செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
என்ன இத்தனை மூக்குத்தி போட்டிருக்கீங்க, காதுல இத்தனை ஓட்டை போட்டிருக்கீங்க, நாக்குல வேற ஏதோ ஒட்டிகிட்டிருக்கு என்று கமெண்ட் அடிக்கும் முன் இதை ஒரு முறை பாருங்கள். இனிமே யாரையும் கிண்டலே பண்ன மாட்டீங்க ஆமா.. சுவாசிக்கவாச்சும் கொஞ்சம் gap இருக்கா ?? என்ன பெண்கள் மட்டும் தான் முகத்துல ஏதாச்சும் குத்திக்கணுமா ? எங்களுக்கு உதடு, மூக்கு ஏதும் இல்லையா என்று குத்துக் களத்தில் குதித்திருக்கிறான் நம்ம இந்தியன் Pratesh Baruah . sirippu.com
-
- 4 replies
- 1.3k views
-
-
வேகத்திற்கு தண்டனை . . வியன்னா, மார்ச்.13: வேகமாக கார் ஓட்டிச் சென்று, அபராதம் செலுத்தியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரியா வில் டாக்டர் ஒருவர் மிகவும் மெதுவாக கார் ஓட்டி சென்று பிட்சாவால் அடி வாங்கியிருக் கிறாராம். . பொறுப்புணர்ச்சி மிக்க அந்த டாக்டர், தனது இயல்புபடி மெதுவாக காரோட்டி சென்று கொண்டிருந்தா ராம். அவருக்கு பின்னே வந்து கொண்டிருந்த லாரி டிரைவர் ஒருவர் இப்படி டாக்டரின் கார் மந்தமாக சென்றதால் வெறுத்துப் போய் அவரை முந்தி சென்றாராம். முந்தி கொண்டு செல்லும் போது தன்னிடம் இருந்த பிட்சாவை எடுத்து காரிலிருந்த டாக்டர் மீது வீசி விட்டு சென்றாராம். இதனால் திகைத்துப் போன டாக்டர் போலீசில் புகார் செய்தாராம். ஆனால் காவலர்களோ கல்லை வீசினால்…
-
- 2 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்து சிறுவனின் உயிரைக் காக்கும் வயாகரா! வியாழக்கிழமை, மார்ச் 13, 2008 லண்டன்: வாலிப, வயோதிகர்களுக்கு 'தெம்பைக்' கொடுக்கப் பயன்படும் வயகாரா, 2 வயது சிறுவனின் உயிரைக் காத்து வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ஆலிவர் ஷெர்வுட். இவனுக்கு அரிய நுரையீரல் ரத்த அழுத்த நோய் உள்ளது. இதற்காக இவனுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து என்ன தெரியுமா?. வயாகரா! தினசரி நான்கு டோஸ் வயகாரா சாப்பிட்டு வருகிறான் ஷெர்வுட். இதனால் அவனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது. ஷெர்வுட்டுக்கு வந்துள்ள நோயால் அதீத ரத்த அழுத்தம் ஏற்படும். சாதாரண மார்புத் தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆனால் வயாகரா சாப்பிடுவதன் மூலம்…
-
- 0 replies
- 936 views
-
-
‘மகளிர் தின விழா வெறும் கொண்டாட் டத்துடன் நிற்காமல், பெண்களுக்கு பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளாக இருந்தால் நன்றாக இருக்கும்’ என கல்லுõரியில் படித்துக் கொண்டே சுயதொழில் செய்து சாதிக்கத் துடிக்கும் மாணவிகள் தெரிவித்தனர். வருங்கால இந்தியா, இளைஞர்கள் கையில் என்பதை விட, இளைஞிகள் கையில் என்றால் அது மிகை ஆகாது! அடுப்பூதும் பெண்களுக்கு என்ற காலம் போய், தற்போது நிறைய குடும்பங்களின் பொருளாதாரத்தை தாங்கி நிற்பதே பெண்களாகத் தான் உள்ளனர். சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லுரரியில் படிக்கும் பல பெண்கள், படிக்கும் போதே சுயதொழில் செய்து அசத்தி வருகின்றனர். தங்களுடைய சம்பாத்தியத்தை படிப்புக்கு மட்டுமின்றி குடும்ப செலவுக்கும் கொடுத்து உதவி வருகின்றனர். கல்லுரரியில் இ…
-
- 7 replies
- 1.6k views
-
-
இளவரசரின் ஓட்டம் . Wednesday, 12 March, 2008 04:05 PM . டோக்கியோ, மார்ச்.12: பாதுகாப்பு கவலை அதிகரித் தாலும் பயிற்சி செய்வதை விட மாட்டேன் என்று ஜப்பான் இளவரசர் உறுதி பூண்டிருக்கிறாராம். ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த வாரிசான நரூஹிடோ உடற்பயிற்சி யில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். . தினந்தோறும் காலையில் ஜாகிங் செய்வது இவரது வழக்கம். ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மற்றவர்களை போல இவரால் சாலையில் சுதந்திரமாக ஓட முடியாது அல்லவா? இவர் செல்லுமிடமெல்லாம் பாதுகாவலர் உடன் வருவது வழக்கம். இப்படி தன்னை சுற்றி பாதுகாப்பு வளையம் எப்போதும் இருந்தாலும் கூட இளவரசர் காலை நேர ஓட்டத்தை தவற விடுவ தில்லையாம். பாதுகாவலர்கள் படைச்சூழ அவர் தினமும் ஓட்டப் பயிற்சி மேற…
-
- 1 reply
- 819 views
-
-
அழகிய மரமே... . Tuesday, 11 March, 2008 04:02 PM . நியூயார்க், மார்ச்.11: வண்ண வண்ண பூக்களை போல அமெரிக்காவில் உள்ள கிராமம் ஒன்றில் வண்ண வண்ண மரங்கள் காண்போரை வியக்க வைத்து வருகிறதாம். அந்த கிராமத்தில் பல வண்ணங் களில் வினோதமான மரங்கள் இருப்பதாக நினைக்க வேண்டாம். மாமூலாக எல்லா இடங்களிலும் பார்க்கக் கூடிய மரங்கள்தான் அங்கேயும் இருக்கின்றனவாம். . ஆனால் அந்த ஊரை சேர்ந்த மக்கள் தங்கள் கையால் பின்னிய பல வண்ண ஸ்வெட்டர்களை அங்குள்ள மரங்களுக்கு அணிவித் திருக்கின்றனராம். இதன் காரணமாக மரங்கள் பல நிறங்களில் காட்சி அளிக்கின்றனவாம். புதுமையான கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு அந்த ஊர் வாலிபர் ஒருவர் இப்படி ஸ்வெட்டர் அணிவிக்கும் பழக்கத்தை துவக்கி வை…
-
- 0 replies
- 716 views
-
-
மனைவியிடம் கஞ்சத்தனம் ஒரு லட்சம் ரோஜா வழங்க தண்டனை டெக்ரான் :கஞ்சத்தனத்தை மனைவியிடம் காட்டிய கணவருக்கு ஈரான் நீதிமன்றம் ஒன்றே கால் லட்சம் ரோஜா பூக்களை வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. ஈரான், தலைநகர் டெக்ரான் நகரைச் சேர்ந்தவர் ஹெங்காமேஹ். இவரது மனைவி சாஹீன். 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஹெங்காமேஹ் கஞ்சத்தனம் மிக்கவர். திருமணமான சில நாட்களிலே அவரது மனைவி இதை கண்டுபிடித்தார். ஓட்டலில் காபி சாப்பிட மனைவியுடன் சென்றாலும், தான் சாப்பிடுவதற்கு மட்டும் பில் தொகையைக் கொடுத்து விட்டு வெளியேறிவிடுவார். மனைவி சாப்பிடுவதற்கு பணம் கொடுக்க பிடிவாதமாக மறுத்துவிடுவார். பல ஆண்டுகளாக பொறுத்துப்போன சாஹீன், வெறுத்துப்போய், திருமணத்தின் போது கொடுத்த வரதட்சணையை …
-
- 29 replies
- 4.8k views
-
-
ஆந்தையின் ஆசை . Monday, 10 March, 2008 03:50 PM . லண்டன், மார்ச்.10: பிரிட்டனில் விலங்கியல் பூங்கா ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் ஆந்தைக்கு சைக்கிள் சவாரி மீது ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். அந்த பூங்காவில் பணியாற்றும் ஜென்னி ஸ்மித் என்பவர் எப்போது வெளியே சென்றாலும் அவரது சைக்கிள் மீது அங்கே இருக்கும் ஆந்தை வந்து அமர்ந்து கொள்கிறதாம். . இப்படி ஆந்தையோடு அவர் சைக்கிள் சவாரி செய்வதை பலரும் வியப்போடு பார்க்கின்றனராம். முதல் முறையாக சைக்கிள் சவாரி செய்ய தொடங்கியதிலிருந்து அந்த ஆந்தை அவரை தனியே சைக்கிளில் செல்ல அனுமதிப்ப தில்லையாம். தப்பி தவறி விட்டுச் சென்றாலும் கத்தி தீர்த்து ரகளை செய்து விடுகிறதாம். இப்போது ஆந்தையின் ஆசை காரணமாக அவர் பலமுறை சைக்கிள் பய…
-
- 2 replies
- 1.1k views
-
-
பறக்கும் ஆடை . Sunday, 09 March, 2008 03:40 PM . நியூயார்க், மார்ச்.9: ஆடையில் புதுமை என்று சொல்லக் கூடிய வகையில் அமெரிக்க வடிவமைப்பாளர்கள் முழுக்க முழுக்க பலூன்களை கொண்டே ஆடைகளை உருவாக்கி உள்ளனராம். . நீச்சல் உடையில் தொடங்கி உள்ளாடைகள் என பல வகை ஆடைகளை இப்படி பலூன்களை கொண்டே தயாரித்துள்ளனராம். ஒரு முழு ஆடை தயாரிக்க 300க்கும் மேற்பட்ட பலூன்கள் தேவைப்படுகிறதாம். இந்த ஆடையில் என்ன விசேஷம் என்றால் இவற்றை ஒரேயொரு முறை மட்டும்தான் அணிய முடியுமாம். இந்த கட்டுப்பாட்டையும் மீறி பேஷன் விரும்பிகள் இந்த பறக்கும் ஆடையை விரும்பி வாங்கி அணிந்து வருகின்றனராம். இந்த பலூன் ஆடைகளை பிரபலமாக்குவதற்காக என்று நியூயார்க் நகரில் அண்மையில் பேஷன் ஷோ ஒன்றும் நடத்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
`மரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர் விக்ரர் போட் கைது [08 - March - 2008] * `கடல்கோளின் பின் இலங்கைக்கு வந்து சென்றவர்' `மரணத்தின் வியாபாரி'யெனவும் `யுத்தப் பிரபு' என்றும் வர்ணிக்கப்பட்டவரும் உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர்களில் ஒருவருமான விக்ரர் போட் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் லெப்டினன்டான விக்ரர் போட் பழைய சோவியத் ஒன்றியத்தின் விமானங்களில் லைபீரியா தொடக்கம் ஆப்கானிஸ்தான் வரையில் யுத்த களங்களுக்கு சென்று வந்தவராவார். தலிபன்கள், அமெரிக்க அரசாங்கம், ஆபிரிக்க யுத்தப் பிரபுக்கள், ஐ.நா. என்பன விக்ரர் போட்டின் வாடிக்…
-
- 0 replies
- 842 views
-
-
கணவர் கேலி செய்ததால் 2 பெண் குழந்தைகளைக் கொன்ற தாய் கொல்கத்தா: பெண் குழந்தைகளாக பெற்றுள்ளாயே என்று கணவர் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண், தனது இரு பெண் குழந்தைகளையும் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார். மேற்கு வங்க மாவட்டம் பர்த்வான் மாவட்டம், சகரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சீமா சோய். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், ஹெளரா மாவட்டம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் வளாகத்தில் உள்ள குளத்தில் இரண்டு பெண் குழந்தைகளின் (ஒரு குழந்தைக்கு 4 வயது, இன்னொன்றுக்கு 7 மாதம்) உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது அவை இரண்டும் சீமா சோயின் குழந்தைகள் எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் சீமா சோயிடம் விசாரித்தபோது அ…
-
- 14 replies
- 2.1k views
-
-
விமானத்தில் நிர்வாண பயணம் அலைமோதுகிறது கூட்டம் நிர்வாணத்தை விரும்புவோருக்காக, பிரத்யேகமாக இயக்கப்படும் விமானத்தில் டிக்கெட் எடுக்க, உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒஸ்ஸிஉர்லாப் என்ற சுற்றுலா நிறுவனம், இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஜெர்மன் நாட்டவர்கள், இயற்கையான பகுதிகளில் நிர்வாணமாக இருப்பதை விரும்புபவர்கள். இதற்கென்றே உள்ள நிர்வாண கடற்கரையில் இவர்கள் அவ்வப்போது திரள்வது வழக்கம். இவர்களுக்காக பிரத்யேகமான இடத்தை தேர்வு செய்துள்ளது ஒஸ்ஸிஉர்லாப் நிறுவனம். இந்த விமானங்களில், பயணிப்பவர்கள், நிர்வாணமாக செல்லலாம். ஆனால், விமான இருக்கைகளில் உட்கார்ந்து செல்லும் போது, அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடாது என்பதற…
-
- 5 replies
- 1.6k views
-
-
மர்ம ஓவியர் புது முயற்சி . Friday, 07 March, 2008 11:07 AM . லண்டன், மார்ச். 7: லண்டனில் யாருக்கும் தெரியாமல் ஓவியங்களை வரைந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் மர்ம ஓவியர் ஒருவர் பிளாஸ்டிக் பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறாராம். . லண்டனில் உள்ள கட்டிடம் ஒன்றின் சுவரில் கொடிக் கம்பத்தில் கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக் கேரி பேக் பறப்பது போலவும், அதற்கு முன் இரண்டு சிறுவர்கள் அதை பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி ஏற்பது போலவும் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். இந்த ஓவியம் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவது மட்டுமின்றி சிந்திக்க வைப்பதாகவும் அமைந் துள்ளதாம். malaisudar.com
-
- 0 replies
- 783 views
-
-
-
மணக்கும் தண்டனை . Tuesday, 04 March, 2008 04:24 PM . டெஹரான், மார்ச்.4: ஈரான் நாட்டில் மனைவிக்கு ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரோஜா மலர்களை வாங்கி தர வேண்டும் என்று கணவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாம். . ஈரான் நாட்டில் மனைவிகளுக்கு கணவன்மார்கள் வரதட்சணை அளிக்கும் பழக்கம் இருக்கிறதாம். திருமணத்தின் போது கணவன்கள் வரதட்சணை பற்றி உறுதி அளிப்பார்களாம். இதே போல பெண்மணியின் கணவன் ஒருவர் அவருக்கு ரோஜா மலர்களை வாங்கி தருவதாக கூறியிருக்கிறாராம். திருமணத்திற்கு பிறகு மிகவும் கஞ்சனாகி விட்டாராம். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்த கணவனால் வெறுத்துப் போன அந்த பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறாராம். நீதிபதி ஒரு லட்சத்து 24 ஆயிரம் …
-
- 1 reply
- 970 views
-
-
இலங்கையில் நடந்த கொடுமை . Monday, 03 March, 2008 03:28 PM . கொழும்பு,மார்ச்.3: இலங்கையில் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணி மற்றும் அவரது இரண்டு வயது மகன் பஸ்சிலிருந்து கீழே பிடித்து தள்ளப்பட்டனர். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வடுல்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. . பஸ்சில் பயணம் செய்த 28 வயது பெண் மற்றும் அவரது 2 வயது மகன் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் பஸ்சிலிருந்து கீழே பிடித்து தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அந்த இருவரும் பிடித்து தள்ளப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. malaisudar.com
-
- 0 replies
- 948 views
-
-
பாதியில் நின்ற பாதயாத்திரை . Monday, 03 March, 2008 12:50 PM . லண்டன், மார்ச்.3: லண்டனிலிருந்து காந்தி பிறந்த மண்ணிற்கு பாதயாத்திரை தொடங்கிய இளைஞர் ஒருவர் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தனது பயணத்தை பாதியிலேயே நிறுத்தி கொண்டு விட்டார். . கையில் காசு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் கால்நடையாக புறப்பட்ட முன்னாள் தொழிலதி பரான மார்க் பாய்ல் என்ற அவர் பிரான்சில் உள்ள கலாய்ஸ் என்ற இடம் வரை நடந்து வந்தாராம். பிரெஞ்சு மொழி தெரியாத அவர் தங்கள் நாட்டிற்கு அடைக்கலம் நாடி வந்ததாக சிலர் நினைத்து கொண்டு விட்டார்களாம். தனது நோக்கம் குறித்து அவர்களிடம் எடுத்து கூற இயலாத நிலையில் தனது பயணத்தையே ரத்து செய்து பிரிட்டனுக்கே திரும்பி கொண்டிருக்கிறாராம் பாய்ல். malais…
-
- 0 replies
- 738 views
-
-
குடும்ப மீட்பர் . Sunday, 02 March, 2008 11:38 AM . பெய்ஜிங், மார்ச்.2: சீனாவை சேர்ந்த மனிதர் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் காப்பாற்றிய நபரின் மகனை தற்போது மீண்டும் காப்பாற்றி இருக்கிறாராம். . சீனாவில் உள்ள தன்யாக் எனும் நகரில் அமைந்துள்ள ஏரியில் சிறுவன் ஒருவன் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்த வாங் என்பவர் ஓடோடிச் சென்று அந்த சிறுவனை காப்பாற்றினாராம். பின்னர் அந்த சிறுவனின் தாத்தா அங்கே வந்தபோது, அவனை காப்பாற்றிய வாங்கை பார்த்து நெகிழ்ந்து போய் விட்டாராம். காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அதே ஏரியில் சிறுவனின் தந்தை மூழ்க இருந்தபோது அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறாராம். அன்று தனது மகனின் உயிரை காப்பாற்றிய வாங் இன்று பேரனின் உயிரையும் …
-
- 2 replies
- 1.1k views
-
-
மனோதத்துவம் :தூங்கும் "போஸ்' குணத்தை காட்டும்! நீங்கள் தினமும் படுக்கையில் எப்படி படுப்பீர்கள்? நீங்கள் நன்றாக தூங்கும் போது, பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தான் தலையை, கால்களை நீட்டியபடி படுப்பீர்கள். அதை வைத்து, மனோ ரீதியாக உங்கள் குணத்தை சொல்ல முடியும் என்று மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதோ சில "போஸ்'கள்: அதற்கேற்ற குணங்கள்: *பக்கவாட்டில் சுருங்கி படுப்பது: வெளியில் பார்ப்பதற்கு தோற்றத்தில் கடுமையாக இருப்பார்; ஆனால், இதயத்தில் மென்மையானவர். ஆண்களை விட, பெண்கள் தான் அதிகம் பேர் இந்த "போசில்' தூங்குவர். *லேசாக தலை சாய்த்து: இந்த பாணியில் தூங்குவோர், எதையும் ரொம்ப "ஈசி'யாக எடுத்துக்கொள்வர்; டென்ஷன் ஆக மாட்டர். நாலு …
-
- 5 replies
- 2.3k views
-
-
லண்டன் : உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான "வெர்ஜின் அட்லாண்டிக்' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,மாற்று எரிபொருளாக,பயோ எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான முயற்சியில்,வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்( தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது) ஆகியவற்றின் கலவையில் உருவான புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது.லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து,நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த …
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கையில் மதுபாவனை வீதம் கணிசமான அளவு உயர்வு [saturday March 01 2008 11:01:21 PM GMT] [யாழ் வாணன்] 2006ஆம் ஆண்டு மதுபாவனை வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது . இது 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 78% வீத அதிகரிப்பு என தேசிய அபாயகர போதைவஸ்து ஒழிப்பு சபை புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் மதுபான வகைகள் 14% வீதத்தால் அதிகரித்துள்ளது . கடந்த காலங்களில் மதுபான வகைகளின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. tamilwin.com
-
- 2 replies
- 956 views
-
-
44-லிலும் குத்துவரும் . Saturday, 01 March, 2008 12:00 PM . டோக்கியோ, மார்ச்.1: ஜப்பானைச் சேர்ந்த 44வது பெண்மணி ஒருவர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறாராம். . கசுமி இசாக்கி என்னும் அந்த பெண்மணிக்கு 21 மற்றும் 14 வயதான 2 மகள்கள் இருக்கின்றன ராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குத்து சண்டை பயிற்சி பெற தொடங்கினார். இந்நிலையில் தற்போது அவர் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறார். இதன் மூலம் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்கும் மிகவும் வயதானவர் எனும் சிறப்பை அவர் பெற்றிருக்கிறார். அந்நாட்டைச் சேர்ந்த 46வயது மனிதர் ஒருவர் இதற்கு முன்னர் இந்த பெருமையை பெற்றிருந்தார். ஆனால் அவர் தன்னுடை…
-
- 0 replies
- 746 views
-
-
இந்த பக்கத்தில கருத்து கணிப்பு நடத்தினம். http://thamilar.blogspot.com/2008/02/29-fe...4-80-6-591.html விடுதலைப் புலிகள் மீதான தடை கருத்துகணிப்பு, வாக்கு நிலவரம் 29 feb 08 சரி 14% தவறு 80% தெரியாது 6% மொத்த வாக்குகள் 591
-
- 1 reply
- 874 views
-
-
எல்லையில் கல்யாணம் . நியூயார்க், : ஒரே நேரத்தில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும் வரிசையில் மெக்சிகோ அமெரிக்க எல்லையில் 600 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டிருக் கின்றனவாம். . மெக்சிகோ நாட்டில் உள்ள பலர் பிழைப்புக்காக அமெரிக்கா செல்கின்றனர். இவர்களில் பலர் சட்ட விரோதமாக அந்நாட்டுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இப்படி அமெரிக்காவுக்கு குடி யேறியவர்களில் 600 ஜோடிகள் சமீபத்தில் காதலர் தினத்தின் போது மெக்சிகோ அமெரிக்க எல்லையில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஜோடிகள் அனைவருமே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பிறகு காதல்வயப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணம் முடிந்ததும் இந்த ஜோடிகள் மீண்டும் அமெரிக்கா வுக்கு சென்று விட்டனவாம். ma…
-
- 0 replies
- 746 views
-
-
சாதனைக்கு தடை . Wednesday, 27 February, 2008 12:21 PM . சா பாவ்லோ,பிப்.27: உலகில் உள்ள உயரமான கட்டிடங்கள் மீதெல்லாம் ஏறி சாதனை படைத்து வரும் பிரெஞ்சு காரர் பிரேசிலில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது ஏற முற்பட்ட போது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறாராம். . பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலியன் ராபர்ட்ஸ் என்பவர் கட்டிடங்கள் மீது ஏறுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். கட்டிடங்கள் மீது இவர் லாவகமாக ஏறுவதை பாராட்டும் வகையில் ஸ்பைடர்மேன் எனும் பட்டப் பெயர் இவருக்கு உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உயரமான கட்டிடங்கள் மீது காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவி ஏறி சாதனை படைப்பது இவரது வழக்கம். சமீபத்தில் பிரேசில் நாட்டில் உள்ள 46 மாடி கட்டிடத்தின் மீது இவர் ஏற த…
-
- 0 replies
- 945 views
-