைய இந்த தூரத்தை நடந்தே கடக்க 3 ஆண்டுகள் ஆகும். மேற்கண்ட பயணத்தை மேற்கொள்ளும்போது தென்படக்கூடிய ஆறுகளை கடக்க கூட படகை பயன்படுத்த தேவை இல்லை. ஏனெனில் முழு வழியும் பாலங்களை கொண்ட சாலைகளால் ஆனது.…
-
- 0 replies
- 879 views
-
-
ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கழுகு தனித்திருத்தல் பற்றி நமக்கு கற்றுத்தரும் பாடம் என்னவென்பதை பார்ப்போம். கழுகு என்பது அக்சிபிட்ரிடே என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை…
-
- 0 replies
- 636 views
-
-
சென்னை: அலகாபாத் கும்பமேளாவில் எத்தனையோ சாமியார்கள், விதம் விதமான சாமியார்கள் கங்கையில் முழுக்குப் போட்டுச் சென்றனர் கும்பமேளாவின்போது. நமது நித்தியானந்தாவும் கூட அவர்களில் ஒருவராக தனது சிஷ்யப் பிள்ளைகள் புடை சூழ வந்து குளித்து விட்டுப் போனார். பல்வேறு பாஷைகளும் புழங்கிய அந்த இடத்தில், ஆர்யா நடித்த தமிழ் சினிமாப் படமான 'நான் கடவுள்' படத்தி்ல இடம் பெற்ற 'ஓம் சிவோஹம்...' என்ற பாடலை அந்த இடத்தில் ஒலிக்க வைத்து அசத்தினார். மகா கும்பமேளாவின்போது புனித நீராடுவதற்காக 3 கோடி பேர் வரை திரண்டதாக ஒரு புள்ளி விவரத் தகவல் சொல்கிறது. ஆனாலும் அந்த கோடியில் ஒருவராக, அனைவரையும் பளிச்சென கவர்ந்தவர் நம்ம நித்தியானந்தாதான். தனது ஆதரவுப் பரிவாரங்களுடன் ரவுண்டு அடித்துக் கலக்கி விட்டார் கும்பம…
-
- 0 replies
- 516 views
-
-
பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர் பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று, இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்து பின்னர் கட்டாய திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலம் ஆக கூறப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வசித்து வருபவர் அலி அசார் (வயது 44). இவர் அர்ஜூ ராஜா என்ற 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு பிறந்த சிறுமியின் பள்ளி ஆவண பதிவிலும், சர்ச்சில் உள்ள ரெஜி…
-
- 0 replies
- 316 views
-
-
சிக்கிமில் 82 வயது மூதாட்டி ‘பாராகிளைடரில்’ பறந்து சாகசம் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராங்கா என்று சிறு நகரத்துக்கு அருகில் பாராகிளைடிங் முனை அமைந்திருக்கிறது. அங்கிருந்து, 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற அந்த மூதாட்டி பாராகிளைடரில் பறந்தார். வானில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்த அவரை, கீழிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிக்கிம் பாராகிளைடிங் சங்கத்தினர் ஆரவார ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். சிக்கிம் மாநிலத்தில் பாராகிளைடரில் பறந்த மிக அதிக வயதுள்ளவர் லேப்ச்சாதான் என்று அம்மாநில பாராகிளைடிங் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்குமுன், ஒரு 68 வயது ஆண் அந்த சாதனைக்குச் சொந்தக்…
-
- 0 replies
- 395 views
-
-
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பேராசிரியரை, ஒசாமா பின்லேடன் போல் உள்ளதாக கூறி, மர்ம கும்பல் தாக்கியது. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வெளியுறவு துறை பேராசிரியராக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் பிரப்ஜோத்சிங் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு ஹர்லோம் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்தது. நீ ஒசாமா பின்லேடன் போல் இருக்கிறாய்? நீ தீவிரவாதியா என கேட்டு, அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பற்கள் உடைந்தன. படுகாயமடைந்த பிரப்ஜோத்சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, அவரது நண்பரும், பிஎச்டி ஆய…
-
- 0 replies
- 251 views
-
-
டோக்கியோ: தான் வளர்த்து வரும் 120 பூனைகளுக்கு உணவளிப்ப்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைத் திருடிய நபர் ஒருவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள இசுமி நகரைச் சேர்ந்தவர் 48 வயது மமோரு டெமிஸ் என்ற நபர். வருமானத்திற்கென வேலை எதையும் செய்யாத இந்நபர், வீட்டில், தெருவிலும் என மொத்தமாக கிட்டத்தட்ட 120 பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். பூனைகளை தனது நண்பர்களைப் போல் பாவித்து வளர்த்த டெமிஸ், அவற்றிற்கு உணவிடுவதற்காக இதுவரை 32 இடங்களில் கொள்ளையடித்துள்ளாராம். இதுவரை அவர் கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு, 185 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ ஒரு கோடியே 14 லட…
-
- 0 replies
- 477 views
-
-
ஆசிரியர் அறைந்ததால்... செவிப்பறை பாதிப்பு – யாழ் வைத்தியசாலையில், மாணவன்! ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள பிரபல கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283212
-
- 0 replies
- 227 views
-
-
மேட்டூர் : கிராமத்தில் உள்ள பக்தர்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிப்பதற்கு கோவிலை சுற்றி உலவும் பேய்களே காரணம் என குறி சொன்னதால், நேற்று பக்தர்கள் கோவிலில் இருந்து பேயை விரட்டி அம்மனுக்கு பூஜைகள் செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, சாம்பள்ளி கோயில்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் நான்கு மாதத்திற்கு முன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகம் நடத்திய பின், விழா குழுவினர் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு என்ன காரணம் என கிராம மக்கள் சிலர் ஒரு சாமியாரிடம் குறி கேட்டுள்ளனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய போதிலும், கெட்ட ஆவி ஒன்று கோவிலை சுற்றி உலவுவதால் அம்மனால் பக்தர்களுக்கும், கிராமத்திற்கும்…
-
- 0 replies
- 492 views
-
-
பசுக்களுக்கு ஆதார் அட்டை மத்திய அரசு முடிவு - புகைப்படம், ரேகை ஸ்கேனிங் எல்லாம் உண்டாம்...! டெல்லி: முதல்கட்டமாக 50 கோடி செலவில் 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமளவு ஏற்பட்டது. பசு கடத்தல் காரர்கள், இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர் என பசுவின் உரிமையாளர்கள் …
-
- 0 replies
- 219 views
-